21/4/17

ஹலோ ஸ்மார்ட் இந்தியா


மாரத்தான் தெரியும். வாக்கத்தான் கூட தெரியும். அதென்ன ஹாக்கத்தான்?

கணினித்துறையினர் பலர் ஒன்றாகக்கூடி தங்களுடைய புதிய யோசனைகளை- “பெட்டிக்கு வெளியே” என்று சொல்லுவார்களே அந்த அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்கில் உதித்த புதிய எண்ணங்களை ஒரு திட்ட அறிக்கையாக சமர்ப்பித்து அதை விளக்குவார்கள். நீதிபதிகளாக இருக்கும் வல்லுநர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு பரிசுகளும் பெரிய நிறுவனங்கள் அந்த யோசனையை நல்லவிலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு எல்லாம் கிடைக்கும்.
“ ஹாக்” என்றால்கணினி மென்பொருள் திருட்டு என்ற அர்த்தத்தில் மட்டுமே பரவலாக அறியப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் ஒரு கணினி யின் மென்பொருள் திட்டத்தை “அலசி ஆராய்வது” என்பது. அதில் பலர் பங்கேற்று குறிபிட்ட நேரத்துக்குள் தாங்கள்: யோசனைகளைச்சொல்லும் போட்டியானதால் அதை மாராத்தானுடன் இணைத்து “ஹாக்கத்தன்” எனப் பெயரிட்டார்கள். 1990ல் மிக சாதாரணமாக ஒரு நகர அளவில் துவங்கிய இது 2010லிருந்து உலகின் பல நாடுகளில், சில சமயம் யாஹு போன்ற பெரிய நிறுவனங்களுன் நடத்த ஆரம்பித்தன. இப்போது உலகின் பல நாடுகளில் இது நடக்கிறது. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் முக்கியமான விஷயம் தன்னைப்போல சிந்திக்கும் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புதான். செலவுகள் பங்கேற்பவர்களுடையது. என்பதால் சாதாரண தங்குமிடம், (சிலசமயங்களில் டென்ட் தான்) எளிமையான உணவு போன்றவற்றுடன் ஓய்வு நேரங்களில் இளைஞர் பட்டாளம் பாட்டு, ஆட்டங்களுடன் கலக்கிக்கொண்டிருப்பார்கள்

பிரதமர் மோடி அறிவித்த டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியான ஸ்மாட் இந்தியாவின் ஒரு பகுதியாக இந்தியாவில் “ஹாக்கதான் 2017” ஒரு சில மாற்றங்களுடன். அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதை அரசின் நிறுவனங்கள் முன்னெடுக்கும். போட்டிகளை விதிகளுடன் நடத்த மனிதவள அமைச்சகத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு குழு நடத்தி அரசே பரிகளையும் அளிக்கும். நாட்டிலுள்ள அனைத்து பொறியில் கல்லூரியிலிருக்கும் கணினி பிரிவு மாணவர்களின் குழு அந்தக் கல்லூரியின் சார்பாகப் பங்குகொள்ளலாம்.. ஒரு குழுவில் ஆறு பேர் இருக்கலாம்.அதில் கட்டாயமாக ஒரு மாணவி இருக்கவேண்டும். குழுவைக் கல்லூரியின் பேராசியர் ஒருவர் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டும். ஒருகல்லூரி 3 குழுக்கள் வரை அனுப்பலாம். கணனிப்பாடத்தை எடுத்துப் படிக்காத ஆனால் ஆர்வமுள்ள மாணவர்களும் அந்தக் குழுவில் இருக்கலாம் போன்ற நிபந்தனைகளுடன் திட்டம் அறிவிக்கபட்டது. உலகில் இதுவரை இந்த ஹாக்கத்தான் அரசின் ஆதரவுடன் நடந்ததில்லை

