அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13/9/14

நாடு திரும்பிய நடராஜர்



ஆஸ்திரேலிய பிரதமர்  டோனி அபோட்டின் சமீபத்திய இந்திய வருகையினால் மிக சந்தோஷம் அடைந்தவர்கள் தமிழ்நாட்டின் அரியலூர் அருகிலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமமான ஸ்ரீபுரந்தன் கிராம மக்கள்தான். காரணம் அவர்கள் ஊரிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன 1000 ஆண்டுகள் பழமையான நடராஜார்  சிலையை  அவர் கொண்டுவந்திருக்கிறார் என்பது தான்.
ஸ்ரீபுரந்தன்  அரியலூர்  மாவட்டத்திலிருக்கும் ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு  சோழர்கள் காலத்தில் கட்டபட்ட  ஒரு பிரகதீஸ்வரர் கோவில்  இருக்கிறது. அதனுள் நிறுவபட்டு பல நூற்றாண்டுகள்  வழிபடபட்டுவந்த தெய்வம் நடராஜரும் அன்னை சிவகாமிசுந்தரியும். 1970களின் இறுதியில்; போதிய வருவாய் இல்லாதால் அர்ச்சகர் பணிவிலகி போனபின் கோவில் பூட்டப்படுவிட்டது. கிராமத்தின் காளி கோவில் பிரபலமாகிவந்ததால் மக்கள் மெல்ல இதை மறந்தே போனார்கள்.  மீண்டும் திறந்து வழிபடும் ஆர்வத்துடன் இருந்தவர்களுக்கும் போதிய ஆதரவும் உதவிகளும் கிடைக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை காளிபூஜை அன்று இந்த கோவில் முன் கொண்டு வந்து வழிபடும் முறையும் ஒரு முறை அந்த பூசாரியை இந்த பழையகோவிலின் உள்ளிருந்து வந்த ராட்சத தேனி கொட்டிவிட்டதால்  நின்று போயிருந்தது.  ஊரில்  இன்றய தலைமுறையினர்  அந்த கோவிலின் பாரம்பரியத்தையும், அந்த விக்கரகங்களின் பெருமையும் அறிந்திருக்கவில்லை.
2008ம் ஆண்டில்  அருகிலுள்ள சுத்த மல்லி என்ற கிராமத்தின் கோவிலில் இருந்த விக்கரகங்கள் காணமல் போன சமயத்தில்  இம்மாதிரி கோவில்களின் விக்கரகங்களை  அருங்காட்சியகத்தில் பத்திரபடுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கபட்டிருந்தது. அதற்கான முயற்சியில் தொல்பொருள் துறை இறங்கிய போது  கிராம மக்கள் எங்கள் தெய்வத்தை எல்லையை விட்டு வெளியே அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என ஒத்துழைக்க மறுத்தார்கள். பாதுகாப்பகாக கோவிலின் நுழைவாயில்களுக்கு சுருக்கி –விரிக்கும் இரும்புகதவுகளை (collapsible gate) போடலாம் என்று பஞ்சாயத்தாயிற்று.   போலீஸின் சிலைதிருட்டுகளை தடுக்கும் பிரிவின் உதவியுடன் அதற்காக கோவிலின் கதவுகளை திறந்த போது அதிர்ச்சி.  உள்ளே இருக்கும் நடராஜர் உள்பட 8 சிலைகளும் காணவில்லை, எப்போது எப்படி திருடு போனது? என்பதே தெரியவில்லை.. இந்த அதிர்ச்சியான செய்தி வெளியானபோது நடராஜர் 9000 கிமீ பயணித்து ஆஸ்திரேலியாவில் கானிபரா  நகரத்தில் தேசிய அருங்காட்சியகத்திலிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாமில்லை.
சிலை எப்படி திருடபட்டது?
சுபாஷ் கபூர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கலைப்பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் கடையை நடத்தி வரும் அமெரிக்க இந்தியர்.  உலகின் பல பிரபல மீயூசியங்களுக்கும், கலைச்செல்வங்களை சேகரிக்கும் உலக பணக்கார்களுக்கும் அறிமுகமானவர் ஆனால்  இறக்குமதி என்ற போர்வையில் பாரம்பரிய சிலைகளை கடத்தி விற்பனை செய்வது தான் உண்மையான தொழில் என்பது யாருக்கும் தெரியாது.  உலகின் கண்ணுக்கு இவர் ஒரு செல்வாக்குள்ள, நிறைய விஷய்ங்கள் தெரிந்த  ஆர்ட் டீலர்.
.100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான (1மில்லியன்= 10 லட்சம்) 150க்குமேலான  இந்தியாவிலிருந்து பழைய சிலைகளை கடத்தியிருப்பதாக  இவர் மீது வழக்கு போடபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இண்டர்போலால் தேடப்பட்டு வந்த இவரை ஜெர்மானிய போலீஸார் கைது செய்து தமிழக போலீசிடம் ஒப்படைத்தது. இப்போது சிறையில் இருக்கிறார், இவருக்கு உதவிய ஆட்களையும் கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் தந்த ஓப்புதல் வாக்குமூலத்தின் படி குற்ற பத்திரிகை தயாரிக்க பட்டிருக்கிறது.

