சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19/6/18

நிஜ நாயகன் நிழல் வில்லன்





இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையைச் சீரழித்த பெருமழை வெள்ளத்துக்கு சில நாட்களுக்குப் பின் நண்பர் ஒருவருக்கு ஒரு போன் அழைப்பு. “உங்கள் பகுதியிலிருந்து உதவி கேட்டு ஒர் கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் சென்று பார்த்து உண்மையாக இருந்தால் நீங்கள் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனம்மூலம் உதவுங்கள். ஆகும் செலவை நான் நன்கொடையாகத்தருகிறேன்.” நண்பருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி. காரணம் போனில் பேசியவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நானாபடேகர். நண்பருக்குச் சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஒரு ஷேர் டாக்சி பயணத்தில் கிடைத்த அறிமுகம் தொடர்ந்து நட்பாக மலர்ந்திருந்திருந்தது.
உதவியைக்கோரிய அந்த வேண்டுகோள் உண்மையானது என்பதால் நண்பரின் குழு அந்தப் பணியைச் செய்கிறது. செலவிடபட்ட கணிசமான பணத்தை விடக் கூடுதலாகவே தன் நன்கொடையை இந்த விஷயம் மீடியாவுக்கு போக வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அனுப்புகிறார் நானா படேகர்.
இந்திய சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் பலர் அவ்வப்போது தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன் வருவாயில் பெரும் பகுதியை(70%) எந்த ஆர்பாட்டமும் இல்லமல் நன்கொடையாக வழங்கிக்கொண்டிருப்பவர் நானா படேகர் மட்டும் தான்

எந்த இந்திய மொழிப் படமானாலும் ஹீரோவைவிட வலிமையானவராகப் படைக்கப்பட்ட வில்லனுடன் போராடி ஹீரோ ஜெயிக்கும் படங்களில் அந்த வில்லன் தன் நடிப்பால் மக்களின் மனதில் தனியிடம் பிடித்துவிடுவார். அவரது நெகட்டிவ் கேரக்டர் கொண்டாடப்படும் அளவுக்குப் பேசப்படும். படம் ஹிட்டாவதற்கு அவரும் ஒரு காரணமாக அமைந்துவிடுவார். ரசிகர்களால் போற்றப்படுவார்.
இன்றைய சூப்பர் ஹிட்டான ரஜனியின் “காலா” வில் வில்லானக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் நானாபடேகர் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். ஏராளமான பாலிவுட் படங்களில் ஹிரோவாக, வில்லனாக, மட்டுமில்லாமல் முக்கியப்பாத்திரங்களிலும் நடித்துத் தனியிடத்தைப்பிடித்து தக்க வைத்துகொண்டிருப்பவர்

“உணர்வுகளை வெறும் வசன்ங்களில் கொண்டுவர முடியாது. முக அசைவு, உடல்மொழியில் தான் அவற்றை வெளிகாட்டும் கலைஞதான் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்” என்று சொல்லும் நானா மராத்தி, இந்தி, கன்னடம், தமிழ் எனத் தனது நடிப்பின் எல்லயை உலகிற்கு புரிய வைத்து., இதுவரை 3 தேசிய விருதுகளையும் பல பிலிம் ஃபேர் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர்.
சினிமாவிற்காக நானாவான விஷ்வநாத் படேகர் கடந்து வந்தது மிகக்கடுமையான பாதை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திறந்தாலும் பள்ளிப்பருவம் அவருக்கு இனிமையானதாக அமைய வில்லை. தந்தையின் துணிவியாபாரத்தில் அவரது பார்ட்னர் ஏமாற்றியதால் ஒரே இரவில் ஏழையாகிப் போனது அவரது குடும்பம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே குடும்பத்துகாகப் பகுதி நேர வேலை செய்து பள்ளிக்குப் போனவர்.அப்போது செய்த வேலை சினிமா போஸ்டர் ஒட்டுவது. அதிலிருந்து எழுந்தது தான் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் வெறி எல்லாம். ஆனால் பாலிவுட் இவரை உடனே ஏற்க வில்லை. உயரம், கருப்புநிறம். முகம் எடுப்பாகயில்லை.ஹிந்தி உச்சரிப்பில் அதிக மாராட்டிய வாசனை போன்ற பல காரணங்கள் சொல்லி நிராகரிக்கப் பட்டவர். பின்னாளில். இது அனைத்துமே இவரது தனித்துவமாகப் பாரட்டப்பட்டது வேறு விஷயம்
.
தனக்குப் பிடித்த ஒவியத்தில் பட்டம் பெற ஜே ஜே காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்தார். ஆனால் தொடர்ந்து படிக்கப் பணமில்லை.மாரத்தி நாடகங்களில் நடித்துக்கொண்டே
சினிமா வாய்ப்புடன் வேலையையும் தேடிக்கொண்டிருந்தார். உனக்கு என்ன தெரியும்? எனக் கேட்டவரிடம் தன் ஓவியத்திறமை நம்பி ““பெயின்ட்டர்” (டிராயிங் ஆர்டிஸ்ட் என்று சொல்லதெரியாதால்) என்ற சொன்னவருக்குக் கிடைத்த வேலை ரோடுகளில் மக்கள் கடக்கும் போடுகளை பெயிண்டால் போடும் வேலை.
70களின் பிற்பகுதியில் நானா படேகர் தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பில் தன் திறமையை நிருபித்ததால் கிடைத்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு பாலிவுட்டில் தன் இடத்தைப் பிடிக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். முதன் முதலாக வில்லன் மற்றும் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கலாம் என்ற ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் நானா படேகர்.
.
அதிக அளவில் பணமும் புகழும் சேர்ந்தாலும் மிக எளிமையான வாழ்க்கைமேற்கொண்டவர். கோடிகளில் சம்பாதித்தாலும் தன் அம்மாவுடன் ஒரு சிங்கள் பெட் ரூம் பிளாட்டில் வசிப்பவர். தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும் மறக்காமல் கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர். அவ்வப்போது பலருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த இந்த மனிதரின் இந்தக் கருணை முகம் பெரிய அளவில் வெளிப்பட்டது சில வருடங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பெரும் வறட்சியை சந்தித்தபோது தான். விவசாயம் பொய்க்கவே ஏரளமான விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டபோது தான். நானாப்டேகர் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்த அதிர்ந்து போனார். உடனடியாகத் தன் சொந்தப்பணத்திலிருந்து இறந்த 62 விவசாயிகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 15000 ரூபாய் அன்றே கொடுத்தார்.


"தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால் உடனே என்னை அழையுங்கள்.... உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்...... உயிரை மட்டும் விட்டு விடாதீர்கள்...... நீங்கள் தான் இந்த நாட்டின் சொத்து"
விவசாயிகளுக்கு மத்தியில் அன்று பேசிய நானா படேகர் கூறிய வார்த்தைகள் இவை. இதை வெறும் மேடைப்பேச்சாக இல்லாமல் இதற்கான பணிகளைத் தொடர்ந்து இதைச் சிறப்பாகசெய்ய “ நாம் என்ற அமைப்பை உருவாக்கி நன்கொடைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
துவக்க நாளிலே கிடைத்த பணம் 80 லட்சம். சில நாட்களில் சில கோடிகளைத்தொட்டது. இன்று அந்த அறக்கட்டளை கிராமங்களில் விவசாயிகளுக்கு வேலை, குளங்கள் தூர் வாருதல் போன்ற பல சமூகப்பணிகளை சிறப்பாகச் செய்கிறது. பல நேரங்களில் நானாவே நேரடியாகக் கிராம சபை கூட்டங்களில் குறைகள் கேட்டு உதவிகளைத் திட்டமிடுகிறார்
.
விவசாயிகளுக்கு உதவுவது மட்டுமில்லாமல் விதவைகளின் மறுவாழ்வில் கவனம் செலுத்துகிறார். இன்று மஹராஷ்டிர கிராமங்களில் அரசியல் வாதிகளைவிட பிரபலமான இவர் ஒரு கட்சி துவங்கி அரசியிலுக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி. ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை என்கிறார்.
தான் செய்யும் எந்தப்பணியையும் அரப்பணிப்புடன் செய்பவர். நானா படேகர். அவரே எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ப்ரஹார். இதில் நானா ஒரு ராணுவ வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடிப்பதற்கென்றே இரண்டு ஆண்டுகள்வரை உண்மையாகவே ராணுவப் பயிற்சி எடுத்தார். இந்திய ராணுவத்தை சிறப்பாகக் காட்ட இப்படி இவர் செய்த நல்ல பணிக்காக இந்திய ராணுவத்தின் கெளரவ கேப்டன் ரேங்க் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சினிமாத்துறையைச் சாரத நணபர்கள் பலர் இவருக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள்மூலம் பலருக்கு சத்தம் இல்லாமல் நிதியுதவிகளைச் செய்து வரும் நானா படேகர், இதுகுறித்து தனது பேட்டிகளில் கூடப் பதிலளிக்க மறுத்துவிடுவார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மனதில் பட்டதை பட்டென்று வெளிப்படையாகப் பேசும் இவர் அதனால் கோபக்காரர் என்ற பெயரையும் பெற்றவர். அரசியல் வாதிகளையும், சிவ சேனா போன்ற அமைப்புகளையும் கூடக் கடுமையாக விமர்சனம் செய்தவர். பாஜகா பிரமுகர்கள் இருந்த கூட்டத்திலேயே நம் நாட்டில் ஜனநாயகம் வளர்ந்திருப்பதிற்பதற்கு காங்கிரஸ் காரணம் என்று சொன்னவர்.
993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்செய் தத்திற்கு சர்ச்சைக்குரிய முறையில் பரோல் வழங்கப்பட்டபோது இம்மாதிரி செய்வது தவறு என்று துணிந்து சொன்ன ஒரே நடிகர் இவர்தான்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அனைவரும் வரவேற்றபோது, "ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது... அவரின் குணத்திற்கு அரசியல் அவர் புகழை இழக்க வைத்து விடும்" என்று சொன்னவர் நானா படேகர். காலாவில் வில்லன் ரோலை ஏற்க தயங்கிய அவரை ரஜினி சந்தித்து ஊக்குவித்து அதை ஏற்க செய்த நேரம் அது.

