29/11/12
26/11/12
ஒலியின் வேகத்தில் பயணித்த மனிதன்
”கேர்ள் பிரண்டுடன் செட்டிலாகபோகிறேன் “
ஒலியின்
வேகம் மணிக்கு 1,236 கி.மீ. விசேஷமாக
வடிவமைக்கப்பட்ட சூப்பர்ஸானிக் போர்விமானங்கள் மட்டுமே பறக்க கூடிய இந்த வேகத்தில், வான்வெளியில் ஒரு மனிதன்
தனியாக பயணிக்க முடியுமா? இந்த வேகத்தில்
பறக்க அல்லது மிதக்க வேண்டுமானால் முதலில் அந்த மனிதன் 30 கீமீ உயரத்திலிருந்து குதிக்க
வேண்டும். (விமானங்கள் பறக்கும் உயரம் 12 கீமீ) சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத அந்த நிலையில்
அந்த உயரத்தில் 15 வினாடியில்,முளைசெயலிழந்து,
உடலில் உள்ள திரவங்கள் ஆவியாகி மரணம் நிச்சியம் எனபதால் இது எவராலும்
முடியாத விஷயம் என்று கருதபட்டது. இதை செய்து காட்டி உலக சாதனை
செய்திருப்பவர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரிய நாட்டு முன்னாள்
பைலட். அமெரிக்காவில் செட்டில் ஆனாவர்.. இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோ
மாநிலம் ரூஸ்வெல் நகர மைதானத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி சுமார் 39 கிலோ மீட்டர்
உயரத்திலிருந்து வான்
வெளியில் பாய்ந்து மிதந்து பத்திரமாக தரையிறங்கினார்.
எப்படி
இதை செய்தார்?.
19/11/12
இந்தியா
வந்த
இரும்பு பட்டாம்பூச்சி
திருமதி ஆங்சான் சூ சி, பர்மா என்று நீண்ட நாள் அறியபட்டிருந்த
நம் பக்கத்துவீட்டு மியான்மர் நாட்டின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர். மியான்மர் நாட்டினையே
உலகில் பலர் தெரிந்துகொள்ள காரணமாகயிருந்தவர். காரணம் தன் நாட்டில் ஜனநாயகத்தை நிலை
நிறுத்த போராடியதற்காக 15 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்.
சிறையிலிருக்கும்போதே அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டு, அதை சென்று வாங்க ஆட்சியாளார்களால் அனுமதி மறுக்கபட்டவர், உலகில்
அரசியல் காரணங்களுக்காக நீண்ட நாள் தண்டனை பெற்ற ஒரே பெண்மணி. மெலிந்த உடல்,மென்மையானகுரல்,67வயது முதுமையை காட்டாத
முகம் கொண்ட இவர் பார்க்க பட்டாம்பூச்சியாக இருந்தாலும் இரும்பு மனுஷி. சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். 19 ஆண்டுகளுக்கு
முன்னர் அறிவிக்கபட்ட ஜவர்ஹலால் நேரு அமைதி பரிசை பெற்றுகொள்ள மேற்கொண்ட பயணம்.இம்மாதிரி
பரிசுகளை ஏற்கும் உரையில் இந்தியாவை புகழ்ந்து தள்ளுவார்கள்.
”அண்ணல் காந்தியடிகளின் வழியில் நேருவை முன்னூதரணமாக கொண்டு நாங்கள் போராடிய காலங்களில்
இந்தியா எங்களை கண்டுகொள்ளவில்லை” என்ற இவரது
பேச்சு அதிர்வலைகளை உண்டாக்கின,
இந்தியா
சுதந்திரபோராட்டத்தை தொடர்ந்து விடுதலை வேட்கை
வேகமாக பரவிய நாடுகளில் அன்றைய பர்மாவும் ஒன்று. அதன் அரசியல் தலைவர்களில் ஒருவர்
ஆங் சான். நாட்டை அன்னியர்களிடமிருந்து காக்க வலிமையான ஒரு ராணுவத்தை உருவாக்க முயன்றுகொண்டிருந்தவர்.ஒரு
நாள் படுகொலை செய்யபட்டார். அவருடைய ஒரே மகள்தான்
சூ சி. தாயினால் வளர்க்கபட்ட இவர் வளரும்போதே போராட்டங்கள் பல வற்றை சந்தித்தவர்.
டெல்லியில்
14/11/12
நம்பிக்கை ஜெயித்திருக்கிறது
.மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் ஒபாமா ஜெயிப்பது சந்தேகம், ரோம்னி மிகக்குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கபோகிறார்”
என்ற கருத்து கணிப்புகளையும் மீடியாக்களின்
அரசியல் ஆருடங்களையும் பொய்யாக்கி விட்டார்கள் அமெரிக்க மக்கள். அதிபர் ஒபாமா அடுத்த
4 வருடங்களுக்கு வெள்ளை மாளிகையை காலிசெய்ய வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறார்கள்.
வெற்றி பெறுவதற்கு 270 பிரதிநிதிகளின் ஓட்டு தேவை என்ற நிலையில் ஒபாமா பெற்றது 303
ஓட்டுக்கள். அமோக வெற்றி.
<
12/11/12
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
11
11 12 காலை 7 மணி. ஹிந்துவை குடித்துகொண்டு,காபியை
பார்த்துகொண்டிருந்தபோது,சிணிங்கிய செல் சொன்னது “வாழ்க வளமுடன் உங்கள் பிளாக்கின்
முதலாண்டு நாள் நல்வாழ்த்துக்கள்” சொன்னவர் திரு குருமூர்த்தி. என் உறவினர்.(அத்தையின்
மகன்). என் தந்தையின் அன்புக்கு பாத்திரமானவர். குடும்பத்தின் இரண்டுதலைமுறையினரையும்
அறிந்தவர் மாலனுடைய, என்னுடைய எழுத்துக்களை கவனித்து படிப்பவர்.
முன்னாள் சைனிக் பள்ளி தலமையாசிரியரான இவர், இன்று காலத்தின் கட்டாயமாகிவிட்ட இண்ட்ர்நெட்டை
கையாளுவதை தனது இளைய தலைமுறையினரிடம் மாணவராகி கற்று கொண்டு தமிழ் பிளாக் களைப்படிக்கிறார்.
நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துகிறார். இந்த 70+ இளைஞர்.
இவரைப்போல
இன்னும் சில நண்பர்கள் வாழ்த்தியதோடு, ஆழம் பத்திரிகையில் எழுதுவது போல் சீரியஸான விஷ்யங்கள்
நிறைய எழுதுங்கள் என்றனர்.
படித்தவர்
சொல்ல கேட்பதுதான் எழுதுபவனின் சந்தோஷம். அதை தந்த நண்பர்களுக்கு நன்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)