22/3/15
20/3/15
புனே உயரமாகிக்கொண்டிருக்கிறது
அடுக்குமாடிவீடுகள்
புனேயில் புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்ட விஷயம். ஆனால் இப்போது பல
அடுக்குமாடிகளுடன் களுடன் அதிகமான கட்டிடங்கள் மிக வேகமாக எழுந்திருக்கின்றன.
28 அல்லது 24 அடுக்குமாடி வீடுகள். 8 அல்லது 10 மாடி பிரமாண்ட
அலுவலககட்டிடங்கள் நிறைய எழுந்திருக்கின்றன. எல்லா அடுக்குமாடி வீடுகளிலும். முதல்
4 மாடிகளுக்கு -1,-2,-3.-4 என நம்பரிட்டு 5 வது
ஹின்சஞ்ன்வாடி
என்ற புறநகர் பகுதியில் அத்தனை முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களும். பிரமாண்டமான பல கட்டிடங்களில்
இயங்குகிறது. 138 ஏக்கரில் 3000 வீடுகளுடன் 200 அலுவலகங்களுடன் மாறிவரும் இந்தியாவின்
முகத்தை காட்டும் ஷோகேஸ். தனியார் நிறுவனங்கள் உருவாக்கிகொண்டிருக்கிறார்கள். இதுபோல்
இன்னும் மூன்று அருகே வரப்போகிறதாம். அலுவலகங்களுக்கு அருகிலேயே வசிக்க அடுக்கமாடிகள்.
Walk to work என்ற வாழ்க்கை. பயண நேரம் மிச்சம்
என சொல்லி அந்த நேரத்திலும் வேலை வாங்கும் புத்திசாலிகம்பெனிகள். பல கட்டிடங்களில் விளக்குகளை அணைப்பதே இல்லை. அமெரிக்க கஸ்டமர்களின் பகல் நேர அலுவலகங்களுக்காக இங்கே இரவெல்லாம் உழைக்கும். பெரிய இளைஞர் பட்டாளம்.
5 ஸ்டார் சம்பளம் வாங்குபவர்கள் தெருவோர கையேந்திபவனில் வாங்கி பிளாட்பாரத்தில்
உட்கார்ந்து ஜவா மொழியில் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். இம்மாதிரி கடைகள் 50க்கும்
மேல் இருக்கிறது. ஆம்லெட் தோசை போடும் நம்மூர்காரர் கடையில் நல்ல கூட்டம். தமிழ் பாடல்களும்
கேட்கிறது.
அடையாள
அட்டையை அழுத்தினால் திறக்கும் கதவு. கிச்சனில்; புகைவந்தால் அலறும் அலாரம் நடக்க நல்ல பாதைகள் மெத்தென்ற பசும்புல்வெளி பார்க்
நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட வெண்மணல்திடல்
கோல்ப்மைதானம் என மிக நவீன வசதிகளுடன் சுத்தமான
குட்டி ஹைடெக் ஊர். கால்நகம்வெட்டிக்கொள்வதிலிருந்து சகல நகர வாழ்க்கையின் ஆடம்பரங்களும்
இங்கேயே இருக்கிறது.
ஆனாலும். பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன் அருகிலிருக்கும்
விளைநிலங்களையும் அதன் எதிரே மிதக்கும் மேகங்கள் தொட்டுசெல்லும் உயர்ந்த கட்டிடங்களையும் நம் பால்கனியிலிருந்து
ஒன்றாக பார்க்கும்போது ஒரு மாறுபட்ட வினோதமான
உணர்வு எழுகிறது.
”இன்னும்
சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு அழும் அந்த நிலங்களின்
கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று. .
- 19 others like this.
- Vedha Gopalan வாஸ்து சாஸ்த்திரமா இல்லை விதிமீறலை மறைக்கும் சமாச்சாரமா (ஏன் சார்! அதிகாரிகள் நேரில் வந்து பார்க்கும்போது கட்டடத்தின் உயரம்கூடவா கண்ணுக்குத் தெரியாது? ) இறைவா!!
இந்தியாவின் முகத்தை காட்டும் ஷோகேஸ்
கட்டிடங்களில் விளக்குகளை அணைப்பதே இல்லை.