எழுத்தாளர், இயக்குனர், கவிஞர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என்று பன்முகம் கொண்ட கலைஞர் நானா படேகர். மொழி என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு தன் பயணத்தைத் தொடங்கிநடிகன் என்ற இடத்திலிருந்து நல்ல மனிதன் என்ற பெயருடன் மக்கள் மனங்களில் அமர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் எட்டியதில்லை
.
படத்தில் ஹீரோவாக வாழும் பலர் நிஜவாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் பல படங்களில்,வில்லனாகவே முன்னிறுத்தபட்டிருக்கும் நானா படேகர் நிஜத்தில் ஹீரோவாகவே பல குடும்பங்களைக் காப்பற்றி வருவது ஒர் ஆச்சரியமான உண்மை




4/6/14

எம்ஜிஆரை நிராகரித்த ஹாலிவுட் டைரக்டர்

இந்திய சினிமாவுக்கு 100 வயதானதை  நம்மவர்கள் ஆராவாரங்களுடன் பிரமாண்ட மேடைகளில் மெகா சைஸ் கலக்குழுக்களுடன் ஆடிப்படி, கொண்டாடி மறந்து போய்விட்ட நிலையில், அமைதியாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு அமெரிக்க டைரக்டர் பற்றி  ஒரு அருமையான ஆவணபடத்தை  எடுத்திருக்கிறார். திரு.கரண்பாலி இவர் புனா பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தவர் விளம்பர, ஆவணபடங்கள் எடுப்பவர். என்பதை தாண்டி இந்திய சினிமாவை  காதலிப்பவர். . ராஜீவ் மேன்னின் திரைப்பட கல்லூரியிலும்,எல்.வி பிராசாத்  இன்ஸ்டியூட்டிலும் அழைப்பின் பேரில் வகுப்புகள் நடத்துபவர்.
தமிழ் சினிமாவுடன் நேரடி தொடர்பு இல்லாத இவருக்கு எப்படி தமிழ் படங்கள் இயக்கிய இந்த டைரக்டரை பற்றி ஒரு ஆவணபடம் எடுக்கும் எண்ணம் வந்தது ?.
நான் சென்னையில் படித்தவன் என்பதால் தமிழ் சினிமா பற்றி ஒரளவு தெரியும். தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரையை என் தளத்தில் வெளியிட செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது பால்வில்லியம் என்பவரின் “என்சைகோளாபிடியா ஆப் இந்திய சினிமாவில் முதலில் டங்கன் பற்றி அறிந்தேன். தொடர்ந்து செய்திகள் சேகரிக்க  துவங்கியபோது பிரமித்துப் போய் தமிழ் சினிமாவிற்கு இத்தனை செய்திருக்கும் இந்த அமெரிக்கரைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்டிரி எடுத்தால் என்ன என  தோன்றியது.   எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்திருக்கும் இந்த டைரக்டர் டெக்னிக்லாகவும் பல விஷயங்களை, இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.  டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான். என்பதையெல்லாம் அறிந்த போது ஆர்வம் அதிகமாயிற்று.   
  ஐரிஷ் வம்சாவளி அமெரிக்கரான டங்கன், சினிமாகலையை  பிரான்ஸில் படித்தவர். அப்போது இந்தியாவிலிருந்து வந்து அங்கு அவருடன்  படித்து கொண்டிருந்த ஒரு மாணவர் எம். ஆர் டாண்டன்.  தன் தந்தை பம்பாயில் ஒரு புதிய ஸ்டூயோ   துவங்கப்போவதால் உடன் வந்து 6 மாதம் உதவி செய்யும்படி அவர் கேட்டதின் பேரில் 1935ல் இந்தியா வந்தார்..  ஆனால் அந்த ஸ்டுடியோ துவங்க படாதால், கல்கத்தாவில் ஷூட்டிங் நடந்து  கொண்டிருந்த ஒரு தமிழ் படத்தில் டாண்டனின் உதவியுடன் உதவி இயக்குனரானார்.. அந்த படம் நந்தனார். அதன் மூலம் தமிழ் சினிமாவால்  ஈர்க்கபட்டு அடுத்த 15 ஆண்டுகள் 1950 வரை தமிழ் நாட்டில் தங்கி  சினிமாவில் பெரும் புரட்சிகளை செய்திருக்கிறார்.  15 ஆண்டுகளில் இவர் இயக்கியது 17 தமிழ் படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்.  எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான்.
இந்த ஆவணபடத்தின் மூலம் அறிந்து கொள்ளும் சில விஷயங்கள் ஆச்சரியமாகயிருக்கிறது. எம்ஜி ஆர் ரின்  முகத்தில்,கீழ் தாடைப்பகுதியில் ஒரு சின்ன குழி இருந்ததால் அவர் முகம் சினிமாவிற்கு ஏற்ற முகவெட்டுடன் இல்லை என டங்கனால் நிராகரிக்கபட்டிருக்கிறார்.  ஆனால் படத்தயாரிப்பாளார் மருதாசலம் செட்டியார். ”படத்தின் வசனகர்த்தாவின் வசனங்களை நம்பிதான்  இந்த படமெடுக்கிறேன்.  இந்த நடிகர் அவரால் சிபார்சு செயபட்டவர்.. அவர் சிபார்சை தட்ட முடியாது.” என்றவுடன். ஒரு சின்ன ஒட்டு தாடியின் மூலம் அந்த குழியை மறைத்து எம்ஜியாரை அறிமுகபடுத்தியிருக்கிறார் டங்கன். அந்த வன கர்த்தா - கலைஞர் !. படம் சதி லீலாவதி. அந்த படம் ஹிட்டானதில் எம்ஜிஆருக்கு பல வாய்ப்புகள்  கிடைத்தன.
ஆங்கில மட்டுமே அறிந்த இவர் எப்படி தமிழ்படங்களை டைரக்ட் செய்தார்?  தமிழில் தெரிந்த மிக சில வார்த்தைகள்  கொண்டு பணியாளர்களை சமாளித்தாலும்,படங்களின் கதையை ஆங்கிலத்தில் தயாரித்து கொண்டு, பேசும் வசனங்கள் புரியாவிட்டாலும் கதையை நன்கு புரிந்துகொண்டு வசனங்களை சரிபார்க்க அந்த கதாசிரியர்களை எப்போதும் உடன் இருக்கும்படிசெய்திருக்கிறார். கல்கி, சதாசிவம், இளங்கோ போன்றவர்கள் பெரிதும் உதவியிருக்கின்றனர்.  டெக்கினிக்லாக பல விஷங்களை செய்து டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய கோணங்கள். ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான்.  , இவர் படங்களில் காதல் காட்சிகள் நெருக்கமாக இருந்தற்காக கடுமையாக விமர்சிக்கபட்டிருக்கிறார்.


