27/12/09

தேவதாரு காடுகளின் தேவதைகள்


     இங்கே....1
              

     தேவதாரு காடுகளின் தேவதைகள்
     பசுமையான மரங்கள் அடர்ந்துபரவியிருக்கும் அந்த மலச்சரிவுகளுக்கிடையே மரகதப்பச்சை வண்ணத்தில்     அமைதியாக அழகாக பரந்து விரிந்திருக்கும்  நைனிதால் ஏரியும் அதன் மீது  அமர்வதற்காக மெல்ல      மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேக கூட்டங்கள், அழகான வண்ண பாய்மரப்படகுகளை ஒளித்து   காட்டி  ஆடும் கண்ணாமூச்சி  ஆட்டம் இந்த உயரத்திலிருந்து பார்க்க மிக அழகாகயிருக்கிறது.  ஏரியின் ஒரு கோடியிலிருக்கும் நைனா தேவியின் கோவிலும் அதன் கொடியும் தெளிவாக தெரிகிறது அதன் அர்சகர் சொன்னது போல நைனிதால் ஏரி ஒரு கண் வடிவிலிருப்பது புரிகிறது. "இது மற்ற இந்தியகோடை வாஸஸ்தலம் போல வெள்யைர்களால் கண்டுபிடிக்கபடவில்லை. இந்த பகுதி முழுவதும் இந்து மத புராணங்களுடன் சம்பந்தபட்டது, தெய்வங்களும், தேவர்களும் வாழ்ந்த பூமி. 1000 கோவில்களுக்கு மேலுள்ள மலத்தொடர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  சந்தன்  வம்ச     மன்னர்களின் ஆட்சியில்      மக்கள்   சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள்  இந்த ஏரி தக்ஷினன் யாகத்தில் பங்கேற்தற்காக     கோபத்தில் சிவ பெருமான் தேவியை வெட்டியபோது   பார்வதிதேவின் கண் விழுந்த இடம். அதனல்தான் நைனிதால்     எனப்பெயர்.  100மைல்      தூரத்தில் 12 ஜோதிலிங்கங்களின் ஆதி ஜோதிலிஙமிருக்கிறது.      போய்பாருங்களேன்." என்று அந்த அர்ச்சகர் சொன்னதைத் தொடர்ந்து சேகரித்த தகவல்களில் புரிந்து கொண்ட விஷயம்- உத்திரபிரேதசத்திலிருந்து பிரித்து உருவாக்கபட்ட இந்த உத்திராஞ்சல்  மாநிலத்தின்                      
மலைப்பகுதி   ஒரு சுற்றாலத்தலமட்டுமில்லை, புராதன புண்ணிய பூமி     என்பதையும் சுற்றிருக்கும் 7 மலைகளில்          அழகான ஏரிகள் மட்டுமில்லை. வீரம், கல்வி,நீதி, கலை, செல்வம் போன்றவகளை காக்கும் தேதைகளின்
கோவில்களிலும், மிகப் பழமையான, ஜோதி லிங்ககளின் ஆதி லிங்கமும் இன்றும் வழிபடப்படுகிறது         என்பதையும்தான்.   இப்போது ஜோகெஷ்வரை தரிசிக்க போய்க்கொண்டிருக்கிறோம்.  ஒரு மாநிலத்தலைநகர் என்ற எந்த பந்தாவும் இல்லாத அந்த சின்னஞ்சிறிய ஊரின் நடுவே இருக்கும்     நைனிதால் ஏரியின்    கரையின் ஒரு புறம் தான் சாலை. அது மக்கள் நடக்க மட்டுமே.நடக்கமுடியாதவர்கள்க்கு சைக்கிள் ரிக்ஷா வசதி. அதற்கு Q வில் நின்று 3 ரூபாய்  டோக்கன் வாஙகவேண்டும். (பீரிப்பெய்டு சைக்கிள்ரிக்ஷாக்கள்!)     அந்த சாலையில் பொது வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.  வாகனங்களுக்கு  என ஒதுக்கபட்ட 'ஒரு வழிபாதை'யில் கட்டணம் செலுத்தி (மாலைநேரங்களில் இரட்டிப்பு கட்டணம்) நகரை ஒரு சுற்று சுற்றி     வந்து கிளம்பிய இடத்தின் மிக அருகிலிருக்கும் பாதையில் பயணத்தை துவக்கிறோம்.வழியில்  தூரத்தில்
மலையிருக்கும்   ZOO என்று ராட்சத  பெயர்பலகை அடர்ந்த மரங்களுக்கிடையே பளிச்சென்று தெரிகிறது.  இந்த மலை வாஸஸ்தலத்தில் ஒரு ஜுவா? எனஆச்சரியத்துடன் உள்ளே போன நமக்கு மேலும் பல ஆச்சரியங்கள்.   இயற்கையான வனச்சூழலில் படுசுத்தமாக இருக்கும் அந்த அழகிய பூங்காவில்
அபூர்வமான விலங்குகள்.  இந்தியாவில் பார்க்கமுடியாத பனிலைக்காடுகளில் மட்டுமே காணமுடியும்   சைபீரியன் புலிகள்,      பனிகரடிகள் எல்லாம் கம்பீரம்மாக நம்மைப்பார்த்து சந்தோஷப்பட்டு      போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறது. என்ன-பார்க்க முழங்காலை முறிக்கும்  200 படிகள் ஏற வேண்டும்          அவ்வளவுதான்.
         
 வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதை, இதமான குளிர் சாலையின்  இரண்டுபுறமும்   பளபளக்கும்          பெரிய பச்சை கார்பெட்     விரித்ததுபோல பசுமையான காடு.  பார்க்குமிடமெல்லாம் நின்தன் பச்சைநிறம்         தோன்றுதடா என பாடவைக்கிறது. சிறு சிறு மலை கிராமங்களை கடந்துபோய்க்கொண்டிருக்கும் நம்மை பள்ளதாக்கில் தெரியும்   அந்த  கிராமம் சட்டென்று கவர்கிறது.   அல்மெடா (ஆங்கிலத்தில் அல்மோரா என எழுதுகிறார்கள்) என அறிவிக்கும் வரவேற்பு பலகையின் அருகில்      ராமகிருஷ்ண  மடத்து இலச்சினையுடன் ஒரு சிறிய போர்டு. ஆச்சரியப்பட்டு விசாரித்து மெல்ல அந்த மலைச்சரிவில்இறங்கினால்.அழகான பள்ளத்தாக்கை நோக்கி  எளிமையான கட்டிடங்களுடன் அமைக்கப்பட்ட ஆஸ்ரமம்.மற்ற          ராமகிருஷ்ண ஆஸ்ரமங்களைப்போலவே அமைதியும்,அழகும் மிளிரும் வழிபாட்டுகூடம். புத்தங்களும், ராமகிருஷ்ண           மடத்தலைவர்களின் பெரிய படங்களும் நிறைந்த   அந்த      தலைவரின் அறையின் ஜன்னல்கள் வழியே தெரியும்        பள்ளதாக்கு      ஒரு ஒவியம் போலிருக்கிறது.  காத்திருந்த முன்பின் தெரியாத   நம்மை கனி¢வுடன்


கூட்டதில் பேச     அழைக்கபட்ட சுவாமி விவேகானந்தர் பார்த்தவுடன் இந்த இடம் தியானசெய்ய சிறந்த இடம்  என தேர்ந்தெடுத்து மடம்      நிறுவ ஏற்பாடு செய்து,.அல்மோடாவிற்கு இரண்டுமுறை வந்திருக்கிறார்.அண்ணல் காந்திஅடிகள்இந்த அருமையான        இடத்தைவிட்டுவிட்டு நம் மக்கள் உடல் நலம்பேண ஏன் ஐரோப்பாவிற்கு போகிறார்கள்? என எழுதியிருக்கிறார்           நேரு அன்னி   ய ஆட்சியில் இங்குள்ள சிறையில்சிறை வைக்கபட்டிருக்கிறார். தாகூர் பல கோடைகாலங்களில் தங்கி          நிறைய எழுதியிருக்கிறார். நடன மேதை உதய்சங்கர்  இங்கு திறந்தவெளி நடனப்பள்ளி     நிறுவியிருக்கிறார்.       இசைமேதை பண்டிட்    ரவிசங்கர் இந்த ரம்மியமான சூழ்நிலையில் புதிய ராகங்களை உருவாக்கியிருக்கிறார். - இப்படி          பல  ஆச்சரியம்மான தகவல்களை  தந்து,நாம் பார்த்துகொண்டிருக்குமிடம் அழகானது மட்டுமில்லை             வரலாற்று முக்கியமானது     என்பதை புரியவைக்கிறார்..   



