வெற்றி பெற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெற்றி பெற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28/8/11

புத்திசாலிகளே வாருஙகள்




“இந்த விஷயத்தை அரசு ஏன் சொதப்புகிறது. இன்னும் சற்று புத்தி சாலிதனமாக செய்திருக்கலாமே என்ற எண்ணுபவரா  நீங்கள்?  அரசு பணியில் இல்லாவிட்டலாலும் உங்கள் திறமையினாலும் அனுபவத்தினாலும் வாய்பு ஒரு கிடைத்தால் சவாலாக ஏற்று சாதிக்க  விருப்புகிறவரா நீங்கள் ? அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் என்று சொல்லப்படும் மாறுபட்ட சிந்தனையாளாராக அரசுக்கு எதாவது புதிய யோசனை வைத்திருப்பவரா ?  இருக்கும் வேலைக்கு லீவு  போட்டுவிட்டு வாருங்கள். சேர்ந்து உழைப்போம். புதியதோர் உலகம் செய்வோம்- என்று அழைக்கிறது கர்நாடக அரசு.

இந்திய நாட்டை அறிவுசார்ந்த நாடக மாற்றும் குறிக்கோளுடன் பிரதமர் “தேசிய அறிவுசார் ஆணையத்தை “ (NATIONAL KNOWLEDGE COMMSSION)  அமைத்திருக்கிறார். பொருளாதார மேதைகளும், சிறந்த அறிஞர்களும் உறுப்பினாராகளாயிருக்கும் இதன் தற்போதைய தலைவர் திரு. சாம்பிட்ரோடா.
கர்நாடக அரசின் முதல்வர் எடியூரப்பா 2008ல் தனது அரசுக்கு உதவ இதே அடிப்படையில் கர்நாடக நாலெட்ஜ் கமிஷனை   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலமையில் அமைத்தார்.  அந்த அறிவுசார்மையம் தான் இந்த அழைப்பை விடுத்திருகிறது. “ நீங்கள் காணவிரும்பும்  மாற்றமாக முதலில் நீஙகள் இருங்கள்” “ என்ற அண்ணல் காந்தி அடிகளின்  வார்த்தைகளுகேற்ப   ‘ ஞானம்” “ என்ற திட்டத்தை உதவித்தொகையுடன் அறிவித்திருக்கிறது.  ஒரு குறிபிட்ட திட்டதை திறம்பட செயல் படுத்துவது, ஊழியர்களுக்கு ப்யிற்சிஅளிப்பது,  ஆராய்ந்து அறிக்கைஅளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட தகுதியும் ஆர்வமும் உள்ள 28 வயதுமுதல்-40வயது வரை உள்ள இளையதலைமுறையினரை- தொழில்துறை தகுதியுடன் பணியிலிருப்பவர், சொந்ததொழில்செய்பவர், இல்லத்தரசி  என்று எலோரையும்  அழைகிறது இந்த ஆணையம். குறைந்த பட்சதகுதி பட்டபடிப்பு,,  5 ஆண்டு முன் அனுபவம் போன்ற விபரஙகளுடன்  இனையதளத்தில் அறிவிப்பு வெளியான உடனே மனு செய்திருப்பவர்கள் 300 பேர். பல ஆயிரகணகானவர்கள் இணைய தளத்தை பார்ப்பது பதிவாகி கொண்டிருக்கிறது.
மனுசெய்தவர்களுக்கு இரண்டுகட்ட தேர்வு. மனுக்களிலிருந்து முதல் கட்ட பரிசீலனையில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் முதல் கட்ட நேர்முக தேர்வு நேரடியாகவோ அல்லது டெலிபோனிலோ நடக்கும். இதில் தேர்ந்தவர்கள்  மட்டும் நேர்முகத்திற்கு அழைக்கபடுவார்கள். இராண்டாம் கட்டதில் குழுவிவாதம், தனி நேர்முகம் போன்றவை களினால் தேர்ந்தெடுக்கபடுபவர்கள் ஆறுமாதம் முதல் ஒரு வருடம் வரை பணிசெய்ய வேண்டும் உதவித்தொகை  மாதம் ரூபாய் 40000/. தேர்வு செய்யபட்டால்,தற்போது இருக்கும் பணியில் நீண்ட விடுமுறைக்குபின் மீண்டும் சேரும் உரிமையும்  உண்டு. இவர்களின் பணிகள் அந்தந்த துறை செயலர்களால் நேரிடையாக கண்காணிக்கபடும்.  இவர்களின் பணிகளில் முன்னாள் அதிகாரிகள்,வல்லுனர்கள், வழிகாட்டிகளாக இருந்து உதவுவார்கள்.பணிகால இறுதியில் எதாவது ஒரு துறையில் திட்ட அறிக்கை சமர்பிக்கவேண்டும். பின்னர் மீண்டும் தஙகளது பணிக்கே திரும்பிவிடலாம். செய்த திறமையான பணியின் அடிபடையில் நாலெட்ஜ்கமிஷன் அதன் வேறு திட்டங்களுக்கு  மீண்டும் உதவ அழைக்கபடகூடிய வாய்ப்பும் உண்டு. .
அறிவிக்கபட்டதிலிருந்து இந்த திட்டதிற்கு வந்து குவியும் விண்ணபஙகள், மேல்விபரங்கள் அறிய வரும் எண்னற்ற போன்கள் பற்றியும் அறியும்போது  அரசின் திட்ட பணிகளில் உதவ  காத்திருக்கும் இளய தலைமுறையையினரையும்,    சிறந்த  புத்திசாலிகளை  அரசு பணிகளுக்கு பயன்படுத்திகொள்ள வேண்டிய அவசியத்தை  உணர்ந்த ஒரு  மாநில அரசையும் புரிந்துகொள்ளமுடிகிறது.
பக்கத்து வீட்டை பார்த்து  நாமும்  செய்யலாமே?       