இந்திய விண்வெளி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவிடம் இதை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அவர்கள் செய்த முதல் காரியம் அரசுத்துறைகளிடம் உங்கள் துறையில் சமூகம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பாக அல்லது இருப்பதில் எதை விரிவாக்கம் செய்ய வேண்டும்? என்று கருதுகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கக்கோரினார்கள் . 29 அமைச்சகங்களிலிருந்து வந்து சேர்ந்த பல யோசனைகளில் 598 பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதை ஒரு போட்டியாக ஹாக்கத்தான் 2017க்காக அறிவித்தார்கள்.
முதலாண்டு என்பதால் ஓரளவுதான் பங்கேற்பு இருக்கும் என எதிர்பார்த்த ஐஎஸ் ஆர்வோ போட்டிக்கு பதிசெய்தவர்களின் எண்ணிக்கைக் கண்டு மிரண்டுவிட்டது. ஆன்லனையில் பதிவு என்பதால் கடைசிநிமிடம் வரை விண்ணப்பங்கள் குவிந்தன. 42000 மாணவர்கள் பங்கேற்கும் 7531 குழுக்கள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 10000 மாணவர்கள் அடங்கிய 1266 குழுக்கள் மட்டும் போட்டிக்கு தேர்ந்த்டுக்கப்பட்டன. இந்தக்குழுக்கள் நாட்டின் 26 மையங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தங்கள் திட்டங்களை வல்லுநர்களுக்கு விளக்கினர். 5 நிமிடம் தான் நேரம் அதில் 3 நிமிட விளக்கஉரைக்கு 2 நிமிடம் கேள்வி பதிலுக்கு என ஒட்டம் நடந்து முடிந்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் இறுதிச்சுற்று ஹாக்கதானில் பங்குகொண்டார்கள்
இந்த ஆண்டு ஹாக்த்தானை நடத்திய மையங்களில் ஒன்றான அகமதாபாத் மையம் ஹாக்கதான் 2017 இறுதிச்சுற்றை நடத்தியது. 50 குழுக்கள் பங்கேற்றன. போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 35 பிரச்சனைகளில் ஒன்றுக்கு இவர்கள் தங்கள் கண்டுபிடிப்பான தீர்வுகளை விளக்கினார்கள். தொடர்ந்து 36 மணி நேரம் மாணவர் குழுக்கள் விரைவாக தங்கள் எண்ணங்களை கொட்டிக்கொண்டிருந்தார்கள். நிபுணர்கள் குழு திக்குமுக்காடிபோனது. இறுதியில் டென்ஷனில் நகம் கடித்துக்கொண்டிருந்த போட்டியாளர்களிடம் முதல்பரிசான ஒரு லட்சதைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது தமிழகத்தைச்சேர்ந்த காஞ்சிபுரத்திலிருக்கும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் டீம். சரி - இரண்டாவது இடம் யாருக்கு? எனக் காத்திருந்போது ஒலித்த அறிவிப்பு மதுரை தியாகராயர் கல்லூரி
கர்நாடக மாநிலத்தின் கல்லூரிக்கு மூன்றாம் இடமும் டில்லி, மும்பய் கல்லூரிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன. ஐஎஸ் ஆர்வோ தலைவர் பரிசுகளை வழங்கினார்.

இந்த இறுதிச்சுற்றின் முடிவில் போட்டியாளர்களுடன் விடியோ கான்பரன்ஸில் பிரதமர் உரையாற்றினார். இறுதிச்சுற்றுக்கு வராதவர்களும் போட்டிகள் நடந்த மையங்களிடமிருந்து அவருடன் உரையாடினார்கள்.
“உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்ளுகிறேன்” என்று இரவு 8 மணிக்குத் துவங்கிய பிரதமரின் உரையாடல் முடிந்தபோது இரவு மணி 11.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்படவேண்டும், கிராமப்புற இளம்பெண்களுக்கு அரசே நாப்கின்கள் வழங்க வேண்டும் என்பதிலிருந்து அதிநவீன 3டி பிரின்டிங், இயந்திரங்களின் புத்திசாலித்தனம் வரை மாணவர்கள் சொல்லும் சிலயோசனைகளை பிரதமர் பாராட்டுகிறார். சிலவற்றிற்கு கேள்விகள் கேட்கிறார். இறுதியாக

“இன்று அரசாங்கம் அடையாளம் கண்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன் வைத்திருக்கிறீர்கள். அரசாங்க பிரச்சனைகளுக்கு முடிவு சொல்ல வேண்டியது அரசாங்கம் மட்டும் தான் என்ற மாயை உடைத்து எங்களாலும் முடியும் எனச் சொல்லியிருக்கிறீர்கள்” என்று போட்டியாளர்களைப் பாராடினார்.

