22/12/17

குடகு மலைக் காற்றினிலே 3


காலையில் துயிலெழுப்பியது  தொலைவில் கேட்ட ஒரு  தெளிவில்லாத பாட்டு. “குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா”  என்ற பாடல் நினைவில் வர பால்கனிக்கு வந்து  எதிரில் தெரியும் பனி விலகிக்கொண்டிருக்கும்   மலைச்சரிவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது நெருங்கி வந்து கொண்டிருந்த அந்தப்  பாட்டு ஒரு கன்னடப் பாடல் எனப்புரிந்தது. அவ்வப்போது நின்று நின்று கேட்டது.  சிறிய அந்த மலைச் சாலையில் ஊர்ந்து வரும் டிராக்டர். அதன் என்ஞின்  மீது ஒரு ஸ்பீக்கர். அது குப்பை சேகரிக்கும் வண்டி. நம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்ற பாடல் அதன் வருகையின் அடையாளம். விசில், மணி எல்லாம் கிடையாது,  டிராக்டரைப்போலவே அந்த டிரைவரும் உதவியாளரும் பளிச்சென்றிருக்கிறார்கள்.பாடல் நின்றவுடன் அருகிலிருந்த விட்டினர் நிறைய குழந்தைகள் “ குட் மார்னிங் சொல்லி    தங்கள் குப்பை கூடைகளைத் தருகிறார்கள். சேகரித்தப் பின்னர்  பாடல் ஒலிக்க வண்டி பயணத்தைத் தொடர்கிறது. நகரிலுள்ள CLEAN GREEN  என்ற அமைப்பை கடந்த4 ஆண்டுகளாக இதைச்செய்து வருகிறதாம். நகரின் பல இடங்களில் இந்த பெயரில்  குப்பைகளை சேகரிக்கும் பைகள் தொங்குகின்றன. நகரில் பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை..

 திட்டமிட்டபடி  காபி தோட்டத்தை கண்ன்டுபிடித்துப்  போகும் வழியில் பார்த்த மாறுதலான  drink and drive என்ற போர்ட்  நிறுத்தியது.  சுய உதவிக்குழு  நடத்தும் ஒரு சின்ன காபிஸ்டால், .வரவேற்ற பெண்மணி அப்போதுதான் அரைத்த காபிபொடியிலிருந்து தயாரித்த கொடுத்த அருமையான காபியை விட ஆச்சரியம் அவர் சொன்ன செய்திகள்..   அந்த கடை யிருக்கும் இடத்தின் பின்னே இருக்கும் சின்ன காபி தோட்டம் அவர் குடும்பத்தினுடையது.  அதில் பணி செய்யும்   தொழிலாளிப் பெண்களுக்கு   உதவ அவர்களுடனும்  தன் நண்பர்களுடன்  இந்த சுய உதவிக்குழுவைத்  துவக்கியதாகவும் குழுவின் திட்டப்படி வாரத்தில் 2 நாள் இங்கு விற்பனையைக்கவனிப்பதாகவும் சொன்னார். ஸ்டேட் பேங்க் கடன் வழங்கியிருக்கிறது. காபி போர்ட் வறுத்து அரைக்கும் இயந்திரத்தை  இலவசமாக வழங்கியிருக்கிறது. என்றார். இந்த குழுவின் சிறப்பானபணிகளுக்காக பரிசுகள் வாங்கியிருப்பதைச் சொல்லும் படங்களை பெருமை பொங்க காட்டினார்


