4/1/18

குடகு மலைக் காற்றினிலே 4


மலைச்சரிவில் ஒரு காபி தோட்டத்துக்கு நடுவே அமைக்கப்படிருக்கும் பாதையின் வழியே 1 கீமி நடக்க வேண்டும். பாதுகாப்பான பாதையில் நாம் போய்க்கொண்டிருந்தாலும் இருபுறமும் உயர்ந்த மரங்களூம் பசுமையான செடிகளும், இருப்பது ஒரு காடு எனபதைச்சொல்லுகிறது. காபி பழங்கள் பழுக்கத்தொடங்கி விட்டதால் ஒரு வினோதமான மணம். தாக்குகிறது. சற்று அருகில் நீர் வீழ்ச்சியின் சத்தம், நம்மை ஈர்க்கிறது. நெருங்கியபோது ஒரு அழகான அருவி. பளிரென்ற வெள்ளியாக நீர் பாய்ந்து விழுகிறது. சுற்றிலும் அருவியின் நடுவிலும் பசுமை. படர்ந்திருக்கிறது. பார்க்க ரம்மியமாக இருக்கிறது. பருவ மழை தொடங்கிவிட்டதால் பாறைகள் முழுவதையும் மறைத்து நீர் தாரையாகக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இதமான வானிலையும் இயற்கை சூழலும் நேரத்தை மறக்கச்செய்கிறது. நெருங்கும்போது சாரல் நீர்முத்துக்களைத் நம் மீது தூவுகிறது. எவருக்கும் குளிக்க அனுமதியில்லை


.
நல்ல வேளை இல்லாவிட்டால் நமது குற்றாலம் போல் அடுத்தவர் பூசிய எண்ணையை நாம் இலவசமாக வாங்கி வர வேண்டியிருக்கும். தமிழகத்தில் மட்டும் தான் இப்படி அருவிகளில் குளிக்க முடியும் என நினைக்கிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உலகின் சில நாடுகளிலும் அருவி என்பது பார்த்து ரசிக்க மட்டும்தான்.
இந்த அருவி கூட அரைநிமிட நிற்குமோ என்னவோ, ஆனால் செல்பி பிரியர்கள் கூட்டம் அலை அலையாக அதன் முன் வந்துகொண்டேயிருக்கிறது. அருவி 70 அல்லது 80 அடி உயரமிருக்கும். பக்கவாட்டில், பாதுகாப்பான தொலைவிலிருந்து பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். நேரடியாகப்பார்க்கும் ஒரு வசதியுடன் இருந்த தொங்கு பாலம் மிகவும் வீக் ஆகிவிட்டதால் மூடப்பட்டு இப்போது அதுவும் ஒரு காட்சிப்பொருளாக நிற்கிறது,

இதி அபி ஃபால்ஸ் என அழைக்கிறார்கள். யார் இந்த அபி எனத் தெரியவில்லை. மெடிக்கேரியிலிருந்து 8 கீமி தொலைவில் இருக்கிறது. குறுகிய பாதை என்பதால் கார்களுக்கு மட்டுமே அனுமதி. பஸ்ஸில் வருபவர்கள் 1 கீமி நடக்க வேண்டும் பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயேர் ஒருவரிடமிருந்து இந்த இடத்தை விலைக்கு வாங்கிய உள்ளுர்காரர் காபி தோட்டத்துக்காகச் சீரமைத்த போது “கண்டுபிடிக்கபட்டதாம்” இந்த அருவி. இப்போது அவரிடமிருந்து வன வாரியம் இடத்தைப்பெற்று இதை நிர்வகிக்கிறது. இந்த அருவி, காவிரியின் ஒரு சின்ன உப நதியிலிருந்து இங்கு விழுந்து கிழே மீண்டும் காவிரியில் இணைகிறது. என்றார்கள்.


நாம் அடுத்தப் போக வேண்டிய யானை கேம்ப்க்கு செல்லுமிடத்திலிருக்கும் கடைசி போட் 12 மணிக்கு என டிரைவர் நினைவு படுத்துகிறார். அருகில் இருப்பதால் நாளை மாலை நேரத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்க வருகிறோம் என்று அருவியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறோம்.
மெடிக்கேரியிலிருந்து 37 km தொலைவில் இருக்கிறது துபாரே(Dubarae) யானை முகாம். வனத்துறையினர் இங்கு யானைகளை வளர்க்கிறார்கள். காடுக:ளில் மரங்களைத் தூக்கை வரபழக்கப்படுத்தவும், மைசூர் தசரா ஊர்வலத்துக்குச் செல்லவும்பயிற்சி கொடுப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட கேம்ப் இது. இப்போது காடுகளில் யானைகளை வேலி வாங்குவது தடை செய்யப்ட்டுவிட்டதாலும்,  மைசூர் தசரா முன் போல ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவதில்லையாதலாலும் யானைகளை என்ன செய்வது தெரியாமல் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடக அர்சுக்கு நிஜமாகவே இவை ஒயிட் எலிபென்ட்கள் தான். இப்பபோது மனிதர்களுடன் பழகச்சொல்லிக் கொடுக்கிறார்கள்,. பழக்கபடுத்த பட்ட யானைகளையும் குட்டிகளையும் கோவில்களுக்கி விற்பனை செய்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா குருவயூர் கோவிலுக்குக் கொடுத்த யானை கூட இங்கிருந்து தான் என்பது தானாகக் காதில் விழுந்த தகவல்.