5/12/10


எண்ணங்களின் வரைபடம்

எந்த ஒரு வெற்றிக்கும் பின்னால் திறமையான திட்டமிடலிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும்  தெரிந்த விஷயம். திட்டமிடுவதில்  வெறும் மனத்தளவில், நெருங்கியவர்களின் ஆலோசனையின்படி,  வரிசைப்படுத்தி ஒரு தாளில் அட்டவணையிடுவது  போன்ற பல வகைகள். சமீப காலங்களில் “”  (mind maping) என்ற எண்ணங்களை வரைபடமாக எழுதிக்கொள்வது என்ற முறை பயன் படுத்தப்படுகிறது. பயன் படுத்தி வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால் இந்த முறை குறித்து அதிகளவில் புத்தகங்கள் வந்துகொண்டிருகின்றன. சில அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டது.

எண்ண ஓட்டங்களை வெறும் வரி வடிவமாக மட்டுமில்லாமல், ஒரு வரைபடமாக வடிவமைத்தால் முளையில் ஆழமாக பதிந்துவிடும்.  அது செயலாற்ற மிக உதவியாகயிருக்கும் என்பது இந்த முறையின் அடிப்படை தத்துவம்.  சிறந்த ஒவியர், கட்டிடகலைநிபுணர், இயந்திர வடிவமைப்பாளார் என்று பலகலை மேதையாக அறியபட்டிருக்கும் லீயோனார்டாவின்ஸி,  படைப்புகளின்  பல குறிப்புகளில் பல  இந்த முறை பயன் படுத்தப்பட்டிருப்பதை  இன்று பார்க்கமுடிகிறது. இதைப்போல் 17ம் நூற்`றாண்டில் வாழ்ந்த மேதை கலீலியோ, மற்றும் “குவாண்டம் எலெட்ரோ டயனமிஸம்” என்ற பெளதிக தத்வத்தை உருவாக்கி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஃபெயின் மென் , விஞ்ஞானி, ஆல்பர்ட் அயின்ஸ்டின் போன்ற பலரும் பயன்  படுத்தியிருக்கும் இந்த முறையை பற்றி ஆராய்ந்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர் திரு. டோனி புஸ்ஸன்.(tony buzan) 100க்கு மேற்பட்ட நாடுகளில் 30 மொழிகளில் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கபடுகிறது. மைக்க்ராஸாப்ட், போயிங், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகயிருக்கும் இவரது சமீபத்திய புத்தகத்தில் இந்த  மைண்ட் மாப்பிங்கை  எப்படி தனி நபர் மேம்பாட்டிற்கு பயன் படுத்தமுடியும் என்பதினை விவரிக்கிறார்.
 ஒரு நகரின் பல பெரிய வீதிகளும்  சிறிய கிளைதெருக்களும் வளைந்து நெளிந்து நகரின்  மத்திய பகுதியை அடைவதைப்போல,    நமது எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அடையும் பல வழிகளாக     வரைபடமாக்கி கொள்ளும்  பயிற்சி,    எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுகொள்ள, திட்டமிட, பல விஷயங்களை முளையில் சேமித்துக்கொள்ள அவற்றை வகை பிரித்துக்கொள்ள, நமக்கு வேண்டிய பொழுது அவற்றை உடனடியாக நினைவிற்கு கொண்டுவர, என பல வகையில் உதவும். மாணவர், நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியவர், பெரிய நிறுவனத்தின் பல பிரிவுகளை நிர்வகிக்கும் நிர்வாகி,, ஒரு கூட்டத்தை அல்லது நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் இப்படி எவரும்   தங்கள் தேவைக்கேற்ப பயன் படுத்த முடியும்.
ஒரு நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியிருந்தால் இந்த முறையை நீங்கள்  எப்படி பயன் படுத்தலாம்?
