அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30/4/13

இந்திய ”ஸ்வாமி”யிடம் ஜோசியம் கேட்ட இங்கிலாந்தின் எதிர்கட்சி தலைவர்’



இங்கிலாந்தின் முதல் பெண்பிரதமர்திருமதி. மார்ரெட் தாட்சர். ”இரும்பு மனிஷி”யாக அறியபட்ட இந்த பெண்மணிஇங்கிலாந்தின்
பொருளாதர முகத்தை மாற்றியவர். நீண்ட நாள் பதவிவகித்த பிரதமரும் கூட. தனது 87 வயதில் கடந்த வாரம் காலமானார்..

===

 அயலுறவு துறையில் செயலராகயிருந்து ஒய்வு பெற்ற பின்னர் அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சாராக பணியாற்றியவர் நட்டுவார் சிங்.
நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பவர். அவரது “புலிகளுடன் வாக்கிங்- ஒரு ராஜதந்திர கடந்த கால கதைகள்
“Walking with lions-Tales from a diplomatic past )என்ற புத்கத்திலிருந்து…




1975ஆம் ஆண்டு நான் லண்டனில் துணைஹைகமிஷனராக இருந்த போது ஒரு நாள் அப்போது இங்கிலாந்து வந்திருந்த சந்திராஸ்வாமியிடமிருந்து போன் வந்தது. அவரை வந்து சந்திக்க வேண்டினார். “நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால் தூதரகத்திற்கு வரலாம் என்று சொல்லிவிட்டேன். காவி உடை, கழுத்தில் பெரிய உத்திராட்ச மாலை நீண்ட தண்டம் சகிதம் மறுநாள் என்னை ஆபிஸில் சந்தித்த அவர் உரையாடலின்போது பல இந்திய அரசியல் பிரபலங்களின் பெயர்களை உதிர்த்தார். கிளம்பும் முன் அவர் இங்கிலாந்தின் இரண்டு முக்கிய பெயர்களை குறிப்பிட்டு சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டினார். இவரை என்னை சந்திக்க சொன்னவரின் மேல் நான் கொண்டிருந்த நன் மதிப்பால் நேரிடையாக பதில் சொல்லாமல் சமாளித்தேன். (டிப்ளமேட் இல்லையா?) சில நாட்களில் அன்றைய அயலுறவு அமைச்சர் ஒய்,பி, சவாண் அமெரிக்க போகும் வழியில் லண்டன் வந்தார். அவரிடம் சந்திரா ஸ்வாமி பற்றி சொல்லி அவர் மெளண்ட் பேட்டனையும், எதிர்கட்சி தலைவர் மார்கரெட் தாட்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்லுகிறாரே, செய்யலாமா என்றேன். செய்யுங்களேன், அவர் சந்திப்பினால் பிரச்னை ஒன்றும் இல்லையே என்ற அவரது பதில் எனக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் அளித்தது. நல்ல வேளையாக மெளண்ட்பேட்டன் விடுமுறைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாதால் சந்திப்பு இயலாது என்று சொல்லிவிட்டார். தாச்சர் எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சருக்கு நிகரானவர் என்பதால் நேரில் சந்தித்து பேசினேன்.. மறுவாரம் 10 நிமிடம் சந்திக்க சம்மதித்தார். இந்த ஆள் ஏடாகூடாமாக ஏதாவது பேசிவிட்டால் எனக்குதான் பிரச்சனை என பயந்துகொண்டே இருந்தேன். பாரளமன்ற வளாகத்தில் நுழைந்த்திலிருந்தே மற்றவர்கள் கவனத்தை கவர ஏதாவது செய்துகொண்டு என்னை சங்கடபடுத்திக்கொண்டே வந்தார் ஸ்வாமி ”என்னை எதற்காக பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற தாட்சரின் கேள்விக்கு “சீக்கிரமே உங்களுக்கு தெரியும்” என்று ஹிந்தியில் சொன்னதை நான் மொழிபெயர்த்தேன், (ஆசாமிக்கு ஆங்கிலத்தில் ஒரு அட்சரம் தெரியாது) ஒரு பெரிய வெள்ளை பேப்பர் கேட்டார் அதை 5 நீள துண்டுகளாக கிழித்தார். மார்கரெட் தாட்சரிடம் கொடுத்து அதில் 5 கேள்விகள் எழுத சொன்னார். சற்றே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் அவர் எழுதினார். அவைகளை கசக்கி சின்ன பந்துகள் போல் செய்து தாச்சரிடம் கொடுத்து ஏதாவது ஒன்றை திறந்து பார்க்க சொன்னார் சந்திராஸ்வாமி. அவர் பார்த்துகொண்டிருக்கும்  கேள்வியை என்னிடம் இந்தியில் சொன்னார், நான் மொழிபெயர்த்தேன். சரி என்பது தாட்சரின் கண்ணிலேயே தெரிந்தது.அடுத்தடுத்த கேள்விகளும் சரியாகவே சொன்னார். தயக்கத்திலிருந்து ஆச்சரியமாக மாறியிருந்த தாட்சர் இவர் தெய்வீகசக்தி வாய்ந்தவர் என எண்ண ஆரம்பித்தது  எனக்கு புரிந்தது, சோபாவின் நுனிக்கே வந்து விட்ட தாட்சர் மேலும் சில கேள்விகளை கேட்க பதில்கள் சொன்ன பின்னர் சட்டென்று எழுந்து சூரியன் அஸ்தமித்துவிட்டான். நான் இனி இன்று பதில் சொல்ல முடியாது என்றார். உங்களை எப்போது மீண்டும் சந்திக்கலாம்? என கேட்ட தாச்சருக்கு ”வரும் செவ்வாய்கிழமை 2.30க்கு நட்வார்சிங் வீட்டில்” என்றார். ஆடிபோனேன். என்வீட்டிலா? நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஒரு தூதுவர் வீட்டிற்கு வருவதில் பல சம்பிராதயபிரச்னைகள் என்பதால் நான் இதை மொழிபெயர்த்து சொல்ல மாட்டேன் என்று சொன்னேன். ”சொல்லிய பின் பாருங்கள்” என்று அவர் சொல்லிகொண்டிருந்த போதே மார்கரெட் என்னவென்று விசாரித்தார்.. நான் சொன்னவுடன், ”மிஸ்டர் ஹைகமிஷனர் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?” எனகேட்டாரே பார்க்கலாம். விடைபெற எழுந்தபோது சடென்று ஒரு தயாத்தை வரவழைத்து வரும்போது இதை கையில் கட்டிகொண்டு சிவப்பு ஆடை அணிந்து வாருங்கள் என்றார். ஒருபெண் அணீய வேண்டிய ஆடையைபற்றி யெல்லாம் சொல்லுவது இங்கிலாந்தில் அநாகரிகம். எனபதால் சொல்ல மறுத்தேன். மீண்டும் தாட்சர் என்ன என்று கேட்டதனால் தலைகுனிந்துகொண்டே சொன்னேன். தாயத்தை வாங்கிகொண்டார்.
சொன்னபடி செவ்வாய் மதியம் மார்ரெட் தாட்சர் சிவப்பு உடையில் கையில் கட்டிய தாயத்துடன் வந்தார். நிறைய கேள்விகள் கேட்டார், அதில் முக்கியமானது, நான் நாட்டின் பிரதமர் ஆவேனா? எப்போது? ”நிச்சியம் இன்னும் 4 ஆண்டுகளில் என்ற ஸ்வாமி 9. 11.அல்லது 13 வருடங்கள் பிரதமாக இருப்பீர்கள்” என்றார். ஒரு நாள் பிரதமராவோம் என நம்பிய மார்கெட் தாட்சர் நீண்ட வருடங்களை நம்பவில்லை.
சந்திரா ஸ்வாமி சொன்னது பலித்தது. மார்கரெட் தாட்சர் 1979லிருந்து 1990 வரை  11 வருடம் பிரதமாரகயிருந்தார்.


