27/3/11

தேர்தல் 2011


அரசியல் கட்சி சாமிகளும்.. தேர்தல் ஆணைய  பூசாரிகளும்...


எந்த பொதுதேர்தலிலும் எல்லா கட்சிகளும் மறக்காமல் தங்கள் தேர்தல் அறிக்கையில்  குறிப்பிடும் ஒரு விஷயம ஆட்சிக்குபின் அவர்கள் ஆட்சி தரபோகும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள். ஆனால தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே சுவர் எழுத்து ஓவியர்கள், போஸ்ட்டர் பிரிண்டிங், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர், ஸ்டிக்கர் கொடிதோரணங்கள் தயாரிப்பு போன்ற சில துறைகளில் பிரமாதமாக வேலைவாய்ப்புகள் உருவாகும் இரவுபகல் கடினமாக உழைக்க வேண்டியிருந்தாலும்  குறுகிய காலத்தில் கணிசமாக காசு பார்க்கலாம் எனபதால்  ஆட்சியில் அம்ரத்துடிக்குக்ம் எதிர்கட்சிகளைவிட இந்த்துறையினர் தேர்தலில் ஆவலாகயிருப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் இவர்கள் மிகவும் எமாற்றத்துடனும் வருத்தத்துடனும் இருக்கிறார்கள். அதிக நாட்கள் இல்லாமல் அவசரமாக அறிவிக்கபட்ட தேர்தல் அட்டவணையினால் மட்ட்மில்லாமல் தேர்தல் கமிஷனின் அதிரடியான புதிய கட்டுபாடுகளினால் இந்த துறையினர் ஆடிபோயிருக்கின்றனர்.
மிக லாகவாமாக 1 மணிநேரத்தில் எந்த தமிழக அரசியல் தலைவரையும் கட்வுட் செய்ய வ்சதியாக அழ்காக வரைந்து கொடுக்கககூடியவ்ர் லக்‌ஷமணன். ஓவியத்தை முறையாக பயிலாவிட்டலும் இவரது மற்றும் இவர் சீடர்களின் படத்துக்கும் கட்சிகளிடையே மிகுந்த வரவேற்பு. மாநாடு, கூட்டங்களைவிட தேர்தல்காலங்களில் அதிகம்பேர் வேலைசெய்யும் இவரது ஸ்டூடியோ இன்று காலியாக் கிடக்கிறது. காரணம்- இந்த தேர்தலில் கட் வுட்களுக்கு அனுமதியில்லை. இவரைப்போல் தமிழகம் முழுவதும் வேலையிழந்த ஓவியர்கள் பல ஆயிரத்துக்குமேல் என்கிறார். ”  “ பிளக்க்ஸ் பேனர்கள் வந்த்தலிருந்தே எங்கள் வேலை வாய்ப்பு குறைந்துகொண்டே வந்ததது. இப்போது சுத்தமாக அழிந்துவிட்டது.  சுவரில் எழுதுவத்ற்கும் தடை விதிக்கபட்டிருப்பதால் லெட்டர்ரைட்டிங் ஆர்டிஸ்ட்களுக்கும் வேலையில்லை. உடனடியகாக கிடைப்பதால் சுவரில் ஓட்டக்கூடிய பெரிய சைஸ் வினையல் ஸ்டிக்கர்களையும் ஃபிளக்ஸ் பேனர்களையும் இபோது கட்சிகளும் ஆதரிக்க துவங்கியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் அவ்ர்களுக்கு தான் நல்ல காலம் “ என்கிறார் அரசியல் கட்சி ஓவியங்களில் 20 ஆண்டு அனுபவம் உள்ள இந்த ஒவியர்.
 “ ஓவிய நணபர் உண்மை நிலமை தெரியாமல் சொல்லியிருக்க்லாம். இந்த தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் நஷ்டத்தையும் சந்தித்துக்கொண்டிருப்பது  பிளக்க்ஸ் டிஜிடல் ப்ரிண்டிங் துறைதான்.நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்று தமிழகமுழுவதும் 6 ல்ட்சம் பேர்,  சென்னையில் மட்டும் 10 ஆயிரம்பேர் ஈடுபட்டிருக்கும் இந்த துறையினர் தேர்தல் வேலைகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள். தேர்தல் கமிஷனின் கெடிபிகளினால் ஆர்டர் ஏதுவும் வராமல் தவிக்கின்றனர். “ என்கிறார் திரு. எம். ஸ் பஷீர் அஹமது. சில ஆண்டுகளுக்கு முன் மலிவான ரேட்டுகளில் டிஜிட்டல் பிளக்க்ஸ் பேனர்களை தமிழகத்தில் பிரபலமடையச் செய்ததில் இவரது மெகா டிஜிட்டல் நிறுவனத்திற்கு கணிசமான பங்கு உண்டு எல்லா கட்சிகளுக்கும் டிசைன் செய்து ஆல்பமாகவே வைத்திருக்கிறார்கள். தேர்வு செய்தால் மாற்றங்களுடன் உடன்டியாக பேனர்கள் ரெடி..சென்ன நகரில் பல கிளைகளுடன் இயங்கும் இவர்கள் நிறுவனத்திற்கு முந்திய தேர்தலில்களில் கட்சிகளின் தலமையிடத்திலிருந்து பலஆயிரக்கணகான பேனர்கள் த்யாரித்து நேரிடையாக அனுப்ப ஆர்டர்கள் கிடைக்குமாம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த கட்சியும் அணுகவில்லை.வேட்பாளார் அறிவிப்புக்குபின் அந்தந்த பகுதிகளிலிருக்கும் நிறுவனங்களுக்கு வாய்ப்புகிடைக்கலாம் என்று சொல்லும் பஷீர் அஹமது தமிழக டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தின் மாநில் தலைவர்.  “ எதிர்பாரத கெடுபிடிகள். 12X8 என்பது சதாரணமாக தேர்தல் காலங்களில் த்யாரிக்கபடும் ஸைஸ். இது இபோது தடை செய்யபட்டிருக்கிறது. கலெக்டரிடம் வைக்கும் இடம் அனுமதி பெற்றபின் 10X8 தயாரித்து வைக்கலாம். எவ்வளவு இடம் எப்பொது அனுமதிப்பார்கள்,  இது எந்த அளவிற்கு நடைமுறையில் முடியும் என்று தெரியவில்லை. திமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே தலமை அலுவகத்திலுருந்து கட்சி கூட்டணி தலைவர்கள் பட்த்துடன் பொதுவாக ஆதரவு கோரி பேனர்கள் தயாரிப்பார்கள் இந்த முறை தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே விதிமுறைகள் அமுல்படுத்த பட்டதாலும்,, பொது இடங்களில் தேர்த்ல் விள்ம்பரம் தடைசெய்யபட்டிருப்பதலூம் அந்த ஆர்டர்களும் இல்லை. டிஸைனர்களுக்கும், மிஷின்களுக்கும் வேலைகொடுக்கவேண்டுமே என்பதால் ஆட்டோவில் ஒட்டும் சிறிய சினிமா போஸ்டர் ஸ்டிக்கர்களும், ரசிகமன்ற வேலைகளை செய்துகொண்டிருகிறோம்.  சதாரணமாக கிடைக்கும் திறப்புவிழா, கட்சி காரர்களின் இல்ல திருமண விழா ஆர்டர்கள் கூட தேர்தல் காலத்தினால் கிடைப்பதில்லை. அதில் தலைவர்கள் படமிருந்தால் தேர்தல்விதிகளின் படி தவறாகிவிடும் என பயப்படுகிறார்கள்” “ என்கிறார் இவர்.
பிள்கஸ்பேனர் த்யாரிப்பவர்கள் நிலை இது என்றால், காலங்காலமாக பயன் படுத்தும் மீடியமான போஸ்ட்டர்கள்  அச்சிடும் பிரிண்ட்டர்களின் நிலை இன்னும் மோசமானதாயிருக்கிறது.  “ தேர்தல் நேரம் என்பது ஆப்செட் பிரஸ்கார்களுக்கு அதிக பிஸினஸ் தரும் நேரம். ஆனால் இந்த ஆண்டு  8 பகுதிகளாக தயாரிக்கும் பெரிய போஸ்ட்டர்களுக்கு தடை.  அதில்8ல் ஒரு பகுதியான அளவில் சிறிய அளவு போஸ்ட்டர்க்ளுக்கே அனும்தி அதுவும் மீட்டிங் நடக்கும் இடதிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள்ளாக போலீஸ் அதிகாரிகளீடம் ஒரு நாள் முன்  அனுமதி பெற்ற பின்னரே என்கிறது விதி. இந்த நிலையில் பெரிய ஆர்டர்களை எப்படி எதிர்பார்க்கமுடியும். ஒரு சின்ன பிட் நோட்டிஸாக யிருந்தாலும் அதில் அச்சிட்ட பிரஸ்ஸின் போன் நம்பர் இடவேண்டும். மேலும் கட்சிகாரர்கள் சொன்னாலும் நீங்கள் செய்யக்கூடாது என நேரிடையாகவே போலீஸ் உதவி கமிஷனர் எங்களை அழைத்து விதிமுறைகளை சொல்லியிருகிறார்.” “ என்கிறார். டைமண்ட்லித்தோ பிரஸ் நிருவன அதிபர் திரு மோகன் சுந்தர். 18 ஆண்டுகள் அச்சுதொழிலில் இருக்கும் இந்த நிறுவனம் நிறைய தேர்தல்களுக்கு போஸ்ட்டர் தயாரித்து கொடுத்தவர்கள். இந்த ஆண்டும்நிறைய டிஸைன்களுடன் காத்திருந்தவ்ர்கள். ” “போஸ்டர் தொழிலில் தேர்தல் முடிந்தவுடனும் நன்றி அறிவிப்பு போஸ்டர் வேலைகள் வரும். இந்த முறை 1 மாதம் கழித்து ரிஸல்ட் வரப்போதால் எந்த அளவிற்கு அந்த வேலைகள் அச்சகங்களுக்கு கிடைக்கும் என தெரியவில்லை இந்த தேர்தலில்  போஸ்ட்டர் அச்சகங்கள் கடந்த முறைகள் போல பெரும் பொருளீட்ட வாய்ப்பில்லை” “ என்கிறார்.
பிரச்சனைகளில் வாய்ப்பை கண்டுபிடிப்பவன் புத்திசாலி எனறு சொல்லப்படுவது உண்டு. சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி கொடுக்காத கதையாக பணத்தை வாரியிறைக்க கட்சிகள் தயாராகயிருந்தாலும் தடுக்கும் தேர்தல் ஆணையத்தை குறைசொல்லி புலம்பும் இவர்கள் மததியில்  சிவகாசியில் ஒரு சில் அச்சகங்கள் ஓசைப்படாமல் நமது அரசியல் தலிவர்களின் முகங்களை முகமூடியாக் லட்சகணக்கில் தயாரித்து தள்ளிக் கொண்டிருக்கிறது.மேல் நாடுகளில் தேர்தலில் கட்சிகளின் ஆதரவளார்கள் பயன் படுத்தும் முறையிது.தேர்தல் கமிஷன் முகமூடி பற்றி எதுவும் சொல்லாதால் தமிழகத்தில் தயாரிப்பை துவக்கிவிட்டார்கள். இந்திய அரசியல் கட்சிகள் முழுமைக்கும் சிவகாசி இதன் தயாரிப்புகளமானலும் ஆச்சரியமில்லை. இதைபோல திருப்பூரில் ஒரு பிரபலமான கட்சிக்காக் முன்புறம் அதன் த்லைவர் படம்   கட்சியின் சின்னம் பின்னால் கொண்ட காலர் இல்லாத பனியன் டீ சர்ட்டும்களும், சின்னத்துடன் தொப்பிகளும் லட்சககணக்கில் தயாராகிக்கொண்டிருக்கின்றன். தேர்தல் நேரம் நல்ல கோடை காலம் எனப்தால் தொப்பி அணிவதை தடுக்க் முடியாது. மேலும் விதிகளில் தனிநபர் உடைகளுக்கு தடை  ஏதுமில்லையே என்கிறார் அந்த கட்சியின் விளம்பர பொருப்பாளார்.
உடலிலயே பெயிண்ட்டால் சின்னம் எழுதிக்கொண்டு சட்டையில்லமல் நடக்கலாம் என திட்ட்மிட்டிருக்கும் அதிமுக விசுவாசிகள் சிலர் அதை அதன் தலமையலுவலகத்திற்கு அருகில் சமீபத்தில் செய்தும் காட்டினர்.
சாலைசந்திப்புகளில் பிரமாண்ட கட்வுட்கள்,  பத்து அடிக்கு ஒன்றாக பளபளக்கும் டிஜிட்டல் பேனர்கள். தெருமுழுவதும் கட்சிகொடிகள், செவிப்பறையை கிழிக்கும் பிரச்சாரஙகள் இல்லாத ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்க போகிறதா இல்லை க்டைசிநேரதில் கட்சிகள் விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு நமக்கு பழக்கமான காட்சிகளையே காட்டபோகிறார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்