5 ஸ்டார் சம்பளம் வாங்குபவர்கள் தெருவோர கையேந்திபவனில்
அழகிய வாக்கியங்கள்
. பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன்..நல்ல ரசனை தங்களுக்கு
அய்யோ..அந்தக் கடைசி வரி மனசைப் பிசைகிறது!..சொல்லாதீங்க - Bala Mukundhan அதே போல் பெங்களூரு தன் தனித்தன்மையை இழந்து வருடங்கள் பல ஆகி விட்டது. யஷ்வந்த்பூரிலிருந்து பனஷங்கரி செல்லும் Outer Ring Road வழியாகப் பயணித்தோமானால், குன்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அதன் மேல் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், குடியிருப்புகளும்தான் தென் படுகின்றன. கார்டன் சிடி, கான்கிரீட் சிடியாக மாறி விட்டது. வட பெங்களுருவில் விமான நிலையம் செல்லும் வழியெங்கும் வயல் நிலங்கள் வானாளாவிய கட்டிடங்களைத் தான் தாங்கி நிற்கின்றன. Whitefield சுற்றிய பகுதியை பற்றி கேட்கவேவேண்டாம். இங்கே நிலங்களின் கண்களில் நீர் கூட கட்டாது. ஏனெனில், நீர் வழிந்தோட கூட இடமில்லாது கான்கிரீட் தரைகளும், கட்டிடங்களும் பூமிக்கும் மனிதனுக்கும் இடையே தடை எழுப்பியுள்ளது.
இதை விட கோரம் ஒன்று உண்டென்றால், அது M G Road தான். எவ்வளவு அழகான ஒரு சாலையாக இருந்த அது இன்று உயர் மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டதின் மூலம் தன்னிலை இழந்து ஒரு சவப்பாதையாக மாறியுள்ளது. 18 வருடம் கழித்து அந்தப் பாதையைப் பார்த்த என் கண்ணில் நீர்தான் முட்டிக் கொண்டு நின்றது. இந்த ஒரு வருடமாக அந்தப் பாதைப் பக்கமே செல்லவில்லை. - Shah Jahan இப்போதெல்லாம் கேடட் கம்யூனிட்டியில் வசிப்பதுதான் நாகரிகம் என்ற மனநிலை உருவாகிவிட்டது. கோவையில்கூட கேடட் கம்யூனிட்டி வந்தாயிற்று.
- Skrajendran S Krihsnasamy Naidu இன்னும் சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு அந்த நிலங்களின் கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று.
. - Pitchumani Sudhangan கவிதை வடிவிலான ஒரு மனக் கலக்கத்தை, ஒரு சமூக அக்கறையை எத்தனை அழகாக ரசனையோடு சொல்லியிருக்கிறீர்கள் ரமணன் ஸார்!
8/2/15
கடைசிக்கோடு
என்னுடைய
கடைசிக்கோடு புத்தகத்தை திருப்பூர் தமிழ்சங்கம் ”2013 இலக்கிய விருது”க்கு தேர்ந்தெடுத்து
5/2/15 அன்று விழாவில் பணப்பரிசும்,கேடயம், சான்றிதழ் தந்து கெளரவித்தார்கள்.. திருப்பூர் தமிழ் சங்கம் தரும் இந்த விருது தனிமதிப்பு வாய்ந்தது..23
ஆண்டுகளாக தமிழின் சிறந்த படைப்புகளுக்கு வழங்குகிறார்கள்.
அவர்கள்
தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் குழுவை அறிவிக்க மாட்டார்கள். அதே போல் அவர்களுக்கு வரும் படைப்புகளை நடுவர்களுக்கு அனுப்புதோடு
சங்கத்தின் பணி முடிந்துவிடுகிறது. நடுவர்கள் முடிவுகளை அறிவித்தபின் விருதுபெறும் படைப்பாளிகளை திருப்பூருக்கு அவர்கள்
செலவில் அழைத்து நல்ல முறையில் வரவேற்று வசதியாக
தங்கவைத்து மகளின் திருமண விழாவிற்கு வந்தவர்களைப்போல
அன்புடன் உபசரிக்கிறார்கள்.
விருது
பெற்றவகளை விழா மேடையில் அமரச்செய்து விருதுகளை அளிக்கிறார்கள்.. விழா புத்தக கண்காட்சி
அரங்கில் நடைபெற்றது. வாசிப்பதை நேசிக்கும் நல்ல மனிதர்கள் நிறைந்த மாபெரும் சபையில்
மாலைகள் விழுந்ததால், . படைப்பாளிகளின் படைப்பின் பெருமையை பேசப்பட்டதால். விருதுபெற்றவர்கள்.உண்மையான
கெளரவத்தை (சற்று கர்வத்தை கூட) உணர்கிறார்கள்.
தமிழறிஞர்
சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் லேனா தமிழ்வாணனும் பங்கேற்று விருகள் வழங்கினார்கள்.
என் வாழ்வின் மகிழ்வான தருணம் அது.
