அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18/3/19

சீஸரின் மனைவி ..



இந்திய வான்படை 75 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும் , பாரம்பரியத்தையும் கொண்டது.   1932ம் ஆண்டு  அன்று  இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இந்தப்படை . இந்திய  விடுதலைக்குப்  பிறகு  இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமானது.  இன்று  இந்திய வான்படை, 1.70 லட்சம் வீரர்களுடனும்   1,130 போர் விமானங்களுடனும்  1,700 மற்ற பயன்பாட்டு   விமானங்களுடனும்   உலகில் நான்காவது பெரிய வான்படையாகத்  திகழ்கிறது.  நமது  வான் படை வீரர்கள்  பல சாகச சாதனைகள்  செய்து பெருமையை  நிலைநாட்டியவர்கள்.

அண்மையில்  நடந்த ஒரு தாக்குதலில் பாக்கிஸ்தானின் சக்திவாய்ந்த F16  விமானத்தையே  மிராஜ் என்ற விமானத்தின் மூலம் தாக்கி விழ்த்தினதைக்கண்டு  உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. காரணம் மிராஜ் 2000 வகை விமானங்கள் பழையவை. அவற்றை நமது HAL சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்திருந்ததால் அதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பான F16 க்கூட விழ்த்த  முடியும்  என்பதைச்  செய்துகாட்டியது.   மிராஜ் தயாரிப்பாளர்களான இஸ்ரேல்  மட்டுமில்லை  உலகிலுள்ள அனைத்து விமானப்படையினரும் வியந்துபோன விஷயம் இது. (ரபேல் பிரச்சினையில் இந்தHAL க்குதான் நவீன விமானங்களைக் கையாள  போதுமான   கட்டமைப்பு       வசதிகள் இல்லை என்று ஏற்கனவேயிருந்த ஒப்பத்தந்திலிருந்து HAL  கழட்டிவிடப்பட்டு  ரிலயன்ஸ் போன்ற தனியார்நிறுவனங்கள்  சேர்க்கப்பட்டது  என்பது தனிக்கதை)
 ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய விமானப்படை தாக்குதல் பற்றிய விமர்சனங்கள் ,சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.  விமானத் தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி தனோவா  அண்மையில்    அறிவித்திருந்தார்.   ஆனால் இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல்  ஆர்.ஜி.கே.கபூர் இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் சொன்னார்.

இந்தியாவின்  வான்வழித் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதாரம் என்ன? எவ்வளவு பேர்  கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காமலிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், அண்மையில் ‘‘பாகிஸ்தானில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.  பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா இறந்தவர்கள் 200 பேர் என்று ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.  ஆனால்  இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா  சீதாராமனிடம்  கேட்கப்பட்டபோது  அரசின் வெளி விவகார துறைச்செயலர் பத்திரிகையாளார் கூட்டத்தில் அறிவித்ததுதான்  அரசின்  அதிகாரப்பூர்வமான  கருத்து என்று சொல்லியிருக்கிறார். .(இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை)

இந்த தாக்குதல் அரசியலாக்கப்படுகிறது என்கிறார் ராகுல்காந்தி. தாக்குதல் விவகாரத்தில் விசாரணை தேவை என்கிறார் அகிலேஷ் யாதவ். விமானப்படை தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்கிறார் மம்தா.. ராணுவம் பொய் சொல்லாது. நம் ராணுவத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள். ஆனால், மத்திய பா.ஜ அரசு உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் கெஜ்ரிவால்
இந்திய  எதிர்க்கட்சி தலைவர்களின் இக்கருத்துக்கள் பாகிஸ்தானை மகிழ்ச்சியடைய  வைத்துள்ளன. இதற்காக நம் எதிர்க்கட்சி  தலைவர்கள்  வெட்கி, தலைகுனிய வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி..  ஆக இரண்டு தரப்பும் இதை அரசியலாக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே  இந்த விஷயத்தை அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
 இலக்குத் தாக்கப்பட்ட விபரங்கள் உடனடியாக வெளியிடப்படாவிட்டாலும்., சக்தி  வாய்ந்த அதிதொழில் நுட்பத்துடன் அந்த  இடம் பகலில் அடையாளம் காணப்பட்டு,  அதே இடத்துக்கு தொழில்நுட்ப உதவியுடன் இரவில் தாக்கக்கூடிய   லேசர்  குண்டுகளால்தாக்கப்பட்டிருக்கிறது.  அந்த இடம் ஒரு மதார்ஸா என்ற போர்வையில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடம்  என்பதையும்  அங்கு 300 செல்போன்கள் இயங்குவதையும்  கண்டுபிடித்தறிந்து  குறிப்பாக அந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கி,       கட்டிடத்தின்  மேற்பகுதியை துளைத்து     உள்ளே புகுந்து வெடித்து, சேதத்தை ஏற்படுத்தியது"    என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.
உலகெங்கும்  இதுபோல்  அதிரடி தாக்குதல் எதாவது நிகழ்ந்தால் உடனடியாக நிகழ்ந்ததற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று ஒரு பயங்கர வாத அமைப்பு அறிவிக்கும். அல்லது அந்த மாதிரி  அமைப்புகளின் இடங்கள் தாக்கப்பட்டால் அதைச்  செய்த அரசின் படைகள்  படங்களுடன் அந்தச் செய்தியை  வெளியிடும். ஆனால் தாக்குதல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்ட  பாக்கிஸ்தான்  அரசு உயிரிழப்பு, சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.  இறந்தவர்கள் எங்கள் ராணுவம் இல்லை பயங்கரவாதிகள்தான்  என்று சொன்னால் அவர்கள்  பாக்கிஸ்தான் எல்லைக்கு ள்ளிருந்ததை உறுதி செய்வதாகிவிடும் என்பது காரணமாகயிருக்கலாம். இந்த நிலையில்  வெளிநாட்டு ஊடகங்களும் இந்த தாக்குதலைக்  கேள்விக்குறியாகியிருப்பது  இந்தச் சர்ச்சையை வலுப்படுத்துகிறது.   
 இந்நிலையில் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பால்கோட் பகுதியின் செயற்கைகோள் எடுத்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள்  அமெரிக்காவின் சான்ஸ்ப்ரான்ஸ்கோவை சேர்ந்த பிளானட் லேப்ஸ் நிறுவனத்தால்  தாக்குதல் நடந்த  6 நாளைக்குப் பின்  எடுக்கப்பட்டவை.  அந்தப் படத்தையும் அதே இடத்தை கடந்த ஆண்டு எடுக்கப் பட்ட ஒரு  படத்துடன் ஒப்பீட்டு  அங்குள்ள கட்டிடங்களில்,  வனப்பகுதியில் மரங்களில்கூட எந்த மாறுதலும் இல்லை.  என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது.  தாக்குதலில் குறி தவறியிருக்கலாம் என்கிறார்கள் இந்த வல்லுநர்கள்.
புல்வாமா  தாக்குதலினால் கொதித்தெழுந்த  ஒவ்வொரு குடிமகனும்  இந்த பதிலடி விமானத்தாக்குதலினால்  மகிழ்ந்ததும்,  விமானி அபிநந்தன்  சாகசத்தால்  பெருமிதம் கொண்டதும் நிஜம்.  ஒன்றுவிடாமல் நாட்டிலிருக்கும்  எல்லா மீடியாக்களும்  அரசின் செயலைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் தாக்குதலின் விபரங்களை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்லுங்கள் என எதிர்க்கட்சிகள் கேட்பதை,அவர்கள்  ராணுவத்தைச்  சந்தேகிக்கிறார்கள்  நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று பிரதமரும் அவரது  கட்சிக்காரர்களும்  கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
‘நமது ராணுவத்தின் வலிமையை நாங்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. பிரதமர் கூறுவது போல் மத்திய அரசை  தர்மச்சங்கடப்படுத்தி,  எதிரி  நாட்டுப் படைகள் சந்தோஷப்படும்படியாகவும் நடந்து கொள்ளவும் இல்லை. அதேநேரம், ஒரு நாட்டின் ராணுவம், மற்றொரு நாட்டின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும்போது, அதன் முடிவு என்ன? என்பதை மக்களுக்கு  தெரிவிக்கவேண்டியது அந்த அரசின்  கடமையில்லையா? . என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
உயிர்ச் சேதம் இருப்பின் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் எனவும், இல்லையேல்,  உயிரிழப்பைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்றோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.  அதுதான்  நமது  ஜனநாயகத்துக்கு ஆளும்  பொறுப்பிலுள்ளவர்கள்   அளிக்கும் மரியாதை.

அரசாளுவோருக்கு எவ்வளவு அதிகாரமிருந்தாலும்

 அவர்கள் சீஸரின் மனைவியாகத்தானிருக்க வேண்டும்

27/1/19

அதிரடி 10% இட ஒதுக்கீடு அவசியமா? அரசியலா? – ஓர் அலசல்.


பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்குக் கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜாதி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியைக் காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், உயர்சாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையநீண்ட நாட்களாக முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு  அவர்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்காக, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டு. நடந்துமுடிந்த குளிர்கால கூட்டத்தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்து, அதில் அமைச்சரவை முடிவுக்கு, ஏற்றாற்போல  நமது அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இதன்மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%-ல் இருந்து 60% ஆக அதிகரிக்கப்படும். ஏற்கனவே நம் நாட்டில்  சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கும்  முறையும் அமுலுக்கு வருகிறது. 
மிக முக்கியமான இந்தச் சட்ட திருத்தத்தை அதிரடியாக கொண்டுவந்தது பாஜக அரசு. முதல் நாள் அமைச்சரவைக்கூட்டத்தில் எடுத்த முடிவு. அவசர, அவசரமாக  மறு நாள் மாலை சட்ட வடிவம் பெறுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் இதற்காக இரண்டுநாள் சிலமணி நேர நோட்டிஸில் நீடிக்கப்பட்டது. 
.மக்களவையில் இந்த மசோதாவிற்கு எதிராக 3 வாக்குகளும்,மாநிலங்களவையில் 7 வாக்குகளுமே பதிவாகின. காங்கிரஸ் இத்தகைய ஒதுக்கீட்டைத் தனது தேர்தல் அறிக்கையிலேயே முன் வைத்திருந்தது. கம்யூனிஸ்ட்களும் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு இல்லை என்பதால் ஆதரித்தார்கள்.. ஆம் ஆத்மி  திருணாமூல், இடதுசாரிகள்,  ஆதரித்து வாக்களித்திருக்கின்றன, அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் மட்டுமே மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன..இதில் அதிமுக எதிர் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. அதாவது பெருவாரியான கட்சிகள் ஆதரித்திருக்கின்றன‌.  இந்த பல கட்சிகளின்  ஆதரவு நிலையை எதிர்பார்த்து பாஜக  திட்டமிட்டிருப்பது அவர்களின் சாணக்கியம். 

  10 சதவீதம் இடஒதுக்கீட்டு சட்டம் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படாது, சபைகள் விடாது, எதிர்க்கட்சிகள் இம்மாதிரி விஷயங்களை ஆதரிக்காது என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்., ஆனால் ஆதரித்து  வாக்களித்த  எதிர்க் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், மக்களவை தேர்தலில் ஆதாயம் பெறவே பாஜக அரசு அவசரமாக இந்த நேரத்தில் மசோதாவைத் தாக்கல் செய்கிறது எனக் குற்றம்சாட்டின. ‘இது நள்ளிரவு வழிப்பறி’ என ராஷ்டிரிய ஜனதா தளம் சொல்லுகிறது. , ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்தான். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த உடனேயே இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதுதான் கேள்விக்குறி. இந்த விஷயத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும் விதத்தைத்தான் கேள்வி கேட்கிறோம். என்கிறது காங்கிரஸ்.
‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக ஒவ்வொரு கட்சியும் அதன் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறது. முந்தைய அரசுகளால் நாடாளுமன்றத்தில் சரியான முறையில் இந்த விவகாரம் கையாளப்படாததால் தோல்வியில் முடிந்தது. இந்த மசோதா மூலம் 95 சதவீத மக்கள் பயனடைவார்கள்’’ என்கிறது பாஜக.


.எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல், எந்தப்புள்ளிவிவர தரவுகளும் இல்லாமல் இப்படி  மசோதாவை  அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது  நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல். என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நாடாளுமன்றவிவாதத்தில் குரல் எழுப்பினாலும் அவர்கள் ஆதரவு வாக்களித்தார்கள். காரணம்,அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டைச் செய்வோம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது தான்.  ஆதரவு ஓட்டளிக்காவிட்டால் பஜகா அதை  எதிர் வரும் தேர்தலில் தங்களுக்குச் சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் என்ற நிலை. தான் காரணம்.  இதை எதிர்பார்த்து பாஜக சாதுரியமாக காய்களை  இறுதி நேரத்தில் நகர்த்தி ஆட்டத்தில்  வென்றிருக்கிறது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டால்  உடனே இது சட்டமாகும். 
இரவு வரை நீடித்த பாராளுமன்ற கூட்டத்துக்குப் பின் பிரதமர்  இது இந்திய  சமூக நீதி வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் என்று ட்விட் செய்திருக்கிறார்.  
இந்த நள்ளிரவு காட்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன

ஏன் இந்த அவசரம்?

விவசாயிகள் போராட்டம்', `பெட்ரோல், டீசல் விலையேற்றம்', `ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு' என மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசைக் குறிவைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் நடந்த மாநில தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த  பாஜக.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவர்ந்தே ஆக வேண்டும் என்பதில் . மிகவும் தீவிரமாக இருக்கிறது.  அவர்களின் கட்சி ஆய்வின் படி மாநிலங்களில் அவர்களுடைய வாக்கு வங்கி சரிந்ததற்கு காரணம்  பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்பலர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களுக்கு  10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை உடனடியாக கொண்டுவந்து சட்டமாக்கிவிட்டது. இதைத்தான் பாஜக அரசு எடுத்திருப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்று ஆதரவளித்த பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்த சட்டத்திருத்தத்தினால் இப்போது நடைமுறையிலிருக்கும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா? 
பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படவில்லை. இந்தத் திருத்தம் இப்போதிருந்ததுவரும் வரும் இட ஒதுக்கீடு முறைக்கு.   மாற்று இல்ல.. அது தொடரும். மேலும்  சட்ட வரைவில்." in addition to existing reservations and subject to a maximum of 10 percent of the total seats in each category" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாஜகவை ஆதரிக்கும் பெரும்பாலான பார்ப்பனருக்கு   உதவ இந்தத் திருத்தம் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே
ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் இல்லாத நிலையில்  இதை தமிழககட்சிகள் . அரசியலாக்க முயற்சிக்கின்றன. பொதுப் பிரிவில் 40க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. அவற்றில் சில: பார்ப்பனர்கள், தாக்கூர்கள் (என்ற ராஜபுத்திரர்கள்) ஜாட்கள், மராத்தாக்கள், பூமிகார்கள், பனியாக்கள், கம்மாக்கள், கப்பூக்கள் எனப்பல சாதிகள் இருக்கின்றன. அனைவருக்கும் பலன் கிடைக்கும் தமிழகத்தில் . பார்ப்பனர்களின் எண்ணிக்கை  மூன்று சதவீதத்திற்கும் குறைவு

இது அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

நீண்ட நாட்களாக அரசியல் கட்சிகள் அறிவித்துச் செய்ய முடியாததை நாங்கள் சாதித்திருக்கிறோம் என பாஜக இதைச் சாதனையாகப் பேசும். வட மாநிலங்களில் இந்த சட்டத்திருத்தம் பிரசாரம்  அவர்களுக்குப்  பலனளிக்கலாம்.  ஆனால்  தமிழகத்தில்  இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் சமூக நீதி  உரிமைகளுக்கு முரணானது என்ற நிலையைத்  திராவிட கட்சிகள்  எடுத்திருக்கிறது.  அதனால் .  அதிமுக வுடன் கூட்டணியை விரும்பும்  தமிழக பாஜக  இதனால்  பெரும் நெருக்கடியைச் சந்திக்கும்.
சட்ட சிக்கல்கள் வருமா? 

இந்தச் சட்டத்திருத்தம் , அரசியலமைப்புச் சட்டம் 15 (4) (இடஒதுக்கீடு தொடர்பானது) பிரிவில் சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்கள் என்பதோடு, பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் என்கிற பிரிவும் சேர்க்கப்படுகிறது.  மிக முக்கியமான இந்த சட்டத்திருத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில்  அதை  எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
 கட்சி வழக்கறிஞர்கள் இதை எப்படிப்பார்க்கிறார்கள்?
``இது, வட இந்திய உயர் சாதியினரின் வாக்குகளைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் அரசியல் நாடகம். நான்கரை ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தபோது ஏற்படாத இதுபோன்ற இட ஒதுக்கீடு தேவை இப்போது ஏன் வந்தது? இது முற்றிலும் தவறானது; சமூக நீதிக்கு எதிரானது. இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பதே தவறு. இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றால், அது நிலைக்காது. 50 சதவிகித இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நிர்ணயித்தது நீதிமன்றம்தான். இப்போது 10 சத விகிதம் சேர்த்து ஏன் 60 சதவிகிதமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு, நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. முதல் நாளில் அமைச்சரவையில் நிறைவேற்றி, மறுநாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, பெரிய விவாதம் எதுவுமின்றியே நிறைவேற்றுவதற்கான அவசியம் என்ன? ஐந்து மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி. அடைந்த தோல்விதான் இத்தகைய மசோதாவைக் கொண்டுவரக் காரணம்.. பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என அளவுகோல் வைத்தால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவர நேரிடும். இது ஆபத்தாகிவிடும்  1951-ம் ஆண்டு இட ஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தந்தை பெரியார் தலைமையில் 3 லட்சம் பேர் அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராடித்தான், முதலாவது சட்டத் திருத்தத்தைப் பெற முடிந்தது. ஆனால், இன்று முற்பட்ட வகுப்பினர் கேட்காமலேயே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தப் பிரச்னையில் மௌனம் காத்து வருவது தவறான முன்னுதாரணமாகி விடும். சமூக நீதி பேசுவதாகச் சொல்லிக்கொள்கிற பி.ஜே.பி., குறுகிய கால வாக்கு அரசியலுக்காகக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பவாத முடிவுதான் இது" உச்ச நீதி மன்றம்  இதை ஏற்காது தடை செய்யும் வய்ப்பு அதிகம் . என்கிறார்  பட்டாளி மக்கள் வழக்கறிஞர் திரு பாலு