முதலில் எதெல்லாம் அவசியம் என ஒரு தாளில் எழுதுங்கள். இது வரிசைப்படி அமைய வேண்டியதில்லை. தோன்றும் போதெல்லாம் தோன்றுவதயெல்லாம் குறித்துகொண்டேவாருங்கள்.தேர்விற்கு போகவேண்டிய நிறுவனத்தைப் பற்றிய விபரங்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய விபரங்கள், போட்டியாளார் பற்றிய தவல்கள் இப்படி எல்லாச் செய்திகளையும் திரட்டி குறித்துக்கொள்ளுங்கள்.
   எல்லா நேர்முகத்தேர்விலும் எந்த மாதிரி கேள்விகள் கேட்டகப்படும் என்பதை எளிதாக யூகிகக்கமுடியாது என்பது உண்மையானலும் இந்த 4 கேள்விகள் பல மாறுபட்ட வடிவங்களில் எல்லா  நேர்முக தேர்வுகளிலும் கேட்கப்படுகிறது.
1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
இதைத் தவிர இந்த 5 கேள்விகளும் அனேகமாக எல்லாயிடங்களிலும் கேட்கபடுகிறது.
1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்?
இந்த கேள்விகளை  முக்கிய வீதிகளாகவும் நீங்கள் சேகரித்த தகவல்களை  சிறு துணை வழிகளாகவும்அமைத்து வரைபடத்தை அமைக்க வேண்டும்
எப்படிச்செய்வது?
ஒரு வெள்ளைதாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை குறுக்கு வசத்தில் (Landscape size) பயன் படுத்தவேண்டும் (இது முக்கியமானது)

நீங்கள் பங்கேற்கபோவது ஒரு ஆடை வடிவமைக்கும் நிறுவனம்  என்றால் அதன் மையப்பகுதியில் ஒரு வட்டமிட்டு அதில் ஒரு ஆயுத்த ஆடையையோ, அல்லது அந்த கம்பெனியின் சின்னத்தையோ வரைந்துகொள்ளுங்கள். அந்த வட்டத்தை சுற்றி வளைந்த பாதைகளாக கேள்விகளை வண்ண மார்க்கர்களை பயன்படுத்தி எழுதுங்கள்.முக்கியமாதற்கு அழுத்தமான வண்ணங்களைப் பயன் படுத்துங்கள்..சேகரித்த தகவல்களை  அலசி அது எந்த கேள்விக்கு பொருந்துமோ அங்கே கிளைத்தெருவாக  வரையுங்கள். இந்த பயிற்சியின் போது உங்களுக்கு புதிய கேள்விகள் தோன்றலாம். இருக்கும் விஷயங்களுக்கு கேள்விகள் இல்லாமலிருக்கலாம்.அப்போது அவசியமானால் கேள்விகளை மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது எதிர்பார்க்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் தயாரித்துவிட்டீர்கள்.ஒருமுறைக்கு இருமுறை பரீசலனை செய்து அவசியமான மாற்றங்கள் செய்து ஒரு தெளிவான பிரதியை வண்ணங்களில் தயாரித்துக்கொள்ளுங்கள்.
ஏன் வண்ண மார்க்கர்கள் பயன்படுத்தவேண்டும்?
மனித முளையின் இடதுபுறம் வார்த்தைகளும் வலதுபுறம் வண்ணங்களும் பதிகிறது,இரண்டும் இணைந்து செயல்படும்போது இரண்டும் மறக்காமல் நினைவிற்கு வரும் என்பது ஆராய்சிகளின் முடிவு. இப்போது இந்த வரைபடத்தை மனதில் நிறுத்தும் பயிற்சியைத் துவக்குங்கள். தினசரி அடிக்கடி பார்த்துகொள்ளுங்கள். கேள்விபாதை, பதில் கிளைபாதை எல்லாம் மனதில் பதிந்துவிடும். தேர்வில் அமர்ந்திருக்கும்போது கண்முன்னே வரைபடம் விரியும் அருகருகே பல விஷயங்களை குறித்திருப்பதால்  கேள்விகள் மாறினாலும் பதில்கள்  பளிச்சென்று நினைவிற்கு வரும்.
ஒரு முறை இந்த பயிற்சியை செய்துபழகிவிட்டால் இதை மற்ற பல விஷயங்களுக்கும் எளிதாக பயன் படுத்தலாம். முயற்சிசெய்து பாருங்களேன்.
 இணைத்திருக்கும் மாதிரிப்படத்தைப்போல வண்ணத்தில் இந்த கேள்விகளுடன் படம் எழுத வேண்டும்

