23/5/10


என்ன செய்ய வேண்டும்?


மிக நேர்த்தியாக உள் அலங்காரங்கள் செய்யப்பட்ட அழகானபெரிய அந்த ஹாலில் ரமேஷயையும் சேர்த்து 7 பேர் காத்திருக்கின்றனர்ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரிகளுக்கான நேர்முக தேர்வுமுதல் இரண்டு கட்டங்களைத்தாண்டி இறுதித்தேர்வுஅடுத்துவரப்போகும் தன் முறைக்காக காத்திருக்கும் ரமேஷக்கு,புதிய உடையின் கசகசப்பு பழக்கமில்லாத புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் டையின் இருக்கம் எல்லாம்சேர்ந்து அந்த சற்று பதட்டமாக எர்கண்டிஷன் அறையிலும் வேர்ப்பதுபோலிருந்தத்துஅடுத்து நீங்கள் போகலாம் எண்று  ஹாலின் ஒரு கோடியிலிருந்த பெண்மணி  சொன்னதைத்தொடர்ந்து நேர்முகம் நடக்கும் அறையை நோக்கி போகிறார்ரமேஷ்மூடிய கதவுகளிடையே சற்றே இடைவெளி அதன் வழியாக சற்று தயக்கத்துடண்பார்த்து   நின்ற பின்னர் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்லுகிறார்நேர்முக குழுவின் 3 உறுப்பினர்களும் இவரைபார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் உட்காரசொல்லவில்லை.நின்றுக்கொண்டேயிருந்த ரமேஷ் தனியே இருக்கும் அந்த் நாற்காலியின் நுனியில் உட்காருகிறார்அரைநிமிடம் நேர்முககுழு எதுவும் கேட்டகவில்லை.. ரமேஷும் எதுவும் பேசவில்லைஒரு கனத்த மெளனத்திற்கு பின்னர் குழுவிலிருந்த ஒருவர் “வெளியே காத்திருக்கும் போது எக்னாமிக்ஸ் டைம்ஸ் பார்த்க்கொண்டிருந்தீர்களே அதில் நீங்கள் படித்த  எதாவது செய்தி பற்றி சொல்ல முடியுமா”? என்றார்தன்னைப்பற்றிஅந்தநிறுவனத்தைபற்றி,இன்றைய கார் மார்கெட் பற்றி எல்லாம் தயாரித்திருந்த ரமேஷ் இந்த கேள்வியினால் ஆடிப்போனார்ரமேஷ் அந்த பேப்பரில் எதுவும் படிக்கவில்லை.சொல்லப்போனால் எக்கானாமிஸ் டைமை முதல் தடவையாக அன்று தான் பார்க்கிறார்.அதனால் பதில் ஏதும்சொல்லாமல் மேஜையில் வைத்த தன் பைலின் மீது   வைத்திருந்த கைவிரல்களை   கோர்த்து கைககளைப்பிசைந்துகொண்டிருந்தார்இவர் பதில் தராததைபற்றி எந்த ரியாக்கஷனும் காட்டாமல் குழுவில் மற்றொருவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்முதல் கேள்விக்கு தன்னால்  சரியாக பதிலளிக்கமுடியவில்லையே என்ற அழுத்தில் தொடர்ந்த கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல முடிவில்லைஇள நிலை முதல் வகுப்பு பட்டதாரியாகயிருந்தும்மார்க்கெடிங் பட்டயம் இருந்தும் இந்த நேர்முகத்தினால் முடிவு என்னவாயிருக்கும் என்பதைச்சொல்வேண்டியதில்லை.
இது போன்ற நிகழ்வு நாம் நேர்முகத்தேர்விற்கு போகும்போது நடக்காமலிருக்க என்னசெய்யவேண்டும்என்பதற்கு பதிலாக ரமேஷ் என்ன செய்திருக்கவேண்டும் என்பதைப்பார்ப்போம்.
1.நேர்முகத்தேர்விற்கு புதிய ஆடை அணிந்துசெல்லக்கூடாது.ஏனெனில் நமது கவனம் அதிலிருந்துகொண்டேயிருக்க வாய்ப்பு அதிகம்.  தேர்வு இல்லாத நாளில்டை.ஷு அணிந்து நடந்து பழகிகொள்ளவேண்டும்.
நேர்முகத்தேர்வின் அறையின் நுழையும்முன்கதவு திறந்தேஇருந்தாலும் மெல்ல-(கவனியுங்கள்-மெல்லவிரல்களின் மேல்புறத்தால் தட்டிமை  கமின்?” என்று கேட்டக வேண்டும்அவர்கள் அழைத்துதான் வந்திருந்தாலும் இது ஒரு எதிர்பார்க்கபடும் சம்பிரதாயம்நுழைந்த 10வினாடிக்குள் தேர்வுக்குழு உட்காரச்சொல்லவில்லையாலால்மே  சிட் என்று கேட்டு நன்றாக ஆனால் ஆணவம் தொனிக்காத கம்பீரத்துடன் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
3. யார் பேச்சைத்துவக்குவதுநாமாக பேச வேண்டுமானால் என்னபேசவேண்டும்எவருக்கும் எழும் இயல்பான கேள்விகள்தான்இந்த நிறுவனம் தேர்விற்கு வந்தவர் முதலில் பேச வேண்டும் என்பதை தங்களது மெளனத்தின் மூலம் தெரிவித்துவிட்டபின்.”உங்கள் நிறுவனம் இரண்டு கட்டங்களுக்கு பின் என்னை நேர்முகத்திற்கு அழைத்தையே நான் கெளவரவமாக கருதிகிறேன்இந்த தேர்வையும் வெற்றிகரமாக கடந்து நிறுவந்த்தில் சேர காத்திருக்கிறேன்” என்ற ரீதியில் ரமேஷ் பேச்சைத்துவக்கியிருக்கவேஎண்டும்.
அடுத்தது-எக்னாமிக்டைம்ஸ் விஷயம்அந்த நிறுவனத்தின் தேர்வுகுழு  தேர்விற்கு காத்திருப்பவர்களை கூட கவனமாக பார்த்துகொண்டிருந்திருக்கிறது என்பது புரிகிறதுஅப்படியானால் தேர்வு அங்கேயே துவங்கிவிட்டிருக்கிறதுநாம் பேசுவதுசெய்வதுஎல்லாம் மதிப்பிடப்படுகிறது. “ நான் அந்த பேப்பரில் எதுவும்  ஆழ்ந்து படிக்கவில்லைஅருகில் இருந்ததால் எடுத்துப்பார்தேன் அரசியல்,பரபரப்பு செய்திகல்  இல்லாமல் நிறைய மார்க்கெட் செய்திகள் இருப்பதுப்போல் தோன்றுகிறது இனி தொடர்ந்து படிக்கலாம் எனநினக்கிறன்” என்ற உண்மையான பதிலை ரமேஷ் சொல்லியிருக்கவேண்டும்
4. முதல் கேள்வி என்றில்லைஎந்த கேள்விக்குமே பதில் சொல்லமுடியாவிட்டால் அதனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாதுஎந்த நேர்முகத்திலும் யாரும் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிடமுடியாதுஅதுமட்டுமில்லை தேர்வுகுழுவினரும் ஒரு அல்லது சில கேள்விகளினால்  மட்டுமே முடிவு செய்ய மாட்டார்கள்இங்கே ரமேஷ் பதில் சொல்லாதாதோடு தான் குழப்பமாகிவிட்டதை தனது உடல் மொழியின்( body languge) மூலம் காட்டிவிட்டார்,

எந்த நேர்முகமும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாதுநிறுவனம்,பணியின் தன்மை,தேர்வுகுழுவின் அமைப்பு போன்றவகளினால் மாறுபடக்கூடியது.ஆனால் அழைக்கப்ட்ட நிறுவனத்தின் அமைப்பு  தேர்வானால் செய்ய வேண்டிய பணி பற்றி அறிந்திருந்த ரமேஷ் தன்னை  உடைஅணுகு முறை போன்றவற்றில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தால் எளிதாக சமாளித்திருப்பார்..மார்க்கெட்டிங் அதிகாரியாக வரப்போகிறவர் தானே முன்வந்து முனைபவராக (proactive) இருப்பதையும்,எளிதாக பேசும் இயல்பு உள்லவராகவும் இருக்கவேண்டும் என அந்த் நிறுவனம் எத்ரி பார்ப்பதில் தவறல்லியேஇப்போது இதற்கு நிறைய புத்தகங்கள்பயிற்சிக்கூடங்கள் வந்துவிட்டனமிக எளிதாக வீட்டிலேயே நண்பர்கள் சகோதரர்கள் முலம் ஒரு மாடல் தேர்வு   கூட நடத்திப்பார்க்கலாம்நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லோருடனும் நிறைய பேசி பேசி பழகவேண்டும்இது தன்நம்பிக்கையை வளர்க்கும்.நிறைய படிக்கவேண்டும் அதை நினைவிலும் வைத்துக்கொள்ளவேண்டும்அது தேர்வுகளிலும்  சமயோசிதமாக பதில் சொல்ல கைகொடுக்கும்.
சமீபத்தில் ஒரு வங்கியில் முதல் அதிகாரி நிலையிலிருந்து கிளை மேலாளர் நிலைக்குநேர்முகம். “இதுவரை தனியாக ஒரு கிளையை நிர்வகித்த அனுபமில்லாத நீங்கள் தேர்ந்தெடுக்கபட்டபின் ஒரு கிளைக்கு நிர்வாகியாக அனுப்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு தேர்விற்கு வந்தவர் தந்த பதில் “இருபது ஆண்டுகளுக்கு முன்  அதிகாரிநிலையிருந்து தெர்வுபெற்று நீங்கள் ஒரு கிளைப்பொறுப்பேற்று 5மடங்கு அதிகம் பிஸினஸ் செய்துகாட்டியதுபோல நம்பிக்கையுடன் முயற்சிப்பேன்” தேர்வுகுழுவிலுர்ந்து கேள்வியைகேட்ட பொதுமேலாளரிம் முகத்தில் புன்னகைகடந்த ஆண்டு அவர் போதுமேலாளராக தேர்வுசெய்யப்பட்டபோது அந்த வங்கியின் ஊழியர்களுக்கான மாதந்திர மடலில் படத்துடன் வெளியான வாழ்க்கைகுறிப்பிலிருந்த அந்த விஷயத்தை சரியான இடத்தில் சரியானமுறையில் பயன் படுத்திகொண்ட அவர் தெர்வுசெய்யப்போகும் அதிகாரி பற்றிய விபரங்களை சேகரிக்கும் திறன்,  வங்கியின்வெளியீடுகளை படிக்கும் பழக்கும்தனது நினைவாற்றல் போன்ற பல விஷயங்களை ஒரே பதிலில் உணர்த்திய  அவரின் தேர்வுமுடிவு என்னவாகயிருந்திருக்கும் என புரிந்திருக்குமே.
(புதிய தலைமுறை)

