23/9/18

அழியும் ஆபத்திலிருக்கும் ஆரண்முளா கண்ணாடிகள்


 




வரலாறு காணாத பெரும் இயற்கை சீற்றத்தின் விபரீத விளைவுகளினால் கேரளத்தில் மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளானது பல நதியோர கிராமங்கள்தான். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மெல்ல மீண்டுகொண்டிருக்கின்றனர்.
இப்படிப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று பம்பா நதிக்கரையிலிருக்கும் அழகான ஆரண்முளா கிராமம். பல கிரமங்களைப் போல வீடுகளையும் உடைமைகளையும் இழந்த இந்தக் கிராம மக்களின் துயரம் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபட்டது. இவர்கள் தங்கள் மண்ணை இழந்தற்காகப் பெரிதும் கலங்கியிருக்கிறார்கள். மண் என்றால் அவர்களது நிலமில்லை. அவர்கள் சேமித்த பாதுகாத்து வந்த ஒரு வகை மண்.
அப்படி அந்த மண்ணில் என்ன விசேஷம்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கிராமத்தின் சரித்திரத்தையும் அங்கு உருவாகும் ஒரு கைவினைப் பொருளின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சபரிமலைக்குப் பயணம் செய்யும் பலரும் முதலில் அதற்கு 75 கீமி முன்னிருக்கும் ஆரண்முளா பார்த்த சாரதியைத்தான் தரிசிப்பார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கொண்டப்படும் இந்தக் கோவிலில்தான்.
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கிய 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின்போது இங்கிருந்து அது ஊர்வலமாக மலைக்கு எடுத்தச்செல்லப்படும்.
இந்தக் கோவிலின் அருகில் வசிக்கும் இருபத்திரண்டு குடும்பங்களின் கலைஞர்கள் பரம்பரையாகச் செய்து வரும் ஒரு கைவினைப்பொருள் ஆரண்முளா கண்ணாடிகள். கண்ணாடி என்றால் நாம் சதாரணமாகப் பயன்படுத்தும் கண்ணாடிப் பலகைகளில் ஒருபுறம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிகள் இல்லை. இதில் கண்ணாடி என்ற பொருளே இல்லாமல் முழுக்க முழுக்க உலோகத்தால் ஆன கண்ணாடி. இந்தத் தயாரிப்பு முழுவதும் கைவினைக்கலைஞர்களால் எந்த இயந்திர உதவியும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. கேரளத்தின் கதகளி போல இந்தக் கண்ணாடிகள் மிகப்பிரபலமான ஓர் பாரம்பரியச்சின்னம்.
தமிழகத்திற்கு வரும் தலைவர்களுக்கும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் நமது கோவில், நடராஜர் உருவங்களை அரசின் சார்பில் பரிசளிப்பதைப் போல, கேரளாவில் அவர்களின் பாரம்பரிய சின்னமான இந்த ஆரண்முளா கண்ணாடியைத்தான் வழங்குவார்கள். யூன்ஸ்கோ பாரம்பரிய கலையைப்போற்றும் கிராமம் என்ற கெளரவத்தையும், இந்தக் கண்ணாடிகளுக்கு உலகளவிலான புவிசார்பு குறியீட்டையும் வழங்கியிருக்கிறது.


காண்பதைப் பல ஆண்டுகளுக்குப் பளிச்சென்று காட்டும் இந்த ஆரண்முளா கண்ணாடி கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல கோவில்களிலும் ஆராதனைக்குப் பின்னர் தெய்வத்துக்குச்செய்யப்படும் உபசாரங்களில் முக்கிய இடம்பெற்றிருக்கும் ஒரு பொருள்.
இந்தக் கண்ணாடி உருவாக்கப் பயன்படும் உலோகத்தைத் தயாரிக்கும் முறை மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. வாரிசுகளுக்குமட்டும் சொல்லிக்கொடுக்கப்படும் இந்தப் பாரம்பரிய கலையைத்தொடர விரும்பாத வாரிசுகளுக்கு அந்தக் கிராமத்தில் இடம் இல்லை என்ற அளவில் ரகசியம் காக்கப்படுகிறது.