எம் எஸ் சுப்புலட்சுமி நடித்து டங்கள் இயக்கிய மீரா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவுடன் அதை இந்தியிலும் டைரக்ட் செய்தவர் இவர். மீரா படத்தில் எந்த கோணத்தில் நாயகியின் முகத்தை அழகாக காட்டமுடியும் என்பதை  முகத்தை மட்டும் பிளாஸ்டாபாரிஸில் சிலையாக செய்து பல கோணங்களில் காமிராவழியாக பார்த்து தீர்மானித்திருக்கிறார். இன்று செய்யபட்டு கொண்டிருக்கும் பல டெக்னிக்கல் விஷயங்களை இந்த மனிதர்  அன்றே முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டிருக்கிறது. எடிட்டிங்கில் அது இரவாக்கபட்டிருக்கிறது. இவர் படங்களின் போஸ்டர்களில் கதாநாயகர்களின் பெயரைக்கூட போடமல் டைரக்க்ஷன் எல்லிஸ். ஆர் டங்கன் ஹாலிவுட்  என விளம்பர படுத்தியிருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு பிரபலமான இயக்குனாராக இருந்திருக்கிறார்.
 இன்று ஒரு படம் ”உருவான கதை”  ஒரு தனிப்படமாக்க பட்டு விளம்பரங்களில் பயன் படுத்தபடுகிறது. 1940களிலேயே டங்கன் தான் படமெடுப்பதையே படமாக்கியிருக்கிறார். குடும்ப சுழ்நிலை காரணமாக,1950ல் அமெரிக்கா திரும்பிய டங்கள் அங்கு ஹாலிவுட் படங்களுக்கு இந்தியா பற்றிய ஆலோசனைகள் வழங்கும் வல்லுனாராக  தன் இறுதிக்காலம் வரை பணியாற்றியிருக்கிறார்
இந்த டாகுமெண்ட்ரிக்காக , தகவல்களை சேகரிப்பது எளிதாக இல்லை. என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாக்களை பொருத்துவரையில் ஒரு நல்ல ஆவணகாப்பகம், இல்லை. தகவல்கள் தருபவர்களை பற்றிய பட்டியலும் இல்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதியிருக்கும் திரு தியோடர் பாஸ்கரன் அவர்களை எனக்கு தெரியும். அவர் 2001ல்  டங்கன் இறந்த ஆண்டு அவர் சுய சரிதை வெளியாகியிருப்பதாக சொன்னார். ஆனால் அவரிடம் அந்த புத்தகம் இல்லை. ஒரு பிரதி சிவேந்திரா சிங் என்பவரிடம் இருப்பது தெரிந்தது. இவர்  புனே இன்ஸ்டியூட்  ஆவணகாப்பக பாதுகாவலர் நாயர் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்தவர். அவரைத்தொடர்பு கொண்டு அந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். அந்த நூலின் இணை ஆசிரியர் பார்பாரா ஸ்மிக் என்ற பெண்மணி. கூகுளில் அலசி அவரது இ மெயிலை கண்டுபிடித்து தொடர்பு கொண்டேன்.  டங்கன் அவரது குறிப்புகளையும், படங்களையும் வெஸ்ட் வெர்ஜியா பல்கலைகழகத்திற்கு கொடுத்துவிட்ட விபரங்களை அவர் சொன்னார்.  