19/12/12

ஒலிம்பிக்ஸ் பாலிடிக்ஸ்


இந்தியன் ஒலிம்பிக் சங்கங்கத்திற்கு 85 வயதாகிறது. சர்வே தேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகரித்திற்கும் இந்த சங்கம்தான் ஒலிம்பிக், காமன்வெல்த் கேம்ஸ்போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணிகளை தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு அமைப்புகளின் தேசிய  பெடரேஷன்களின் தலைவர்கள் இதன் உறுப்பினர்கள்.  ஊதியம் ஏதுமில்லாத  கெளரவ பதவி தான் என்றாலும்  கையாளும் காண்டிராக்ட்கள் ஆயிரம் கோடிகளில். கடந்த ஆண்டு வரை இந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலவராக இருந்தவர் சுரேஷ் கல்மாடி..

3/12/12

விண்கற்களும் குஜராத் படுகொலைகளும்




இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக  ஒரு ஆளும் கட்சி  பெண் எம்ல்ஏ கிரிமினல் குற்றத்திற்காக 28 ஆண்டுகள் குஜராத் மாநில  கலவர வழக்கில் தண்டிக்கபட்டிருக்கபட்டவர். திருமதி மாயா கோட்டானி, இவர் ஒரு டாக்டர். சொந்தத்தொகுதியியான நரோடாவிலிருந்து 3 முறை தேர்ந்தெடுக்கபட்ட பிஜெபி கட்சிக்காரர். 2007ல் குஜராத் அமைச்சரவையில் பெண்கள், மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்து 2009ல் ராஜினமா செய்தவர். 2002 கோத்திரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன் இவரது தொகுதிகளில் இருந்த கிராமத்தில் நடந்த  இனக் கலவரத்தில் 97 பேர் கொல்லப்படுகின்றனர், அவர்களில் 35 பேர் குழந்தைகள். அந்த கலவரத்தை தூண்டிவிட்டு நேரடியாக இவர் நடத்தினார் என்பது குற்றசாட்டு,

முதலில் நடந்த விசாரணைகளிலும் குற்ற பத்திரிகைகளிலும் இவர் பெயரே இல்லை. அந்த விசாரணைகள் வெறும் கண் துடைப்பு என உச்சநிதீமன்றத்தில்  நடந்த வழக்கில் உச்சநீதி மன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. அதன் அறிக்கையின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கில் டாகடர் மாயா கோட்னி தண்டிக்கபட்டிருக்கிறார்.
 இவரை குற்றவாளி என சிறப்பு விசாரணை குழு முடிவு செய்ய உதவியவர் மற்றொரு பெண். இவர் போலீஸ் அதிகாரியோ, பத்திரிகையாளரோ இல்லை. ஒரு விஞ்ஞானி. அதுவும் மிக சிலரே ஆராயும் விண்வெளியில் சுற்றும் விண்கற்களையும் வான் வெளியில் கிரகங்கள் அல்லாது சஞ்சரிப்பவைகளை பற்றி ஆராயும் ஒரு  காஸ்மோஸ் விஞ்ஞானி.  பெயர் திருமதி நிரஜ்ஹரி சின்ஹா. நிலவில் இருக்கும் கற்கள் பற்றியும் கிரகங்களுக்கு இடையே பறக்கும் விண்கற்கள் பற்றி நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கும் இந்த விஞ்ஞானி உண்மை நிலயை அறிய நானாவதி கமிஷன் போடபட்டபோது உதவ முன்வந்தார்.   பிரபஞ்சத்தை ஆராயும் இந்த பெண்  எப்படி பிரச்சனையை ஆராய முன்வந்தார்?  “நான் அஹமதாபாத்தில் பிறந்த ஒரு குஜராத்தி, அமைதிக்கு பேர்போன இந்த மாநிலத்தில் கண் எதிரே 1000 பேர் கொலபட்டதை சகிக்கமுடியாமல் பார்த்து கொண்டிருந்தேன். போலீசும் அரசாங்கமும் செய்யவேண்டியதை செய்யாமல்  குற்றவாளிகளை காப்பற்ற முயற்சிக்கும் போது  இது சரியில்லை.என நினைத்தேன். ராகுல் சர்மா எனற போலீஸ் அதிகாரி  கமிஷனிடம் சம்பவ இடத்திலிருந்து போலீஸ் அதிகாரிகள் பேசிய போன்களின் பதிவுகளின் சிடியை கொடுத்த போது இந்த அதிகாரிகள் அந்த இட்த்திலிருந்துதான் பேசினார்கள் என்பதை எப்படி நிருபிப்பீர்கள் என்று எழுப்பிய கேள்வி என்னை சிந்திக்க செய்தது.  எங்கோ பிரபஞ்சத்தில் சுற்றி வரும் கோள்களிலிருந்தும், விண்கற்களிலிருந்தும் வரும் ஒலிகளிலிருந்து தூரத்தை தீர்மானிக்கும் விஞ்ஞானத்தின் உதவியால் இதை செய்யமுடியாதா?  என்று யோசித்தேன்.  பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் சமூக ஆர்வலாரன எனது கணவரின் பணிகளில் உதவிகொண்டிருந்தேன்..


