30/5/18

கடவுளின் வீடு



அது அழகான இடம் அவசியம் பார்க்கவேண்டிய ஒர் இடம். தவறவிடாதீர்கள். அந்தப் பயணத்தையும், இடத்தையும் வாழ்நாளில் மறக்கமாட்டீர்கள் என்றார் நண்பர். அங்குள்ள இயற்கையின் எழிலில் மயங்கி அவர் ஒவ்வொரு ஆண்டும் அங்குச் சென்று ஓய்வெடுப்பதையும் சொல்லி ஆவலை அதிகப்படுத்தினார். அவர் சொன்ன இடம் விசாகபட்டினத்திலிருந்து 120 கீமி தொலைவிலிருக்கும் அரக்கு பள்ளதாக்கு.

ஆந்திர-ஒடிஸா எல்லைப்பகுதியிலிருக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் இந்த அரக்கு வேலி என்றழைக்கப்படும் பள்ளதாக்கு. ஆந்திர மாநிலத்துக்கு இயற்கை அளித்திருக்கும் கொடையான இந்த அழகான பள்ளதாக்குக்கு ரயிலில் சென்று மறுநாள் பஸ்ஸில் திரும்ப ஆந்திர மாநில சுற்றுலாத்துறை. ஒர் இரவு தங்க, உணவு வசதிகளுடன் பேக்கேஜ் டிக்கெட் தருகிறார்கள்
.
பல காலமாக இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு பகல் நேர பாஸன்ஞ்சர் தொடர் வண்டியில் கடந்த ஆண்டு ஒரு ஏசி சேர் காரை இணைதிருக்கிறார்கள் இது அழகான இயற்கை சூழலை ரசித்துப் பார்த்துக்கொண்டேசெல்லவதற்கென்றே வசதியாக அமைக்கப் பட்ட பெட்டி. இருபுறமும் பளிச்சென்று தெரியும் வெளிப்புற காட்சிகளைப் பார்க்க பெரிய கண்ணாடி ஜன்னல்கள். வசதியாகத் திருப்பிக்கொள்ளும் சீட்டுகள். கண்ணாடி ஜன்னல்களுடன் கூடிய மேற்கூரை. பிரமாதமாக இருக்கிறது
.
நண்பர் சொன்னது மிகச்சரியான வார்த்தைகள் என்பதை தொடர் வண்டி புறப்பட்ட ஒன்றை மணியில் உணர்கிறோம். 13400 மீட்டர் உயர மலைப்பகுதிக்கு மெல்ல ஏறுகிறது. இரண்டு புறமும் பசுமை அடர்ந்த காடு, தொலைவில் கருநீலவண்ணத்தில் மலைச்சிகரங்கள். அதைத்தொட்டுச் செல்லும் மேக கூட்டங்கள் சட்டென்று காட்சி தரும் அருவிகள். சில இடங்களில் மெல்லிய தூறல் என அற்புதமான காட்சிகள். கண்ணாடி மேற்கூரையில் வானமும் நமது தொடர் வண்டியைப் பார்த்துக்கொண்டு செல்லும் பறவைகளும் கூட அவ்வப்போது தெரிகிறது.வண்டியினுளிருக்கும் டிவி திரையிலிருந்து எழும் மெல்லிய இசை சுழலுக்கு மேலும் இதம் சேர்க்கிறது.