பாஜக. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.டி. ராகவன், 
``அனைவருக்குமான வளர்ச்சி என்கிற முழக்கத்தோடுதான் பி.ஜே.பி. அரசு, அனைத்துத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இத்தகைய இட ஒதுக்கீடு பற்றி ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் இதற்கான முயற்சிகளை எடுத்தார். மேலும், 1992-ம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை செய்யக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15 (4) பிரிவில் சமூக, கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தற்போது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி பொருளாதாரம் என்பதையும் சேர்த்துள்ளோம்.
எனவே, `பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று கூறி, நீதிமன்றம் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுமட்டுமல்லாமல் நரசிம்மராவ் ஆட்சியில் வெறும் அரசு உத்தரவாக அது கொண்டு வரப்பட்டது. தற்போது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதால் சட்டப்பூர்வமாக அதற்கு மதிப்பு அதிகம். அரசியலமைப்புச் சட்டம் தற்போது 124-வது முறையாகத் திருத்தப்படுகிறது. அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் நீதிமன்றம் ரத்து செய்துவிடவில்லையே. எனவே, இந்தச் சட்டத்திருத்தத்தையும் நீதிமன்றம் தடை செய்யாது என நம்புகிறோம்.

விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’

உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு  இந்த வழக்கை அனுமதித்து விவாதங்களைக்கேட்டுத் சமூக நீதியுடன் சம நீதியும் வழங்குவது  சரியா என்ற  தீர்ப்பை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் வழங்கும் என்பது நிச்சியமில்லை.   ஆனால்  அரசியில்  கட்சிகள்  தேர்தலில் இந்தத் தீர்ப்பை அரசியலாக்கும் என்பது மட்டும்  நிச்சியம்.
ரமணன்

    


விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’


























காகிதப்புலி




லோக்ஆயுக்தா என்றால்மக்களால்நியமிக்கப்பட்டவர்கள்என்றுஅர்த்தம். சுதந்திரம்பெற்றபின்னர்அரசின்திட்டங்கள்

சட்டதிட்டங்கள்மக்களுக்குமுறையாகச்சென்றுசேர்கிறதாஎன்றஅடிப்படையில்ஆரம்பிக்கப்பட்டது. இந்தவிவாதம் 1960-களில்தொடங்கியது. பொதுவாழ்க்கையில்இருப்பவர்கள்ஊழலில்ஈடுபடுவதால், ஊழல்முக்கியப்பிரச்சினையாகஇருந்ததால்அதுவும்கூடுதலாகசேர்க்கப்பட்டது. இதுதான்லோக்ஆயுக்தாஎன்றவடிவத்தின்முக்கியஆரம்பம்
ஆளுங்கட்சியின்தலையீடுஏதுமின்றிதன்னாட்சியாக, முழுஅதிகாரத்தோடுசெயல்படக்கூடியலஞ்சஊழல்ஒழிப்புக்கானஆணையம்மற்றும்அரசுசேவைகளில்மக்களுக்குள்ளகுறைபாடுகளைதீர்க்கஉதவும்ஒருமையம். இதைதமிழில்அழகாககூறவேண்டுமானால், 
‘ஊழல்விசாரிப்புமற்றும்மக்கள்குறைதீர்ஆணையம்’என்றுஅழைக்கலாம்.

இது எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் வழி காட்டியிருந்தது. ஆனால் மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. சமூக  ஆர்வலர்களின் பல முறையீடுகளினால் சில மாநிலங்களில் அமைக்கப்பட்டது.சமீபத்தியநீதிமன்றகணக்கின்படி 12மாநிலங்கள்தவிரஅனைத்துமாநிலங்களிலும்உள்ளது. லோக்ஆயுக்தாநீதிமன்றங்களைஏன்அமைக்கவில்லைஎன்பதுதொடர்பாககடந்த ஆண்டு ஜுலை 31ம் தேதிக்குள் பிரமாணப்பத்திரம்தாக்கல்செய்யும்படிதமிழகம்உள்ளிட்ட 12
 மாநிலங்களுக்குஉச்சநீதிமன்றம்கடந்தமாதம்உத்தரவிட்டது.
அனைத்துக்கட்சிகளும், சட்டப்பஞ்சாயத்துபோன்றஅமைப்புகளும், மீடியாக்களும்நெருக்கியதாலும்.உச்சநீதிமன்றத்திற்குஅறிக்கைஅளிக்கவேண்டியகட்டாயம் நேர்ந்ததின் விளைவாக கடந்த ஆண்டு ஜுலை மாத கூட்டத்தொடரின்  நாளன்று தமிழக அரசு ஒரு மசோதாவை அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறது.


ஏன் இந்த லோக் ஆயுக்தா அவசியம்?


லஞ்சஒழிப்புத்துறைமாநிலஅரசின்வரம்பிற்குள்வரும், லஞ்சஒழிப்புத்துறையில்உள்ளஅதிகாரிகளைமாநிலஅரசுநினைத்தபடிதூக்கிஅடிக்கலாம், தங்களுக்கேற்றஆட்களைநியமிக்கலாம். ஆனால்லோக்ஆயுக்தாவில்அப்படிச்செய்யமுடியாது. அதன்நியமனம்மாநிலஅரசுசம்பந்தப்பட்டதாகஇருந்தாலும்நீக்கமுடியாது, மாற்றவும்முடியாது.

லோக்ஆயுக்தாதலைவர்லஞ்சப்புகாரின்நடவடிக்கை எடுக்கப்பரிந்துரைக்கலாம்,
தாமாகமுன்வந்துவழக்குப்பதிவுசெய்யலாம். அமைச்சர்கள், முதல்வர், அதிகாரிகள்வீட்டுக்குள்சென்றுகூடரெய்டுநடத்தஉரிமைஉண்டு. பொதுமக்கள்சேவைபுகாரின்பேரில்நோட்டீஸ்அனுப்பலாம். விளக்கம்கேட்கலாம்.

லோக்ஆயுக்தாபோலீஸ்என்றுதனியாகஇருக்கும். இதற்கானபோலீஸார்மாநிலபோலீஸாராகஇருந்தாலும்லோக்ஆயுக்தாகட்டுப்பாட்டில்இருப்பார்கள்.

ஆனால் இந்த விதிமுறைகள்மாநிலஅரசுஇயற்றும்சட்டத்தின்பிரிவில்இருக்கவேண்டும். இதில்முதல்வர், அமைச்சர்கள்வீடுகளுக்குரெய்டுபோகக்கூடாதுபோன்ற விஷயங்களுக்கு விதிவிலக்குகொடுத்தால்அதுநடக்காது.

லோக்ஆயுக்தாவில்என்னென்னஅம்சங்கள்இருக்க வேண்டும்.,
லோக்ஆயுக்தாவில்யார்தலைவராகஇருப்பது, யார்தலைவரைநியமிப்பது. யார்தேர்ந்தெடுப்பதுஎன்றவரையறை எல்லாவற்றையும் மாநில அரசுகள்  தங்கள் சட்ட வடிவில் சொல்ல வேண்டும்  அதே போல் என்னென்னவிஷயங்கள்விசாரிக்கலாம், என்னஅதிகாரங்கள்உண்டுஎன்ற விஷயங்களும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்

அப்படியானால் மாநில அரசுகள் இந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடுமே?

.இந்த நிலையைத் தவிர்க்கத்தான்  மத்தியஅரசேஇந்தியாவுக்கானபொதுவானஒருலோக்ஆயுக்தாசட்டத்தைஉருவாக்க வேண்டும் அல்லது பொது வரையறைகளைஅளிக்கவேண்டும்என்றும். மத்தியஅரசுலோக்பால், மாநிலஅரசுலோக்ஆயுக்தாஎன்றுஇருக்கவேண்டும்.அதேநேரத்தில்நியமனம்போன்றவிஷயங்களில்வரையறைவேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் போராடுகிறார்கள்.

மாநில அரசுகள்  இந்த சட்டம் இயற்றுவதும் மாற்றுவதும்  தங்கள் உரிமை என்ற பெயரில் கர்நாடகநாடக அரசு ஒரு  மோசமான முன்னூதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.லோக்ஆயுக்தாவில்கடுமையானசட்டப்பிரிவுகள்உள்ளமாநிலம்என்றால்அதுசந்தோஷ்ஹெக்டேஇருந்தபோதுகர்நாடகாவில்தான். என்ற நிலையிருந்தது.
 .கர்நாடகாவில்அறிமுகப்படுத்தபட்ட லோக்ஆயுக்தாசட்டப்பிரிவு 13 படிமுதல்வர்மீதோ, அமைச்சர்மீதோ, ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள்மீதுஒருபுகார்வருகிறதுஎன்றுவைத்துக்கொள்வோம். அப்போதுதான்சட்டப்பிரிவு 13-ன்கீழ்லோக்ஆயுக்தாவின்பணிதொடங்கும். இந்தப்பிரிவின்கீழ்உங்கள்மீதுபுகார்வந்துள்ளது, நீங்கள்பதவியில்இருந்தால்விசாரிப்பதில்குறுக்கீடுஇருக்கும். ஆகவே, நீங்கள்பதவிவிலகவேண்டும்என்றுகோரலாம்.
இதன் கிழ் எடுத்த நடவடிக்கையின் படி தான் அன்றைய் முதல்வர் எடியூரப் கைதாகவும் பதவி விலகவும் நேர்ந்தது.