உலோகத்தைப் பளபளப்பாக்குவது என்பது கடினமான பணியில்லை என்றாலும் பல ஆண்டுகளானாலும் மங்காமல் தெளிவாகத் தெரியுமளவுக்கு எந்த எந்திர உதவியும் இல்லாமல் ஒரு உலோகத்தை உற்பத்தி செய்வதுதான் இந்தத் தொழிலின் சிறப்பு.
இந்தக் கண்ணாடிகள் சிறிய  வட்டவடிவில் வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கப் படுகிறது. பின்னர் அது ஓர் அழகான யானையின் முகம், சங்கு. மலர். போன்று தயாரிக்கப்பட்டிருக்கும் பல விதமான வெங்கல பிரேம்களில் பதிக்கப்படுகிறது.’ முதலில் கண்ணாடிகளின் அளவுகளுக்கேறப்ப வட்ட வடிவ அச்சு (மோல்ட்) உருவாக்கப்படுகிறது. இது ஒரு குடுவை போன்ற மற்றொரு அச்சினுள் பொருத்தப்படுகிறது. அந்தக் குடுவை அச்சின் மேல் பாகதத்தில் காரீயக் குண்டுகளும் வேறுசில பொருட்களும் இடப்படுகிறது. இந்த வேறு சிலபொருட்கள் என்ன என்பது தான் ரகசியம். இந்த மோல்டு மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகும் மண் அடுப்புக்களினுள் இடப்பட்டு இரண்டு நாள் முழுவதும் நெருப்பில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் அந்தக் காரீயமும் பொருட்களும் உருகி உள்ளிருக்கும் வட்டமான கண்ணாடிக்கான வடிவ அச்சில் பரவி ஒர் உலோகத்தகடாகிறது. பின்னர் அச்சு உடைக்கப்பட்டு அந்தத் தகடு வெளியே எடுக்கப்படுகிறது. அந்த உலோகத்தகடு ஒரு சதுர மரக்கட்டையில் ஓட்டப்பட்டு ஒரு வழவழப்பானதேக்குப் பலகையில் தொடர்ந்து கைகளால் ஆறு மணி நேரம் தேய்த்து, தேய்த்து பளபளப்பாக்கப் படுகிறது. இறுதியாகத் தலைமை சிற்பி தன் புருவம் தெளிவாகத்தெரிகிறதா என்று பார்த்தபின் அதைக் கண்ணாடியாக அனுமதிப்பார். இந்தக் கண்ணாடிகள் சதுர மரக்கட்டையிலிருந்து கவனமாகப் பிரிக்கப்பட்டுப் பிரேம்களில் ஓட்டப்படுகிறது. இதற்கான பசைகளையும் இவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.  கோவில்களுக்கு சன்னதியின் முன்னே நிறுத்த பெரிய அளவுகண்ணாடிகளையும் தயாரிக்கிறார்கள். அப்படி 5 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட ஒரு கண்ணாடி லண்டன் மீயூசியத்திலிருக்கிறது.














 


ஒவ்வொரு முறையும் தயாரிப்பைத் துவக்கும் முன்னரும் கண்ணாடிகளாக உருவான பின்னரும் பார்த்தசாரதி கோவிலில் பூஜைகள் செய்த பின்னரே விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகியிருக்கும் இந்தக் கண்ணாடிகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அதற்காக வைத்திருந்தைவகளும் இப்போது அழிந்துவிட்டன. இழப்பு 1.5 கோடி. ஆரண்முளா பாம்புப் படகு போட்டிகளைப்பார்க்க வரும் வெளிநாட்டுப் பயணிகளில் வழக்கமாக இங்கு தேடி வந்து வாங்க வருபவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது.