16/5/10

“ஹாலிவுட்டை” காப்பாற்றிய ஹீரோ


ஹாலிவுட்டை” காப்பாற்றிய ஹீரோ
 உலகம் முழுவதும் தனது சாம்ராஜ்ய எல்லைளை விரித்திற்கும்  அமெரிக்கத் திரைப்படதயாரிப்பு நிறுவனங்கள்,ஸ்டூடியோக்கள், லாப்கள் எல்லாம் நிறந்த  ஹாலிவுட் பகுதி லாஸ் எஞ்சல் நகரின் வெளியே மவுண்ட் லீ என்ற  சிறிய மலைப்பகுதியின் பின் புறமிருக்கிறது. பேசும் சினிமாக்கள் பிரபலமாகத்தொடங்கிய 1923ல் இந்த மலைச்சரிவில்  பிரமாண்டமான தனித்தனி எழுத்துகளாகHOLY WOOD LANDS என்ற போர்டு நிறுவப்பட்டது. சில ஆண்டுகளில் LAND வாசகம்  நீக்கப்பட்டது. ஒவொரு எழுத்தும் 45 அடி உயரத்தில் ஒரு வார்தையாக 450 அடி நீளத்திற்கு நிற்கும் இது லாஸ் ஏஞ்சல் நகரின் அடையாளங்களில் ஒன்றாகி சுற்றுலாப்யணிகள் பார்க்கவேண்டியவைகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.  சுற்றுலாப்ப்யணிகளுக்கு -இதை எங்கிருந்து நன்றாக பார்க்கலாம்,எந்த இடத்திலிருந்து நீங்கள் குடும்பத்தோடு படமெடுத்துக்கொண்டால் பின்ணணியில் இது நன்றாகவரும், போன்றவிஷயங்களோடு,இது நிறுவப்பட்ட கதை, அடிக்கடிஉடைந்த எழுத்துகளை மாற்ற உதவியர்கள், இந்த எழுத்துகள்  இடம்பெற்ற பயங்கர ஹாலிவுட் படங்கள்,H என்ற எழுத்திலிருந்து தற்கொலை செய்துகொண்ட ஒரு நடிகை என்று  இதன் நீண்ட சரித்திரத்தை ஒரு சின்ன சினிமாகவே காட்டுகிறார்கள்.
சுற்றுலாவருவர்களிடையே வளர்ந்துவரும்  ஆர்வத்தால்  இப்போது இதை சீரமைத்து மின்சாரவேலியிட்டு பாதுகாக்கிறார்கள். எழுத்துகள் இருக்கும் மலைப்பகுதி தனியாருக்குச்சொந்தமானது. இத்தனை ஆண்டுகளுக்குபின் அதை வாங்கிய ஒரு கட்டிட நிறுவனம், அங்கே ஆடம்பர பங்களாக்களை கட்ட போவதாக அறிவித்தது. இந்த எழுத்துக்களை பராமரித்து நிர்வகித்துவரும் அறக்கட்டளை அந்த பகுதியை மட்டும்   வாங்க முயற்சித்தது. விலை12.5 மில்லியன் டாலர்கள் முழுபணமும் ஏப்ரல் 14க்குள் செலுத்தவேண்டும் என்பது நிபந்தனை.  செலுத்தவேண்டிய பணத்திற்காக அறக்கட்டளைவிடுத்த நன்கொடை வேண்டுகோளையெற்று, அமெரிக்காவின் 50  மாநிலங்களிலிருந்தும் 10 நாடுகளிலிருந்தும் பணம் வந்ததது. ஹாலிவுட் பிரபலங்கள் ஸ்டீவன் பில்பெர்க்,டாம் ஹாங்க்கஸ், போன்றவர்கள் உதவினார்கள் இந்த எழுத்துக்களைப்போல பிரம்மாண்ட வாசகங்களை அதே மலையில் நிறுவி .லாஸ் ஏஞ்சல் நகரில் நுழையும் கார்களில் எல்லாம் தொண்டர்களின் வசூல்,விசேஷ விற்பனை ஸ்டால்கள் என்று எல்லா வகையிலும் திரட்டியும் பணம் போதவில்லை, 1.5 மில்லியன் டாலர்கள் குவிந்தது. விற்கும் நிறுவனம் கெடுவை நீட்டிக்க தயாராக இல்லை. 87 வருடமாக புகழ்பெற்றிருந்த ஒரு அடையாளத்தை லாஸ் ஏஞ்சல் நகர் இழக்கபோகும் நிலை.
எதிர்பாராத ஆச்சரியமாக கெடுவிற்கு 2நாள் முன்னதாக பிளேபாய் பத்திரிகை  அதிபர்
ஹஃ ஹெப்ஃனர் அந்த பணத்தை தருவதாக அறிவித்தார்.  “ ஹாலிவுட் “ அழிக்கபடமல் காப்பற்ற பட்டுவிட்ட மகிழ்ச்சியை டிவீட்டர்களிலும்,பிளாக்களிலும் எழுதித் தள்ளுகிறார்கள் அதன் விசிறிகள்.
தன்சொந்த நன்கொடையைத்தவிர இதற்கான முயற்சிஎடுத்து கடைசிநேரத்தில் காப்பாற்றியவர்  முன்னாள் ஹாலிவுட் ஹீரோவும் இந்நாள் கவர்னமான ஆர்னால்ட் ஷ்வர்ஸென்ஸ்கர்.
 நிஜத்திலும் ஹீரோக்கள் கடைசிநேரத்தில் தான் வருவார்களோ?
(கல்கி 18.05.10)