ஆனால்கர்நாடகமாநிலஅரசு தேர்தலுக்குப் பின்  2014-ல்எடுத்த ஒருமுடிவினால் . மக்களுக்கானசேவைகளைவிசாரிப்பதுலோக்ஆயுக்தாவில்இருக்காது. இனிதனியாகஒருஅமைப்புபார்த்துக்கொள்ளும்என்றுமுடிவெடுத்தார்கள். 2016-ம்ஆண்டில் ‘ஆன்டிகரெப்ஷன்பீரோ’என்றஅமைப்பைஉருவாக்கிஇனிஇந்தஅமைப்புலஞ்சஊழல்பிரச்சினைகளைபார்த்துக்கொள்ளும்என்றுசட்டம்இயற்றிவிட்டார்கள்.
இதற்குஎதிர்ப்புதெரிவித்து முன்னாள் நீதிபதிசந்தோஷ்ஹெக்டே “கர்நாடகாவில்லோக்ஆயுக்தாமரணப்படுக்கையில்உள்ளது”என்றார். கர்நாடகமாநிலலோக்ஆயுக்தாதலைவர் ''நாங்கள்இனிலஞ்ச, ஊழல்புகார்வந்தால்அதை ‘ஆன்டிகரெப்ஷம்பீரோவுக்கு’அனுப்பிவிடுவோம்ஏனென்றால்எங்கள்அதிகாரம்குறைக்கப்பட்டுவிட்டது'' என்றுகூறியுள்ளார்.எனவே ஒரு மாநில அரசு இந்த லோக் ஆயூக்தாவை ஏற்படுத்தினாலும் அதை செயலிழக்கச் செய்யும் வலிமை பெற்றதாக யிருக்கிறது.

தமிழகம் கொண்டுவந்திருக்கும் சட்டம் எப்படியிருக்கிறது?
சட்டத்தின் முன் வடிவை பொதுவெளியில் விவாதிக்காமல் அவசரகதியில் மசோதாவை நிறைவேற்றியபின்னர்  அதற்கான விதி முறைகளை அறிவித்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது

ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணை மட்டுமேநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாது

லோக்ஆயுக்தாவிற்குதலைவர்மற்றும்உறுப்பினர்களைதேர்வுசெய்யும் “தேடுதல்குழு”உறுப்பினர்களைஎந்தநேரத்திலும்மாற்றலாம்.

இந்த விதிகள் அறிவிப்புவுடன் பல சமூக ஆர்வ அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்திருக்கின்றன.
இந்த  விதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணைநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாதுஎன்றெல்லாம்வகுத்துள்ளவிதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.


ஊழல்ஒழிப்பின்அடித்தளத்தையேதகர்த்துஎறியும்
இந்த விதிகளைஉடனடியாகரத்துசெய்யவேண்டும். இந்த அரசு, லோக்ஆயுக்தாஅமைப்பைஒரு “காகிதப்புலி”போல்ஆக்கிகாலில்போட்டுமிதிக்கநினைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
.மாநிலஅரசின்உரிமைஎன்ற பெயரால் தன்இஷ்டத்துக்கு சட்டங்களை மாற்ற அனுமதிக்காமல்  . லோக்ஆயுக்தாவைக்காப்பாற்றஉச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டுவராதவரையில் லோக்ஆயுக்தாஎன்பது உண்மையில் மக்களால்நியமிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்

19/3/18

என்று என்று தணியும் இந்தப் “போர்” தாகம்?



சிரியா மத்தியகிழக்கில் அமைந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறிய நாடு. மேற்கில் லெபனானையும், கிழக்கில் ஈராக்யையும் வடக்கில் துருக்கியையும் எல்லையாக்கொண்ட இந்தநாடு மிகப்பழமையானது. வளமான சமவெளி, உயர்ந்த மலைகள், எண்ணெய் வளம் மிக்க பாலைவனம் கொண்டது . யூப்ரடிஸ் நதி பாயும் பள்ளத்தாக்கு செழிப்பானது 10 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே விஞ்ஞானபூர்வமாக விவசாயம் செய்யக் கற்றிருந்தவர்கள் என்றும் இதன் தலைநகரமான டமாஸ்கஸ் கலசாரங்கள் பிறந்த தொட்டில் என்று வரலாற்றாளர்களால் வர்ணிக்கபட்ட தேசம்.


இன்று சின்னாபின்னமாகி சீரழிந்துகொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகச் சிரியாவிலிருந்து வரும் புகைப்படங்கள். பச்சிளங் குழந்தைகளின் இறந்த உடல்கள் கிடத்தப்பட்டிருக்கும் காட்சிகளும், ரத்தக் காயங்களுடன் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரின் படங்களும், உருக்குலைந்து கிடக்கும் கட்டிடங்களும் பார்ப்பர்வர்களை பதறவைக்கின்றன .உலகின் அழகிய நகரங்களைக்கொண்ட சிரியா மெல்ல நரகமாக மாறிக்கொண்டிருக்கிறாது
கடந்த இரண்டு வாரங்களுகுமுன் ஒரே நாளில் மட்டும் 602 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 185 பேர் குழந்தைகள், 109 பேர் பெண்கள். தலைநகர் டமாஸ்கஸுக்குக் கிழக்கில் உள்ள கிழக்கு கூட்டா நகரில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள்மீது சிரிய ராணுவம், ரஷ்ய விமானப் படைகளின் உதவியுடன் கடும் தாக்குதல் நடத்தியது ஆனால், இந்தத் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகளை விடவும் அப்பாவிப் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உலகைப் பதறவைத்திருக்கும் சிரியா மரணங்களுக்குக் காரணம் என்ன?
உள்நாட்டுப்போர். இது அண்மையில் துவங்கியதில்லை.கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டுப் போர்தான் இதற்கு முக்கியக் காரணம். 2011-ல் பல்வேறு அரபு நாடுகளில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே திரண்டு தாங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை 'அரபு வசந்தம்' என்றனர். இதனால் துனீசியா, எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சியாளர்கள் பதவி இழந்தனர். பஹ்ரைன், சிரியாவில் மக்கள் எழுச்சி வலுவாக இருந்தது. அல்ஜீரியா, இராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, ஓமானில் பெரிய போராட்டங்கள் நடந்தன. லெபனான், மௌரிடானியா, சூடான், சவுதி அரேபியா, மேற்கு சகாரா நாடுகளில் மக்கள் போராட்டம் வலுவு இல்லாமல் வெறும் அடையாளமாக நிகழ்ந்தது.
ஆனல் சிரியாவில் பதவியிலிருந்த அல் அசாத்திற்கு எதிராக் எழுந்த புரட்சி வலுவானதாகயிருந்த்து. இந்தப் புரட்சி எழுந்ததற்கு முக்கிய காரணம் மதம். இஸ்லாமிய மதத்தில் ஷியா மற்றும் சன்னி என்ற பிரிவுகள். சிரியாவில் சன்னி பிரிவினர் 70% ஆனால் அதிபர் சிறுபான்மையினமான ஷியாபிரிவை சேர்ந்தவர். இதனால் அதிகாரங்கள் அனைத்தும் அந்தப் பிரிவினர் வசம், இதனால் எழுந்த புரட்சி பின்னால் ஆயுதகிளர்ச்சியாக உருவம் கொண்டது.
சிரியா அரசு இந்தப் போராட்டங்களை அடக்குமுறையுடன் எதிர்கொண்டது அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் தலைமையிலான அரசு. ராணுவத்தின் மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது பின்னர் அலையலையாகப் பரவிப் பெரிய போராட்டமாக மாறியது.
இதற்கிடையே அதிபரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படை ஒருபுறம், ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒருபுறம், அமெரிக்க ஆதரவிலான குர்துகள் ஒருபுறம் என்று எல்லாத் தரப்பிலிருந்தும் கடும் தாக்குதல்கள் நடக்கின்றன

.
அதிபரை எதிர்ப்பவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதுடன் நோக்கங்களும் வெவ்வேறானவையாக இருப்பதால் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வராமலே இழுத்துக் கொண்டிருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்ட அதிபர் ராணுவத்தின் விசுவாசத்தாலும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் உதவியாலும் பதவியில் தொடர்வதாலும் போர் ஓய்வதாக இல்லை...
.இதனால் அந்த நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. உள்கட்டமைப்புகள் 97 சதவீதம் அழிந்து போய்விட்டன