ஒவ்வொரு கண்ணாடியின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் கைவினைக்கலைஞர்களின் கடினமான, கவனமான உழைப்பு நிறைந்திருக்கும் இந்த ஆரண்முளா கண்ணாடி தயாரிக்கும் கிராமத்தினர் இந்த வெள்ளத்தில் ஒரே நாளில் அவர்களது இரண்டு மாத உழைப்பான 6000 கண்ணாடிகளை இழந்துவிட்டார்கள். “ வீட்டில் புகுந்த வெள்ளம் கண்ணாடிகளை அள்ளிக்கொண்டு போனது, மீட்க நீந்திப்போராடினேன் முடியவில்லை என்கிறார். தலைமை விஸ்வகர்மாவின் பேரன்.
இந்த ஆரண்முளா கலைஞர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக வழங்கி வரும் ஒரு செவி வழிச் செய்தியை அறிந்தபோது ஆச்சரியமாகியிருந்தது. இங்கிருக்கும் பார்த்தசாரதி கோவிலை நிர்மாணிக்கும் பணிக்கு வந்த பல தொழிளாளார்களில் தமிழ்நாட்டின் சங்கரன் கோவிலைச் சேர்ந்த சிலரும் வந்திருக்கிறார்கள். மன்னர் கோவில் பணிகளைப்பர்வையிட வந்தபோது வேலை செய்யாமல் இருந்த அவர்கள்மீது கடும் கோபம் கொண்டு பணியிலிருந்து அவர்களை நீக்கிவிட்டார். மன்னரைச் சமாதானப்படுத்தி மீண்டும் வேலையைப்பெற அவர்கள் அதுவரை யாரும் செய்யாத ஒரு பொருளை உருவாக்கிக் காட்ட தீர்மானித்தனர். அதன் விளைவாக ஒரு பளபளப்பான உலோகதகட்டை உருவாக்கி அதில் மன்னருக்கு ஒருகீரிடம் தயாரித்துக்கொடுத்தனர். அதைக்கண்டு வியந்த மன்னர் அதில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் தயாரித்துக் கோவிலுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன் விளைவாக எழுந்தது இந்தத் ஆரண்முளா கண்ணாடித் தொழில். அந்தத் தமிழர்களின் பரம்பரையினர் தான் இந்த விஸ்வகர்மாக்கள்.



தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள் வெள்ளத்தில் போனதைவிட இவர்கள் அதிகம் வருந்தி அழுவது தாங்கள் சேமித்த மண் கரைந்திவிட்டதற்காகத் தான். அடுப்புகளையும், அச்சுக்களையும் உருவாக்க இவர்கள் பயன் படுத்தும் மண்கலவை விசேஷமானது. நதிக்கரையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்படும் அந்த மண் பல முறை சலிக்கப்பட்டு அதனுடன் சில பொருட்கள் சேர்க்கப்பட்டுச் சேமிக்கப்படும். அந்தச் சேமிப்பு பல ஆண்டுகள் உழைப்பில்  உருவானது. அதிலிருந்து தேவையானபோது மட்டும் மண் எடுத்து அச்சுச் செய்துகொள்வார்கள். அந்த மண் குவியல் தான் இப்போது ஆற்று வெள்ளத்தில் அழிந்துவிட்டது. மழையில்லாத நாட்களில் தேர்ந்தெடுத்துச் சேமிக்கப்பட்ட அந்த விசேஷ கலவை மண்ணை மீண்டும் உருவாக்க ஒராண்டாகும் என்கிறார்கள். அதோடு காரீயகுண்டுகளுடன் கலக்கத் தயாரித்து வைத்திருந்த விசேஷ கலவைப் பொருளும் அழிந்துவிட்டது.


காலத்தால் அழியாத கண்ணாடிகளைப் படைக்கும் இந்தக் கிராம மக்களின் தொழில் அழிந்திருக்கிறது, ஆனால் அவர்கள் “எங்கள் பரம்பரைக்கு வாழ்வளித்த எங்கள் தெய்வம் பார்த்தசாரதிப் பெருமாள் இதிலிருந்தும் மீண்டுவர உதவுவார்” என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

7/9/18

காவேரியின் சிற்றம்.



நேற்றைக்கு (02/9/18) ஶ்ரீரங்க விஜயம். . காவேரியில் வெள்ளம் 80 சதவீதத்துக்குமேல் வடிந்திருக்கிறது. இனி அவசியமில்லை என்றாலும் கொள்ளிடத்தில் உடைந்த மதகு பாலத்தின் பகுதியில் மணல் மூட்டைகள் போட்டு அடைக்கும் வேலைத் தொடர்கிறது. எதிர்காலத்தேவையை எண்ணி எடுத்த வேலையை முடிக்கவேண்டும் எனச்செய்கிறார்களோ அல்லது . காவிரியிடமிருந்து அளவுக்கு அதிகமாக எடுத்த மணலைக் கொஞ்சமாவது திருப்பித் தந்து மன்னிக்க வேண்டுகிறார்களோ என்ற எண்ணம் எழுந்தது.
இந்தப் பாலத்திற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு, அது குறித்து அண்மையில் புதிய தலைமுறையில் எழுதியது இது

