10/10/12

நயாகராவின் நாயகன்


நயாகராவின் நாயகன்

உலகின் மிக அழகான ஆனால் ஆபத்தான அருவிகளில் ஒன்று நயாகாராஅமெரிக்க கனடா நாடுகளின் எல்லைப்பகுதியிலிருக்கும் மலைச்சரிவில் இந்த அருவி சீறிபாய்ந்து மூன்று பகுதிகளாக விழுகிறது. ஒரு அருவி அமெரிக்க பகுதியிலும் மற்றொன்று கனடாவின் பகுதியிலும் இன்னொன்று இரு நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் பகுதியின் நடுவிலும் விழுகிறதுஇந்தபகுதியை பார்க்க அமைக்கபட்டிருக்கும் பிரமாண்டமான பாலம் வழியாக இரு நாடுகளுக்கும் போக்குவரத்து வசதியுமிருக்கிறது. நயாகராவின் மிக அகலமான அருவியான இதில் நிமிடத்திற்கு 60 லட்சம் கன அடி தண்ணீர் கொட்டுகிறது.
இந்த அருவியின் அருகே அமெரிக்க எல்லைபகுதியிலிருந்து கனாடா நாட்டின் எல்லைபகுதிக்கு நடந்து சாதனை செய்திருக்கிறார் நிக்கோலஸ் வாலண்டேனா எனற அமெரிக்கர்நடந்தது  இழுத்துகட்டபட்ட  ஒரு கம்பியின் மேல்.!  நிக் தன் 13 வயதிலிருந்து கம்பியின் மேல் நடக்கும் வித்தையை செய்துவருபவர். உலகின் பல உயாரமானஇடங்கள்,கட்டிடங்களின் இடையே எல்லாம் நடந்து சாதனை படைத்தவர். 6 முறை கின்னஸ் சாதனைபட்டியலில் இடம்பிடித்தவர். ஆனால் நேரடியாகநயாகாராவின் மேல் தரையிலிருந்து 200 அடி உயரத்தில் கட்டபட்ட கம்பியில்  1800 அடிகள் நடந்து கடந்த முதல் மனிதன் என்ற சாதனை தான் மகத்தானது. காரணம் நயாகாராவின் அந்த பகுதியில் பொங்கி விழும் அருவியிலிருந்து எழும் பனிப்படலமும், ஆளைச்சாய்க்கும் காற்றும், பேரிரைச்சலும்  மிகப்பாதுகாப்பான தொலைவிலிருந்து பார்க்கும் டூரிஸ்ட்களையே அச்சபடுத்தும் ஒரு  விஷயம்.
உலகின் அழகான டூரிஸ்ட் தலத்தில் அடிக்கடிவிபத்து நேருவதை விரும்பாதாதால் அமெரிக்கா, கனடா இரு நாடுகளுமே தங்கள் பகுதி அருவிகளில் சாகஸ முயற்சிகளுக்கு தடை விதித்திருக்கிறது. இரு நாட்டின் எல்லைகளுக்கிடையே இந்த சாதனையை நிகழ்த்த விரும்பிய  “நிக்க்கு இது ஒரு நீண்ட நாள் கனவு. இரண்டாண்டு போராட்டங்களுக்குபின்னர்  இரண்டு அரசுகளிடமும்அனுமதி பெற்றிருக்கிறார். நியார்க் மாநில சட்டமன்றம் விசேஷ சட்டம் மூலம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் மிகப்பெரிய அளவில் அனுமதி கட்டணத்தை நிர்ணயத்தது. கனடாநாட்டில் ஒண்டார்ரியோ நகர்மன்றம் பல லட்சம் டாலர்களை நகர வளர்ச்சிக்காக நன்கொடையாக பெற்றபின்தான் அனுமதித்திருக்கிறது.
