20/11/11

அமெரிக்காவிலிருந்து ஆன் லைனில் அம்மாவிற்குஅரைகிலோ கத்திரிக்காய்


லைப் பூஸ்டர் 12             

 வெஜ்ஜி பஸார் வெங்கடேசன்


 பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒரு பன்னாட்டு  கம்ப்யூட்டர் நிறுவனத்தில்  நல்ல பதவியிலிருந்த வெங்கடேசனுக்கு, உலக பொருளாதார சரிவினால் அவர் பணியாற்றிய நிறுவனம் சம்பள குறைப்புபதவிகள் குறைப்பு செய்ய  துவங்கியபொழுது எழுந்த எண்ணம் தனக்கென  ஒரு சொந்தத்தொழில். பொதுவாக புதிய தொழில் செய்ய விரும்புவர்கள்  வெற்றியடைந்த மாடல்களைத்தான் பின்பற்றுவார்கள். மாறுதலாக  ஒரு தோல்வியடைந்த தொழிலை தேர்ந்தெடுத்து ஏன் அவர்கள் வெற்றி பெறமுடியவில்லை எனபதை ஆராய்ந்து கண்டுபிடித்து அதைச்சீராக்கி இவர் துவக்கிய தொழில்   “வெஜ்ஜி பஸார்” “  என்ற ஆன்லைன் காய்கறி, கனிகள் வியாபாரம். யோசனையையும் திட்டவடிவையும் சொன்னவர் மனைவி நிர்மலா. சில ஆண்டுகளுக்கு முன் இதே முயற்சியில் ஈடுபட்டு 2 கோடி நஷ்டத்துடன் கையை சுட்டுக்கொண்ட இளைஞர்களைபற்றி அறிந்திருந்தும் துணிவுடன் 2009ல் துவக்கி வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கிறார்.  காய்கறிகள் பழங்கள் வாங்க மார்கெட் போக வேண்டாம். கம்ப்யூட்டரில் ஆன் லயனில் பார்த்து ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்பது மட்டுமில்லை. அவசியமானால் அழகாக நறுக்கிய வடிவில் வந்து சேரும் எனபது  இவர் உருவாக்கியிருக்கும் பிசினஸ் மாடல்.
இவரது வெஜ்ஜிபஸார் வெப் ஸைட்டில் 54 விதமான காய்கறிகள் படங்களுடன் கேட்லாக் செய்யபட்டிருக்கிறது. படத்தை கிளிக்செய்தால் அதன் அன்றைய விலை நறுக்கியவடிவில் விலை எல்லாம் வரும் அதை பார்த்து ஆர்டர் செய்து  கிரிடிட் அல்லது டெபிட்கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் காய்கறிகள் பழங்கள் வாடிக்கையாளார்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கபடுகிறது. இப்போது சென்னை வாசிகளுக்கு மட்டும்தான். சாதரண உள்நாட்டு காய்கறிகளுடன், பச்சைநிறகாளான், நீல நிறமுட்டைகோஸ் போன்ற அபூர்வ காய்களும் கிடைக்கும் கடிகாரத்துடன் போட்டியிட்டு வேலைகளை செய்துவிட்டு அலுவலகத்திற்கு ஓடும் தாய்மார்களுக்கு இது வசதியாயிருக்கிறது. இன்று 5000 வாடிக்கையாளர்களிருக்கும் இவரது நிறுவனத்தை ஒவ்வொரு நாளும் 100 வாடிக்கையாளர்களுக்கும் மேல் பயன்படுத்துகின்றனர். ஆய்ந்த கீரை, நறுக்கிய சேனை, கருணைகிழங்குகளுக்கு தினமும் ஆர்டர்கள் வருகிறதாம் தினசரி தேவை காய்கறிகளைத்தவிர வாரம் முழுவதுக்குமான, கர்ப்பணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு என பேக்கேஜுகளும் வைத்திருக்கி
றார்கள்.
 “பிடித்தமான பாட்டை லேப்டாப்பில் கேட்டுகொண்டே  15 நிமிடத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வேண்டிய காய்கறி ஷாப்பிங்கை செய்துவிட முடிகிறது.நேரம், பெட்ரோல் செலவு மிச்சம்” “ என்கிறார் ஜனனி. இவர் இரவு பகலாக நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கும் சாப்ட்வேர் என்ஜினியர்.