அவர் மற்றொரு கலவர வழக்கில் போலீஸ்காரர்களால் கொல்லபட்ட ஷராபூதீனின் சகோதரருக்காக போராடிக்கொண்டிருந்தார். கமிஷனுக்கு தரப்பட்டிருந்த மொபைல் போன் பதிவுகளிலிருந்து  அந்த கம்பெனிகளால் எந்த டவர் என்பதை மட்டும் தான் சொல்ல முடியும். நான் என் சோதனைகளினால் மிக சரியாக அது எந்த இடம் என்பதை அந்த ஒலியலைகளின் கனத்தின் மூலம் தூரத்தை நிர்ணயத்தேன். .   “நான் அன்றைய தேதியில் அந்த கிராமத்திலேயே இல்லை” என்று சொல்லிகொண்டிருந்தார் எம்ல் ஏ டாக்டர் மாயா கோட்னி அன்று காலை முதல் ஒவ்வொரு மணி நேரமும்  அவர் செல்போனுடன் எங்கிருந்தார் என்பதை இந்தவகையில் அளந்து அதை துல்லியமாக கூகுள் மேப்பில் குறித்து ஒரு கிராஃப் ஆக ஆக்கியபோது தெளிவான விஷயம் டாக்டர் மாயா  படுகொலைகள் நடந்தநேரமான  12.30 மணியிலிருந்து மாலை 4.30 வரை அங்குதான் இருந்திருக்கிறார்.
 என்பதுதான்.  இதேபோல் ஷெராபூதின் கொலைவழக்கில் அரசியல் வாதிகள் போலீஸ் அதிகாரிகளுடன் பேசியது ஒவ்வொன்றையும்  நேரத்தோடு ஆரய்ந்து கொடுத்திருக்கிறார். அதில் சம்பந்தபட்ட ஒரு போலீஸ் அதிகாரி அந்த போன் தன்னுடையதில்லை என்று சொன்னபோது  குரல் பதிவான போனின் ஆதிமூலத்தை ஆரய்ந்து அது அவருடன் அப்போது இருந்த போலீஸ்காரரின் போன்தான். தன்னுடையதை ஆப் செய்துவிட்டு அதை பயன்படுத்தியிருக்கிறார்  என்பதையும் சொல்லியிருக்கிறார்.
என் நுணுக்கமான பணித்திறன் நாட்டில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட உதவியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று சொல்லும் திருமதி நிரஜ்ஹரி சின்ஹா.நோய்வாய்பட்டு அதிகம் நடமாடமுடியாமல் மனமுடைந்து போயிருந்த என்னை இந்த பணியை செய்ய உற்சாகபடுத்திய கணவருக்கு நன்றி எனகிறார் திருமதி சின்ஹாவை தாக்கியிருப்பது புற்று நோய்.