இந்த உள்நாட்டு தொடர்வதற்கு மற்றஒரு முக்கிய காரணம் சர்வ தேச அரசியல்

சிரியாவிற்கு நாட்டின் வருமானத்தில் 40% எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்தது. வேளாண்மை மூலம் 20% கிடைத்தது. சுற்றுலாத் துறை 20% வருவாயைப் பெற்றுத் தந்தது. இப்போது உள்நாட்டுப் போர் காரணமாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் பெருந்தொகையைக் கடன் வாங்கி சமாளிக்கிறது சிரிய அரசு. எண்ணெய் ஏற்றுமதி மட்டும் மூன்றில் இரண்டு மடங்கு வீழ்ச்சியடைந்தது. அதனால் வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது.
2010-ல் 12 பில்லியன் டாலர்களாக இருந்த ஏற்றுமதி மதிப்பு, 2012-ல் 4 பில்லியன் டாலர்களாகச் சரிந்துவிட்டது. 1995-ல் ஒரு நாளைக்கு 6 லட்சம் பீப்பாய்கள் கச்சா பெட்ரோலிய எண்ணெய் எடுத்த சிரியா, 2012-ல் 1,82,500 பீப்பாய்களைத்தான் எடுக்க முடிந்தது. இப்போது இதுவும் குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் எண்ணெயின் தரமும் குறைந்துவிட்டது. புதிய வயலில் எண்ணெய் இருப்பு அடையாளம் காணப்பட்டாலும் எடுத்து விற்க முடியவில்லை. உள்நாட்டுப் போரால் நாட்டு மக்களில் குழந்தைகள் விளையாட்டு, படிப்பு என்று ஏதும் இல்லாமல் அன்றாடம் போர்ச் சூழலிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். ஏழெட்டு வயது குழந்தைகள்கூட துப்பாக்கிகளுடன் பெரியவர்களுக்குத் துணையாகக் களத்தில் நிற்கின்றனர்.
உலகில் தீவிரவாதம் எங்குத் தலையெடுத்தாலும் அழிப்போம் என்று சொல்லும் “உலகபோலீசான” அமஎரிக்க ஐ எஸ் தீவிர வாதிகளை அழிக்க இங்கே களமிறங்கியிருக்கிறது அவர்களைத்தேடித் தேடி தரையில் நடக்கும் பயங்கரம் போதாதென்று வான்வெளித் தாக்குதல் வேறு.குண்டுகளை வீசுவது அமெரிக்கா. இலக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கூடாரங்கள் தான்.
துருக்கிக்கு அருகில் உள்ள) எல்லையில் குர்து இனத்தவரைக் குறிவைத்து.தாக்குதல் நடத்தும், ஐ.எஸ் அணியை அழிக்க இதுவரை அமெரிக்க அணியின். 21 வான்வெளி தாக்குதல்கள், நடத்தியுள்ளன. தீவிரவாதிகளின் தரப்புக்கு பலத்த சேதம். ஆனால் வெறியில்அவர்கள் மேலும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனால் அதிகம் செத்துக்கொண்டிருப்பது என்னவோ சுற்றுப்புறத்தில் இருக்கும் பொது மக்கள் தான்

இதற்கிடையே நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய ஐ.எஸ். சிரியாவின் எண்ணெய் வயல்களிலும் பெரும் பகுதியைக் கைப்பற்றி, எண்ணெயை விற்று ஆயுதங்களுக்குப் பெரும் பகுதியைச் செலவிட்டு. தனது எதேச்சாதிகார அரசை வலுப்படுத்திக்கொண்டுவிட்டது. இவர்கள் கட்டுப்பாட்டில் நாட்டின் சிலபகுதிகள் இருக்கின்றன. அங்கு அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தம் ஆட்சி ஆப்கான் தாலிபான்களைவிடக் கொடுமையானது. நோன்புகாலத்தில் சாப்பிட்டான் என்பதற்காக 13 வயது சிறுவனை முக்கிய சாலையில் நிறுத்திச் சுட்டுகொன்று அதை டிவியில் காட்டியவர்கள். 4 ஆண்டுகளுக்கு முன் 21 லட்சம் பேர் இருந்த இந்தப்பகுதியில் இப்போது இருப்பது 3 லட்சம் மக்கள் மட்டுமே.
கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். அவர்களில் 11,000 பேர் குழந்தைகள். இரண்டாவது உலகப் போர்கூட இத்தனை குழந்தைகள் இறந்த தில்லை.
இந்தச் சந்தர்ப்தை பயன்படுத்தி போரிடும் குழுக்களை ஆதரிக்கும் நாடுகளும் எண்ணெய் வளத்தைக் குறிவைத்தும், சிரியாவில் அமைதி வந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டும் காய்களை நகர்த்துகின்றன.
இந்த நீண்ட அரசியல் சதுரங்க ஆட்டத்துக்கு நடுவில்தான் ஏதுமறியா அப்பாவிகள் கொத்துகொத்தாகப் பலியாகிக்கொண்டிருக்கின்றனர்.
ஐநா என்ன செய்கிறது?


ஐ.நா. சபையின் “உண்மை அறியும் குழு” ஒன்று சிரியாவுக்குச் சென்றது. அவர்கள்மீதும் தாக்குதல் நிகழ்ந்தது. . ‘‘சந்தேகம் இல்லாமல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது’’ என்று யாருக்கும் சந்தேகமில்லாத ஒரு விஷயத்தை அறிக்கையாக வெளியிட்டது ஐ.நா.
‘‘ஐ.நா.வின் சிறப்பு தூதராக அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் நியமிக்கப்பட்டார். சிரியாவுக்கு ஒரே ஒரு விசிட். அவ்வளவுதான். தன் தூதர் பதவியியை ராஜினாமா செய்து விட்டார் அவர். தன் அமைதி திட்டத்தைத் தீண்டக் கூடச் சிரியா தயாராக வில்லை. 
போரை ஒரு மாதத்துக்கு நிறுத்துங்கள் என்று ஐநா சபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் சிரிய அரசு இந்தப் போர் நிறுத்தத்தைப் பகலில் அதுவும் சில மணி நேரங்களுக்கு மட்டும்தான் கடைப்பிடிப்போம் என்கிறது. இதற்கு அரசு சொல்லும் காரணம் வினோதமானது.
அரசை எதிர்க்கும் படைகளிடம் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதால் போர் நிறுத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது என்கிறது. அரசை எதிர்ப்போர் ஆயுதங்களுடன் சரண் அடைந்தால்தான் இது சாத்தியம் என்கிறது.
சிரியாவே நாசமானாலும் பரவாயில்லை, எதிரிக்கு அடங்கிவிடக் கூடாது என்பதே முடிவாக இருக்கும். சிரியா அரசுக்கு இப்போது ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் படைகளுக்கு அமெரிக்கா துணையாக இருக்கிறது. இதனால் தான் 8 ஆண்டுகளாகப் போர் தொடர்கிறது.


கடந்த ஒரு வருடமாகவே சிரியாவில் போர். மிக உக்கிரமான யுத்தம். போர் எந்த வெளிநாட்டுடனும் இல்லை. புரட்சியை அடக்க உள்நாட்டிலேயே. நடக்கும் போர். சிரிய அரசுப் படைகள், சிரிய ஜனநாயக ஆதரவுப் படைகள், சிரிய எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படைகள், ஐஎஸ் படைகள், தாஹிர் அல் ஷாம் என்ற படை என்று களத்தில் ஐந்து வெவ்வேறு அணிகள் இருக்கின்றன. யார் எப்போது எதற்காகத் தாக்குகிறார்கள் என்று தெரியாத நிலையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கிராமத்தை விட்டுக் கிராமம், நகரத்தை விட்டு நகரம் என்று இடம் பெயரத் தொடங்கி இப்போது நாட்டின் எல்லைகளைக் கடக்க வேண்டிய கட்டாயதிற்குள்ளாகியிருக்கிறார்கள்


இப்படி உள்நாட்டுப் போரினால் தவிக்கும் மக்கள் " அரசாங்கமே, எங்களைக் காப்பாற்று’’ என்று கேட்க முடியவில்லை. என்ன காரணம்? போரை நடுத்துவதே அரசாங்கம் தான்.. இந்தக் கடும் போரிலும் செஞ்சிலுவைசங்கம் தன் பணிகளைசெய்ய முற்சிக்கிறது அதன் களத்தலைவர் ஜாட் என்ற பிரிட்டிஷ் மருத்துவர் பிபிசிக்கு அளித்த பேட்டியைபார்க்க பரிதாமாகயிருந்தது. "மின்சாரம், மாத்திரைகள், ஆக்சிஜன், மயக்க மருந்து, வலி நிவாரணிகள், ஆன்டி பயாடிக்ஸ் போன்ற எதுவுமே இல்லாமல் மருத்துவர்கள் பணியாற்றி வருகிறோம் உண்மையிலேயே மிகவும் பயங்கரமான, கடினமான சூழலில் பணிபுரிந்து வருகிறோம் முதல் உலகப் போரை இது நினைவு படுத்துகிறது" என்றார் அவர்

.
கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். முப்பது லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.அண்மையில் கனடா நாட்டுபிரதமர் கூட 25000 சிரிய அகதிகளை ஏற்பதாக அறிவித்திருக்கிறார்.

