9/5/16

விருது

சென்னை ஸ்டெல்லாமாரீஸ் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேரா. முனைவர் உலகநாயகி பழனி அவர்களின் உறவுச்சுரங்கம் அமைப்பும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து திருமதி சிவசங்கரியின் படைப்புகள்பற்றிய ஒரு தொடர் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துகிறார்கள். அதில் இம்மாதம் என்னைப் பேச அழைத்து விருது கொடுத்துக் கெளரவித்தார்கள்.தனது நீண்ட இலக்கிய பயணத்தில் திருமதிசிவசங்கரி  98 இலக்கியவாதிகள், 6 அரசியல் தலைவர்கள், இரண்டுபிரதமர்கள், குடியரசுத்தலைவர், திரைகலைஞர்கள், சதாரண மனிதர்கள் எனப் பலரை சந்தித்து பேட்டிகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்திருக்கிறார்.

அந்தச்சந்திப்புகளில்  வேறுபட்டசில  ஆளுமைகள்குறித்த          அவரதுபார்வைகளைப் பற்றிப் பேசினேன். அழைப்பை ஏற்று பல நண்பர்கள் வந்திருந்ததும். அரங்கம் (பெரிய அரங்கம்) நிறைந்திருந்தையும் விட அதிக மகிழ்ச்சி தந்த விஷயம். தேர்தல் அனல் அதிகமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும்  திரு. இல. கணேசன் வாக்களித்தபடி விழாவிற்கு தலமையேற்று உரைநிகழ்த்தியது தான்
.
சில அரசியல்வாதிகள் அளித்த வாக்கைக் காப்பாற்றவும் செய்கிறார்கள் 

2 கருத்துகள் :

உங்கள் கருத்துக்கள்