12/11/12

வாழ்க வளமுடன்


வாழ்க வளமுடன்

11 11 12 காலை 7 மணி. ஹிந்துவை குடித்துகொண்டு,காபியை பார்த்துகொண்டிருந்தபோது,சிணிங்கிய செல் சொன்னது “வாழ்க வளமுடன் உங்கள் பிளாக்கின் முதலாண்டு நாள் நல்வாழ்த்துக்கள்” சொன்னவர் திரு குருமூர்த்தி. என் உறவினர்.(அத்தையின் மகன்). என் தந்தையின் அன்புக்கு பாத்திரமானவர். குடும்பத்தின் இரண்டுதலைமுறையினரையும் அறிந்தவர் மாலனுடைய, என்னுடைய எழுத்துக்களை கவனித்து படிப்பவர்.

முன்னாள் சைனிக் பள்ளி தலமையாசிரியரான இவர், இன்று காலத்தின் கட்டாயமாகிவிட்ட இண்ட்ர்நெட்டை கையாளுவதை தனது இளைய தலைமுறையினரிடம் மாணவராகி கற்று கொண்டு தமிழ் பிளாக் களைப்படிக்கிறார். நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துகிறார். இந்த 70+ இளைஞர்.
இவரைப்போல இன்னும் சில நண்பர்கள் வாழ்த்தியதோடு, ஆழம் பத்திரிகையில் எழுதுவது போல் சீரியஸான விஷ்யங்கள் நிறைய  எழுதுங்கள் என்றனர்.
படித்தவர் சொல்ல கேட்பதுதான் எழுதுபவனின் சந்தோஷம். அதை தந்த நண்பர்களுக்கு நன்றி


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்