26/11/12

ஒலியின் வேகத்தில் பயணித்த மனிதன்


                                                   ”கேர்ள் பிரண்டுடன் செட்டிலாகபோகிறேன்

ஒலியின் வேகம் மணிக்கு 1,236 கி.மீவிசேஷமாக வடிவமைக்கப்பட்ட சூப்பர்ஸானிக் போர்விமானங்கள் மட்டுமே பறக்க கூடிய இந்த வேகத்தில், வான்வெளியில்  ஒரு மனிதன் தனியாக பயணிக்க முடியுமா? இந்த வேகத்தில் பறக்க அல்லது மிதக்க வேண்டுமானால் முதலில் அந்த மனிதன்  30 கீமீ உயரத்திலிருந்து குதிக்க வேண்டும். (விமானங்கள் பறக்கும் உயரம் 12 கீமீ) சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத அந்த நிலையில் அந்த உயரத்தில் 15 வினாடியில்,முளைசெயலிழந்து, உடலில் உள்ள திரவங்கள் ஆவியாகி மரணம் நிச்சியம் எனபதால் இது எவராலும் முடியாத விஷயம் என்று கருதபட்டது. இதை செய்து காட்டி உலக சாதனை செய்திருப்பவர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரி நாட்டு முன்னாள் பைலட். அமெரிக்காவில் செட்டில் ஆனாவர்.. இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலம் ரூஸ்வெல் நகர மைதானத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி  சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து  வான் வெளியில் பாய்ந்து  மிதந்து  பத்திரமாக தரையிறங்கினார்.
எப்படி இதை செய்தார்?.

19/11/12


இந்தியா வந்த

இரும்பு பட்டாம்பூச்சி

திருமதி ஆங்சான் சூ சி, பர்மா என்று நீண்ட நாள் அறியபட்டிருந்த நம் பக்கத்துவீட்டு மியான்மர் நாட்டின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர். மியான்மர் நாட்டினையே உலகில் பலர் தெரிந்துகொள்ள காரணமாகயிருந்தவர். காரணம் தன் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த போராடியதற்காக 15 ஆண்டுகள்   சிறையிலிருந்தவர். சிறையிலிருக்கும்போதே அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டு, அதை சென்று வாங்க  ஆட்சியாளார்களால் அனுமதி மறுக்கபட்டவர், உலகில் அரசியல் காரணங்களுக்காக நீண்ட நாள் தண்டனை பெற்ற ஒரே பெண்மணி.  மெலிந்த உடல்,மென்மையானகுரல்,67வயது முதுமையை காட்டாத முகம் கொண்ட இவர் பார்க்க பட்டாம்பூச்சியாக இருந்தாலும் இரும்பு மனுஷி.  சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ஜவர்ஹலால் நேரு அமைதி பரிசை பெற்றுகொள்ள மேற்கொண்ட பயணம்.இம்மாதிரி பரிசுகளை ஏற்கும் உரையில் இந்தியாவை புகழ்ந்து தள்ளுவார்கள்.
”அண்ணல் காந்தியடிகளின் வழியில் நேருவை முன்னூதரணமாக கொண்டு நாங்கள் போராடிய காலங்களில் இந்தியா எங்களை கண்டுகொள்ளவில்லை” என்ற இவரது பேச்சு அதிர்வலைகளை உண்டாக்கின,

