அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29/10/12

அந்த கிராமத்தின் பெயர்... ...



நாட்டின்  தலைநகரிலிருந்து  200 மைல் தொலைவில் தென்மேற்கு கோடியிலுள்ள  30000 பேர்களே வசிக்கும் அந்த சிறு கிராமம் பின்லாந்து நாட்டின் மிக அழகிய பகுதிகளில் ஒன்று. ஊரின் நடுவே அமைதியாக ஓடும் அழகிய  நதியின் பெயர்தான் அந்த நகருக்கும். ஊரின் ஜனத்தொகையில் 50% மேல் 65 வயதுகாரர்கள். அதில் பலருக்கு உலகம் முழுவதும் தங்கள் ஊரின் பெயர் உச்சரிக்கபடுவதில் மிக பெருமை. சிலருக்கு என்ன பிரயோசனம்? ஊருக்கு ஒன்றும் லாபமில்லையே என்ற ஆதங்கம். இன்னும் சிலருக்கு சொல்பவரகள் எலோருக்கும் அது நம் ஊரின் பெயர் என்றே தெரியாதே என்ற வருத்தம்.
இந்த சின்ன கிராமத்தில் 1871ல்   தொடங்கபட்ட பேப்பர் தொழிற்சாலைக்காக மரக்கூழ் தயாரிக்கும் ஆலைக்கு ஊரின் பெயரையே வைத்து வியாபரம் செய்து வந்த ஒருகுடும்பத்தின் அடுத்த தலைமுறை ரப்பர் டயர்கள் தயாரிக்கும் தொழிலை துவங்கியது. பனிகட்டிநிறைந்த சாலைகளில் ஓட்டக்கூடிய  விசேஷ டயர்களை தயாரித்து புகழ்பெற்ற அந்த நிறுவத்தின் அதற்கு அடுத்த தலைமுறை  தொழிலை புதிதாக அறிமுகமான ஒரு துறைக்கு மாற்றியது. மாற்றாதது நிறுவனத்திற்கு முன்னோர் இட்ட தங்கள் ஊரின் பெயர்
தங்கள் நாட்டின் மக்கள்  நண்பர்கள், உறவினர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டே (நம்மை விடவா?)இருக்கும் பழக்கத்தை பணம் பண்ணும்  ஒரு தொழிலாக இவர்கள் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய  தொழில்நுட்பம் 10 ஆண்டுகளில் உலகத்தையே கலக்கி தங்கள் நாட்டின் பொருளாதரத்தையே மாற்றபோகிறது என்பது அப்போது  அவர்களுக்கு தெரியாது. நாட்டின் தலைநகருக்கு மிக அருகில் மிகபிராமண்டமான நவீன தொழிற்கூடத்தில் இன்று இயங்கும்  இவர்கள் முதலில் 1987ல்    எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ என்ற அச்சத்துடன் வெளியிட்ட  கருவி இன்று  உலகில் 150 நாடுகளில் பல லட்சகணக்கான பணியாளார்களின் உதவியுடன் தயாரிக்கபடுகிறது.கருவியிலுள்ள 100%பாகங்களும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையில் அமைக்கபடுவதால் சுழல் மாசுபடுவதில்லை. கோடிகணக்கானோர் பயன்படுத்துகின்றனர்,அந்த தொழிலில் உலக மார்க்கெட்டில் 40% தங்கள் வசத்தில் வைத்திருக்கும் இவர்கள். தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் மீதி  மார்க்கெட்டையும்  வளைக்கிறார்கள்.
ஆனால் பெயரிலிருக்கும் சொந்த ஊரில் ஒன்று கூட தயாரிக்கபடுவதில்லை.
அந்த ஊரின் பெயரும் அந்த கருவியின் பெயரும்  நோக்கியா.!