கபூருக்கு  உலகம் முழுவதுமுள்ள கோவில்களில், அரண்மனைகளில் இருக்கும் பராம்பரிய சின்னங்கள் சிலைகளின் விபரங்கள் அத்துப்படி.  இந்தியாவைத்தவிர பாக்கிஸ்தான். ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,ஹாங்காங்,இந்தோனிஷியா,துபாய்.கம்போடியா என உலகின் பலநாடுகளில்   இவருக்கு உள்ளுர் எஜெண்ட்கள். தாஜ் மாதிரியான  ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி தனது ஏஜெண்ட்களிடம் எந்த கோவிலிருந்து எந்த சிலை வேண்டும் என்பதை போட்டோவை காட்டி சொல்லிவிடுவார். அவர்களுக்கு பெருமளவில் பணம் தரப்படும். 28 சிலைகளுக்கு 7 லட்சம் டாலர்கள்   இவருடைய எச் எஸ் பி வங்கி கணக்கிலிருந்து இந்தியாவிற்கு இதற்காகவே மாற்றபட்டிருக்கிறது என்கிறது போலீஸ் குற்றபத்திரிகை.  அந்த ஏஜண்ட்கள் உள்ளூர்  ஆட்கள் மூலம், யாருக்காக செய்கிறோம் என்பது கூட  தெரியாமல் வேலையை முடித்து கொடுப்பார்கள்.  சென்னையில் இவரது எஜெண்ட் அசோகன்  இவர் இந்த பணியை செய்ய ஓப்புகொண்டார். இந்த கோவிலில் பாழடைந்த நிலையில் இருந்தது வசதியாக போய்விட்டது.  முதலில்  அந்த பழைய பூட்டை உடைத்து 3 சிலைகளை அப்புறப்டுத்திவிட்டு பூட்டை மீண்டும்  பூட்டிய நிலையில் இருப்பது போல ஒட்டிவிட்டார்கள். கிராமத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு சில நாட்களில் ஒரு லாரியில் நிறைய மண்ணை கோண்டுவந்து அருகில்  நிறுத்தி கொண்டு 3 அடி உயரமும் 150கிலோ எடையையும் கொண்ட அந்த நடராஜரை கோவிலிலிருந்து கிளப்பி மண்ணில் புதைத்து கொண்டுபோய்விட்டார்கள்.
நடராஜர் ஆஸ்திரேலியா எப்படி போனார்.?
சர்வதேச சிலைகடத்தல் மன்னன் கபூரின் நெட் ஒர்க் மிகப் பெரியது. வலிமையானது. இந்தியாவிலிருந்து ஒரு சிலை அல்லது கலைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படவேண்டுமானால் அது பழங்கால அல்லது பாதுக்காக்க பட்ட சிற்பம் இல்லை என்பதை தொல்பொருள் துறையினர் அல்லது அவர்து அங்கீகாரம் பெறப்பட்டவர்கள் சான்றிதழ் அளிக்கவேண்டும். கபூர் தான் திருடும் சிலைகளின் படங்களையும் மாதிரிகளையும் கொடுத்து ஸ்வாமிமலையில் சிற்பிகளிடம்  புதிய சிலைகளை வடிக்கசெய்யவார். ”பழையது மாதிரியான (”antic look சிலகளுக்கு இப்போது மவுசு அதிகம் என்பதால் அதே போல் செய்ய சில சிலைகளைச் செய்ய  சொல்லி அதற்கு சான்றிதழ் வாங்கி  அனுப்பும் போது அதில் ஒன்றாக திருடிய சிலையையும் கலந்து  அனுப்பிவிடுவார்.  நியூயார்க்கில் அவருடைய நிறுவனதிற்கு எது மதிப்பு வாய்ந்தது என்பதை கண்டுபிடிக்க தெரியும். இப்படி கொண்டுவரபட்ட சிலைகளை தனது  நிறுவன கேட்லாக்கில் மிகபழமையான அரிய சிற்பம் என்றும் அது எங்கிருந்து  எப்போது வாங்கி யாரல் விற்பட்டது என்ற சரித்திரங்களை, ஆதாரங்களாக போலியாக தயரித்து ஆவணமாக்கியிருப்பார். அப்படி 2010ம் ஆண்டு இவர்  வெளியிட்டிருந்த கேட்லாக்கிலிருந்த இந்த நடராஜரை ஆஸ்திரேலிய தேசிய மீயூசிய இயக்குனர் பார்த்துவிட்டு நியார்க் வந்து இவரை சந்தித்து விலை பேசி தனது மியூசியத்திற்கு வாங்கியிருக்கிறார். விலை என்ன தெரியுமா? இந்திய மதிப்பில் 31 கோடிகள்.
காட்டிக்கொடுத்தார் கணேசர்
இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் பிச்சுமணி. ஸ்ரீபுரந்தன் நடராஜரை திருடும் முன் சுத்த மலை சிலைகலை திருடிய போது ஒரு நாலு அங்குல அளவில் ஒரு அழகான வினாயகர் சிலையை தனக்காக ஒதுக்கி கொண்டுவிட்டான். அன்னை பார்வதியை வினாயகர் மடியில் இருத்தியிருக்கும் அபூர்வமான சிலை அது.  எப்போதும் அதை தன்னுடன் வைத்திருப்பான். ஒரு நாள் கேரள எல்லையை தாண்டும்போது மதுபானம் இருக்கிறதா என சோதனையிட்ட செக்போஸ்ட் போலீஸாருக்கு இது கோவில் சன்னதி சிலையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்து தமிழக சிலை திருட்டு பிரிவு போலீசிடம் ஒப்படைத்ததுவிட்டார்கள்.  சுத்த மலை சிலை திருட்டை ஆராய்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு  அப்போது லட்டுவாக கிடைத்த துப்பு இது. அவர்களது கவனிப்பில் அசோகன் தொடர்பு, ஸ்ரீபுரந்தன் கோவில் திருட்டு வெளிநாட்டிலிருந்து பணம், உடன் வேலை செய்தவர்கள் எல்லாம் வெளிவந்துவிட்டது.
ஆண்டவனே ஆனாலும் ஆவணம் முக்கியம்
தமிழகத்தில்  பெருமளவில் சிலைகடத்தல் நடைபெற்றுகொண்டிருந்ததால்  காவல்துறையின் அந்த பிரிவு விரிவான  ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருந்தது.  அவர்கள் எதிர் கொண்ட ஒரு விஷயம் ஆஸ்திரேலிய  தேசிய மீயூசியத்தின் ஆண்டுமலர் புத்தகத்தில்  புதிய சேர்க்கை என போடபட்டிருக்கும் நடராஜரின் படம் நமது ஸ்ரீபுரந்தன் கோவிலைச்சேர்ந்தது என்பது. உடனே முழித்துகொண்டார்கள்.    அதை அவர்களிடமிருந்து மீட்க கோர்ட் உத்தரவு வேண்டும். என்பதால்  சட்ட விதிகளின்படி உள்ளூர்  மாஜிஸ்ட்ரேட் கோட்டில் மனுச்செய்தார்கள். நீதிபதி கேட்ட கேள்வி இந்த சிலைதான்  கோவிலில் இருந்தது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?   தெய்வ சன்னதிகளை படம் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் ஒரு போட்டோ கூட இல்லை. அரசின் அறநிலத்துறையிலும் இல்லை. திகைத்தது போலீஸ்.  செய்திகளை தினசரியில் பார்த்து கைகொடுத்து உதவினர் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரென்ச் இன்ஸிடியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற நிறுவனத்தினர். இவர்களின் ஆராய்ச்சையில் ஒரு அங்கம் இந்து கோவில்களீன் சிலைகள். உரிய அனுமதியுடன் தமிழக பண்டைய கோவில்கலையும் சிலைகளை ஆராய்பவர்கள். அவர்களிடம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் சிலைகளின் படங்கள் இருக்கின்றன.  அதன் ஆராய்ச்சியாளர் முருகேசன் இந்த நடராஜரின் படத்தை கொடுத்து உதவினார். அவர் 1958ல் எடுத்தது, 1994ல் மீண்டும் எடுத்ததையும் கொடுத்தார். (இந்த படங்களும்,ஆஸ்திரேலிய மீயூசிய படமும் கபூரின் போனிலிருந்த படமும் ஒத்துபோயிற்று. இதனால்தான் இண்டர்போல் கபூரை கைது செய்யவும் முடிந்தது.) அதை ஏற்று மாஜிஸ்ட்ரேட் ஆஸ்திரிலியே மீயூசியத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார்.  மத்திய அரசு அதிகாரிகளுக்கு மீயூசியம் இம்மாதிரி சிறிய கோர்ட்  ஆணைகளை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் ஆச்சரியமாக அந்த மியூசியம்  உடனடியாக செயலில் இறங்கி  விசாரணையில் அது திருட்டு பொருள் என கண்டுபிடித்துவுடன்.இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிடுவதாக அறிவித்துவிட்டார்கள். கபூர்நிறுவனத்தின் மீது தாங்கள் செலுத்திய பணத்தையும் நஷ்ட ஈடாக மிகப்பெரிய தொகையையும் கேட்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இந்த நடராஜரைத்தான் ஆஸ்திரேலிய பிரதமர் தன் கையோடு கொண்டுவந்திருக்கிறார். இந்திய பிரதமரிடம் ஒப்படைத்திருக்கிறார்.  இந்த நடராஜருடன் ஆஸ்திரேலிய பிரதமர் கொண்டுவந்தது ஒரு அர்தநாரிஸ்வரர் சிலை. இது விருத்தாச்சலத்திலிருக்கும் விருந்த கீரிஸ்ரவர் கோவிலில் இருந்து திருடபட்டு ஆஸ்திரேலியாவிற்கு கடத்தபட்ட கற்சிலை. இது ஆஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ் பகுதி மீயூசியத்தில் இருந்தது..  கர்பக்கிருஹத்தின் பக்கவாட்டு சுவரிலிருந்த இதன் இடத்தில் ஒரு போலியை நிறுவி விட்டு  இதை அபேஸ் செய்திருக்கிறார்கள்.  எப்போது காணாமல் போனது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. பாண்டிச்சேரி இன்ஸ்டியூட் 1974ல் படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு பின்னால் என்றோ ஒரு நாள் இடம் மாற்றப்பட்டிருக்கிறது
.
எப்போது இந்த சிலைகள் கோவிலுக்கு வரும்?
டில்லி வந்து விட்ட நடராஜர் எப்போது ஸ்ரீபுரந்தன் வருவார்?   நாட்டின் பிரதமரே கொண்டுவந்து கொடுத்தாலும்  சில சட்ட சிக்கல்களை   நடராஜர்  சந்திக்கவேண்டியிருப்பதை  தவிர்க்க முடியாது. . சட்டப்படி இவைகள் கோர்ட்டால் ஆணையிட்டு கண்டுபிடிக்க பட்ட திருட்டு சொத்துக்கள். வழக்கு முடியம் வரை இவை கோர்ட்டின் பாதுகாப்பில்தான்.  இருக்க வேண்டும். வழக்கு, மேல்முறையீடுகள் முடிய பல வருடங்கள் ஆகலாம். ஆனால்  இம்மாதிரி வழக்குகளில் சில முன்மாதிரிகள் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்  கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் நடராஜர் கடத்தபட்டு மீட்க பட்ட போது  வழக்கு முடியம் வரை அதை மயிலாப்பூர் கபாலி கோவிலில் பாதுகாக்கவும் பூஜிக்கவும் நீதிபதி அனுமதித்தார். அதுபோல் இதற்கு அனுமதிப்பார்கள் என கிராம மக்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள். பாழடைந்த கோவிலை சீராக்க நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் கடவுள்கள் பத்திரமாக இருக்கிறார்களா?
 அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட  சிலைகடத்தல் மிக பெரிய லாபத்தைக்கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிகொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு  முக்கிய டார்கெர்கெட். தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு  பிரிவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.  இப்போது 28 சிலைகளை மும்பரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். 5  சிலைகள் மீயூசியங்களில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.  இவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை  மாநிலத்தில் இருக்கும் 45000 கோவில்கள். இதில் பலவற்றில் சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும் போட்டோக் களோ விபரங்களோ இல்லை. காணாமல் போனால்  அடையாளம் சொல்லக்கூட முடியாது.  இவர்கள் முயற்சியில் ஒரு 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும் ஒரு1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகள் தமிழ்நாட்டிலிருந்து கடத்த பட்டிருக்கும் தொன்ம சிலைகள் என நம்புகிறார்கள்.  ஆனால் எந்த கோவிலுடையது என்பது தெரியவில்லை. அது தெரியாமல், அதை நீருபிக்காமல்  அவைகளை மீட்க முடியாது. அந்த கோவில்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கேட்டு  திரு பொன் மாணிக்கம் டிஐஜி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். (அவசியமானல் போலீஸ் அறிவிப்பை பாக்ஸில் போடாலாம்-தந்தி 7/9/14)
ஸ்ரீபுரந்தன் நடராஜர். கூடவே இருந்து காணமல் போன அம்பிகை இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.  நல்ல வேளையாக விற்பனை செய்யப்படுமுன் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கைபற்றிவிட்டது.  இந்தியா கொண்டுவர முயற்சிகள் துவங்கியிருகின்றன. உலகம் சுற்றியபின் ஆண்டவன் வந்துவிட்டார். அம்பிகை எப்போது வருவாரோ? .
அரும் சிலைகளும் கலைப்பொருட்களும்  வெளிநாடுகளுக்கு கடத்தபடுவதும், மீட்கபடுவதும்  நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும்  விஷயங்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் நல்லெண்ண பயணத்தின் போது கொண்டுவந்து தருவது இதுவே முதல் முறை.  நமது பிரதமர்  இதற்காக நன்றி சொன்ன போது  டோனி அபோட் சொன்னது ”இந்தியர்களின்  கோவில் வழிபாட்டு முறைகளை நாங்கள்  அறிவோம். அவற்றை மதிக்கிறோம்”  

