19/12/17

குடகு மலைக் காற்றினிலே ... 2



மடிக்கேரி ஒரு சிறிய மலை நகரம். நகரில் பல முக்கிய இடங்களில் கம்பீரமாக நிற்கும் ராணுவ அதிகாரிகளின் சிலைகள். டூரிஸ்ட் கூட்டம் இவைகளை கடந்து நகரின் கோடியில் ஒரு பெரிய பார்க். அதிலிருந்து மேற்கு மலைத்தொடரின்பசுமைச் சரிவுகளையும் சிகரங்கங்களையும் பார்க்க அந்தப் பார்க்கின் விளிம்பில் வசதி செய்திருக்கிறார்கள். ஒரு மலைச்சரிவை காலரியாக மாற்றி அதன் முன் ஒர் அரைவட்டவடிவ தளமுமாக அழகான amphitheatre அரங்கமாக வடிவமைத்திருக்கிறார்கள். விழா நாட்களில் இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுமாம்




இந்த இடத்திலிருந்து பார்த்தால் மாலையில் சன் செட் அழகாக இருக்கும் என்பதால் அதற்காகக் காத்திருக்கும் கூட்டம் காலரியை ஆக்ரமிதிருக்கிறது. உனண்மை தான்
ஆதவன் அணுவணுவாகக் கண்ணிலிருந்து மறையும் காட்சி அற்புதமாகத்தான் இருக்கிறது.  வாணத்தையே ஜொலிக்கும் தங்கத்தகடுகளாக்கியபின் .சட்டென்று பிங்க் கலந்த ஆரஞ்ச் வண்ணப் பந்தாக மாறி மெல்லிய நீலத்துடன் மாறிச் சட்டென்று மலைகளுக்குப் பின்னால் காணமல் போகும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று மனத்ஜில் நிற்கும் ஓவியம்.  அஸ்தமனம் முடிந்தவுடனும்  எடுத்தவைகளுடன் திருப்தி அடையாமல் இன்னும் சில செல்பிகள் எடுத்துக்கொண்டு  திரைப்படம் முடிந்தவுடன் தியட்டர்காலியாவதைப் போல அரங்கம் காலியாகிறது. தினசரி வாக்கிங் வரும் உள்ளுர் மக்கள் சிலருடன் நாமும் உட்கார்ந்திருக்கிறோம். குளிர் மெல்ல தாக்க ஆரம்பித்தாலும் இதமாக்யிருக்கிறது.  தொலைவில் வளைந்த மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்களின் விளக்குகள் நகரும்  நட்சந்திரங்களகத் தெரிவதை ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
 இந்த இடத்திலிருந்து தான் குடகு மன்னர் தன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும்  அமர்ந்து மாலைவேளைகளை இசை நடன நிகழ்ச்சிகளுடன் ரசிப்பாராம். அதனால் இந்த இடத்தை ராஜா சீட் என்று அழைக்கிறார்கள். அதை நினைவு கூறும் வகையில் ஒரு மண்டபமும் நிறுவியிருகிறார்கள். அதைப்பார்த்ததும் குடகு மன்னர்களைப்பற்றிக் காலையில் மீயூசியத்தில் பார்த்தறிந்த செய்திகள் மீண்டும்   மனதில் எழுந்தன.

மன்னர்கள் வாழ்ந்த  அரண்மனை இபோது அரசு அலுவலகங்களாகமாறி ப்பாழாகிக் கொண்டிருக்கிறது .அதிலிருந்த பொருட்களையும் படங்களையும் கொண்டு அருகில் ஒரு மியூசியம் அமைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்இந்தச் சின்னஞ்சிறு குடகு தனி மலைநாடகவே 1600களிலிருந்து மன்னர் ஆட்சியிலிருந்திருக்கிறது. அண்டைநாடான மைசூர் அரசர்களால் வெல்லப்பட்டு அவர்களின் ஆட்சியின் கிழ் வந்திருக்கிறது. . பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஆட்சியில் தனி நாடகாவும் அரசபரம்பரம்பரையாகவும்  மீண்டும் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் தொடர்ந்து வந்த அரச பரமப்ரையினர் பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாதிக்கத்தை விரும்பாமல் புரட்சி செய்ததால் ஒரு போரைச் சந்தித்திருக்கிறார்கள். கோட்டைகள், மதில் சுவர்கள் எதுவும் இல்லாத போதும் நான்கு புறமும் காடுகளாகச் சூழபபட்ட இந்தக் குட்டி மலைநாட்டைபிரிட்டிஷார் எளிதில் நெருங்க முடியவில்லை. ஒரு போருக்குப் பின்னர் சரணடைந்த மன்னரைக் கைது செய்து வேலூரில் சிறை வைத்திருக்கிறார்கள். சிறையில் மன்னர் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும், பதிலுக்குத் தன் ஒரே மகளை லண்டனில் படிக்க வைக்க விரும்புதால் அதற்கு உதவி செய்யவும் கேட்டிருக்கிறார். சம்மதித்த ஆங்கிலேயே அரசு அவரையும் மகளையும் லண்டன் அனுப்பினார்கள். ஆனால் அங்கு இளவரசி படிப்பைத்தொடர கிருத்துவ மதத்திற்கு மாற நேர்ந்திருக்கிறது. ராணி விக்டோரியாவால் முன்பொழியப்பட்டு இளவரசி மதம் மாறியிருக்கிறார். சில நாட்களுக்குப் பின்னர் ஒரு ஆங்கிலேயரை மணந்திருக்கிறார். இங்கிலாந்திலேயே இறந்த மன்னரின் கல்லறை அங்கிருக்கிறது மடிகேரியில் இருக்கும்  மறைந்த மன்னர்களின் சமாதி வளாகம் மிகப்பெரியதாகயிருக்கிறது. வாசலில் துவாரபாலகர்கள் உருவங்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.  இவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் எனத் தெரியவில்லை
 ஆனால் இங்கிலாந்தில் படித்த மன்னரின் மகள்  பின்னாளில் என்னவானார்? அவரது வாரிசுகள் எங்கே என்பது தெரியவில்லை.


