22/8/10

சென்னைக்கு ஹேப்பி பெர்த்டே.. . . .


சென்னைக்கு  ஹேப்பி பெர்த்டே.. . . .


சென்னை நகர்  1639  ஆகஸ்ட் 22ல் பிறந்தது என கண்டுபிடிக்கபட்டு, 2004 ஆண்டுலிருந்து அந்த நாளில்  “சென்னை டே” கொண்டாடப்படுகிறது. முதல் ஆண்டு மூன்று  நிகழ்சிகளுடன் துவங்கிய இது “சென்னை வாரமாகி”  இந்த ஆண்டு, புகைப்பட, ஒவிய கண்காட்சிகள்,இசை நடனவிழாக்கள், கருத்தரங்கு  கூட்டங்கள் குறும்படங்கள் என நகரின் பல இடங்களில் 60 நிகழ்ச்சிகளுடன் நகரின் பல அமைப்புகள் கொண்டாடினார்கள். ரோஜா முத்தையா நூலகமும்  சிறப்பு கூட்டங்களை நடத்தியது.. அதில் “இருளில் கனவு உலகம்- சென்னையின் சினிமா அரங்குகள்” தலைப்பில் தமிழ் சினிமா வரலாற்று ஆராய்சியாளரான திரு தியோடர் பாஸ்கர் பேசியதிலிருந்து.. ..
v  சென்னையில் முதல் சினிமா 10 நிமிட பேசா படம். எக்மோர் அருகே ஒரு டெண்ட்டில் வெள்ளகாரகளால் காட்டபட்டது. மின்சாரமில்லாமல்  எரியும் மக்னீஷ்ய நாடாக்கள் ஒளியில் காட்டபட்டது.தெரு ஒரங்களில் துவங்கி, பின்னர் மத்தியான நேரங்களில் காலியாகயிருக்கும் நாடக அரங்ககளில் காட்டபட்டது.
v  வெள்ளையர்களிடமிருந்து இதை கற்ற  வின்ஸென்ட் சாமிகண்ணு என்பவர்1905ல் இந்த முறையில் நாட்டின் பல பகுதிகளிக்கு டெண்ட்டுடன் பயணம்செய்து படங்கள் காட்டியிருக்கிறார். வடஇந்தியாவில் பெஷாவர் வரை பயணித்து படம் காட்டி ஈட்டிய பணத்தில்தான் கோய,ம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால்’ என்ற அரங்கை கட்டியிருக்கிறார்.
v  சென்னையின் முதல் மூன்று அரங்கங்கங்களும்  ஒரே ஆங்கிலேயரால் முழுக்க முழுக்க வியாபர நோக்கில் கட்டபட்டிருந்தது. தீண்டாமை மிக பரவலாக இருந்த அந்த காலகட்டத்தில்  திரைப்பட அரங்குகள் தான்  சம உரிமை நிலவியிருந்திருந்த முதல் பொது இடம். ஜாதிமத பேதமில்லால் ஆங்கிளேயர்களும் எல்லா ஜாதி இந்தியர்களூம் ஒன்றாக படம் பார்த்திருக்கின்றனர்.
v  சினிமா அரங்கங்கள் தான்  கம்பெனி நாடகங்களுக்கு மாற்றான ஒரு பொழுதுபோக்கு சாதமாக வளர்ந்ததால் அது நாடககம்பெனி  பழக்கங்களை அடியொற்றி துவக்கதில் மணி அடிப்பது,இடைவேளைவிடுவது எல்லாம் கடைபிடிக்கபட்டது. இன்று உலகளவில் கடைப்பிடிக்கும் சினிமாவில் இடைவேளை என்பது சென்னையில்தான் துவங்கியிருக்கிறது. இடைவேளயில் தின்பண்டங்களை இருந்த இடத்திற்கே வந்து விற்பனை செய்யும் வழக்கமிருந்ததால் அது ஒரு தனி தொழிலாகவே வளர்ந்திருக்கிறது.
v  துவக்கத்தில் சினிமாவை மக்களை தூண்டும் பெரிய சக்திவாய்ந்த  ஒரு ஊடகமாக பிரிட்டிஷ் அரசு நினைக்கவில்லை. அதனால்  சினினா குறித்து எந்த சட்டமுமில்லை. மாக்னீஷ்ய நாடாக்கள் பயன் படுத்துவதால் அரங்கங்களில் தீ விபத்து அபாயம் கருதி பாதுகாப்பு விதிகள் மட்டும்  உருவாயின. சினிமாவில் புராண சரித்திர பாத்திரங்கள் கூட கதர் தொப்பி அணிந்து மறைமுகமாக தேசிய விடுதலை விஷயங்களைப் பேச ஆராம்பித்த பின்னர், சினிமா வந்து 20 ஆண்டுகளான் பின்னர்தான் சென்சார் முறை அறிமுகபடுத்தபட்டது. போலீஸ் கமிஷனர் தான் சென்சார் அதிகாரி.


