2/3/19

சர்ச்சைகளில் சிக்கும் புன்னகை அரசி



இதுவரை  உலகில் மனிதன் வரைந்ததிலேயே மிகச் சிறந்த ஓவியம்' என்றும், மிக விலை உயர்ந்தது என்றும் தினசரி பல ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது  என்று  வர்ணிக்கப்படுகிறது  பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகத்திலிருக்கும்
மோனாலிசா ஓவியம்

.அந்த மகத்தான ஓவியத்தை வரைந்தவர் இத்தாலியைச் சேர்ந்த ஓவிய மேதை  லியான்ட்ரோ டாவின்சி. இந்த ஓவியம் 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.500  ஆண்டுகளுக்குமேலாக போற்றப்படும் இந்த ஓவியம் பாராட்டுக்களைப் போலவே  தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.

இரண்டுமுறை திருடப்பட்டு தேடிக்கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை  இந்த ஓவியம். திருடியவரை இரண்டு ஆண்டுகள் கழித்து  கண்டுபிடித்தபோது அந்த இத்தாலியருக்கு கடும் தண்டனை எதுவும் கொடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தில்   “இந்த ஓவியம் எங்கள் நாட்டு ஓவியர் எழுதிய கலைச்செல்வம் அது பிரான்ஸில் இருப்பதை நான் விரும்பவில்லை.  எங்கள் தாய்நாட்டில் வைப்பதற்காகத்தான் திருடினேன்” என்று அவர் சொன்ன பதில் தான் காரணம்.  இரண்டாம் முறை திருட்டு சொத்தாக கைப்பற்றப்பட்டது ஆனால் திருடியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 


இன்று பல லட்சம் டாலர்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் செய்யப்பட்டிருக்கும் இந்த ஓவியம்  துப்பாக்கி குண்டுகள் துளைக்கமுடியாத கண்ணாடிகளால் பாதுகாக்கப்படுகிறது. 

-என்ன மாதிரியானது என்று கண்டேபிடிக்கமுடியாத அதன் புன்னகை தான் இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பாக ஓவிய வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  ஓவியத்தில்  உதடுகள் வரைந்திருக்கும் முறை,கண்களின் ஓரத்தில் செய்யப்பட்டிருக்கும் கருப்பு ஷேட் போன்றவற்றினால் அந்தப் புன்னகை தனித்துவம் பெற்றிருக்கிறது.  அந்தப் புன்னகை சொல்வது சந்தோஷமா? சோகமா? நையாண்டியா எனப் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது. 

லியான்ட்ரோ டாவின்சி  ஓவியர் மட்டுமில்லை கணிதம் விஞ்ஞானம்  அறிந்த மேதை. இவ்வளவு பெரிய அறிவாளியைக் கவர்ந்த, ஓவியமாகத் தீட்ட வைத்த முகம் யாருக்குச் சொந்தமானது, அது ஆணா, பெண்ணா? ஒருவேளை அது டாவின்சியாகவே இருக்குமோ? அதற்கு ஏன் புருவங்கள் இல்லை?  டாவின்சி  அந்த அழகுத் தேவதையை எங்குச் சந்திருப்பார்  எனப்  பல கேள்விகளும் அதற்குப் பதிலாக யூகங்களும் சர்ச்சைகளும் நீண்ட நாள் தொடர்ந்தன. இதற்கு முக்கிய காரணம் . டாவின்சி அவரது எல்லா ஓவியத்திலும்  ஏதேனும் குறிப்பை விட்டுச் சென்றிருக்கிறார் ஆனால் இதில் எதுவுமில்லை.

ஓவியத்திலிருப்பது  லிசா டெல் கியோகாண்டோ. அவர் , பிளாரன்டைனிலுள்ள பிரபல பட்டுவியாபாரி பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி என்கிறது ஒரு குறிப்பு. ஆனால் இதை ஏற்பவர்களைவிட மறுப்பவர்களே அதிகம்..


சில ஆண்டுகளுக்கு முன்  இத்தாலிய ஓவிய ஆராய்ச்சியாளர்  சில்வானோ வின்செடி என்பவர் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று  சொல்லி ஓவிய உலகத்தையே திடுக்கிட வைத்தார்.  அவர் தனது ஆய்வு முடிவில் உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோனாலிசாவுக்கு போஸ் கொடுத்தவர் கியான் கியாகோமோ காப்ரோட்டி என்னும் ஆண். அவர் சுமார் 20 ஆண்டுகளாக லியோ நார்டோ டாவின்சியிடம் உதவியாளராக இருந்தார். அவரை முன்மாதிரியாக வைத்துத் தான் மோனாலிசா வரையப்பட்டுள்ளது என்றார்..நீண்ட நாள் சர்ச்சையிலிருந்த இந்த  விஷயம் பின்னர் ஒய்ந்துவிட்டது. 