இந்த அர்த்தமற்ற போர் எப்போது தான் ஓயும்? எவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி.இது

போர் நிறுத்தத்துக்கு ஐ நா மட்டும்முயற்சித்தால் போதாது. அரபு நாடுகளும் இஸ்லாமிய கூட்டமைப்பும் உதவ வேண்டும். அப்படியே போர் ஒய்ந்தாலும் சீரழிந்த சிரியாவை சீரமைக்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் பலமில்லியன் டாலர்கள் தேவை என்கிறார்கள் வல்லுனர்கள்
தங்கள் சொந்த மண்ணில் வாழவும் முடியாமல் அகதிகளாகவும் வெளியேறவும் முடியாமல் செட்துக்கொண்டிருக்கிறார்கள் அப்பாவி சிரியா மக்கள்

.
சுருக்கமாகச் சொன்னால்

'ஒரு இனத்தின் ஒன்றுமே அறியாத ஒரு தலமுறையைஅதன் அரசே படுகொலை செய்து அழித்துக்கொண்டிருக்கிறது'.






26/7/17

கருகிய கனவுகள்


மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது 
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக,மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி வந்த நீட்  (NEET) பிரச்சனையில் உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் நீட் தேர்வில் தகுதிபெறாத தமிழக மாணவர்கள் +2 வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட   மருத்தவ கல்லூரிகளில் சேரமுடியாது. 
 நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன. இதை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில்  கடந்த 2013 ஜூலை 18-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்தத் தடை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் விளைவாக  2013ல் பிறபித்த தடையுத்தரவை ரத்து செய்து தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த  உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது 
இந்த  உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்திய மருத்துவ கல்வியில் ஒரு மிகப்பெரிய மாறுதலை உருவாக்கியது இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே முறையில் நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்திலும் மத்திய அரசு கட்டாயமாகி உள்ளது. என்றும் அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காகவே தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளது.  கடந்த மே மாதம் 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 11.3 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.      தமிழகத்தில்  எழுதியவர்கள் 83000க்கும் மேற்பட்டவர்கள் அதில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 32570 பேர். இதில்மிகப் பலர் சிபிஎஸ் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் காரணம் இந்த நீட் தேர்வின் கேள்விகள் 80% சிபிஎஸ் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டவை.
  மாநில பாடத்திட்டத்தில் +2 படித்த மாணவர்கள் இந்தத் தேர்வை சரிவரச் சந்திக்க முடியாமல் போய்விட்டது   என்பதைக் கணித்த அரசு  தமிழக அரசுஇந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வாங்கிடலாம் எனஅறிவித்தும் விட்டது. ஆனால்  இரண்டு சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற  மத்திய அரசு  அனுப்ப வில்லை. தங்களது சொந்தப் பிரச்சனைகளில் மத்திய அரசின் தயவை நாடி நிற்கும். மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்க வில்லை
. இவ்வாண்டு, நீட் மூலம் தான் தமிழ்நாட்டிலும் மாணவர் சேர்க்கை என அறிவித்து அதற்கான பணிகளை வாரியம்  துவங்கியிருந்தது. இந்த விஷயத்தில் தங்கள் முயற்சிகள் தோல்வியடைந்ததை உணர்ந்த மாநில அரசு அதை மறைப்பதற்காக, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொண்டு வர  ஒரு அரசாணை பிறப்பித்தது. அதாவது, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் 15 விழுக்காடு இடங்கள் போக மீதி உள்ள 85 விழுக்காடு இடங்களில் 15 விழுக்காடு இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும், 85 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கிட அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையைத்தான்  செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்புக்கான முக்கிய காரணங்களாக நீதி மன்றம் சொல்லியிருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒரே வகுப்பில் படித்த மாணவர்களிடையே வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்கள் என்பதால் தகுதி நிலையிலேயே  வேறுபாடுகாட்டுவது  எல்லோருக்கும் சமத்தவம் என்ற நிலைக்கு மாறுபட்டதாகிவிடும். இரண்டாவது இந்த அரசாணையை  வெளியிட்டிருப்பது அரசின் செயலாளர்கள். ஒரு அரசின் கொள்கை முடிவுகள் அமைச்சரவையால் பரிசிலிக்கபட்டு ஒரு ஆணையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது  சட்டமன்றத்தில் சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டு,ம்  ஆனால் இது அப்படிச் செய்யப்படவில்லை. 
தமிழக அரசு  உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது  
ஆனால் . இப்படி வெவ்வேறு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டரீதியாக செல்லுமா? தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும்  85 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? என்பது  மிகப்பெரிய கேள்விக்குறி.  ஏனெனில், அரசியல் சட்டப்படி, சமூக ரீதியாக கல்விரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இப்படிப்பட்ட ஒதுக்கீடுகள் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும் எனச்சொல்ல முடியாது. மேலும் 50 விழுக்காட்டுக்கு மேல் எந்த இட ஒதுக்கீடும் செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது, ஏற்கனவே, குஜராத் உயர் நீதிமன்றம் இதுபோன்ற ஒரு ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த ஒதுக்கீடு  அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம். .

மாநில அரசு என்ன செய்ய வேண்டும்?                            
இதைக் கெளரவ பிரச்சனையாக கருதாமல் நீட் தேர்வை ஏற்று நமது மாநில பாடதிட்டங்களை மாற்றி அமைத்து தமிழக கல்வித்தரம் சிபிஎஸ் பாடத்திட்டத்தைவிட உயர்ந்தது என நீருபிக்க வேண்டும் 
 நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test).அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test). என்பதை உணர்ந்து நமது மாநில மாணவர்களை அதற்கு தயாரிக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  செழுமையாக்கப்படவேண்டும். இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு அண்மையில் செய்திருக்கிறது. இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாகவே செயலாக்கவேண்டும். 
குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்கொடிய வழக்கம் இந்தத் தேர்வு முறையினால்  முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவஇடம் கிடைக்காது. என்று எழுந்திருக்கும் நிலையை வரவேற்க வேண்டும்.
சட்டம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், புதிய கல்விக் கொள்கை எனப் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மருத்தவ கல்லூரி கனவுகளுடன் மாநில பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும்  மாணவர்களும், கருகிய அவர்களின் கனவுகளை கண்டு கண்ணீர் விடும் அவர்கள்  பெற்றோர்களும் தான்.

21/6/17

அமெரிக்க அதிபரின் அடுத்த அதிரடி.. !




அதிரடி அறிவிப்பு மன்னராகவே ஆகிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில்  வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், “அமெரிக்கர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், மூடப்பட்ட தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் “பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது” என்று திடுக்கிடும் முடிவை  அறிவித்திருக்கிறார். 
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டு மக்களுடனும், சர்வதேச நாடுகளுடனும் மோதல் போக்கையே காட்டி வருகிறார். குறிப்பாக அறிவியல்ரீதியாக நடைமுறைப்படுத்த இயலாததாகக் கூறப்படும் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைச்சுவர் விவகாரம், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத்தடை, ஒபாமாகேர் என்னும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட ஒழிப்பு, ஊடகங்கள் மீதான பாகுபாடு மற்றும் நீதித்துறையின் மீது வெறுப்புணர்வு,  போன்ற அறிவிப்புகளின் பட்டியலில் லேட்டஸ்ட் இது. 
 அதிவேகமாக மோசமடைந்துவரும் புவியின் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக உலகின் 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகச்சொல்லும்,  உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்  இந்த அறிவிப்பில் அவர் இந்தியாவைக் குறிப்பாக  தாக்கியிருக்கிறார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கோபத்தைப் புரிந்துகொள்ள பாரிஸ் காலநிலை உடன்படிக்கை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது. 
நமது பூமியினுடைய மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால், அது மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் நீர்மட்டம் உயருதல், பேய் - மழை, கடும் வறட்சி, நோய்கள் போன்றவை பல வகையில் அதிகரித்து நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தொடரும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பணித்திட்டப் பேரவையானது
(United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கடந்த 1992-ம் உருவாக்கப்பட்டது. இது, தொடர்ந்து 23 ஆண்டுகள் ஆம் 23 ஆண்டுகள் !  உலக நாடுகளுடன்  பல நகரங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்திவந்தது.  ஒரு நாட்டின் கருத்தை சில அல்லது பல நாடுகள் ஏற்காமல் தொடர்ந்து  அடுத்தடுத்த மாநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட விஷயம் இந்த  காலநிலை உடன் படிக்கை.     2015ல் பாரிஸில்  7 நாட்களுக்குத் திட்டமிட்டு 11 நாட்களாக  நீடித்து நடந்த பேச்சுவார்த்தைக்குப்  பிறகு, 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த காலநிலை மாநாட்டில்  வரலாற்றுச் சிறப்புமிக்க “பாரிஸ் உடன்படிக்கை” உருவானது.  அது உலகின் 195 நாடுகளினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது. வளரும் நாடுகளின் சார்பாக வாதிட்ட இந்தியா வளர்ந்த நாடுகள் எப்படிச் சூழலை மாசு படுத்தியிபின் வளரும் நாடுகளின் மீது  கட்டுப்பாட்டை கொண்டுவருகிறது என்பதையும். இதைச் செயலாக்க வளரும் நாடுகளுக்குக் கொடுக்க  வளர்ந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வாதாடி வென்றது. 
குறிப்பாகப்  வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அமெரிக்கா போன்ற நாடுகளானது, இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கவேண்டும்  என்பது இந்த  உடன் படிக்கையின்  முக்கிய அம்சம். 
இந்த உடன்படிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸைத் தாண்டவிடாமல் தடுக்கும் வகையில், அதற்கு முக்கியக் காரணமான  வாயுக்களை வெளியிடும் அளவைக் குறைக்க உலக நாடுகள் முடிவு செய்திருந்தன.  இதன் படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
  .இதன்படி, புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி ஆண்டுதோறும் வழங்கப்படும்.. வரைவு ஒப்பந்தத்தில் சொல்லியிருந்த படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸாகக் குறைக்க வேண்டுமென்பதை ஏற்றால்  இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் நிலக்கரி போன்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.எனவே, வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்த அளவைக் குறைக்க வற்புறுத்தின.  இறுதியில் அதை 1,5 டிகிரி செல்சியஸ் ஆக குறைக்க ஒப்புக்கொண்டன. 