திருப்பூர்
தமிழ் சங்கத்தலவர் டாக்டர் ஆ. முருகநாதன், செயலர் ஆடிட்டர் அ.லோக நாதன். இருவரும் தத்தம் தொழிலில்
உச்சத்தில் இருப்பவர்கள்.. ஆனலும் தமிழ் இலக்கியத்திற்கான சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்
தமிழ் படைப்பாளிகள் அனைவரும் எழுதுபவர்களுக்கு
இத்தகைய உயரிய கெளரவம் அளிப்பதற்காக இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்..
திருப்பூர் டாலர் நகரம்
என்பது தெரியும். பணத்தை மட்டும் நேசிக்காமல் தமிழையும் நேசிப்பவர்களும் நிறைந்த நகரம்
என்பதையும் புரிந்து கொண்டேன்,
1/2/15
தினமலர் வார மலர்
இன்றைய தினமலர் வாரமலர் மூத்தபத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருப்பது
பார்த்தது,படித்தது, ரசித்தது.
அந்த நெல்லைக் காரரின் புத்தகம் தபாலில் வந்தது!
பிறகு படிக்கலாம் என்று தான் புரட்டினேன்!
ஆனால் அந்த புத்தகம் என்னை அப்படியே உள்ளே இழுத்தது!
151 பக்கம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!
புத்தகத்தின் தலைப்பு: நேருவின் ஆட்சி ! பதியம் போட்ட 18 ஆண்டுகள்!
எழுதியவர் ரமணன்!
இவரை எனக்கு 1980 களுக்கு முன்னாலிருந்தே தெரியும்!
நடுவில் பல ஆண்டுகள் அவருடைய வங்கி அதிகாரி வேலை அவர் அதிகமாக எழுதுவதிலிருந்து தள்ளி வைத்திருந்தது!
இப்போது படுவேகமாக எழுத ஆரம்பித்திருக்கிறார்!
எழுதுவதற்காக படிப்பது ஒரு வகை!
படிப்பதை ஒரு ஆர்வமான காதலாக கொண்டவர்கள் இன்னொரு வகை!
ரமணன் இரண்டாவது வகை!
அதனால்தான் இந்திய சுதந்திர ஆரம்ப நாட்களை இத்தனை ஆழமாகவும் அழுத்தமாகவும் இவரால எழுத முடிந்திருக்கிறது!
இது ரசனையுள்ள வாசகனுக்கான புத்தகம் மட்டுமல்ல! அரசு பணியில் சேர விரும்புகிறவர்களுக்காக ஒரு இந்திய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு நேரு ஆட்சி குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது!
திடிரென்று புதிய ஆட்சியாளர்கள் மறந்து போன வல்லபாய் படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!
அவரை மதவாதி என்கிறது காங்கிரஸில் ஒரு கூட்டம் !
ஆனால் ஆர்.எஸ்.எஸ்.. இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்று தீவிரமாக இருந்து அதை செய்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல் என்பதை ஆழமாக பதிய வைத்திருக்கிறது இந்த நூல்!
பாரபட்சமற்ற ஒரு பத்திரிகையாளனுக்கே உரிய ஒரு நேர்மையான எழுத்தாளப் பார்வையை இந்த புத்தகத்தில் பார்க்கமுடிகிறது!
நேருவை போற்றவும், தூற்றவும் செய்வதற்கு முன்னால் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது!
இன்றைய இந்தியாவின் பெருமைகள், சிறுமைகள் இரண்டிலுமே நேரு தான் கதாநாயகர்!
ஜனநாயகம்,நேர்மை, நல்லாட்சி , தொலைநோக்குப் பார்வை இவை நேரு ஆட்சிக் காலத்தின் அடையாளங்கள்!
மொழிப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, நதிநீர் விவகாரம், வெளியுறவுக் கொள்கை குளறுபடிகள் இதன் தொடக்கப் புள்ளியும் நேருவின் ஆட்சிக் காலமே!
காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபைக்கு கொண்டு போனதும் நேருதான் என்கிறார்கள்!
உண்மைதான்! அதை எந்தப் பின்னனியில் கொண்டு சென்றார்?
அதற்கு பதில் இங்கே உள்ளது!
சீனாவுடனான யுத்தத் தோல்விக்குக் காரணம் நேருவின் தவறான கணிப்பு என்கிறார்கள்!
இதன் பின்னனி என்ன ? இங்கே பதிவு உண்டு!
அடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்ட ஒரு சரியான மனிதரின் அக்கறையான பதிவு இந்த புத்தகம்!
இது சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் வெளியிடு!
(நன்றி: நெல்லை தினமலர் வாரமலர்!)
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)