`செய்திகளின்
விலை..
ஒரு பத்திரிகை அது
வெளியிடும் செய்திகள் எங்கிருந்து, எப்படி கிடத்தது எனபதை மிக பாதுகாப்பாக வைத்துகொள்வார்கள். அதன் ஆசிரியருக்கும் சில
சமயம் உரிமையாளர்க்ளுக்கு ம்ட்டுமெ தெரிந்திருக்கும் அதை யாரிடமும் பகிர்ந்து
கொள்ளுவதில்லை என்பது உலகம் முழுவதும் கடைபிடிக்கபடும் ஒரு மரபு.
ல்ண்டனிலிருந்து வெளியாகும் நீயூஸ் ஆப் தி வேர்ல்ட் என்ற
வாரசெய்திதாள் அது வெளியிடும் திடுக்கிடும் செய்திகளுக்கு பெயர்
பெற்றது.ள்ண்டன்குண்டுவெடிப்பு, ஆப்கானி/ஸ்தான் போரில் இறந்த
இக்கிலாந்து வீரர்கள்,மேட்ச் பிக்ஸிங் சூதாட்டத்தில்
சிக்கிய பாக்கிஸ்தான் கிரிகெட் வீரர்கள் என பல விஷ்யங்களை அம்பலபடுத்திய
பத்திரிகையிது. இங்கிலாந்து அர்ச குடும்ப விகாரங்களை கூட அம்பலபடுத்தியிருக்கிறது.
பரப்ரபபான செய்திகளினாலும் . கவ்ர்சிகரமான தலைப்புகளினாலும் பிரபலமான இந்த
பத்த்ரிகையின் வார விற்பனை 75 லட்சம் பிரதிகள். பத்த்ரிகையின்
விற்றபனை அதிகரித்துகொண்டே போனாலும், வெளியான
செய்திகளினால் பாதிக்க பட்டவர்கள் மிக
கோபமாகயிருந்தனர். பத்திரிகை செய்தி சேகரிப்பதிற்காக தனி மனித உரிமைகளை மீறும்
குற்றத்தை செய்கிறது இந்த பத்திரிகை என்ற குற்றசாட்டு எழுந்தது. லஞ்சம் கொடுக்கபடும் விஷயத்தை லஞ்சம்
கொடுத்து தெரிந்து கொள்வது எப்படி பத்த்ரிகை தருமாகும் என்று எழுந்தகேள்வி பிரிட்டிஷ் நாடளுமன்றத்தில் எதிரொலித்தது. பிரதமர் டேவிட் கேமரூன்
விசாரணைக்கு உத்தரவிட்டார். -தொலைபேசி
ஒட்டுகேட்பதிலிருந்து, பெரிய இடஙகளின் உதவியாளருக்ளுக்கு
மாதசம்பளம் கொடுப்பதுவரை பல தப்பு காரியங்களை பல ஆண்டுகளாக செய்து அதற்காக
போலிசுக்கும், அதிகாரிகளுக்கும் அரசியல்
வாதிகளுக்கும் கொடுத்த லஞ்சமாக 7000 கோடி ரூபாய்கள் வரை செலவழித்திருக்கிறது இந்த
பத்திரிகை- என்று விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி அறிக்கை இப்போது
வெளியாகியிருக்கிறது.
பத்திரிகையின் ஆசிரியராக 2003 முதல் 2007 வரை இருந்தவர்
ஆண்டிகவ்ல்ஸன். இவர் கடந்தஆண்டுவரை பிரதமரின் தகவல் தொடர்பு அதிகாரியாக
பணியாற்றியவர். இவரும் ஒரு முன்னாள் நிருபரும் கைது செய்யபட்டிருகிறார்கள்.
பிரச்னை பெரிதாகவே
அதை எதிர்கொண்டு பத்திரிகையின் ரகசிய தொடர்புகள் வெளியாவதை விட எளிதான வழி
பத்திரிகையை மூடுவிடுது என அதன் உரிமையளார் ரூபர்ட் முர்டோச் முடிவு செய்து உடனடியாக
செயல் படுத்தியும்விட்டார். இவர் உலகம்
முழுவதும் இருக்கும் பல பத்திரிகைகள், டிவி சானல்கள், ரேடியோ நிலையங்களின் அதிபராகயிருக்கும் மீடியா சக்ரவர்த்தி. இன்று 168
வயதாகும் இந்த பாரமபரிய பத்திரிகையை 1969ல் வாங்கி அதிலிருந்து ஆண்டு தோறும் விற்பனையில் சாதனை
படைத்தகொண்டிருந்தவர். இவரது அதிரடி முடிவு அதன் கோடிக்கண்கான வாசகர்களுக்கும், அதன் 300 உழியர்களுக்கும் பெரிய அதிர்ச்சி. வெளியான செய்திகளுகாக தன்னையே
விலையாக தந்த இந்த பத்திரிகை தனது 8674 வது பதிப்பாக தனது கடைசி இதழை தாங்க்யூ & குட்பை என்ற கொட்டை எழுத்துகளில் முழு
முதல் பக்கத்துடன் உள்ளே பத்திரிகை தோன்றி வளந்த கதையை படஙகளுடன்வெளியிட்டயிருக்கிறது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்