23/5/10

சூட் அணிந்த பிசாசுகளை அறிமுகபடுத்துகிறார் இவர்.


சூட் அணிந்த பிசாசுகளை அறிமுகபடுத்துகிறார் இவர்.

ஆங்கில இலக்கிய உலகத்தில் அருந்ததி ராய், விக்ரம்சேத் போன்ற இந்திய படைப்பாளிகள் உலக சாதனைகள் படைத்து வருவதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக  ஆங்கில புத்தகங்களைநேசிக்கும் இந்திய வாசகர்களுக்காகவே புத்தகங்கள் நிறைய வரத்தொடங்கின. அவைகளின் ஆசிரியர்களில்அதிகம் பேசப்படுபவர் ரவி சுப்பரமணியன். இரண்டாண்டுகளுக்கு முன் இவரின் முதல் புத்தகம் “கடவுள் ஒரு பாங்க்ராக இருந்திருந்தால்..”(if God was a Banker) ஒரு லட்சத்திற்குமேல் விற்பனையாகியிருக்கிறது. ‘தங்க இறகு’ பரிசையும் பெற்றிருக்கிறது. இரண்டு துடிப்பான இளைஞர்கள் ஒரேநாளில் இந்தியாவிலிருக்கும் வெளிநாட்டு வங்கியில் பணியில்சேருகிறார்கள்.எப்படியாவது,எதையாவது செய்து உயரங்களைத்தொட்டுவிடவேண்டும் என்று ஒருவரும், தன் திறமையை மட்டுமே நம்பி தொடர்ந்து  அயராது உழைக்கும் மற்றொருவரும் எப்படி உயருகிறார்கள். இறுதி நிலையில் ஒருவர் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை. இதில் கதையைவிட சொல்லப்பட்ட விதம் விவரிக்கபடும் காட்சிகள், இந்தியாவில் செயலாற்றும் அந்நிய வங்கிகளில் நடைபெறும் பலவிதமான விஷயங்களைத் தோலுரித்து காட்டுகிறது.அடுத்த எழுதிய  “நான் வாங்கிய துறவியின் ஃபெராரி”(கார்)  புத்தகம் நல்ல விற்பனையிலிருப்பதைதொடர்ந்து இந்த ஆண்டு தனது மூன்றாவது புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் ரவி. பெயர் “டெவில் இன் பின்ஸ்ட்ரைப்ஸ்”” (பின்ஸ்டிரைப் என்பது  பெரும்பாலும் பாங்கர்கள் அணியும் மெல்லிய கோடுகளுடன் கூடிய சூட்) சூட் அணிந்த பிசாசுகள்’ என்று சொன்னால் எளிதில் புத்தக தலைப்பு புரியம்.  இந்த புத்தகம் விற்பனையில் முதல் புத்தகத்தை தாண்டிவிடும் என்கிறார்கள்


இந்த புத்தகமும் வெளிநாட்டு வங்கியின் ‘உள் நாட்டு அரசியலை’ அப்பட்டமாக படம்பிடித்துகாட்டுகிறது. உங்கள்புத்தகங்கள் எல்லாமே ஏன் பாங்க் சூழலலிலயே அமைகிறது என்ற கேள்விக்கு இவர் தரும் பதில்.  இன்று இந்தியாவில் வங்கிகள் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரும்  ஒரு துறை. மேலும் இன்றைய வங்கிகள்   வாய்ப்புகள், எமாற்றங்கள், ஆச்சரியங்கள், சாதனைகள், சவால்கள் மற்றவர்களின் தொழில் பணம்பற்றிய விபரங்கள்.  திறமைமிக்க அதிகாரிகள் நிறைந்த ,மிகப்பெரிய தொழிலதிபர்களிலிருந்து சாதாரண மனிதர்கள் வரை தவிர்க்க முடியாத  ஒரு இடமாகிவிட்டது. கதைசொல்ல அது  நல்ல களம்.அதைவிட முக்கியமானது அந்த களம் எனக்கு மிகவும் பழக்கமானது. கதைக்கான களத்துக்காகா அதிக ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சொல்லும் இவர்  ஒரு வெளிநாட்டு வங்கியில் பணியாற்றும் ஒரு அதிகாரி.. “அப்படியானால் எழுதுதில் எந்த அளவு சொந்த அனுபவம்?”