இந்தியா சுதந்திரபோராட்டத்தை தொடர்ந்து விடுதலை வேட்கை  வேகமாக பரவிய நாடுகளில் அன்றைய பர்மாவும் ஒன்று. அதன் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆங் சான். நாட்டை அன்னியர்களிடமிருந்து காக்க வலிமையான  ஒரு ராணுவத்தை உருவாக்க முயன்றுகொண்டிருந்தவர்.ஒரு நாள் படுகொலை செய்யபட்டார். அவருடைய ஒரே மகள்தான்  சூ சி. தாயினால் வளர்க்கபட்ட இவர் வளரும்போதே போராட்டங்கள் பல வற்றை சந்தித்தவர். டெல்லியில் 

14/11/12

நம்பிக்கை ஜெயித்திருக்கிறது


.மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்  ஒபாமா ஜெயிப்பது சந்தேகம், ரோம்னி  மிகக்குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கபோகிறார்” என்ற கருத்து கணிப்புகளையும் மீடியாக்களின் அரசியல் ஆருடங்களையும் பொய்யாக்கி விட்டார்கள் அமெரிக்க மக்கள். அதிபர் ஒபாமா அடுத்த 4 வருடங்களுக்கு வெள்ளை மாளிகையை காலிசெய்ய வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறார்கள். வெற்றி பெறுவதற்கு 270 பிரதிநிதிகளின் ஓட்டு தேவை என்ற நிலையில் ஒபாமா பெற்றது 303 ஓட்டுக்கள். அமோக வெற்றி.
<

2/11/12

007க்கு 50வது பிறந்தநாள்



திரைபடங்களில்  பெயர், கதை, காட்சிகளின் களன்கள், கதாநாயகர், நாயகிகள் எல்லாம் மாறும். ஆனால் கதாநாயகரின் பெயர் மட்டும் மாறாது. இப்படியொரு  அரை நூற்றண்டு சரித்திரத்தை படைத்திருப்பவை ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.   1953 ல்இயான்பிளிமிங் என்ற நாவலாசிரியர்  எழுதிய டாக்டர் நோ என்ற நாவலின் நாயகனின் பெயர் ஜேம்ஸ்பாண்ட்இது இப்படி ஹாலிவுட்டில் ஒரு நிரந்தர பெயராக நிலைத்துநிற்கும் என அவர் நினைத்துபார்த்துக்கூட இருக்க மாட்டார்.