ரம்ணன்.

கொடிகள் கட்டும் “கம்பெனிகள்” “
குடும்பத்தினரை மறந்து கைகாசுபோட்டு டீ யும் பன்னும் சாப்பிட்டு கட்சி கொடிகளை தெருவெல்லாம் கட்டி தொண்டர்கள் தேர்தல் வேலை செய்வதெல்லாம் மெல்ல இப்போது மாறிவருகிறது. இந்த ப்ணிகளை இப்பொது கட்சிகாரகளின் மேற்பார்வையில் பணத்திற்காக  தொழில் ரீதியாக செய்துகொடுக்க எஜென்சிகள் வந்துவிட்டன.
சென்னையின் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் இப்படிபட்ட பணிகளை செய்யும் நிறுவனத்தினரிடம் பேசினோம்.  மறுப்புக்கும் நீண்ட தயக்கதிற்கும் பின்னர் பெயர், படம் கூடாது எனற நிபந்தைனகளுடன் பேசினார் அதன் நிருவனர்.
” “இன்று கட்சிகள் அவ்ர்கள் தொண்டர்களைவிட இந்த வேலைகளை நாங்கள் செய்வதையே விரும்புகிறார்கள். குறித்த நேரத்திற்குள் போலீஸ் அனுமதி வாங்குவதிலிருந்து அப்புறபடுத்துவது வரை எல்லாம் நாங்கள் பொரபஷனாலாக செய்வது தான் காரணம் “ என்று சொல்லும் இவரிடம் 4 லாரிகள், ஒரு குட்டி டிராக்டர் 5 ஆயிரத்துக்குமேல் ஸ்டீல் பைப்புகள் இருக்கின்றன்..  ஒரு கோடவுன் ஒரு ஆபிஸ் என்று கார்ப்ரேட் ரேஞ்சில் இருக்கிறது. எல்லா கட்சிகளுக்கும் வேலை செய்யும் இவர்களை போன்றாவ்ர்கள்  சென்னையையும் அதன் சுற்றுபுறத்தையும் பகுதி பிரித்துகொண்டிருகிறார்கள். ஒருவர் ஏரியாவில் மற்றவர் வேலை செய்வதில்லை.ஒவ்வொரு கட்சிகளிலும் குறிப்பிட்ட சிலர்தான் இவர்களை தொடர்பு கொள்ளமுடியும். தலைவர்கள் பிறந்த நாள், பொதுகூட்டங்கள் பேரணிகள் என ஆண்டு முழுவத்ற்கும்  இவர்களுக்கு வேலையிருக்கிறது ” “முன்போல் மூங்கில் சவுக்குகட்டை எல்லாம் கொடிகளுக்கு பயன் படுத்துவதில்லை. எல்லாமே ஜிஅய்(GI) பைபுகள் தான். நடுவது எடுப்பது எளிது ரோடுகள் பழாவதில்ல. (!) தேவையான் இடங்களுக்கு லாரிகளில் பைப்புகள் இறக்கப்படும். பின்னாலேயே வரும் இளைஞர்கள் டீம் சிலமணிகளில் தரையில் துளையிட்டு பைப்புகளில் கொடிகளை பொறுத்தி நடுவார்கள். வேகமாக் வேலைகளைச் செய்ய டிரில்லர் போன்ற சாதனங்களும் எல்லா கட்சி கொடிகளும் எங்களிடமிருக்கிறது.” “ என்று சொல்லும் இவரது வருத்தம்  தேர்தல் கமிஷனின் விதிகட்டுபாடுகளினால் இன்னும் சில நூறு பேர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டதே எனபதுதான்.






