“எழுதியவையெல்லாம் நிகழந்தவையில்லை.  - தங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்த சில நிகழ்ச்சிகளின் நீட்சிகள்தானே எவர் எழுதும் கதைக்குக்கும் கருவாக அமைகிறது. அதுபோல்தான் இதுவும் “ என்று சொல்லும் இவர் IIM பங்களூரில் நிர்வாகயில்  பயின்ற பட்டதாரி. இந்தியாவிலிருக்கும் பல வெளிநாட்டு வங்கிகளில் பல இடங்களில்பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.பயோடெக்னாலாஜி படித்திருக்கும் இவரது மனைவி தரணியும் பணியாற்றுவது வெளிநாட்டுவங்கியில்தான்.இவர்களது ஒரே மகள் அனுஷாவுடன் இப்போது வசிப்பது மும்பையில்.  துவக்கியிருக்கும் அடுத்த நாவளின் பெயர்  “முழுவதும்சரியில்லாத கடவுள்(imperfect God)” “இதுவும் பாங்க்களிலிருக்கும் அரசியல் பற்றிதான். ஆனால் எல்லோரும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளகூடிய எல்லா நிறுவனங்கலிலுமிருக்கும் கார்பெரேட் பாலிடிக்ஸ் தான்” என்று சொல்லும் ரவி ஆங்கில பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதுகிறார். “நாவல்கள் எழுதவதைவிட கடினமான,நான் சாதிக்கவிரும்புபம்  ஒரு விஷயத்திற்காக இப்பொது  பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்று  இவர் சொல்லும் அந்த  ஒரு விஷயம்-  நல்ல சிறுகதைகள் எழுதுவது.
சந்திப்பும் படங்களும்  ரமணன்

kகல்கி 23.05.10



என்ன செய்ய வேண்டும்?