காய்கறிகள்  சூடான நீரிலும், குளிர்ந்த் நீரிலும்  கழுவபட்டு ஜெர்மனியிலிருந்து இறுக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களில் அழகாக   விதவித்மாக நறுக்கி பேக்செய்யபடுகிறது. சில நிமிடங்களில் ஒவ்வொரு வகை காய்கறிகளையும் அதேற்கேற்ற வடிவில் நறுக்கி குவிக்கிறது. ஆர்டர்களின் நமபர் இடப்பட்ட பைகளில் நிரப்பி அனுப்ப படுகிறது. ஆடம்பர  சுழலில் பரபரப்பாகபணி செய்தாலும் வீட்டு கடமைகளை மறக்காத  பெண்மணிகளின் சைக்காலாஜியை நன்கு அறிந்திருக்கும் வெங்கடேஸன் இப்போது நறுக்கிய காய்கறிகளை அவர்களின் அலுவலகத்திற்கே அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில்,  தொழிற்சாலைகளில் நிருவனங்களின் அனுமதியுடன் இந்த திட்டம் செயல்படுகிறது. தங்கள் பெயருடன் காத்திருக்கும் காய்கறி கவரை வீட்டுக்குபோகும்முன்  அலுவலகத்திலிருந்தே எடுத்து செல்லலாம். இந்த புது முயற்சிக்கு நல்ல  வரவேற்பிருக்கிறது என சொல்லும் இவர்  இப்போது  அதை  பல அலுவலகஙகளில் அறிமுகபடுத்தவிருக்கிறார். மிக அதிகமான அளவிலிருக்கும்  அடுக்குமாடி குடியிருப்புகளில்   மாலைநேர கடைகளயும் நடத்த ஆரம்பித்திருக்கிறார். இரவு 10 மணி வரை  ஆன்லையனில் வந்த ஆர்டர்களை பார்த்து பிரித்து அதற்கேற்ப கோயம்பேடு, செங்கல்பட்டு திண்டிவனம் போன்ற இடங்களிலிருக்கும் இவர்களின் சப்ளையர்களுக்கு தங்களது தேவைகளை  இரவு 11.30க்குள் எஸ்எம்எஸ் செய்கிறார்பழங்களை கொடைக்கானல், ஊட்டி போன்ற தனியார் பண்ணைகளிலிருந்து பெறுகிறார். வெங்கடேஸின் இந்தப் பணியில் துணை நிற்பவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராகயிருக்கும். அவரது மனைவி நிர்மலா.  அலுவலக வேலைக்குபின் இதை செய்கிறார்.   காலயில் 6 மணிக்கு புதிதாக வந்திறங்கும் காய்கறிகளின் தரம் சோதிக்கபடுவதிலிருந்து பணி துவங்குகிறது. மாலைக்குள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்படுகிறது. அனுப்பிய விபரம் ஈ மெயில் செய்ய்படுகிறது. ஆன்லயனில் வந்த சில ஆர்டர்களில்  அமெரிக்க விலாசமிருந்ததை பார்த்து ஆச்சரியபட்ட இவர் அறிந்தகொண்ட விஷயம் அவை அமெரிக்காவிலிருக்கும் ஒரு பெண் அடையாரிலிருக்கும் தனது பெற்றோர்களுக்காக ஆர்டர் செய்தது எனபது.    “ஆன்லையனில் காய்கறிகள் பழங்கள் விற்பனை எனபது எளிதான பிஸினஸ் இல்லை. விலை, தரம் சரியான நேரத்தில் டெலிவரி எல்லாம்  எல்லா நாளும் சரியாகயிருக்கவேண்டும். நாங்கள் அதில் மிக கவனமாகயிருப்பதால் வேகமாக வளருவோம் என நம்பிக்கையோடுயிருகிறோம்”“ ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் ஊர்களில் துவக்கலாம் என்கிறார்கள் இந்த தம்பதியினர்.

)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்