4/9/14

”அப்பா மிகவும் பொறுமை சாலி “



 முன்னாள் அமைச்சர் நட்வார்சிங்கும், முன்னாள் செயலாளர் சஞ்யைபாருவாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கும் புத்தகங்கள் வெளியாயிருக்கும் இந்த நேரத்தில், மன்மோகன் சிங்கின்  வாழ்க்கையின் ஒரு பகுதியை சொல்லும் புத்தகம்  மன்மோகன் குருஷரன்  பற்றிய மிக தனிப்பட்ட விஷய்ங்கள்” (Strictly Personal: Manmohan and Gursharan). வெளியாகியிருக்கிறது. எழுதியிருப்பவர்  முன்னாள் பிரதமரின்  இரண்டாவது மகள் தாமன் சிங். மன்மோகன் தம்பதியினருக்கு 3 மகள்கள். மூவரும் தங்கள் படிப்பால் திறனால் தத்தம் துறைகளில் உயரங்களை தொட்டவர்கள்மீடியாக்களின் வெளிச்சங்கங்களை தவிர்த்தவர்கள். முதல் மகள் உப்பிந்தர் சிங் பல்கலைகழக பேராசிரியை. மூன்றாவது மகள் அமிர்த் சிங் சர்வ தேச மனித உரிமை சட்டங்களில் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணி செய்துகொண்டிருப்பவர்.
இரண்டாவது மகள் தாமன் டெல்லிகல்லூரியில் கணிதமும், குஜராத் ஆனந்த் மேலாண்மைகல்லூரியில் நிர்வாகமும் படித்தவர்ஆசிரியையாக இருந்தவர். இதுவரை  6 புத்தகங்கள் எழுதியிருக்கும் நூலாசிரியர். கணவர் போலீஸ் அதிகாரிஇரண்டு குழந்தைகள். தன் குடும்பத்துடன் தனியாக டெல்லியில் வசிக்கும் இவர் தன் சகோதரிகளைப் போல மிக எளிமையானவர். செல்போன் வைத்துகொள்லவில்லை. கார் ஓட்ட டிரைவர் கிடையாது.

தனது தந்தை மற்றும் தாயாருடன் பேசியபோது கிடைத்த தகவல்களை, தான் நேரடியாக பார்த்த தகவல்களை தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார் தாமன் சிங். நூலில் மன்மோகன் சிங்கின் இளமை காலம் முதல் கூறப்பட்டுள்ள சுவாரசியமான பல தகவல்கள்: 1948ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமிர்தசரசில் உள்ள கால்சா கல்லூரியில் எப்.எஸ்.சி. படிப்பில் மன்மோகன் சிங்கை சேர்த்தார் அவருடைய தந்தை.
தனது தந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அது பிடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர தாகத்தால், பொருளாதாரம் குறித்த படிப்பை மேற்கொண்டார். பிறகு தந்தையின் வியாபாரத்தில் சேர நினைத்தார். ஆனால் அங்கு டீ வாங்கி தருவது, குடிக்க தண்ணீர் தருவது போன்ற வேலையே அவருக்கு தரப்பட்டது. அது பிடிக்காததால், படிப்புதான் முக்கியம் என்று உணர்ந்தார். அதைத் தொடர்ந்து 1948 செப்டம்பர் மாதம் இந்துக் கல்லூரியில் சேர்ந்தார். வறுமை குறித்து தனக்கிருந்த கவலை, சில நாடுகள் பணக்கார நாடாகவும், பல நாடுகள் ஏழை நாடாகவும் இருப்பது ஏன் என்ற கேள்வி, அவரை பொருளாதார படிப்பை தேர்ந்தெடுக்க வைத்தது.பொருளாதாரத்தை சிற்ப்பாக படித்து ஒரு சிறந்த அரசு அதிகாரியாகவேண்டும் என்பது  அவரின் கனவாகயிருந்தது.

 பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, செலவுக்கு போதிய பணம் இல்லாமல் தவித்தார். ஆண்டுக்கு ஆன படிப்பு செலவு 600 பவுன் பஞ்சாப் பல்கலைகழகம் 160 பவுன் ஸ்காலர்ஷிப் கொடுத்திருந்தது. மீதி பணம் அவர் தந்தை அனுப்பவது. அது உரிய நேரத்தில் வராது. அதனால்  வெளியில் சாப்பிடவே மாட்டார்.
 அந்த பல்கலை கழகத்திதல் படிக்கும்போது பல்கலை வளாகத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் உணவையே சாப்பிடுவார். அதற்கும் பணம் இல்லாத நேரத்தில்  ஒரு நாளைக்கு ஒரே ஒரு சாக்லெட் மட்டும் சாப்பிடுவார். மாதம் 25 பவுண்ட் கடன் தருவதாக சொன்ன நண்பர் தந்த பணம் 3 பவுன் மட்டுமே. வறுமையை தனது வாழ்க்கையில் உணர்ந்தவர் மன்மோகன் சிங். மிக நெருங்கிய நண்பர்களுடன் பேசும்போது, மிகவும் ஜாலியான நபர் அவர். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் வைத்தே அழைப்பார். நகைச்சுவை உணர்வு அவருக்கு அதிகம்என்று எழுதியிருக்கும் தாமல்சிங் இந்த விபரங்களை சேகரிக்கபட்ட கஷ்ட்டத்தையும் சொல்லுகிறார்நணபர்களிடம் ஜோக் அடித்துகொண்டிருக்கும் அப்பாவார்த்தைகளை மிக சிக்கனமாகத்தான்  குடுமப்த்தினரிடம்  உபயோகிப்பவர்ஒரு மகளாக அறிந்ததைவிட இந்த நூலாசிரியராக  அவரைப்பற்றி அறிந்ததுதான் அதிகம்

 நாட்டுக்காக சேவையாற்றிய அவர், அரசியல், அரசு வாழ்க்கைக்கே தன்னை பெரிதும் அர்ப்பணித்து கொண்டார். குடும்ப வேலைகளில் அவர் ஈடுபட்டதில்லை. முட்டை வேகவைப்பது, டி.வி.யை ஆன் செய்வது போன்ற சின்ன சின்ன வேலைகள் கூட அவர் செய்தது இல்லை. வீட்டுக்கு வரும்போதே ஒரு பெரிய பையில் கோப்புகள் வரும். தனது படுக்கையில் உட்கார்ந்து அந்த கோப்புகளை பார்ப்பார். அவ்வாறு கோப்புகள் இல்லாவிட்டால், புத்தகத்தை எடுத்துக் கொள்வார்  அதுவும் ஒரு பொருளாதார புத்தகமாகத்தான் இருக்கும். என்று நூலில் தாமன் சிங்  எழுதுகிறார்.

மன்மோகனும் அவரது மனைவியும்  எப்படி வாழக்கையின் எல்லா கால கட்டங்களிலும் சந்தோஷமாக இருந்தார்கள் என்பதை எளிய ஆங்கிலத்தில் மெல்லிய நகைச்சுவையுடன் விவரிக்கும் தாமல் இந்த புத்தகத்தில்  அவர் பிரதமாராக இருந்த 10 ஆண்டு காலத்தைப்பற்றி எதுவும் நேரிடையாக எழுதவில்லை. ஆனால் சில இடங்களில் கோடுகாட்டபடுகிறதுஇந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்த போது அடைந்த அதிர்ச்சி, ஒரே நாள் இரவில் நிதிமந்திரியானதுராகுலின் ஆவேச பேச்சு (காபினட் முடிவை கிழித்தது) வெளியானபோது அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிகொண்டிருந்தார்ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்புங்கள் என  ஒரு நண்பர் சொன்னபோது எனக்கு நிறைய பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்று சொன்னது. தன் அமைச்சர்களுக்காக பொறுப்பேற்றது பற்றியெல்லாம் மிகவும் மெல்லிய இழையாகச் சொல்லபட்டிருக்கிறது.


 புத்தக அறிமுக விழாவில் மன்மோகன்  பிரதமராக இருந்த காலத்தை பற்றி எழுதவீர்களா? எனக்கேட்டதற்கு தாமல்  சொன்ன பதில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான அந்த கட்டங்கள் பற்றி அப்பா எழுதினால்தான் சரியாக இருக்கும். ஒரு நாள் அவரே எழுதுவார்  என நம்புகிறேன் என்றார்

(கல்கி 7/9/14 இதழில்)

19/8/14

புதிய இஸ்லாமிய தேசம் உருவாகிறதா?

ஆழம் ஆகஸ்ட் இதழில் எழுதியது. 