20/3/11

தமிழக தேர்தல் 2011


தலித் கட்சிகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியா?

ஒவ்வொரு  தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று தலித் ஓட்டு வங்கியை கையில் வைததிருக்கும் கட்சிகள் எந்த கூட்டணியில் இணைகிறார்கள் என்பது. உண்மையிலேயே இந்த தலித் கட்சிகள் கூட்டணிகளின் வெற்றிக்கு ஒரு பெரிய சக்தியாக இருந்து  உதவுகிறார்களா? அல்லது எதிரணியின் ஒட்டுகளைப்பிரிக்க மட்டுமே பயன்படும்பகடைகாய்களாக பயன் படுத்தபடுகிறார்களா?
தமிழக மக்கள்தொகையில் 19% தலித்மக்கள். தேசிய அள்விலான சராசரி 16%தான். ஆனாலும் இங்கு இவர்கள் எந்த ஒரு தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்ததில்லை. தமிழகத்தைவிட 2% மட்டுமே அதிக தலித்மககள் தொகைகொண்ட உத்திரபிரேதசத்தின் அரசியலின் தலையெழுத்தை மாற்றியவர்கள் தலித் மக்கள்.  சுதந்திரம் பெறுவதற்குமுன்னரே பிரிட்டிஷ் அரசிடம் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி நடந்த பூனா  வட்டமேசை மாநாட்டில்  மதுரையிலிருந்து சென்று பங்குபெற்று தனிஓட்டூரிமை, போட்டியிட தொகுதிகள் என்பதியெல்லாம் வலியுறுத்தி சட்டரீதியாக பெற்றதில் தமிழ் தலித்துகளுக்கு பெறும்பங்கு இருந்திருக்கிற்து. ஆனால் அந்த பாரம்பரியங்களெல்லாம் இன்று பழங்கதைகளாகி திராவிடகட்சிகளின் தயவில் தலித் இயக்கங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். 1990களில் மிகப்பெரிய எழுச்சியுடன் எழுந்த தலித் இயக்க்ஙகள் கடந்த 20 ஆண்டுகளில் அதன் தலைவர்கள் தங்களை நிலைநிறுத்திகொள்வதற்க்காக எதாவது ஒரு திராவிட கட்சியுடன் இணைந்துகொள்கிரார்களே தவிர வெற்றிவாய்ப்பை நிர்ணயக்கும் சக்தியாக இருந்த்தில்லை
” “அப்படி ஒரேடியாக சொல்லிவிடுவதிற்கில்லை. கடந்த  சிலதேர்தல்களில் தலித் ஓட்டுகள் கூட்டணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. கடந்த நாடாளூமன்ற தேர்தலில் திண்டுக்கல் கங்கிரஸ் வேட்பாளார் சித்தன் அந்த தொகுதிக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளார் அந்த பகுதியில் அதிகம் இருக்கும் கொங்கு வேளாளர் இனத்தவ்ர். அதனால் வெற்றிவாய்ப்பு அவருக்குதான் அதிகம் என் கணிக்கபட்டிருந்த்து. ஆனால் அந்த தொகுயின் தலித் ஒட்டுகள் 90000. விடுத்லைசிறுத்தைகளின் உதவியால் அது சிதறாமல் காங்கிரசுக்கு கிடைத்து சித்தன் வெற்றிபெற்றார். இதேபோல்தான் கருர், மதுரை தொகுதிகளிலும். நிச்சியமாக விடுத்லை சிறுத்தைகள் வெற்றிவாய்ப்பை உருவாக்கும் சக்திபெற்ற்வர்கள் தான் என சொல்லுகிறார் மூத்த பதிரிகையாளாரும், அரசியல் விமர்சகருமான திரு சோலை.
” “ஒருசில இடங்களில் கிடைத்த அரசியல்வெற்றிகளினால் இவர்களை ஒரு வலிமையான சக்தி என்று சொல்லிவிடமுடியாது. அடிப்படையில் ஒரு வலிமையான் சக்தியாக உருவாகியிருக்கவேண்டிய இவர்கள் சிலசீட்டுகளுக்காகவும் அரசியல் லாபங்களுகாகவும்  திமுகஅதிமுக கட்சிகளின் தயவை நாடி கடைசியின் அவர்களின் மேலாதிக்கநிலையினால் தங்கள் தனித்துவத்தை இழந்துவிட்டார்கள். விடுதலைசிறுத்தைகளும்சரி, புதிய தமிழக கட்சியும் சரி தங்கள் இலக்குகளான தலித்துகளுக்கு சமுக நீதியும் உரிமையையும் பெற்றுதருவதை மறந்து தமிழன பிரச்சனைகையில் எடுத்துகொண்ட அரசியல் வாதிகளாகிவிட்டனர். இனி இவர்கள் எதாவது ஒரு திராவிட கட்சியை சேர்ந்த அணியில் தான் இருக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் “ என்கிறார் திரு ஹ்யூகோ காரின்ஞ். (Hugo Gorringe, Lecturer in Sociology at the University of Edinburgh.) இவர் எடின்பர்க் பல்கலைகழகத்தில் சமுகவியல் விரிவுரையாளார். தமிழகதில் 3ஆண்டுகள் தலித்துகளுடன் தங்கி அவர்கள் பற்றி ஆராயந்து  முனைவர்பட்டம் பெற்றவர். தலித்கள் பற்றி 4 புத்தகங்கள் எழுதியிருப்பவர். தலித்கள் பற்றிய அத்தனைவிஷ்யங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அரசியல் கட்சிகளுடன் இணைந்தாலும் தலித்துகள் அந்த அணியில்  ஒரு வலிமையான அழுத்தம் தரும்  ஒரு குழுவாக, சக்தியாக இல்லாதால் எதுவும் சாதிக்கமுடியவில்லை என்கிறார்.
அரசியலில் சாதித்தது கிடக்கட்டும் தலித்துகளுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ”துவக்க கால்ங்களில் காங்கிரஸுக்கும் பின்னர் திராவிடகட்சிகளுக்கும் ஆதரவு அளித்துவந்த தலித்துகள் தனி இயக்கஙகள் எழுந்தவுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருந்து ஏமாற்றமடைந்துவிட்டனர்.இன்னும் கிராமடீகடைகளில் இரட்டை டம்பளரிலிருந்து எல்லா கொடுமைகளும் தொடர்கிறது. அந்த அவலங்களை எதிர்த்துபோரடி வெற்றிபெறமுடியாதநிலையில் இருக்கிறார்கள் இந்த தலைவர்கள் என்கிறார் டாக்டர் பிராஸாத். இவர் தீண்டாமை தடுப்பு சட்டதினைபலபடுத்தும் தேசியகூட்ட்மைப்பின் தலவர். இவர்து குழு கடந்த பிப்ரவரி 25ல்வெளியிட்டிருக்கும்  ஒரு அறிக்கை  திடுக்கிடவைக்கிருக்கிறது. இன்னும் 80% தலித்துகள் கிராமங்களில் குறைந்தபட்ச வசதிகூட இல்லாத வாழக்கை, 50% மேல் படிப்பறிவில்லாத நிலை என்று அவதிப்படுகிறார்கள். பஞ்சாயத் ராஜ் சட்டதின் கீழ் அளிக்க் பட்ட உரிமைகள் கூட மறுக்க்படுகின்றன.  கடந்த 20 ஆண்டுகளூக்குமுன் தமிழகத்தில் 28 மாவட்டங்கள் தலித்துகளுக்கு அநீதி இழைக்கபடும் மாவட்டங்களாக அடையாளாங்காட்டபட்டிருந்தது. இது இன்னும் அப்படியே நீடிக்கிறது.. நீண்டநாட்களுக்கு முன் இந்த மாவட்டங்களை கண்காணித்து  முதலவருக்கு அறிக்கை அனுப்ப ஒரு 5வர் குழு அமைக்கபட்டது. அவர்கள் இன்னும் ஒரு அறிக்கைகூட தரவில்லை. அரசும் அறிவித்தபடி இதற்கு ஒரு ஸ்பெஷல் ஆபிஸர் போடவில்லை.  குறைந்த பட்சம் இவைகளுக்காகாவது தலித் தலைவர்கள் போராடியிருக்க்வேண்டும்” “ என்கிறார். இவர்.
கடந்த ஆண்டு ஜுன் ஜூலை மாதங்களில் உத்தபுரத்தில் தீண்டாமையின் சின்னமாக் நின்றுகொண்டிருந்த சுவரை இடிக்கும் போராட்டத்தினை முன்னின்று நடத்தியது மார்க்ஸ்ஸிஸ்ட் கம்னியூஸ்ட்கட்சியினரே தவிர த்லித் இயக்க்ங்கள் இல்லை எனபதையும் சுட்டிகாடுகிறார் இவர்.
கடந்த 20 ஆண்டுகளில் படித்த தலித இளைஞ்ர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி எற்பட்டிருக்கிறது. தங்கள் இனத்தை அடையாளங்காட்டும் கட்சியைவிட ஒரு பிரபலஅரசியல் கட்சியில் நேர்டியாக பங்குகொள்வது பலனளிக்கும் என் எண்ணது வங்கியிருக்கிறார்கள். இதை விஜயகாந்தின் கட்சியில் பார்க்கமுடிகிறது. வருங்காலங்களில் தலித் இயக்கங்கள் அரசியலைவிட்டுவிட்டு சமூக விழிப்புணர்ச்சியியக்கஙளானால் கூட வியப்படையவதிற்கில்லை. என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளார்.
தேர்தலில் இவர்கள் சக்தியாக் இருப்பார்களாக் மாட்டார்களாக எனபதை ஆராய்சியாளார்களுக்கு விட்டுவிட்டு, சந்தேகபட்டு வாய்ப்பை கெடுத்துகொள்வானேன் என்று  மளமளவென காய்களை நகத்ததுவங்கிவிட்டனர் கூட்டணியினர். ராசாவிற்கு எதிராக விடுத்த அறிக்கைகளினால் எங்கே தலித்களை பகைத்துகொண்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் அதிமுக தனது அணியின் முதல் தொகுதி உடன்பாட்டை தலித் கட்சிகளுடன் செய்துகொண்டது அதிமுக டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளையும், செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
அதுமட்டுமில்லை பிராசரமும் தலித் தொகுதிகளிடமிருந்து  துவங்கும் என அறிவித்திருக்கிற்து அதிமுக. தமாதமானால் எங்கே எதாவ்து 3வது அணி எழுந்து அதில் போய் சேர்ந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்  திமுக விடுதலைசிறுத்தைகளுக்கு சிவப்புகம்பளம் விரித்து 10 சீட்டுகளுடன் வற்வேற்றுவிட்டது. தேர்தலின் வெற்றிகளை தீர்மானிக்கும் சக்தியாகயிருக்க்போகிறார்களோ இல்லையோ கூட்டணிகளின் தலைமைகட்சிக்கு நிச்சியமாக பயம் எற்படுத்தும் சக்தியாகதான் தலித் கட்சிகள் இருக்கின்றன..