‘மாராத்தான் ஓட்டங்களின் வெற்றி என்பது பரிசுபெற்ற சிலரால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பங்குகொண்டவர்கள் அனைவரும் தான் இந்தப் போட்டிகளை வெற்றியாக்குகிறார்கள்’ என்ற வாசகங்கள் பாரிஸ் நகரில் இருக்கும் சர்வதேச மாராத்தன் பவுண்டேஷனின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இந்திய ஹாக்கதான் 2017க்கு அது மிகவும் பொருந்தும்.
நாடு முழுவதிலிருந்தும் 42000 ஸ்மார்ட்டான மாணவர்கள் தங்கள் எண்ணங்களை ஓட விட்டிருக்கிறார்களே .


18/4/17

ஹார்ட் பிரேக்கிங் நீயூஸ்



நாள் முழுவதும் செய்திகளை மட்டுமே தந்துகொண்டிருக்கும் செய்தி சானல்கள் இப்போது பெருகிக்கொண்டேயிருக்கிறது. யார் எந்தச்செய்தியை முந்தித்தருவது என்பதிலிருக்கும் போட்டி, இப்போது செய்தி அறிவிப்பாளர்களின் பணியை சவாலானதாக்கியிருக்கிறது. தயாரிக்ப்பட்டு வாசித்துக்கொண்டிருக்கும் செய்திகளுக்குக்கிடையே தன் முன்னே இருக்கும் ஸ்கிரின்லின் வரும் செய்திமின்னல்களையும் உடனே மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் , இதை பிரேக்கிங் நீயூஸ் என்று ஆங்கிலத்தில்சொல்லுகிறார்கள். சில சமயம் இம்மாதிரி செய்திகளில் அறிவிக்கப்படும் கோரவிபத்துகள் கேட்பவர்களை உலுக்கும்.

சட்டிஸ்கர் மாநிலத்தின் மிகவும் செய்தி சானலான IBC 24 யில் மிகவும் பாப்புலரான செய்தி வாசிப்பாளர் திருமதி சுப்ரீத் கவுர். தெளிவான குரல், தீர்க்கமான உச்சரிப்பால் அவருக்கு விசிறிகள் அதிகம்
அன்றும் வழக்கம்போல காலை பத்துமணி செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தவரின் முன்னே இருக்கும் ஸ்கீரினில் பிளாஷ் ஆன செய்தி ரெய்ச்சூர் பிரதான சாலையில் நிலநிமிடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு மோசமான கார் விபத்து. அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம், மற்ற இருவரின் நிலை கவலைக்கிடம். கார் குறித்து வந்த விபரங்களிலிருந்தும், படங்களிலிருந்தும் சுப்பீரீத்தை தாக்கிய விஷயம் உருக்குலைந்த அந்த கார் அவர்களுடையது, சம்பவ இடத்திலிருக்கும் செய்தியாளருக்கு இறந்தவர்களின் பெயர்கள் தெரியவில்லை. . அதை போலீஸ் அறிவிக்க அவர் காத்திருக்கிறார். ஆனால் விபத்துக்குள்ளாகி இறந்திருப்பது அவரது கணவர், என்பது சுப்ரீத்துக்கு தெரிந்துவிட்டது வெடித்து அழுதிருக்க வேண்டிய அந்தத் தருணத்தில் குரல் கம்ம அந்தச் செய்தியைச் சொல்லுகிறார்.
நேரலையில் போகும் செய்தி என்பதால் தொடர்ந்து வந்த செய்திகளைச் சொல்லிவிட்டு முடிந்தவுடன் எழுந்து ஓடி செய்தியாளிரிடம் போனில் உறுதிசெய்து கொண்டு கதறிஅழுகிறார். இவர் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் போதே , செய்திப்பிரிவின் ஆசிரியருக்கும் டீமுக்கும் விஷயம் தெரிந்திருந்தது, ஆனால் சுப்ரீத்திடம் அதைச்சொல்ல அவர்களுக்குத் துணிவில்லை.
தன் கணவர் விபத்தில் இறந்த செய்தியை நேரலையில் சொல்லவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இவரைப்போல உலகில் எந்த செய்தியாளருக்கும் நேர்ந்திருக்காது.
அந்தக் கட்டத்திலும் மனதைப் பிசையும் சோகத்தையும் துக்கத்தையும் வெளியே காட்டாமல் தொடர்ந்து 10 நிமிடங்களில் அவர் மற்ற செய்திகளை வாசித்தது அவரின் பணியைச் செய்துமுடித்துவிடவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை இது சதாரணவிஷயம் இல்லை எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. எங்கள் ஊழியர் சுப்ரீத்துக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று சானலலின் தலைவர் சொல்லியிருக்கிறார். இதையே தான் இந்தியாமுழுவதும் இருக்கும் அத்தனை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களும் எதிரொலிக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் செய்துகொண்டிருக்கும் சப்ரீத் அண்மையில் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானவர்.