26/10/12

காப்பாற்றபட்ட காண்டாமிருகம்




அஸ்ஸாம் மாநில காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் அங்கு வாழும் ஒற்றைகொம்பு காண்டாமிருகங்களுக்காக உலகப் புகழ்பெற்றது
சமீபத்தில் அந்த காட்டுப்பகுதியில் சூழந்த தீடிர் வெள்ளத்தில் சிக்கிய ஒரு காண்டாமிருகத்தை பிரம்ப்புத்திரா நதியின் வெள்ளம் கெஹாத்தி நகருக்கு அருகிலுள்ள ராணிசாப்பூரி என்றஊரின் கரையில் கொண்டு சேர்த்ததுநதிக்கரையின் சேற்றுப்பகுதியில் புதையுண்டுசிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்த அந்த காண்டாமிருகத்தை 7 நாட்கள் போராடி காப்பாற்றியிருக்கிறார்கள்அஸ்ஸாம் காடுகளில் காணப்படும் இந்த ஒற்றைகொம்பன்  5 வகை காண்டாமிருகங்களில் ஒன்று. இந்த வகை உலகில் அரிதாகி கொண்டுவரும் ஒரு அரிய விலங்கினம். உலகில் இருக்கும் 2000 மிருகங்களில் 95% அஸ்ஸாம் காடுகளில் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இதன் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகள் போல எலும்பாக இல்லாமல்  முடிகற்றைகள் இறுகியபகுதியாக இருப்பதாலும் அதிலுள்ள சில விசேஷ  மருத்துவ பொருட்களினாலும் மிக விலைமதிப்பு வாய்ந்தது. ஒரு கொம்புக்கு 2.25லட்சம் அமெரிக்கடாலர் வரை கிடைக்கும் என்பதால் அந்த காட்டுப்பகுதிகளிலிருக்கும் வீரப்பர்களுக்குஎப்போதும் இவைகளின் மீது ஒரு கண். அதுவும் இதுபோல் எதாவது விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் வேட்டையாடமலேயே  அவர்கள் வேலை மிக எளிதாகிவிடும். அதனால் வனப்பாதுகாவலர்கள் இந்த காண்டாமிருகத்தை காப்பாற்றி அதன் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிசெய்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதானாதாக இல்லை. கயிற்றினால் இணைத்து ஒரு டிராக்கடர் மூலம் இழுக்க முயன்றபோது