New post on ஆழம்

புதிய இஸ்லாமிய தேசம் உருவாகிறதா?

by ரமணன்
Chapter01எரிந்து கொண்டிருக்கிறது எண்ணெய் பூமி. இரானுடன் சண்டை, குவைத் ஆக்கிரமிப்பு, சதாம் எழுச்சி வீழ்ச்சி, அமெரிக்க முற்றுகை என்று கடந்த முப்பதாண்டுகளாக உலகச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்று வந்த இராக்கில் அண்மையில் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.
ஏன் இந்தப் போர்?
சற்றே முந்தைய வரலாற்றை ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கும். மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இராக். சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமிக்க நாடும்கூட. மெசபடோமிய வண்டல் சமவெளி, ஜாக்ரோஸ் மலைத்தொடர்கள், சிரியா பாலைவனம், வடக்கு பெர்ஷிய வளைகுடாவை ஒட்டிய (58 கிலோமீட்டர் நீளம்) கடற்கரை என வேறுபட்ட நில அமைப்புகளை உள்ளடக்கிய நாடு. வடக்கில் துருக்கியும், கிழக்கில் இரானும், தென்கிழக்கில் குவைத்தும், தெற்கில் சவூதி அரேபியாவும், தென்மேற்கில் ஜோர்டானும், மேற்கில் சிரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. யூப்ரடிஸ், டைக்ரிஸ் என இருபெரும் ஆறுகள், வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, இராக்கின் மையப் பகுதியைக் கிழித்துக்கொண்டு ஓடுகின்றன. இதனால் பாலைவனம், ஸ்டெப்பி புல்வெளி என்பதோடு வளமான வேளாண் நிலங்களும் இராக்கில் உள்ளன. இராக்கின் புராதனப் பெயரான மெசபடோமியா என்பதற்கு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள நிலம் என்று பொருள்.
நதிக்கரைகள்தான் நாகரிகங்களின் தொட்டில் என்பதற்குச் சான்றாக வரலாறு சொல்லும் இடங்களில் இந்தப் பகுதியும் ஒன்று. உலகுக்கு எழுத்துமுறையை வழங்கிய இந்த மண்ணில்தான் இப்போது வன்முறைக் கலாசாரம் வேறூன்றியிருக்கிறது. பாபிலோனிய பேரரசிலிருந்து தொடர்ந்த நீண்ட நெடிய மன்னர் பரம்பரைகளை வரலாறாகக் கொண்ட இராக் மற்ற நாடுகளைப்போல ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் சிக்கியிருந்தது. நாற்பதுகளில் இராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால் 1958ல் நடந்த ராணுவப் புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் இராக் அதிபராகப் பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி 2003ல் இராக்கைத் தனது ஆளுகையின்கீழ் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளின் படையும் கொண்டுவந்தது. இந்தப் போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ம் ஆண்டு தேச துரோகத்துக்காகத் தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர். ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர். பல கட்சி நாடாளுமன்ற முறை உருவாக்கப்பட்டு அமெரிக்கச் சார்பு ஆட்சி அமைக்கப்பட்டது.
அப்போது ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். சிறு கலவரங்கள் ஆரம்பமாயின. 2011ல் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறியதும் இக்கலவரங்கள் தீவிரமடைந்தன. ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திவந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டுப் போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தப் போரை நடத்துபவர் யார்?
‘நாங்கள்தான்’ என்று ஐ.எஸ்.ஐ.எஸ் எனற அமைப்பு அறிவித்தபோது அமெரிக்க உளவு அமைப்புகள் ஆச்சரியமடைந்தன. காரணம் அவர்கள் கணிப்புப்படி இந்தப் புரட்சிகர அமைப்பு அதிக நிதி வசதி இல்லாத, பயிற்சிகள் ஏதும் பெறாத ஒரு சிறு குழு. இதன் தலைவர் யார் என்பதை அறிந்துகொண்டபோது அதைவிட ஆச்சரியம் அடைந்தது அமெரிக்கா. இந்த இயக்கத்தின் தலைவராக அறியப்பட்ட அபுதுவா என்பவர் 34 வயதில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இராக்கின் கண்காணிப்பு முகாமில் கைதியாகக் கழித்தவர். அப்போதெல்லாம் மிக அமைதியானவராகத் தோற்றமளித்த அப்பாவி. ஒரு மசூதியில் குமாஸ்தாவாகப் பணியாற்றிவந்த இவரைச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தார்கள். விசாரணையின் முடிவில் இவர் ஓர் அச்சுறுத்தல் அல்ல என்று கூறி விடுதலை செய்துவிட்டார்கள். இராக்கின் பல நகரங்களைப் புரட்சிப் படைகள் கைப்பற்றி வருவதாகக் கடந்த இரண்டு மாதங்களாக வெளிவரும் செய்திகளின் பின்னணி இவர்தான். அப்பாவி என்று நினைத்து விடுதலை செய்த அமெரிக்கா இப்போது இவர் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்திருக்கிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, ‘உங்களையெல்லாம் நியூ யார்க்கில் சந்திக்கிறேன்’ என்று சிறை அதிகாரிகளிடம் அபுதுவா கூறினாராம். அவை சாதாரண வார்த்தைகளல்ல என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. இன்னொரு பெரும் அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டியிருக்குமோ என்றும் அமெரிக்கா அச்சப்படத் தொடங்கிவிட்டது. அந்த அச்சத்தின் விலைதான் 10 மில்லியன் டாலர்.
அல் காயிதாவைப்போல் மற்றொரு சவாலாக இப்போது ஐஎஸ்ஐஎஸ் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் லெவாண்ட். இராக், சிரியா, லெபனான் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய அகண்ட இஸ்லாமிய தேசம் அமைப்பதுதான் இந்த இயக்கத்தின் கனவுத் திட்டம். 2003ல் இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியபோது சின்னதொரு போராளிக் குழுவுக்குத் தலைவராக இருந்த அபுதுவா இன்று ஒரு போரையே தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி என்னும் கேள்விக்கு விடை தேடத் தொடங்கியபோது அமெரிக்க உளவுத்துறை சில விஷயங்களைக் கண்டுபிடித்தது.
  • அல் காயிதாவின் இராக் கிளையான ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக்) அமைப்பில் கவுன்சில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
  • 2009ல் அமெரிக்கக் கண்காணிப்பு முகாமில் இருந்து விடுதலை ஆன சில மாதங்களில் ஐஎஸ்ஐ தலைவர் அபு ஓமர் அல் பாக்தாதி திடீரென்று கொல்லப்பட, அவருடைய இடத்தை இவர் நிரப்பியிருக்கிறார்.
  • இராக்கில் நடந்துவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் இவரே காரணம்.
எல்லாப் புரட்சித் தலைவர்களைப்போல இவருக்கும் பல பெயர்கள், முகங்கள். ஊடகங்கள் சொல்லும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களிடையே பிரபலமான டாக்டர் இப்ராகிமும் ஒருவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ய அமெரிக்காவுக்கு ஓராண்டாகியிருக்கிறது. மக்கள் மத்தியில் பிரபலமான இவருடைய பெயர் அபுதுவா. தனது படைகளுடன் பேசும்போதுகூட ஸ்பைடர்மேன் ஸ்டைலில் முகமூடி அணிந்திருப்பதால் அவர் முகம் பலருக்குத் தெரியாது. இப்போது அமெரிக்கா வெளியிட்டிருக்கும் படம்கூட பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதுதான்.
இந்த ஸ்பைடர் மேன் அபுதுவா மதக்கல்வியில் பிஹெச்டி முடித்தவர் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களுக்குச் சென்று மதப் பிரசாரம் மேற்கொண்டு தீவிரவாத வெறியை ஊட்டுவதில் தன் வாழ்நாளைச் செலவழிக்கிறார். உலகளவிலான ஜிகாதி அறிவுஜீவிகளின் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஒசாமா பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல்காயிதா மீதிருந்த நம்பிக்கை இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களிடையே குறைந்துவரும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவராக அபுதுவா உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக இராக்கில் அடுத்தடுத்து சிறைகள்மீது திடீர் தாக்குதல்களை நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுதலை செய்த இவரது நடவடிக்கைக்கு சன்னி இஸ்லாம் வகுப்பினரிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
அல் காயிதா இவரைத் தங்கள் தலைவராக ஏற்கவில்லை. அவர்களிடையே நிறைய முரண்பாடுகள் நீடிக்கிறது. நீங்கள் இராக்கில் மட்டும் தலைவராக இருங்கள் என்று சொல்லிவிட்டது. அபுதுவா தன் பங்குக்கு, நாங்கள் அல் காயிதாவின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்தர இஸ்லாமிய அமைப்பு என்றே அறிவித்துள்ளார். ஆனால் அவரது கனவு மிகப்பெரியது என்பதில் சந்தேகமில்லை.
இஸ்லாமிய தேசக் கனவு