மலைப்பகுதியில் பயணிக்கும்போது இடது புறம் பசமையான பள்ளதாக்கும் வலது புறம் சிறிதும் பெரிதுமாக அருவிகளும் நம்மை அசத்துகின்றன. 5 மணி நேரத்தில் 58 குகைகளையும் 84 பாலங்களையும் கடக்கிறது. தொடர் வண்டி. சில குகைகள் மிகப் பெரிது. இருள் சூழுவதால் குகைகளுக்குள் நுழைந்தவுடன் வண்டியின் உள்ளே விளக்குகள் எரிகிறது அந்தக் குகையின் நீளம் உயரம் பற்றிய விபரங்கள் ஒலிபெருக்கியில் கேட்கிறது. சில இடங்களில் தொடர் வண்டிகீழ் நோக்கிசென்று பின்னர் மேலேஏறுகிறது. இந்தக் குகைகள் பாலங்கள் தவிர பள்ளதாக்கின் கணவாய்களிலும் செல்லுகிறது எனப் புரிந்துகொள்கிறோம். சில இடங்களைக் கடக்கும் போது இந்த ரயில் பாதை குகைகளைச் சில திரைப்படங்களில் சண்டை கட்சிகளில் பார்த்த நினைவு வருகிறது
பல இன்னல்களுக்கடையே பல ஆயிரக்காணக்கான மனிதர்கள் கடும் உழைப்பில் பாலங்களும், குகைகளுமாக உருவாகியிருக்கும் இந்தத் தொடர் வண்டிப்பாதை உருவானதற்கு காரணம். சட்டிஸ்கர் மாநில நிலக்கரி சுரங்களிலிருந்து நிலக்கரி மற்றும் தாதுக்களை நேரடியாக விசாகபட்டணம் ஏற்றுமதிக்காகத் துறைமுகத்துக்கு கொண்டுவரவும் விசாகப் பட்டின உருக்காலையில் பயன்படுத்தபடுவதற்கும் தான்.
இன்றும் அந்தப்பணி தொடரும் நிலையில், ஆந்திர சுற்றுலாத்துறையில் யாரோ ஒரு புண்னியவானுக்கு, இந்தப்பாதையில் செல்லும் ஒரு பாஸஞ்சர் வண்டியில் இப்படியொரு கோச்சை அமைத்து டூரிஸ்ட்களை கவரும் யோசனை பிறந்து அது செயலாக்கவும் பட்டிருப்பது நமது அதிர்ஷ்டமே
.
சிடம்பள்ளி என்ற இடத்தில் நீண்ட குகையைக்கடக்கும்போது குகையின் முடிவில் வரும் அருவியைக் காணத்தவறாதீர்கள் என்ற அறிவிப்பு கேட்கிறது. காத்திருக்கிறோம். மெல்ல வளைவில் செல்லும் தொடர் வண்டி அந்த அருவியில் சற்று நனையுமளவுக்கு அருகில் அந்த அருவி. கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்ப்பதால் அருவியின் ஓசையக் கேட்க முடியவில்லையென்றாலும் உணர்கிறோம்
.
போரா குலாவு (BORRAGUHALU) என்ற நிலையத்தில் நிற்கும் வண்டியிலிருந்து இறங்கி போரா குகைகளைப் பார்க்கச் சுற்றுலா பேருந்தில் பயணிக்கிறோம். ஒடிசா மொழியில் போரா என்றால் பெரிய துளை என்றும் குலாவு என்றால் குகை என்றும் பொருள்.
ஒரு பெரிய மலையின் உச்சிப்பகுதிக்கு ஏறிப் பின் அங்கிருக்கும் ஒரு பெரிய வாசலின் வழியே கிழே இறங்கி அந்தக் குகைகளைப் பார்க்க வேண்டும்.
அந்தக் குகையின் உட்புறம் முழுவதும் மேலிருந்து உருகி வழிந்து உறைந்தது போல விழுதுகளாகவும் பல வடிவங்களில் பிம்பங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது
.
மிகப்பெரிய அளவில் பரந்திருக்கும் அந்தக் குகையின் உள்ளே வெவ்வறு உயரங்களிலிருக்கும் இயற்கையாகப் படந்திருக்கும் இவைகளின் மீது பல வண்ணங்களில் எல்இடி விளக்கு ஓளிகளைப்பாய்ச்சி காட்டுகிறார்கள். ஒரிடத்தில் கிட்டதட்ட லிங்க வடிவிலிருக்கும் பாறையில் அண்மையில் பூஜித்து வழிபட்ட அடையாளங்கள்

சுண்ணாம்புக்கற்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் இப்படி இயற்கை குகைகள் இருக்கும். அப்படிப்பட்ட குகைகளில் நீரில் இருக்கும் ஹூமிக்(HUMIC) அமிலத்தினால். சுண்ணாம்புக்கற்களுக்குள் இருக்கும் உப்புப்படிவங்கள் கரைந்து உள்நோக்கி செல்வதனால் இப்படிப்பட்ட குகைகள் உருவாகின்றன.  சில் இடங்களில் நீர் கசிந்து கொண்டிருக்கிறது.  இப்படி உருவான இந்தக் குகையை 1807 வில்லியம் கிஞ் ஜார்ஜ் என்ற ஆங்கிலேயே சர்வேயர் கண்டுபிடித்துபதிவுசெய்திருக்கிறார் என்கிறது பூவியல் சரித்திரம்.
 இந்தக்குகைகளின் வயது 15கோடி வருடங்கள். இங்கு 15000 ஆண்டுகளுக்கு மனிதன் வசித்தற்கான அடையாளங்களை ஆந்திர பலகலைகழக ஆராய்ச்சி கண்டுபிடித்திருப்பதைச்சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது சுற்றுலாத்துறையின் தகவல் பலகை.

