12/5/14

I AM PROUD OF YOU Maalan

சற்று முன் face bookல்  இதை பார்த்தேன். சந்தோஷத்தை தாண்டிய ஒர் உணர்வு. எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் சுவடுகளில் பதிகிறேன். பொற்கோவில் கட்டுரையை விடுங்கள் மற்றவர்கல் சொல்லியிருப்பதை பாருங்கள்.
ரமணன்




மாலன் நாராயணன் commented on this.
1984ல் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நேரம். அந்தச் செய்தி பற்றிய பின்னணிகள் அந்த வாரமே வந்துவிட வேண்டும் என ஜீனியர் விகடன் விரும்பியது. நீங்கள் எழுத முடியுமா என போனில் தொடர்பு கொண்டு கேட்டார்கள். “எழுதுகிறேன், எப்போது வேண்டும்?” என்றார்கள். ”இப்போதே” என்றார்கள். ” என்ன விளையாடறீங்களா?” என்றேன். ”இல்ல சார் நிஜமாதான், நீங்க கொஞ்சம் உடனே ஆபீசிற்கு வரமுடியுமா என்றார் சுதாங்கன். மாலை இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஜூவி ஆ.வி அலுவலகத்திற்கு வெளியே தனியாய் சோவியத் கலாசார மையத்தின் அருகில் ஒரு வீட்டை அலுவலகமாக்கி இயங்கிக் கொண்டிருந்தது. போனேன். ”இங்க உட்காருங்க சார்’ என்று சுதாங்கன் அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து அவரது இடத்தையும் மேசையையும் கொடுத்தார். “சார் அர்ஜண்ட் சார். நிஜமாத்தான் சார். இன்றிரவே அச்சுக்குப் போகணும்சார்” என்றவரின் அடுத்த வரி என்னை திடுக்கிட வைத்தது. “கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்து எழுதிக் கொடுத்திடுங்க சார்” என்றார். அவர் என்னுடன் திசைகளில் செயலபட்டவர். மறுக்க முடியாத தர்மசங்கடத்தோடு ‘முயற்சிக்கிறேன்” என்று சொன்னேன், அவ்வளவுதான் நியூஸ்பிரிண்ட் காகிதங்கள் என் முன் வைக்கப்பட்டன.மூன்று மணி நேரம் எழுதியிருப்பேன். இடையிடையே சில தகவல்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் தாமதமின்றி சுதாங்கன் கொண்டு வந்து தந்தார்.
முப்பது வருடங்களுக்கு முன் அப்படி உருவானது இந்தப் ’பொற்கோவில் ரணகளமான கதை’ அன்று எழுத கணினி இல்லை. தேட கூகுள் இல்லை. மின்னஞசல் இல்லை. ஆனால் எங்கள் முன் சவால்கள் இருந்தன.
இதன் அச்சுப் பிரதி கூட இன்று என்னிடம் இல்லை. ஆனால் விகடன் லைப்ரரியிலிருந்து Srinivasa Raghavan அவர் பதிவில் வெளியிட்டிருந்தார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி. பழைய நினைவுகளைக் கிளறியதற்க்காக ஸ்ரீநிவாச ராகவனுக்குக் கூடுதலாக நன்றி
தமிழகம், இலங்கை, Read online tamil news, Vikatan, anandavikatan, junior vikatan, aval vikatan, chutti vikatan, sakthi vikatan, nanayam vikatan, motor vikatan, pasumai...
NEWS.VIKATAN.COM
Like ·  · 
  • 37 people like this.
  • மாலன் நாராயணன் Karthikayan Vaiyapuri //epaper, google போன்றவற்றை அப்போதுதான் தொட்டிருப்பீர்கள்// இல்லை. அப்போது e-paperகள் அறிமுகமாகியிருக்கவில்லை ஏனெனில் அப்போது IE explorer உருவாகியிருக்க/அறிமுகமாகியிருக்கவில்லை.என் புராஜெக்ட்டே மின் செய்தித்தாளுக்கு ஒரு முன்வடிவு ...See More
    32 mins · Unlike · 7
  • Pitchumani Sudhangan மாலன் அவர்களால் தான் உடனடியாக எழத முடியும் என்று புதிதாக அங்கு வேலைக்குச் சேர்ந்த நான் ஆசிரியர்களிடம் வலுவாக , மாலன் அவர்களை அழைக்கு முன் வாதிட முடிந்தது என்றால் அதற்கு முன் மாலன் அவர்கள் சாவி வார இதழில் அயல் நாட்டு விவகாரங்களை குழந்தைகளுக்கு கூட புரிய...See More
    18 mins · Like · 3
  • மாலன் நாராயணன் Pitchumani Sudhangan உனக்குள் இருந்த ஒரு பத்திரிகையாளனை உனக்குக் காண்பித்துக் கொடுத்ததைத் தவிர உனக்கு வேறு எதுவும் நான் செய்துவிடவில்லை. உனக்குள் இருக்கும் பத்திரிகையாளனையும் நீதான் எனக்குக் காண்பித்தாய் உன் கையெழுத்துப் பத்திரிகை மூலம்
    15 mins · Like · 2
  • Jayaraman Venkataraman Dindigul நீங்கள் இரண்டு பேரும் மற்றும் பாலகுமாரன் சார், சுஜாதா சாரும் என்னை(யும்) எழுத்தாளனாக்கினார்கள். மாலன் சார் என்னுடைய முதல்கதையை தினமணி கதிரில் வெளியிட்டார். சுஜாதா அவர்கள் குமுதத்தில் ஆசிரியராக இருந்த போது ஒவ்வொருவாரமும் என்னுடைய படைப்புக்கள் ஏதேனும் வந்தது. காந்தளுர் வசந்தகுமாரன் தொடரில் என்னுடைய ஒரு சந்தேகத்திற்கு(?) பதில் சொல்லிவிட்டு தொடரை தொடர்ந்திருப்பார்.... இனிமையான நாட்கள் அவை...
    8 mins · Like · 1

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்