v  அண்ணல் தன் வாழ்நாளில்  சினிமா அரங்கிற்கு சென்றதில்லை.. அவர் வந்த ஒரே சினிமா அரங்கம் சென்னையிலுள்ள   மிட்லாண்ட் அரங்கம். . அன்றைய சென்னை பல்ககைலலகழக மானவர்கள் அவருக்கு ஒருவரவேற்பு கொடுத்த இடம் அந்த சினிமா தியட்டர். அரங்கத்திலேயே  அந்த வரவேற்புரை பத்திரத்தை  ஏலமிட்டபொழுது அதை வாங்கியவர் சுதந்ததிர போரட்ட வீரர் திருமதி  லஷ்மி சாமிநாதன்.அந்த சமயத்தில் முழு ஏலத்தொகைக்கும் அவரிடம் பணமில்லாதால் தன் தங்க கைவளையல்களை கழட்டிகொடுத்தார்.



கதையெழுதும் கண் டாக்டர்




சென்னயின் அந்த பிரபல கண்மருத்துவ மனையின்  சிறிய ஹால் நிரம்பிவழிகிறது.டாக்டர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.. சிகிச்சைக்காக அல்லஅந்த மருத்துமனையின் டாக்டரின் காபி வித் வக்கீல் வரது   புத்தக வெளியிட்டுவிழாவின் துவக்கத்திற்காகபுத்தகத்தின் பெயரில் காபி இருப்பதலோ என்னவோ வந்தவர்களுக்கு கொதிக்கொதிக்க காபி பித்தளை டபரா செட்டில் தந்தார்கள்
பார்க்க காத்திருக்கும் பல பேஷண்ட்கள்அடுத்த சிலமணிநேரத்தில் செய்ய வேண்டிய  கண்  மாற்ற ஆப்ரேஷனுக்கான ஆயுத்தங்கள்ரோட்டரிகிளப்  கண் வங்கியின் டைரக்டர்பணி,தமிழ்நாடு கண் மருத்துவர்களுக்கான பத்திரிகையின் ஆசிரியர் என தினமும் பரபப்பாகயிருக்கும் டாக்டர் சுஜாதா மோகன் அதற்கிடையிலும் ஒருசிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்இவர்   டாக்டர் ராஜன் கண்மருத்தவ மனையை நிர்வகிக்கும்  கண் டாக்டர் மோகனின் மனைவிஇந்த டாக்டர் தம்பதியினர் 90களிலியே கண்அறுவைசிகிச்சையில் உலகத்தரத்தில் புதிய நுட்பங்களை கொண்டுவந்து இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள்.
 இவரது புத்தகத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்த ஒரு ஆச்சாரமான ஐங்கார் வரதாச்சாரி என்ற வக்கில் குடும்பத்தின் சொந்தகாரர்களை பாத்திங்களாக்கி 12 சிறுகதைகளாக உருவாக்கி ஒரு மெல்லிய இழையில் அவைகளை இணைத்து நாவலாக தொடுத்திருக்கிறார்எளிய அழகான நடைபாத்திரங்களின் சின்னசின்ன செயல்களில் கடந்த தலமுறை குடும்ப வழக்கங்கள்மதிப்பீடுகள்  போன்றவற்றை மெல்லிய நகைச்சுவையடன் சொல்லுகிறார்சீதாப்பாட்டி அப்புசாமியைப்படைத்த ஜெயராஜ் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார்படிக்கும் நடுத்திரவயதினருக்கு நிச்சியம் தங்கள் இளமைகாலம் நினைவில் நிழலாடும்.

