31/5/14

மயக்கும் மஹாபாரதம்

மாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ஆபரணங்களின் பிரமாண்டம் கட்டிபோட, திரைக்கதையோ படு சுவாரசியம். சகுனியும், திரெளபதியும் ரசிகர்களை கட்டிப் போடுகிறார்கள் முன்பு வந்த ராமனந்த சாகரின் ராமாயணத்துக்கு பின்னர் தமிழ் ஆடியன்ஸ்களிடம் சூப்பர் ஹிட் இந்த மஹாபாரதம்தான்.   

பிரமிக்கவைக்கும் பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள், 
ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான வட இந்திய சாயலில்  எல்லா  முகங்கள், பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று  காட்டபடும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும் அதை எல்லோரையும் பார்க்க வைப்பது,  அதன் அழகான தமிழ் வசனங்களும், இனிய பாடல்களும் தான். ஸ்டார் விஜய்க்காக  இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள் 7த்  சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம் நாராயணனை தொடர்பு கொண்ட  போது
. ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான டப்பிங் டீமின் கடின உழைப்பின் வெற்றி இது.  அவர்கள் பணிகளில் நான் தலையிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”. என்றார். 
டப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ்  ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள் மேற்பார்வை.  டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார்.  இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே மொழிபெயர்த்தால்  தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம்.  மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்று சொல்லுவது சரியாக இருக்கும்.  பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் தரும் கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம் டீமில் 60 பேராம்!. அவர்களும் மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறார்கள் என்கிறார்.
தலைப்பைச் சேருங்கள்
ஹிந்தியில் காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி  வசனங்கள் அமைந்த  இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும் வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன் ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள் எழுதபட்டபின்  ஒவ்வொரு எபிசோடிலும்  முதலில்  எல்லா பாத்திரங்களுக்காகவும் அவரே  அதைப் பேசி   தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு  வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து  வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள். இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார்
இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு  வசனம் எழுதிக்கொண்டிருப்பவர்.  இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல் செய்கிறது.ஒரு டப்பிங் படத்தின் வெற்றிக்கு வசனம்,இசைக்கு அடுத்தபடியான முக்கியமான விஷயம். மிக்ஸிங் என்கிற டெக்னிகல் சமாசாரம். ஒரிஜினலில் இருப்பதை போலவே இருக்க வேண்டும், அதை இந்த தொடருக்கு பிரமாதமாக செய்து கொண்டிருப்பவர் மணிகண்டன்.  மொதத்தில்  ஒரு கவுரவர்கள் படையே இதன் உருவாக்கத்திற்கு உழைக்கிறது. 
ஹிந்தி தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு  மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள்.  பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார்.  வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள்  ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்.,  எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின்  ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது . சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின் குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும் இவர்தலமையிலான டீம்தான்
இதிகாசங்களின் மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து  கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும் ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.





3 கருத்துகள் :

  1. " எங்களது டீமில் இருக்கும் குரல்கலைஞர்களின் ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது . " ------- நிதற்சனமான உன்மை இது

    பதிலளிநீக்கு
  2. தயவு செய்து, கிருஷ்ணன், சகுனி, துரியோதனன் போன்ற முக்கிய பாத்திரங்களுக்கு தமிழில் குரல் கொடுத்தது யார் யார் என பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. பாலகிருஷ்ணனின் வசனங்கள், பாடல்கள், கவிதைகள் அருமையோ அருமை..... சூப்பர்.... பாராட்டுக்கள் அவருக்கு உரித்தாகுக.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்