1
திருமதி சிவகாமி (முன்னாள் IAS அதிகாரி- தலைவர் சமூக சமத்துவ படை)

உத்திரபிரதேசத்தைப் போல தமிழகத்தில் தலித்சமுகத்தினர் ஏன் ஒரு வலுவான அரசியல் சக்தியாக எழமுடியவில்லை?
தமிழக அரசியலை சற்று ஆழ்ந்துபார்த்தால் துவக்கதிலிருந்தே இங்கு தலித்துகளும் அவர்களின் பிரச்சனைகளும் தனியாக இனங்கண்டு கொள்ளபடாமல் பார்பனரல்லாதார் பிரச்சனையோடு இணைத்துதான அடையாளாங்காட்டபட்டிருகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளில் தலித்துகளுக்கு பிரதிநித்துவம் கொடுப்பதாக சொல்லி அப்படி கொடுக்கபட்டவர்களின் மூலம் தங்கள் கட்சியை பலபடுத்தினார்களே தவிர தலித்துகளை தலைவர்களாக வளரவிடவில்லை. காங்கிரஸ். திராவிட கட்சிகளில் தலித்களின் பிரநிதிகளாக அறியபடுவர்கள் தலித்களுக்காக எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமில்லை செய்ய முயற்சித்தால் கட்சியில் அவர்களுக்கு அந்த கட்சியில் முக்கிய இடமில்லை எனபது தான் உண்மை நிலை.கட்சியில் தங்களுக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்துகொள்ள, தலமையை திருப்திபடுத்தவேண்டிய கட்யாய சூழலில் தாங்கள் தலித்களின் பிரதிநிதியாகதான் இந்தகட்சியில் இருக்கிறோம் என்பதையே அவர்கள் மறந்து போனார்கள். தாங்கள் அரசியல் கட்சிகளினால் வஞ்சிக்கபட்டதை  தாமதமாக புரிந்துகொண்டதமிழக தலித் மக்கள் தஙகளுக்கு என அரசியல் கட்சியின் அவசியத்தை இப்போது உணர்ந்திருக்கின்றனர். அது ஒரு வலுவான அரசியல் சக்தியாக எழ  இன்றைய பணபலம், ஆதிக்க அரசியல் சூழலலில் இன்னும் காலம் பிடிக்கும்.
அடிபடையான இலக்குகள்  ஒன்றாகயிருக்குபோது ஏன் இத்தனை பிரிவுகள்? ஒரு தலைமையின் கீழ் வலிமையான இயக்கமாக வாய்புகள் இல்லையா?
பிரிவுகளாக இருந்து இயங்குவதில் என்ன தவறு? எந்த அணியானாலும் கிடைக்கும் வாய்ப்புகளுடன் வளர வேண்டிய சூழ்நிலை இன்று. குறைந்த பட்ச திட்டம்,  அதிகாரத்தில் பங்கு என கேட்ககூடிய நிலையில் இன்று தலித்கட்சிகள் இல்லாமலிருக்கலாம், ஆனால் அந்த நிலைக்கு வளர இம்மாதிரி அணிகளிலிருக்கும்  சிறு கட்சிகளாக தலித்துகள் இருப்பது உதவுமே” “