1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
     -அனுபவம்
     -ஆர்வம்
    - தகுதி
    -சொந்த ஊர்.           
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
அதிக ஆர்டர்கள்
புதிய வாடிக்கையாளர்கள்
புகார் இல்லாத சேவை
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
-ஆர்வமிக்கவர்
-எளிதில் கோப படாதவர்
-நட்பாக பழகுபவர்
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
கவரும் உருவம்
என் அனுபவம்
திறமையில் நம்பிக்கை
நிறைய தொடர்புகள்

1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
படிப்படியான பதவி உயர்வு
ஒரு கிளயின் முதல் நிலை மேலாளர்
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
பலம் நிறைய நண்பர்கள்
பலவீனம்=முறயான மார்கெட்டிங் பட்டமில்லாதது
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
குடும்பம்
படிப்பு
முன் அனுபவம்
தொடர்புகள்
ஆர்வம்
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
திறமை மதிக்கபடவில்லை/எற்ற வேலையில்ல
நிர்வாக மாற்றத்தினால்

5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்
கடந்த ஆண்டின் சாதன
ISO தர சான்று பெற்ற விபரம்
புதிய கிளைகள்திறப்பு
வேகமாக வளரும் நிறுவனம்
வெளிநாட்டு ஒப்பந்தம்
            

8/8/10


என்ன செய்ய வேண்டும்?