இரண்டு பெண்களுக்கு தாயான  இவரின் முதல் புத்தகம் இதுபத்திரமான தலைப்பிரசவம் என  சொல்லும் இவர் ஒரு மருத்தவ குடும்பதின் மூன்றாவதுதலைமுறை டாக்டர். (இவது மகளும்  அரசு மருத்துவகல்லூரியில்  முதலாண்டு படிக்கிறார் !) இவர் எப்படி கதை எழுதத்துவங்கினார்எனக்கே ஆச்சரியமான விஷயம் இது என்று சொல்லும் இவர்  பள்ளியில் தன்னை எழுதத்தூண்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறார் . தனது கணவரும் குடும்பத்தினரும் நண்பர்களும் தான் இது புத்தகமாக வந்ததற்கு காரணம் என்கிறார்.

தமிழ் தாய்மொழியாக இருந்தும்தமிழிலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்தும் இதை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்கு காரணம் ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்த மருத்துவ படிப்பும் ஆங்கிலத்தில்  தொடர்ந்து மருத்தவ கட்டுரைகள் எழுதி ஆங்கிலம் சரளமாகிவிட்டதுதான்  என்கிறார்

பொதுவாக மருத்துவ துறை சம்பந்தப்பட்ட விழாக்களில் மட்டுமே பங்கேற்கும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்த புத்தகத்தை வெளியிட்டது   ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சிஅதைவிட மகிழ்ச்சியான விஷயம் மருத்துவர்கள்  தங்கள் பணி¢யைதாண்டி இப்படி இலக்கிய பணிகள் செய்வது மிகவும் வரவேற்கவேண்டிய ஒன்றுமருத்தவ பல்கலைகழகமே தமிழில் டாக்டர்களின் இப்படிபட்ட இலக்கியபணிகளுக்கு பரிசு கொடுத்து கெளரவிப்பது பற்றி ஆலோசித்துகொண்டிருக்கிறதுஎன்ற அவரது அறிவிப்பு..


கண் மாற்று அறுவை சிகிச்சையில்  உலகின் சிறந்த முதல் 27 பேர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த கண் டாக்டர்தன்னிடம் வருபவர்களின் கண்களை கவனமாக பார்ப்பதுபோலதன் கண்களால் தன்னை சுற்றியிருப்பவர்க¨யும் அவர்களின் உலகத்தையும் கவனமாக பார்த்து கொண்டிருப்பவர் என்பது இந்த புத்தகதிலிருந்து புரிகிறது.
சந்திப்பு ; ரமணன்





15/8/10

நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 4


நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 4


திரு.  M. நடராஜன் டெல்லி  IITயில். டெக்ஸ்ட்டையல் டெக்னாலாஜியில் M.Tec படித்திருப்பவர். கடந்த 15 ஆண்டுகளாக ஜவுளித்துறை ஆலோசகராகயிருப்பவர். புதிய ஆலைகளை உருவாக்குவதற்கும் நலிந்த ஆலைகளை சீரமைத்து புத்துயிர் தருவதற்கும் ஆலோசனைகள் வழங்கும் நிபுணர். இந்த பிரச்ச்னையை ஆழமாக ஆராய்திருப்பவர். அவர்
சொல்லும் திர்வுகள்;
1.            .ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் துவக்க பருத்தி இருப்புபருத்தி உற்பத்திபருத்தி இறக்குமதிஉள்நாட்டு ஆண்டுத் தேவைஆண்டு இறுதி இருப்பு ஆகியவைகளை மதிப்பீடு செய்து உபரி பருத்தியை மட்டும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டின் இறுதி இருப்புஅந்த ஆண்டு உள்நாட்டுத் தேவையில் எவ்வளவு சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற மதிப்பீடும் சரிவர நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டுக்கான இறுதிக் கையிருப்பை நிர்ணயம் செய்வதில் தவறிழைத்தால் அடுத்த ஆண்டு பருத்தி விளைந்து உற்பத்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். சீன நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டு இறுதி இருப்பாக அந்த ஆண்டுத் தேவையின் 40 சதவிகிதம் பஞ்சு இருப்பு வைக்கப்படுகிறது. நமது நாட்டில் இந்த ஆண்டு இறுதி இருப்பாக இந்த ஆண்டுத் தேவையின் 20 சதவிகிதம் கூட பஞ்சு இருப்பு வைக்க முடியாது போல் தோன்றுகிறது.