ஆனால் உள்ளூர் பழங்குடி கைடு சொன்ன கதை சுவாரஸ்யமானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மேய்ந்து கொண்டிருந்த தன் மாடு ஒன்றை காணோம் என்று தேடிக்கொண்டுவரும்போது இந்த இடத்தைப் பார்த்ததாகவும் அந்தப் பெரிய பொந்துக்குள் ஆழத்தில் விழுந்த அந்த மாட்டுக்கு எந்த ஆபத்தும் நேராத அதிசயத்தை வியந்து உள்ளே  இறங்கிச்சென்று பார்த்தபோது அங்கே சிவ லிங்கம் இருந்ததைப் பார்த்தாகவும் அது முதல் இது சிவன், பார்வதி வினயாகர் வாழும் கடவுளின் வீடு  என்று தங்கள் இனத்தவர் நம்புவதாகவும் சொன்னார். பொறுமையாக நீங்கள் உற்று கவனித்தால் அந்தப் படிமங்களில் கடவுளரின் உருவங்களைப் பார்க்கலாம் என்றும் சொன்னார்

இந்தக் குகைகளிலிருந்து 20 கீமி தொலைவில் அழகான அருவி அருகில் ஆந்திர சுற்றுலாத்துறையினரில். மிக ரசனையுள்ளவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து விடுதியை கட்டியிருக்கிறார்கள் 
.
திரும்பும் பயணத்தைச் சுற்றூலாத்துறையின் பேருந்தில். தொடர்கிறோம் தொடர் வண்டிப்பயணத்தில் பார்க்க முடியாத இந்தப்பள்ளதாக்கின் அழகிய மறுபக்கத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டே வருகிறோம் இருபுறமும் கனண்ணுக்கெட்டிய வரை கண்ட காடு. காபி தோட்டங்கள். பசும் புல்வெளிகள் காட்சிகள் எல்லாம் மெல்ல  பரபரப்பான சாலைகளாக மாறியது   நாம் விசாகபட்டிணத்தை நெருங்கிறோம் என்பதைச் சொன்னது.


21/5/18

ஒரு இணைய தள வியாபார நிறுவனத்துக்கு இத்தனை கோடிகளா?





இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களுரில் ஒரு இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் துவக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம்1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) விலையில் விற்கபட்டிருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
உலகளவில் வர்த்தகத்திலிடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் கூட இந்தச் செய்தியைக் கேட்டு ஆச்சரியத்தில் அதிர்ந்தன.
விற்கபட்ட நிறுவனம் இந்திய இணைய தளமார்க்கெட்டிங் கம்பெனி பிளிப் கார்ட். வாங்கியிருப்பது உலகில் விற்பனையின் அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் பெரிய அமெரிக்க வணிக நிறுவனமான வால்மார்ட்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைசெய்கிறது. இவர்கள் எந்தப்பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மிகக்குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கி அதைத் தங்கள் இணையதளத்தின் மூலம், வெளி மார்க்கெட்டில் விற்பதைவிட குறைந்தை விலைக்கு விற்பனை செய்யும் ஒரு நிறுவனம். இந்தியாவில் இவர்கள் காலடிவைத்ததும் துவக்கபட்ட பங்களுரு அலுவலகத்தில் பணிக்குச்சேர்ந்தவர்கள் சச்சின் பன்சால், பின்னி. என்ற இரண்டு 22 வயது இளைஞர்கள். இருவரும் டெல்லி ஐ ஐ டியில் படித்தவர்கள். நல்ல சம்பளம் என்பதால் அமேசானில் வேலைக்குச்சேர்ந்தார்கள்.
ஓராண்டு பணிக்குப் பின்னர் இவர்களுக்கு எழுந்த எண்ணம் இந்தக்கம்பெனி செய்வதை நாம் ஏன் தனியாக ஒரு கம்பெனியை உருவாக்கிச் செய்யக் கூடாது? என்பது தான். உடனே வேலையை ராஜினாமாச் செய்து விட்டுச் செயலில்இறங்கினார்கள். ஒரு சிறிய இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் 4 கம்யூட்டர்களுடன் துவங்கப்பட்டது பிளிப் கார்ட். .  புத்தக் விற்பனையில் துவங்கி அமேசான் செய்யும் அத்தனையும் செய்வது என்ற முடிவோடு களமிறங்கிய இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை உலகில் எந்த நிறுவனமும் இதுவரை கண்டதில்லை

.2007ல் துவக்கபட்ட இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 20.8 கோடி டாலர்கள் (இது டாடா ஸ்டில் நிறுவனத்தின் மதிப்பைவிட இருமடங்கு). என உலகின் முன்னணி மதிப்பிட்டு நிருவனம் மதிப்பிட்டிருக்கிறது. துவக்க நிலை (Startup) வெற்றிபெற்ற நிறுவனங்களில் உலகின் 15 வது இடத்திலிருக்கிறது பிளிப் கார்ட்
.
இந்தப் பிளிப் கார்ட்டின் 77% பங்குகளை 1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) கொடுத்து வாங்கியிருக்கிறது. இதன் மூலம் இதில் மூதலீடு செய்தவர்கள், நிறுவன ஷேர்களை பரிசாகப் பெற்ற ஊழியர்கள் பெரும் லாபம் அடைவார்கள். மொத்த 10ஆயிரம் ஊழியர்களில் 3000 பேர் ஒரே இரவில் டாலர்களில் லட்சாதிபதிகளாகிவிட்டார்கள் இந்தக் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் அவரது 6% பங்குகளுகாக 6700 கோடிகள் பெற்றுகொண்டு வெளியேறுகிறார். மற்றொரு நிறுவனர் புதிய நிறுவனத்தில் தொடர்கிறார்.