மிக நேர்த்தியாக உள் அலங்காரங்கள் செய்யப்பட்ட அழகானபெரிய அந்த ஹாலில் ரமேஷயையும் சேர்த்து 7 பேர் காத்திருக்கின்றனர்ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரிகளுக்கான நேர்முக தேர்வுமுதல் இரண்டு கட்டங்களைத்தாண்டி இறுதித்தேர்வுஅடுத்துவரப்போகும் தன் முறைக்காக காத்திருக்கும் ரமேஷக்கு,புதிய உடையின் கசகசப்பு பழக்கமில்லாத புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் டையின் இருக்கம் எல்லாம்சேர்ந்து அந்த சற்று பதட்டமாக எர்கண்டிஷன் அறையிலும் வேர்ப்பதுபோலிருந்தத்துஅடுத்து நீங்கள் போகலாம் எண்று  ஹாலின் ஒரு கோடியிலிருந்த பெண்மணி  சொன்னதைத்தொடர்ந்து நேர்முகம் நடக்கும் அறையை நோக்கி போகிறார்ரமேஷ்மூடிய கதவுகளிடையே சற்றே இடைவெளி அதன் வழியாக சற்று தயக்கத்துடண்பார்த்து   நின்ற பின்னர் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்லுகிறார்நேர்முக குழுவின் 3 உறுப்பினர்களும் இவரைபார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் உட்காரசொல்லவில்லை.நின்றுக்கொண்டேயிருந்த ரமேஷ் தனியே இருக்கும் அந்த் நாற்காலியின் நுனியில் உட்காருகிறார்அரைநிமிடம் நேர்முககுழு எதுவும் கேட்டகவில்லை.. ரமேஷும் எதுவும் பேசவில்லைஒரு கனத்த மெளனத்திற்கு பின்னர் குழுவிலிருந்த ஒருவர் “வெளியே காத்திருக்கும் போது எக்னாமிக்ஸ் டைம்ஸ் பார்த்க்கொண்டிருந்தீர்களே அதில் நீங்கள் படித்த  எதாவது செய்தி பற்றி சொல்ல முடியுமா”? என்றார்தன்னைப்பற்றிஅந்தநிறுவனத்தைபற்றி,இன்றைய கார் மார்கெட் பற்றி எல்லாம் தயாரித்திருந்த ரமேஷ் இந்த கேள்வியினால் ஆடிப்போனார்ரமேஷ் அந்த பேப்பரில் எதுவும் படிக்கவில்லை.சொல்லப்போனால் எக்கானாமிஸ் டைமை முதல் தடவையாக அன்று தான் பார்க்கிறார்.அதனால் பதில் ஏதும்சொல்லாமல் மேஜையில் வைத்த தன் பைலின் மீது   வைத்திருந்த கைவிரல்களை   கோர்த்து கைககளைப்பிசைந்துகொண்டிருந்தார்இவர் பதில் தராததைபற்றி எந்த ரியாக்கஷனும் காட்டாமல் குழுவில் மற்றொருவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்முதல் கேள்விக்கு தன்னால்  சரியாக பதிலளிக்கமுடியவில்லையே என்ற அழுத்தில் தொடர்ந்த கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல முடிவில்லைஇள நிலை முதல் வகுப்பு பட்டதாரியாகயிருந்தும்மார்க்கெடிங் பட்டயம் இருந்தும் இந்த நேர்முகத்தினால் முடிவு என்னவாயிருக்கும் என்பதைச்சொல்வேண்டியதில்லை.
இது போன்ற நிகழ்வு நாம் நேர்முகத்தேர்விற்கு போகும்போது நடக்காமலிருக்க என்னசெய்யவேண்டும்என்பதற்கு பதிலாக ரமேஷ் என்ன செய்திருக்கவேண்டும் என்பதைப்பார்ப்போம்.
1.நேர்முகத்தேர்விற்கு புதிய ஆடை அணிந்துசெல்லக்கூடாது.ஏனெனில் நமது கவனம் அதிலிருந்துகொண்டேயிருக்க வாய்ப்பு அதிகம்.  தேர்வு இல்லாத நாளில்டை.ஷு அணிந்து நடந்து பழகிகொள்ளவேண்டும்.
நேர்முகத்தேர்வின் அறையின் நுழையும்முன்கதவு திறந்தேஇருந்தாலும் மெல்ல-(கவனியுங்கள்-மெல்லவிரல்களின் மேல்புறத்தால் தட்டிமை  கமின்?” என்று கேட்டக வேண்டும்அவர்கள் அழைத்துதான் வந்திருந்தாலும் இது ஒரு எதிர்பார்க்கபடும் சம்பிரதாயம்நுழைந்த 10வினாடிக்குள் தேர்வுக்குழு உட்காரச்சொல்லவில்லையாலால்மே  சிட் என்று கேட்டு நன்றாக ஆனால் ஆணவம் தொனிக்காத கம்பீரத்துடன் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
3. யார் பேச்சைத்துவக்குவதுநாமாக பேச வேண்டுமானால் என்னபேசவேண்டும்எவருக்கும் எழும் இயல்பான கேள்விகள்தான்இந்த நிறுவனம் தேர்விற்கு வந்தவர் முதலில் பேச வேண்டும் என்பதை தங்களது மெளனத்தின் மூலம் தெரிவித்துவிட்டபின்.”உங்கள் நிறுவனம் இரண்டு கட்டங்களுக்கு பின் என்னை நேர்முகத்திற்கு அழைத்தையே நான் கெளவரவமாக கருதிகிறேன்இந்த தேர்வையும் வெற்றிகரமாக கடந்து நிறுவந்த்தில் சேர காத்திருக்கிறேன்” என்ற ரீதியில் ரமேஷ் பேச்சைத்துவக்கியிருக்கவேஎண்டும்.
அடுத்தது-எக்னாமிக்டைம்ஸ் விஷயம்அந்த நிறுவனத்தின் தேர்வுகுழு  தேர்விற்கு காத்திருப்பவர்களை கூட கவனமாக பார்த்துகொண்டிருந்திருக்கிறது என்பது புரிகிறதுஅப்படியானால் தேர்வு அங்கேயே துவங்கிவிட்டிருக்கிறதுநாம் பேசுவதுசெய்வதுஎல்லாம் மதிப்பிடப்படுகிறது. “ நான் அந்த பேப்பரில் எதுவும்  ஆழ்ந்து படிக்கவில்லைஅருகில் இருந்ததால் எடுத்துப்பார்தேன் அரசியல்,பரபரப்பு செய்திகல்  இல்லாமல் நிறைய மார்க்கெட் செய்திகள் இருப்பதுப்போல் தோன்றுகிறது இனி தொடர்ந்து படிக்கலாம் எனநினக்கிறன்” என்ற உண்மையான பதிலை ரமேஷ் சொல்லியிருக்கவேண்டும்
4. முதல் கேள்வி என்றில்லைஎந்த கேள்விக்குமே பதில் சொல்லமுடியாவிட்டால் அதனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாதுஎந்த நேர்முகத்திலும் யாரும் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிடமுடியாதுஅதுமட்டுமில்லை தேர்வுகுழுவினரும் ஒரு அல்லது சில கேள்விகளினால்  மட்டுமே முடிவு செய்ய மாட்டார்கள்இங்கே ரமேஷ் பதில் சொல்லாதாதோடு தான் குழப்பமாகிவிட்டதை தனது உடல் மொழியின்( body languge) மூலம் காட்டிவிட்டார்,