என்நோக்கம் தமிழ் சினிமாவிற்கு டங்கனின் பங்களிப்பு பற்றி  அதிகம் சொல்லவேண்டும் என்பதால் அவரது சுயசரிதையை விட அவருடைய படைப்புகளை பற்றி அதிகம் ஆராய்ந்து  கொண்டிருந்தேன். பல்கலைகழகத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் நிறைய உதவினார்கள். படத்தின் அவுட் லைன் ரெடியாகி தயாரிப்பை துவங்கும் நேரத்தில் தியோடர்பாஸ்கர் பங்களுரில் வசிக்கும் எம். எஸ் சுப்புலக்‌ஷ்மியின் மகள் ராதாவிஸ்வநாதனை அறிமுகபடுத்தினார். இவர் சகுந்தலை, மீரா படங்களில் சிறு குழந்தையாக நடித்தவர். டங்கனின் இயக்கத்தை பார்த்தவர். அவர் சொன்ன தகவல்கள் படத்தை சிறப்பாக்கியது. மந்திரி குமாரி படம் தயாரிக்கபட்டபோது டங்கனுடன் பணிசெய்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டது. என்ற தகவலையும், எடிட்டிங்கில் அது இரவு காட்சியாக மாற்றபட்டது என்பதையும் சொன்னார்.
படம்  தயாராவது தெரிந்ததும் பலர் தகவல் அனுப்பினார்கள். ஆனால்  நான் சரியான, ஆதாரபூர்வமான விஷயங்களை மட்டுமே பதிவு செய்வதில் கவனமாக இருந்தேன். சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகை அலுவலகங்களை/ நிருபர்களை/சினிமாபற்றி எழுதுபவர்களையெல்லாம்  நானே நேரடியாக தொடர்பு கொண்டேன். சிலர் உதவினார்கள். ஒரு  மூத்த சினிமா பத்திரிகையாளார் தன்னிடம் தகவல்கள் இருப்பதாகாவும் ஆனால் உதவ முடியாது என்றும் சொன்னது ஒரு ஆச்சரியம்.
டங்கன் படங்கள் இயக்கிய காலத்தில் ஸ்டூடியோக்கள் இருந்த இடங்களை காட்டி,, அவர் அறிமுகபடுத்திய டிராலிகள் போன்ற பல தகவல்கள் கொடுத்தவர் நண்பர் நடிகர் மோகன் ராம். இவர் தமிழ்சினிமாவின் தகவல் சுரங்கம்.  தமிழ் சினிமாவை ஆராய்ந்து டாகடர் பட்டம் வாங்கியிருக்கும் திருமதி உமா வாங்கலும் நிறைய தகவல்கள் தந்து உதவினார். இந்த நண்பர்களின் உதவியினால்தான்  பேட்டிகள், காட்சிகள் இணைப்பு உரைகள்  என அழகான தொகுப்பாக  படம் உருவாகியிருக்கிறது.” என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாவை  நேசிப்பவர்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.இது.
அமெரிக்காவில் டங்கனின் ஊரில் முதலில் திரையிடபட்டு இப்போது பல  இந்திய, அமெரிக்க நகரங்களின் பிலிம்சொஸைட்டிகளில் திரையிடபட்டிருக்கிறது.  .
தமிழ் சினிமாவின்  வளர்ச்சிக்கு  முக்கிய பங்களித்த அமெரிக்கர் டங்கன் பற்றிய ஆவணப்படம் தயாரிக்க பட்டிருப்பது  சந்தோஷமாக இருந்தாலும் அந்த படத்தையும் அதைத் தயாரித்தவரை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
கல்கி 1/06/14)