ஒரு சர்க்கஸ் குடும்பத்தின் 7 வது வாரிசான நிக்கோலஸின் குடும்பத்தில் பலர் சாதனையாளர்கள். தாத்தாவின் தந்தை அமெரிக்க பகுதி நயாகாராவை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர். நிக்கோலஸ் இந்த சாதனை செய்ய விரும்பியதற்கு அதுவும் ஒரு காரணம். மற்ற இடங்களைப்போல இங்கு ஒருமுறை பயிற்சி செய்யது பார்க்க முடியாது. அதனால் அருவிக்கு அருகில் ஒரிடத்தில் உயரத்தில் கம்பிகள் அமைத்து  ராட்ச தீயணக்கும் எந்திரங்கள்மூலம்  அருவி போல நீர்பாய்ச்ச செய்து பயிற்சி எடுத்திருக்கிறார்  நயாகாரா காற்றின் வேகத்தை தாங்க கூடிய கம்பிகள் மார்க்கெட்டில் இல்லாதால், விசேஷமாக கம்பிகள் தயாரிக்க பட்டன. இரு நாட்டின் மலைப்பகுதிகளிலும் அமைக்கபட்ட விசேஷ தூண்களில் இந்த கம்பியை  இணைக்கும் சவாலான விஷயத்தை ஹெலிகாப்படரின் மூலம் இழுத்துகொண்டு போய் செய்திருக்கிறார்கள்.   செலாவான பல மில்லியன் டாலர்களை ஏற்றுகொண்டன ஸ்பான்ஸர் செய்த டிவி சானல்கள்.
இறுதியில் திட்டமிட்டபடி சாதனையை துவக்கும் முன் பாதுகாப்பு ஏற்பாடாக இடுப்பு பட்டையிலிருந்து நடக்கும் கம்யினுடன் ஒரு சங்கலி இணைக்க வற்புறுத்தியது  ஸ்பான்ஸர் செய்த ஒரு டிவி சானல்முதலில் ஏற்க மறுத்த நிக் இறுதியில் சம்மதிக்க வேண்டியாதாயிற்று
25 நிமிடத்தில்  மெல்ல நடந்து  இவர் செய்த சாதனையை இரு நாட்டின் எல்லைகளிலும் லட்டசகணக்கானோருடன் உலகம் முழுவதும் டிவியில் பார்த்த்து.    முன்னிரவு வேளையில்  மின்னொளியில்  இதை செய்யவிரும்பியது சானல்கள்.  “  “ வெண்புகையான பனிச்சராலினிடையே ஓளிவெள்ளத்தில்  நடக்கும்போது கம்பியே கண்ணில் தெரியவில்லை. மிகமிக கவனமாக அடிகளை வைக்க வேண்டியிருந்ததுஎனறு சொன்ன நிக் தன்காலர் மைக்கின்மூலம் தரையிலிருக்கும் நண்பருடன் பேசிக்கொண்டே  நடந்தார். மைப்பகுதியை கடக்கும் போது  “இங்கிருந்து பார்க்கும் போது   நயாகாரா மிக ரம்மியமாகயிருக்கிறது. என்னைத்தவிர இதை யாரும்பார்த்த்தில்லை எனபது பெருமையான விஷயமாகயிருக்கிறதுஎன்றார்கனடா நாட்டின் எல்லையைத் தொட்டவுடன்  “கடவுள் அருளால் இதை சாதிக்க முடிந்ததுஎன்று சொன்ன நிக் செய்த முதல் வேலை அவருடைய பாட்டிக்கு போன். அவர்காலத்தில் சாதனையாளராக இருந்த பாட்டி வயது மற்றும் உடல் நிலை காரணமாக டிவி பார்க்க அனுமதிக்க படவில்லை. வினாடி தப்பினால் விபத்து என்ற இந்த சாதனைப்பயணத்தில் நிக் பத்திரமாக எடுத்துச் சென்றது கனடாநாட்டின் விசாவுடன் கூடிய அவரது பாஸ்போர்ட்.!