2/5/10

ஐ பிஎல்லில் அவுட்டான அமைச்சர்




“ஒரு பாகிஸ்தான் ஆட்டகாரரைக்கூட ஏலத்தின்மூலம் சேர்க்காதது தப்பு” என்ற சர்ச்சையில் துவங்கிய ஐபிஎல் 3 வதுசீசன் ஆர்பாட்டங்களான ஆட்டங்களுடன் தொடர்ந்து புதிய கொச்சி அணி எலத்தில் ஊழல் என்ற மற்றொரு சர்ச்சையோடு முடிந்திருக்கிறது. வீரர்கள் நிகழ்த்தியதைவிட மிகப்பெரிய சாதனை ஐபிலின் தலைவர் லலித் மோடி வீசிய புகார்பந்துகளைபேட்செய்யமுடியாமல்  ஒரு மத்திய அமைச்சர் சசி தரூர் அவுட்டானது தான்.
விளையாட்டுத்துறையில் அமைச்சர்களின் தலையீடு, ஊழல் குற்றசாட்டு என்பதெல்லாம் இந்திய அரசியலில் புதிதான விஷயம் இல்லை என்றாலும், இதில் குற்ற சாட்டுகள் புதுமாதிரியானது.எழுந்த புகார்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லாமே புதிதானவை மட்டுமில்லை புரியாத புதிரானவைகளும் கூட. தினமொரு செய்திகளுடனும் திடுக்கிடும்திருப்பங்களுடனும், தொடர்ந்த இந்த விஷயம் கிரிக்கெட் மாட்ச்சுகளைவிட விறுவிறுப்பாகயிருந்தது. ஆனாலும் தெருக்கோடியில் விளையாடும் கிரிகெட் ஆடும் பையன்களிலிருந்து பெரிய அரசியல் வாதிகள் வரை இதில் சமந்தப்பட்ட “கோடிகளைப் ” பற்றி எழுப்பும் கேள்விகள் கிரிகெட் ரசிகனுக்கு மட்டுமில்லாமல் சாதரண மக்களுக்கும் புரியாத மர்மங்களாகத்தான் இருக்கிறது. 
மர்மம்1
மற்ற டீம்களைவிட மிகமிக அதிக விலையில் (333மில்லியன் டாலர்கள் கோடி ரூபாய்) ஏலமெடுக்கபட்டது இந்த கொச்சிஅணி.     வினாடிகளைக்கூட விணாக்காமல்,விளம்பரங்கலிருந்து கொட்டும் பணமழையினால் உலகம்முழுவதற்கான தொலைகாட்சி  ஐபிஎல்லின் உரிமைகள் பெரிய விலைக்கு விற்கபட்டிருக்கிறது. அதனால் ஐபிஎலின் மதிப்பபும் (18000 கோடிரூபாய்!) பங்குகொள்ளும் அணிகளின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்து விட்டது ஒவ்வொரு ஆட்டதிலும் தொடர்ந்த லாபம் நிச்சியம் என்பதால் இந்த விலை என்று பேசப்பட்டது. ஆனால் ஏலமெடுத்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் யார் என்று தெளிவாக ஏலத்திற்கு மனுச்செய்தவர்களுக்கு கூடத்தெரியாது என்று சொல்லுவது யார் தெரியுமா? ஐபிஎலின் கமிஷனருமும் ஏலத்தை நிகழ்த்திய குழுவின் தலவருமான லலித் மோடி! ஓரு சாதாரண பஞ்ஞாயத்தின் காண்டிராக்டை எடுப்பவர் கூட, காண்டிட்ராக்ட் கிடைத்தால் அந்த பணியை செய்ய தனது பொருளாதார தகுதியை நிருபிக்க சான்றுகள் சமர்பிக்கவேண்டும்.அப்படியிருக்க 300மில்லியன் டாலர்  பிசினஸ் எப்படி முகம்தெரியாதவர்களுக்கு வழங்கப்பட்டது?
மர்மம்2
ஏலமெல்லாம் முடிந்து 30 நாள் காத்திருந்து ஏன் திடுமெனலலித்மோடிபுகார்புயலைகிளப்பியிருக்கிறார்?  ஏலமெடுத்த தொகையை விட பல கோடிகள் மேலும் அதிகமாக கொடுத்து அவர் விரும்பிய மற்றொரு நிறுவனத்திற்கு உரிமையை மாற்ற அவர் செய்த முயற்சிகள் பலனளிக்காதால் எழுந்த கோபத்தின் விளைவு இந்த புகார் என்றும் சொல்லபடுகிறது. அப்படியானால் அந்த அணியின் உண்மையான மதிப்புதான் என்ன?

மர்மம் 3
தனியாக ஒருபெண் போராடி தொழில்செய்து முன்னேறுவதில் இவ்வளவு முட்டுகட்டையா?அமைச்சரின் தோழியாக இருப்பதற்கும் தனக்கு இலவசமாக கிடைத்த பங்குகளுக்கும் (மதிப்பு 70 கோடி) எந்த சம்பந்தமுமில்லை. அது தனது உழைப்பிற்கும், தொடரப்போகும் சேவைக்கும் கிடைத்தது என முழங்கிய இதில் சம்பந்தப்பட்ட ஒரேபெண் சுனந்தா புஷ்க்கர்        அதிரடியகாக தன் பங்குகளைதிருப்பிக்கொடுப்பானேன்?. ஓசியாக கொடுத்து அப்படி திரும்பப்பெறபட்ட பங்குகளை அந்த நிறுவனம் என்ன செய்யும்?
மர்மம்4
ஐபில் என்ற அமைப்பு பிசிசிஐ என்ற கிரிகெட் கட்டுபாட்டு வாரியத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இந்த பிரச்சனைகளில் அந்த அமைப்பு எதுவும் தலையிடவில்லையே ஏன்.? அரசின் நிதித்துறையின் ஆணையால் வருமான வரி அதிகாரிகள் ஐபில் அலுவலகத்தை சோதனையிட்டபோது லலித்மோடி தர்மசாலாவில் தலாய்லாமாவை சந்த்தித்து விட்டு அங்கு நடந்த மாட்ச்சை பார்த்துக்கொண்டிருக்கிறார்.சோதனையே நாடகமா அல்லது வரி மோசடி எதுமில்லையா?
எப்படியோஅரசியல் கிரிகெட் மாட்ச் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சசிதரூர்ரைத்டொடர்ந்து வேறுயாரும் அவுட் ஆவார்களா? அல்லது தப்பாக பெளலிங் செய்ததற்காக  லலித்மோடியே ஆட்டதிலிருந்து மட்டுமில்லமால் இனி விளையாடும் தகுதியையே இழக்குமளவிற்கு தண்டிக்கபடப்போகிறாரா? டிவி அம்ப்பையர் மன்மோகன்சிங்  பார்த்து சொல்லபோவதை கேட்க இந்தியா காத்திருக்கிறது.



18/4/10


ஸரஸ்வதியின் ஆசிபெற்ற சச்சின்..


“கல்யாணமான புதிதில் கணவரோடு பம்பாயில் குடித்தனம் செய்யப்போனபோது வீடு இருந்த அந்தத்தெருவில்பையன்கள்எப்போதும்கிரிக்கெட்விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டேயிருப்பேன். கிராமத்திலிருந்து வந்திருந்த எனக்கு அந்த விளையாட்டு புரியவேஇல்லை. கணவரிடம் கேட்டபோது மிக பொறுமையாக, எளிதில் புரியும்படி சொல்லிக்கொடுத்தார். தொடர்ந்து ரேடியோ கேட்டுக்கேட்டு நிறைய புரிந்து கொள்ளவைத்தார்.  டிவி  வந்ததற்கு அப்புறம் நன்றாக இன்னும் நன்றாக புரிந்துகொண்டேன். என் கணவரைப்போலவே என் 2 பிள்ளைகளும் கிரிக்கெட் ஆட்டக்காரகளாக இருந்ததால் வீட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட் நன்றாக புரியும். அனேகமாக எல்லா சர்வ தேச மாட்ச்களையும் விடாமல் பார்த்திருக்கிறேன்” என்று சொல்லும் சரஸ்வதி வைத்தியநாதன் சச்சின் தண்டுல்கரின்  அதி தீவிர ரசிகை.சச்சின் விளையாட ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அவரது சாதனைகள பற்றிய எந்த கேள்விக்கும் அனாசியாமாக பதில் தரும் இவரின் வயது அதிகமில்லை. 87 தான்!  இப்போது சென்னயில் மகனோடு வசிக்கும்  இந்த“ கிரிக்கெட்  பாட்டியை” சந்திக்கிறோம். படுக்கை அறையில் சச்சின் போஸ்டர். அருகில் சச்சின் பற்றிய புத்தகம்.தெளிவான ஆங்கிலம் அவ்வப்போது ஹிந்தி.
“முதலில் கவாஸ்கரின் ரசிகையாகத்தான் இருந்தேன். “ஞபகமிருக்கிறதா 1993 ஹிரோ கப் மாட்ச் தெனாப்பிரிக்காவோடு மோதியபோது கடைசி ஒவர்-வெற்றிக்கு 6 ரன் தேவை என்ற நிலையில் தய்ங்கிய அசாருதின் கையிலிருந்து பந்தை வாங்கி இந்த குட்டிபையன் செய்த பெளலிங்கில்  பேட்ஸ்மென் ரன் அவுட்டாக 3 ரன்னில் நாம் ஜெயித்தோமே- அன்றிலிருந்து சச்சின்தான் என்னுடைய பேவரிட்.” என்று எதோ போன வாரம் பார்த்த மேட்ச்சைப்பற்றி பேசுவது போல பேசுகிறார். அது மட்டுமில்லை தொடர்ந்து சாதனைகள் படைத்தாலும் மிக சிம்பிளாக, தெய்வபக்தியுடன்,  சமுக சேவை செய்வதால் சச்சினை நான் என் பேரனைப்போல மிக மிக நேசிக்கிறேன் என்று சொல்லும் இந்த பாட்டி கிரிக்கெட்க்கு அப்பால் சச்சினைபற்றி பல விஷயங்கள்- அவர் பந்தராவில் பள்ளிக்கூடம் நடத்துவது,எழைகளுக்கு படிக்க உதவது போன்ற பல தகவல்கள் தெரிந்திருக்கிறது. கிரிகெட்டைத் தவிர பிடித்தது டென்னிஸ் .ரோஜரர் ஃபெடர்ர், பீட்டர் சாம்ராஸ் போன்ற ஜாம்பவான்களின் ஆட்டங்கள் பற்றி பேசும் இவர் கிரிக்கெட் ஒரு விளையாட்டில் தான் பலவிதமான காட்ச்.,பேட்டிங் ஸ்டைல் என வெரைட்டி இருப்பதால் அது தான் பெஸ்ட் கேம் என்கிறார். இரவு 1 மணியானாலும் சச்சின் விளையாடினால் கண் முழித்து (வீட்டில் மற்றவர்கள் தூங்கினாலும்) பார்த்து கையிருக்கும் சிறுபேப்பரில் ஸ்கோர் விபரங்களை குறித்து வைத்துகொண்டு அதை மறு நாள் நோட்டில் எழுதிவைக்கிறார். ஒரு முறை எழுதிய பின்னர் அதை அவர்  அந்த விபரங்களை மறப்பதில்லை..இந்த வயதிலும்  இந்த நினைவாற்றல் எப்படி  சாத்தியாமகிறது? “விசேஷ பயிற்சி எதுவும் கிடையாது- பகவான் அருள்’ என்னும் இவர் குடும்பத்தில் அனைவரது பிறந்த நாள், நேரம் சரியாக சொல்லுகிறார்.- 4வது பேரன் சச்சின் உள்பட. இரண்டு வயதில் அம்மாவின் பின்னால் மாடி படியேறி போய் கடைசிப்படியிலிருந்து விழுந்ததும், முச்சுநின்றிருந்ததால் இறந்துவிட்டதாக எண்ணி எல்லோரும் அழுததும்,பின் நினைவுவந்ததும் இன்றும் நினைவிருக்கிறது என்று சொல்லி ஆச்சரியப்படுத்தும் இவர் அதற்கு பிறகு சச்சின் விஷயங்கள் தான் அந்த மாதிரி நினைவில் நிற்கிறது என்கிறார்.
ஆஸ்திரேலியாவிலிருக்கு பேரனை போய்பார்ப்பதைவிட  சச்சினை நேரில் பார்த்தால் சந்தோஷப்படுவேன்  என்று சொன்ன இவரது பேட்டியை ஹிந்து நாளிதழில் பார்த்த சச்சின் IPL மேட்ச்சுக்காக சென்னை வந்தபோது அழைத்து சந்தித்தார். வரும் எப்பரல் 24ல் பிறந்த நாள் கொண்டாடும் சச்சினுக்கு “இண்டெர்நேஷனல் கிரிக்கெட்டில் 100 செஞ்சுரி அடிக்க இன்னும் 7 பாக்கியிருக்கிறது, சீக்கிரம் அதைச் செய்ய ஆசிகள்” என்று சொல்லி  ஒரு சிறு வெள்ளிப்பிள்ளையாரை கொடுத்தபோது  இவரின் காலைதொட்டு வணங்கி அதைப்பெற்றிருக்கிறார் பிளாஸ்டர் மாஸ்டர். சச்சினை நேசிக்கு இவர் அவர் விளையாடும்போதெல்லாம் அவரது வெற்றிக்கு பிரார்த்திப்பதில் ஆச்சரியம் இல்லை- இவர் இதுவரை ஒரு கிரிக்கெட் மாட்சைக்கூட ஸ்டேடியத்தில் பார்த்ததில்லை என்பதுதான் ஆச்சரியம்.
சந்திப்பு- ரமணன்
 கல்கி18.04.2010