16/4/17

நைனிதால் -தேவதைகள் வாழும் வீடு


பசுமையான ஊசிமுனை இலைகளுடன் ஓங்கிவளர்ந்திருக்கும் தேவதாரு மரங்கள் நிறைந்த அந்த மலைச்சரிவிலிருக்கும் விடுதியிலிருந்து பார்க்கும்போது எதிரே மரகதப்பச்சை வண்ணத்தில் அமைதியாக அழகாகப் பரந்து விரிந்திருக்கும் நைனிதால் ஏரியும் அதன் மீது அமர்வதற்காக மெல்ல மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேக கூட்டங்களும் அவை அந்த ஏரியிலிருக்கும் அழகான வண்ண வண்ண பாய்களிடனிருக்கும் சிறு படகுகளுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் இந்த உயரத்திலிருந்து பார்க்க மிக அழகாகியிருக்கிறது. ஏரியின் ஒரு கோடியிலிருக்கும் நைனா தேவியின் கோவிலும் அதன் மீது கொடியும் தெளிவாகத் தெரிகிறது
>
ஒரு மாவட்டத்தலைநகர் என்ற எந்த பந்தாவும் இல்லாத இந்த சின்னஞ்சிறிய ஊர் உத்திரபிரேதசத்திலிருந்து பிரித்து
உருவாக்கப்பட்ட உத்திரகாண்ட் மாநிலத்தின்  முக்கிய நகரம்...
மலைப்பகுதியான இந்த நகரம் ஒரு சுற்றாலத்தலமட்டுமில்லை, புராதன புண்ணிய பூமியும் கூட. . சுற்றிலிருக்கும்
7 மலைகளில் அழகான ஏரிகள் மட்டுமில்லை. வீரம், கல்வி,நீதி, கலை, செல்வம் போன்றவகளை காக்கும் தேதைகளின்கோவில்களும் இருக்கின்றன.
,
நகரின் நடுவே இருக்கும் நைனிதால் ஏரியின் ஒரு பக்க கரையின் மீது தான் சாலை. அது மக்கள் நடக்க மட்டுமே. அந்த சாலையில் பொது வாகனங்கள் செல்ல அனுமதியில்லை நடக்கமுடியாதவர்களக்கு சைக்கிள் ரிக்க்ஷா வசதி. அதற்கு Q வில் நின்று 3 ரூபாய் டோக்கன் வாங்கவேண்டும். ( இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாத பீரிப்பெய்டு சைக்கிள்ரிக்ஷாக்கள்!) .