எந்த நேர்முகமும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாதுநிறுவனம்,பணியின் தன்மை,தேர்வுகுழுவின் அமைப்பு போன்றவகளினால் மாறுபடக்கூடியது.ஆனால் அழைக்கப்ட்ட நிறுவனத்தின் அமைப்பு  தேர்வானால் செய்ய வேண்டிய பணி பற்றி அறிந்திருந்த ரமேஷ் தன்னை  உடைஅணுகு முறை போன்றவற்றில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தால் எளிதாக சமாளித்திருப்பார்..மார்க்கெட்டிங் அதிகாரியாக வரப்போகிறவர் தானே முன்வந்து முனைபவராக (proactive) இருப்பதையும்,எளிதாக பேசும் இயல்பு உள்லவராகவும் இருக்கவேண்டும் என அந்த் நிறுவனம் எத்ரி பார்ப்பதில் தவறல்லியேஇப்போது இதற்கு நிறைய புத்தகங்கள்பயிற்சிக்கூடங்கள் வந்துவிட்டனமிக எளிதாக வீட்டிலேயே நண்பர்கள் சகோதரர்கள் முலம் ஒரு மாடல் தேர்வு   கூட நடத்திப்பார்க்கலாம்நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லோருடனும் நிறைய பேசி பேசி பழகவேண்டும்இது தன்நம்பிக்கையை வளர்க்கும்.நிறைய படிக்கவேண்டும் அதை நினைவிலும் வைத்துக்கொள்ளவேண்டும்அது தேர்வுகளிலும்  சமயோசிதமாக பதில் சொல்ல கைகொடுக்கும்.
சமீபத்தில் ஒரு வங்கியில் முதல் அதிகாரி நிலையிலிருந்து கிளை மேலாளர் நிலைக்குநேர்முகம். “இதுவரை தனியாக ஒரு கிளையை நிர்வகித்த அனுபமில்லாத நீங்கள் தேர்ந்தெடுக்கபட்டபின் ஒரு கிளைக்கு நிர்வாகியாக அனுப்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு தேர்விற்கு வந்தவர் தந்த பதில் “இருபது ஆண்டுகளுக்கு முன்  அதிகாரிநிலையிருந்து தெர்வுபெற்று நீங்கள் ஒரு கிளைப்பொறுப்பேற்று 5மடங்கு அதிகம் பிஸினஸ் செய்துகாட்டியதுபோல நம்பிக்கையுடன் முயற்சிப்பேன்” தேர்வுகுழுவிலுர்ந்து கேள்வியைகேட்ட பொதுமேலாளரிம் முகத்தில் புன்னகைகடந்த ஆண்டு அவர் போதுமேலாளராக தேர்வுசெய்யப்பட்டபோது அந்த வங்கியின் ஊழியர்களுக்கான மாதந்திர மடலில் படத்துடன் வெளியான வாழ்க்கைகுறிப்பிலிருந்த அந்த விஷயத்தை சரியான இடத்தில் சரியானமுறையில் பயன் படுத்திகொண்ட அவர் தெர்வுசெய்யப்போகும் அதிகாரி பற்றிய விபரங்களை சேகரிக்கும் திறன்,  வங்கியின்வெளியீடுகளை படிக்கும் பழக்கும்தனது நினைவாற்றல் போன்ற பல விஷயங்களை ஒரே பதிலில் உணர்த்திய  அவரின் தேர்வுமுடிவு என்னவாகயிருந்திருக்கும் என புரிந்திருக்குமே.
(புதிய தலைமுறை)