அபுதுவாவின் கனவு அகண்ட இஸ்லாம் தேசம். ஐரோப்பாவில் ஸ்பெயினின் வடக்கு எல்லையில் தொடங்கி, வட ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா முழுக்க ஒரே இஸ்லாமியக் குடையின் கீழ் அமையவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இஸ்லாமிய ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசங்களை ஷரியத் சட்டம்தான் ஆளவேண்டும். இந்த லட்சியத்துக்கு முதல் படியாகத்தான் சிரியா, இராக் இரண்டு நாடுகளையும் கைப்பற்றும் நோக்கில் சிறிது காலமாகப் போராடிவருகிறார்கள். சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் இவர்களது பங்கு கணிசமாக இருந்தது. இராக்கிலும் பல்வேறு சிறுநகரங்களை வென்றெடுத்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரை எழுதும்போது பாக்தாத்தை நெருங்கியிருந்தார்கள். முதல்கட்ட வெற்றியை ருசித்தபின் சிரியா மற்றும் இராக்கில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியிருக்கும் பகுதிகளை தனி நாடாக இந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்த நாட்டுக்கு ‘இஸ்லாமிய தேசம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதற்கு கலிபாவாக (மன்னராக) அபுதுவா இருப்பார் என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இனி ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் இயங்கப்போவதில்லை என்றும் இஸ்லாமிய தேசம் என்னும் பெயரில் இயங்குவோம் என்றும் அறிவித்திருக்கிறார்.
உருவாகியிருக்கும் புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் வந்து குடியேறவேண்டும் என்று கலிபா அழைப்பு விடுத்துள்ளார். நீதிபதிகள், மருத்துவர்கள்,பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய தேசத்துக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியா, சிரியர்களுக்கு மட்டுமானதல்ல. இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல. முஸ்லிம் மக்களே உங்கள் நாட்டுக்கு விரைந்து வாருங்கள். அல்லாஹ் காட்டிய வழியில் நமது புனிதப் போரை நடத்துவதைத் தவிர இந்தப் புனிதமான ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய புனிதமான பணி வேறு எதுவுமே இருக்கமுடியாது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நமது முன்னோர்களின் வழியில் செல்வோம்!’
நிதி எங்கிருந்து வருகிறது?
அமெரிக்க உளவு நிறுவனங்கள் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. முன்னாள் அதிபர் சதாமின் ரகசிய சொத்துக்கள் இவர் வசம் வந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது. கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு நிதி திரட்டியதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. அல் காயிதாவுக்கு முன்பு நிதி கொடுத்துக் கொண்டிருந்த புரவலர்கள் இப்போது இந்த அமைப்புக்கு உதவுகிறார்களா என்பதையும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் இருக்கும் செல்வங்களை அப்படியே சூறையாடும் பழங்கால ராணுவ பாணியை இந்த அமைப்பு பின்பற்றுகிறது. சமீபத்தில் இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியபோது, அங்கிருந்த வங்கியை சூறையாடியதன்மூலம் மட்டும் சுமார் நானூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்திருக்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு இப்போது இரண்டு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு இருக்கலாம் என்பது அமெரிக்க சிஐஏவின் மதிப்பீடு.
விளைவுகள் என்ன?
இஸ்லாம் மதத்தினரின் இரு பிரிவுகளுக்கிடையே பெரும் பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இராக்கில் முதலில் தாக்கப்பட்டவை வழிபாட்டுத்தலங்கள்தாம். வடக்கு இராக் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஷியா பிரிவு மசூதிகளையும் வழிபாட்டுத் தர்காக்களையும் இடித்து வருகின்றனர். புல்டோசர் மற்றும் வெடி மருந்துகளை வைத்து இவற்றைத் தகர்த்தெறிந்த படங்கள் வெளியாகியிருக்கின்றன. வடக்கு மாகாணமான நினேவெஹ் பகுதியில் உள்ள மொசூல், டல் அஃபர் ஆகிய நகரங்களில் இத்தகைய வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இந்த மதவெறிப்போக்கு மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அதனால உலக அமைதி பாதிக்கப்படும் அபாயமும் அதிகம்.
தீவிரவாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் இராக் இரண்டாக உடையும் அபாயமும் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நிலை இராக்குக்கு ஏற்பட்டதற்கு அமெரிக்கா ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. நிலைமை கைமீறி சென்றுவிட்ட நிலையில் தற்சமயம் அமெரிக்காவும் நேச நாடுகளும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயங்குகின்றன. இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலைச் சந்தித்த பராக் ஒபாமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்திருக்கிறார். ஆனால் தன்னை உலக போலிஸாக அழைத்துக்கொள்ளும் அமெரிக்காவால் சும்மாயிருக்கமுடியுமா? முடியாது, இராக்கின் நிரந்தரப் பகையாளியான இரான் உதவியுடன் இன்னொரு போரை அமெரிக்கா உருவாக்கும் என்று சில ஐரோப்பியப் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இராக்கில் தீவிரவாதத் தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது. நிவாரணப் பணிகளைக்கூட மேற்கொள்ளமுடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. இராக்கின் உள்நாட்டுப் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள நமது பொருளாதாரத்தை இது நிச்சயம் பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நேரடியாகப் பொதுமக்களைப் பாதிக்கும். உள்நாட்டுப் போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர். அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம். ஏராளமான இந்தியர்கள் இராக்கில் இன்னமும் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்தத்தின்பேரில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பறிக்கப்பட்டு அகதிகளாக அவர்கள் வெளியேறலாம். இப்போதே பலர் வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்திய முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஜிகாதியில் பங்கு கொள்ள விசாவுக்கு விண்ணப்பித்திருப்பது அபாயத்தின் அறிகுறி. இந்தியா தங்கள் பக்கம் இருக்கிறது என்று உலகை நம்பவைக்க ஐஎஸ்ஐஎஸ் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது இடமளிக்கும். உலகின் மிக ஆபத்தான மனிதராக அபுதுவாவை மேற்கத்திய ஊடகங்கள் அடையாளம் காட்டுகின்றன. வீரமும் அறிவும் ஒருங்கே அமைந்திருக்கும் தீவீரவாதத் தலைவர் என்பதால் அமெரிக்கா இவரை இன்னுமொரு பின்லேடனாகவே பார்க்கிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவிலிருக்கும் இஸ்லாமியர்களை அவர்களுடைய ஆதரவாளர்களாகவே பார்க்கிறது. இந்திய அரசின் மென்மையான போக்கையும் இவர்கள் சாதகமாகவே பார்க்கிறார்கள். எனவே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தவறினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக இது வளர்ந்துவிடக்கூடும்.
*****
  • 2003ல் அமெரிக்காவும் தோழமை நாடுகளும் இராக்கை ஆக்கிரமித்த அதே வேகத்தில் இந்த இயக்கம் பாக்தாத்தை நெருங்கிவந்துகொண்டிருக்கிறது.
  • ஐஎஸ்ஐஎஸ் அல் காயிதாவைவிடவும் ஆபத்தானது என்று சிலர் கருதுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இயங்கிவந்த பொகோ ஹரம் போன்ற உள்ளூர் தீவிரவாதக் குழுக்களுடன்தான் இந்த இயக்கத்தை ஒப்பிடமுடியும் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
  • ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை முறியடிக்கும் திறன் மட்டுமல்ல எதிர்த்து நின்று போவராடும் திறனும் பலமும்கூட இராக் ராணுவத்திடம் இல்லை. பின்வாங்கிச்செல்லும் இராக் ராணுவத்தினரிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி தன் பலத்தை இந்த இயக்கம் பெருக்கிகொண்டுள்ளது.
  • ஐஎஸ்ஐஎஸ் இதுவரை ஈட்டியுள்ள வெற்றிக்கு முதன்மையான காரணம் செயலிழந்தும் அதைவிட அச்சமூட்டும்வகையில் நம்பிக்கையிழந்தும் காணப்படும் இராக் ராணுவம்தான்.
  • உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தது இந்த இயக்கத்தின் இன்னொரு முக்கிய பலம்.
  • பலரும் நினைப்பதைப் போல் ஐஎஸ்ஐஎஸ் இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுக்காது என்று சிலர் உறுதியாக மறுக்கின்றனர். சன்னி இஸ்லாமிய சமூகத்தின் ஏகப் பிரதிநிதியாக மாறுவது மட்டும்தான் இந்த இயக்கத்தின் நோக்கம், இஸ்ரேலுடன் மோதுவது அல்ல என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ரமணன் | August 18, 2014 at 12:21 pm | Categories: அரசியல்உலகம் | URL:http://wp.me/p2eZn6-155
Comment   See all comments