ஏரியின் ஒரு முனையிலிருக்கிறது நைனாதேவியின் கோவில் அர்ச்சகர் நல்ல ஆங்கிலம் பேசுகிறார். "இது மற்ற இந்தியகோடை வாசஸ்தலம் போல வெள்ளைக்காரர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்தப் பகுதி முழுவதும் இந்து மதபுராணங்களுடன் சம்பந்தப்பட்டது,
தெய்வங்களும், தேவர்களும் வாழ்ந்த பூமி. 1000 கோவில்களுக்கு மேலுள்ள மலைத்தொடர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சந்தன் வம்ச மன்னர்களின் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள் இந்த ஏரி தட்சனின் யாகத்தில் பங்கேற்தற்காக கோபத்தில் சிவ பெருமான் தேவியை வெட்டிஎறிந்தபோது பார்வதிதேவின் கண் விழுந்த இடம். அதனால்தான் நைனி-தால் எனப்பெயர்
. 100 மைல் தூரத்தில் 12 ஜோதிலிங்கங்களின் ஆதி ஜோதிலிங்கமிருக்கிறது. போய்பாருங்களேன்." என்று அந்த அர்ச்சகர் ஆர்வத்தைத் தூண்டியதால் அந்தமிகப் பழமையான, ஜோதி லிங்ககளின் ஆதி லிங்கத்தைத் தரிசிக்க . இப்போது ஜோகெஷ்வருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.
வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதை, இதமான குளிர் சாலையின் இரண்டுபுறமும் பளபளக்கும் பெரிய பச்சை கார்பெட் விரித்ததுபோல பசுமையான காடு. பார்க்குமிடமெல்லாம் நிந்தன் பச்சைநிறம் தோன்றுதடா என பாடவைக்கிறது. சிறு சிறு மலை கிராமங்களை கடந்துபோய்க்கொண்டிருக்கும் நம்மை பள்ளத்தாக்கில்
தெரியும் அந்த கிராமம் சட்டென்று கவர்கிறது. அல்மெடா (ஆங்கிலத்தில் அல்மோரா என எழுதுகிறார்கள்) என அறிவிக்கும் வரவேற்பு பலகையின் அருகில் ராமகிருஷ்ண மடத்து இலச்சினையுடன் ஒரு சிறிய போர்டு. ஆச்சரியப்பட்டு விசாரித்து மெல்ல அந்த மலைச்சரிவில்இறங்கினால்.அழகான பள்ளத்தாக்கை நோக்கிய எளிமையான கட்டிடங்களுடன் அமைக்கப்பட்ட ஆஸ்ரமம்.மற்ற ராமகிருஷ்ண ஆஸ்ரமங்களைப்போலவே அமைதியும்,அழகும்



மெல்ல முடிய பனிமேகங்கள் சட்டென்று விலகி பளிச்சென்று வெய்யில் தாக்கும் ஒரு வினோதமான வானிலையில் பயணத்தை தொடர்கிறோம். வழிநெடுக சிறிதும்பெரிதுமாக கோவில்கள்.உள்ளுர் காவல் தெய்வங்களிலிருந்து சிவபெருமான்
வரை பலவிதமான கோவில்கள். அதில் ஒன்று சிட்டை என்ற இடத்திலிருக்கும் கொலுதேவதா கோவில். வித்தியாசமாக இருக்கிறது. நுழைவாயில்,பாதை,மேற்கூரை கோவிலின் தூண்கள் மரங்கள் என்று எங்கு பார்த்தாலும் பெரிய,சிறிய மணிகள் கொத்துகொத்தாக தொங்குகிறது. விசாரித்ததில் நீதி தேவதையான அந்த தேவியிடம் கோர்ட் வழக்கு விவகாரங்கள்,வசூலிக்கமுடியாதகடன்,நிறைவேறாத ஒப்பந்தங்கள் போன்றவற்றின்,நகலுடன் ஒரு சிறிய மணியை இணைத்துக் கட்டி, நல்ல முடிவு வேண்டிப் பிரார்த்தித்து,கடவுளுக்கு கடிதம் எழுதுவார்களாம். வேண்டுதல் நிறைவேறியதும் பெரியமணிகட்டுவதாக வேண்டிக்கொள்கிறார்கள் என்றுதெரிந்தது.
பல மலைச்சரிவுகளையும் ஏற்றங்களையும் கொண்ட அந்த 35 கீமி மலைச்சாலையைக் கடக்க 2மணி நேரத்திற்கு மேலாகிறது. தேவதாருமரக் காடுகளுக்கே உள்ள மணம் நாசியைத்தாக்குகிறது. அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களும் ,வீசும் குளிர்ந்த காற்றும் அதிக உயரத்திற்கு வந்துவிட்டதை உணர்த்துகிறது. இங்கிருந்து ஜோகேஷ்வர் வளாகம் துவங்குகிறது என்ற தொல்பொருள் துறையினரின் அறிவிப்பு நம்மை வரவேற்கிறது 9ம் 10ம் நூற்றாண்டுகளில் பல காலகட்டங்களில் எழுப்பட்டதாகவும் முக்கியமான ஜோதிர்லிங்கம் இருக்கும் பெரிய கோவில் 3கிமீ தொலைவில் இருப்பதாகச் சொல்லும் அந்த குறிப்பைபார்த்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறோம் சட்டென்று திரும்பிய ஒரு திருப்பத்தில் பள்ளத்தாக்கில் பசுமையான மரங்களின் பின்னணியில் சிறிதும், பெரிதுமாகக் கும்பலாக பல கோவில்கள். சதுரமான கீழ்ப்பகுதியாக துவங்கி,
நுழைவாயிலைத்தவிர வேறு எந்த திறப்போ மாடமோ இல்லாமல் இறுக்கி அடுக்கிய கல்கோட்டையாக உயர்ந்து கோபுரமாக குவிந்த உச்சியின் மீது மரத்தால் செய்த சிறிய மண்டபத்தைத் தொப்பியாக அணிந்திருக்கும் ஒரு பெரிய கோவில்.
அதேவடிவத்தில் சிறிதும் பெரிதுமாக அருகருகே பல கோவில்கள்.வேகமாக நடந்தால் இடித்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாகப் பல குட்டி (100கும்மேலிருக்கும்)கோவில்கள். . கோவில் தொல்பொருள் சின்னம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பூஜைகள் உண்டு. பிரதான கோவிலில் மூர்த்தி ஜோகெஷ்வர் சுயம்புவாக எழுந்த லிங்கம். தரையிலிருந்து 1அடி உயரமிருக்கும்