10/10/12

நயாகராவின் நாயகன்


நயாகராவின் நாயகன்

உலகின் மிக அழகான ஆனால் ஆபத்தான அருவிகளில் ஒன்று நயாகாராஅமெரிக்க கனடா நாடுகளின் எல்லைப்பகுதியிலிருக்கும் மலைச்சரிவில் இந்த அருவி சீறிபாய்ந்து மூன்று பகுதிகளாக விழுகிறது. ஒரு அருவி அமெரிக்க பகுதியிலும் மற்றொன்று கனடாவின் பகுதியிலும் இன்னொன்று இரு நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் பகுதியின் நடுவிலும் விழுகிறதுஇந்தபகுதியை பார்க்க அமைக்கபட்டிருக்கும் பிரமாண்டமான பாலம் வழியாக இரு நாடுகளுக்கும் போக்குவரத்து வசதியுமிருக்கிறது. நயாகராவின் மிக அகலமான அருவியான இதில் நிமிடத்திற்கு 60 லட்சம் கன அடி தண்ணீர் கொட்டுகிறது.
இந்த அருவியின் அருகே அமெரிக்க எல்லைபகுதியிலிருந்து கனாடா நாட்டின் எல்லைபகுதிக்கு நடந்து சாதனை செய்திருக்கிறார் நிக்கோலஸ் வாலண்டேனா எனற அமெரிக்கர்நடந்தது  இழுத்துகட்டபட்ட  ஒரு கம்பியின் மேல்.!  நிக் தன் 13 வயதிலிருந்து கம்பியின் மேல் நடக்கும் வித்தையை செய்துவருபவர். உலகின் பல உயாரமானஇடங்கள்,கட்டிடங்களின் இடையே எல்லாம் நடந்து சாதனை படைத்தவர். 6 முறை கின்னஸ் சாதனைபட்டியலில் இடம்பிடித்தவர். ஆனால் நேரடியாகநயாகாராவின் மேல் தரையிலிருந்து 200 அடி உயரத்தில் கட்டபட்ட கம்பியில்  1800 அடிகள் நடந்து கடந்த முதல் மனிதன் என்ற சாதனை தான் மகத்தானது. காரணம் நயாகாராவின் அந்த பகுதியில் பொங்கி விழும் அருவியிலிருந்து எழும் பனிப்படலமும், ஆளைச்சாய்க்கும் காற்றும், பேரிரைச்சலும்  மிகப்பாதுகாப்பான தொலைவிலிருந்து பார்க்கும் டூரிஸ்ட்களையே அச்சபடுத்தும் ஒரு  விஷயம்.
உலகின் அழகான டூரிஸ்ட் தலத்தில் அடிக்கடிவிபத்து நேருவதை விரும்பாதாதால் அமெரிக்கா, கனடா இரு நாடுகளுமே தங்கள் பகுதி அருவிகளில் சாகஸ முயற்சிகளுக்கு தடை விதித்திருக்கிறது. இரு நாட்டின் எல்லைகளுக்கிடையே இந்த சாதனையை நிகழ்த்த விரும்பிய  “நிக்க்கு இது ஒரு நீண்ட நாள் கனவு. இரண்டாண்டு போராட்டங்களுக்குபின்னர்  இரண்டு அரசுகளிடமும்அனுமதி பெற்றிருக்கிறார். நியார்க் மாநில சட்டமன்றம் விசேஷ சட்டம் மூலம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் மிகப்பெரிய அளவில் அனுமதி கட்டணத்தை நிர்ணயத்தது. கனடாநாட்டில் ஒண்டார்ரியோ நகர்மன்றம் பல லட்சம் டாலர்களை நகர வளர்ச்சிக்காக நன்கொடையாக பெற்றபின்தான் அனுமதித்திருக்கிறது.
ஒரு சர்க்கஸ் குடும்பத்தின் 7 வது வாரிசான நிக்கோலஸின் குடும்பத்தில் பலர் சாதனையாளர்கள். தாத்தாவின் தந்தை அமெரிக்க பகுதி நயாகாராவை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர். நிக்கோலஸ் இந்த சாதனை செய்ய விரும்பியதற்கு அதுவும் ஒரு காரணம். மற்ற இடங்களைப்போல இங்கு ஒருமுறை பயிற்சி செய்யது பார்க்க முடியாது. அதனால் அருவிக்கு அருகில் ஒரிடத்தில் உயரத்தில் கம்பிகள் அமைத்து  ராட்ச தீயணக்கும் எந்திரங்கள்மூலம்  அருவி போல நீர்பாய்ச்ச செய்து பயிற்சி எடுத்திருக்கிறார்  நயாகாரா காற்றின் வேகத்தை தாங்க கூடிய கம்பிகள் மார்க்கெட்டில் இல்லாதால், விசேஷமாக கம்பிகள் தயாரிக்க பட்டன. இரு நாட்டின் மலைப்பகுதிகளிலும் அமைக்கபட்ட விசேஷ தூண்களில் இந்த கம்பியை  இணைக்கும் சவாலான விஷயத்தை ஹெலிகாப்படரின் மூலம் இழுத்துகொண்டு போய் செய்திருக்கிறார்கள்.   செலாவான பல மில்லியன் டாலர்களை ஏற்றுகொண்டன ஸ்பான்ஸர் செய்த டிவி சானல்கள்.
இறுதியில் திட்டமிட்டபடி சாதனையை துவக்கும் முன் பாதுகாப்பு ஏற்பாடாக இடுப்பு பட்டையிலிருந்து நடக்கும் கம்யினுடன் ஒரு சங்கலி இணைக்க வற்புறுத்தியது  ஸ்பான்ஸர் செய்த ஒரு டிவி சானல்முதலில் ஏற்க மறுத்த நிக் இறுதியில் சம்மதிக்க வேண்டியாதாயிற்று
25 நிமிடத்தில்  மெல்ல நடந்து  இவர் செய்த சாதனையை இரு நாட்டின் எல்லைகளிலும் லட்டசகணக்கானோருடன் உலகம் முழுவதும் டிவியில் பார்த்த்து.    முன்னிரவு வேளையில்  மின்னொளியில்  இதை செய்யவிரும்பியது சானல்கள்.  “  “ வெண்புகையான பனிச்சராலினிடையே ஓளிவெள்ளத்தில்  நடக்கும்போது கம்பியே கண்ணில் தெரியவில்லை. மிகமிக கவனமாக அடிகளை வைக்க வேண்டியிருந்ததுஎனறு சொன்ன நிக் தன்காலர் மைக்கின்மூலம் தரையிலிருக்கும் நண்பருடன் பேசிக்கொண்டே  நடந்தார். மைப்பகுதியை கடக்கும் போது  “இங்கிருந்து பார்க்கும் போது   நயாகாரா மிக ரம்மியமாகயிருக்கிறது. என்னைத்தவிர இதை யாரும்பார்த்த்தில்லை எனபது பெருமையான விஷயமாகயிருக்கிறதுஎன்றார்கனடா நாட்டின் எல்லையைத் தொட்டவுடன்  “கடவுள் அருளால் இதை சாதிக்க முடிந்ததுஎன்று சொன்ன நிக் செய்த முதல் வேலை அவருடைய பாட்டிக்கு போன். அவர்காலத்தில் சாதனையாளராக இருந்த பாட்டி வயது மற்றும் உடல் நிலை காரணமாக டிவி பார்க்க அனுமதிக்க படவில்லை. வினாடி தப்பினால் விபத்து என்ற இந்த சாதனைப்பயணத்தில் நிக் பத்திரமாக எடுத்துச் சென்றது கனடாநாட்டின் விசாவுடன் கூடிய அவரது பாஸ்போர்ட்.!