இந்த நிலையை எப்படி இந்த நிறுவனம் அடைந்தது?.

உலக இணைய சந்தை ஆய்வு நிறுவனமான ஃபாரஸ்டர் கடந்த ஆண்டு இந்தியாவில் இணையதள விற்பனையின் மதிப்பு சுமார் 2,100 கோடி அமெரிக்க டாலராக (சுமார் 1,41,250 கோடி இந்திய ரூபாய்) இருந்தது. என்கிறது. இது சராசரியாகக் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 முதல் 15 % வரை உயர்ந்து வந்ததின் விளைவு. இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதால் இதைல் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருப்பதை அமேசானில் வேலை செய்யும் போதே கணித்து களத்தில் இறங்கியவர்கள் இந்த இளைஞர்கள்.
இவர்கள் இந்த இணைய தள வியாபாரத்தில் இந்தியர்களின் உளவியலைப்புரிந்து கொண்டு தங்கள் பிளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தினார்கள். ஆன்லைன் வர்த்தகத்தின் முக்கிய தேவை கிரிடிட், அல்லது டெபிட்கார்ட். அது அதிகம் பிரபலமாகத காலகட்டத்தில் இவர்கள் உங்கள் வீட்டுக்குப் பொருள் கொண்டுவந்து தருபவரிடமே பணம் தரலாம் என்ற புதிய முறையை உருவாக்கினார்கள். அதைத்தொடர்ந்து ஆர்டர் செய்த பொருளைச் சரிபார்த்த பின்னர் டெலிவரி செய்பவரிடமே பணம்தரலாம் சரியில்லை என்றால் பொருளைத் திருப்பிக்கொடுக்கலாம். என்ற அதரடி அறிவிப்புகளினால் நிறுவனத்தின் நன்மதிப்பும் விற்பனையும் பெருகியது.
10 கோடி வாடிக்கையாளார்களுக்கு கடந்த ஆண்டுமட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை ஆன் லைலனில் விற்றிருக்கிறார்கள்

தொடர்ந்த விரிவாக்கத்துக்கு அதிக மூதலீடுகள் வேண்டுமே அதை எப்படி சமாளித்தார்கள்.?

புதிதாகத் துவக்கபட்டு கடின உழைப்பாலும் சமயோசிதமான திட்டமிடலாலும் வளர்ந்து கொண்டுவரும் ஸ்டார்ட்அப் கம்பெனிகளைக் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன சில பன்னாட்டு வென்ச்ச்ர் கேப்பிட்டலிஸ்ட்  என்றா முதலீட்டு நிறுவனங்கள். இவர்கள் இம்மாதிரி கம்பெனிகளைப் பற்றி அறிந்து தங்கள் செலவில் அதன் எதிர்காலத்தை ஆராய்ந்து கணித்து முதலீடு செய்வார்கள். வாய்ப்புகள் வரும்போது தங்கள் முதலீட்டைபோலப் பல மடங்கை லாபமாகப் பெறுவார்கள். இவர்கள் தொழிலே இப்படி முதலீடு செய்வது மட்டும் தான். நஷ்டம் வந்தாலும் அவர்களுக்குத்தான். இப்படி பட்ட சில கம்பெனிகள் இந்தப் பிளப் கார்ட்டை கவனித்து தொடர்ந்து தங்கள் முதலீட்டைச் செய்து வந்தார்கள். இன்று இப்படி முதலீடு செய்த நிறுவனங்களுக்கு இந்த நிறுவனத்தை வால்மார்ட் வாங்குவதால் நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதில் 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிருவனங்களில் ஒன்று ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க். இன்று அவர்களின் பங்குகளுக்கு 4 பில்லியன் டாலர் பெறுகிறார்கள் அதாவது ஒரே ஆண்டில்  75% லாபம்.

வால் மார்ட் ஏன் இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குகிறது?