அண்மையில் காவிரியில் வெள்ளம் பெருகி நீர் கொள்ளிடத்தின் வழியே கடலில் சேருவதைப் பற்றிய செய்திகளும் அதன் உச்ச கட்டமாக முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்தனால் நீர்ப் பெருக்கு அதிகரித்த செய்திகள் வந்தன, இந்த முக்கொம்பு கதவணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தென்னிந்திய நீர்ப்பாசன தந்தையென அழைக்கப்படும் பிரிட்டிஷ் ராணுவ பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் இந்த அணையைக் கட்டினார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆர்தர்காட்டனுக்கு முக்கொம்பில் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவிரி கரூர் மாவட்டம் கொடுமுடியில் அகண்ட காவிரியாக மாறுகிறது. அகண்ட காவிரியிலிருந்து தண்ணீரைத் தடுத்து பாசனத்துக்காகத் திருப்பிவிடத் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கதவணை கட்டப்பட்டது. 
சர் ஆர்தர் காட்டன் இந்த அணையைக் கட்டியதின் பின்னே ஒரு சுவையான வரலாறு இருக்கிறது. அவர், கல்லணையைக் கட்டிய சோழ மன்னர் கரிகாற்சோழனின் கல்லணை கட்டுமானத்தை ஆராய்ந்து வியந்து அதே முறையைப் பின்பற்றித்தான் இதைக் கட்டியிருக்கிறார். (அதை அவரே தன் புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்). 
காவிரி ஆறு கொள்ளிடத்தில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று காவிரி, மற்றொன்று கொள்ளிடம்.. இந்த இரண்டு ஆறுகளுக்குமிடையே திருவரங்கத்தீவு இருக்கிறது. அத்தீவின் மேல் முனையில் அதாவது கொள்ளிடம் பிரியும் இடத்தில், கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்தைவிட 6 அடி உயரமாக இருக்கிறது. ஆகவே வெள்ளம் வரும்பொழுது மட்டுமே கொள்ளிடத்தில் நீர் செல்லும். பிற காலங்களில் காவிரியில் மட்டுமே நீர் போகும். 
ஆனால் இத்தீவின் கீழ்முனையில் கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்திற்குச் சமமாக உள்ளது.மேலும் கொள்ளிடத்தின் நிலமட்டச் சரிவு அதிகமாக உள்ளது. இவற்றின் காரணமாகத் திருவரங்கத்தீவின் கீழ்முனையில், வெள்ளம் வராத சாதாரணக் காலங்களில் கூட அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுக் காவிரியில் வரும் நீரும் கூடக் கொள்ளிடத்திற்கே வந்துவிடும். 
இதனால் காவிரியின் கீழ் உள்ள அனைத்து விளைநிலங்களிலும் அடிக்கடி நீர் இல்லாது போய்ப் பாசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.(இன்று பேசப்படும் கடைமடைப்பிரச்னை) இதனைத் தடுக்கக் கருதிய சோழ மன்னன் கரிகாலன், திருவரங்கத்தீவின் கீழ் முனையில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதியில் பெரும் பாறைகளால்ஆன கட்டுமானத்தைக் கட்டி காவிரியின் கரையைப் பலப்படுத்தி உடைப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தினான். அதன்மூலம் திருவரங்கத்தீவின் மேல்முனையில் காவிரிக்குப் பிரியும் நீர் வீணாகாது, எல்லாக் காலங்களிலும் பாசனத்துக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 
இந்த கட்டுமானம் தான் கரிகாலன் கட்டிய கல்லணை எனப் போற்றப்படுகிறது. ஆனால்கரிகாலன் காவிரிக்குக் குறுக்கே அணையைக் கட்டவில்லை, அவன் காவிரிக்குக் கல்லால் ஆன ஒரு கரைதான் அமைத்தான் என்பதே உண்மை. கல்லால் ஆன கட்டுமானத்தைக் கட்டி நீரைத்திருப்பி விடுவதை அணைக்கட்டு அல்லது கற்சிறை எனப் பழந்தமிழர்கள் குறிப்பிட்டனர். எனவே கரிகாலன் கட்டியது ஒரு கற்சிறை தான் இன்றைய மொழியில் சொல்லுவதானால் check dam. இந்த அணையில் கையாளபட்ட தொழிநுட்பத்தின் அடிப்படையில் தான் ஆர்தர் காட்டன் மேல்ணையை எழுப்பினார். அப்படி என்ன தொழில்நுட்பம் என்கிறீர்களா? :: 
ஆழங்காண முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டது. பாறைகளுக்கு அடியில் உள்ள மணல், ஆற்று நீரில் அரித்துச்செல்லப்பட்டதால் பாறைகள் மெதுவாக மணலுக்குள் இறங்கின. அவற்றின் மேல் களிமண் பூசப்பட்டு, அப்பாறைகளின் மேல் மீண்டும் பெரிய பாறைகள் வைக்கப்பட்டன. அதனால் கீழுள்ள பாறைகள் மேலும் ஆழத்திற்குள் புதைந்தன. பின் மீண்டும் களிமண் பூசப்பட்டு, பாறைகள் வைக்கப்பட்டன. கீழுள்ள பாறைகள் மேலும் புதைந்தன. கீழுள்ள பாறைகள் புதையப்புதையத் தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன. இறுதியில் கீழுள்ள பாறைகள் கடினத் தளத்தை அடைந்தவுடன், பாறைகள் இறங்குவது நின்று போனது. இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாக வைக்கப்பட்ட பெரும்பாறைகளும், அவற்றுக்கிடையேயான களிமண் பூச்சுகளும் இணைந்தே கல்லணை என்ற மகத்தான நீர் சிறை (அணை) உருவாகியது இந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திதான் மேலணையைக் கட்டியிருக்கிறார் ஆர்த காட்டன்.

இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சர் ஆர்தர் காட்டன் அவர்கள் 1874ம் ஆண்டுக் கோதாவரியின் குறுக்கே தௌலீஸ்வரம் என்ற அணைக்கட்டைக் கட்டினார். அது கோதாவரிச் சமவெளியை வளப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றது. நமது முல்லைப்பெரியார் அணைகட்டிய பென்னிகுக்கை நாம் கொண்டாவது போல் இவரை ஆந்திரமக்கள் கொண்டாடுகிறார்கள். தனக்குக் கிடைத்த பாராட்டுக்குக் காரணமான பழந்தமிழ் பொறியாளர்கள் குறித்து, அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் வாசகங்கள் இது. 
“ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை இவர்களிடமிருந்து (தமிழர்களிடமிருந்து) தான் தெரிந்து கொண்டோம். எங்களால் செய்து முடிக்கப்பட்ட ஆற்றுப்பாசனத் திட்டங்கள் தான் உலகின் பொறியியல் பணிகளில் முதன்முதலான மிகப்பெரியஅளவில் செலவழிக்கப் பட்ட நிதிசம்பந்தமான வெற்றிப் பணிகளாகும். இவ்வெற்றிக்கான ஒரே காரணம் யாதெனில் நாங்கள் இம்மக்களிடம் கற்றுக்கொண்ட அடித்தளம் அமைப்பது குறித்த பாடங்களே ஆகும். இம்முறையைக் கொண்டு ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுக்கள் போன்ற பல பாசனப் பொறியியல் கட்டுமானங்களை எளிதாகக் கட்டி முடித்தோம் (இவர் ஆந்திராவி. அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.” இந்த புத்தகம் 1874ல் எழுதப்பட்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்ப்ப் பட்ட மேலணை இன்று வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டது. . ஆனால் அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் எழுப்பிய, பல வெள்ளங்களைப் பார்த்த தடுப்பணை அசையாமல் இந்த வெள்ளத்தையும் பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.



comments from face book 



Comments
Panneerselvam Natarajan
Panneerselvam Natarajan அருமையான தகவல்
1
Manage
LikeShow more reactions · Reply · 3d
N.Rathna Vel
N.Rathna Vel இதில் ஆச்சரியம் என்னவென்றால் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்ப்ப் பட்ட மேலணை இன்று வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டது. . ஆனால் அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் எழுப்பிய, பல வெள்ளங்களைப் பார்த்த தடுப்பணை அசையாமல் இந்த வெள்ளத்தையும் பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. - முக்கொம்பு உடைப்பு பற்றி அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Ramanan Vsv
1


Ramanan Vsv replied · 1 Reply
Shahjahan R
Shahjahan R அட்டகாசமான கட்டுரை.
2

Shahjahan R
Shahjahan R பிரிட்டிஷ் அரசின் விமர்சனங்களையும் மீறி ஆந்திரத்தில் அணைகள் கட்டி, வேளாண்மைக்கு வழி செய்தவர் ஆர்தர் காட்டன். நாடெங்கும் பஞ்சத்தைப் போக்கும் வகையில் இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னவரும் அவர்தான். ஆந்திரத்தை நெற்களஞ்சியமா…See More
8

Ramanan Vsv
Ramanan Vsv சக்கரகாலன் நூல் ஆசிரியர் ஷாஜஹான் .
6

Vijay S Krishnan
Vijay S Krishnan பொதுப் பணித் துறை 
என்ன அருமையான துறை
1
Manage

Vidya Subramaniam அருமை சார்

Artist ArjunKalai
Artist ArjunKalai மனல் கொள்ளையால் சரிந்தது கொள்ளிடம் பாலம். மற்றும் அனை.