2.            .நூல் பற்றாக்குறைவிலைஉயர்வை தவிர்க்கஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நூற்பாலைகளில் நிறுவப்பட்டுள்ள கதிர்களின் எண்ணிக்கைநூல் உற்பத்திஉள்நாட்டுத் தேவை ஆகியவைகளை மதிப்பீடு செய்து உபரி நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

3.            பாரம்பரிய நெசவுத் தொழில் என்ற அடிப்படையில் விசைத்தறிகைத்தறி ஆகிய பிரிவுகளில் லட்சக்கணக்கான சாமானிய ஏழைஎளிய உழைப்பாளிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். முந்தைய காலங்களில் நூல் விலை உயர்வு சமயங்களில் இந்த தொழில்களுக்கு மத்திய அரசு நூல் விலைக்கு மானியம் வழங்கிய வரலாறு உள்ளது. தற்போது வரலாறு காணாத வகையில்முன்னெப்போதைக் காட்டிலும் கூடுதலாக நூல் விலை உயர்ந்துள்ள நிலையில் உள்நாட்டு நெசவுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று இத்தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உடனடியாக கைத்தறிவிசைத்தறி நூலுக்கு மானியம் வழங்க வேண்டும்
4.            பருத்தி விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள் செலவினங்களுக்கான தொகையை குறைந்த வட்டியில் கடனாக வங்கிகளின் மூலமாக மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
5.            விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலைக்கு இந்திய பருத்திக் கழகத்தின் (ஊஊஐ) மூலம் மத்திய அரசே கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
6.            நூற்பாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மின் தேவையில் பற்றாக்குறைக்கு ஏற்பமத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு உரிய முழுப் பங்கையும் மத்திய அரசிடம் கோரிப் பெற வேண்டும். நூற்பாலைகள் டீசல் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு மானிய விலையில் தமிழக அரசு டீசல் வழங்க வேண்டும்.
7.            சாயப்பட்டறைத் தொழிலுக்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஏற்படும் செலவுக்கு போதிய மானியம் வழங்க வேண்டும்.
8.            பனியன் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சமீபத்திய உடனடி பாதிப்புகளான நூல் விலை உயர்வுமின்வெட்டினால் ஏற்பட்டுள்ள கூடுதல் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டும் விதத்தில் கூடுதல் ஊக்கத் தொகைகளை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

9.            விசைத்தறிகைத்தறி நூல்களுக்கு ஏற்கனவே மத்திய அரசு மானியம் வழங்கியது போல தற்போதும் விலை உயர்வைச் சமாளிக்க கைத்தறிவிசைத்தறி நூல்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.10.          இந்திய ரூபாயின் மதிப்பு உயர்கிற பிரச்சனைக்குரிய மூல காரணமாகவும்உள்நாட்டுப் பொருளாதாரம் பலவீனமடையக் காரணமாகவும் உள்ள அந்நிய நிதி மூலதனத்தை குறிப்பாக ஊக முதலீட்டை இந்தியாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.பிரச்சனையும்தீர்வுகளும்  நமக்கு புரிகிறது.  அரசுக்கு புரிந்து அதன் கவனத்திலிருக்கிறதாதிரு தயாநிதி மாறன் தொலைதொடர்பு துறையினமைசாராகயிருந்தபோது பிரதமரால் அவரது வேகமான செயல்திறனுக்காக பராட்டபட்டவர். இபோது அவர் வசமிருக்கும் இந்த துறையிலும் அதுபோல் வேகமான மாற்றங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.---------------------------------------------------------------------------------