ஒவியம் எழுதப்படும்போது அந்த மாடல் கர்ப்பணியாக இருந்திருக்கிறார் என்பது அவரது கன்னங்களில் தெரிகிறது என்று கூட சொல்லப்பட்டது. இப்படி   ஒவியத்தின் சிறப்புகளைவிட அந்தமாடலைப்பற்றி பேசப்பட்டது தான் அதிகம் 

லியான்ட்ரோ டாவின்சியின் ஓவியங்களிலேயே மிக அதிகமான விலை மதிப்புள்ள ஓவியம் மோனாலிசா . இந்த ஓவியத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது.? 


.இந்த ஓவியத்தில்  மோனோலிசாவின் புன்னகை  எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.. “உண்மையிலேயே புன்னகை இருக்கும்-  ஆனா இருக்காது” டைப். புன்னகைப்பது போல் தோன்றும்- ஆனால் தோன்றாது.   பார்ப்பவர் மனசுக்கேற்றார் போல் மாறும் மந்திரப் புன்னகை.  

இந்தப் புன்னகையை  பல விதமாக  ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்.  .சற்றுத் தொலைவைவிலிருந்து  பார்த்தால், ஆங்கிளை மாற்றினால், வெறும் கண்களை மட்டும் பார்த்தால் புன்னகைப்பது போல் தோன்றும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  வரைந்த ஓவியர் லியோர்னோ டாவின்சி மிக சாமர்த்தியமாக இப்படித் தோன்றுவதற்காகவே வாய் அருகில் சிலவகையான கலர் டச் அப் கொடுத்திருக்கிறார் என்று  சொல்லுகிறார்கள் சில ஓவிய வல்லுநர்கள். ..  இந்த  ஓவியத்தை எங்கிருந்து பார்த்தாலும் மோனோலிசாவின் கண்கள் உங்களைப் பார்ப்பது போலிருக்கும் என்பது மற்றொரு சிறப்பாகச்  சொல்லபட்டுவந்தது.



அண்மையில் ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சிக்குழு  ஓராண்டு ஆராய்ச்சிக்கு பின் அறிவித்திருப்பது. “அப்படியெல்லாம் ஒன்றும்  இல்லை. படத்தில் “மோனோலிஸா எபஃகட்” எதுவுமில்லை.. அந்த ஓவியத்தின் கண்கள் வலது பார்ப்பது போல் தான் வரையப்பட்டிருக்கிறது.  யாரோ ஒரு பார்வையாளரின் கற்பனை கருத்தாக சொல்லப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை அந்த நம்பிக்கையுடனேயே பார்வையாளர்கள் இந்த ஓவியத்தை ரசித்திருக்கின்றனர். 
நேரான பார்வையுடன் கூடிய ஒரு  ஓவியத்தின் கண்கள்.. நாம் வலது அல்லது இடது என்று எங்கிருந்து பார்த்தாலும் அதன் கண்கள் நம்மை நோக்குவது போல ஓவியங்களை எழுதுவது ஒரு கலை. இதற்கு “மோனாலிசா எபஃக்ட்” என்று பெயர். ஆனால்  மோனோலிசாவின் ஓவியம் அந்த வகையில் வரையப்படவில்லை என்கிறார்கள் ஜெர்மனியின்  பெய்லபீல்ட் பல்கலைக்கழக (Bielefeld University) ஆராய்ச்சியாளர்கள்.  இந்த ஆராய்ச்சி முடிவை குழு  ஐ பெர்ஸ்ப்ஷன்  (i perception)  புகழ் பெற்ற  ஆராய்ச்சி கட்டுரை இதழலில் வெளியிட்டிருக்கின்றனர்,
உலகம் முழுவதும் உள்ள ஓவியர்கள் இதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த ஆய்வுக்காக  ஒரிஜினலின் அளவுகளிலேயே   எடுக்கப்பட்ட மோனோலிஸாவின் படத்தை  ஒரு பெரிய கம்யூட்டர் ஸ்க்ரீனில் 2000 பேர்களுக்கு காட்டி   சோதித்திருக்கிறார்கள்.. படத்தை தலையிலிருந்து  கண்கள் வரை 15 பகுதிகளாகப் பிரித்து  வெவ்வேறு தூரங்களிலிருந்து பார்வையாளர்களைப்  பார்க்கச்செய்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்து சொன்னதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  படத்திலிருந்து அவர்கள் நிற்கும் தூரத்தையும் அளந்து குறித்திருக்கிறார்கள் இதன்மூலம் அவர்கள் நிறுவியிருக்கும் விஷயம் மோனோலிஸாவின் கண்கள் நேராகப்பார்க்கவில்ல. அது பார்வையாளரின் வலது புறம் தான் பார்க்கிறது. இப்படி கண்கள்  நேராகப் பார்க்காத படத்தில் மோனாலீஸா எபஃகெட் கொண்டுவர முடியாது.   இந்தப்படத்தில் அது இல்லை.. அது ஒரு வளமான கற்பனை என்பது தான். 
அறைக்குள் வருபவர்களை அவர்கள்  எங்கிருந்தாலும் மோனாலிஸா  பார்க்கிறாரோ இல்லையோ  ஆண்டுதோறும் உலகெங்கிலிருந்து வரும் அறுபது லட்சம் பார்வையாளர்கள் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தி வெளியானதால் இந்த ஆண்டு அது  இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது  



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்