25/3/12

அமெரிக்க அரசில் ஒரு தமிழ் அமைச்சர்


அமெரிக்க அரசில் ஒரு தமிழ் அமைச்சர்


அமெரிக்க நாட்டின் மெரிலாண்ட்ட் மாநிலத்தில் ”செகரிட்டரி ஆப் ஸ்டேட்” என்ற அரசின் உயர்ந்த பதவிவகிக்கும் நடராஜன் ஒரு  இந்தியர். தமிழர். நம் மாநில காபினெட் அமைச்சருக்கு நிகரான இந்த பதவியில்  ஒரு அமெரிக்க மாநிலத்தின் கவர்னரால்  நியமிக்கபட்டிருக்கும் முதல் இந்தியரும் இவரே. மெரிலாண்ட்ட் மாநில தலைநகர் அன்னபோலீசில்  (Annapolis) கவர்னரின் அலுவகத்தில் அவரை சந்தித்தபோது…….


ஒரு பயோடெக் சயிண்ட்டிஸ்ட்டான நீங்கள் எப்படி  அமெரிக்க அரசியலுக்கு வந்து இந்த நிலைக்கு உயர்ந்தீர்கள்?
சென்னை பல்கலைகழக்த்தில் பயோ டெக்கில் பிஹெச்டி முடித்த பின் 1989ல் இங்கு வந்தேன். மிக்சிக்கன் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாக பணியாற்றினேன். சில விருதுகள் பெற்றிருக்கிறேன். ஒரு கண்டிபிடிப்புக்கு காப்பு உரிமையும் பெற்றிருக்கிறேன். இளம் வயதிலிருந்தே பிஸினஸ் செய்ய ஆர்வம் அதிகம். அதற்கு என்னை தயார்செய்துகொள்ள ஏம்பிஏ படித்தேன். தொழிலில் கிடைத்த அனுபவங்களும், பல பெரிய நிறுவங்களுக்கு ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்த  வாய்ப்பினால் நிறைய தொழில் அதிபர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்த்து. ஆசிய பசிபிக் நாடுகளின் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராகும் வாய்ப்பும் வந்தது. இதில் நிறைய அரசியல் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பும் நட்பும் கிடைத்தது. இந்தியா ரவுண்ட்டேபிள், மேரிலாண்ட் சேம்பர்ஸ் போன்றவற்றில் நிறைய ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்தேன். அந்த சுழலில்  மாநில கவர்னர் தேர்தல் வந்தது. அதற்கு போட்டியிட்ட மார்ட்டின் ஒமேலாவுக்காக(Martin o’malley) ஆதரவு திரட்டினேன். அவரது வெற்றிக்கு வர்த்தக சமூகத்தினரின் பெறும் ஆதரவுகிடைத்தவும் ஒரு காரணம். நான் ஏற்கனவே அதிபர் ஒமாபாவின் தேர்தல் மாநில குழுவிலும் பணியாற்றியிருக்கிறேன்.. தேர்ந்தெடுக்கபட்ட கவர்னர்  கடந்த ஆண்டு என்னை வெளியுறவு  துறைக்கு இனைச்செயலாளாராக் நியமித்திருக்கிறார்.