2
தமிழகத்தில் தலித் சமுதாய மக்கள் மூன்று பிரிவுகளாகயிருக்கிறார்கள். தென்மாவட்டங்களில்
தேவந்ததிரகுல வேளார்கள் முதல்பிரிவினர்.அடுத்தது ஆதிதிரவிடர்கள் பின்னர்
அருந்த்தியினர்.வடமாவட்டங்களில் 90%  ஆதிதிராவிட்ர்கள். இந்த சமுதாய மக்களிடம்  அவர்கள் சமுகம் சார்ந்த அரசியல் கட்சிகளான் விடுதலைசிறுத்தைகள், அல்லது புதியதமிழகம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. முந்தைய தேர்தல்களில் இந்த தொகுதிகளில் வெற்றியை நிர்ணயத்த ஒட்டுகளின் எண்ணிக்கை இந்த சமுகத்தினர் ஓட்டு எண்ணிக்கையை நெருங்கியிருந்ததால் கூட்டணிகள் இந்த கட்சிகளை தங்கள் அணியில் அதிக அக்கரையுடன் இணைத்துகொள்கின்றன்ர். தமிழக ஒட்டு வங்கியில் இவர்களது 18% என கணக்கிடபடிருக்கிறது
கடந்த 2006 தேர்தலில் திமுக பெற்றது26.46% வாக்குகள். இது அதிமுக பெற்ற ஒட்டுகளின் % விட(32.64%) குறைவு என்றாலும் அவர்களைவிட 35 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்ததற்கு கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரின் ஒட்டுகளும் ஒரு முக்கிய காரணமாக கருதபட்டது.



3
தலிதமக்களுக்குஅம்மா அளித்த அங்கீகாரம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக முதலில் தலித் கட்சிகளுக்கு புரட்சித் தலைவி தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். இதை, தலித் சமுதாய மக்களுக்கு அம்மா அவர்கள் அளித்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறோம். தமிழகத்தில் இப்போதுள்ள தலித் விரோத அரசை அகற்ற தமிழ்நாட்டில் உள்ள அடித்தளத்து மக்கள் அனைவரையும் அதிமுகவுக்கு ஆதரவாக அணி திரட்டிட எங்கள் கட்சியினர் மிகக் கடுமையாக உழைப்பார்கள். தேர்தலில் அதிமுக அணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கப் போவது உறுதி
  செ.கு தமிழரசன்  தலைவர் இந்திய குடியர்சுகட்சி

4
                                                        தொகுதி  பங்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது-கிருஷ்ணசாமி:

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவதற்கு புதிய தமிழகம் பாடுபடும்

கிருஷ்ணசாமி  தலைவர் , புதிய தமிழகம்

5/12/10


எண்ணங்களின் வரைபடம்

எந்த ஒரு வெற்றிக்கும் பின்னால் திறமையான திட்டமிடலிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும்  தெரிந்த விஷயம். திட்டமிடுவதில்  வெறும் மனத்தளவில், நெருங்கியவர்களின் ஆலோசனையின்படி,  வரிசைப்படுத்தி ஒரு தாளில் அட்டவணையிடுவது  போன்ற பல வகைகள். சமீப காலங்களில் “”  (mind maping) என்ற எண்ணங்களை வரைபடமாக எழுதிக்கொள்வது என்ற முறை பயன் படுத்தப்படுகிறது. பயன் படுத்தி வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால் இந்த முறை குறித்து அதிகளவில் புத்தகங்கள் வந்துகொண்டிருகின்றன. சில அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டது.

எண்ண ஓட்டங்களை வெறும் வரி வடிவமாக மட்டுமில்லாமல், ஒரு வரைபடமாக வடிவமைத்தால் முளையில் ஆழமாக பதிந்துவிடும்.  அது செயலாற்ற மிக உதவியாகயிருக்கும் என்பது இந்த முறையின் அடிப்படை தத்துவம்.  சிறந்த ஒவியர், கட்டிடகலைநிபுணர், இயந்திர வடிவமைப்பாளார் என்று பலகலை மேதையாக அறியபட்டிருக்கும் லீயோனார்டாவின்ஸி,  படைப்புகளின்  பல குறிப்புகளில் பல  இந்த முறை பயன் படுத்தப்பட்டிருப்பதை  இன்று பார்க்கமுடிகிறது. இதைப்போல் 17ம் நூற்`றாண்டில் வாழ்ந்த மேதை கலீலியோ, மற்றும் “குவாண்டம் எலெட்ரோ டயனமிஸம்” என்ற பெளதிக தத்வத்தை உருவாக்கி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஃபெயின் மென் , விஞ்ஞானி, ஆல்பர்ட் அயின்ஸ்டின் போன்ற பலரும் பயன்  படுத்தியிருக்கும் இந்த முறையை பற்றி ஆராய்ந்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர் திரு. டோனி புஸ்ஸன்.(tony buzan) 100க்கு மேற்பட்ட நாடுகளில் 30 மொழிகளில் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கபடுகிறது. மைக்க்ராஸாப்ட், போயிங், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகயிருக்கும் இவரது சமீபத்திய புத்தகத்தில் இந்த  மைண்ட் மாப்பிங்கை  எப்படி தனி நபர் மேம்பாட்டிற்கு பயன் படுத்தமுடியும் என்பதினை விவரிக்கிறார்.
 ஒரு நகரின் பல பெரிய வீதிகளும்  சிறிய கிளைதெருக்களும் வளைந்து நெளிந்து நகரின்  மத்திய பகுதியை அடைவதைப்போல,    நமது எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அடையும் பல வழிகளாக     வரைபடமாக்கி கொள்ளும்  பயிற்சி,    எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுகொள்ள, திட்டமிட, பல விஷயங்களை முளையில் சேமித்துக்கொள்ள அவற்றை வகை பிரித்துக்கொள்ள, நமக்கு வேண்டிய பொழுது அவற்றை உடனடியாக நினைவிற்கு கொண்டுவர, என பல வகையில் உதவும். மாணவர், நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியவர், பெரிய நிறுவனத்தின் பல பிரிவுகளை நிர்வகிக்கும் நிர்வாகி,, ஒரு கூட்டத்தை அல்லது நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் இப்படி எவரும்   தங்கள் தேவைக்கேற்ப பயன் படுத்த முடியும்.
ஒரு நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியிருந்தால் இந்த முறையை நீங்கள்  எப்படி பயன் படுத்தலாம்?
முதலில் எதெல்லாம் அவசியம் என ஒரு தாளில் எழுதுங்கள். இது வரிசைப்படி அமைய வேண்டியதில்லை. தோன்றும் போதெல்லாம் தோன்றுவதயெல்லாம் குறித்துகொண்டேவாருங்கள்.தேர்விற்கு போகவேண்டிய நிறுவனத்தைப் பற்றிய விபரங்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய விபரங்கள், போட்டியாளார் பற்றிய தவல்கள் இப்படி எல்லாச் செய்திகளையும் திரட்டி குறித்துக்கொள்ளுங்கள்.
   எல்லா நேர்முகத்தேர்விலும் எந்த மாதிரி கேள்விகள் கேட்டகப்படும் என்பதை எளிதாக யூகிகக்கமுடியாது என்பது உண்மையானலும் இந்த 4 கேள்விகள் பல மாறுபட்ட வடிவங்களில் எல்லா  நேர்முக தேர்வுகளிலும் கேட்கப்படுகிறது.
1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
இதைத் தவிர இந்த 5 கேள்விகளும் அனேகமாக எல்லாயிடங்களிலும் கேட்கபடுகிறது.
1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்?
இந்த கேள்விகளை  முக்கிய வீதிகளாகவும் நீங்கள் சேகரித்த தகவல்களை  சிறு துணை வழிகளாகவும்அமைத்து வரைபடத்தை அமைக்க வேண்டும்
எப்படிச்செய்வது?
ஒரு வெள்ளைதாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை குறுக்கு வசத்தில் (Landscape size) பயன் படுத்தவேண்டும் (இது முக்கியமானது)