மியூசியத்தில் பளிச்சென்று வீபூதி பட்டையுடன் இருக்கும் அந்த அழகான இளவரசியின் படத்தைப் பார்த்தபோது இளவரசியாக இருந்தபோதிலும் படிப்புக்காக மதம் மாறிய செய்தி மனதை  உறுத்தியது உண்மை.  இந்த மத மாற்றத்தைப் படிப்பின் மீதிருந்த ஆர்வம் என எடுத்துக்கொள்வதா? அல்லது அதிகாரத்துக்கு அடிபணிந்த அடிமைத்தனமாக எடுத்துக்கொள்வதா? என்று சிந்திக்கொண்டிருந்தேன்.

குடகு மன்னர்கள் மிகப்பெரிய சிவ பக்கதர்கள். கனவில் வந்து சொன்னதற்காகவே மன்னர் கட்டியிருப்பதாக வரலாறு சொல்லும் ஒம்காரஸ்வர் கோவில் நகரின் நடுவில் இன்றும் இருக்கிறது. கோபுரங்கள் எதுமில்லாத கேரளபாணிக் கோவில். அர்ச்சகர் பிங்க் வேஷ்டியில் இருக்கிறார். வரும் பக்தர்களுடன் பேசுவதில்லை. அவர் சொல்லும் பூஜை மந்திரங்கள் என்ன பொழியென்றும் புரியவில்லை. கோவில் மிகச்சுத்தமாகயிருக்கிறது.  பிறந்து சில மாதங்களே ஆன சின்னக்குழந்தைகளைக் கொண்டுவந்து சன்னதியின் முன் கிடத்துகிறார்கள்
பிரிட்டிஷாரால் தனி நாடாக அங்கிகரிக்கப்பட்டிருந்ததால், சுதந்திர இந்தியாவிலும் முதலில்  இது தனி மாநிலமாகவே இருந்திருக்கிறது. ஆம் ஸ்டேட் ஆப் கூர்க்.! 1956ல் மொழி வாரியாக மாநிலங்கள் உருவானபோது இது மைசூர் ராஜயத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது அந்த இணைப்பின்போது  முன்னாளில் போரில் வென்று  மைசூர் எங்களை ஆட்சி செய்தபோது கொடுமைப்படுத்தியவர்கள். அதனால் அவர்கள் வேண்டாம் எங்களை மெட்ராஸ் ராஜதானியுடன் சேர்த்துவிடுங்கள் என்று போராடியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த ஒரு புதிய செய்தி.
பிரிட்டிஷாரை துணிவுடன் ஈஸ்ட் இந்திய கம்பெனிகாலத்திலேயே எதிர்த்த பாரம்பரியத்தாலோ  இந்திய ராணுவ அதிகாரிகளில் பலர் இந்தப் பகுதியிலிருந்து தான் வந்திருக்கிறார்கள். கரியப்பாவைத்தொடர்ந்து பெல்லியப்பா, பொன்னப்பா போன்று பல அப்பாக்கள் இங்கிருந்து வந்த ராணுவ அதிகாரிகள். இன்றும் இது தொடர்வது பெருமைக்குரியவிஷயம்.

உலகிலேயே மிக விலையுர்ந்த காபி இங்குதான் விளைகிறது என்று கேள்விபட்டிருந்த்தால் அதைப் பார்க்க விரும்பி விபரங்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். லண்டனிலிருந்து ஒரு நண்பர் கொடுத்திருக்கும் அறிமுகத்துடன் நாளைக் காலை அந்த இடத்துக்குப்  போகலாம் என்று எண்ணித் திரும்பினோம்
“வெளியிலேயே சாப்பிட்டுவிட்டீர்களா? அல்லது ஏதாவது தயாரிக்கவா? என நீத்து கேட்டபோது உண்மையிலேயே இது ஹோம் ஸ்டே தான் என்பது புரிந்தது

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்