10/11/12

பிஹாரிலிருந்து ஒரு பெண் பிரதமர்.

வேர்களைத் தேடி...

(என் சகோதரர் ராஜன் இது பற்றி எழுதலாமே என்று ஒரு பெரிய்ய்ய்ய்ய ஆஞ்னேயரின் படத்தை மெயிலில் அனுப்பியிருந்தார். அது பற்றி செய்த ஆராய்ச்சியில் கிடைத்தது இது)

டிரினிடாட்டூபகோ  (Trinidad and Tobago) ஆப்பிரிக்க கண்டத்தின் வட கோடியில் இருக்கும் சின்னஞ்சிறு  இரண்டு தீவுகள் இணைந்த ஒரு குட்டி நாடு. கர்பீனிய தீவு கூட்டங்களிடையே இருக்கும் இந்த  இயற்கை எழில் கொஞ்சும் தீவுகளின் அழகான கடற்கறையின் இதமான சூழலில்


ஆடம்பரஹோட்டல்களும்,ரிசார்ட்களும் இருப்பதால் பணக்காரர்கள் விரும்பிச்செல்லும் ஒரு சுற்றுலாத் தலம். உலகின் பணக்கார தேசங்களின் பட்டியலில் 40 வது இடத்திலிருக்கும்   இந்த  குட்டி தேசம் நீண்ட காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்து சுதந்திரம் அடைந்த்து. சமீபத்தில்  தங்களுடைய 50 வது சுதந்திர  தினத்தை பிரமாதமாக கொண்டாடியது.
  இருநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேற்றப்பட்ட தொழிலாளர்களில் பலர் இந்தியர்கள் அதில் அதிகமானவர்கள் தமிழர்கள்.   இங்கு இந்திய வம்சாவழியில் வந்தவர்கள் பலருக்கு இன்னமும் இந்தியப்பெயர்கள் தொடர்கின்றனநாட்டின் இன்றைய  பிரதமர் தான், அந்த நாட்டின் முதல் பெண்பிரதமர். இந்திய வம்சாவளியில் வந்தவர். பெயர் கமலா. பிரசாத். இவருடைய மூதாதயைர்கள் பிஹார் மாநிலத்தவர்கள். தோட்ட தொழிலாளிகளாக குடியேறியவர்கள்டிரினிடாட்டில் பிறந்து வளர்ந்து லண்டனில் மேற்படிப்புபடித்து  வழக்கறிஞராக வாழக்கையைத் துவக்கி நாட்டின் அட்வேகேட் ஜெனரலாக உயர்ந்தபின்னர் அரசியலுக்கு வந்தவர். எதிர்கட்சி தலைவராக இருந்தவர் 2010ல் நடந்த தேர்தலில் நாட்டின் பிரதமரானார். கணவர்  கிரிகாரிபிஸ்ஸிஸ்ர் (Gregory Bissessar)  பிரபல டாக்டர்.
டிரினிடாட்டில் பல இந்திய வம்சாவளியினர் வாழ்வதால் நிறைய இந்து கோவில்கள் இருக்கின்றன.  தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின் நகருக்கு அருகில்  சாகுணாஸ்(Chaguanes) எனற  நகரின் நடுவில் நிற்கும்  85 அடி ஆஞ்நேயர் மிகவும் பிரபலம்.  இதை வெளிநாட்டு டூரிஸ்ட்களை தவறாமல் அழைத்துவந்து காட்டுகிறது நாட்டின் சுற்றலாதுறை. நாட்டின் 50 வது சுதந்திர நாளான்று எல்லாவழிபாட்டு தலங்களிலும் பிரார்த்தனை செய்யப்பட்டது.  இந்த ஆஞ்நேயர் 2003ல் நிறுவபட்டபோது செய்யபட்டதைப்போல   நாட்டின் 50வது சுதந்திர நாளன்றும் பிரதமர் முன்னிலையில் ஹெலிகாப்டரிலிருந்து பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். இந்த ஆஞ்நேயர் அங்குள்ள பெரிய காரியசித்தி ஆஞ்நேயர் கோவில் முன்னால் கடலை பார்த்த வண்ணம் நிறுவபட்டு  மைசூர் கணபதி சச்சிதினாந்தா ஸ்வாமிகளினால்  முதலில் பூஜிக்கபட்டு அர்ப்பணம் செய்யபட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நிகழந்த அனுமந்த ஜெயந்தி பூஜைகளில் பிரதமர்  கமலா பங்கேற்றியிருக்கிறார்.