14/1/13

தர்ம யுத்தத்தில் ஜெயித்தவர்கள்






            இனிய பொங்கல் வாழ்த்துகளுடன்

தர்ம யுத்தத்தில் ஜெயித்தவர்கள்



ஹைடெஸிபலில் ஒரு டைட்டில்சாங், ஆடம்பர வீடுகள் ,ரிச் காஸ்டியூம், அழுகை, மருமகள் மாமியார் சண்டை, குரோதம், பழிவாங்கல், கடத்தல் சாமியார், ஆவி, பேய்கள் போன்றவைகள் தான் தமிழ் டிவிசீரியல்களின் இலக்கணம் என்றிருக்கும் நிலையில் தர்மயுத்தம் மூலம் ஒரு மெகா தொடரின் ரசனையை புதியதொரு பரிமாணத்திற்கு விஜய் டிவி எடுத்துச்சென்றிருக்கிறது. முழுக்க முழுக்க வழக்கறிஞர்கள் பாத்திரங்கள் மூலமே சமூக பிரச்னைகளையும் அதைகையாளும் அவர்களுக்கிடையே யான ஈகோ மற்றும் குடும்பபிரச்சனைகளை பேசும் இதில் மெல்லிய இழையாக காதலும்,ஏமாற்றமும் உறவுகளின் கனமும் சொல்லப்படுகிறது. மாறுதலான இந்த டிவி தொடரின் தயாரிப்பாளர் அரவிந்கிருஷ்ணாவையும்அவரது டீமையும் சந்தித்தபோது…

அரவிந்த் கிருஷ்ணா பி.ஸி.ஸ்ரீரமுடன் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளார். பள்ளியில் படிக்கும்போதே சினிமாவில் போட்டோகிராபராக சாதிக்க துடித்து அப்போதே பி,ஸி யிடம்போய்  வேலைகேட்டிருக்கிறார். ”தம்பி படிச்சுட்டு அப்புறம் வா” என்று சொன்னவரிடம் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்தவுடன் போய் சேர்ந்தவர். விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தில் பணி செய்யபோகிறார். இந்த ஓளிப்பாதிவளார் ஏன் தயாரிப்பாளரானர்?  ”அது ஒரு இனிய விபத்து. விஜய் டிவிக்கு வேறு ஒரு விஷயமாக போனபோது  டிவி சீரியல்களின் தரம் பற்றி பேச்செழுந்தது.  நான் உணர்ந்ததைசொன்னபோது மாறுதலாக நீங்கள் செய்யமுடியமா? என கேட்டார்கள். தமிழ் சின்ன திரையில் தொடர்சீரியல்களை தூர்தர்ஷனில் அறிமுக படுத்தியவர் என் தந்தையார் கிருஷ்ணஸாமி. நான் விரும்பவதை படிக்க அனுமதித்து சினிமாத்துறைக்கு போகவிரும்பியதை ஆதரித்த அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நானும்  சின்னதிரையில் சில முதல் முயற்சிகளை செய்யவது பற்றி சிந்திக்கொண்டிருந்தவன் நான். கேட்டவர்களிடம்  தர்மயுத்தத்தின் ஒன்லைனை சொன்னவுடன்   உடனே ஆரம்பியுங்கள் என ஒப்புதலும், ஊக்கமும் தந்தவர்கள் ஸ்ரீராம், ,பிரதீப்,.
ரமணன். இந்த மூவர்தான் விஜய் டிவியின் பல வெற்றிகளுக்கு பின்னாலிருக்கும் பார்வையாளர்கள் அறியாத முகங்கள். இவர்களுக்குதான் இந்த வெற்றியின் பெருமை சேரவேண்டும் “ என்கிறார்.
 எல்லா நடிகர்களும் கச்சிதமாக அவர்களின் பாத்திரங்களுக்கு பொருந்துகிறார்கள். இந்த காஸ்டிங் தேர்வை எப்படி செய்தார்கள். “அரவிந்த் கிருஷ்ணாவின் நண்பர்கள் வட்டம் பெரிது. அவர்களிடம் நிறைய பேசி ஆராய்ந்து செய்தோம். ரவி ராகவேந்தரை தவிர அனைவரும் டிவி சீரியலுக்கு புதியவர்கள், கிட்டி போன்ற சீனியர்களுடன் இளைஞர் அணியையும் முகம் அறிந்த ஆனால் டிவியில் இதுவரை பார்க்காத முகங்களை காட்ட விரும்பினோம்.” என்கிறார்.தொடரின் இயக்குநர் அபிநந்தரன். இவர் புகழ்பெற்ற ஒவியர் ஆதிமூலத்தின் மகன் ,  (இந்த வித்தியாசமான பெயர் ரவிந்திரநாத் தாகூரின் சகோதரான பிரபல ஒவியருடையது)  பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தபின் ராஜீவ் மேனன் படங்களில் அஸோசியட்டாக பணியாற்றியவர்.  “நமது சீரியல்கள் பெண்களை பலவினமானவர்களாகவே காட்டுகிறது. அவர்களுடைய பொரபஷனல் டைமென்ஷன்களை சொல்லுவதில்லை,.இதில் அதை சொல்ல முயன்றிருக்கிறோம் இதுவரை சீரியல்களில் நடிக்காத கிட்டி சினிமாவில் சாக்லேட் பாயாக மட்டுமே அறியபட்டிருந்த அப்பாஸ், 
நாடகத்துறை படித்திருந்தாலும் பாடகியாக பிசியாக இருக்கும் ஸ்ரீலேகா அவரது கணவர்ஸ்ரீராம் எல்லோரும் கான்செப்ட்டை கேட்டவுடன் யெஸ் சொன்னார்கள்.” என்கிறார்
இந்த சீரியலில் நடிப்பவர்களில் பலருக்கு  டிவி கலைஞர்கள் என்பதற்கு அப்பாலும் ஒருமுகம் இருக்கிறது. கிட்டி ஒருமேனேஜ்மெண்ட் ஆலோசகர், ரவிராகவேந்திரா ஒரு வங்கியில் மூத்த அதிகாரி, கார்திக் குமார் ஆங்கில நாடகங்கள், கார்ப்ரேட்நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிருவனத்தின் இயக்குனர். லக்ஷ்மிபிரியா மனிதவள அதிகாரி ஸ்ரீலேகாவும் ஸ்ரீராமும் பின்னணி பாடகர்கள். இவர்களின் சொந்த அனுபங்களும் இந்த தொடரில் அவர்களின் நடிப்பை எளிதாகியிருக்கிறது.