10/8/14

ஒரு கொடி பிறக்கிறது


உன்னதமான தியாகங்களுக்கும்,ஆயுதமேந்தாத  புரட்சிக்கும் பின்னர் கிடைத்த நமது சுதந்திரத்தின் முதல் அடையாள சின்னம் நமது தேசீயக்கொடி.இந்த கொடியின் பாரமபரியத்தை கெளரவத்தையும் பாதுகாக்க  தனி சட்டமும். கையாள விதிமுறைகளும் உள்ளன. தேசீயகொடி அரசு அலுவலகங்களில் தினமும், குடியரசு, சுதந்திர தினங்களில் மட்டுமே தனியார் இல்லங்களில்  பறக்கவிடப்டலாம் என்ப்து விதி.  தனியாரும் தங்கள் இல்லத்தில் தினமும் ஏற்றும் வகையில் இதை மாற்றி அமைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் 2002ல் ஜிண்டால் என்பவர் போட்ட பொதுநல வழக்கில் வழங்கபட்ட தீர்ப்பின் படி இப்போது வீடுகளிலும் தேசியகொடி எற்றலாம். ஆனால் ஏற்றும்முறை, நேரம், ஏற்றி இறக்கும் நேரத்தில் கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகளின் விதிமுறைகளில் மாற்றமில்லை. .
 தேசியகொடி கதர் துணியில் அல்லது கதர் பட்டுதுணியில் மட்டுமே தயாரிக்கபடவேண்டும். பேப்பர், பிளாஸ்டிக், நைலான்களில் தயாரிக்கப்ட்டிருந்தால் அது சட்டபடி தவறு. மூன்றாண்டு சிறையும் அபராதமும் தண்டனை. தேசீயக்கொடி நிர்ணயக்கப்பட்ட அளவுகளில் அனுமதி பெற்றவர்கள் மட்டும்  தான தயாரிக்கலாம். மற்றவர்கள் தயாரித்தால் அது குற்றம்.  அனுமதிக்கபட்ட 9 அளவுகளில்தான் கொடி தயாரிக்கபட வேண்டும். சட்டைபையில் குத்தி கொள்வதிலிருந்து, பாராளுமன்றத்தில் பறக்கும் மிகப்பெரிய கொடி வரை அளவுகள் நிர்ணயக்கபட்டிருக்கிறது. அரசு மரியாதையாக அஞ்சலிக்காக  மரணத்திற்கு பின் சவப்பெபட்டியின் மீது போற்றபடும் கொடியின் அளவுகள் கூட சட்டத்தில்சொல்லபட்டிருக்கிறது. இந்த வகைகொடிகள் கம்பங்களில் ஏற்றமுடியாதபடி வடிவமைக்கப்ட்டிருக்கும், கொடியின் அளவுகள் மட்டுமில்லை  பயன்படுத்த வேண்டிய கதர் துணியின் தரமும்  ஒரு சதுர அங்குலத்தில் எவ்வளவு நூல்இழைகள் என்பதும் கூட நிர்ணயக்கபட்டிருக்கிறது. அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் தேர்ந்தெடுத்த கதர் துணியை பிரோ ஆப் இந்தியன் ஸ்டாண்ட்ஸ் அமைப்புக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் கிடைத்தபின் அதில் வண்ணம் ஏற்றி கொடியாக தைத்த பின்னர் மீண்டும் ஓப்புதலுக்கு அனுப்பவேண்டும். தையலின் வகைகள் கூட நிர்ணயக்கபட்டிருகிறது.  கொடியின் அளவு என்பது ஏற்றுவதற்கு வசதியாக கயிறு நுழைக்க உருவாக்கபட்டிருக்கும் பகுதியை சேர்க்காமல் கணக்கிடப்படும். கயிறு கோர்க்கும் பகுதிக்கு கொடியின் வண்ணங்களிலியே சற்று கனமான வேறு வகை கதர் துணி பயன்படுத்தபடவேண்டும். கதர்,மற்றும் கிராம வாரிய கமிஷனின் கர்நாடக மாநில பிரிவு தான் மத்திய அரசால் கொடி தயாரிக்க அனுமதிக்கபட்டிருக்கும் ஒரே நிறுவனம். தர கட்டுபாடுகளினாலும் ஆண்டு முழுவதும்  விற்பனையில்லாதாலும் கொடிகளின் விலை அதிகமாகியிருக்கிறது. குறைந்த பட்ச விலை 100ருபாய். கடந்த ஆண்டு தேசியக்கொடிகளின் விற்பனை இரண்டு மடங்காக பெருகியிருந்தது உண்மையென்றாலும் சந்தோஷபடமுடியவில்லை. காரணம் விற்றது கதர் கொடிகள் இல்லை சீனாவிலிருந்து திருட்டு தனமாக  சந்தைக்கு வந்த பளபளபான “பட்டு” “கொடிகள்.தான்.  ஏன்?  விலை 30 ரூபாய் தான்.!
சொந்த தேசத்தின் கொடியையே திருட்டு மார்கெட்டில் அன்னிய நாட்டு பொருளாக வாங்குவர்களை நினைத்து வருந்துவதா? அல்லது இவ்வளவு சட்டதிட்டங்கள் இருந்தும் கண்காணிக்காத அதிகாரிகளை நினைத்து வருந்துவதாஎன்று புரியவில்லை.


5/8/14

இந்திய ”ஸ்வாமி”யிடம் ஜோசியம் கேட்ட இங்கிலாந்தின் எதிர்கட்சி தலைவர்’


 நேற்று வெளிவந்த நட்டுவார் சிங் எழுதிய  அவரது வாழ்க்கை வரலாறு பற்றி நிறைய பேசப்படுகிறது. நட்டுவார் சிங் நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பவர். அவரது புலிகளுடன் ஒரு வாக்கிங்- (Walking with lions- tales of a diplomatic past )  என்ற புத்தகத்திலிருந்து  இது. கடந்த ஆண்டு மார்க்ரெட் தாச்சர் மரணமடைந்த போது கல்கியில் எழுதியது,.

1975ஆம் ஆண்டு நான் லண்டனில் துணைஹைகமிஷனராக இருந்த போது ஒரு நாள் அப்போது இங்கிலாந்து வந்திருந்த சந்திராஸ்வாமியிடமிருந்து போன் வந்தது. அவரை வந்து சந்திக்க வேண்டினார். “நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால் தூதரகத்திற்கு வரலாம் என்று சொல்லிவிட்டேன். காவி உடை, கழுத்தில் பெரிய உத்திராட்ச மாலை நீண்ட தண்டம் சகிதம் மறுநாள் என்னை ஆபிஸில் சந்தித்த அவர்  உரையாடலின்போது பல இந்திய அரசியல் பிரபலங்களின் பெயர்களை உதிர்த்தார். கிளம்பும் முன் அவர் இங்கிலாந்தின் இரண்டு முக்கிய பெயர்களை குறிப்பிட்டு சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டினார். இவரை என்னை சந்திக்க சொன்னவரின் மேல் நான் கொண்டிருந்த நன் மதிப்பால் நேரிடையாக பதில் சொல்லாமல் சமாளித்தேன். (டிப்ளமேட் இல்லையா?) சில நாட்களில் அன்றைய அயலுறவு அமைச்சர் ஒய்,பி, சவாண் அமெரிக்க போகும் வழியில் லண்டன் வந்தார். அவரிடம் சந்திரா ஸ்வாமி பற்றி சொல்லி அவர்  மெளண்ட் பேட்டனையும், எதிர்கட்சி தலைவர் மார்கரெட் தாட்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்லுகிறாரே, செய்யலாமா என்றேன். செய்யுங்களேன், அவர் சந்திப்பினால் பிரச்னை ஒன்றும் இல்லையே என்ற அவரது பதில் எனக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் அளித்தது. நல்ல வேளையாக மெளண்ட்பேட்டன் விடுமுறைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாதால் சந்திப்பு இயலாது என்று சொல்லிவிட்டார். தாச்சர் எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சருக்கு நிகரானவர் என்பதால் நேரில் சந்தித்து  பேசினேன்.. மறுவாரம் 10 நிமிடம் சந்திக்க சம்மதித்தார். இந்த ஆள் ஏடாகூடாமாக ஏதாவது பேசிவிட்டால் எனக்குதான் பிரச்சனை என பயந்துகொண்டே இருந்தேன். பாரளமன்ற வளாகத்தில் நுழைந்த்திலிருந்தே மற்றவர்கள் கவனத்தை கவர ஏதாவது செய்துகொண்டு என்னை சங்கடபடுத்திக்கொண்டே வந்தார் ஸ்வாமி ”என்னை எதற்காக பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற தாட்சரின் கேள்விக்கு “சீக்கிரமே உங்களுக்கு தெரியும்” என்று ஹிந்தியில் சொன்னதை நான் மொழிபெயர்த்தேன், (ஆசாமிக்கு ஆங்கிலத்தில் ஒரு அட்சரம் தெரியாது) ஒரு பெரிய வெள்ளை பேப்பர் கேட்டார் அதை 5 நீள துண்டுகளாக கிழித்தார். மார்கரெட் தாட்சரிடம் கொடுத்து அதில் 5 கேள்விகள் எழுத சொன்னார். சற்றே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் அவர்  எழுதினார். அவைகளை கசக்கி சின்ன பந்துகள் போல் செய்து தாச்சரிடம் கொடுத்து ஏதாவது ஒன்றை திறந்து பார்க்க சொன்னார் சந்திராஸ்வாமி. அவர் பார்த்துகொண்டிருக்கும்  கேள்வியை என்னிடம் இந்தியில் சொன்னார், நான் மொழிபெயர்த்தேன். சரி என்பது தாட்சரின் கண்ணிலேயே தெரிந்தது.அடுத்தடுத்த கேள்விகளும் சரியாகவே சொன்னார். தயக்கத்திலிருந்து ஆச்சரியமாக மாறியிருந்த தாட்சர் இவர் தெய்வீகசக்தி வாய்ந்தவர் என எண்ண ஆரம்பித்தது  எனக்கு புரிந்தது, சோபாவின் நுனிக்கே வந்து விட்ட தாட்சர் மேலும் சில கேள்விகளை கேட்க பதில்கள் சொன்ன பின்னர்  சட்டென்று எழுந்து சூரியன் அஸ்தமித்துவிட்டான். நான் இனி இன்று பதில் சொல்ல முடியாது என்றார்.  நான் உங்களை எப்போது மீண்டும் சந்திக்கலாம்? என கேட்ட தாச்சருக்கு ”வரும் செவ்வாய்கிழமை 2.30க்கு நட்வார்சிங் வீட்டில்” என்றார். ஆடிபோனேன். என்வீட்டிலா? நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஒரு தூதுவர் வீட்டிற்கு வருவதில் பல சம்பிராதயபிரச்னைகள் என்பதால் நான் இதை மொழிபெயர்த்து சொல்ல மாட்டேன் என்று சொன்னேன். ”சொல்லிய பின் பாருங்கள்” என்று அவர் சொல்லிகொண்டிருந்த போதே மார்கரெட் என்னவென்று விசாரித்தார்.. நான் சொன்னவுடன், ”மிஸ்டர் ஹைகமிஷனர் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?” எனகேட்டாரே பார்க்கலாம். விடைபெற எழுந்தபோது சடென்று ஒரு தயாத்தை வரவழைத்து  வரும்போது இதை கையில் கட்டிகொண்டு சிவப்பு ஆடை அணிந்து வாருங்கள் என்றார். ஒருபெண் அணீய வேண்டிய ஆடையைபற்றி யெல்லாம் சொல்லுவது இங்கிலாந்தில் அநாகரிகம். எனபதால் சொல்ல மறுத்தேன். மீண்டும் தாட்சர் என்ன என்று கேட்டதனால் தலைகுனிந்துகொண்டே சொன்னேன். தாயத்தை வாங்கிகொண்டார்.
சொன்னபடி செவ்வாய் மதியம் மார்ரெட் தாட்சர் சிவப்பு உடையில் கையில் கட்டிய தயாத்துடன் வந்தார். நிறைய கேள்விகள் கேட்டார், அதில் முக்கியமானது, நான்  நாட்டின் பிரதமர் ஆவேனா? எப்போது? ”நிச்சியம் இன்னும் 4 ஆண்டுகளில் என்ற ஸ்வாமி 9. 11.அல்லது 13 வருடங்கள் பிரதமாக இருப்பீர்கள்” என்றார். ஒரு நாள் பிரதமராவோம் என நம்பிய மார்கெட் தாட்சர் நீண்ட வருடங்களை நம்பவில்லை.
சந்திரா ஸ்வாமி சொன்னது பலித்தது. மார்கரெட் தாட்சர் 1979லிருந்து 1990 வரை  11 வருடம் பிரதமாரகயிருந்தார்.