11/4/10

இரண்டு நாட்கள்....70 படங்கள்...இரண்டு நாட்கள்....70 படங்கள்.


இரண்டு நாட்கள்....70 படங்கள்...இரண்டு நாட்கள்....70 படங்கள்...
சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியட்டர். ஜீன்ஸ்  குர்த்தா,, கார்கோ பேண்ட் டிஷர்ட்,சால்வார் கம்மீஸ் என இளைஞர் கூட்டம் படிக்கட்டுகளில்  டிக்கட்கள் வாங்கக் காத்திருக்கிறது.படம் “தலை”யோடதோ இல்லை,சூரியாவோடதோ இல்லை. இரண்டு நாள்  சர்வதேச குறும்பட விழாவில் காட்டப்போகும் குறும்படங்களுக்குதான்.29 நாடுகளிலிருந்து,வந்த 419 படங்களில் தெர்ந்தெடுக்கப்பட்ட 70 படங்களைத்தேர்ந்தெடுத்து திரையிட்டார்கள். திரைப்படவிழாவை தமிழக செய்திதுறையினருடன் இணைந்து தீபீகா  DBICA (DANBASCO INSTITUTE OF COOMUNICATION ARTS) நடத்தினர். நகரின் கல்லூரிகளின் மீடியா மாணவர்கள் அதிகம் பங்கேற்ற இந்த திரைப்பட விழாவில்  2 வெளிநாட்டு தயாரிப்பாளர் உள்பட 20 படங்களின் இயக்குநர்களும் பங்கேற்று தங்கள் படைப்புகள் பற்றி பேசினர்.
“பல வாரங்கள் தொடர்ந்து படங்கள் பார்த்த ஜூரிகள் பரிசுபடங்களை மட்டுமில்லை,திரையிடசிறந்ததைத் தேர்வுசெய்யக்க்கூட திணறித்தான் போனார்கள். வெறும் 50 படங்களுடன் 3ஆண்டுகளுக்கு முன் துவங்கிய முதல் விழாவைதொடர்ந்து இன்று இந்த விழா இன்று உலகளவில் பாபுலராகயிருப்பதும் ஆண்டு தோறும் படங்களின் எண்ணிக்கை கூடுவதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். உலகின் பல பகுதிகளின் குறும்பட அமைப்புகளுடன் இணைந்து செயல் படுவதால்,அடுத்த ஆண்டு 1000 படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார் ரெவரண்ட் பாதர் ஹாரிஸ். இவர் டீபிகா வின்  இயக்குநர். டான்பாஸ்கோ கல்விநிறுவனத்தின் ஒர் அங்கமான டிபிகா பல மீடியா கோர்ஸ்களை நடத்துவதோடு இதுபோன்ற  சர்வ தேசகுறும்பட விழாக்கள்,பயிலரங்கங்கள் கூட்டங்கள் நடத்துகினறனர். சமூக விழிப்புணர்வு படங்களையும் தயாரிக்கின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையில் இவர்கள் தயாரித்த இலங்கை தமிழரின் நிலையை சித்தரிக்கும் படத்தை துவக்கநாள்விழாவில் அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட்டார். இயக்குனர் லெனின்,,ஆர்வி உதயகுமார் உள்ளிட்ட 7பேர் கொண்ட ஜூரி குழு வந்திருந்த 29 நாடுகளிலிருந்து வந்திருந்த 419படங்களில் ஒரு ஸ்பானிஷ் படத்தை முதலிடத்திற்கும்,கனாடவிலிருந்து வந்த படத்தை பரிசுக்கும் தேர்ந்தெடுத்திருந்தது. இந்திய படங்களின் பிரிவில் ஆந்திர மாநில பொன் சுதா தயாரித்திருந்த “ நடந்த கதையும்” மஹாரஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் ராமின் “சர்க்கிள்” படங்கள் பரிசுகளை வென்றது. பல பிரிவுகளில் நிறைய பரிசுகள். திரையிடப்பட்டதில் வெளிநாட்டுபடங்களைவிட  இந்தியபடங்கள் சிறப்பாக இருப்பதை  உணர முடிந்தது.70 படங்களையும் இரண்டு நாள் தொடர்ந்து  ஆர்வத்துடன் பார்த்த சினிமாவை நேசிக்கும் அந்த இளைஞர் பட்டளாத்தைப் பார்த்தபோது,குத்துப்பாட்டு, ஃபைட்கள்.வெளிநாட்டுசூழலில் பாடும் காதலர்கள் என்ற நமது படங்களின் பார்மூலாவை மாற்ற அடுத்த தலைமுறை  இயக்குனர்கள் உருவாகிக்கொண்டிருப்பது புரிந்தது.