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் போட்டியைத்தவிர்க்க அமேசான் நிறுவனமே பிளிப் கார்ட்டை வாங்கப்போவதாக மார்க்கெட்டில் பேசப்பட்டுவந்தது. ஆனால் உறுதியானதகவல்கள் இல்லை
.
வால் மார்ட். அமெரிக்காவில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனம். பல நாடுகளிலும் பரந்துள்ளது சில்லறை வணிகத்தில் புதிய சாதனைகளையும் சரித்தரங்களை படைத்தவர்கள்.
மோடி அரசின் புதிய வணிகக்கொள்கைகளின் படி இந்தியாவிலும் பெரிய திட்டங்களுடன் சில்லறை வணிகத்தில் காலடி வைத்தவர்கள், சங்கலித்தொடராக 21 கடைகளைத் திறந்தார்கள். ஆனால் சந்தித்த எதிர்ப்புகளினாலும் அரசியலினாலும் சற்று மெதுவான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். பிளிப்கார்ட்டை வாங்கி இந்திய சில்லறை வர்த்தகத்தில் குறுக்கு வழியில் புகுந்துவிடலாம் என்ற அவர்களின் திட்டத்தின் விளைவே இந்த இந்திய மூதலீடு
.
இன்று வெற்றிகரமான் டீலினால் உலகத்தையே தங்களைப்பார்க்க வைத்த சச்சின் பன்ஸாலும், பின்னியும், துணிவுடனும் புதிய சிந்தனைகளுடன் ஸ்டார்ட் அப்களுடன் களமிறங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்

8/5/18

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கட்டிய கோவில்


சீனாவின் தென் கிழக்கில் இருக்கும் ஒரு தொழில் நகரம் குவான்ஷூ(QUANZHOU) இதன் அருகிலில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஒன்று சேடியன்.(CHEDIAN) கல்பாவிய.சிறிய சந்துகளும் முன் முற்றங்களுடன் கூடிய வீடுகளும், அது பல ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்தது என்பதைச்சொல்லும் சாட்சிகள். அங்குள்ள கல்யூன் என்ற புத்தர் கோவில் மிகப்பழமையானது.சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் புத்தமத்தினர் தினசரி ஆயிரகணக்கில் வந்து வழிபடும் ஒரு கோவில்.
அந்தப் பழமையான புத்தர் கோவிலில் இருக்கும் ஒரு பெ