8/8/10

நெசவுத்தொழிலின் நிஜங்கள்



               நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 3


இன்றைக்கு  மற்ற எந்த தொழிலையும் விட மிக பாதிக்கபட்டிருப்பது நெசவுத்தொழிலின் மிக முக்கிய அங்கமான நூற்பாலைகள் தான். பல ஆலைகள் நஷ்டத்திலோ அல்லது மிக  குறைந்த லாபத்திலோ தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் சுமை ஏறிக்கொண்டேயிருக்கிறது. மற்ற தொழிளார்களைவிட அதிகம் ஊதியம் பெறுபவர்கள் நூற்பாலைததொழிலாளிகள். ஆனால் அதிகமான தொழிலாளர் பிரச்சனையும் இதில் தான். கடுமையான மின்வெட்டுஅறிவிக்கபட்டது 30% தான் ஆனால் உண்மையான மின்வெட்டு 50%. இதனால் உற்பத்தி பாதிக்கபட்டாலும் தொழிலாகளுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். ஏறிக்கொண்டே போகும் டீசலின் விலையினால் ஜெனரேட்டர் இயக்கத்தின் செலவு மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.  அதுமட்டுமில்லை நல்ல வகை பஞ்சு நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது இதனால் தொடர்ந்து பஞ்சு  ஒரே விலையில் கிடைப்பதில்லை தரமும் வேறுபடுகிறது.. தயாரிக்கும்   நால் விற்பனை விலை மாறுபடுகிறது என்கிறது நூற்பாலை அதிபர்களின் தரப்பு. உலக அரங்கில் இந்திய ஜவுளித்துறையின் மிகப்பெரிய பலமே பருத்தி உற்பத்திதான் உலகின் பருத்தி உற்பத்தியில் நமக்கு இரண்டாவது இடம்..சுமார் 300 லட்சம் பேல்கள் (ஒரு பேல் 170கிலோ) இந்தியாவில் விளைவிக்கப் படுகிறது. ஆனாலும் பருத்தி விவாசயிகளின் அவலநிலை இன்னும் அப்படியேயிருக்கிறது. எனபதுதான் உண்மை..1997லிருந்து-2007 விளைவித்த பருத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமல்கந்துவட்டிகொடுமையினால் தற்கொலை செய்துகொண்ட பருத்திவிவசாயிகள் ஒரு லட்சத்து 80ஆயிரம்பேர் என்பது பாராளுமன்றத்தில் பதிவான செய்தி. ஆனால் இடைத்தரகர்களும் பஞ்சாலை அதிபர்களும் பஞ்சு ஏற்றுமதி செய்து  கொள்ளை லாபம் ஈட்டியிருக்கின்றனர்


பஞ்சாலைகளின் நேரடி பஞ்சு ஏற்றுமதி  நூல் விலையேற்றத்திற்கு  ஒரு காரணம் என்று சொல்லும் இந்த நூற்பாலைகள் செய்தது என்ன தெரியுமாதரமாக தயாரிக்கபட்ட நூலையே எற்றுமதி செய்ததுதான். பெரும் மூலதனத்தில் கட்டமைப்பும்பல லட்சகணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கும் நெசவுத்தொழிலின் முக்கிய இடுபொருளை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யாமல் ஏறுமதி செய்ய கற்றுகொடுத்திருக்கிறது அரசின் உலகமயமாதல் கொள்கைகள்.  இதைவிட அதிர்ச்சியான விஷயம் இந்த நூலை வாங்கும் பங்களாதேஷ்வியாட்நாம்பாக்கிஸ்தான்சீனா போன்ற நாடுகள்  சர்வேதேச  ஜவுளிஆயுத்த ஆடைகளின் ஏற்றுமதி மார்க்கெட்டில் நமது போட்டியாளர்கள். நமது நூலை வாங்கி அதில்  துணி உற்பத்தி செய்து நாம் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் நாடுகளுக்கே குறைந்த விலையில் விற்கிரார்கள் இந்த புத்திசாலிகள். இதற்கு உதவிக்கொண்டிருக்கின்றன நமது ஆலைகள். ஏற்கனவே   உருகிஓடிகொண்டிருக்கும் உலக பொருளாதாரவீழ்ச்சியில் டாலர் மதிப்பு 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததால்  நமது துணி ஏற்றுமதியாளருக்கு  13% வரவுஇழப்பு என்பதோடு  வரும் காலத்தில்  மார்கெட்டையும் இழக்கும்  அபாயமிருக்கிறது. .இந்த ஆண்டு இந்தியாவில் நால் விலையின் இந்த வரலாறு காணாத விலைஏற்றத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கைகள் தான் என்பதை தொடர்ந்து நாங்கள் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம் என்கிறது மார்க்ஸிஸ்ட் கட்சியின் அறிக்கை. 2009 செப்படம்பரிலிருந்து நவம்பருக்குள்ளாக ஒரு பேல் `22000லிருந்து 25000 உயர்ந்துவிட்டது. உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் என கோவை தென்னிந்திய மில்சங்கம்,ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகம்இந்திய ஜவுளி கூட்டமைப்புஎல்லாம் மத்திய அரசை வேண்டின. “ தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தேவையில்லாமல் பீதி அடைந்துள்ளனர். நமது நாட்டில் போதுமான பருத்தி உற்பத்தியுள்ளது பருத்தி  ஏறுமதியை தடை செய்ய வேண்டிய அவசியமேயில்லை என்று அமைச்சர் மாறன் 2009 டிசம்பரில் அறிவிக்கிறார். ஆனால் 2010 ஏப்பரல் மாதத்தில் ஜவுளித்துறை உள்நாட்டு  நூற்பாலைத்தொழிலுக்கு மூலப்பொருள் பற்றாகுறையிருப்பதால் ஏற்றுமதிக்கு தீர்வை விதிக்கபடவேண்டும் என்று பரிந்துரைப்பதால் பஞ்சு ஏறுமதிக்கு தீர்வை என மத்திய நிதிஅமைச்சகம் அறிவிக்கிறது. இதை கடந்த ஆண்டு நவம்பர் மாதமே செய்திருந்தால் இந்த  நூல் விலை உயர்வு வந்தேயிருக்காதுஎன்பது துறையிலிருக்கும் பலரின் ஆதங்கம். ஏற்றுமதி தீர்வை நிலமையை முழுவதும் சமாளிக்க உதவாது. இந்த ஆண்டு விளைந்த பஞ்சில் 81% சதவீதம் தான் வெளியே வந்திருக்கிறது 19 சதவீதம் பதுக்கபட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் வருமாண்டு  வரப்போகும் பஞ்சு பற்றாகுறையை பணமாக்கி கொள்ள அஹமதாபாத் பஞ்சாலை லாபி திட்டமிட்டிருக்கிறது. அதனால் அடுத்தாண்டும் நூல்விலை குறைய வாய்ப்பில்லை என்கிறது  ஒரு ஆராய்ச்சி கட்டுரை.