  “என்னை நடிக்க அழைத்த போது நான் இன்னும் சினிமாவிலிருக்கிறேனே ஏன் டிவி சிரியல்? என்றேன். கதையையும் அதைச்செய்யபோகும் டீமியையும் கேட்ட பின்னர், தியட்டரையும் நடிப்பதையும் நேசிக்கும் எனக்கு இது நல்ல வாய்ப்பு எனபட்டது மறுக்க முடியவில்லை” என்கிறார் கார்திக் குமார். வானம் வசப்படும் என்ற தன் முதல் படத்தில் ஒரு அட்வகேட் கேரக்டருக்காக பெற்ற பயிற்சி இப்போது உதவியது என்கிறார் அர்ஜுனாக சிறப்பாக நடிக்கும் இந்த பொறியியல் பட்டதாரி.

சட்டம் படித்த நான் கோர்ட்டுக்கு போகமலிருந்தாலும்,  இந்த சீரியலில் ஒரு சீனியர் அட்வகேட் நம்பி பாத்திரத்தின் அழுத்தையும், சொல்லுப்படும் விஷயத்தை தெளிவாக சொல்லவும் அது உதவுகிறது என்கிறார் ரவிராகவேந்திரா. மேடை நாடகம்,சின்னதிரை,சினிமாஎன்று நீண்ட அனுவமுள்ள இவர் என்றும் இளைஞராகவே காட்சியளிக்கும் மார்க்கண்டேயர். இந்த கூட்டணியின் வெற்றி டிவி சீரியல்களில் ஒரு புதிய டிரெண்ட்டை உருவாக்கும் வாய்ப்புக்கள் அதிகம். உடனே இல்லாவிட்டாலும் நிச்சியம் இருக்கிறது என்கிறார்.
சமூக அக்கரையுள்ள இரண்டு அல்லது மூன்று வழக்குகளை  தொடர்ந்து வரும்படி திரைக்கதை அமைந்திருக்கும் இந்த தொடரில் அதற்கான ஆலோசனைகளையும் சட்ட பிரச்சனைகளில் சிக்காமலிருக்கவும் நகரின் முன்னணி வழக்கறிஞர்களின் நிருவனம் வழங்கியிருக்கிறது. நமது கோர்ட்களில் வக்கீல்கள் உணர்ச்சிவசப்படாமல் பேசுவதை நடிகர்க்ளுக்கு காட்டியிருக்கிரார்கள்.  தயாரிப்பாளர் அரவிந்த் கிருஷ்ணா நவீன டிஜிட்டல்  ஓளிப்பதிவில் விசேஷ பயிற்சிபெற்றவராக இருப்பதால், டெக்னிக்கல் விஷயங்களில் சில புதிய பாதைகளை துவக்கியிருக்கிறது இந்த தொடர். வீடியோவும்  எடுக்கும் வசதி உள்ள கேனன் 5d என்ற ஸ்டில் கேமிராவில் எடுக்கபட்டிருக்கிறது

