5/4/17

மரணத்தில் மர்மம்- விசாரணை துவங்கியிருக்கிறது


பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கோலாலம்பூர் விமான நிலையத்தில்  விமானம் ஏற காத்திருப்பவர்களின் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரின் அருகில்ஹாய்”  என்று சொல்லிக்கொண்டே அந்த அழகிய இரண்டு பெண்கள்  அவர் முகத்தில் சென்ட் மாதிரி  எதையோ ஸ்பிரே செய்கிறார்கள்சில நிமிடங்களில் உதவி கேட்டு கூச்சலிட்டு அந்த மனிதர் தரையில் விழுகிறார். அழகியபெண்கள் அம்பேல்ஆம்புலன்ஸ் வந்து அந்த மனிதரை அள்ளிக்கொண்டு மருத்துமனைக்குப் பறக்கிறது. ஆனால் பாதி வழியிலேயே அவர் இறந்து போகிறார். மருத்துமனையில் கண்டுபிடிக்கப்பட்டவிஷயம்  அவர் மீது ஸ்பிரே செய்யப்பட்டிருப்பது  விஎக்ஸ் என்ற கொடிய ரசாயன விஷம்தெளிக்கப்பட்டவர் 20 நிமிடங்களுக்குள் இறப்பது நிச்சியம் என்றளவினாலான கொடுமையான விஷம். உலகின் பல நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கும் ஒரு ரசயானம்.
யார், ஏன் இதை இவருக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என ஆராய்ந்த மலேசியப் போலீசுக்கு  ஒன்றின்பின் ஒன்றாகத் தொடர் ஆச்சரியங்கள் காத்திருந்தன.
கொலை செய்யப்பட்டிருப்பவரின் பெயர் கிம் ஜாங் நம் என்பதை அவர் பாஸ்போர்ட்டின் மூலம் அறிந்தவர்களை அடுத்துத் தாக்கிய ஆச்சரியம் அவர்  வட கொரிய அதிபரான  கிம் ஜாங் உன்   னின் ஒன்று  விட்ட சகோதரர் மற்றொரு நாட்டின் அரசியல் குடும்ப உறுப்பினர் மலேசிய மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தவுடன் அரசு இயந்திரம் மிக வேகமாக இயங்கியதுஸ்பிரே அடித்தப் பெண்கள் வளைக்கப்பட்டனர்.
 “இது ஒரு ரியாலிட்டி ஷோ, நீங்கள் அடிக்கப்போவது வாசனைத் தண்ணீர். ஆனால் அவர் பயந்து விழுவார். பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்துவிடுவார். நாங்கள் வீடியோபடமெடுப்பதைக் காட்டுவோம்” என்று ஒரு    டிவி சானல் சொல்லிப் பணம் கொடுத்ததினால் செய்தோம். இது விஷம் என்றோ அல்லது அவர் இறந்து போவார் என்றோ தெரியாது என்றனர் அந்த மாடல் அழகிகள். விசாரணையின் எல்லைகள் விரிந்தன. வெளியான விஷயம் கிம் ஜாங் நம் கொல்லப்பட்டதற்கு பின்னால் ஒரு சதி திட்டம் இருப்பதையும் அதைச் செய்தவர்கள் வடகொரியாவின் உளவுத்துறை என்பது.
 ஏன் இந்தப் படுகொலை? என்பதைப் புரிந்துகொள்ள  வினோதமான வடகொரிய அரசியலைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டாம் உலகப்போருக்குப் பின்  அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவை ஆளுக்குப் பாதி எனப் பங்கு போட்டுக்கொண்டனர். அதில் வட பகுதி  சோவியத்தின் உதவியுடன் இயங்கிவந்த எதேச்சாதிகார நாடுநாடு வறுமையில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தாலும்  திடும் திடும் எனச்  சக்தி வாய்ந்த ராக்கெட்களை ஏவியும், அணுகுண்டு சோதனைகளைச்செய்தும் மிரட்டிக்கொண்டிருப்பவர்கள்  நாட்டின் பெயர் தான்  ‘மக்கள் குடியரசு”  ஆனால்  நடப்பது  அதிபரின் குடும்ப ஆட்சிதான். முதல் அதிபர் கிம் இல் சுங்-இன் ஆட்சி, 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், அவரைத்தொடர்ந்து அவரது மகன் என்று பரம்பரையாக குடியரசு ஆட்சி செய்துகொண்டிருக்கிறது அதிஅப்ரின் குடும்பம்
 இந்த முறைப்படி கொலை செய்யப்பட்டிருக்கும் கிம் ஜாங் நம் தான் வட கொரியாவின் ஆட்சி யாளராக வந்திருக்க வேண் டும். ஆனால், இவர் போலி பாஸ் போர்ட்டில் ஜப்பான் சென்று அங்கு  கைது செய்யப்பட்டது இவரது  எதிர் காலத்தை சூனியமாக்கியது. இதனால் வட கொ ரிய முன் னாள் அதிபர் கிம் ஜால் இல், தனது 3வது இளைய மகன் கிம் ஜாங் உன்னை தனது அரசி யல் வாரி சாக அறி வித் தார். ஆட்சி கட்டிலில் அமர முடியாமல் போன கிம் ஜாங் நம், வட கொரியா திரும் வில்லை. ஹாங்காங் அருகேயுள்ள சீனா வின் மகுவா பகுதியில் தான் வசித்து வந்தார். இவருக்கு வட கொரியா வின் நட்பு நாடாக இருந்த சீனா ஆதரவு அளித்து வந்தது.
 சமீப காலமாக அதிபர் கிம் ஜாங் உன் பற்றி, கிம் ஜாங் நம் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார். அவரது ஆட்சியை ஜோக் எனவும், வட கொ ரியாவை கட்டுப்படுத்தும் அளவுக்கு அவருக்கு வயது போதாது எனக் கடுமையாக விமர்சித்து வந்தார்  கிம் ஜாங் நம். இது கிங் ஜாம் உன்னுக்கு வெறுப்பை ஏற்படுத்தியதுஅன்னிய சக்திகளின் ஆதரவுடன் இவர்  தன் ஆட்சியை கவிழ்த்துவிடுவார்  எனப் பயந்து  இவரை உளவுத் துறை மூலம் தீர்த் துக் கட்ட கிம் ஜாங் உன் முடிவு செய்தார். அந்த தொடர் முயற்சிகளின் கிளைமாக்ஸ் தான் கோலாலம்பூர்  விமான நிலையத்தில் அரங்கேறியது..

