4/8/15

நீங்கள் நீங்களாக இருந்தால் வெற்றி நிச்சியம்

` சென்னை நந்தம்பாக்கம்  வணிக வளாகம். கறுப்பு கவுன், தொப்பிகளுடன் சந்தோஷப் பூக்களாக மலர்ந்திருக்கும் மாணவ மாணவிகளின் சிரிப்புஅலைகளினாலும்  மகிழ்ச்சி குரல்களினாலும் நிறைந்திருக்கிறது செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் குழுக்கள். பரவசத்தில் பெற்றோர்கள் .. படிப்பை முடிக்கு முன்னரே வேலை கிடைத்த அதிர்ஷட்ட சாலிகளான கிரேட் லேக  மானேஜ்மெண்ட் இன்ஸ்டியூட்டின்  மாணவர்களின் பட்டமளிப்பு விழா.
டாட்டா  குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு ரத்தன் டாட்டாவும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஊர்வலமாக நுழைந்தவுடன் கனத்த அமைதி. சம்பிரதாயமான பட்டமளிப்புவிழா உரையாக இல்லாமல்.  மாணவர்களின் தேர்ந்தெடுத்த கேள்விகளை பல்கலைகழக டீன் பாலா பாலசந்தரன் கேட்க  பதில் தந்தார் ரத்தன் டாட்டா.  அவற்றிலிருந்து  சில

ஓரு மனேஜ்மெண்ட் பட்டதாரி அடுத்த 30 ஆண்டுகள் தன் தொழில் வாழ்க்கையில்ஜெயிக்கமுதல்5 ஆண்டுகள்எந்தமாதிரியானகொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?
இம்மாதிரி இன்ஸ்டியூட்டிலிருந்து  வரும் மாணவர்கள் அதிக அளவில் சம்பளம், பெரிய நிறுவனங்களில் பதவி என்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பினால் மாறுதல் களைச்  செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் மாறு பட்டு சிந்தித்து துணிவுடன் செயல்படுபவர்களாக உங்களை அடையாளம் காட்ட வேண்டும்.  பாப்புலாராக இருப்பது மட்டும் வெற்றியில்லை. பல் ஆண்டுகளுக்கு முன் நான் பொறுப்பேற்ற போது ஒரு  ஆற்றல் மிகுந்த ஒரு மிகப்பெரிய  மனிதரின் காலணிகளுக்குள் நுழைந்து செயலாற்ற வேண்டியிருந்தது. அது எனக்கு பொருத்தமாகவும் இயலாமலும் இல்லாதிருந்தது. அப்போது நான் நானாகஇருந்து பணியாற்றினேன். மாறுதல்களைச் செய்ய முடியும் என நம்பி செயலாற்றினேன். இன்று பல் லட்சம் பேர்களில்  வாய்ப்பும் அதைச்செயல்படுத்த கருவிகளும், நல்லசூழுலும்  பெற்ற அதிர்ஷட சாலிகள் நீங்கள் .  நீங்கள்: நீங்களாகவே இருந்து  உங்கள் துறையில் மாறுதல் களை செய்ய முடியும் என நம்புங்கள். நியாமன நேர்மையான வழியில் குறிக்கோள்களை அடைய முயற்சியுங்கள். நீங்கள் சரி என்று நினைப்பதை நிலைநிறுத்த அவசியமானால்  போராடாவும் தயங்காதீர்கள். நிச்சியம் வெற்றி அடைவீர்கள்

நான் சரியான முடிவுகள் எடுப்பதில்லை. முடிவுகளை எடுத்த பின்னர் அவற்றை சரியாக்குகிறேன்என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி நீங்கள் செய்த ஏதாவது ஒரு முடிவைப் பற்றி சொல்ல முடியுமா?

சமூக வலைத்தளங்களில் நான் சொன்னதாக உலவிக்கொண்டிருக்கும் ஒரு கருத்து இது. நான் அப்படிச் சொன்னதில்லை.  இம்மாதிரி வாக்கியங்கள் ஆணவத்தைக் காட்டுகிறது அது சரியில்லை.  எல்லாராலும் எல்லா நேரத்திலும் சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியாது.  சில முடிவுகள் தவறாகலாம். நமது முடிவுகள் தவறானால் அதன் விளைவுகளுக்குப்  பொறுப்பேற்கும் துணிவும், அதைச் சரிசெய்யும் ஆற்றலையும் நிர்வாகிகள் பெறவேண்டும்.  வருங்காலத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள்  நிறைய முடிவுகளை எடுக்கவேண்டிவரும். அப்போது  இதை நினைவில் கொள்ளுங்கள் . நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்  கடினமான முடிவுகளை எடுக்கும்போது தனிமைப்படுத்தப்படுவார்கள். பலர் அந்த முடிவை ஏற்காமல் இருக்கலாம்.. ஆனாலும் பாப்புலாரிட்டிக்காக இல்லாமல்  துணிவுடன் செயல்பட்டு  நியாமானநீங்கள் சரியென நம்பும் முடிவுகளை துணிவுடன்  எடுக்க வேண்டும்.  இந்தச் சந்தர்ப்பத்தில் எனது முடிவுகள் பற்றி சொல்லுப்பட்டுகொண்டிருக்கும்  தவறான கருத்துகளுக்கு  ஒரு விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