ஜனநாயக(டெமாகிரட்ஸ்) கட்சிக்காக தொண்டாற்றியதனால்  கிடைத்த பதவியா இது?
அப்படி சொல்ல முடியாது. இங்கு கட்சியில் இருப்பதானால் மட்டும் அமைச்சராக முடியாது, கட்சியில் இல்லாதவர்களும் பதவிக்கு வரமுடியும். மக்களால் தேர்ந்தெடுக்க படும் அமெரிக்க அதிபரும்,மாநில கவர்னர்களும்  நிர்வாகத்தை செம்மையாக் நடத்த தகுதியுள்ள ஒழுக்கமான, மக்களுடன் அதிகம் தொடர்புள்ள திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவ நியமிப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்பட்டவர்களில் நானும் ஒருவன். சமீபத்தில் வாஷிங்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டமைப்ப்பு நடத்திய பாராட்டுவிழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஒமேலா இதை  குறிப்பிட்டு தெரிவித்தது இந்தியார்களுக்கு பெருமையான விஷயம்.
அமெரிக்க அரசியலில்  அங்கு வாழும இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா?
மாறிவரும் சூழ்நிலையில். நிறைய  இருக்கிறது. ஆனால் ஆர்வத்துடன் ஈடுபட தமிழர்களிடம்தான்  ஒரு வித தேவையற்ற தயக்கமிருக்கிறது, வட இந்தியர்கள் போல் தயகமின்றி அமெரிக்கர்களுடன் நம்பவர்கள் எல்லோரும் பழகுவதில்லை. மாறாக தென்னிந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் நேர்மையும் உழைப்பும் அமெரிக்கர்களை பெரிது கவர்கிறது. பல பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். இங்கு கட்சிகளில் உள் கட்சி ஜனநாயகம் மிக மதிக்க படுவதால் திறைமையுள்ள எவருக்கும்  அரசியலில் இடம் இருக்கிறது.
நீஙகள் பொறுப்பேற்றிருக்கும் துறையினைப்பற்றி சொல்லுங்கள்
நம் நாட்டினைபோல் இல்லாமல் இங்கு மாநிலங்கள்  நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கேற்ப  தங்கள் மாநில வெளியுறவுதுறையை அமைத்துகொள்வார்கள். அயல் நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது,  மெரிலாண்டின் தொழில் வளர்ச்சிக்கு அவர்கள் மூலம் உதவுவது, தொழில் நுட்ப பறிமாற்றம், அன்னிய முதலீடுகள செய்வது, , பெறுவது போன்ற விஷயஙகளை கவனிக்கும் துறை என்னுடையது. இந்தியா உள்பட 10 நாடுகளை கவனிக்கிறேன். மாநில கவர்னர் இந்த நாடுகளுக்கு பயணம் செய்யும் முன்னதாக  நான் சென்று முன் ஆயூத்த பணிகளை செய்வதும் என் பணிகளில் ஒன்று.
இந்தியாவிற்கு- குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்ய முடிகிறதா?
மெரிலாண்ட் அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கும் குழுவில் இருப்பதால் இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கி அதுகுறித்து தமிழக தொழில் முனைவோரிடம் பேசிகொண்டிருக்கிறேன். ஏறகனவே குஜராத், ஆந்திர  மஹாராஷ்டிர மாநிலங்களில் அமெரிக்க நிறுவனங்களை அறிமுகபடுத்தியிருகிறேன்,  குஜராத் அரசு  வெகு வேகமாக செயல்படுகிறது. மேலும்   “ஸிஸ்டடர் ஸ்டேட்” என ஒரு  இந்திய மாநிலத்தை இந்த மெரிலாண்ட் மாநிலம் தத்து