நெசவுத்தொழில் சார்ந்த சங்கிலித்தொடரான தொழில்களில் ஈடுபட்டுள்ள பருத்திவிவசாயிகள்ஜின்னிங் தொழில் உரிமையாளர்கள்பஞ்சுவர்த்தகர்கள் நூற்பாலை உரிமையாளார்கள்கைத்தறிவிசைத்தறி தொழிலாளார்கள் ஏற்றுமதியாளார்கள் என அனைவரும் சிக்கிய நூல்கண்டாக தவிக்க வைக்கும் இந்த நூல் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?
ஜவுளிதொழிலில் நீண்ட அனுபமுள்ள ஆலோசரின்  ஆலோசனைகள் அடுத்த வாரம்... ..
_________________________________________________________________________________

என்ன செய்ய வேண்டும்?


மிக நேர்த்தியாக உள் அலங்காரங்கள் செய்யப்பட்ட அழகானபெரிய அந்த ஹாலில் ரமேஷயையும் சேர்த்து 7 பேர் காத்திருக்கின்றனர்ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரிகளுக்கான நேர்முக தேர்வுமுதல் இரண்டு கட்டங்களைத்தாண்டி இறுதித்தேர்வுஅடுத்துவரப்போகும் தன் முறைக்காக காத்திருக்கும் ரமேஷக்கு,புதிய உடையின் கசகசப்பு பழக்கமில்லாத புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் டையின் இருக்கம் எல்லாம்சேர்ந்து அந்த சற்று பதட்டமாக எர்கண்டிஷன் அறையிலும் வேர்ப்பதுபோலிருந்தத்துஅடுத்து நீங்கள் போகலாம் எண்று  ஹாலின் ஒரு கோடியிலிருந்த பெண்மணி  சொன்னதைத்தொடர்ந்து நேர்முகம் நடக்கும் அறையை நோக்கி போகிறார்ரமேஷ்மூடிய கதவுகளிடையே சற்றே இடைவெளி அதன் வழியாக சற்று தயக்கத்துடண்பார்த்து   நின்ற பின்னர் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்லுகிறார்நேர்முக குழுவின் 3 உறுப்பினர்களும் இவரைபார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் உட்காரசொல்லவில்லை.நின்றுக்கொண்டேயிருந்த ரமேஷ் தனியே இருக்கும் அந்த் நாற்காலியின் நுனியில் உட்காருகிறார்அரைநிமிடம் நேர்முககுழு எதுவும் கேட்டகவில்லை.. ரமேஷும் எதுவும் பேசவில்லைஒரு கனத்த மெளனத்திற்கு பின்னர் குழுவிலிருந்த ஒருவர் “வெளியே காத்திருக்கும் போது எக்னாமிக்ஸ் டைம்ஸ் பார்த்க்கொண்டிருந்தீர்களே அதில் நீங்கள் படித்த  எதாவது செய்தி பற்றி சொல்ல முடியுமா”? என்றார்தன்னைப்பற்றிஅந்தநிறுவனத்தைபற்றி,இன்றைய கார் மார்கெட் பற்றி எல்லாம் தயாரித்திருந்த ரமேஷ் இந்த கேள்வியினால் ஆடிப்போனார்ரமேஷ் அந்த பேப்பரில் எதுவும் படிக்கவில்லை.சொல்லப்போனால் எக்கானாமிஸ் டைமை முதல் தடவையாக அன்று தான் பார்க்கிறார்.அதனால் பதில் ஏதும்சொல்லாமல் மேஜையில் வைத்த தன் பைலின் மீது   வைத்திருந்த கைவிரல்களை   கோர்த்து கைககளைப்பிசைந்துகொண்டிருந்தார்இவர் பதில் தராததைபற்றி எந்த ரியாக்கஷனும் காட்டாமல் குழுவில் மற்றொருவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்முதல் கேள்விக்கு தன்னால்  சரியாக பதிலளிக்கமுடியவில்லையே என்ற அழுத்தில் தொடர்ந்த கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல முடிவில்லைஇள நிலை முதல் வகுப்பு பட்டதாரியாகயிருந்தும்மார்க்கெடிங் பட்டயம் இருந்தும் இந்த நேர்முகத்தினால் முடிவு என்னவாயிருக்கும் என்பதைச்சொல்வேண்டியதில்லை.