நீங்கள் பங்கேற்கபோவது ஒரு ஆடை வடிவமைக்கும் நிறுவனம்  என்றால் அதன் மையப்பகுதியில் ஒரு வட்டமிட்டு அதில் ஒரு ஆயுத்த ஆடையையோ, அல்லது அந்த கம்பெனியின் சின்னத்தையோ வரைந்துகொள்ளுங்கள். அந்த வட்டத்தை சுற்றி வளைந்த பாதைகளாக கேள்விகளை வண்ண மார்க்கர்களை பயன்படுத்தி எழுதுங்கள்.முக்கியமாதற்கு அழுத்தமான வண்ணங்களைப் பயன் படுத்துங்கள்..சேகரித்த தகவல்களை  அலசி அது எந்த கேள்விக்கு பொருந்துமோ அங்கே கிளைத்தெருவாக  வரையுங்கள். இந்த பயிற்சியின் போது உங்களுக்கு புதிய கேள்விகள் தோன்றலாம். இருக்கும் விஷயங்களுக்கு கேள்விகள் இல்லாமலிருக்கலாம்.அப்போது அவசியமானால் கேள்விகளை மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது எதிர்பார்க்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் தயாரித்துவிட்டீர்கள்.ஒருமுறைக்கு இருமுறை பரீசலனை செய்து அவசியமான மாற்றங்கள் செய்து ஒரு தெளிவான பிரதியை வண்ணங்களில் தயாரித்துக்கொள்ளுங்கள்.
ஏன் வண்ண மார்க்கர்கள் பயன்படுத்தவேண்டும்?
மனித முளையின் இடதுபுறம் வார்த்தைகளும் வலதுபுறம் வண்ணங்களும் பதிகிறது,இரண்டும் இணைந்து செயல்படும்போது இரண்டும் மறக்காமல் நினைவிற்கு வரும் என்பது ஆராய்சிகளின் முடிவு. இப்போது இந்த வரைபடத்தை மனதில் நிறுத்தும் பயிற்சியைத் துவக்குங்கள். தினசரி அடிக்கடி பார்த்துகொள்ளுங்கள். கேள்விபாதை, பதில் கிளைபாதை எல்லாம் மனதில் பதிந்துவிடும். தேர்வில் அமர்ந்திருக்கும்போது கண்முன்னே வரைபடம் விரியும் அருகருகே பல விஷயங்களை குறித்திருப்பதால்  கேள்விகள் மாறினாலும் பதில்கள்  பளிச்சென்று நினைவிற்கு வரும்.
ஒரு முறை இந்த பயிற்சியை செய்துபழகிவிட்டால் இதை மற்ற பல விஷயங்களுக்கும் எளிதாக பயன் படுத்தலாம். முயற்சிசெய்து பாருங்களேன்.
 இணைத்திருக்கும் மாதிரிப்படத்தைப்போல வண்ணத்தில் இந்த கேள்விகளுடன் படம் எழுத வேண்டும்

1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
     -அனுபவம்
     -ஆர்வம்
    - தகுதி
    -சொந்த ஊர்.           
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
அதிக ஆர்டர்கள்
புதிய வாடிக்கையாளர்கள்
புகார் இல்லாத சேவை
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
-ஆர்வமிக்கவர்
-எளிதில் கோப படாதவர்
-நட்பாக பழகுபவர்
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
கவரும் உருவம்
என் அனுபவம்
திறமையில் நம்பிக்கை
நிறைய தொடர்புகள்

1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
படிப்படியான பதவி உயர்வு
ஒரு கிளயின் முதல் நிலை மேலாளர்
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
பலம் நிறைய நண்பர்கள்
பலவீனம்=முறயான மார்கெட்டிங் பட்டமில்லாதது
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
குடும்பம்
படிப்பு
முன் அனுபவம்
தொடர்புகள்
ஆர்வம்
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
திறமை மதிக்கபடவில்லை/எற்ற வேலையில்ல
நிர்வாக மாற்றத்தினால்

5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்
கடந்த ஆண்டின் சாதன
ISO தர சான்று பெற்ற விபரம்
புதிய கிளைகள்திறப்பு
வேகமாக வளரும் நிறுவனம்
வெளிநாட்டு ஒப்பந்தம்
            

21/11/10


இரண்டு கார்கள்

கார் 1

80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ஆபரணகற்கள் பயன் படுத்தி 15 பேரின் உழைப்பில் ஒரு தங்க நானோ காரை டாடா குழுமம உருவாக்கியிருக்கிறது.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய பாணிநகைவடிவங்களுடன் இடம்பெற்றிருக்கும் இந்த கார் முகப்பில் தோகை விரித்தாடும் வண்ண மயிலுடன் ஜொலிக்கிறது. காரின் வெளியே மட்டுமில்லாது  உள் கைப்பிடிகள் ஸ்டீரியங், கியர், டாஷ்போர்ட் எல்லாம் தங்கம். வந்த 20 டிசைன்களில் 3 தேர்ந்தெடுக்கபட்டு அதை மக்களிடம் ஓட்டுக்குவிட்டு இறுதியில் தேர்வான இதை வடிவமைத்த 5வர் குழுவில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். டாடா குழுமத்தின் ஒரு அங்கமான கோல்ட் பிளஸ் என்ற தங்க நகைப்பிரிவிற்காக தயாரிக்கபட்டிருக்கும் இதன் மதிப்பு 22 கோடிருபாய்கள்.  இந்தியாவின் மிக குறைந்த விலை கார் நானோ.அந்த 2 லட்சரூபாய் காரை விலையுர்ந்த காராக்கி விற்பனைக்கு அல்ல விளமபரத்திற்கு மட்டும் என்றும் யாரும் பயன்படுத்தபோதில்லை எனறும் அறிவித்திருக்கிறார்கள்.