 100 கம்பெனிகளை உள்ளடக்கிய  50 லட்சம் ஊழியர்களைக் கொண்ட டாடா சாம்ராஜ்யத்தை நிர்வகித்தவர் நீங்கள். இன்று பல புதிய சிறு கம்பெனிகள் வேகமாகத் தோன்றி வளருகின்றன. சில ஆண்டுகளில் இவை டாடா போன்ற பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த நிலையில் எப்படி இந்த சிறு நிறுவனங்கள் அந்தப் பெரிய நிறுவனங்களின் கலாச்சாரங்களுடன் எளிதாக ஒருங்கிணைகிறதுநிறுவனத்தின் வெற்றிக்கு எது முக்கிய காரணம் என நினைக்கிறீர்கள்

அதிர்ஷடவசமாக டாடா நிறுவனத்திற்கு 150 ஆண்டு கால பாரம்பரியம் இருக்கிறது. ஒரு நிறுவனம் பாரம்பரிய கெளரவத்தைப் பெற அதன் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் மிகச் சரியாக நாணயமாக இயங்க வேண்டும். ஒரு கண்ணாடி  மீன் தொட்டியிலிருக்கும் மீனைப்போல மிக சுத்தமாக எல்லோருக்கும் தெரியும் ஒளிவு மறைவு இல்லாதாக  இருக்க வேண்டும். தலைவர் இப்படி இயங்கினால் நிறுவனத்தில் மற்றவர்கள் அதைத் தொடர்வார்கள். அது மிக முக்கியம் டாடாவில் என் முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விஷயத்தை நான் தொடந்தேன். என்னைத் தொடர்ந்து வருபவர்களும் செய்கிறார்கள். தலைவரின் பண்பு நிறுவனத்தின் பண்பாகிறது. இதை டாட்டா நிறுவனத்டின் வெற்றியாக கருதுகிறேன்.


 உங்கள் பணிநிறைவுக்கு பின்னர்  நீங்கள்  இப்போது புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் ஸ்டார்டப் கம்பெனிகளில் மட்டுமே  அதிக அளவில் முதலீடு செய்வதாக அறிகிறோம். இது ஏன்? மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான டாடா நிறுவனம் இதை ஏன் செய்யவில்லை?

நான் டாடாவின் தலமைப்பொறுப்பில் இருந்த போது என் சொந்த விருப்பங்களைச் செய்ய முடியாது. அது சரியானதும் இல்லை. டாடா போன்ற எல்லாவற்றிலும் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் தலைவர் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தால் அது டாடாநிறுவனதிற்கு  சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதும் ஒரு காரணம். ஒய்வு பெற்றபின் நான் மிகப்பெரிய பணக்காரன் இல்லை என்னிடமிருக்கும் சேமிப்பை நான் இ காமர்ஸ் ஆன் லைன் வணிகம் போன்றவற்றில் முதலீடு செய்திருக்கிறேன். 80களில் அமெரிக்காவில் எழுந்ததைப்போல  இங்கு ஒரு அலை எழுந்திருப்பதை உணர்கிறேன். இளைஞர்கள் இடுபட்டிருக்கும் இந்த் துறைகள் தான்  நாட்டின் மிகச்சிறந்த எதிர்காலத்திற்கு காரணமாக இருக்க போகிறது என்று கணிக்கப்பட்டிருப்பதால் நான்  அவைகளில் முதலீடு செய்துகொண்டிருக்கிறேன். . இந்த முதலீடுகளை முடிவு செய்ய தனி டீம் எதுவுமில்லை. நானே புதிய நிறுவனங்களின் வளர்ச்சியை ஆராய்கிறேன்.   முதலீடு செய்கிறேன் அதில் பலர் எனக்கு முன் அறிமுகம் இல்லாதவர்கள். .

நானோ காரின் டிசைன், தயாரிப்பு  விற்பனை போன்றவற்றினால் டாட்டா நிறுவனம் கற்ற பாடம் என்ன? 


நிறையக் கற்றோம். அந்த காரின் வடிவமைப்பில் ஈடுபட்டவர்களின் சராசரி வயது 26. இந்திய இளைஞர்களால் இந்தியர்களுக்காகத் தயாரிக்க பட்ட கார அது. ஆனால் திட்டமிட்ட படி அதை வெளியிட முடியவில்லை.  உற்பத்திக்கான  தொழிற்சாலையை அமைக்க அழைக்கப் பட்ட  மாநிலத்தில் இருந்து வெளியேறவேண்டியிருந்தது.  பெங்கால் டைகர் தாக்கியதாக மீடியாக்கள் சொன்னது. டைகரோ டைகரஸோ(பெண்புலி)  விளைவுகள் வீபரீதமாக இருந்தது. ஆலையை புதிய இடத்தில் மீண்டும்துவக்கியதில் தயாரிப்பு ஓராண்டு தாமதாமாகிவிட்டது.  விற்பனையிலும் எஜெண்ட்கள் இல்லாமல் நாங்கள் அறிமுகப்படுத்திய முறை வரவேற்பைப் பெறவில்லை. விளமபர்ஙளில் இது இந்தியவின்  மலிவான கார் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இந்தியாவில் கார் என்பது ஒரு அந்தஸ்தின் சின்னம். அதில் மலிவானது எனச் சொல்லப்பட்டதை வாங்க மக்கள் தயங்கினர்.  நாங்கள் ”இதுஎல்லோரும் வாங்க்கூடிய கார்” என விளம்பர படுத்தியிருக்க வேண்டும். காரின் தரம்,வசதிகளை விட இந்த மலிவு  எனற வார்த்தை பெரிய விஷயமாக போட்டியாளர்களால் பேசப்பட்டதினால் விற்பனை பாதித்தது. இப்போதுபுதிய மாடலை அறிமுகப்படுத்தி  மெல்லச் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் இது சீராகும்.  என்று நம்புகிறேன்
(நனறி புதிய தலைமுறை060815)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்