மூர்த்தியைச் சுற்றி மூன்றுபக்கங்களிலும் பக்தர்கள் கர்ப்பககிரகத்தில் பொறுமையுடன் உட்கார்ந்திருக்க, பளபளக்கும் ஆரஞ்சு வண்ண உடையில்அர்ச்சகர் வந்து அவர் ஆசனத்தில் அமர்கிறார். பாலில் தோய்ந்த அரிசி தேவதாரு இலைகளுடன்அரளிப்பூ எல்லோருக்கும் தருகிறார்.அவருடன் நாமும் செய்யும் அபிஷகம் முடிந்ததும் மெல்லிய குரலில் உள்ளூர் மொழியில் ஒரு ஸ்லோகம் சொல்லுகிறார் இடையிடையே அவர் அர்ச்சிக்கும்போது நாமும் அர்ச்சிக்கிறோம். பின் தீபாரதனை. பூஜைமுடிந்தது.
பூஜைக்குக் கட்டணம் விஐபி தரிசனம் எதுவும் கிடையாது. முதலில்வருவபருக்கு ஸ்வாமியின் அருகே அமர முன்னுரிமை. நம் அருகிலிமர்ந்து பூஜை செய்தவர் உத்திராஞ்சல் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி என்பதை வெளியில் வந்தபின் அவருக்குள்ள பாதுகாப்பை பார்த்தபின்தான் தெரிந்துகொள்கிறோம்.
அருகில் ஒரு சின்ன குன்றின் மேல் குபேரனுக்கு ஒரு கோவில். மூர்த்தி லிங்க வடிவிலிருக்கிறார். நுழைவாயிலில்
"வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு செல்வம் சேரும்" என எழுதப் பட்ட வாசகங்கள். அருகிலிருக்கு ஜோகேஷ்வருக்கு அவ்வளவு கூட்டமிருந்தும் இங்கு ஏன் அதிகமில்லை என்ற நமது கேள்விக்கு அந்த அர்ச்சகர் தந்த பதில் பற்றி சிந்தித்துக்கொண்டே நைனிதாலுக்கு திரும்பும் பயணத்தை துவக்குகிறோம்.

வேடிக்கைக்காகச் சொன்னதோ அல்லது வேதனையில் சொன்னதோ -நம்மைச் சிந்திக்கவைத்த அந்த வார்த்தைகள்
"செல்வம் சேர்ந்தால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகளினால் வேதனை உண்டாகும் என்பதால் தேடிப்போய் வேண்டி வேதனையை வாங்கிக் கொள்வானேன் என்று பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்"