எடுத்துகொள்ளலாம் என்பது ஒரு திட்டம்  இதன் மூலம் தமிழ் நாட்டை  மெர்லாண்ட்டுடன் இணைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், இதனால் இரு நாட்டின் மாநிலங்களுகிடையே பரஸ்பரம் நல்லுறவும், தொண்டு நிறுவங்களுக்கு ,பள்ளிகளுக்கு உதவி கிடைக்கும், இது கொள்கைரீதியிலான எனபதால் எல்லா மாநநிலங்களுக்கும் அறிவிப்புஅறிக்கை அனுப்பபட்டது. உடனே விருப்பம் தெரிவித்திருப்பது ஆந்திர மாநிலம் தான். . தமிழகத்துடன் தொடர்ந்து  நம்பிக்கையுடன் தொடர்பிலிருகிறேன்.
தமிழகத்தில் உங்கள் சோந்த ஊர் எது? ஏப்போது  அமெரிக்கா வந்தீர்கள். ?
சொந்த ஊர் புதுகோட்டை மாவட்டத்திலுள்ள முத்துகாடு  என்ற சின்னஞ்சிறு கிராமம். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மின்சாரம் கிடையாது, மண்ணெணை விளக்கில் படித்தவன் நான். பள்ளியில் வகுப்புகள் மரத்தடியும், ஒலைகொட்டகையும்தான், வசதியில்லாத ஒரு சிறு கிராமத்தின் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தவன் நான். அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி நான் தான். என் நிலையை பார்த்து இன்று முதுகலை வரை படிக்க மாணவர்கள் முன்வருகிறார்கள். நான் இன்றும் கிராமத்தை மறக்கவில்லை..என்னால் இயன்ற உதவியை செய்துகொண்டிருக்கிறேன். உயர் நிலை பள்ளிக்கு கட்டிடம் கட்டி உதவியிருகிறேன்.  அங்கு தேசத் தலைவர்கள் படங்களுக்கிடையே  முன்னாள் மாணவர் என்று என் படமும் மாட்டபட்டிருப்பது  அமெரிக்க அரசில் அமைச்சராக இருப்பதை விட பெருமையான விஷயமாக நினைக்கிறேன்.
உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்
பல புலம்பெயர்ந்த இந்தியர்களைபோல சவாலாக துவங்கி உழைப்பை மட்டுமே நம்பி உயர்ந்த குடும்பம். இப்போது மெரிலாண்ட் மாநிலத்தில் நிரந்தர வாழ்க்கையாகி நிற்கிறது. மனைவி சாவித்திரி ஒரு வேளாண்மை விஞ்ஞானி. நான்கு கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் பெற்ரிருக்கிறார். இப்போது அரசு பணியிலிருகிறார். இரண்டு மகன்கள் மூத்தமகன் பெற்றோர்களைப்போ பள்ளி இறுதி கட்டத்திலிருகிறார். அமெரிக்காவில் அமெரிக்கர்களுடன் பழகி வாழ்ந்தாலும், 20 ஆண்டுகளானாலும் வேர்களை, அதன் அடிமண்ணை மறக்கவில்லை. வீட்டில் தமிழ்தான் பேசுகிறோம். வாரந்தோறும் கோவில் செல்லுகிறோம்.
 அமெரிக்க அரசியலில் ஒரிடத்தை பிடித்திருக்கும் உங்கள் எதிர்கால திட்டம்.என்ன?
எனக்கு  இதுவரை கிடைத்தவைகளை திட்டமிட்டு பெறவில்லை. இறைவன் தந்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொடுத்த பணியை சிறப்பாக செய்யதுமுடிக்க வேண்டும் எனபதைதவிர பெரிய திட்டம எதுவுமில்லை. இந்த பதவியினால் நம் நாட்டுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு நிறைய பன் நாட்டு நிறுவங்களின்  பயோ டெக் தொழில்நுட்பஙகளை கொண்டுவர ஆசை. இதற்கு தொழில்முனைவோர், மற்றும் அரசின் ஆதரவு தேவை. கிடைக்கும் எனற நம்பிக்கையோடு இருக்கிறேன்.