மிக நேர்த்தியாக உள் அலங்காரங்கள் செய்யப்பட்ட அழகானபெரிய அந்த ஹாலில் ரமேஷயையும் சேர்த்து 7 பேர் காத்திருக்கின்றனர்ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரிகளுக்கான நேர்முக தேர்வுமுதல் இரண்டு கட்டங்களைத்தாண்டி இறுதித்தேர்வுஅடுத்துவரப்போகும் தன் முறைக்காக காத்திருக்கும் ரமேஷக்கு,புதிய உடையின் கசகசப்பு பழக்கமில்லாத புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் டையின் இருக்கம் எல்லாம்சேர்ந்து அந்த சற்று பதட்டமாக எர்கண்டிஷன் அறையிலும் வேர்ப்பதுபோலிருந்தத்துஅடுத்து நீங்கள் போகலாம் எண்று  ஹாலின் ஒரு கோடியிலிருந்த பெண்மணி  சொன்னதைத்தொடர்ந்து நேர்முகம் நடக்கும் அறையை நோக்கி போகிறார்ரமேஷ்மூடிய கதவுகளிடையே சற்றே இடைவெளி அதன் வழியாக சற்று தயக்கத்துடண்பார்த்து   நின்ற பின்னர் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்லுகிறார்நேர்முக குழுவின் 3 உறுப்பினர்களும் இவரைபார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் உட்காரசொல்லவில்லை.நின்றுக்கொண்டேயிருந்த ரமேஷ் தனியே இருக்கும் அந்த் நாற்காலியின் நுனியில் உட்காருகிறார்அரைநிமிடம் நேர்முககுழு எதுவும் கேட்டகவில்லை.. ரமேஷும் எதுவும் பேசவில்லைஒரு கனத்த மெளனத்திற்கு பின்னர் குழுவிலிருந்த ஒருவர் “வெளியே காத்திருக்கும் போது எக்னாமிக்ஸ் டைம்ஸ் பார்த்க்கொண்டிருந்தீர்களே அதில் நீங்கள் படித்த  எதாவது செய்தி பற்றி சொல்ல முடியுமா”? என்றார்தன்னைப்பற்றிஅந்தநிறுவனத்தைபற்றி,இன்றைய கார் மார்கெட் பற்றி எல்லாம் தயாரித்திருந்த ரமேஷ் இந்த கேள்வியினால் ஆடிப்போனார்ரமேஷ் அந்த பேப்பரில் எதுவும் படிக்கவில்லை.சொல்லப்போனால் எக்கானாமிஸ் டைமை முதல் தடவையாக அன்று தான் பார்க்கிறார்.அதனால் பதில் ஏதும்சொல்லாமல் மேஜையில் வைத்த தன் பைலின் மீது   வைத்திருந்த கைவிரல்களை   கோர்த்து கைககளைப்பிசைந்துகொண்டிருந்தார்இவர் பதில் தராததைபற்றி எந்த ரியாக்கஷனும் காட்டாமல் குழுவில் மற்றொருவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்முதல் கேள்விக்கு தன்னால்  சரியாக பதிலளிக்கமுடியவில்லையே என்ற அழுத்தில் தொடர்ந்த கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல முடிவில்லைஇள நிலை முதல் வகுப்பு பட்டதாரியாகயிருந்தும்மார்க்கெடிங் பட்டயம் இருந்தும் இந்த நேர்முகத்தினால் முடிவு என்னவாயிருக்கும் என்பதைச்சொல்வேண்டியதில்லை.
இது போன்ற நிகழ்வு நாம் நேர்முகத்தேர்விற்கு போகும்போது நடக்காமலிருக்க என்னசெய்யவேண்டும்என்பதற்கு பதிலாக ரமேஷ் என்ன செய்திருக்கவேண்டும் என்பதைப்பார்ப்போம்.
1.நேர்முகத்தேர்விற்கு புதிய ஆடை அணிந்துசெல்லக்கூடாது.ஏனெனில் நமது கவனம் அதிலிருந்துகொண்டேயிருக்க வாய்ப்பு அதிகம்.  தேர்வு இல்லாத நாளில்டை.ஷு அணிந்து நடந்து பழகிகொள்ளவேண்டும்.
நேர்முகத்தேர்வின் அறையின் நுழையும்முன்கதவு திறந்தேஇருந்தாலும் மெல்ல-(கவனியுங்கள்-மெல்லவிரல்களின் மேல்புறத்தால் தட்டிமை  கமின்?” என்று கேட்டக வேண்டும்அவர்கள் அழைத்துதான் வந்திருந்தாலும் இது ஒரு எதிர்பார்க்கபடும் சம்பிரதாயம்நுழைந்த 10வினாடிக்குள் தேர்வுக்குழு உட்காரச்சொல்லவில்லையாலால்மே  சிட் என்று கேட்டு நன்றாக ஆனால் ஆணவம் தொனிக்காத கம்பீரத்துடன் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
3. யார் பேச்சைத்துவக்குவதுநாமாக பேச வேண்டுமானால் என்னபேசவேண்டும்எவருக்கும் எழும் இயல்பான கேள்விகள்தான்இந்த நிறுவனம் தேர்விற்கு வந்தவர் முதலில் பேச வேண்டும் என்பதை தங்களது மெளனத்தின் மூலம் தெரிவித்துவிட்டபின்.”உங்கள் நிறுவனம் இரண்டு கட்டங்களுக்கு பின் என்னை நேர்முகத்திற்கு அழைத்தையே நான் கெளவரவமாக கருதிகிறேன்இந்த தேர்வையும் வெற்றிகரமாக கடந்து நிறுவந்த்தில் சேர காத்திருக்கிறேன்” என்ற ரீதியில் ரமேஷ் பேச்சைத்துவக்கியிருக்கவேஎண்டும்.
அடுத்தது-எக்னாமிக்டைம்ஸ் விஷயம்அந்த நிறுவனத்தின் தேர்வுகுழு  தேர்விற்கு காத்திருப்பவர்களை கூட கவனமாக பார்த்துகொண்டிருந்திருக்கிறது என்பது புரிகிறதுஅப்படியானால் தேர்வு அங்கேயே துவங்கிவிட்டிருக்கிறதுநாம் பேசுவதுசெய்வதுஎல்லாம் மதிப்பிடப்படுகிறது. “ நான் அந்த பேப்பரில் எதுவும்  ஆழ்ந்து படிக்கவில்லைஅருகில் இருந்ததால் எடுத்துப்பார்தேன் அரசியல்,பரபரப்பு செய்திகல்  இல்லாமல் நிறைய மார்க்கெட் செய்திகள் இருப்பதுப்போல் தோன்றுகிறது இனி தொடர்ந்து படிக்கலாம் எனநினக்கிறன்” என்ற உண்மையான பதிலை ரமேஷ் சொல்லியிருக்கவேண்டும்
4. முதல் கேள்வி என்றில்லைஎந்த கேள்விக்குமே பதில் சொல்லமுடியாவிட்டால் அதனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாதுஎந்த நேர்முகத்திலும் யாரும் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிடமுடியாதுஅதுமட்டுமில்லை தேர்வுகுழுவினரும் ஒரு அல்லது சில கேள்விகளினால்  மட்டுமே முடிவு செய்ய மாட்டார்கள்இங்கே ரமேஷ் பதில் சொல்லாதாதோடு தான் குழப்பமாகிவிட்டதை தனது உடல் மொழியின்( body languge) மூலம் காட்டிவிட்டார்,

