10/4/11

கலியுக கர்ணன்


கலியுக கர்ணன்


வாரன்பஃபெட் 2008ல் உலக கோடீஸ்வர்களில் முதல் இடத்திலிருந்தவர். பில்கேட்டினால் பின் தள்ளபட்டு இன்று 3 வது இடத்திலிருக்கிறார். அமெரிகாவிலுள்ள ஒம்கா நரில் 1930ல்  சாதரணகுடும்பத்தில் பிறந்த பஃபெட் தன் வயது சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது வியாபாரம் செய்து 11வயதிலியே பங்கு சந்தைக்கு அறிமுகமாகி 17 வயதில் 5 ஆயிரம் டாலர் சம்பதித்தவர்.பென்கிராம் என்ற பங்குசந்தை நிபுணரை குருவாக ஏற்ற ஏகலைவன். 1965ல் பெர்க்‌ஷ்யர் ஹாத்வே என்ற டெக்ஸ்டையில் கம்பெனியை வாங்கி அதன் தலையெழுத்தோடு அமெரிக்க பங்கு சந்தையின் பிமப்த்தையும்  மாற்றியவர்.அவரது நிறுவனம் பல துறையில் முதலீடு செய்யது அள்ள அள்ள பணம் என்ற ரீதியில் சம்பாதிக்க துவங்கி 2008ல் உலகின் முதல் பணக்காரானவர். இவரது நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் அமெரிக்க பங்குசந்தையின் குறியீட்டு எண்ணைவிட ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கபடுமளவிற்கு பிரபலமானது. இவர் தன் நிறுவன முதலீட்டாளாருக்கு எழுதும் கடிதத்தினால்  அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கு மாறுவதால் உலகமே உற்று கவனிக்கும் இந்த மனிதர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்திருந்தார். அதிபர் ஒபாமாவின் வருகையை காட்டிலும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியிருந்தது இந்த 80 வயது இளைஞரின் முதல் இந்திய வருகை.
வருகையின் காரணம் பங்களூரில் அவரது  நிறுவன முதலீட்டில் டேக்டெக் என்ற நிறுவனத்தின் துவக்க விழா என்று சொல்லபட்டாலும் இப்போது இந்தியாவில் சூடுபிடித்துவரும் இன்ஷ்யூரன்ஸ்  தொழிலில் அனுமதிக்கபட்ட அன்னிய முதலீடான 26% த்தை 50 % ஆக அரசை உயர்த்த செய்து அதில் நுழைந்துவிடவேண்டுமென்பத்தான்.. கர்நாடக அரசின் விருந்தினராக் கவுரவிக்கபட்ட பஃபெட் பங்களூரில் சிறப்பு அழைப்பாளாக அழைக்கபட்டவர்களின் கூட்டத்தில், நெற்றியில் பளீரென்ற குங்குமப்பொட்டுடன் போட்ட ஒற்றை சர மல்லிகை மாலையை கழட்டாமல்  பேசியதில் கேட்டவை.
Ø  இந்தியாவிற்கு மிக தமாதமாக வந்ததிருப்பதை உணர்கிறேன். வரும் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் எனது நிறுவனம் இந்தியாவில் பெருமளவில் மூதலீடு செய்யும்.
Ø  ஷேர் மார்கெட்டில் அடுத்தவர்கள் பேராசைப்படும்போது நீங்கள் பயப்படுங்கள். மற்றவர்கள் பயப்படும்போது நீங்கள் பேராசைப்படுங்கள்.
Ø  உங்கள் ஷேர்களின் மதிப்பு  50% விழுந்தால்  பீதி யடையபவரா நீங்கள்? அப்படியானால்  நீங்கள் ஸ்டாக்மார்கெட்டிலிருக்க லாயக்கில்லாதவர்.
Ø  உங்களால் புரிந்துகொள்ள முடியாத பிஸினஸில் முதலீடு செய்யாதீர்கள்
Ø  நானும் இப்போது இந்தியாவிலிருக்கும் நணபர் பில்கேட்டும் இந்திய கோடீஸ்ரர்களை சந்தித்து சம்பாதித்ததில் பெரும்பஙகை சமுதாயத்திற்கே திருப்பி கொடுக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தபோகிறோம்.
Ø  என் சொத்தில்(50பில்லியன் டாலர்கள்- )  99%த்தை என் வாழ்நாளுக்குள் நனகொடைகளாக வழங்க தீர்மானிருக்கிறேன். மீதி என குடுபத்தினருக்கு போதும். அவர்களின் தேவைக்குமேல் விட்டு செல்வது அவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.  நான் இவவளவு பணத்தை அறககட்டளைக்கு கொடுத்தாலும் என் சந்தோஷமான வாழ்க்கையையோ எனக்கு பிடிததவவைகளையோ ,என் விடுமுறையையோ  இழக்க போவதில்லை. எனக்கு அதிகமாகயிருக்கும் இந்த பணம் பலருக்கு அவசியமாயிருக்கிறது.
Ø  நணபர் பில்கேட் இதை ஏறகனவே துவக்கி உலகளவில் 25 பில்லியன் டாலர்கள்  கல்வி, மருத்துவம் போன்றவற்றிருக்கு செலவிட்டிற்கிறார்.. நானும் அந்த வழியில் செல்ல விரும்புகிறேன்.
1985-ல்  ஹாத்வே நிறுவனத்தில் சேர்ந்த அஜித் ஜெயின் என்ற இந்தியர். இன்று இவரது நம்பிக்கைக்கு பாத்திரமான இவருக்கு அடுத்த நிலை அதிகாரி.  அஜித்தின் கடின உழைப்பால், திறமையான நிர்வாகத்தால்  பஃபெட்டின் ஹாத்வே நிறுவனக்கு பல மடங்கு பணம் மழையாக் கொட்டியது.பஃபெட்டின் வாரிசாக போகிறவர் என்பது அமெரிக்க பங்குசந்தையின் கணிப்பு. அவரைப்பற்றி பேசும்போது
Ø  அஜித் என்னைவிட மிகததிறமைசாலி. ஹாத்வேக்கு  என்னைவிட அதிகம் சம்பாதித்து கொடுத்தவர். கடுமையான திறமையான, நாணயமான உழைப்பாளி. அவரை எனக்கு தந்ததற்கு இந்தியாவிற்கு நன்றி சொல்லுகிறேன். அவரைபோல இன்னும் ஒருவர் இருந்தால் உடனே என்னிடம் அனுப்புங்கள்.

  

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்