Maragatha Mani படிக்க படிக்க ஆச்சரியமும் கர்வமும் மேலோங்குகிறது. நம் முன்னோர் பொறியியல் துறை அறிவு ஆங்கிலேயர்கள் பிரமிப்புடன் ஏற்றுக்கொண்டார்கள். நாம் மாற்றான் பெருமை பேசி பொறியாளர் துறையை இன்று கேலி கூத்தாகி கொண்டிருக்கிறோம்.

Sridhar Sivaraman Perhaps Karikalan expected Manal kollai and did a better job and Sir Arthur Cotton did not anticipate????
1
M3d

Ramanan Vsv replied · 1 Reply
Moorthy Athiyanan
Moorthy Athiyanan தண்ணீர் தண்ணீர் .....உண்மையான சேவை மனம் இனிமேல் வருமா சார்.....மிகவும் சிறப்பு சார்.

Vadakovay Varatha Rajan வழமைபோல் புதிய தகவல் .பாராட்டுக்கள்

Suresh Kumar S படிக்கும்போது சுவை சேதமாகாத அளவில் வெள்ளமாய்ப் பாய்ந்த தகவல்கள். அருமை, சார். இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்ட காட்டன் போன்றோரும் இருந்திருக்கின்றனர்.

Muthuswamy Krishnamurthy
Muthuswamy Krishnamurthy Very informative.நயமான தமிழ் நடை.
Manage

Ramanan Vsv replied · 1 Reply
Ranganathan Ganesh
Ranganathan Ganesh காவேரியில் வெள்ளம் 80 சதவீதத்துக்குமேல் வடிந்திருக்கிறது.// அப்போ இன்னும் சில தினங்களில் வறட்சி ன்னு சொல்லுங்க!

Mohan Aru அற்புதமான கட்டுரை.
1

Vmapathy Dayanandhan Fantastic information.Thank u sir. Our TN Minister says something which unbelievable and unrealistic.
1

Vijayakumar Somasundaram அஹா.... அற்புதம்.

Nac Ramani Nacramani அருமையிலு ம் அருமையான தகவல்களை அள்ளி வழங்கி இருக்கிறீர்கள் , சார் . மிக்க நன்றி !!!
Manage
LikeShow more reactions · Reply · 3d
Manthiramoorthi Alagu
Manthiramoorthi Alagu அருமையான செய்தி.

Suresh Srinivasan அருமையான பதிவு...தகவல்களுக்கு நன்றி...
Manage
LikeShow more reactions · Reply · 3d
Mohan
Mohan எனக்கு கொள்ளிடத்தின் அக்கரையில் உள்ள உத்தமர்கோவில் தான் இருந்து வளர்ந்த ஊர்.
அந்த இடிந்த பாலம்
எங்களுக்கு எங்கள்…See More


Ramanan Vsv replied · 1 Reply
Sankara Narayanan Iyer
Sankara Narayanan Iyer Wow ! Super Write-up
1

Sita Thaniga
Sita Thaniga அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

Balrajerode Balraj
Balrajerode Balraj புதிய தகவல் நன்றி ஐயா

Rajendran S K அருமையான பதிவு. நன்றி.

Easwar Ramanathan அருமையான பதிவு..

Seralathan Manickam நல்ல பதிவு

Raman V Very Informative. Excellent.
Manage
L
Vipranarayanan Tirumalai அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி அழகாக தெரிவித்து இருக்கிறீர்கள்

Velayutham Muthukrishnan அருமையான பதிவு..! கரிகால் சோழ மன்னன் கட்டிய கல்லணையை மனதிற்கொண்டு முக்கொம்பு அணையையும் ஆந்திராவில் கோதாவரியின் குறுக்கேயும் அணையைக் கட்டி அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார் ஆர்தர் காட்டன். தற்கால கரிகாலர்கள் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார்கள். அந்தோ பரிதாபம்.
1