இது போன்ற நிகழ்வு நாம் நேர்முகத்தேர்விற்கு போகும்போது நடக்காமலிருக்க என்னசெய்யவேண்டும்என்பதற்கு பதிலாக ரமேஷ் என்ன செய்திருக்கவேண்டும் என்பதைப்பார்ப்போம்.
1.நேர்முகத்தேர்விற்கு புதிய ஆடை அணிந்துசெல்லக்கூடாது.ஏனெனில் நமது கவனம் அதிலிருந்துகொண்டேயிருக்க வாய்ப்பு அதிகம்.  தேர்வு இல்லாத நாளில்டை.ஷு அணிந்து நடந்து பழகிகொள்ளவேண்டும்.
நேர்முகத்தேர்வின் அறையின் நுழையும்முன்கதவு திறந்தேஇருந்தாலும் மெல்ல-(கவனியுங்கள்-மெல்லவிரல்களின் மேல்புறத்தால் தட்டிமை  கமின்?” என்று கேட்டக வேண்டும்அவர்கள் அழைத்துதான் வந்திருந்தாலும் இது ஒரு எதிர்பார்க்கபடும் சம்பிரதாயம்நுழைந்த 10வினாடிக்குள் தேர்வுக்குழு உட்காரச்சொல்லவில்லையாலால்மே  சிட் என்று கேட்டு நன்றாக ஆனால் ஆணவம் தொனிக்காத கம்பீரத்துடன் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
3. யார் பேச்சைத்துவக்குவதுநாமாக பேச வேண்டுமானால் என்னபேசவேண்டும்எவருக்கும் எழும் இயல்பான கேள்விகள்தான்இந்த நிறுவனம் தேர்விற்கு வந்தவர் முதலில் பேச வேண்டும் என்பதை தங்களது மெளனத்தின் மூலம் தெரிவித்துவிட்டபின்.”உங்கள் நிறுவனம் இரண்டு கட்டங்களுக்கு பின் என்னை நேர்முகத்திற்கு அழைத்தையே நான் கெளவரவமாக கருதிகிறேன்இந்த தேர்வையும் வெற்றிகரமாக கடந்து நிறுவந்த்தில் சேர காத்திருக்கிறேன்” என்ற ரீதியில் ரமேஷ் பேச்சைத்துவக்கியிருக்கவேஎண்டும்.
அடுத்தது-எக்னாமிக்டைம்ஸ் விஷயம்அந்த நிறுவனத்தின் தேர்வுகுழு  தேர்விற்கு காத்திருப்பவர்களை கூட கவனமாக பார்த்துகொண்டிருந்திருக்கிறது என்பது புரிகிறதுஅப்படியானால் தேர்வு அங்கேயே துவங்கிவிட்டிருக்கிறதுநாம் பேசுவதுசெய்வதுஎல்லாம் மதிப்பிடப்படுகிறது. “ நான் அந்த பேப்பரில் எதுவும்  ஆழ்ந்து படிக்கவில்லைஅருகில் இருந்ததால் எடுத்துப்பார்தேன் அரசியல்,பரபரப்பு செய்திகல்  இல்லாமல் நிறைய மார்க்கெட் செய்திகள் இருப்பதுப்போல் தோன்றுகிறது இனி தொடர்ந்து படிக்கலாம் எனநினக்கிறன்” என்ற உண்மையான பதிலை ரமேஷ் சொல்லியிருக்கவேண்டும்
4. முதல் கேள்வி என்றில்லைஎந்த கேள்விக்குமே பதில் சொல்லமுடியாவிட்டால் அதனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாதுஎந்த நேர்முகத்திலும் யாரும் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிடமுடியாதுஅதுமட்டுமில்லை தேர்வுகுழுவினரும் ஒரு அல்லது சில கேள்விகளினால்  மட்டுமே முடிவு செய்ய மாட்டார்கள்இங்கே ரமேஷ் பதில் சொல்லாதாதோடு தான் குழப்பமாகிவிட்டதை தனது உடல் மொழியின்( body languge) மூலம் காட்டிவிட்டார்,

