13/8/12

ஹாத்தி மேரா ஸாத்தி

கல்கி 19/8/12

 

லாரன்ஸ்அந்தோனி ஆப்பரிக்க வனவிலங்குகளின் வாழ்க்கை முறைகளை ஆராயும் ஒரு வனவியல் ஆராயச்சியாளார். வன்விலங்குகளைப்பற்ரி புத்த்கங்கள் எழுதியிருப்பவர்.  20 வருடங்களுக்குமேல் ஆராய்ச்சிபணிகளிலிருப்பதால் ஆப்ரிக்க காடுகளின் பகுதிகளைப்பற்றிய, அதில் வாழும் மிருகங்களைப்பற்றிய அத்தனை தகவல்களும் அத்துபடி.   தனியார் வசமுள்ள தென் ஆப்பிரிக்க  காட்டுபகுதிகளில் ஒன்றான துலா-துலா என்ற இடத்திலிருக்கும் காட்டுபூங்காவின் தலமை வார்டனாக பணி புரிந்து கொண்டு தன் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன் காட்டு யானைகளின் நலனைப் பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து   வந்த ஒரு போனினால் பதறிப்போனார். 500 மைல் தொலைவில் ஒரு தனியார் காட்டுப் பகுதியில் ரவுடித்தனம் செய்யும் ஒரு யானை கூட்டத்தை சுட்டு கொல்ல போகிறார்கள் எனபது தான் அந்த செய்தி.  அவற்றை இடம் மாற்றுங்கள் நான் திருத்த முயற்சிக்கிறேன். சுடவேண்டாம் என இவர் கேட்டு கொண்டததால் 20 ரவுடி யானைகளை இவர் தலையில் கட்டினார்கள். அந்த யானைக்கூட்டதின் தலவி சரியான ரவுடி ராணி. பாதுகாப்பிலிருந்து தப்பிப்பதில் எகஸ்பர்ட்.  தப்பித்து வெளியே வந்தால் மற்ற யானைகளை கெடுத்துவிடும் என்பதால் அந்த யானைகூட்டம் வாழும் பகுதிக்கு மின்வேலியிட்டிருந்தார்கள்.  மின்சார மெயினும் ஜெனரேட்டரும்  இருந்த ரூமை தகர்த்தெரிந்து மின்சாரத்தைத் துண்டித்து  விட்டு தப்பிக்க முயற்சி செய்த முரட்டு புத்திசாலி தலவி. அந்த யானைகூட்டத்துடனே 18 மாதம் வாழ்ந்து அவைகளுடன் பேசி, பேசி

 ஆயுதங்களை கையாளாமல் ஒழுங்காக இல்லாவிட்டால் நாம் சாக வேண்டியதுதான் எனபதை அவைகளுக்கு புரிய வைத்து திருத்தி அவைகளின் ஒரிஜன்ல் இருப்பிடத்தில் கொண்டு விட்டார் லாரன்ஸ்.  இந்த முயற்சியில் தனது  போராட்டங்களைக்கு பின்  அந்த  பெண்யானை தன்னை புரிந்து கொண்டு கட்டுபட்டது பற்றியும் பின் படிப்படியாக சாதுவாகிபோனதைப்பற்றியும்  லாரன்ஸ்  எழுதிய 

 “யானை சொல்லும் ரகசியங்கள்”“ என்ற புத்தகம்  கடந்த இரண்டு ஆண்டுகளின் பெஸ்ட் செல்லர். 6 மொழிகளில் மொழி பெயர்க்கபட்டு உலகமெங்கும் இப்போது  விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.  காட்டுவாழ்க்கையைப்பற்றியும் நீர்யானைகள் பற்றியும் இவர்  எழுதிய முந்தைய இரண்டு புத்தகங்களும் பிரபலமானவை. இவர் கடந்தமாதம் எதிர்பாராதவிதமாக இறந்து போனார். உலகமறிந்த வனவியல் ஆராயச்சியாளாரான லாரன்ஸ் மறைவுச்செய்தியை கேட்டு அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின ஒரு யானை கூட்டம   600 மைல் தொலைவில
 தாங்கள் வாழும் காட்டுபகுதியிலிருந்து பனிரெண்டு மணி நேரம் தொடர்ந்து ஒரே வரிசையில் அணிவகுத்து நடந்து  (கூட்டமாக வந்தால் தாக்க வரும் யானை கூட்டம் எனகருதி தாங்கள் விரட்டபட்டுவிடுவோம்  என்பதால் கட்டளையின் கீழ் இயங்கும் யானை வரிசையைப்போல வந்திருக்கின்றன) லாரன்ஸின் வீட்டிற்கு வந்தன அவரால் திருத்தபட்ட  முன்னாள் ரவுடியானைகளின்  கூட்டம். வெகு தொலைவிலிருக்கும் (600மைல்) அவைகளுக்கு இவரது மரணம் எப்படி தெரிந்தது என்பதும் எபபடி அவ்வளவு தூரம் நடுவில் வழி தவறாமல், ஓய்வெடுக்காமல்  சரியாக இவரது வீட்டிற்கு வந்தது எனபதும் மிகப் பெரிய ஆச்சரியம்.. ஆச்சரியத்திற்கு மேலும் ஒரு காரணம் லாரன்ஸ் தற்போது வசிக்கும் இடத்தை இந்த யானைகள் பார்த்தில்லை.  வந்த இடத்தில் லாரன்ஸின் வீட்டில் இரண்டு  நாட்கள் இருந்த பின் தாமாகவே தங்கள்  இருப்பிடத்திற்கு அணிவகுத்து திரும்பிய இந்த யானை கூட்டத்தை டிவி செய்தியாளார்கள் துரத்தி சென்ற போது லாரன்ஸின் மகன் “ நாட்டின் பெரிய தினசரிகள் அஞ்சலி செய்திகளை வெளியிட்டதைவிட பெரிய கெளரமாக இந்த யானை கூட்டம் வந்ததை கருதுகி
றோம். தயவு செய்து எங்கள் விருந்தினர்  கோபபடும்படி எதுவும் செய்யாதீர்கள்  என வேண்டுகோள் விடுத்து  நிறுத்தியிருக்கிறார்.
விலங்குகளில் யானை மிக புத்திசாலி எனபது ஆராய்ச்சிகளால் நிரூபிக்க பட்ட விஷயம். அவைகளுக்கு டெலிபதியும் உண்டோ என்பது இப்போது ஆராயப்படவேண்டிய ஒரு விஷயம்  
-ரமணன்      




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்