3/10/12

வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்.


இந்த ஆண்டு விவேகானந்தரின் 150 வதுபிறந்த நாள்

வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்.
கல்கி7/10/12



சிக்காகோ நகரிலுள்ள  சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 250 ஆண்டுபாரம்பரியமிக்க இதில் பல அரிய ஓவியங்கள் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிபடுத்த பட்டிருக்கும் ஒரு அருங்காட்சியகம். வருடம் முழுவதும் ஓவிய காட்சிகள் நடைபெறும் இதன்  ஆர்ட் காலரியில் ஒரு கண்காட்சி நடத்துவது என்பது பல ஓவியர்களின் கனவு.
இவற்றையெல்லாம்விட இங்கே நாம் பெருமைப்படவேண்டிய ஒரு விஷயமும்  இருக்கிறது.  1893ல் விவேகாந்தர்  “அமெரிக்க சகோதிரிகளே, சகோதர்களே” என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்திய உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெற்றது இந்த இடத்தில் தான்.
விவேகானந்தர் பேசிய இடத்தில் இப்போது என்ன இருக்கிறது என கேட்ட நமக்கு ”அப்போது இந்த இடத்தில் ஒரு சிறிய கட்டிடமும் பெரிய மைதானமும் இருந்திருக்கிறது.பின் நாளில் கட்டிடம் விவாக்கி புதுபிக்க பட்டபோது மிக கவனமாக அந்த இடத்தை  சின்ன ஆடிட்டோரியமாக உருவாக்கியிருக்கிறார்கள்.” என்று சொல்லி கட்டிடத்தின் அன்றைய வரைபடம், இன்றைய வரைபடம் ஒப்பிடும் குறிப்புக்கள் எல்லாம் தந்து, நமக்காக அதை திறந்து காட்டவும் ஏற்பாடுசெய்கிறார். திருமதி மேரிஸ்காட். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியாரான இவர்  இங்கு வருபவர்களுக்கு உதவும் பணியை செய்யும் ஒரு தன்னார்வலர். வயது 72..    ஹாலின் நுழைவாயிலின் அருகில் விவேகானந்தர் வருகையின்,, சொற்பொழிவின் நினைவுபதிப்பாக ஒரு பட்டையம் பதித்திருக்கிறார்கள்.
இரண்டுதளங்களில் ஓவியங்களும்,கலைச்செல்வங்களும் குவிந்து கிடக்கும் இந்த கலைக்கூடத்தின் நடுவே மாடிக்கு செல்ல   வெண்பளிங்கினால் ஆன பெரிய படிகள். இதை  “கிராண்ட் ஸ்டேர்ஸ்” என அழைக்கிறார்கள்.

 ஜித்திஷ் கல்லட்( Jitish Kallat) ஒரு வித்தியாசமான ஓவியர்.  ஓவியம் எனபது உருவங்களின் வடிவாக மட்டுமிருக்கவேண்டியதில்லை என்ற கருத்தை கொண்டவர்.இவர் ஓவியங்களைத்தவிர புகழ்பெற்ற வாசகங்களையே சம்மந்தபட்ட இடங்களில்  பிரம்மாண்ட  வண்ண ஒவியமாக்கி நிறுத்துவார். ஜவர்ஹாலால் நேருவின் எழுச்சி மிக்க முதல் சுதந்திரதின உரை, முதல் இந்திய பராளுமன்ற உரை போன்றவைகளை பிரமாண்ட எழுத்து ஒவியங்காளாக்கி புகழ் பெற்றவர்.,

கடந்த ஆண்டு ஜித்திஷ் இங்கு நடத்திய  ஒரு மாறுதலான ஓவிய  கண்காட்சி பற்றி நாடு முழுவதும் பேசபட்டது. அது விவேகானந்தர்  இந்த இடத்தில் ஆற்றிய உரையின் வார்த்தைகளை  வானவில்லின் வண்ணங்களில் இந்த மாடிப்படிகளில்  வரிசையாக பதித்து  ஒரு ஓவியமாக்கியிருந்தார். முதல் படியில்துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து  கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம். ” பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!” என்ற இறுதிப்பகுதி வாசகங்களையும் அந்த சொற்பொழிவு நிகழந்தநாள் செப் 11 என்பதையும் படித்த போது 118 ஆண்டுகளுக்குபின்னர் அதே செப் 11ம் நாளில் அமெரிக்கமண்ணில் நிகழ்ந்த வன்முறை  ஒரு துரதிர்ஷடமான விசித்திரம்தான். என தோன்றியது.
இந்த உரையை விவேகானந்தரின் குரலிலேயே கேட்காலாம் என சில இணையதளங்கள் அறிவிக்கின்றன. ஆனால் அதன் நம்பகத்தன்மையை கடந்த 10 ஆண்டுகளாக பல நிலைகளில் ஆராய்ந்து கல்கதாவிலுள்ள ராமகிருஷ்ண மடம்  சமீபத்தில் அறிவித்திருப்பது அது விவேகானந்தர் குரல் இல்லை. என்பதைத்தான்.  முடிவிற்கு வர முக்கியமான காரணம் 1893 ல் டேப்பில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை என்பது தான்.
அவரின் உரையை, அவர்பேசிய இடத்தை, பாதுகாத்து, நினைவுபதிவு பட்டையம் இட்டு, உரைவாசகங்களை புதுமையானகண்காட்சியாக்க அனுமதித்து பல வகையில் இந்த கலைக்கூடம் விவேகானந்தரை சிறப்பாகத்தான் கெளரவிக்கிறது என்ற எண்ணத்துடன் வெளியே வந்து சாலையை கடக்க நிற்கும் நம் எண்ணத்தை இன்னும் வலுப்படுத்துவது கண்ணில் படும் இவர்கள் நிறுவியிருக்கும் அவர் பெயரைச்சொல்லும் எதிர் தெருவின் பெயர் பலகை.