30/10/11


ராஜாவுக்கு கல்யாணம்

நமது பக்கத்துவீடான பூடான  உலகிலில் மன்னா ஆட்சியிலிருக்கும் சில  குட்டிநாடுகளில் ஒன்று. . ஒரு அரச குடும்ப திருமணத்திற்கான எந்தவித ஆடம்பரபமும் இல்லாமல் மிக எளிமையாக நடந்தது அதன்  31 வயது மன்னரான ஜிக்மி கேஸர் நாம்ஜியால் வாங்சக். (Jigme Khesar Namgyel Wangchuck, ) திருமணம்.  திருமணத்திற்கு பிற நாட்டுதலைவர்கள், மனன்ர்கள் அழைக்கபடவில்லை. நண்பர்களாக பங்குகொண்டவர்கள் ராகுல் காந்தியும் அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியாவும் மட்டுமே. பூடானின் தலைநகர் திம்புவானாலும் திருமணம் நாட்டின் பழைய தலைநகரான  புனாகா லிருக்கும் பரம்பரை புத்தர் கோவிலில் தான் நடந்தது.  மணப்பெண்  21 வயதான ஜெட்சன் பெமா  (Jetsun Pema,)
இந்தியாவில் படித்தபின் லணடனில் கல்லூரியில் படிக்கும் மாணவி.  இவர் ஆக்ஸ்போர்டிலும்  பின்னர் அமெரிக்காவிலும் படித்த மன்னரின் காதலி எனபது ஐரோப்பிய மீடியாக்கள் தரும் தகவல்.   நாலு மணிநேர பிராத்தனைக்கு பின் மன்னரிடம் தரப்பட்ட சிவப்பு துணித்தொப்பியை மணமகளுக்கு அணிவித்து அழைத்துச்செனறு தன் தங்கசிம்மாஸனத்திற்கு  அருகில் அமைக்கபட்டிருந்த தனியாசனத்தில் அமர வைத்தார். அவ்வளவுதான் திருமணம் முடிந்தது. க்ஷ்க்ஷ்க்ஷ் பூடான் மன்னரின் மனைவியாகவும் ராணியாகவும் ஆகிவிட்டார்.
.7 லட்சமே மக்கள்தொகை கொண்ட, எளிமையான வாழ்க்கையில்  மிக சந்தோஷமாகயிருக்கும் இந்த நாட்டிற்கு மக்கள் கேட்காமலேயே  ஜனநாய அரசை மக்க்ளிடம் திணித்திருப்பவர் இவரது தந்தை.இதனால் இப்போது 47 உறுப்பினர் கொண்ட பார்லிமெண்ட்டும் இருக்கிறது. இதில் தன் திருமணத்தை அறிவித்த போது  ” “நாட்டின் ராணியாக வரப்போகிறவர் நல்ல மனுஷியாகவும்  மக்கள் விரும்பவராக, அவர்களின் நலம் பேணுவராக இருப்பார் “ என சொல்லியிருந்தார். அந்த நாளிலிருந்து மக்கள் ஆவலுடன்  அந்த அதிர்ஷ்டசாலியையை காண காத்திருந்தனர். திருமணத்தை தேசமுழுவதும் மக்கள்  தங்கள் வீட்டுதிருமணமாக கருதிகொண்டாடினர். பேபர் போஸ்டர்கள் கூட அனுமதியில்லாதா பூட்டனில் முதல் முறையாக டிஜிடல் பேனர்களில்  மன்னர் தம்பதியினரின் படம்.   குடும்ப விழாவாக நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து   மக்கள் கூடியிருந்த ஸ்டேடித்தில் மக்களின் வாழ்த்தைபெற்ற இந்த மன்னரும் ராணியும அவர்கள் முன் முத்தமிட்டகொண்டது ஒரு  எதிர்பாராத  இனிய ஆச்சரியம்.. பொது இடத்தில் பெண்களை தொடுவது கூட தவறு எனறு கருதப்படும் நாட்டில் மன்னரின் இந்த செய்கை மன்னரைஒரு ஹீரோவாக பார்க்கும்  இளைஞர்களுக்கும் மாணவிகளுக்கும்  மகிழ்ச்சியை தந்தது என்பது எழுந்த ஆராவரத்தில் தெரிந்தது.

GDP   என்ற வளர்ச்சி குறியீடு போல GHP  எனபது ஒரு நாட்டு மககளின் சந்தோஷத்தை குறிக்கும் குறியீடு.  அதில் 148 உலக நாடுகளில்  7 வது இடத்தியும் ஆசியாவில் முதலிடத்தையும் பெற்றிருக்கும் பூட்டானில்  மக்கள் ஆட்சி மலர்ந்திருந்தாலும் மன்னரின் திருமணத்தில் தேசமே சந்தோஷப்படுவதில் ஆச்சரியமில்லையே


"

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்