11/3/12

நம்பிக்கையின் சின்னம்



கனவு காட்சியானதைச்சொல்லுகிறது இந்த பாறை



அமெரிக்க அரசியல் சரித்திரத்தில் அழிக்கமுடியாத இடத்தைபெற்றிருப்பவர் மார்ட்டின் லூதர்கிங். ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்திருந்த நிற,இனபேதமில்லாத அமெரிக்கா” 100 ஆண்டுகளுக்குமேலாக கனவாகவே இருப்பதை கண்டித்து அதைச் சட்டபூர்வமாக செயலாக்க 60களில் அண்ணல் காந்தியின் வழியில் அறப்போர் செய்து வெற்றிகண்டவர். நீதிகேட்டு  வெள்ளை மாளிகை நோக்கி அவர் குழுவுடன் செய்த நீண்டபயணமும் இறுதியில் 2லட்சம்பேர் பங்கு கொண்ட பேரணியும் அமெரிக்க சரித்திரத்தில் ஒருமுக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ”கனவொன்று கண்டேன்என அந்த பேரணியின் இறுதியில் லிங்கலின் நினைவுசின்னத்தின் படிகளிலிருந்து அவர் நிகழ்த்திய உரை இன்றளவும் உலகின் மிக சிறந்த உரைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது..”  நான் கண்ட கனவு இது  எனது நான்கு சிறு குழந்தைகளும்  ஒரு நாள்  அவர்களின் தோலின் நிறத்தால் இல்லாமல்  அவர்களது பண்பினாலும் ஆளுமையினாலும்  மதிக்கபடும் அமெரிக்காவில் வாழ்வார்கள்என்று சொன்ன மார்ட்டின்லூதரின் இன்று கனவு பலித்திருக்கிறது. கறுப்பினத்தவர் பலர் இன்று அரசியலில்,.சமூகஅமைப்புகள், கல்வி, கலை, இலக்கியம் என பலதுறைகளிலும்அரசு பணிகளிலும் உயர்ந்த இடத்திலிருக்கிறார்கள். இது சட்டம் மட்டும் செய்த விஷயமில்லை. மக்கள் மனதார ஏற்றுகொண்ட ஒருசமூக புரட்சி. 1964லில் நோபல் பரிசு பெற்ற மார்டின் 1968ல் சுட்டுகொல்லபட்டது சரித்திரத்தின் கருப்பு பக்கம்
.
கடந்த ஆண்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மார்டின் லூதர் கிங்க்கு ஒரு நினைவுசின்னம்  பிரமாண்டமான சிலையுடன் எழுப்பபட்டிருக்கிறது. முன்னாள் அதிபர்களான ஆப்ராஹாம்லிங்கனுக்கும், ஜெபர்ஸனுக்கும் மட்டுமே (ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கூட சிலை கிடையாது) அளிக்கபட்டிருக்கும்  மிகப் பெரிய கெளரவம். இது. அவர்களது நினைவுசின்னங்களுக்கு அருகில் நகரின் முக்கியமான இடத்தில் பொட்டாமாக் நதிகரையில் நிறுவப்பட்டிருக்கும் இதை, அமைதிபேரணியின் 48ம் ஆண்டு  நினைவு நாளான்று  அதிபர் ஒபாமாவால் நாட்டுக்கு அர்பணிக்கபட்டது. இந்த பிரமாண்ட சிலை அவரது வரலாற்றுசிறப்புமிக்க பேரணி உரையில் சொல்லபட்ட சில  வாசகங்களின் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருகிறது.
இந்த பேரணி  நம்பிக்கையின்மை என்ற கடினமான மலைபாறையிலிருந்து யிலிருந்து   வெட்டி எடுக்கபட்ட கல்லாக நம்பிகையளிக்கிறது.” ( "Out of the Mountain of Despair, a Stone of Hope"— for Justice,) "
என்ற அந்த வாசகங்களுக்கு ஏற்ப ஒரு பெரிய வெண்சலவைகள் மலையிலிருந்து வெட்டி எடுக்க்பட்ட பாறையில் நிற்கும் நிலையில்  சிலை வடிக்கபட்டிருகிறது. பிளவுபட்ட ஒரு மலையின் வழியாக சென்று பார்க்கும்படியாக அமைக்கபட்டிருக்கும் 30 அடி உயரசிலை. வளாகத்தின் சுற்று  கருங்கல் சுவர்களில் அவரது புகழ் பெற்ற வாசகங்கள்.. 140 மில்லியன் டாலர்களில் ஆறு ஆண்டு திட்டமாக நிறைவேற்றபட்டிருக்கும் இந்த சிலையை வடித்தவர் புகழ்பெற்ற சீன சிற்பி லீ யெக்ஸின்(Lei Yixin,)  பீகிங் நகர செஞ்சதுக்கதிலிருக்கும் பிரமாண்ட(100அடி) மாசேதுங் சிலையை வடித்தவர். அழியா சின்னங்களான சிலைகளைப்டைக்கும் சிற்பிகள் ஒவியர்களைப்போல தங்கள் படைப்புகளில் கையெழுத்திட மாட்டார்கள். ஆனால் இவர் செய்திருகிறார். சிலையின் பீடத்தில் இவரது கையெழுத்தும் கல்வெட்டாக இடம்பெற்றிருப்பது இந்த கலைஞனுக்கும் அளிக்கபட்டிருக்கும் காலத்தையும்கடந்து நிற்கும் கெளரவம்..