ஜனனம்
 ஓரு சின்னஞ்சிறிய கேரள கிராம குடிசைவீடு.வாசலலில் தாய் தன் குழந்தையை குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறார். ஜட்டியில்லாமல் குளிக்கும்  அது ஆண் குழந்தை என புரிகிறது.ஏன் இங்கே ஜூம் என்ற கேள்வி பின்னால் புரிகிறது.அவசரபடுத்தும் கணவனைச்சாமளித்து மகன் உன்னியை  ஊக்குவித்து  பள்ளியில் சேர்க்க  நல்ல உடையுடன் அனுப்புகிறார். காடு கழனிகளை கடந்து கிராமத்தை அடைந்து தயக்கத்துடன் தலமையாசிரியரியரை அணுகி தன் பையனை சேர்க்கவேண்டுகிறார். பர்த் சர்டிபிகேட்டை பார்த்து எழுதிகொண்டே வரும் ஆசிரியர் அதில் உன்னி  பெண்குழந்தையாக  குறிப்பிட்டருப்பதை காட்டுகிறார். பஞ்ஞாயத்து ஆபிஸில் போய் திருத்தி மாலைக்குள் கொண்டுவரச்சொல்லுகிறார். பஞ்சாயத்து அலுவலகத்தில் இது தங்கள் வேலையில்லை என சொல்லி ஆஸ்பத்திரிக்கு போகச்சொல்லிவிரட்டுகிறார்கள். ஆஸ்பத்திரியில் 7 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த தவறை திருத்த  மாவட்ட மருத்தவ அதிகாரிக்குதான் அதிகாரம் அதற்கு பஞ்சாயத்திலிருந்து கடிதம் வேண்டும் என அனுப்பிவிடுகிறார்கள்.அங்கே மறுபடியும் மறுத்து நகரத்துக்குச்சென்று கலெகக்டரை சந்திக்க சொல்லுகிறார்கள். வருத்துடன் அலைந்து தேடி கலைக்டர் அலுவலகம் சென்று அவரைச்சந்தித்து வேண்டுகிறார் தந்தை. விஷயத்தை கேட்ட கலெக்டர் கிராம பஞ்ஞாயத்து வழியகாக மனு அனுப்பச்சொல்லுகிறார். மனுமீது விசாரிக்க ஆணையிடவதாக சொல்லுகிறார். வெறுத்துபோய் அழும் தந்தையிடம்  என்னை  பெண் என தவறாக சொன்னதற்காக அழாதீர்கள். நான் நல்ல பையன் என்கிறான் உன்னி. கலைக்டர் அலுவத்தில் தேசியக்கொடியின் கீழ்  செய்வதுஅறியாது  வருத்துடன் உட்கார்ந்திருக்கும் அவரிடம் “நாங்கள் மின்னல் சானலிருந்து வருகிறோம் உலகம்முழுவதும் பார்க்கப்படும் இந்த சானலில் உங்கள் முகம் தெரியப்போகிறது. உங்களுக்கு பிடித்த ஒரு பாட்டை கேளுங்கள்.ஓளிபரப்பபடுவதோடு  பரிசாக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது” என மைக்கோடும் காமிராமேனுடனும் ஒரு இளம் பெண் வருகிறார். என் மகனைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க விரும்பியது தவறா? இவன் பெண்அல்ல பையன். என அழுகை, ஆத்திரம், கோபத்துடன் உன்னியின் டிராயிரை அவிழ்த்து இதை உலகுக்கு காட்டுங்கள் என கதறுவதுடன் படம் முடிகிறது.
போட்டியில் பங்கேற்காத, சென்ற ஆண்டு விருது பெற்ற இந்தப்படம்  விழாவை துவக்கி வைக்க அமைச்சர் வரும் முன்னால் காத்திருந்தவர்களுக்காக காட்டப்பட்ட இந்தப்படம் எல்லோரையும்  சற்று பாதித்தது.
நடந்த கதை
அந்த சின்னஞ்சிறு குழந்தை கீ கீ என்று ஓலி எழுப்பும் தனது புது ஷுவுடன் சுற்றிச் சுற்றி ஒடி ஈசி சேரிலிருக்கும் தாத்தாவிற்கு காட்டுகிறது. மகிழ்ந்து போகிறார் தாத்தா --குழந்தயின் சந்தோஷத்தினால் மட்டுமில்லை-- தன் தந்தையால்  தனக்கு தர முடியாத போன விஷயத்தை தன் மகன் அவனது மகனுக்கு செய்யமுடிந்தனால். நினைவலையில் விரியும் தனது கதையைச் சொல்லுகிறார் “ நடந்த கதை” குறும்படத்தில். அந்த கிராமத்தில் கீழத்தெருவிலிருக்கும் சாதியினர் செருப்பு அணியக்கூடாது என்பது சமுக கட்டுபாடு. அந்த சிறுவனுக்கு அது ஏன்? என்றகேள்வி எழுந்துகொண்டேயிருக்கிறது.கனவில்கூட செருப்புதான் வருகிறது.ஓரு நாள் செருப்பு அணிந்து மேலத்தெருவிற்குபோகும்அவன் அங்குள்ளவர்களால்  அடிக்கப்படுகிறான்.அழுதுகொண்டு வரும் அவனுக்கு அவனது பெற்றோர் ஆறுதல் சொல்லாமல் தவறு அவனுடையது என்கிறார்கள்.தினசரி தன் தாய் தனக்கு காலில் முள் எடுப்பதும், தந்தை தனது பாதத்தில் காய்ச்சுபோனதோல் பகுதியை வெட்டி கழித்துப்போடுவதையும் பார்த்து ஊரின் செருப்பு தைப்பவரான தனது சித்தப்பாவிடம்” நாம் செருப்பு போடக்கூடாது என்று யார் சொன்னது?”என்று கேட்கும் அந்த சிறுவனுக்கு “சாமிதான்” என்றும், நமக்கு செருப்புசெய்யத்தான் உரிமை போட இல்லை என்ற  பதில் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வலியோடு வளரும் இளைஞன்,ஒரு நாள் கிராமத்தில் மிடுக்கோடு நடக்கும் ராணுவ வீரனை பார்க்க நேரிடுகிறது.ஓசையெழுப்பும் கனத்த அந்த காலணிகள் அவனை மிக கவர்கிறது.அவருடன் பேசி தெரிந்தவிபரங்கள் மூலம் ராணுவத்தில் சேர்ந்து வீரனாகிறான். விடுமுறையில் கிராமத்திற்கு வந்து தனக்கு  செருப்புடன் நடக்க அனுமதி மறுக்கப்பட்ட மேலத்தெருவில் மிடுக்குடன் ராணுவ நடைபோடுகிறான் அந்த இளைஞன்.இப்போதும்  அங்குள்ள சிலர் அவனை மிரட்டி காலணியைகழட்டி மன்னிப்புகேட்டுவிட்டு அதை கையில் எடுத்துச்செல்ல சொல்லுகின்றனர். “ நான் இந்திய ராணுவ வீரன் விடுமுறையிலும் பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன்.என்னை அவமதித்தால் உங்களைப்பற்றி போலீசில் புகார் செய்வேன்” என கம்பீரமாக சொல்வதைகேட்ட  அந்த பிரமுகர்கள் ஆடிப்போகின்றனர்.  அதே தெருவில் நடையை தொடர்கிறான் வீரன். கீழத்தெருவைகடக்கும்போது செருப்பே இல்லாத அந்த தெருவில் ஒவ்வொருவீட்டின் முன்னும் ராணுவ வீரனின் காலடிபட்டவுடன்  செருப்பு ஜோடிகள் தோன்றுவதுடன் படம் முடிகிறது.நடிக்கவே தெரியாத இயல்பாக உணர்ச்சிகளை காட்டும் மனிதர்கள், நிஜமான கிராமம் யதார்த்தமான படபிடிப்பு, மிகையில்லாத இசை.ஆந்திராவிலிருந்து பொன், சந்திரா  தயாரித்த இந்த குறும்படம் இந்திய படைப்புகளில் முதல் பரிசு பெற்றது.                                *******
தொப்பி
தேசப்பிரிவினை அறிவிக்கப்பட்டிருக்கிறது..  கலவரம். அடித்துவிரட்டப்பட்ட மக்கள் சிதறி  காத்திருக்கும் ரயில் ஏற ஒடிக்கொண்டிருக்கிறார்கள். தாயிடமிருந்து பிரிந்த ஒரு சிறுவன் போராட்டகாரர்களிடம் மாட்டிக்கொள்கிறான். அடிபடத்துங்கும் அவனை சட்டென்று பாய்ந்து, தனது தலையிலிருக்கும் தொப்பியை அவனுக்கு மாட்டி நமது பையன் அடிக்காதீர்கள் என்று சொல்லி காப்பாற்றுகிறார் தாடி வைத்து லுங்கியிலிருக்கும் அந்த கிழவர். நகரத் தொடங்கிய ரயிலில் எற்றிவிடுகிறார். உள்ளேபோன சிறுவன் பதறிக்கொண்டிருக்கும் அம்மாவை கண்டதும் கட்டிக்கொள்கிறான். ஜன்னல் வழியே தனக்கு உதவிய தாத்தாவிற்கு தொப்பியை எடுத்து அசைத்து  விடைபெறுகிறான். படத்தின் பெயர் “தொப்பி”. அனிமேஷன் படமான இதில் இந்தியா,பாகிஸ்தான், முஸ்லீம் என்ற வார்த்தைகள் மட்டுமில்லை எந்த வார்த்தைகளுமே  பேசப்படதா இந்தப்படத்தில் பின்ணணி இசையும் ரீரிகார்டிங் ஓசைகளும்தான் கதையைச்சொல்லுகிறது.  அர்ஜுன்ரெய்கா என்ற அமெரிக்க வாழ் இந்தியர் தயாரித்த இந்த படத்திற்கு சிறந்த அனிமெஸ்ஷன் படத்திற்கான   பரிசு கிடைத்தது.
வாழ்க்கை
அது ஒரு HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் காப்பகம். கம்பிகதவில் கைகளை நீட்டிக்கொண்டு ஒரு  பெண் குழந்தை. தினசரி அருகிலிருக்கும் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் அந்த மனிதரைப்பார்த்து சிரிக்கும். குழந்தையின் கைகள் தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அந்த காப்பகத்தின் முகப்பைப் கடக்கும்போது மட்டும் நடைபாதையை விட்டு இறங்கி சாலையில் நடக்கிறார். சிரிக்கும் குழந்தையை கண்டுகொள்வதேயில்லை. ஒரு நாள் பணிமுடிந்து இரவு கடைசி பஸ்ஸில் திரும்பும் அவர் பழக்கத்தினால் அப்போதும் நடைபாதையைவிட்டு சாலையில் இறங்கி நடக்கும்போது, வேகமாகாக வந்த காரினால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளாகிறார். தன் கட்டிலில் தூங்காமல் உட்கார்ந்திருக்கும் சிறுமி சப்தம்கேட்டு ஓடி வந்து பார்த்து, பூட்டியிருக்கும் கேட்டை ஏறி க்குதித்து அவரை காப்பற்றுகிறாள். சிலநாட்கள் கழித்து மனைவியுடன் வந்த அவர் தன்னைக்காப்பாற்றியது அந்த சிறுமி என அறிந்து நன்றி சொல்லி பக்கத்துகடையில் ஒரு சாக்லேட்டை வாங்கித்தருகிறார் .. . .
சாக்லெட்டைப்பெற்ற அந்த குழந்தையை காப்பகத்தின் வாச்மென் ஒரே சாக்லெட்டாக இருப்பதால் உள்ளே எடுத்துச்சென்று மற்ற குழந்தைகளுக்கு காட்டாமல் அங்கேயே சாப்பிடச்சொல்லுகிறார்.. ஆனால் சிறுமி கட்டிடத்தின் பின்னால் போய் ஒளிந்து ஜன்னல் வழியாக நண்பர்களை கூப்பிடுகிறது.ஓன்றின் பின் ஒன்றாக வந்த குழந்தைகள் சூழ்ந்துநிற்க அந்த சிறுமி கையிலிருக்கும் சாக்லெட்டினை பேப்பரைப்ப்பிரித்து தூக்கி வெயிலில் காட்டி கொண்டிருக்கிறது. உருகி வழிந்தோடும் சாக்லெட் கூழை எல்லாகுழந்தைகளும் விரலில் தொட்டு நக்கி சாப்பிடுவதை, குழந்தைகளைத்தேடி வந்த டாக்டரும் வாச்மேனும் ஆச்சரியதோடு பார்க்கிறார்கள். “வாழ்க்கை-அன்பு- நம்பிக்கை” என்ற இந்த குறுபடத்தினை தயாரித்திருப்பவர். கலைஞர் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையினாரான கிருத்திகா உதய நிதி .
கல்கி11.04.10