5000அடி உயர்த்தில் ஓரு மாவட்ட தலைநகரமாக       உருவாகியிருக்கும்      இது இப்போது அண்டைய மலைப்பகுதிகளின் விளைபொருட்களான பலவகை பழங்களுகான      பெரிய மார்க்கெட்டாகி வருகிறது.  சாலை ஒரக்கடைகளில் கூட  இதுவரை நாம் பார்க்காத பல பழங்கள் கூட மிக மலிவாககிடைக்கின்றன. ஆண்டுமுழுவதும் 18வகை    பழங்கள் கிடைக்குமாம்.
         
மெல்ல முடிய பனிமேகங்கள் சட்டென்று விலகி பளிச்சென்று வெய்யில் தாக்கும்  ஒரு வினோதமான வானிலையில்       பயணத்தை     தொடர்கிறோம். வழிநெடுக சிறிதும்பெரிதுமாக கோவில்கள்.உள்ளுர் காவல் தெய்வங்களலிருந்து சிவபெருமான்
வரை பலவிதமான கோவில்கள். அதில் ஓன்று சிட்டை என்ற இடத்திலிருக்கும் கொலுதேவதா கோவில். வித்தியாசமாக           இருக்கிறது. நுழைவாயில்,பாதை,மேற்கூரை கோவிலின் தூண்கள் மரங்கள் என்று எங்கு பார்த்தாலும் பெரிய,சிறிய மணிகள்          கொத்துகொத்தாக     தொங்குகிறது. விசாரித்ததில் நீதி தேவதையான அந்த தேவியிடம் கோர்ட் வழக்கு விவகாரங்கள்,
வசூலிக்கமுடியாதகடன்,நிறைவேராத ஒப்பந்தங்கள் போன்றவைகளின்,நகலுடன்  ஒரு சிறிய மணியை இனைத்து கட்டி,        நல்ல முடிவு வேண்டி பிரார்த்தித்து, வேண்டுதல்  நிறைவேறியதும் பெரியமணிகட்டுவதாக வேண்டிக்கொள்கிறார்கள் என்று
தெரிந்தது. அரசு முத்திரைத்தாளில் எழுதப்பட்ட ஒரிஜினல் காப்பி ஆவணத்தை     ஒரு தம்பதியினர் பூஜித்தபின் கட்டி வைப்பதை பார்க்கிறோம்'     கோவில் வாசலில் பூஜைப்பொருட்களுடன் சிறிய பெரிய மணிகள்விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அதிக அளவில் கட்டப்பட்டிருக்கும்      பெரிய மணிகளின் எண்ணிக்கையிலிருந்து கோவிலின் கூட்டத்திற்கான காரணம் புரிகிறது.  இந்த     கோவிலினால் நீதிமன்றத்திற்கு வெளியே முடிக்கபடும் வழக்குகள் அதிமாகியிருக்கிறதாம்.
         