5/4/17

மரணத்தில் மர்மம்- விசாரணை துவங்கியிருக்கிறது


பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கோலாலம்பூர் விமான நிலையத்தில்  விமானம் ஏற காத்திருப்பவர்களின் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரின் அருகில்ஹாய்”  என்று சொல்லிக்கொண்டே அந்த அழகிய இரண்டு பெண்கள்  அவர் முகத்தில் சென்ட் மாதிரி  எதையோ ஸ்பிரே செய்கிறார்கள்சில நிமிடங்களில் உதவி கேட்டு கூச்சலிட்டு அந்த மனிதர் தரையில் விழுகிறார். அழகியபெண்கள் அம்பேல்ஆம்புலன்ஸ் வந்து அந்த மனிதரை அள்ளிக்கொண்டு மருத்துமனைக்குப் பறக்கிறது. ஆனால் பாதி வழியிலேயே அவர் இறந்து போகிறார். மருத்துமனையில் கண்டுபிடிக்கப்பட்டவிஷயம்  அவர் மீது ஸ்பிரே செய்யப்பட்டிருப்பது  விஎக்ஸ் என்ற கொடிய ரசாயன விஷம்தெளிக்கப்பட்டவர் 20 நிமிடங்களுக்குள் இறப்பது நிச்சியம் என்றளவினாலான கொடுமையான விஷம். உலகின் பல நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கும் ஒரு ரசயானம்.
யார், ஏன் இதை இவருக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என ஆராய்ந்த மலேசியப் போலீசுக்கு  ஒன்றின்பின் ஒன்றாகத் தொடர் ஆச்சரியங்கள் காத்திருந்தன.
கொலை செய்யப்பட்டிருப்பவரின் பெயர் கிம் ஜாங் நம் என்பதை அவர் பாஸ்போர்ட்டின் மூலம் அறிந்தவர்களை அடுத்துத் தாக்கிய ஆச்சரியம் அவர்  வட கொரிய அதிபரான  கிம் ஜாங் உன்   னின் ஒன்று  விட்ட சகோதரர் மற்றொரு நாட்டின் அரசியல் குடும்ப உறுப்பினர் மலேசிய மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தவுடன் அரசு இயந்திரம் மிக வேகமாக இயங்கியதுஸ்பிரே அடித்தப் பெண்கள் வளைக்கப்பட்டனர்.
 “இது ஒரு ரியாலிட்டி ஷோ, நீங்கள் அடிக்கப்போவது வாசனைத் தண்ணீர். ஆனால் அவர் பயந்து விழுவார். பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்துவிடுவார். நாங்கள் வீடியோபடமெடுப்பதைக் காட்டுவோம்” என்று ஒரு    டிவி சானல் சொல்லிப் பணம் கொடுத்ததினால் செய்தோம். இது விஷம் என்றோ அல்லது அவர் இறந்து போவார் என்றோ தெரியாது என்றனர் அந்த மாடல் அழகிகள். விசாரணையின் எல்லைகள் விரிந்தன. வெளியான விஷயம் கிம் ஜாங் நம் கொல்லப்பட்டதற்கு பின்னால் ஒரு சதி திட்டம் இருப்பதையும் அதைச் செய்தவர்கள் வடகொரியாவின் உளவுத்துறை என்பது.
 ஏன் இந்தப் படுகொலை? என்பதைப் புரிந்துகொள்ள  வினோதமான வடகொரிய அரசியலைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டாம் உலகப்போருக்குப் பின்  அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவை ஆளுக்குப் பாதி எனப் பங்கு போட்டுக்கொண்டனர். அதில் வட பகுதி  சோவியத்தின் உதவியுடன் இயங்கிவந்த எதேச்சாதிகார நாடுநாடு வறுமையில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தாலும்  திடும் திடும் எனச்  சக்தி வாய்ந்த ராக்கெட்களை ஏவியும், அணுகுண்டு சோதனைகளைச்செய்தும் மிரட்டிக்கொண்டிருப்பவர்கள்  நாட்டின் பெயர் தான்  ‘மக்கள் குடியரசு”  ஆனால்  நடப்பது  அதிபரின் குடும்ப ஆட்சிதான். முதல் அதிபர் கிம் இல் சுங்-இன் ஆட்சி, 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், அவரைத்தொடர்ந்து அவரது மகன் என்று பரம்பரையாக குடியரசு ஆட்சி செய்துகொண்டிருக்கிறது அதிஅப்ரின் குடும்பம்
 இந்த முறைப்படி கொலை செய்யப்பட்டிருக்கும் கிம் ஜாங் நம் தான் வட கொரியாவின் ஆட்சி யாளராக வந்திருக்க வேண் டும். ஆனால், இவர் போலி பாஸ் போர்ட்டில் ஜப்பான் சென்று அங்கு  கைது செய்யப்பட்டது இவரது  எதிர் காலத்தை சூனியமாக்கியது. இதனால் வட கொ ரிய முன் னாள் அதிபர் கிம் ஜால் இல், தனது 3வது இளைய மகன் கிம் ஜாங் உன்னை தனது அரசி யல் வாரி சாக அறி வித் தார். ஆட்சி கட்டிலில் அமர முடியாமல் போன கிம் ஜாங் நம், வட கொரியா திரும் வில்லை. ஹாங்காங் அருகேயுள்ள சீனா வின் மகுவா பகுதியில் தான் வசித்து வந்தார். இவருக்கு வட கொரியா வின் நட்பு நாடாக இருந்த சீனா ஆதரவு அளித்து வந்தது.
 சமீப காலமாக அதிபர் கிம் ஜாங் உன் பற்றி, கிம் ஜாங் நம் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார். அவரது ஆட்சியை ஜோக் எனவும், வட கொ ரியாவை கட்டுப்படுத்தும் அளவுக்கு அவருக்கு வயது போதாது எனக் கடுமையாக விமர்சித்து வந்தார்  கிம் ஜாங் நம். இது கிங் ஜாம் உன்னுக்கு வெறுப்பை ஏற்படுத்தியதுஅன்னிய சக்திகளின் ஆதரவுடன் இவர்  தன் ஆட்சியை கவிழ்த்துவிடுவார்  எனப் பயந்து  இவரை உளவுத் துறை மூலம் தீர்த் துக் கட்ட கிம் ஜாங் உன் முடிவு செய்தார். அந்த தொடர் முயற்சிகளின் கிளைமாக்ஸ் தான் கோலாலம்பூர்  விமான நிலையத்தில் அரங்கேறியது..