28/3/10

உடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி


உடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி                                                                                               

சிக்காகோ நகரின் யூனியன் ஸ்டேஷனில் புறப்படத்தயாராகயிருக்கும்  அந்த மின்சார ரயிலை பிடிக்க ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் அந்த அவசரத்திலும் அந்த கடையின் ‘ரஷ்’ கவுண்ட்டரில்  கார்டைக்காட்டி ஒரு  கப்  காபி வாங்குகிக்கொண்டு ஓடுகிறார். நியூயார்க் நகருக்கு வெளியே செல்லும் அந்த நீண்ட ஹைவேயில்  சென்றுகொண்டிருக்கும் கார் வலது புறம் தெரியும் அந்த போர்டை பார்த்தவுடன் வேகம் குறைந்து அந்த ட்ரைவின் கவுண்ட்டர் அருகே செல்லுகிறது.ஒட்டுவரின் கரம் நீண்டு காரின் சீட் அருகே பொருத்திக்கொள்ளும் வசதியுள்ள கப்பில்  ஒரு காபி வாங்கிக்கொண்டு பறக்கிறது. ஸான்ஸ்பிரான்ஸிஸ்கோ  நகரின் பரபரப்பின்  சந்தடி எதுவும் கேட்காத அந்த பாரிஸ்டாவில் தனது லாப்டாபில் முழ்கி கிடக்கும் அந்த இளைஞைன் அருகில் ஒரு பெரிய கோப்பை காபி. இப்படி அமெரிக்க தேசமே இந்த ஸ்டார்பக் நிறுவனத்தின் காஃபிக்கு அடிமையாகி  கொண்டிருக்கிறது.
காஃபி பயிரே விளயாத தேசமான அமெரிக்கா தான்  உலகில் அதிகம்பேர் காஃபி அருந்தும் நாடு . கடந்த 10 ஆண்டுகளில் காஃபி குடிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை  உயர்த்தியதில் (87% மக்கள்) ஸ்டார் பக் நிறுவனத்திற்கும் ஒரு  கணிசமான பங்கு உண்டு. தேர்ந்தெடுத்த காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்து கொடுக்க, டீ  மற்றும் வாசனைத்திரவியங்கள் விற்கும் கடையாக துவங்கிய நிறுவனம் இது. வாடிக்கையாளருக்கு ருசி காட்ட  அதன் வாசலில் ஒரு சின்ன காபி கடை திறக்கலாம் மகன்கள் சொன்ன  யோசனையை நிராகரித்து, “காஃபி என்பது வீட்டில் தயாரிக்க வேண்டியது. அப்படி எதாவது ஆரம்பித்தால், நமது முக்கிய வியாபாரம் பாதிக்கும்” என்று சொன்னவர் இதன் நிறுவனர். ஆனால் அடுத்த தலைமுறையினர் துவக்கிய இந்த காஃபி கடை தொழில் இன்று மிக பிரமாண்டமாக வளர்ந்த. அமெரிக்கா முழுவதும் 11200    கடைகளும்    உலகின் 43    நாடுகளில் பல கிளைகளுடன் ஒரு தனி சாம்ராஜ்யமாகியிருக்கிறது
 “சூட ஒரு கப் காஃபி கொண்டுவாங்க” என்று இவர்கள் கடையில் ஆர்டர் செய்ய முடியாது. 20வகையான காபியை 160 வித முறைகளில் தயாரிக்கிறார்கள். அமெரிக்க தேசத்தின் பல பகுதி மக்களின் ருசிக்கேற்ப பல  காஃபி வகைகளை பட்டியலிட்ருக்கிறார்கள்.அந்த மெனுவிலிருந்து தேர்ந்தெடுப்பதை உடனடியாக  தயாரித்துக் கொடுக்கிறார்கள், இதற்ககாக இந்த நிறுவனத்தின் கல்லூரியில் பயிற்சிபெற்று ‘காஃபி மாஸ்டர்’ பட்டம் பெற்றவர்கள் பணியிலமர்த்தப்ப்ட்டிருக்கிறார்கள். கடைகள் நகரின் முக்கியமான இடங்களில்,  எர்கண்டிஷன், எளிதான(வயர்லெஸ்)இண்டர்நெட்வசதி,வசதியான இருக்கைகள், இனியஇசை போன்ற வசதிகளுடன் இருப்பதால் கடைகளில் எப்போதும் கூட்டம். அதிக காஃபி உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை மறுக்கும் இவர்கள் தங்கள் தாயரிப்பில் எந்த வகையில் எந்தமாதிரிப் பாலில் எவ்வளவு கொழுப்பு,எவ்வளவு சக்கரை, எவ்வளவு கார்போஹைரேட் என்பதை பட்டியிலிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யுங்கள் என்று வாடிக்கயாளருக்கு அறிவுறுத்துகிறார்கள். “60லிருந்து110  வரையிலான கலோரியில் ,11கிராம் கொழுப்புசத்துடன்,திக்காக  சக்கரை போடாமல் ஆனால் திதிப்புடன்,கொஞ்சம் விட்டமின் D சேர்க்கப்பட்ட ஆர்கானிக் பாலில் ஒரு சின்ன கப் காஃபி தாருங்கள்” என்று கூட ஆர்டர் செய்யலாம். இதற்காக இவர்கள் விற்கும்  காஃபிகளில் இருக்கும்  கலோரி,கொழுப்பு,சோடியம், சக்கரை, கால்சியம், இரும்பு,  காஃபைய்ன் போன்றவைகளின்  அளவுகளை குறிப்பிட்டு டைட்டியிஷயன்  தருவது போல சார்ட் தருகிறார்கள். இதை ஆராய்ச்சி செய்து மண்டையை உடைத்துக்கொள்ளும் கஸ்டமர்களுக்கு உதவி செய்ய  தனி பணியாளார்களுமிருக்கிறார்கள். இதைத்தவிர சட்டென்று தேர்ந்தெடுக்க 200 கலோரிகளுக்கு குறைவான 20சுவை யான தேர்வுகள் என்ற குட்டி லிஸ்ட்டும் தருகிறார்கள்.

வேலைசெய்ய சிறந்த பணியிடம் என ஃபார்ச்சூன்100 நிறுவனத்தால் தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் வேலை செய்வோர் 1 லட்சத்திற்கும் மேல். கடந்த ஆண்டின் வர்த்தகம் 10,000பில்லியன் டாலர்களுக்கும் மேல்.   இந்த நிறுவனம் பற்றியும்,இதில் பணி புரிவர்களுக்கு  தரப்படும் சிறந்த பயிற்சி பற்றி யும் பல புத்தங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வெற்றியைப் பற்றிய கேஸ் ஸ்டெடியை  உலகெங்கும் MBA மாணவர்கள் படிக்கின்றனர்.

 சில ஆண்டுகளுக்கு வேலை நேரத்தை நீடித்து தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள், லாபபணத்தை இஸ்ரேல்    ராணுவத்திற்கு போருக்காக உதவ அனுப்புகிறார்கள் போன்ற சர்ச்சையில் சிக்குண்டு சற்று ஆட்டம் கண்ட இந்த நிறுவனம்  அதை மறுத்து தங்கள தரப்பு நிலையை விளக்க ,’வதங்திகளும்,உண்மைகளும்’ என்ற இணையதளத்தை துவக்கி நிலமையை பிரமாதமாக சாமாளித்தது..
இதை விட பிரபலமனாது  திருமதி ஓஸாமா அணியும் உடையிலிருந்து,குளோபல் வார்மிங்  வரை அலசப்படும்  ஸ்டார்பக் காஃபி ரசிகர்களின் ‘காஸிப்” என்ற இணையதளம்தான். ஸ்டார்பக் நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாமல் தனித்து இயங்கும் இதில் வெளியாகும் விஷயங்கள் மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இருப்பதால் இதை பலர் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
மானேஜ்மெண்ட் குரு பீட்டர் டெரெக்கர்  “ஒரு வியாபார நிறுனத்தின்குறிக்கோள் வாடிக்கியாளர்களை உருவாக்கி அவர்களை தக்க வைத்துக்கொள்வது தான்” என்கிறார். ஸ்டார்பக் நிறுவனம் அதை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது.