மரணத்தில் . எந்த சந்தேகமும் வராமல் தீர்த்து கட்ட அவர் கள் பயன்படுத் திய ஆயுதம் தான் ரசாயன போர் முறை யில் இது பயன்படுத்தப் படும் வி.எக்ஸ்.   . உலகம் முழுவதும் தடை செய்யப் பட்ட ரசாயனம். இந்த ரசாயனம் தோலில் பட் டால், அல்லது நுகர்ந் தால் நரம்பு மண் டலம் ஸ்தம் பித்து சில நிமிடங் ளில் மர ணம் ஏற்படும் என்பது சாதாரண நபர்களுக்குத் தெரியாது.
கிம் ஜாங் நம் மலேசியா வந்திருப்பதை அறிந்த கொலைகாரகும்பல், அவரைத் தீர்த்து கட்டும் சதியில் இறங்கியது. பிரபலம் இல்லாதவர் என்பதால், அவரை யாருக்கும் அடை யாளம் தெரியாதுஎன்பதால் விமான நிலையம்.. ஆனால் மலேசிய போலீஸ் விழித்துக் கொண்டுவிட்டது. தடயவியல் சோதனையில் கிம் ஜாங் நம் மீது  தெளிக்கப்பட்ட ரசாயனம்  வி.எக்ஸ் என உறுதி செய்யப் பட்டதும் பெரும் அதிர்ச்சியான அந்த விஷயத்தை உலக நாடுகளுக்கு அது அறிவித்தது.  பிரச்சனைகளைத் தவிர்க்க இவரது உடலை உடனடியாக ஒப்படைக்கும் படி வட கொரியா, மலேசியாவுக்கு நெருக்கடி கொடுத்தது..மலேசிய அரசு, கிம் ஜாங் நம் உடலை உறுதி செய்ய அவரது குடும் பத்தினரின் டிஎன்ஏ மாதிரியை கேட் டது. ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும், உடலை ஒப்படைக்கும் படி உரிமை கோரவில்லை.
மலேசியா இனி நடத்தும் விசாரணையில்  உண்மை நிலவரம் தெரியவரும். வட கொரியாவின் சதி உறுதியானால்,சர்வ தேச தடையை மீறி வி.எக்ஸ் ரசாயனத்தை பயன் படுத்தப் பட்டதை .நாவும், உலக நாடு களும் சாதாரண விஷயமாக எடுத் துக் கொள்ளாது  வடகொரியா   உலக நாடுகளின் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்