எந்த நேர்முகமும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாதுநிறுவனம்,பணியின் தன்மை,தேர்வுகுழுவின் அமைப்பு போன்றவகளினால் மாறுபடக்கூடியது.ஆனால் அழைக்கப்ட்ட நிறுவனத்தின் அமைப்பு  தேர்வானால் செய்ய வேண்டிய பணி பற்றி அறிந்திருந்த ரமேஷ் தன்னை  உடைஅணுகு முறை போன்றவற்றில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தால் எளிதாக சமாளித்திருப்பார்..மார்க்கெட்டிங் அதிகாரியாக வரப்போகிறவர் தானே முன்வந்து முனைபவராக (proactive) இருப்பதையும்,எளிதாக பேசும் இயல்பு உள்லவராகவும் இருக்கவேண்டும் என அந்த் நிறுவனம் எத்ரி பார்ப்பதில் தவறல்லியேஇப்போது இதற்கு நிறைய புத்தகங்கள்பயிற்சிக்கூடங்கள் வந்துவிட்டனமிக எளிதாக வீட்டிலேயே நண்பர்கள் சகோதரர்கள் முலம் ஒரு மாடல் தேர்வு   கூட நடத்திப்பார்க்கலாம்நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லோருடனும் நிறைய பேசி பேசி பழகவேண்டும்இது தன்நம்பிக்கையை வளர்க்கும்.நிறைய படிக்கவேண்டும் அதை நினைவிலும் வைத்துக்கொள்ளவேண்டும்அது தேர்வுகளிலும்  சமயோசிதமாக பதில் சொல்ல கைகொடுக்கும்.
சமீபத்தில் ஒரு வங்கியில் முதல் அதிகாரி நிலையிலிருந்து கிளை மேலாளர் நிலைக்குநேர்முகம். “இதுவரை தனியாக ஒரு கிளையை நிர்வகித்த அனுபமில்லாத நீங்கள் தேர்ந்தெடுக்கபட்டபின் ஒரு கிளைக்கு நிர்வாகியாக அனுப்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு தேர்விற்கு வந்தவர் தந்த பதில் “இருபது ஆண்டுகளுக்கு முன்  அதிகாரிநிலையிருந்து தெர்வுபெற்று நீங்கள் ஒரு கிளைப்பொறுப்பேற்று 5மடங்கு அதிகம் பிஸினஸ் செய்துகாட்டியதுபோல நம்பிக்கையுடன் முயற்சிப்பேன்” தேர்வுகுழுவிலுர்ந்து கேள்வியைகேட்ட பொதுமேலாளரிம் முகத்தில் புன்னகைகடந்த ஆண்டு அவர் போதுமேலாளராக தேர்வுசெய்யப்பட்டபோது அந்த வங்கியின் ஊழியர்களுக்கான மாதந்திர மடலில் படத்துடன் வெளியான வாழ்க்கைகுறிப்பிலிருந்த அந்த விஷயத்தை சரியான இடத்தில் சரியானமுறையில் பயன் படுத்திகொண்ட அவர் தெர்வுசெய்யப்போகும் அதிகாரி பற்றிய விபரங்களை சேகரிக்கும் திறன்,  வங்கியின்வெளியீடுகளை படிக்கும் பழக்கும்தனது நினைவாற்றல் போன்ற பல விஷயங்களை ஒரே பதிலில் உணர்த்திய  அவரின் தேர்வுமுடிவு என்னவாகயிருந்திருக்கும் என புரிந்திருக்குமே.
புதிய தலைமுறை)