V

21/2/10

அமெரிக்க தபால்தலையில் பிள்ளையார்


அமெரிக்க தபால்தலையில் பிள்ளையார்.

பிள்ளையார் மட்டுமில்லை! சீனிவாஸ பெருமாள்,கிருஷ்ணர், முருகன்  என்று நம்மூர் தெய்வங்களெல்லாம், 44செண்ட் தபால் தலையாக (ஒரு சாதாரண கவருக்குரியது)  அமெரிக்காவில் இப்போது கிடைக்கிறது.
மிக வேகமாக அதிகரித்துவரும்  ஈ மெயில், குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவை, இவைகளினால் தபால் அனுப்புவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதனால்  அமெரிக்க அஞ்சல்துறை தங்கள் சேவையை பிரபலமாக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2006ல் அமெரிக்க தபால் சட்டம் திருத்தப்பட்டபின் நிறைய மாற்றங்கள். தபால் நிலையங்ககளில் நிறைய வசதிகள். சிறிய நரங்களில் காரில் வரும் தபால்காரர் வந்த தபாலைக்கொடுத்துவிட்டு நம்மிடம் எதாவதிருந்தால் வாங்கிப்போகிறார்கள்.இரவு திறந்திருக்கும் தபால் நிலையம், ஆங்காங்கே ஸ்டாம்புகள் விற்கும் மிஷின்கள் அஞ்சல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் என  படிப்படியாக பல மாற்றங்கள். இந்த கடைகளில் பரிசுப்பொருட்கள்,கீரிட்டிங் கார்டுகள்விற்கிறார்கள்.அனுப்பவேண்டியவற்றை அழகாக பாக்கிங் செய்துகொடுக்கிறார்கள். சரியான அளவில் பெட்டி, கவர் எல்லாம் கிடைக்கும்.கட்டணம் அதிகமில்லை. உடன் வந்த நண்பர் தமது உறவினருக்கு அனுப்ப வேண்டிய வடகத்தை காட்டியதும்  உள்ளே குமிழ் குமிழான (bubble) பிளாஸ்டிக்கவர் ஒட்டிய அட்டைப்பெட்டியிலிட்டு, விலாசத்தோடு ‘உணவுப்பொருள்-கவனம்” என கம்யூட்டரில் அச்ச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்தார்கள்.
ஸ்டாம்ப் வாங்க தபால் நிலயம் போக வேண்டாம்,நமக்கு வேண்டிய தபால்தலைகளை ஆர்டர் செய்தால் வீடிதேடி வருகிறது. அதைவிட அழகான வசதி தேர்ந்தெடுத்த நம் குடும்பத்தினரின் படத்தை கம்யூட்டரில் அவர்கள் இணைய தளத்தில் அப்லோட் செய்தால்  அனுப்பிய படங்களை ஸ்டாம்ப் ஆக செய்துதருகிறது அங்கீகரிக்கபட்ட கம்பெனிகள். இந்த ஸ்டாம்ப்களை போஸ்ட்டாபீஸ்களில் வாங்கிய ஸ்டாம்ப்களைப்போல பயன் படுத்தலாம். பண்டிகை காலங்களில் குடும்பபோட்டோ,  திருமண அழைப்பிற்கு மணமக்கள், பிறந்த நாள் அழைப்பிற்கு குழந்தையின் படம் என இந்த ஸ்டாம்புகள் இப்போது பிரபலமாகிவிட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே  தனியார் நிறுவனங்களை இதுபோல ஸ்டாம்ப் தயாரித்து விற்க அனுமதிருக்கிறார்கள் என்றாலும் இதை முதலில் செய்திருப்பது அட்லாண்டாவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான கம்பெனிதான். அவர்கள் வெளியிட்டிருக்கும் இந்து கடவுள் பட ஸ்டாம்ப் இப்போது  அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மிகவும் பிரபலம். இங்கிலாந்து, ஜெர்மனியில் வசிப்பவர்கள் கூட நண்பர்களுக்கு நினைவுப்பரிசாக அனுப்ப ஆர்டர் செய்கிறார்களாம்.
இணைப்பில் படங்கள்.
21/02/10 கல்கி