 திருமதி கமலா பிரசாத் இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவிற்கு தனது வேர்களை தேடி வந்தார். பாட்னா அருகிலிருக்கும்  122 வீடுகளுடன் 900 பேர்களே வசிக்கும்  பேஹல்பூர் என்ற மிக சின்னஞ்சிறிய கிராமம் தான் தன் மூதாதையர்களுடைய ஊர் எனபதை அறிந்து அங்கு தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சென்றார். சிவப்பு பட்டுச் சேலையும் நெற்றியில் பொட்டுமாக ஹெலிகாப்படரில் வந்து இறங்கிய இவரை முதலில் அந்த கிராம மக்கள் டெல்லியிலிருந்து வரும்ஏதோ ஒரு  அரசியல் வாதி எனறு  எண்ணிவிட்டனர். கிராம தலைவர் சாங்கோபாங்கமாக  இவரது கொள்ளுதாத்தா ராம் லக்கன் மிஸ்ரா  நம்மூர்காரர், 1889ல் கல்கத்தா போய்  கப்பலில் தீவு சீமைக்கு போனதையும் உள்ளூர் உறவையும்,  இப்போது அவர் வகிக்கும் ஒரு நாட்டின் பிரதம்ர் பதவியையும்பற்றி சொன்ன பின்னர்  மக்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை, அவரது முன்னோர்வழிஉறவான சின்ன மாமா தாத்தாவின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.   கல்பாவிய சின்ன சந்தில் நடந்து அந்த வீட்டுக்கு போனபின் தன் உறவினர்களை அடையாளம் கண்டபோது கண்ணீர் மல்க சொன்னதுஇது என் வாழ்வின் சந்தோஷமான நாள். உலகில் நான் எங்கு இருந்தாலும் என் உடலில் ஓடுவது பிஹாரியின் ரத்தம் எனபதை நான் மறக்க வில்லை.”  பிரதமர் கமலாவிற்கு ஹிந்தி  தெரியாது. ஆங்கிலத்தில்  எழுதி வந்த நமஸ்த்தேபாயி அவுர் பஹனோ, தன்யவாத் போன்றவார்த்தைகளுடன் அவர் ஆங்கிலத்தில் பேசியதை பீஹார் அரசு அதிகாரி மொழிபெயர்த்தார்.  ”என்னுடைய மூதாதையர்கள் இந்த மண்ணிலிருந்து வந்த போது தங்கம்,வெள்ளி பணம் எதுவும் கொண்டுவரவில்லை. தங்கள் உழைப்பை நம்பிய அவர்கள் கொண்டுவந்தது, ரமாயாணம், பகவத்கீதை புத்தகங்கள் தான். அதன் மூலம் எங்களுக்கு இந்த தேசத்தின் மாண்பும் பண்புகளும்  படிப்பின் அவசியத்தோடு கற்பிக்கபட்டது. நீங்களும் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்கவையுங்கள். என் பெறோர்கள் எங்களை படிக்கவைத்ததினால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்,” என்ற அவரது  உணர்ச்சி மிகுந்த  பேச்சை கேட்டு நெகிழ்ந்து போன மக்கள்  நீண்ட நேரம் கைதட்டியதோடு ஊர் மக்கள் அனைவரும்   ஹெலிகாப்டர் வரை வந்து வழியினுப்பியிருக்கிறார்கள்.

தனது பரம்பரையின் வேர்களை தேடி இந்தியாவந்து  சுற்றதிடம் தன் நேசத்தை காட்டியிருக்கும் இந்த பெண்மணி  நம் மனதில் அவர்கள் ஊர் ஆஞ்நேயரை விட மிக உயர்ந்தவராக பதிகிறார்

1 கருத்து :

  1. முதலாண்டு நிறை நாள் வாழ்த்துக்கள். கடந்தாண்டை போலவே எதிர் வரும் ஆண்டுகளிலும் சுவாரசியமான இடுகைகளை எதிர்பார்க்கிறோம் .... வாழ்க வளமுடன்

    வலைப்பதிவு: சுவடுகள்
    இடுகை: வாழ்க வளமுடன்
    Raajana

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்