அந்த. மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை இந்தியா உள்பட 195 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. “இந்த உடன்பாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது” என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாராட்டி. “அனைவரும் ஒன்றானால் என்ன நடக்கும் என்பதை நாம் உலகிற்குக் காட்டியுள்ளோம்” என்று பெருமையுடன் அறிவித்தார்.  தொடர்ந்து நாடுகள். அதிகாரப்பூர்வமாக உடன்பாட்டில் கையெழுத்திட்டன.  
இந்த ஒப்பந்தத்திலிருந்தான் விலகுவதாக இப்போது  அறிவித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.  இந்தத் தீர்மானத்தினால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என்பது அவரது கணிப்பு.  மேலும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் காரணமாக அமெரிக்கா புதிய அனல்மின் நிலையங்களைத் திறப்பது தடுக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்களை நிதியை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெற்று,  2020-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனல்மின் நிலையங்களை இருமடங்காக்கிக் கொண்டுவிடும் என்பது தான் அவரின் கோபத்துக்கு காரணம்  இப்படி இந்தியாவின் மீது இருக்கும் வெறுப்பும், அதற்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற நிலையும்  இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு காரணம். .
வளர்ந்த நாடுகள் செலுத்தப்போகும் பணம் அவர்கள் சுற்று சூழலின் வெப்பளவை இதுநாள் வரை தொடர்ந்து அதிகரித்தற்காக  தரும் ஈடுதான் என்ற புரிதல் அவருக்கு இல்லை எனச்சொல்லிவிட முடியாது.. அதிபர் தேர்தலுக்கு பல நாள் முன்னரே அவர் தனது டிவிட்டரில் பாரிஸ் மாநாட்டைக் கடுமையாக சாடியிருக்கிறார்.  தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருந்தார். ஆனால்   அவருடைய தேர்தல் அறிக்கையை  பலர் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. 
இந்த அறிவிப்பைப் பல உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமில்லை அமெரிக்காவின்  கூகுள்.  மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும்  கண்டனம் செய்திருக்கின்றனர்.  அவரது கட்சியின் அறிவு ஜீவிகளும் எதிர்க்கிறார்கள். 
 ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் எழும் இந்த மாதிரி உடன்படிக்கைகளிலிருந்து  கையெழுத்திட்ட நாடுகள் வெளியேற விரும்பினால் அதற்கான விதிமுறைகளையும் அதில்  சேர்க்கப்பட்டிருக்கும். அதன் படி இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டுமானால் அதற்கான ஒராண்டு நோட்டிஸையே 2019 நவம்பரில் தான் கொடுக்க முடியும். அதற்கு ஒராண்டுக்குபின்னர் அதாவது 2020 நவம்பருக்குப் பின்னர்தான் வெளியேற முடியும். டிரம்பின் பதவிக்காலம் 2020 நவம்பர் 4 வரைதான்.
இது அவருக்குத் தெரியாதா?  இதுமட்டுமில்லை. தெரிந்த விஷயங்களையும் தெரியாத மாதிரி அறிவிப்பது தான் அதிரடி அரசியல் என்பதும் அதிபருக்குத் தெரியும். 

31/5/17

யார் நமது அடுத்த ஜனாதிபதி ?


இரு அணிகளின் இணைப்பு  நிகழாதிருப்பதைக் கண்டு  ஒபிஎஸ் கலங்கியிருப்பதற்கும், இபிஎஸ் கவலைப்படாதிருப்பதற்கும்  திமுகவின் செயல் தலைவர் திரு ஸ்டாலின் கலைஞரின் வைரவிழாவினை அகில இந்திய  கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பதற்கும் ஒரே  காரணம் 

இந்தியாவின் 14வது ஜனாதிபதி யார்? என்ற கேள்விதான்.  
திரு பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017 ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகளை ஜூனில் தொடங்க வேண்டும். 
வெற்றிக்குதேவையானஓட்டுகள்
ஜனாதிபதி தேர்தல் நடந்தால் இந்தியாவில் உள்ள 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 776 எம்பிக்கள் வாக்களிப்பார்கள். எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்குமதிப்பு 5,49,474. எம்பிக்களின் வாக்கு மதிப்பு 5,49,408. ஒட்டுமொத்தமாக எம்பி, எம்எல்ஏக்கள் என 4896 பேர் வாக்களிப்பார்கள். அவர்களின் வாக்குமதிப்பு 10,98,882. இதில் பாதிக்கும் மேல் அதாவது 5,49,442 வாக்கு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 5 மாநில தேர்தல்  முடிவுகளில் உபியை பா.ஜனதா ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்ட பின்னர்  அதன்  ஜனாதிபதி தேர்தல் வாக்கு வலிமை அதிகரித்துவிட்டது  

தற்போதுள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணி பலம் மக்களவையில் 2,37,888ஓட்டுகளும், ராஜ்யசபையில் 49,560 ஓட்டுகளும், மாநில சட்டப்பேரவையில் 2,39,923 ஓட்டுகளும் உள்ளன. மொத்தம் பா.ஜனதா அணிக்கு தற்போது 5,27,371 ஓட்டுகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகளுக்கு 5,68,148 ஓட்டுகள் உள்ளன. எனவே வித்தியாசம் 40,777 ஓட்டுகள் தான்.
இந்த  40777 ஒட்டுக்களை எப்படியாவது சேகரித்து தங்கள் வலுவைக் காட்ட  பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. அதன் முதல் குறி அதிமுக. காரணம் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 50 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பு 58,984. இந்த ஓட்டுக்கள் முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ கிடைத்தால்தான்  பா. ஜா காவின் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யமுடியும் 

ஜெயலிதா இருந்திருந்தால் இந்த நிலையையே காட்டி பாஜாகாவையே மிரட்டியிருப்பார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதைக்கூட கையில் எடுத்திருப்பார்.. ஆனால் மாறாக  இன்று  தற்போதைய சூழலில் அதிமுக  இரு அணிகளுமே  பா.ஜனதாவைப் போட்டி போட்டுகொண்டு ஆதரிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல அமைச்சர்கள் முறைகேட்டில் சிக்கிய புகார்கள் வருகின்றன. இதனால் உருவாகியிருக்கும்  ஒரு நிலையற்ற தன்மையை தங்களுக்க சாதகமாக பயன்படுத்தக் காய் நகர்த்தத் துவங்கியிருக்கிறது பாஜக . தங்கள் பதவியையும், அரசையும் காப்பாற்ற ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை  ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் கணிப்பு  
தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ்  2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் திரட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்த  ஜனாதிபதி தேர்தலை அதற்கு முன்னோட்டமாகப் பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. . உடல் நலிவுற்ற நிலையிலும் இந்தப் பணிகளில் சோனியாகாந்தி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முதல்கட்டமாக ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பா.ஜனதாவுக்கு எதிரான அத்தனை எதிர்க்கட்சிகளையும் குறிப்பாக உபியில் எதிரும் புதிருமாக திகழும் முலாயம், மாயாவதி, மேற்குவங்கத்தில் மம்தா மற்றும் கம்யூனிஸ்ட் ஆகியோருடனும் கூட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டார்.  தொடர்ந்து திமுக வின் ஆதரவைகேட்ட நிலையில் எழுந்த எண்ணம் தான்  ஜூன் 3ல் கருணாநிதி பிறந்ததினம் மற்றும் சட்டமன்ற வைரவிழாவை முன்னிட்டு சென்னையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பங்கேற்கச்செய்யும் வகையில் தங்கள் பலத்தைக் காட்ட ஒரு மெகா ஷோ..   அது ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய முன்னோட்டமாக அமையும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனைகள்முடிந்துவிட்டது. .. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மகாத்மா காந்தியின் பேரன் கோபால் காந்தி, முன்னாள் சபாநாயகர் மீராகுமார் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
 இந்த முயற்சியில் . காங்கிரஸ் வெற்றி பெற்றால் , அது பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய அணியை உருவாக்கி விடும். அது 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆபத்தாகக் கூட முடியலாம்  என்பதைக் கணித்த பாஜக  மிக வேகமாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது.  மத்திய அரசின் அமைச்சர்கள் மாநிலங்களுக்கு அடிக்கடி பறக்கிறார்கள். அறிக்கை மழை கொட்டுகிறது
.தெலங்கானா மாநில நலனுக்காக பா.ஜனதா வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து விட்டார்.  வருமானவரி வழக்கில் சிக்கியிருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டார்.  வரும் வாரங்களில்  மேலும் சில கட்சிகள்   பா.ஜனதாவின் மறைமுக விளையாட்டில் சிக்கிவிடும் தற்போதைய சூழலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற 20 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே தேவை.