ண் தெய்வத்தை உள்ளுர் மக்கள் தினமும் தவறாமல் அதன் முன்னேயிருக்கும் வாயகன்ற வெண்கலப் பாத்திரத்தில் நிரம்பியிருக்கும் மணலில் ஏற்றிய ஊதுவத்திகளைச் சொருகி பிராத்தனைகளைச்சொல்லி வழிபடுகிறார்கள்
.
அந்தப் பெண் தெய்வம் சீனாவின் பல இடங்களிலிருக்கும் “கியூனியன் தேவி”(GUANYIN)- போதிசத்துவரின் பெண் வடிவம் என்று உள்ளுர் மக்கள் கருதுகிறார்கள். நான்கு கைகளுடனும் அவற்றில் உடுக்கு, ஆயுதம் ஏந்தி கால்கள் சப்பணமிட்ட நிலையில் இருக்கும் அந்தத் தேவியின் காலடியில் வேலால் தாக்கபட்ட நிலையில் ஒரு அரக்கனின் உருவமும் அருகில் இரு காவலர்களூம் நிற்கிறார்கள். அந்த தேவியின் வடிவம் சீனாவின் மற்ற இடங்களில் வழிபடப்படும் கியூனியன் தேவியின் உருவத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும் உள்ளுர் மக்கள் இது தேவியின் மற்றொரு வடிவாக இருக்கும் என நம்பி புத்தபிரானை வழிபடும் முன் இந்தச் சன்னதியையும் வணங்கிச் செல்கிறார்கள்.
இது சீனர்கள் வழிபடும் தெய்வமில்லை. இந்த இடத்திலிருந்த ஒரு பழமையான இந்துக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழர்க:ள் நிறுவி வழிபட்டு வந்த கோவில். அது கால போக்கில் புத்தர் கோவிலாகிவிட்டது. இது தெரியாமல் கிராம மக்கள் தொடர்ந்து ஒரு இந்து கடவுளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் லீ சான் லாங் என்ற ஆய்வாளார். புத்தர் கோவிலின் நுழை வாயிலில் இருக்கும் மேடையின் பக்க வாட்டில் வரிசையாகப் பல நிலைகளைலிருக்கும் நரசிம்மரின் உருவங்களையும் இந்தக் கோவிலின் சன்னதிக்கு முன்னிருக்கும் தூண்களில் இந்துபுராணக்கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் இருப்பதையும் சொல்லுகிறார்.
சேடியன் கிராமம் பல நூறாண்டுகளுக்கு முன்னர் சீனாவின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. சீனாவின் கடல் வாணிகத்தில் முக்கிய இடம்பெற்றிருந்த இந்த துறைமுகத்திற்கும் தமிழக கடல் நகரங்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கப்பலில் வந்த வணிகர்கள் இந்த நகரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நகரத்தில் இந்தக் கோவில் மட்டுமில்லை சுற்றுவட்டாரத்தில் பல கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது  இதுகுறித்து ஆய்வுகள் செய்யும் சீனப்பேராசியர்கள் குழு.
சாங் என்ற மன்னர் (கி.பி 960-)பரம்பரையும் தொடர்ந்து வந்த யூவான் (கிபி1279) மன்னர் பரம்பரையினர் சீனாவை ஆண்டுவந்த காலத்தில் இந்தத் துறைமுகத்திற்கு தமிழகத்திலிருந்து கப்பல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. அந்த வணிகத்தைக் கவனிக்க தமிழர்கள் பெருமளவில் குழுக்களாக இங்கு வந்து வசித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தச் சுற்று வட்டாரத்தில் இரண்டு பெரிய கோவில்களையும் பல சிறிய கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது வியூ வின்லாங் என்ற ஆராய்ச்சியாளரின் குறிப்பு. உள்ளூர்காரான இவர்தான் முதன் முதலில் இங்கு கண்டுபிடிக்கபட்ட ஒரு நரசிம்மரின் சிலையின் மூலம் அது தமிழ் நாட்டு கடவுள். என்றும் தமிழ்நாட்டுக்கும் இந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பைக் கணடுபிடித்து 1930களிலேயே சொன்னவர். தொடர்ந்த ஆராய அவர் கேட்ட நிதி கொடுக்கபடாததாலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களாலும் ஆய்வு தொடரப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரம்பரியப் பெருமை மிக்க சீன நகரங்களில் பெரிய அளவில் பல நகரங்களில் கருவூலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. அதில் ஒன்று கடல் வாணிகத்தில் முன்னோடியாக இருந்த சேடியன் நகரம். பண்டைய சீனர்களில் கப்பல்கட்டும் முறை கடல் வாணிகத்தில் அவர்கள் சென்ற கலங்களின்  மாதிரிகளுடன் விளக்க பெரும் பொருட்செலவில் ஒரு நவீன அருங்காட்சியகம் எழுந்தது. அதன் இரண்டாம் மாடியில் நகரத்தின் அருகில் கிடைத்த சிலைகள் சிற்பங்களை வைக்கவும் முடிவானது.
 அந்த சிலைகளும் சிற்பங்களும் அப்படியே அச்சு அசலாகத் தமிழக, ஆந்திர கோவில்களில் காணப்படும் சிற்பங்களாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சிலைகளின் பின்னணி தொடர்பான ஆய்வுகள் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து எழுந்திருக்கிறது.
எத்தனை கோவில்கள் இருந்து பின்னாளில் அழிந்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை ஆனால் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களிலிருந்து சிலைகள் எடுக்கப்பட்டிருப்பதால் பல கோவில்கள் இருந்திருப்பதாக நம்பப்படுகிறது என்கிறது அருங்காட்சியகத்தின் குறிப்பு அதலிருக்கும் வரைபடம். சிலைகள கண்டுபிடிக்கபட்ட இடங்களாக இந்த நகரைமட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களையும் காட்டுகிறது.
அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நரசிம்மர். யாளி சிவலிங்கம் காளி போன்ற பல சிலைகள். இருக்கின்றன. ஒரு யானை சிவலிங்கத்திற்கு நீர் சொறிந்து அபிஷேகம் செய்கிற காட்சி. கிருஷ்ணன், பின்னணியில் பாம்பு போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்ட தூண்கள் எல்லாமே கடல் கடந்து வந்த தமிழனின் சிற்பகலைக்கு சாட்சியாகயிருக்கிறது. சிலைகளின் கற்கள் உள்நாட்டு வகையாக இருப்பதால் தமிழக சிற்பிகள் வந்திருக்க வேண்டும் அல்லது வரையப்பட்ட படங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளூர்கலைஞர்களின் உதவியுடன் சிலைகள் வடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்களின், பல்கலைகழகங்களின் தொடர்ந்த ஆர்வத்தால் அருங்காட்சியகத்தில் “சீனாவிற்கும் தென் இந்தியாவிற்குமான 1000 ஆண்டுத் தொடர்பு” என்று ஒரு தனிப் பகுதியே நிறுவப்பட்டிருக்கிறது. சிலைகளுக்கும் கல்செட்டுக்களுக்கும் ஆங்கிலத்தில்  விளக்கமும் இருக்கிறது சிவலிங்கமும் யானையும் இருக்கும் சிற்பத்தின் மூலையில் ஒரு சிலந்தியின் உருவமும் இருக்கிறது. சிவனை பாதுகாக்க தினசரி அந்த சிலந்தி கட்டிய வலையை யானை அபிஷனக்தினால் கலைத்து விட்டுக்கொண்டேயிருந்ததால் அந்த சிலந்தி கோபமுற்று யானையின் துதிக்கைக்குள் நுழைந்து அதைக்கொன்று விட்டது என்ற கதையை அருகிலிருக்கிறது
.
அருங்காட்சியகத்திலிருக்கும் கல்வெட்டுக்களில் அன்றைய தமிழ் எழுத்துக்களில் இருப்பதின் ஆங்கிலவடிவம் அருகில் வைக்கபட்டிருக்கிறது. அதில் ஒன்று இது.
ஹரனுக்கு நமஸ்காரம். எங்கும் வளம் நிரம்பியிருக்கட்டும். சித்திரை மாதத்தில் சித்தரை நாளான்று 1203ஆம் வருடம் தவசக்கரவர்த்தி சம்மந்த பெருமாள் ஆசிபெற்று மன்னர் செக்காச்சி கான் எழுத்தில் தந்த அனுமதியுடன் உடைய நாயினாரின் உருவம் மன்னரின் நலத்துக்காகப் பிரதிஷ்டை செய்யபட்டது
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் 2000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஒரு தேசத்துக்குத் தமிழையும் தன் கடவுளையும் கொண்டுசென்றுஅங்குஅதை நிறுவியிருக்கிறான் அது இன்ரும் வழிபடப்படுகிறது  என்பதையறியும்போது   வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது




70 வது மணநாளைக்கொண்டாடிய அரசி








உலகின் மிகச்சிறந்த பாராளுமனற நடைமுறைகளை உருவாக்கிப் பாராளுமன்ற ஜனநாயகத்தை கடைப்பிடித்தாலும் இங்கிலாந்து நாட்டின் தலைவர் அதன் அரச பரம்பரையில் வந்திருக்கும் அரசி இரண்டாம் எலிசபெத் தான்.

இம்மாதத்தில் (பிறப்பு ஏப்பரல் 21 1926) இவரது 92 வது பிறந்த நாளைக்கொண்டாட லண்டன் தயாராகிக்கொண்டிருக்கிறது நகரின் பெரிய கட்டிடங்களில் வண்ண விளக்குகளில் வாழ்த்துச்செய்திகள் மின்னுகின்றன.  .அரசி அன்று என்ன வண்னத்தில் உடையணிவார். அவரது கணவர் என்ன பரிசு கொடுக்கபோகிறார்? போன்ற கட்டுரைகளைப் பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மறைவுக்குப் பிறகு 1952ம் ஆண்டு, இரண்டாம் எலிசபெத் மகாராணி ஆனார். இவர். அன்று தொடங்கிய மகாராணி வாழ்க்கை, இன்றும் தொடந்து இங்கிலாந்து வரலாற்றில் நீண்ட காலமாகத் தொடரும் மகாராணி என்னும் பட்டத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் நீண்ட நாள் அரசியாக இருந்தவர் அரசி விக்டோரியா. இந்தியாவை இங்கிலாந்து ஆண்டுகொண்டிருந்த காலங்களில் இந்திய அரசியலில் நிகழ்ந்த பல திருப்பு முனைகளுக்குக்காரணமாகயிருந்தவர் விக்டோரியாஅரசி.  தொடர்ந்து 63 ஆண்டுகள் அரசியாக இருந்தவர். அந்தச் சாதனையை சில ஆண்டுகளுக்கு முன் முறியடித்தவர் இங்கிலாந்தின் இன்றைய அரசி இரண்டாம் எலிசபெத்.   இந்த ஆண்டுடன் அவர் அரசியாகி 65 ஆண்டுகளாகிறது
.
அரசரின் குடும்பத்தில் பிறந்த முதல் பெண்குழந்தையான இவர் இங்கிலாந்தின் அடுத்த வாரிசு என்று அறிவிக்கப் பட்டபோது இவருக்கு வயது. 14.    பிறந்தபோது அவரது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோர்களின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலக்ஸான்ட்ரா மேரி என்ற நீண்ட பெயர் சூட்டப்பட்டது. குடும்பத்தினரால் சூட்டப்பட்ட செல்லப்பெயர் லில்லிபெத். ஆனால் அரசியாகப் பட்டம் சூட்டப்பட்டபோது அறிவிக்கப்பட்ட பெயர். எலிசபெத். ஏற்கனவே அந்தப்பெயரில் ஒர் அரசி இருந்ததால் இரண்டாம் எலிசபெத் என்றழைக்கப்படுகிறார்.
லண்டனில் 1947ம் ஆண்டு, நவம்பர் 2௦ம் தேதி, இங்கிலாந்து இளவரசி எலிசபெத் கடற்படை அதிகாரி பிலிப்பை திருமணம் செய்துக்கொண்டார். இது காதல் திருமணம். இந்தத் தம்பதியினர் கடந்த ஆண்டு தங்களது 70 வது திருமண ஆண்டுவிழாவை மிக எளிய முறையில் கொண்டாடினர். 70 ஆண்டுகள் கடந்த பிறகும், தற்போது 91 வயது அரசி எலிசபெத்தும் 96 வயது பிலிப்பும் இன்றுவரை சிறந்த தம்பதியினராகவே வாழ்ந்து வருகின்றனர்