31/1/10

புனிதமான போர்க்களம்


புனிதமான போர்க்களம்                      

இந்திய தேசிய நெடுஞ்சால எண் ஒன்று  என்ற கெளவரத்தைப் பெற்றிருக்கும்  பரபரப்பான டெல்லி -ப்தான்கோட்  6 வழிச்சாலையில் சென்றுகொண்டிருக்கும் நம்மைக் சட்டென்று கவரும் அந்த பிரமாண்டமான நுழைவாயிலும் அதன் மீதிருக்கும் கீதோ உபதேச சிற்பமும் நாம் பார்க்க போய்க்கொண்டிருக்கும் ‘குருஷேத்திரா’ நகர் அதுதான் என்பதைச் சொல்லுகிறது. பல பஞ்சாப்-ஹ்ரியான கிராமங்களைப்போல குருஷேத்திராவும் மெல்ல தனது கிராம முகத்தை இழந்து நகரமாகிக் கொண்டிருப்பது  அதன் வீதிகளில் தெரிந்தாலும், நகர் முழுவதிலும் சாலைச் சந்திப்புகளில் (*)  காணப்படும் அர்ஜுனன்சிலை, விஷ்ணுசக்கரம் தாங்கிய பகவானின் விரல், கீதையின் வாசகங்கள் பாதிப்பிக்கபட்ட பாறைகள் அந்த இடத்தின் பாரம்பரியத்தை அழகாகச் சொல்லுகிறது.
“புனித கீதை பிறந்த இடத்தைப் பார்க்க எப்படி போகவேண்டும்?” என்ற நமது கேள்விக்கு “அதற்கு 10கீமீ போகவேண்டும் -எங்களூரில்அதைத்தவிரவும் பார்க்கவேண்டிய பல முக்கிய இடங்களிருக்கிறது பார்த்து விட்டு அங்கே போங்களேன்”  டைட்டான ஜீன்ஸும்,முழுக்கை சட்டையும் அணிந்திருந்த அந்த பஞ்சாபி பெண் சொன்ன போது முகத்தில் சொந்த மண்ணின் பெருமை தெரிந்தது.
அவர் தந்த பட்டியலில் முதலிடம் இந்த தீர்த்தம்.(*)  1800 அடிநீளம் 1800அடி அகல பரப்பில் பறந்து விரிந்திருக்கும்  இந்த பிரம்மஸரோவரைப் பார்த்து பிரமித்து நிற்கிறோம். சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள்.(ஸ்ரோவர்என்றால் கடல்.)நீண்ட படித்துறைகள் அகன்ற பாதை, உடைமாற்றிக்கொள்ள வசதியாக கட்டப்பட்ட மண்டபங்களால் இணைக்கப்பட்ட  சுற்று புற பிராகாரம் அதன் மேல் தளத்திற்குப் போக படிகள்  அங்கே வசதியாக உட்கார்ந்து இந்த அழ்கான அமைதிக்கடலை ரசிக்க ஆசனங்கள் எல்லாவற்றிக்கும்மேல் பளிச்சென்ற பராமரிப்பு. ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவுமிருக்கிறது. (*)கிரகணகாலங்களில் இங்கு நீராட பல லட்சம் பத்தர்கள வருகிறார்கள் என்ற தகவல் பிரமாண்டத்திற்கான காரணத்தைப் புரிய வைத்தது. தீர்த்தின் நடுவே ஒரு சிவன் கோவில். தீவாகயிருந்த இதற்கு  இப்பொது எளிதில் போக ஒரு சின்ன பாலம். ஏரியில் நீர் ஏறினாலும் உள்ளே நீர் புக முடியாத வகையில் அமைக்கபட்டிருக்கிருக்கும்  அழகிய அந்த சின்னஞ்சிறு கோலில்  பெரிய நீர் பரப்பில் மிதக்கும் சின்ன படகைப்போலிருக்கிறது.
இந்த புனித நீராடுமிடம் நகரின் நடுவிலிருப்பதால் விழாக்காலங்களில் மட்டும்  வாகனங்கள் பயன் படுத்த கரைகளை இணைத்து கட்டப்பட்டிருக்கும் அந்த பெரிய பாலத்தில், நீர்பரப்பைத்தழுவி வரும் குளிர்ந்த காற்றில் நடந்து மறுபுறம் வரும் நம்மை தாக்கும் மற்றொரு ஆச்சரியம்  அங்கே கம்பீரமாக நிற்கும்  பிரமாண்டமான  அந்த வெண்கல சிற்பம். குழம்பிய முகத்துடன் நிற்கும் அர்ஜுனன்,  வலது கரத்தில் குதிரைகளின் கடிவாளங்களை லாகவமாக பிடித்தபடி முகத்தை சற்றே திருப்பி அவருடன் பேசும் கண்ணண், சிறீப் பாய தாராகயிருக்கும் குதிரைகள் என்று ஒவ்வொரு அங்குலத்திலும்  உயிரோட்டத்தைக் காட்டும் அந்த பிரமாண்டமான கீதாஉபதேச காட்சி சிற்பத்தின் செய்நேர்த்தி நம்மை அந்த இடத்திலியே கட்டிப் போடுகிறது.. ஓடத் துடிக்கும் நான்கு குதிரைகள் காட்டும்  வெவ்வேறு முக பாவனைகள்,  பறக்கும்கொடிதாங்கிய ரதத்தின் குடையின் முகப்பில் சிறிய ஆஞ்னேயர் உருவம்,குடையிருந்து தொங்கும் சிறுமணிகள்(*) போன்ற சின்னசின்ன விஷயங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்டிருப்பதில் உருவாக்கிய கலைஞர்களின் ஆத்மார்த்தமான உழைப்பை உணருகிறரோம்.. எத்தனைபேர், எத்தனை நாட்கள் உழைத்தார்களோ. என்று வியக்கிறோம். (*)அந்த வாளகத்தைவிட்டு வெளியே வந்து நடக்கும்  வீதி முழுவதும் பல அறக்கட்டளைகள் நிறுவியிருக்கும் கீதா மந்திர்கள். அம்புப்படுக்கையில் கிடக்கும் பிஷ்மருக்கு தன் பாணத்தல் அர்ஜுனன்,  நீலத்திலிருந்து நீர் வழுங்கும் காட்சியையும், தன் குருதியாலேயே  முதியவருக்கு கர்ணன்   தானம் தரும் காட்சியையும் சிலைகளாக்கி முகப்பில் நிறுத்தியிருக்கும்  அந்த பிர்லா அறக்கட்டளையின் மந்திருக்குள் நுழைகிறோம்.(*) நிறுவிய காலகட்டதில் நவீன மாகயிருந்திருக்கும் நகரும் பொம்மைகளாலான மாஹபாரதகாட்சிகள் இன்று பொலிவிழந்தும் செயலிழந்துமிருக்கிறது.
இவ்வளவு பெரிய அறக்கட்டளை இதையேன் கவனிக்காமல் விட்டிருகிறார்கள் என்று எண்ணிய படியே நகரின் நடுவேயிருக்கும் அந்த உயரமான பெரிய  சிலிண்டர் வடிவ கட்டிடத்திலிருக்கும் “ஸ்யன்ஸ் செண்ட்டருக்குள்” நுழைகிறோம்.(*) முதல் தளத்தின் வட்ட சுவர் முழுவதிலும் தரையிலிருந்து மேற்கூறைவரை வரை 35அடி உயர பாரதப்போரின் காட்சிகள் முப்பரிமாணசித்திரமாக நிற்கிறது. ஓளியமைப்பு, தொலைவில் ஒலிக்கும் மரண ஒலங்கள் மெல்ல கேட்கும் கீதை, சுற்றியிருக்கும்  அந்த 18 நாள் போர்காட்சிகள்,எல்லாம்  நடுவில் நிற்கும் நமக்கு ஒரு போர்களத்திலிருக்கும்.உணர்வை எழுப்புகிறது. அந்த சூழ்நிலைதரும் மனஅழுத்தம் அந்த தரமான ஒவியங்களை ரசிக்க முடியாமல் செய்கிறது.
தரைத்தளத்திலிருக்கும் அந்த கருவூலத்தைப் பார்த்தபின் தான் பாண்டவ, கவுரவர்களின் மூதாதையர்களான குரு வம்சத்தினரரின் முதல் அரசர் தவமிருந்து வரம்பெற்று உருவாக்கியது தான் பரத நாடு, குருஷேத்திற்கு வந்த சீன யாதிரிகர் யூவான் சூவாங் தனது குறிப்பில் இந்த நகரைப் புகழ்ந்திருப்பதும், இந்த இடம் முகமதியர், சீக்கியர்  புத்த மத்தினருக்கும்  முக்கியமான வழிபாட்டுதலம், கெளதம புத்தர், குரு கோவிந்தசிங், வந்திருக்கிறார்கள், போன்ற பல வியப்பான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.
நகரில் 300மேற்பட்ட கோவில்களிருப்பதைவிட ஆச்சரியம் அவற்றில் தினசரி வழிபாடு நடைபெறுவதுதான், புனிதமான் கீதைபிறந்த இடத்தைப்பார்க்க பயணத்தை தொடரரும்  வழியில் நாம் நிற்கும் இந்த பத்திரகாளிகோவில் தான் மிகமிக பழமையான சக்திபீடம். கிருஷ்ணரே வழிபட்டதாக அறியப்பட்டது. வேண்டிக்கொண்டபடி போரில் வெற்றி அருளியதால் பாண்டவர்கள் தங்கள் குதிரைகளையே அன்னைக்கு காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.இன்றும் வேண்டுதல் பலித்தால் பத்தர்கள் சிறிய மண்குதிரை பொம்மையை காணிக்கையாக படைக்கிறார்கள். சன்னதியில் மலர்ந்த தாமரையில் நிற்கும் ஒரு தூண்டிக்கப்பட்ட கால், தேவியின் உடல் வெட்டி வீசப்பட்டு விழுந்தஇடங்கள் எல்லாம் சக்திபீடங்கள் என்றும் இங்கு விழுந்தது கால் என்றும் அறிகிறோம்.(*) இப்படி தனியாக அங்கம் மட்டும் வேறுஎங்காவது பூஜிக்கப்படுகிறதா என எண்ணிக்கொண்டே பயணத்தைத் தொடர்கிறோம்.
அறுவடைமுடிந்து காய்ந்து கிடக்கும் நிலங்களையும் குடிசை  வடிவில் அடுக்கபட்டிருக்கும் வைக்கோல் போர்களையும், நகரநாகரிகத்தின் நிழல்படாத சில அசலான ஹ்ரியானா கிராமங்களையும் கடந்து நாம் வந்திருக்குமிடம் ஜ்யோதிஷர்.     
 மாங்கனி வடிவத்தில் பச்சை வண்ணத்தில் நீர் நிறைந்த ஒரு குளம். ஒரு புறத்தில் அல்லி பூத்திருக்கிறது, அதன் ஒரு கரையில் வழவழப்பான தரையுடன் பெரிய அரை வட்ட மேடை..அகலமான படிகள். நடுவே  வலையிட்டு மூடிய ஒரு ஆலமரம்.(குளத்தில் அதன் இலைகள் விழாமலிருக்கவும் பறவைகள் வந்து அமைதியைக்குலைத்து விடாமலிருக்கவும்) மரத்தைச் சுற்றி   வெண்சலவைக்கல் மேடை. அதன் மீது  கண்ணாடி கதவிடப்பட்ட சிறு மண்டபம்.உள்ளே சலவைக்கல்லில்  கீதா உபதேசகாட்சி. மலர்கள் பரப்பிய  தரையில் எரியும் ஒற்றை அகல். மரத்தின் அடியில் நடப்பட்டிருக்கும்  சிறு கல். கொண்டுவந்த சிறு கீதைப்புத்தகங்களை மரத்தின் அடியில்வைத்து பூஜிப்பவர்கள்.சற்றுதொலைவில் அமர்ந்து கீதை வாசிப்பவர்கள். தியானம் செய்பவர்கள். சன்னமான  ஒலியில் ஸ்லோகம். என அழகான அந்த இடம் ஒரு தெய்வசன்னதியைப்போல இருக்கிறது. கீதையின் முதல் ஸ்லோகத்தின் முதல் வரியில் சொல்லபட்டிருக்கும்“தர்மஷேத்திரம்” இதுதான். இந்த குளமும். ஆலமரமமும் தான் நடந்த பாரதப்போருக்கும், பஹவான் கிருஷ்ணர் அர்ஜுனனக்கு கீதையை உபதேசித்தற்குமான சாட்சி.. அந்த மரத்தின் விழுதுகளில்   வழித்தோன்றலாக எழும் மரங்களை பலஆயிரமாண்டுகளாக போஷித்து பாதுகாத்துவருகிறார்கள். தொடர்ந்து  பராமரிக்கபடும் குளத்தையும், மரத்தையும் தரிசிப்பதை புண்ணியமாக கருதி வருபவர்களுக்கு, அருகிலேயே கீதைபிறந்த கதையை  தினசரி இரவில் ஒலி,ஒளிக்காட்சியாக   காட்டுகிறர்கள்(*)
ஒருபுறம் ஆராய்ச்சியாளார்கள் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தை  நிருபிக்க சான்றுகளைத் தேடி சர்ச்சை செய்துகொண்டிருப்பதையும், மறுபுறம் காலம் காலமாக செவிவழிசெய்தியாகச் சொல்லபட்ட இந்த  சாட்சிகளே தெய்வமாக மதிக்கபடும் வினோதத்தையும்  என்ணிக் கொண்டே திரும்புகிறோம்..   “ கீதை எப்போது சொல்லபட்டது என்பது நமக்கு முக்கியமில்லை.அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்” என்ற விவேகானந்தர் எழுதியிருப்பது நினைவிற்கு வந்தது. எவ்வளவு அற்புதமான வாசகங்கள்.!