30/9/12


”இந்து”வாகவே வாழ்ந்தவர்

இந்திய வரலாற்றில் எப்படி ”இந்து” நாளிதழக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறதோ அதே போல் இந்து நாளிதழின் வரலாற்றில் சமீபத்தில் கால மான அதன் ஆசிரியர் திரு ஜி கஸ்தூரி அவர்களுக்கும் ஒரு அழியாத இடமிருக்கிறது. 135 வயதாகும் இந்து நாளிதழில் 25 ஆண்டு காலத்திற்கும் மேல் தொடர்ந்து ஆசிரியராகயிருந்த பெருமை இவருக்கு மட்டுமே  இந்திய அரசியல் பாக்கிஸ்தான் போர், அணுகுண்டு சோதனை, நாணய மதிப்பு குறைப்பு,(Devaluvation) எமர்ஜென்சி, இந்திராகாந்தியின் படுகொலை,போபர்ஸ் ஊழல் அம்பலம் போன்ற  பல அதிரடிகளையும் திருப்பங்களையும் சந்தித்த காலகட்டமான 1965 முதல் 91 வரை  ஆசிரியராக இருந்தவர். வலிமையான தலையங்களையும், விரிவான கட்டுரைகளையும் எழுதி இந்துவின் வாசகர்வட்டத்தை விரிவாக்கினவர். போபர்ஸ் ஊழல் தொடர்பான திடுக்கிடும் கட்டுரைகளை அன்றைய உதவியாசிரியார்  எழுதி வந்தபோது இறுதி பகுதியில் தகுந்த செய்திகளாக இல்லை என வெளியிட மறுத்த துணிவான ஆசிரியர். அந்த உதவிஆசிரியர் இந்து குடும்பத்தை சேர்ந்த திரு ராம்.
ஒரு நாளிதழ் காலத்தின் கட்டாயத்திற்கேற்ப தன்னை மாற்றி புதிபித்துகொள்ள வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டு இந்து நாளிதழின் முகப்பு, வடிவம், செய்திவெளியிடும் பாணி புதிய பகுதிகள் என பலவற்றை மாற்றிஅமைத்தவர். வண்ணபடம், ஃபேக்ஸ் மூலம் பல இடங்களிலிருந்து பதிப்பு,  கணனியில் பக்கங்களை அமைத்தது  அதை கணனியின் மூலமே ஒருங்கிணைத்தது போன்ற பல   “முதல்“களை இந்திய நாளிதழ்களில் கொண்டுவந்தவர். இருபது வயதில் M.A பட்டத்துடன் பத்திரிகையாளாரக சேர்ந்து 15 ஆண்டுகளுக்குபின் இணையாசிரியாராகவும் பின் ஆசிரியராகவும் உயர்ந்து நீண்டகால பணிக்குபின் ஒய்வு பெற்றபின்னரும் இறுதி மூச்சுவரை பத்திரிகையை நேசித்து அதனுடைய ஒவ்வாரு கட்ட வளர்ச்சியையும் கவனித்து  மகிழ்ந்தவர். மிகவும் பிடித்த பல விஷயங்களில் ஒன்று போட்டோகிராபி. புகைப்படதொழிலின் நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி.  ” “என்னை இண்ட்ர்வீயூ செய்யும் போது இந்த  படம் எத்தனை மணிக்கு எடுத்தீர்கள்? என நான் தந்திருந்த படங்களில் ஒன்றை எடுத்து காட்டி கேட்டார், காலை 11 மணி இருக்கும் என்றேன். நன்றாக நினைவுபடுத்திச்சொல்லுங்கள் சேபாக் மைதானத்தில்  மதியம் 3 மணிக்கு தான் இப்படி நிழல் விழும் என்று அவர் சொன்னவுடேனேயே வேலை கிடைத்தாலும் இந்த ஜாம்பாவனிடம் ஜாகிரதையாக இருக்கவேண்டும் என தோன்றிற்று “ என்கிறார் டி. கிருஷ்னன். இவர் இந்துவின்போட்டோ எடிட்டர்.
வளரும் டெக்காலஜியை கற்று கொள்ள வயது ஒரு தடையே இல்லை என நிருபித்த இவர்  ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மேக் என்ற கம்யூட்டரில்(இது பத்திரிகை தொழிலில் பயன்படுத்தபடும் லேட்டஸ்ட் டெக்னாலாஜி) இந்துவின் 75 போட்டாகிராபர்கள் எடுத்த படங்களையும் செய்திகளையும் பார்த்து தன்  கருத்துகளை உடனே பதிவு செய்துவிடுவார். 80 வயதை கடந்த நிலையிலும் பிரமிக்க வைக்கும் சுறுசுறுப்புடன் இந்துவின் இன்றைய தலைமுறை இளம்பத்திரிகையாளர்கள் பலருடன் தொடர்பிலிருந்தவர். மரணத்தின் முதல் நாள் மாலை இந்துவின் 134 வது ஆண்டுவிழா நிகழ்ச்சி யில் பங்கேற்றதை நெகிழ்வுடன் நினைவு கூறும் திரு ராம்,”இந்து. பத்திரிகையின் அத்தனை பிரிவுகளைப்பற்றியும் முழுமையாக அறிந்த அவருக்கு  இறுதிவரை இந்துவும் அதுபற்றிய எண்ணங்களுமே தான் வாழ்க்கையாக இருந்தது ” என்கிறார்.
நல்ல பத்திரிகைகளை போல நல்ல பத்திரிகையாசிரியர்களையும்  சரித்திரம் மறப்பதில்லை.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்