எந்த நேர்முகமும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாதுநிறுவனம்,பணியின் தன்மை,தேர்வுகுழுவின் அமைப்பு போன்றவகளினால் மாறுபடக்கூடியது.ஆனால் அழைக்கப்ட்ட நிறுவனத்தின் அமைப்பு  தேர்வானால் செய்ய வேண்டிய பணி பற்றி அறிந்திருந்த ரமேஷ் தன்னை  உடைஅணுகு முறை போன்றவற்றில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தால் எளிதாக சமாளித்திருப்பார்..மார்க்கெட்டிங் அதிகாரியாக வரப்போகிறவர் தானே முன்வந்து முனைபவராக (proactive) இருப்பதையும்,எளிதாக பேசும் இயல்பு உள்லவராகவும் இருக்கவேண்டும் என அந்த் நிறுவனம் எத்ரி பார்ப்பதில் தவறல்லியேஇப்போது இதற்கு நிறைய புத்தகங்கள்பயிற்சிக்கூடங்கள் வந்துவிட்டனமிக எளிதாக வீட்டிலேயே நண்பர்கள் சகோதரர்கள் முலம் ஒரு மாடல் தேர்வு   கூட நடத்திப்பார்க்கலாம்நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லோருடனும் நிறைய பேசி பேசி பழகவேண்டும்இது தன்நம்பிக்கையை வளர்க்கும்.நிறைய படிக்கவேண்டும் அதை நினைவிலும் வைத்துக்கொள்ளவேண்டும்அது தேர்வுகளிலும்  சமயோசிதமாக பதில் சொல்ல கைகொடுக்கும்.
சமீபத்தில் ஒரு வங்கியில் முதல் அதிகாரி நிலையிலிருந்து கிளை மேலாளர் நிலைக்குநேர்முகம். “இதுவரை தனியாக ஒரு கிளையை நிர்வகித்த அனுபமில்லாத நீங்கள் தேர்ந்தெடுக்கபட்டபின் ஒரு கிளைக்கு நிர்வாகியாக அனுப்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு தேர்விற்கு வந்தவர் தந்த பதில் “இருபது ஆண்டுகளுக்கு முன்  அதிகாரிநிலையிருந்து தெர்வுபெற்று நீங்கள் ஒரு கிளைப்பொறுப்பேற்று 5மடங்கு அதிகம் பிஸினஸ் செய்துகாட்டியதுபோல நம்பிக்கையுடன் முயற்சிப்பேன்” தேர்வுகுழுவிலுர்ந்து கேள்வியைகேட்ட பொதுமேலாளரிம் முகத்தில் புன்னகைகடந்த ஆண்டு அவர் போதுமேலாளராக தேர்வுசெய்யப்பட்டபோது அந்த வங்கியின் ஊழியர்களுக்கான மாதந்திர மடலில் படத்துடன் வெளியான வாழ்க்கைகுறிப்பிலிருந்த அந்த விஷயத்தை சரியான இடத்தில் சரியானமுறையில் பயன் படுத்திகொண்ட அவர் தெர்வுசெய்யப்போகும் அதிகாரி பற்றிய விபரங்களை சேகரிக்கும் திறன்,  வங்கியின்வெளியீடுகளை படிக்கும் பழக்கும்தனது நினைவாற்றல் போன்ற பல விஷயங்களை ஒரே பதிலில் உணர்த்திய  அவரின் தேர்வுமுடிவு என்னவாகயிருந்திருக்கும் என புரிந்திருக்குமே.
புதிய தலைமுறை)