    






காவிரி இரு பிரிவாகப் பிரிந்து ஓடும் இடத்தில் நடுவில் இருக்கும் ஒரு தீவு மாதிரியான இடத்திலிருப்பதால் படகில் போக வேண்டும். தூரம் அதிகம் இல்லை ஒடும் காவிரிநதிக்கிடையில் மரங்களும் பசுமை திட்டுக்களும் இனிய காட்சியாக இருக்கிறது, படகு சேருமிடத்தில் கேம்ப்பில் இருக்கும் யானைகள் குளிக்க வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் 3 பேர் டீம். அவர்கள் மஹாரஜாக்கள் போல அதன் மீது உட்கார்ந்து வருகிறார்கள். நீரில் அவர்கள் சொல்வது போல எல்லாம் திரும்பிக் காட்டி தேய்த்துவிடும் சுகத்தை அனுபவித்து குளிக்கிறது யானைகள். பலர் பார்க்கிறார்களே என்ற வெட்கமே தும் இல்லாமல் சந்தோஷமாகக் குளிக்கின்றன. நாம் அருகில் சென்று பார்க்கலாம் பாகன் அனுமத்திதால் யானைக்குத் தேய்த்துக்கூட விடலாம். ஒவ்வொரு யானைக்கும், நீ குளித்தது போதும் என்று அதன் பாகன் சொன்னதும் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறது. நான் நிறைய படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததால் சந்தோஷமோ அல்லது கோபமோ தெரியவில்லை அருகிலிருந்த என மனைவிமீது துதிக்கையிலிருந்த நீரைப் பீச்சி குளிபாட்டி விட்டது. ஒரு யானை. நீங்கள் மிகவும் லக்கி என்றார்கள் அங்குள்ளவர்கள். கேமிரா தப்பியது தான் லக்கி என நான் நினைத்துக்கொண்டேன்

குளித்தபின் இந்த யானைகள் சென்று நிற்கும் இடத்திலிருக்கும் 3 அடி உயர சுவர்தான் அவைகளுக்கும் நமக்கும் இருக்கும் ”அரண்” சில இடங்களில் அவைகல் அரை வினாடியில் தூக்கி ஏறியக்கூடிய மரக் கம்புகள் தான் வேலி. யானைகளின் அருகில் தந்தங்களை தொட்டுபார்க்கலாம். ஒரு ஒற்றை கொம்பனை மிகஅருகில் பார்த்தோம். வயதாகிவிட்டதால் அதற்குப் பார்வை மங்கி வருவதாக அதன் காப்பாளர் சொன்னார். யானைகளுக்குக் கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்வார்களா? யானை டாக்டர் எழுதியிருக்கும் ஜெயமோகனிடம் கேட்க வேண்டும்.
12 மணிக்கு மேல் அங்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை. சாப்பாட்டுக்குபின் யானைகள் காட்டுக்குள் போய்விடுமாம். இனி நாளைகாலைதான். மழையிருந்தால் குளியல் கிடையாது. அந்தக் காட்டுக்குள் ஒரு ஃபாரஸ்ட் லாட்ஜ் இருப்பதாகவும் வெளிநாட்டு பயணிகளூம், ஆராய்ச்சியாளர்களூம் தங்குகிறார்கள் என்று ஒரு வெளிநாட்டு தம்பதியுடன் வந்திருந்த கைடு சொன்னார். அவர்களை லாட்ஜுக்கு யானைமீது அழைத்துச் செல்வார்களாம்
.
திரும்பும்போது நதியில் நிறைய ராப்ட் போட்களை- பலூன்போல் காற்றடைத்து செல்லும் படகுகள்- பார்த்தோம். காவேரி சீறிப்பாயும் காலத்தில் இதில் பயணத்து அருகிலிருக்கு இடத்துக்கு நீரோட்டத்துடன் செல்வார்களாம். இந்தத் திரில் பயணத்துக்குக் கட்டணம். கைடு உண்டாம். அங்கிருந்து நதியை எதிர்த்து வரமுடியாத்தால் படகுகளும், பயணிகளும் லாரியில் இங்கு திரும்புவார்களாம் அடுத்தமுறை திட்டமிட்டு வந்து இதைச் செய்து பார்க்க வேண்டும்.

2 கருத்துகள் :

  1. Some informations:
    The falls was earlier called Jessi falls, named after a British officer's wife. However, the place was a thick jungle area back then. Years later, the waterfall was discovered by Mr. Neravanda B.Nanaiah who bought the place from the government and converted it into a coffee and spices plantation that surrounds the waterfall today.

    The Dubarae elephant camp and the Abby Falls are in opposite directions from Madikeri town and not nearby.

    please give credits to the photos published in the article.

    Hope next issue would be about "Kushal Nagar" Buddha !!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்