வெள்ளை மாளிகையில் விளக்கேற்ரியவர் இவர்



அமெரிக்க ஐக்கியநாட்டின் வட கோடியில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு மாநிலம் மேரிலாண்ட். நாட்டின் தலைநகரமான வாஷிங்டனை ஒரு எல்லையாக கொண்டிருக்கும்  இதில் லான்ஹம் என்ற சின்ன நகரில் இருக்கிறது சிவ-விஷ்ணு கோவில். வாஷிங்டனிலிருந்து பால்ட்டிமோர் நகருக்கும் செல்லும் சாலையில் 12வது மைலில் பளிரென்ற வெண்நிற ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கும் இந்த கோவில் அமெரிக்காவில் மிக பிரசித்திபெற்றது. 80களின் இறுதியில் மிக சிறிய அளவில் ஒரு வீட்டில் துவக்க பட்ட இது இன்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு முக்கிய கோவிலாக வளர்ந்திருக்கிறது. நாட்டின் தலைநகருக்கு அருகிலிருப்பதால் இந்தியாவிலிருந்து வரும்  பல அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் வருகை தந்திருக்கிறார்கள் நுழைவாயிலில் திறந்து வைக்கபட்டிருக்கும்  அந்த அழகான கதவுகளுக்கு அருகில் ஒருபுறம் கீதா உபதேசம், மறுபுறம் ஞான உபதேசம் சிற்பங்கள்.
உட்பிரகார சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்னேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகந்த அழகோடு  நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கபட்டுவருகிறது படு சுத்தமான பளிங்கு தரையில், குளிர்கால மாதலால் உட்கார்ந்து பிரார்த்திக்க வசதியாக கார்பெட்கள் இடப்பட்டிருக்கிறது சன்னதிகளில் ஆப்பிளும், பாதாம் பருப்பும் தான் நைவேத்தியம். அர்ச்சனை, பூஜை கட்டணங்கள் உள்ளூர் பண மதிப்பிலியே. சற்று அதிகம் தான். ஆனால் நம்ம கோவிலுக்குதானே என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.. திட்டமிட்ட அட்டவணையுடன் எல்லா கால  அபிஷகங்களும், பூஜைகளும் நடைபெறுகிறது. இங்குள்ள ஐயப்பன் அமெரிக்க கோவில்களிலிருக்கும் ஐயப்ப ஸ்வாமிகளில் முதல்வர் என்பதால் பக்கத்து மாநிலங்களிலிருந்து இருமுடிகட்டி விரதமிருந்து வருகிறார்கள். நல்ல குளிரிலும் பல குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருப்பதும் அவர்கள் கோவிலுக்குள் நுழையும் முன் நீரில் கை கால் சுத்தம் செய்துகொள்வதும் பார்க்க சந்தோஷமாகயிருக்கிறது.
கோவிலின் தலைமை அர்ச்சகர்  நாராயணச்சார். கர்நாடக மாநிலத்திலிருந்து வந்திருக்கும் இவர் இங்கு கடந்த 30 ஆண்டுகளாகயிருக்கிறார். தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பேசும் இவரின் கீழ் 10 அர்ச்சகர்கள் சுழல் முறையில்  எல்லா சன்னதிகளில் பூஜை செய்கிறார்கள். நாராயணச்சார் சம்ஸ்கிருத வித்வான், சம்ஸ்கிருத்திலும் ஆங்கிலத்திலும் ஏம் ஏ பட்டம பெற்றவர். 