30/7/14

BRICS அடிதளத்திற்கான முதல் செங்கல்

புதிய தலைமுறை 31/07/14 இதழலில் எழுதியது.




 
 உலக பொருளாதாரத்தில் பிரிக்ச் நாடுகளின் பங்களிப்பு 20 %. இந்த நாடுகளின்  மொத்த அன்னிய் செலாவணியின் கையிருப்பு 16000 டிரில்லியன் அமெரிக்க டாலார்கள். (ஒரு டிரில்லியன் =10,000கோடி)


 “சீனா தூங்கிக்கொண்டே இருக்கட்டும். அது கண்விழித்து விட்டால் உலகையே உலுக்கிவிடும்” என்று மாவீரன் நெப்போலியன் ஒரு முறை சொன்னார்.
ஆனால் சீனா கண்விழித்து விட்டது. நெப்போலியன் சொன்னது போலவே அதன் பொருளாதார வளர்ச்சியை பார்த்து உலகமே அதிர்ச்சியடைந்து வருகிறது. இந்த  அசுரத்தனமான  வளர்ச்சிக்கான பல்வேறு காரணங்களை உலகெங்கும் நிபுணர்கள் அலசி ஆராயந்துகொண்டிருக்கின்றனர். அந்த முடிவுகளை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனா ஆச்சரியங்களை தொடர்ந்து அளித்துகொண்டே இருக்கிறது.  கடந்த வாரம் பிரேசிலில் நடந்து முடிந்த பிரிக் நாடுகளின் மாநாட்டில் அறிவிக்க பட்ட முக்கிய முடிவான ”பிரிக் நாடுகளின் கூட்டமைப்பு  உலக வங்கிக்கு நிகராக ஒரு வங்கியை நிறுவப்போகிறது” என்பது அதில் ஒன்று.
2001ல் நியூயார்க் நகரை சேர்ந்த ’கோல்டுமேன் சாக்ஸ்’ என்ற சர்வ தேச பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கை உலகின் பொருளாதார கண்ணோட்த்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில்தான் முதன் முதலில் பிரிக் (BRIC) என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. பயன்படுத்தியவர் அறிக்கையை தயாரித்த ஜிம் ஓ நில்.பிரேசில்.ரஷ்யா,இந்தியா சீனா போன்ற நாடுகளை பொருளாரீதியாக  வகைப்படுத்தி அதன் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துகளை ஒன்று சேர்த்து பிர்க் நாடுகள் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில்.  இந்த நாடுகள் அடுத்த 50 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மிக வளர்ச்சி அடையும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடி ஜப்பான் ஜெர்மனியை முந்திக்கொண்டு இந்தியா 3வது இடத்தை அடையும் எனகுறிப்பிட்டிருந்தார். இந்த நாடுகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி அமெரிக்காவின்  வளர்ச்சியைவிடவும் அதிகமாகிவிடும் என்றும் அந்த அறிக்கை சொல்லியது.
ஒரு முக்கியமான அறிக்கையாக மட்டும் பேசபட்டுகொண்டிருந்த இதற்கு செயல் வடிவம் கொடுக்க (BRIC) என்ற அமைப்பை உருவாக்க்கும் முயற்சியை முதலில் எடுத்தவர் அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன்சிங். 2006ல் நியூயார்க்கில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில்  நாலு நாடுகளுடையே துவங்கிய பேச்சுக்கள்  இரண்டாண்டுகளில் 4 முறைகள்  தொடர்ந்து 2008ல் ரஷ்யாவில் நடந்த  முதல் மாநாட்டில் அமைப்பு  ரீதியாக BRIC உருவானது..2010ல் தென் ஆப்பிரிக்கா இணைந்த்து,. அதனால் BRIC  என்பது BRICS  னதைத் தொடர்ந்து உறுப்பினர் நாடுகளில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடந்த பின்னர்  இம்முறை 6 வது மாநாடு பிரேசிலில்  சமீபத்தில் நடந்தது. அதில் எடுக்க பட்ட ஒரு  முக்கிய முடிவு உலக பொருளாதாரத்தில் ஒரு திருப்பத்தை  ஏற்படுத்தும் என்பது வல்லுனார்களின் கணிப்பு.
 அதுதான் ”பிரிக்கின் வளர்ச்சி வங்கி”.  மொத்த மூதலீடு 100 பில்லியன் டாலர்கள். அவசர நிலை நேர்ந்தால் பயன்படுத்திகொள்ள ஒரு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ரிசர்வ் நிதியாக  ஒதுக்க பட்டிருக்கிறது.   முதலீட்டை உறுப்பு நாடுகள் சம அளவில் ஆண்டு தவணைகளாக கொண்டுவரும். கடன் வசதிகள் 2016ல் துவங்கும். தலமை அலுவலகம் சீனாவின் ஷ்யாங்க் நகரில் இயங்கும் வங்கியின்  முதல் தலைவர் இந்தியராக இருப்பார் என்று மாநாட்டில் முடிவு செய்யபட்டது.
 கூட்டாக சில நாடுகள் ஒரு வளர்ச்சி வங்கியை ஏற்படுத்திகொள்வது  அவ்வளவு பெரிய விஷயமா என கேட்கிறீர்களா? ஆம். இது  நாடுகளுக்கிடையே  பரஸ்பரம் கடனுதவிக்காக  உருவாக்கபட்டிருக்கும் ஒரு சதாரண நிதி ஆணையம் மட்டுமில்லை. அதைவிட வலிமையாக இயங்கபோகும் இன்னொரு உலக வங்கி.
 உலகளவில் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த உறுப்பினர் நாடுகளுக்கு கடன் வழங்கும் நிதி ஆணையம் ஐஎம்எஃ(IMF) ஆனால்  உறுப்பு நாடுகளுக்கு கடன் உரிமை பெறும் இருந்தாலும் அது பல விதிமுறைகளுக்கு உட்பட்டது. மேலும் கடன் வசதி அந்த நாடு செலுத்தியிருக்கும்  முதலில் செலுத்தியிருக்கும் மூலதனத்தின் அடிப்படையில் தான் இருக்கும்.  கூடுதல் நிதி பெற வங்கியின் நிபந்தனைகளை ஏற்கவேண்டும் இந்த நிபந்தனைகள் உறுப்பு நாட்டின் பொருளாதார சீரமைப்பு என்ற பெயரில் கட்டளையாகவே இடப்படும். அதிக மூலதனமிட்டிருப்பதால் இந்த உலக வங்கியில் அமெரிக்க நாட்டின் விருப்பு/வெறுப்புகளே அதன் கட்டளைகளில் பிரதிபலித்து கொண்டிருந்தது. இது கடன் பெறும்  நாடுகளின் சுதந்திரத்தையும் பொருளாதாரத்தையும், அன்னிய செலாவணி இருப்பையும் பாதிக்கும் விஷயமாக இருந்தது. மேலும் அமெரிக்கர்கள் தங்கள்  டாலரை வலுவாக்க இந்த வங்கியை மறைமுகமாக பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்  சுருக்கமாக சொல்லவதானால் அமெரிக்க அண்ணனின் நாட்டமை  அதிகமாக இருந்தது. உலகின் பல நாடுகள் இந்த நிலைக்கு ஒரு மாற்று ஏற்படுத்துவது பற்றி கடந்த சில ஆண்டுகளாக ஆலோசித்து கொண்டிருந்தன. வசதியாக வந்து சேர்ந்த்து பிரிக் நாடுகளுக்கு எழுந்த அதே எண்ணம்.
.  உலக பொருளாதாரத்தில் மெல்ல  பிரிக்நாடுகள் ஒரு வலிமையான இடத்தை  அடைந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு (பெட்டியில் செய்தி படங்கள்)  பிரிக் அமைப்பு மூலம் இந்த  வங்கியை ஏற்படுத்துவதில்  இந்தியா தீவீரமாக இருந்து இன்று வெற்றிபெற்றிருக்கிறது.