மரணத்தில் . எந்த சந்தேகமும் வராமல் தீர்த்து கட்ட அவர் கள் பயன்படுத் திய ஆயுதம் தான் ரசாயன போர் முறை யில் இது பயன்படுத்தப் படும் வி.எக்ஸ்.   . உலகம் முழுவதும் தடை செய்யப் பட்ட ரசாயனம். இந்த ரசாயனம் தோலில் பட் டால், அல்லது நுகர்ந் தால் நரம்பு மண் டலம் ஸ்தம் பித்து சில நிமிடங் ளில் மர ணம் ஏற்படும் என்பது சாதாரண நபர்களுக்குத் தெரியாது.
கிம் ஜாங் நம் மலேசியா வந்திருப்பதை அறிந்த கொலைகாரகும்பல், அவரைத் தீர்த்து கட்டும் சதியில் இறங்கியது. பிரபலம் இல்லாதவர் என்பதால், அவரை யாருக்கும் அடை யாளம் தெரியாதுஎன்பதால் விமான நிலையம்.. ஆனால் மலேசிய போலீஸ் விழித்துக் கொண்டுவிட்டது. தடயவியல் சோதனையில் கிம் ஜாங் நம் மீது  தெளிக்கப்பட்ட ரசாயனம்  வி.எக்ஸ் என உறுதி செய்யப் பட்டதும் பெரும் அதிர்ச்சியான அந்த விஷயத்தை உலக நாடுகளுக்கு அது அறிவித்தது.  பிரச்சனைகளைத் தவிர்க்க இவரது உடலை உடனடியாக ஒப்படைக்கும் படி வட கொரியா, மலேசியாவுக்கு நெருக்கடி கொடுத்தது..மலேசிய அரசு, கிம் ஜாங் நம் உடலை உறுதி செய்ய அவரது குடும் பத்தினரின் டிஎன்ஏ மாதிரியை கேட் டது. ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும், உடலை ஒப்படைக்கும் படி உரிமை கோரவில்லை.
மலேசியா இனி நடத்தும் விசாரணையில்  உண்மை நிலவரம் தெரியவரும். வட கொரியாவின் சதி உறுதியானால்,சர்வ தேச தடையை மீறி வி.எக்ஸ் ரசாயனத்தை பயன் படுத்தப் பட்டதை .நாவும், உலக நாடு களும் சாதாரண விஷயமாக எடுத் துக் கொள்ளாது  வடகொரியா   உலக நாடுகளின் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.