இது போட்டோபத்திரிகையாளர்களுக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதைபயன் படுத்தி எடுக்கபட்டு பின்னர் சின்னதிரைக்கு ஏற்ப மாற்றபடுகிறது. கேனன் நிறுவனமே பிரமித்த விஷயம் இது. ஒரே இடத்தில்காட்சிகளின் களமான  அட்வகேட்களின் அலுவகங்கள் கோர்ட், காபிஷாப் எல்லாம் அடுத்தடுத்து  ஒரேசெட்டில் போடபட்டிருப்பதால் காட்சிகளை தொடர்ந்து எடுக்கமுடிகிறது. எல்லா காட்சிகளிலும் ஒளிஅமைப்பு சீராக செய்யமுடிகிறது. வேலை சீக்கரம் முடிகிறது. இப்படிஒரு சீரியல் எடுக்கபடுவது இந்தியாவில் இது முதல் முறை என்கிறார் அர்விந்த் கிருஷ்ணா. படபிடிப்பை பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவர்கள் வந்து பார்த்து குறிப்புகள் எடுப்ப்தை பெருமையாக கருதும் இவர் சினிமா துறையினர் யாரும் இதுவரை இந்த புதிய முயற்சியை பாராட்டவில்லை என வருந்துகிறார்.

. இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்லணும். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரைக்கும் கூட சூட்டிங் போனாலும் சோர்வே தெரியாது அந்த அளவுக்கு வேகமாக போகும். அதனால்தான் எங்கள் டீம் இதனை சீரியஸ் என்று சொல்லுவோம்.என்கிறார் அழகான வக்கிலாக வரும் அனுஜா ஐயர்.  உன்னைபோல் ஒருவன் படத்தில் டிவி நிருபராக ஒரு கையில் சிகரெட்டும், மைக்குமாக மிரட்டிய பெண்ணை நினைவிருக்கிறதா? அவரேதான். வீண்மீன்கள் படத்திற்கு பின் இந்த தொடரில் நடிக்கும் இவர் டெல்லியில் மாஸ்கம்யூனிகேஷன் படித்தவர். கருப்புகோட்டை அணிந்தாலே ஒரு கம்பீரம் வருகிறதுஎன்கிறார்.
தன் இயல்பான நடிப்பால் பார்ப்பவர்களின் மனதில் சராதாவை நிறுத்தியிருக்கும்   ல‌ஷ்மிபிரியா மனித வளத்துறையில் பட்டம் பெற்றிருப்பவர்.  கே.பாலச்சந்தர் பட்டறையில் உருவானவர். அவர் மேடை நாடகங்களுக்கு புத்துயிர் கொடுக்க முயன்றபோது தேர்ந்தெடுக்கபட்டு பயிற்சிஅளிக்கபட்டவர். இந்த சிரியலை தொடர்ந்து  திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகயிருக்கிறார். இவரைப்போலவே  அஸ்வின், மணி, பாத்திரங்களில் நடிக்கும் பாலாஜி ராஜசேகருக்கும் பிரவீனுக்கும், பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
தொடரில் சீனியர் சுந்திரம் எப்போது டில்லியிலிருந்து திரும்பிவருவார்?, அர்ஜனுக்கும் ராம்மோஹனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தில் யார் ஜெயிக்க போகிறார்கள்? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சியமாக  இதில ஜெயித்திருப்பவர்கள் சின்ன திரை சீரியல்களுக்கு புதிய பார்மெட்டையும் இயல்பாக நடிக்கும் ஒரு குழுவையும் அறிமுகபடுத்தியிருக்கும் விஜய் டிவி தான்.
கல்கி 20/01/13

24/7/12

2012 ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் ஒரு சினிமா

 

இங்கிலாநில் 150 திரையரங்குகளில்   திரையிடபட்டிருக்கும்  ஒரு படத்திற்கான இரண்டு மாதத்திற்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம்  எந்த புதிய ஹாலிவுட் படமுமில்லை. ஒரு 31 வருட பழைய படம்  நம் கர்ணனைப் போல  டிஜிட்டல் டெக்னாலஜியில் புதுபிக்கபட்டிருக்கும். ஒரு படம். தொழில் நுணுக்கத்துடன் தயாரிக்கபட்டிருக்கும் படத்தின் பூளுரே டிவிடியும் விற்று தள்ளி கொண்டிருக்கிறது.