பல மலைச்சரிவுகளையும் ஏற்றங்களையும்  கொண்ட அந்த 35 கீமி மலைச்சாலையைக் கடக்க 2மணி நேரத்திற்கு மேலாகிறது.       சந்தன காடுகளுக்கே உள்ள மணம் நாசியைத்தாக்குகிறது. அடர்த்தியாக ஒங்கி வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களும் வீசும்      குளிர்ந்த காற்றும்   அதிக உயரத்திற்கு   வந்துவிட்டதை உணர்த்துகிறது. இங்கிருந்து ஜோகேஷ்வர் வளாகம் துவங்கிறது என்ற        தொல்பொருள் துறையினரின்   அறிவிப்புடன் நம்மை வரவேற்கிறது ஒரு கோவிலினிலருகிருக்கும் செக்போஸ்ட்.                                        
   9ம் 10ம் நூற்றாண்டுகளில் பல காலகட்டங்களில் எழுப்பட்டதாகவும்  முக்கியமான ஜோதிர்லிங்கம் இருக்கும் பெரிய கோவில் 3கிமி தொலைவில் இருப்பதாக         சொல்லும் அந்த குறிப்பைபார்த்துவிட்டு பயணத்தை தொடர்கிறோம் சட்டென்று திரும்ம்பிய ஒரு திருப்பத்தில்  பள்ளத்தாக்கில்      பசுமையான தேவதாரு மரங்களின் பின்னணியில் சிறிதும், பெரிதுமாக கும்பலாக பல கோவில்கள்.   சதுரமானகீழ்பகுதியாக துவங்கி,
நுழைவாயிலைத்தவிர வேறு எந்த திறப்போ மாடமோ இல்லாமல் இறுக்கி அடுக்கிய கல்கோட்டையா  உயர்ந்து கோபுரமாக குவிந்த         உச்சியின்  மீது மரத்தால் செய்த சிறிய மண்டபத்தை தொப்பியாக அணிந்திருக்கும்  ஒரு பெரிய கோவில்.
அதேவடிவத்தில் சிறிதும் பெரிதுமாக அருகருகே பல கோவில்கள்.வேகமாக நடந்தால்  இடித்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாக   பல குட்டி (100கும்மேலிருக்கும்)கோவில்கள்.  அருகே சென்றதும் ஒருகிராமத்திருவிழாவிற்குள் நுழைந்தஉணர்வு. விழாக்காலமானதால்      கோவிலிருக்கும் அந்தசாலையில் மலைவாழ்மக்களக்குகாக அரசு அமைத்திருக்கும் பொருட்காட்சி. அன்று பிரதோஷ நாளானாதால்      உள்ளுர்/வெளியூர் கூட்டம். கோவில் தொல்பொருள் சின்னம் என அறிவிக்கபட்டிருந்தாலும் பூஜைகள் உண்டு. பிரதான கோவிலில் மூர்த்தி ஜோகெஷ்வர் சுய்ம்புவாக எழுந்த லிங்கம். தரையிலிருந்து 1அடி உயரமிருக்கும்



மூர்த்தியைச் சுற்றி மூன்றுபக்கங்களிலும் பக்தர்கள்          கர்ப்பககிரகத்தில் பொறுமையுடன் உட்கார்ந்திருக்க, பளபளக்கும் ஆரஞ்சு வண்ன உடையில்அர்ச்சகர் வந்து அவர் ஆசனத்தில் அமர்கிறார்.       பாலில் தோய்த அரிசி தேவதாரு இலைகளுடன்அரளிப்பூ எல்லோருக்கும் தருகிறார்.அவருடன் நாமும் செய்யும் அபிஷகம் முடிந்ததும்       மெல்லிய்ய குரலில் உள்ளூர் மொழியில் ஒரு ஸ்லோகம் சொல்லுகிறார் இடையிடையே அவர் அர்ச்சிக்கும்போது நாமூம் அர்சிக்கிறோம்.          பின் தீபாரதனை. பூஜைமுடிந்தது.
பூஜைக்கு கட்டணம் விஐபி தரிசனம் எதுவும் கிடையாது. முதலில்வருவபருக்கு ஸ்வாமியின் அருகே அமர முன்னுரிமை. நம் அருகிலிமர்ந்து பூஜை செய்தவர் உத்திராஞ்சல் மாநில உயர்மன்ற நீதிபதி என்பதை வெளியில் வந்தபின்  அவருக்குள்ள   பாதுகாப்பை பார்த்தபின்தான்      தெரிந்துகொள்கிறோம்.





அருகில் ஒரு சின்ன குன்றின் மேல் குபேரனுக்கு ஒரு கோவில். மூர்த்தி லிங்க வடிவிலிருக்கிறார். வாயிலில் "வேண்டிக்கொள்ளும்          பக்தர்களுக்கு  செல்வம் சேரும்" என எழுத பட்ட வாசகங்கள். அருகில் அவ்வளவு கூட்டமிருந்தும் ஏன் இங்கு அதிகமில்லை என்ற நமது       கேள்விக்கு அந்த அர்ச்சகர் தந்த பதில்     பற்றி சிந்திதுக்கொண்டே நைனிதாலுக்கு திரும்பும் பயணத்தை துவக்கிகிறோம்.
வேடிக்கைக்காக சொன்னதோ அல்லது வேதனையில் சொன்னதோ -நம்மை சிந்திக்கவைத்த அந்த வார்த்தைகள்
"செல்வம் சேர்ந்தால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகளினால் வேதனை உண்டாகும் என்பதால் தேடிப்போய் வேண்டி வேதனையை        வாங்கிக்  கொள்வானேன் என்று பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்"