கார் 2


ஒரே ஒருவரின்  பயன்பாட்டிற்காக ஒரு புதிய கார்  பலகோடி மதிப்பில் வாங்கபட்டிருக்கிறது.  முன்னாள் மன்னர்கள் பாரம்பரியப்படி 4 குதிரைகள் இழுக்கும் சாராட்டில் இன்றும் முக்கிய விழா நாட்களில் வரும் இந்திய குடியரசு தலைவர்கள் நீண்ட நாட்களாக ப்யன்படுத்திவந்தது தேசிய காரான அம்பாஸிடர். 8 ஆண்டுகளுக்கு முன் அது வெளிநாட்டு காராயிற்று. அது இப்போது மாற்றபடுகிறது.
உலகின் மிகபாதுகாப்பான காராக கருதப்படும் மெர்சிடீஸ் பென்ஸ் கார் S600L   ஜெர்மனியிலிருந்து நமது குடியரசுதலைவரின் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.  துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத டயர்கள் வெடித்தாலும் நிற்காமல் ஓடக்கூடிய, விஷவாயு பரவினால் உடனே ஆக்சிஜன் நிரம்ப இப்படி பல வசதிகள்.  கார் தேர்ந்தெடுத்தபின் ஒராண்டாக பாதுகாப்பு அதிகாரிகளினால் பலகட்டங்களில் பாதுகாப்பு அமைப்புகள் சோதித்து பொருத்தபட்ட  இந்த காரை குடியரசு தலைவர் மட்டுமே உபயோகிக்க முடியும். விலையைம் மொத்த செலவையும்  ராணுவம் செய்திருப்பதால் தகவல் அறியும் சட்டத்தில் கூட அதை அறிய முடியாது. 6 கோடியிலிருந்து 8 கோடிக்குள் இருக்கும் என வல்லுனர்கள் மதிப்பிடுகிறார்கள்.  உள்ளே குடியரசுதலைவர் உடன் வரும் விருந்தினருடன் முகம் பார்த்து பேச வசதியாக சீட்டுகளை திருப்பிகொள்ளும் வசதிகளுடனும், வீடியோகான்பிரன்ஸிங் வசதியுடனும்  அமைக்கபட்டிருக்கும் இந்த காரில் வெளியே இருப்பவைகளை பார்கக தனி வீடியோ வசதிகள். பேசப்படுவது  ஓட்டுபவருக்கு கேட்க முடியாத வசதிகள் எல்லாம்.


கார்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியில்   முதலிடத்திலிருந்தாலும்    நாட்டின் தலவருக்காக கார் இறக்குமதி செய்யும்,   விளமபரத்திற்காக மட்டுமே ஆடம்பரமாக தஙகத்தில் கார் தயாரிக்கும்  நாடு இந்தியாவாகதானிருக்கும். இந்த நாட்டில் தான் , கடனில்  கார் வாங்கிய சாமனியன்  தொடர்ந்து உயரும் பெட்ரோல்விலை, பராமரிப்புசெலவு, வங்கிகடனின்வட்டிவீதம் போன்றவைகளை சமாளிக்க திணறிக்கொண்டிருக்கிறான்.

14/11/10

அழிவின் விளிம்பில் எழுந்த புரட்சி.



சி

 

னந்து சீறி எழுந்த அந்த ஆழிப்பேரலைகளில் சிக்கி அழிந்து கொண்டிருந்தது ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை நகரமான  புக்கூஷிமா. மனிதர்கள் வீடுகள்கார்கள்சாலைகள்பாலங்கள் எல்லாம் கசக்கிபோட்ட காகிதங்களாக  சில நிமிடங்களில் கடல்அலைகளில் மிதந்த கோரத்தை உலகின் அத்தனை தொலைகாட்சிகளும்  ஒளிபரப்பி கொண்டிருந்தன.  அச்சத்துடனும் அனுதாபத்துடனும் பார்த்துகொண்டிருந்த பலகோடி பேர்களில் அந்த ஜெர்மானிய பெண்மணியும் ஒருவர். இரவில் தொடர்ந்து வந்த டிவி செய்திகளில் அந்த ஜப்பானிய நகரிலுள்ள அணு மின் உற்பத்தி உலைகளின் கூரை ஒன்று வெடித்ததையும் எந்த நிமிடத்திலும்  மற்றவைகள் வெடித்து அணுக்கதிர்கள் பரவும் அபாயமிருப்பதையும்அதை தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பது காட்டபட்டவுடன் “ காலையில்  அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் “ என உதவியாளாரிடம் சொல்லிவிட்டு தனது நூலகத்தில் அணு உலைகளில் பாதுகாப்பு ப்ற்றிய புத்தகங்களை தேட துவங்குகிறார்.
அவர் ஜெர்மானிய அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel)

 “ரஷ்ய நாட்டின் செர்னோபைல் (Chernobyl) நகரில்  நடந்த அணு உலை விபத்துகள் மனித தவறினால் நிகழந்தவை,   அணுஉலைகளில் விபத்து ஏற்பட 0.5% கூட வாய்ப்பில்லை அணு மின் உற்பத்தி பாதுகாப்பானது போன்ற நமது  நம்பிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும். இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் இந்த மாதிரி விபத்துகளிலிருந்து அணு உலைகளயும் அதன் அழிவில் எழும் பின்  விளைவுகளயும் யாரலும் தவிர்க்க முடியாது.  எனவே நமது மின் அணு உலைகளை மூட உத்திரவிடப்போகிறேன்.  அணு மின் சக்க்திக்கு மாற்றான எரிசக்தி   அதற்கான செலவு பட்ஜெட்உலைகளை படிப்படியாக மூடும் திட்ட அட்டவணை போன்ற பணிகளுக்கு அமைச்சகங்கள் முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஒரு வரைவு திட்டத்தை அடுத்த  4 நாள் கூட்டதில் விவாதிக்க வேண்டும்“ அந்த காலை நேர கூட்டதில் இந்த அதிரடி அறிவிப்பை கேட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் திடுக்கிட்டு அதிர்ந்து போனார்கள். உடனடியாக எப்படி முடியும்?. மாற்று சக்திகான பெரும் செலவை எப்படி சமாளிபது?, எனற சந்தேகங்களை எழுப்பிய  அதிகாரிகளுக்கும்,  அடுத்த மாதம் சில மாநிலங்களில் தேர்தல்  நடக்க இருக்கும் நேரத்தில் இப்படி பட்ட அறிவிப்பு கட்சியையின் செல்வாககை குறைக்கும் என்று  சொன்ன கட்சி  அமைச்சர்களுக்கும் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) சொன்ன பதில் ” “வருங்காலத்தில் இத்தகைய பேரபாயங்களிலிருந்து ஜெர்மனியார்களை காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது எனபதை மறக்காதீர்கள் “ எனபதுதான். கட்சிகாரகளின் பயத்தில் அர்த்தமிருந்தது. காரணம் கடந்த ஆண்டு இதே அதிபர் தான் உற்பத்திய துவக்கிய 8 ஆண்டுகளுக்கு பின் மின் அணு ஆலைகளை மூடி விடவேண்டும் என்ற விதியை  தளர்த்தி 12 ஆண்டுகளுக்கு என நீடித்தார்.. இருந்தாலும் அமைச்சரவை கூட்டதில்  சொன்னபடியே  ஓரே வாரத்தில் அறிவித்து  அதே நாளிலியே 4 அணு மின் உற்பத்தி ஆலைகளை மூடவும் உத்திரவிட்டார்.