காபி தோட்டத்தின் நுனியில் அங்கு விளைந்து காய்ந்த  புதிதாக அரைத்து தயாரித்த காபி  20 ரூபாய். 
“குழந்தைகள் வளர்ந்து வெளிநாட்டில் இருக்கிறார்கள். நானும் கணவரும் மட்டும் இந்த காபிதோட்ட்த்தைப்பார்த்துகொண்டிருக்கிறோம் நிறைய நேரமிருப்பதால் இந்தப் பணியையும் செய்கிறேன். எங்கள் காபியை வாங்கிம்காபி டே போன்றவர்கள் ஒரு கப் 150க்கு விற்கும்போது நாங்கள் ஏன் செய்யக்கூடாது எனத்தோன்றிற்று. மேலும்  உங்களைப்போன்றவர்களை  அடிக்கடி சந்திப்பதும் மகிழ்ச்சியாகயிருக்கிறது” என்கிறார். இவரும் பல கூர்க் குடும்ப்ப்  பெண்களைப்போல் வீட்டிலேயே ஒயின் தயாரிக்கும்  home made wineல்  எக்ஸ்பர்ட்டாம்.  இங்கு கிடைக்கும் பல வகைப் பழங்களை ஜூஸ் எடுத்து 45 நாள் திறக்காமல் வைத்திருந்தால் அது சற்று புளித்து இயற்கையாகவே உருவாகும் 2% ஆல்காலாகிறது. அதை ஹோம் மேட் ஒயின் என்கிறார்கள்.  ருசித்துப்பார்க்கச் சொன்னார். ஒயின்  என்ற பேரே நமக்கு  அலர்ஜி என்பது அவருக்குத் தெரியாது. பார்ட்டிகளில் பெண்களூம் குழந்தைகளூம் அருந்துவார்களாம். 
ஒருகிலோ உள்நாட்டில் 8000த்துக்கும் வெளிநாட்டில் 22000 ரூபாய்க்கு விற்பதாகச் சொல்லப்படும் காபி தோட்டத்தைப் பார்க்க விரும்பி போய்க்கொண்டிருப்பதை கேட்டவுடன் அவர். கட்கடவெனச் சிரித்தார்.  அது ஒருவிசேஷ பயிர் இல்லை சார். அந்த இடத்திலிருக்கும் ஒரு வகைப் பூனைகள் காபிபழத்தின் சதையை சாப்பிட்டு  கொட்டைக:ளை துப்பிவிடுகிறது. அதைப் பொறுக்கி  அது எதோ மிக சுவையானதாக இருப்பதாக சொல்லி லண்டனிலிருக்கும் ஒரு கம்பெனி மார்க்கெட் செய்கிறது. நல்ல விலை கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள் எனக்கு நம்பிக்கையில்லை. விலை அதிகமில்லாவிட்டாலும் எங்கள் காபிபயிர்களை நாங்கள் குழந்தைகளைப் போல பார்த்துகொள்கிறோம். அதையே நீங்கள் வாங்கலாம் என்றார். . 
நாம் பார்க்கவிரும்பும் காபி தோட்டத்தைப் பற்றி இந்த த்தகவலைக் கேட்டதும் சே என்றாகிவிட்டது. 
ஒரு ஏலக்காய் எஸ்டேட்டை பார்த்தால் என்ன என்று தோன்றியது. குடகு மலைப்பகுதியில் தான் ஆராய்ச்சி மையம் இருப்பது நினைவுக்கு வந்த்து. அதை விசாரித்து போகமுடிவு செய்தோம். மத்திய அரசு ஆராய்ச்சி நிலையங்கள் என்றால் இஸ்ரோ ரேஞ்சுக்கு  பாதுகாப்பு பந்தா இருக்குமென்ற எண்ணத்துடன் போனவர்களுக்கு அங்கு ஆச்சரியம் காத்திருந்த்து. நிலை இயக்குனர் DR.AnkeGowda  நம் ஆர்வத்தைப் பாராட்டி வரவேற்றார். மனுஷர் பயிர் ஆராய்ச்சியில் 2 டாக்டர் பட்டம் வாங்கியவர். புதிய கண்டுபிடிப்புக்ளூக்காக விருதுகள் பெற்றவர்.  இந்த மையம் இபோது வெறும் ஏலக்காய் மட்டுமில்லாமல் பலவிதமான  ஸ்பைஸ்களையும் பற்றி ஆராயும் அகில இந்திய நிறுவனம்.. இங்கு  6 இளம் வேளான் விஞ்ஞானிகள் தங்கள் டாக்டர்பட்டத்திற்கு பின் ஆராய்சியைச் செய்கிறார்கள் அன்புடன் தோட்டம் முழுவதும் பார்க்க நமக்கு  விளக்கிசொல்ல ஒரு உதவி ஆராய்ச்சியாளாரையே அனுப்பினார்
.   ஏலக்காய் செடி மஞ்சள் செடி போலிருக்கிறது. அதன் வேரிலிருந்து சரம் சரமாகத் தொங்குகிறது இந்த காய்.. அதில் நன்கு விளைந்ததை மட்டுமே பறிக்க வேண்டும். கவனமாகப் பறிக்காவிட்டால் விணாகிவிடும் என்பதால் எக்ஸ்பர்ட் பெண்கள் மட்டுமே இந்த வேலைக்கு.. கூலி மிக அதிகமாம்.. ஏலக்காய் விலை அதிகமாக இருக்க  இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். நம் பாயஸத்தில் மணக்கும் இது காயாக இருக்கும் போது வாசனையே இல்லாதது ஒரு ஆச்சரியம். பறித்தவைகளை நிழலில் உலர்த்தி பின் 59 டிகிரியில் அவனில் பிஸ்கட்  செய்வது போல டிரேயில் இட்டு சூடுகிறார்க்ள். பின்னர் மீண்டும் நிழல் குளியல். அபோது தான் அதற்கு நாம் பார்க்கும் நிறமும் மணமும் வருகிறது. இந்த சென்டரில் ஏலக்காய் மட்டுமில்லாமல் பலவகைத் திரவியப்பயிர்களையும்  ஆராய்கிறார்கள்.-. கொடியில் விளைவதால்  மிளகை ஏணிவைத்துத்தான் பறிக்க வேண்டியிருப்பதால் அதை குத்துச்செடியாக்க முற்சிக்கிறார்கள். இப்படி பல ஆராய்ச்சிகள். . விவசாயதிலும் தாவரங்களிலும்  ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது.
 
மாலையில் நகரில் பவனி வந்தபோது  கவனித்த ஒரு விஷயம். இங்கு பல ஏற்றுமதி நிறுவனங்கள்   கடைகள் வைத்திருக்கிறார்கள். ஏலக்காய் போன்ற விலையுர்ந்த பொருட்களை நிறைய ஸ்டாக். அதையும் அழகாக டிஸ்ப்பிளேயில் வைத்திருக்கிறார்கள். சணல் சாக்குகள் கிடையாது டிரான்ஸ்ப்ரண்ட் பிளாஸ்டிக்க சாக்குகள். மட்ஜ்ஹிப்பு கோடிகளில். 100கிராம் கூட அதிலிருந்து  எடுத்து  தருகிறார்கள்  காபி, தேன், மிளகு ஜாதிக்காய்,  அத்திபழம்(அனுமார் வடை மாலை மாதிரி கோர்க்கபட்டிருக்கிறது)  எல்லாம் கிடைக்கிறது. 

எல்லோரும் ஒரே மாதிரி எங்கள் காபிதான் கூர்க்கிலேயே பெஸ்ட் என்றார்கள். நாளை நீத்துவிடம்  ஏது நிஜமாகவே பெஸ்ட் என்ற கேட்டபின் வாங்கலாம் என எண்ணிக்கொண்டே வீடு திரும்பினோம். 



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்