இங்கிலாந்தின் ராணி என்று அறியப்பட்டாலும் மேலும் 16 சிறு நாடுகளுக்கு அரசியாகயிருப்பவர் இவர்.  அந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையீடுவதில்லை என்றாலும் இவர் தான் அந்த நாடுகளின் சட்டபூர்வமான அரசி. இதைத்தவிர இந்தியா உள்பட 54 நாடுகள் உருப்பினர் நாடுகளாக இருக்கும் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவியும் இவர்தான்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகநாடுகளில் நிகழந்த பல அரசியல் மாற்றங்களுக்குச் சாட்சியாக இருக்கும் இந்த அரசி காலத்திற்கேற்ப பக்கிங்ஹாம் அரண்மனையின் நிலைப்பாடுகளைத் துணிந்து மாற்றிஅமைத்தவர். பல வரலாற்று சிறப்பு மிக்கபயணங்களையும் சந்திப்புகளையும் நிகழ்த்தியவர். அதில் முக்கியமானது அயர்லாந்து பயணம். நீண்ட நாட்களாக எந்த இங்கிலாந்து அரசரோ அல்லது அரசியோ செய்யாத அந்தப்பயணத்துக்கு பின்னர் இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு மலர்ந்தது. அதேபோல் தனது ஆளுகைக்குட்பட்ட சிறு நாடுகளில் குடியரசுமுறை வளரக் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்த மாற்றங்களை, அதிகார பகிர்வுக்கான மாற்றங்களை வரவவேற்று ஆதரித்தவர், கனடா நாட்டின் அரசியலில் நிகழ்ந்த மிகப் பெரிய அரசியல் மாற்றமான கனடிய அரசியல் சட்டத்தின் திரும்பப்பெறுதல் போன்றவைக்களுக்கு ஆதரவு தந்தவர்
.
வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்களை மிகத்திறமையுடன் இங்கிலாந்து சந்திக்க நேர்ந்ததும் இவரது ஆட்சிகாலத்தில் தான்.
சுருக்கமாகச் சொல்லுவதானால், பரவலான அதிகாரங்கள் கொண்ட மன்னராட்சி முறை உலகில் மெல்ல மறைந்து போகும் என்பதை உணர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் அரசி இவர்.

பிள்ளைகளின் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் போன்ற சந்தோஷமான விஷயங்களை சந்தித்திருக்கும் இந்த அரசி ஒரு குடும்பத்தலைவியாகச் சோகங்களையும் சந்தித்திருக்கிறார்.

எலிசபெத் பிலிப் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். மூன்று மகன்கள் ஒரு பெண். இதில் சிறப்பாக நடைபெற்ற இளவரசர் சார்லஸ் டயானா திருமணம் முறிவில் முடிந்தது. அதேபோல் இளவரசி ஆனின் திருமணமும் முறிவில் முடிந்தது. தொடர்ந்த சில ஆண்டுகளில் மூன்றாவது மகன் ஆண்ட்ரூவின் திருமணமும் மணமுறிவில் முடிந்தது.  பொதுவாக இங்கிலாந்து அரச குடும்பங்களில் மண முறிவுகள் நடப்பதில்லை. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த மரபுகள் தன்காலத்தில் மீறப்பட்டிருப்பதில் அரசியாருக்கு ஆழந்த வருத்தம்
.
இந்த வயதிலும் திட்டமிட்டபடி உடற்பயிற்சி, அரசுப்பணிகள் பாராளுமன்ற கூட்ட துவக்க நாள் நிகழ்ச்சி எனச் சுறுசுறுப்பாக  இயங்கி ஆச்சரியப்படுத்துகிறார்.
விக்டோரியா அரசியின் நீண்டநாள் அரசி என்ற சாதனையை இவரது ஆட்சி முறியடித்தபோது இங்கிலந்து பாரளுமன்றம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக ஒரு விசேஷ கூட்டத்தைக் கூட்டியது அதில் அன்றைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் தெரிவித்த வாழ்த்து



“ நிலை மாறும் உலகில் நிலையான ஆட்சி செய்யும் மகாராணி”