IMF வழங்கும் கடன் வசதியை பிரிக் அமைப்பில் சேரும்  எல்லா நாடுகளும் இந்த வங்கியிலிருந்து பெறமுடியும். உறுப்பினாரக வரிசையில் காத்திருப்பது இந்தோனிஷியா,துருக்கி, அர்ஜெண்டைனா ஈரான், நைஜிரியா போன்ற நாடுகள். பிரிக் வங்கி கடனுதவியையும் தாண்டி உறுப்பு நாடுகளிடையே நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனைகளை கணக்கிட்டு இறுதியில் நிகரமாக வரும் தொகையை அந்தந்த நாட்டுக்கு  பட்டுவாடா அல்லது வசூல்  செய்யும் ஒருமுறையையும் கொண்டுவரப்போகிறார்கள். இது முறையாக செயல்பட்டு நிலைத்து நிற்குமானால்  உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறையும். வளரும் நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதார விழ்ச்சிகளினால் பாதிக்காது.
  சீனாவின் வளர்ச்சி வேகத்தை பார்க்கும் போது 2050க்குள் அமெரிக்காவை பின் தள்ளி பொருளாதார உலகின் முதல் நாடாகவிடும் என ஒரு கணிப்பு கூறுகிறது. பிரிக் வளர்ச்சி வங்கி அதன் முதல் படியோ?

19/7/14

உலக அமைதிக்காக உருவாகும் ஒரு காலசக்கரம்




”ஷெய்” என்பது ஜம்மூ-காஷ்மீர மாநிலத்தின் வடகோடியில் லடாக் மாவட்டத்திலிருக்கும் ஒர் சின்னஞ்சிறிய ஊர். மக்கள்தொகை 1000க்கும் குறைவு. மாவட்ட தலைநகர் ”லே” விலிருந்து 8 கீமீ தொலைவில்  இண்ட்ஸ் நதிக்கரையில் மலைச்சரிவில் இருக்கும் இந்த இடம் வருடத்தில் பாதி நாள் பனியால் மூடபட்டும், மீதி நாட்களில்  வெப்பம் மிகுந்த  வரண்ட பாலைவனமாகவும் இருக்கும் ஒரு மலைச்சரிவுபகுதி . கடந்த வாரம் இந்த இடத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் 150,000 பேர் கூடினார்கள். காரணம் “ காலச்சக்கரம்”
காலச்சக்கரம் என்பது வ்ஜராயன பிரிவு புத்தமதத்தின் தலைவர் தலாய்லாமா, உலக அமைதி,மற்றும் உலக உயிர்கள் அனைத்தும் உன்னதமான உயர்  நிலை அடைய வேண்டும்  என்பதற்காக செய்யும்  ஒரு மிக முக்கியமான பூஜை. ஒரு வார விழாவாக கொண்டாடப்படும்  1954லிருந்து இதுவரை 32  முறை வெவ்வேறு ஆண்டுகளில் அமெரிக்கா, கனடா, மங்கோலியா ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் சில இந்திய நகரங்களிலும்  கொண்டாடப் பட்டிருக்கிறது. எப்போது, எந்த இடத்தில் நடைபெறவேண்டும் என்பதை புத்தரிடம் இருந்து கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் தலாய்லாமா  ஒராண்டுக்கு முன்னர் அறிவிப்பார். அங்குள்ள புத்தர் சொசைட்டி  விழா ஏற்பாடுகளைச்செய்யும். இம்முறை திருவிழா நடைபெறும் இடத்தின்  தனிசிறப்பு இதுதான்  1959ல்  தலைலாமா தப்பி ஒடிவந்தபின் முதலில் தங்கிய இந்தியப்பகுதி. 



காலச்சக்கரம் என்பது வெறும் திருவிழா இல்லை. மிகுந்த கவனத்துடன் பல சாஸ்திரங்களையும் நியமங்ளையும்  பின்பற்றி செய்யப்படும்  10 நாள் பூஜை.  காலம் என்பதை புத்தமதம்  அகம் புறம், பிரபஞ்சம் என  மூன்று நிலைகளாக சொல்லுகிறது.    நாம்  அறிந்திருக்கும் கால அளவுகளும், பிரபஞ்சத்தில் இயங்கும் கோள்களின்   நாம் அறியாத காலஅளவுகளும்   தொடர்புடையது.. அவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சிதான் இந்த காலசக்கர பூஜை.  இதில் பங்கு கொண்டவர்களுக்கு தலாய்லாமா தீட்சை வழங்குவார்.  இதனால் உலகெங்குமிருக்கும் புத்த பிட்சுக்களும். பக்கதர்களும் கூடுகிறார்கள். இவர்களைத்தவிர இது என்னவென்று பார்க்க வந்த டூரிஸ்ட்கள், மீடியாகாரர்களின் கூட்டமும் சேருகிறது.
காலசக்கரம் உலகில் எந்த நகரில் என்று தீர்மானிக்க பட்டபின் தலாய்லாமா அங்கு சென்று இடத்தை தேர்வு செய்கிறார். அங்கு புதிய கோவில், கட்டிடங்கள் எதுவும் எழுப்ப படுவதில்லை.  மூங்கில், மரப்பலகைகள் திபேத்திய கலைநயமும் வண்ணங்களும் மின்னும் திரைச்சிலைகள் போன்றவற்றால்  தற்காலிகமாக ஒரு பெரிய பந்தல் அமைக்கபடுகிறது.  அந்த. பிரார்த்தனை கூடத்தின் ஒரு புறத்தில்  வெண்னையில் வண்ணங்களை சேர்த்து ஒரு புத்தரின் உருவம் நிறுவப்படுகிறது.  அதுதான் சன்னதி. 

  நடுவில் பூஜைக்காக ஒருமேடை. அதை நோக்கி தலாய்லாமாவிற்கு ஒரு மேடை.. பூஜை செய்வதற்கான மேடையில் ”மண்டாலா”  எழுதப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து சேகரிக்கபட்ட பல நிற மெல்லிய மணல்களால் காலச்சக்கரம் நிறுவப்படுகிறது. ஒரு பெரிய வட்டத்தின் உள்ளே நான்கு புறமும்  நுழைவாயில்கள் கொண்ட 7 அடுக்கு மாடி கோட்டையின் வடிவத்தை தட்டையாக,  நுணுக்கமான கோலமாக இடப்படுகிறது.மெல்லிய மூங்கில் குழல்கள் மூலம் வண்ண மணல் கட்டங்களில் நிறப்படுகிறது  இதன் அமைப்பு கட்டங்களின் அளவுகள், வண்ணங்கள் எல்லாம் புத்தரால் சொல்லபட்டு ரகசிய மந்திரங்களாக பாதுகாக்கபட்டுவருகிறது. ஒவ்வொரு கோடும், புள்ளிகளுக்கும் மந்திரங்கள் இருக்கிறது அவைகள் பல தெய்வங்களையும் சக்திநிலைகளையும் குறிக்கிறது. முதல் கோட்டை தலாய்லாமா போட்டு துவக்கியபின்னர் 7 புத்த துறவிகள் 4 நாட்களில் இதை உருவாக்குகிறார்கள்.. அப்போது மற்ற புத்தபிக்குகள் மந்திரங்களை ஜபித்துகொண்டே இருப்பார்கள்.  அந்த காலச்சக்கரம் பிரபஞ்சமாகவும் அதன் நடுவில் எட்டு இதழ் தாமரையில் புத்தர் இருக்கும்  சக்தி நிலையுடன் நம் உடல் மனம், ஆகியவற்றை இணைக்கும் நிலைக்கு  உயர பிரார்த்தனை செய்து பின்  குரு தீட்சை வழங்குவதற்காக இந்த  காலசக்கரம் உருவாக்கபடுகிறது.  மனுச்செய்தவர்களில் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு மட்டுமே தீட்சை வழங்கபடும். ஆனால் வழிபாட்டில் விரும்புவர்கள் பங்கேற்கலாம். ஒராண்டு முன்னரே பதிவு செய்து கொள்ளவேண்டும்.,
புத்தமதவழிபாடுகளில் நடனமும், இசையும் ஒர் அங்கம் என்பதால் அவைகளும் முன் கூட்டியே தீர்மானிக்க பட்டு பூஜைகளின் ஒரு பகுதியாகவே நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காவே புத்தமத கலைஞர்கள் பல நாடுகளிலிருந்து வருகிறார்கள்.
ஆறாம் நாளிலிருந்து தலாய் லாமா தனது ஆசனத்திலிருந்து பூஜை செய்கிறார். ஆன்மீக உரையாற்றுகிறார், லாமக்களில் இப்போது நிறைய ஹைடெக் காரர்கள் இருப்பதால் நிகழ்ச்சிகள் இணையத்தில் ஒளிபரப்பு, பெரிய எல்இடி டிவிதிரைகள்,  ஹிந்தி உள்பட 15 மொழிகளில்   உடனடி மொழிபெயர்ப்புடன் எப்,எம் ஒலிபரப்பு   மீடியாகார்களின் வசதிக்காக சாட்டிலைட் வசதிகளுடன் மீடியா சென்ட்டர். என அமர்களபடுத்துகிறார்கள். 
இந்த திருவிழாவில் தொலைந்து போனவர்கள் உள்ளுர்கார்கள் தான். இதுவரை அவர்கள் எளிமையான புத்த பிக்குகளைத்தான் பார்த்திருக்கிறார்கள். . நல்ல சாலையில்லாதால் பெரிய பஸ்களைகூட பார்க்காதவர்கள் ஊருக்குள் பெரிய கார்களையும், டிரக்குகளையும்  ஐந்து நட்சத்திர டெண்ட்ஹோட்டல்களையும்,,  அரைக்கால் டிராயர்களில் அமெரிக்கபெண்களையும் கண்டு மிரண்டுபோய்விட்டர்கள். 

அடுத்த காலசக்கரம் எங்கே எப்போது? புத்தபெருமான் தலாய்லமாவிற்கு சொல்லும் வரை காத்திருக்கவேண்டும் 
ரமணன்
9444902215