இதுவரை வந்த படங்கள் 22  இறுதியாக  இம்மாதம் திரைக்கு வந்திருப்பது ஸகை ஃபால். எல்லாவற்றிலும் நாயகனின் பெயர் ஜெம்ஸ்பாண்ட் தான்.  <இங்கிலாந்து அரசியினால்  நியமிக்க பட்ட ஒரு சர்வ வல்லமை வாய்ந்த ரகசிய ஏஜெண்ட்களின் குழு M16 அதில் 007 என்ற கிரேடில் இருப்பவர்கள் தேச நலத்திற்காக எவரையும் கொல்லும் லைசென்ஸ் பெற்றவர்கள். இதன் தலமையில்என்ற பெயர் கொண்ட பெண் அதிகாரி.>  உலகின் அத்தனை விஷயங்களையும் நன்கு அறிந்த சுப்பர்புத்திசாலியான ஜேம்ஸ்பாண்ட் இவர் நமபிக்கைக்கு பாத்திரமானவர், உலகின் எந்தப்பகுதியிலும் வீர திர சஹாஸங்களை மிக அனாசியமாக செய்பவர் என வர்ணிக்கப் படும் இந்த  ஜேம்ஸ்பாண்ட்ட் படங்களினால் உண்மையிலேயே பிரிட்டிஷ் அரசில் அப்படி ஒரு அமைப்பு இருப்பதாக பலரும் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொரு படத்திலும் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்த சக்தி வாய்ந்த கார்கள், துப்பாக்கிகள் \கடிகாரங்கள் தயாரிக்கபடுவதாக காட்டப்படும். பாண்ட்படங்களில் மிக அழகான பெண்கள் அவருக்கு துப்பறியும் வேலைகளில் உதவுவார்கள். ஆனால் அவர் அவர்களை காதலிக்கவோ அல்லது மணம்செய்துகொள்ளவோ மாட்டார். அவர் என்றும் எலிஜிபிள் பேச்சலர்தான்.
கடந்த 50 ஆண்டுகளில்  ”டாக்டர் நோபடத்தில் சீன்கானரியில் துவங்கி டேனியல் கிரேக் வரை இதுவரை 6 கதாநாயகர்கள் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகர்கள் மாறினாலும், எல்லாபடங்களும் ஹிட்.காட்சி அமைப்புகளும், உலகின்பலநாடுகளின் கதைக்களன்களும் ஒரு காரணம். கடந்த சில ஆண்டுகளாக உலகின் பலமொழிகளில்(தமிழ் உள்பட) மொழிமற்றம் செய்யபட்ட எல்லா பழையபடங்களும் பணத்தை கொட்டுகின்றன.  இந்த அழியா இமேஜை உருவானதற்கு முக்கிய காரணம் முதல் 6 படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த சீன்கானரி. இவர் இதைத்தவிர பல படங்களில் நடித்திருந்தபோதிலும், இன்றும் (வயது82) ஜேம்ஸ்பாண்ட் கானரியாகத்தான் பிரபலம்.
இதுவரை எந்த கதாபாத்திரமும் 50 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தில்லை என்பதால்,ஜேம்ஸ்பாண்டின் 50வது பிறந்த நாளை ஹாலிவுட்டும், இங்கிலாந்து சினிமா உலகமும் ஆர்பாட்டமாக கொண்டாடுகிறது. இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களின் காட்சிகள், செட்களுடன் ஒரு மியூசியம். எல்லா ஜேம்ஸ்படங்களை திரையிடும் விசேஷ திரைப்படவிழா என அமர்களப்படுத்துகிறார்கள்.  இதுவரை வந்த படங்களில் வசூல் சாதனை  விபரங்களைத்தாண்டி எந்த கதாநாயகன்,  “பாண்ட்-ஜேம்ஸ்பாண்ட்என்ற புகழ்பெற்றார் வசனத்தை சொன்னார்,? எத்தனைபேரை கொன்றார்?, எந்த பாண்டுக்கு காதலிகள் அதிகம்?, சினிமாவிற்கு வெளியே இந்த பாண்டுகளில் யாருக்கு எத்தனை காதலிகள் போன்ற புள்ளிவிபரங்களை பிரிட்டிஷ் சினிமா பத்திரிகைகள் அள்ளிவீசுகின்றன. இங்கிலாந்து நாட்டின் சுற்றுலா வாரியம் “  ”ஜேம்ஸ்பாண்ட் எவரிதிங் ஆர் நத்திங்என்று ஒரு ஆவணபடத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. (பாண்ட்கதைகளின் படி ஜேம்ஸ் அரசிக்கு விசுவாசமுள்ள ஒரு பிரிட்டிஷ் பிரஜை)
இத்தனை ஆர்பாட்டங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல விஷயம். இரண்டு தலமுறையாக ஜேம்ஸ்பாண்ட் படங்களை தயாரித்து கொண்டிருக்கும் இயான் நிறுவனத்தினர் இதுவரை ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பயன்படுத்தபட்ட கார்,கைக்கடிகாரம், உடை கேமிரா போன்றவைகளை ஏலமிட்டு அந்த பணத்தை யூனீசிப் போன்ற தொண்டு நிறுவங்களுக்கு வழங்குவதுதான். ஆன்லையினில் மட்டும் நடைபெறும் இநத ஏலத்தில் இதுவரைகிடைத்திருப்பது ஒருமில்லியன் (பத்து லட்சம்) பவுண்ட்களுக்கும் மேல். இன்னும் ஏலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகள் திறையில் வாழும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் பெயரின் புகழ்  இத்தகைய பணிகளுக்கு பெரும் நிதிகிடைக்க உதவுமானால் இன்னும் பல ஆண்டுகள் அந்த பெயர் வாழ வாழ்த்தலாம்.