யார் நமது  அடுத்த ஜனாதிபதி ?


இதனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புதான் பிகாசமாகயிருக்கிறது.   அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா சுவராஜ், திரளெபதி மர்மு, மோகன்பகவத் பெயர்கள் அடிபட்டன. பகவத் மறுத்திருக்கிறார். அத்வானி மீது பாபர் மசூதி வழக்கு மறுபிறப்பெடுத்திருக்கிறது.   ஓடிசா மாநில பழங்குடி இனத் தலைவரும் தற்போதைய ஜார்கண்ட் கவர்னருமான திருமதி திரளெபதி மர்மு    இந்த அதிகாரமிக்க ஆசனத்தை அலங்கரிக்கலாம்.

7/9/16

காஷ்மீர் ஏன் எரிகிறது?

 காஷ்மீர்  ஏன் எரிகிறது?




கடந்த ஒரு மாதத்தில்

1018 வன்முறைச் சம்பவங்கள்
1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது
1000க்கும் மேல் துப்பாக்கி சூடு
3500க்கும் மேல் வீரர்கள் படு காயம்
கலவரத்தில் பலியானவர்கள் 70 பேர்
கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் 410 பேர்
 ________________________________________________________________________________

எரியும் நெருப்புக்கு எண்ணை

காஷ்மீர் போராட்ட தியாகிகளுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காஷ்மீர் உருவாகும்நாளுக்காக நாம் காத்திருப்போம். இன்னும் பல பர்கான்வானிக்கள் இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கையில்இறங்குவார்கள்
-நாவஸ் ஷெரிப்- பாகிஸ்தான் பிரதமர்

__________________________________________________________________________________  காஷ்மீர் எரியவில்லை                            

காஷ்மீரில் தேர்தலில் 61 % மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இது அவர்களுக்கு ஜனநாயகத்தில் அவர்களுக்கு இருக்கும்நம்பிக்கையைக் காட்டுகிறது. ஒரு சிலரை வைத்து பிவினை வாதிகள் வன்முறையைத் தூண்டுகின்றனர். காஷ்மீர் ஒன்றும்பற்றி எரியவில்லை.
ஷம்ஷேர் சிங் மன்னாஸ்
காஷ்மீர் பாஜக எம்.பி

_________________________________________________________________________________ 

கடந்த இரண்டாண்டுகளாகப் பதற்றமான காஷ்மீர் பகுதியில் இன்று இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது..அதுவே அங்கே தீவிரவாதம் வளர ஒரு களமாகவும் மாறியுள்ளது
காஷ்மீரில் ஹில்புல் முஜாகிதின் இயக்கத்தின் கமாண்டராக இருந்தவர் புர்ஹான் வானி என்ற 22 வயது இளைஞன். இவர்காஷ்மீர் விடுதலை பெறவேண்டும் என்று தனது வலைத்தளம். பேஸ்புக், ட்விட்டர் எல்லாவற்றிலும் போட்டோ, விடீயோஆடியோ எல்லாம் வெளியிட்டு எக்கச்சக்கமான ஃபாலோயர்களை கொண்டு பிரபலமானவர். இவர் தலைமையில் நடந்தபேரணியில் பல இளைஞர்கள் பாகிஸ்தான் கொடியுடன் கலந்து கொண்டபோது. பாதுகாப்பு படையினர் மீது தொடர்ந்துகல்வீச்சு தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். இவரைக் கடந்த மாதம் நடந்த ஒரு என்கவண்ட்டரில் பாதுகாப்பு படையினர்சுட்டுக் கொன்றனர். இதன் விளைவாகச் சற்றும் எதிர்பாராதவிதமாக எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் இளைஞர்கள்சாலைகளில் போர் புரியத் தொடங்கினர். கடும் வன்முறை வெடித்து இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர். பாதுகாப்புபடைகள் ரப்பர் குண்டுகளை பயன்படுத்துகின்றனர். இது ரத்த காயம் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதிவேகமாகத்தாக்குவதால் உடல் உறுப்புகள் செயலிழந்து போய்விடும். தாக்குதிலில் முகம், கண்களில் அடிபட்டவர்கள் அதிகம்.


இந்த வன்முறை காரணமாக பள்ளி, கல்லூரிகள்.கடைகள் பெட்ரோல் பங்குகள், வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன.இன்டர்னெட், மொபைல் போன் சேவைகள் முடக்கப்பட்டிருக்கின்றன. சுருக்கமாக சொல்லுவதானால் காஷ்மீரில் மக்கள்வாழ்க்கை கடந்த இரண்டு மாதங்களாக ஸ்தம்பித்து நிற்கிறது.
கல்விப் பின்புலம் வாய்ந்த புர்ஹான் வானி காஷ்மீரின் புதிய தலைமுறை போராளிகளின் அடையாளம். புர்ஹான் வானிஸ்கூல் ஹெட்மாஸ்டரின் மகன், பள்ளிப்படிப்பில் நன்றாக விளங்கிய புர்ஹான் வானி தனது 15-வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி அந்தப்பகுதியின் மிகப்பெரிய போராளிக்குழுவுடன் இணைந்தார் வானி மற்றும் அவரது சகோதரரைஅரசுப்படைகள் வீட்டுக்கு வரும் வழியில் நிறுத்தி அடித்து உதைத்து கடுமையாக இழிவுப் படுத்தியதாலேயேதீவிரவாதத்தைத் தனது பாதையாக வானி தேர்ந்தெடுத்ததாக சொல்லியிருந்தார்..
.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தனது படங்கள், தான் கண்ட களங்கள் என்று துப்பாக்கியுடன் புகைப்படங்களைவெளியிடத் தொடங்கினார். தனது சக போராளிகள் குழுவுடன் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அதாவது தீவிரவாதிஎன்றால் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற மரபை மீறியதால் புர்ஹான் வானியை ஒரு ஹீரோவாகப் பின்தொடரும் இளம் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது பதிவுகள் பல்வேறு கணக்குகளிலிருந்து பதிவானதால்அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் இவரது பதிவுகள், வீடியோக்கள் அவர்பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளது. இவரது இறுதிஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் .
 இவரது மரணத்துக்குப்பின் இவர் தியாகியாகஅறிவிக்கப் பட்டு பள்ளிகளில் அவரது வாழ்க்கை நாடகமாக நடிக்கப்படுகிறது.  நினைவு கிரிகெட் மாட்ச்கள் நடைபெறுகின்றன.மரணத்திற்குப் பின் மிகப்பெரிய ஹீரோவாக மதிக்கப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் புர்ஹான் வானியின் காட்டிய வழியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உருவாகும்தீவிரவாதிகள் எண்ணிக்கைவிட இந்திய பகுதியில் உள்நாட்டிலேயே தீவிரவாதிகள் பலர் உருவாகிவிடுவார்கள் என்றஅச்சம் இப்போது எழுந்திருக்கிறது. இவரது மரணத்திற்குப் பின் பெரிய அளவில் எழுந்திருக்கும் மக்களின் அனுதாப அலைமத்திய அரசுக்கு மிகவும் சவாலாகியிருக்கிறது.
புர்ஹான் வானி என்கவுண்டர் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட் செய்யும் போது, “என்னுடையவார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - சமூக வலைத்தளம் மூலம் அவர் போராட்டத்துக்கு திரட்டியஉறுப்பினர்களை விட தற்போது தான் புதையுண்ட சுடுகாட்டிலிருந்து போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டும் எண்ணிக்கைஅதிகமாகும் புர்ஹானின் திறமையை நாம் பார்க்கத்தான் போகிறோம்
நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஜம்மு காஷ்மீரில் பிரிவினை வாதிகள், தேசிய வாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.நாங்கள் பாக்கிஸ்தானுடன் சேரவிரும்புகிறோம் என்று சொல்லுபவர்கள் குறைந்தகொண்டுவரும் இந்த நேரத்தில் ஒருபிரிவினை வாதியின் மரணத்தை உயிர்த்தியாகமாக்கி ஒரு அரசியல் தலைவர் கொண்டாட ஆரம்பித்திருப்பது ஆபத்தானஎச்சரிக்கை. என்பதை உணர்ந்த நாட்டின் எல்லா முக்கிய கட்சியினரும் ஒன்று சேர்ந்து நல்ல முடிவை எடுக்கத்தயாராகியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
உடனடியாக காஷ்மீர் மக்கள் அமைதியான,இயல்பு வாழ்க்கை அளிப்பது ஒரு சில தீவிரஅமைப்புகளுடன் போரிடுவதை முக்கியமானது.

(இந்த வார கல்கியில் எழுதியது )