1999ல் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கிருஸ்தமஸ்ஸை போல தீபாவளி பண்டிகையும் கொண்டாட வேண்டும் என்றஅமெரிக்க வாழ் இந்தியர்களின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்ற போது அதை துவக்கிவைக்க அழைக்கபட்டஒரே இந்து அர்ச்சகர் இவர். அதிபர் ஒபாமா நாட்டின் வளர்ச்சிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டி பேசிய அந்த நிகழ்ச்சியில் இனி ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் திபாவளி கொண்டாடப்படும் என அறிவித்து அதற்கான அதிபரின் ஆணையையும் வெளியிடும்  அந்த வெள்ளை மாளிகை விழாவில்  புல் சூட்டிலிருக்கும் அத்தனைபேருக்கிடையில் வெண்பஞ்சகச்சத்தில் பளிச்சன்று நெற்றியில் திருமண்ணுடன் நாராயணச்சார் நாராயணச்சார்  தனது கணிரென்ற குரலில்   இருளுலிருந்து ஓளியை நோக்கி   எனற பொருளில் சொல்லபட்ட
அஸ்த்தோமா சத்-ஃகாம்யா
த்மஸோமா ஜோதிஃகம்யா
 असतो मा सद्गमय 
तमसो मा ज्योतिर्गमय 
मृत्योर्मा अमृतं गमय 
 शान्तिः शान्तिः शान्तिः ॥ 
ஸ்லோகத்தை சொல்ல  அதிபர்  ஐந்து முக வெள்ளி விளக்கை மெழுகுதிரியினால் ஏற்றிய பின் திபாவளி விழா துவங்குகிகிறது.. 200 வருடங்களாக கிருத்துவ பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வை பதிவு செய்த பெருமை இவருடையது. ”என் வாழ்வின் சந்தோஷமான தருணம் அது” என்கிறார். இவருக்கு மட்டுமில்லை நமக்கும் தான். தொடர்ந்து கடந்த ஆண்டு  வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடபட்டிருகிறது. இது இனி ஆண்டு தோறும் தொடரும்.
நமது கோவில்கள் வழிபாட்டுதலங்கள் மட்டுமில்லை.கலாசார வளர்ச்சிக்கு உதவும் இடமாகவுமிருக்க வேண்டும் என்ற நமது மரபிற்கேற்ப இந்த கோவிலை நிர்வகிக்கும் SSVT டிரஸ்ட் அடுத்த தலைமுறைக்கும் இந்த ஆர்வம் தொடர பல பணிகளை செய்துவருகிறார்கள். இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை தவிர இசை நடன வகுப்புகளும் அதில் பயின்ற இளைஞர்களின்  நிகழ்ச்சிகளும் மட்டுமில்லாமல்,ஆன்மிக வகுப்புகள், செமினார்கள் என பல நடத்துகிறார்கள். கோவிலை இன்னும் பெரிதாக்க  வளர்ச்சி திட்டங்கள்,நிதி ஆதாரங்களை மேம்படுத்த போன்ற பல்வகை பணிகளை பெரிய நிறுவங்களில்  பதவிகளிலும்,அமெரிக்க அரசு பணிகளிலும் இருக்கும் இதன்  கெளரவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்கிறார்கள்.
இது போல் அமெரிக்காவின் எல்லா  மாநிலங்களிலும் பல கோவில்கள் (குறைந்த பட்சம் இரண்டு கோவில்களாவதுவது)  சிறப்பாக இயங்குகிறது. சில கால நூற்றாண்டையும்  கடந்தவை. இன்னுமும் புதிய கோவில்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன.

2408 society drive
Claymont
DELWARE USA  19703 1760



US1220212