 ஜெர்மனியின்  பல பகுதிகளில் 17 அணுமின் உலைகள் இருக்கின்றன   நாட்டின் தொழில் நகரங்களுக்கு மின்சாரத்தை தருபவை அவை. தொழிற்கூடங்கள் நிறைந்த   ஒரு நாட்டில் அதுவும் மொத்த மின் உற்பத்தியில்  28% த்தைதரும் மின் உலைகள மூட முடிவெடுக்க  துணிச்சல் வேண்டும். அதிலும்  அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) எடுத்தது மிக துணிச்சலான முடிவு.   ஏன் எனபதை தெரிந்து கொள்ள ஜெர்மனியின் இன்றைய அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.
 ஜெர்மனியில் இப்போது ஆட்சியிலிருப்பது ஒரு 3 கட்சி கூட்டணி.. நமது நாட்டைபோலவே  கொள்கையளவில் சில அடிப்படை வேறு பாடுகளிலிருந்தாலும் ஆட்சியில் ஒருங்கிணைந்திருக்குக்ம் கட்சிகள் இவை. இதில் அதிக  பாரளமன்ற  உறுப்பினர்களை கொண்டது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) லின் கிறஸ்டியன் டெமாகிரடிக் யூனியன் Christian Democratic Union கட்சி. ஜெர்மானிய அரசியல் சட்டபடி பராளூமன்றதின் மொத்த உறுப்பினர்களில் பெறுமானமையானவர்களின் ஒட்டை பெறும் ஒருவரைத்தான்   தலைவர்  நாட்டின் அதிபராக (Chancellor of Germany)  அறிவிப்பார். பிரதமரை போல அதிகாரம் பெற்ற இவர் தான் மந்திரிசபையை அமைக்கமுடியும். இந்த முறையினால் அதிக உறுபினர்களை பெற்ற கட்சியாக யிருந்தாலும் பாராளுமன்றத்தில்  அதிபர் தேர்தலில் 50%  எம் பி களின் ஓட்டுகளை பெற கட்சிகளின் கூட்டணி தேவை  இவர் அதிபராக உதவியிருக்கும் அந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்று இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்காவிட்டால்செயல்படுத்த முடியாது .பிடிவாதமாகயிருந்தால் அதிபர் பதவியுடன் ஆட்சியும்  பறிபோகும் அபாயமும் இருந்த  சுழ்நிலையிலும் இப்படி ஒரு முடிவை அறிவித்திருந்தது இவரது மன உறுதி அணுசக்தியைப்போல வலிமையானது என்பதை காட்டியது.
 ஜப்பானில் நிகழந்த அணு உலைவிபத்தினால் மட்டும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) அதிபர் இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு சிறிய கிராமத்தில்  கிருத்துவ பாதிரியாரின் மகளாக பிறந்த இவர் கஷ்ட்டபட்டு படித்து கல்லுரரியில் ரசாயனத்தில் பட்டபடிப்பும்பெளதிகத்தில் முதுகலையும் பின்னர் அதிலேயே முனைவர் பட்டமும் பெற்று. பல்கலை கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். போதித்த பாடம் அணுசக்தி. அதனால் அதன் வீரியமும்வீபரிதமும் நன்கு தெரியும். ஒருங்கிணைந்த ஜெர்மெனி உருவான் காலகட்டதில் 1989ம் ஆண்டில் ஆசிரியர் பணியிலிருந்து அரசியலுக்கு வந்து கட்சியில் மளமளவென் வளர்ந்து கட்சியின் செய்லாளரனவர். 2005ல் முதல் முறை அதிபர் தேர்தலில் வென்று ஜெர்மனியின் முதல் பெண் அதிபர் ஆனார். 2009ல் தேர்தலில்  கூட்டனியின் கட்சிகள் மாறினாலும் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட இவர்  ஐரோப்பிவின் செல்வாக்கு பெற்ற பெண்மணிகளின் பட்டியலில் முதலிடம் பெற்றவர்.  ஜெர்மன் மொழியை தவிர ரஷ்யன்,பிரெஞ்ச்,ஆங்கிலம் சரளமாக பேசும் இவர் எப்போதும் தன் நிலையை தெளிவாக உறுதியாக சொல்லும் திறமையான பேச்சாளார்.. கடந்த ஆண்டு நேரு நினைவு பரிசு பெற இந்தியாவிற்கு வந்திருக்கிறார்,இந்த 56 வயது அதிபர்.


தனது  கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அணுஆலைகள் அகற்றபடவேண்டியதின்  முக்கியததுவத்தை விளக்கிய 15 மணிநேர ஆலோசனை கூட்டத்திற்கு பின்  அவர்களின் ஒப்புதலுடன் சட்ட வடிவாகவே இந்த அறிவிப்பு வெளியானது. ஜெர்மனியின்  எல்லா அரசியல் கட்சிகளிலும். பேராசிரியர்கள்முன்னாள் அரசு அதிகாரிகள்,பத்திரிகயளார்கள்  என ஒரு அறிவுஜீவிகளின் கூட்ட்மே இருக்கும்.  அதனால் அதிபரின் முயற்சிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆதரவும் இருந்தது.
 இதன்படி ஜெர்மனியின் மினனணு ஆலைகள் எல்லாம் படிப்படியாக் முடப்படும். 2020க்குள்ளாக படிப்படியாக 17 ஆலைகளும் மூடபட்டு  காற்றாலைசூரியஒளி இயற்கை எரிவாயுபோன்ற்வற்றின் உதவியுடன்  குறைந்த செலவில் மாற்று எரிபொருள்கலிலிருந்து  தயாரிக்கபடும்  மின்சாரமே நாடு முழுவதற்கும் வழங்கபடும். இதற்கான திட்டஙகளுடன் வரும் ஆண்டுகள் அரசு செயல்படும்  .  2020ல்  ஜெர்மனி உலகின்  முதல்  பசுமைசக்தி (GREEN ENGERY NATION) நாடாக  இருக்கும். என அறிவித்திருக்கிறார். உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த அறிவிப்பை பல நாடுகள் வரவேற்றன. சுவிஸ் நாடு தாஙகளும் இதை பின பற்ற போவதாக் அறிவித்தது. ஜி8  நாடுகள் தங்கள் அணு உலைகளின் பாதுகாப்பை  பரிசிலிக்கும் பற்றி திட்டங்களை தொடங்கி விட்டன.
 இந்த திட்டத்தை முழுமையாக செயல் படுத்த  10 ஆண்டுகள் ஆகும். இவரது பதவிகாலம் 4 ஆண்டுகள்தான்.  அதற்குபின் அரசியல் மாற்றம் நிகழந்தால் திட்டம் என்னவாகும்?  ஜெர்மானிய அரசியல் சட்டபடி  மக்களின் அடிப்படை நலன்களை மாற்றி அமைக்கும்  எந்த சட்ட திருத்திற்கும்  பாரளாமன்ற ஒப்புதல் மட்டும் போதாதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனால் இதில் எந்த கட்சியும் மீண்டும் அணுமின் உலைகள் தேவை என  சொல்லி அரசியல் செய்யமுடியாது. அப்படியே செய்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் எனபது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீலின் கணிப்பு.
பல பில்லியன் யூரோ செலவாகப் போகும் இந்த திட்டதிற்கு தேவையான நிதியை எப்படி சமாளிக்க போகிறாகள்.?  அணுமின் உலைகளின் செலவுக்கு ஒதுக்கபட்ட பணத்துடன்  புதிய காற்றாலை திட்டங்களில் தனியாருடன் சேர்ந்து அரசும் முதலீடு செய்யும்அன்னிய முதலீடுகள் வரவேற்கபடும். இங்கு வந்து மின்சாரம் தயாரித்து  அரசுக்கு விற்றும் மீதியை அண்டை நாடுகளுக்கு  “ஏற்றுமதி” “ செய்தும் பணம் சாம்பாதிக்க வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி ஆக போகிறது என்கிறார் அதன் நிதி அமைச்சர்.
விபத்துகள் நிகழும் போது பல இழப்புகளோடு சில நன்மைகளும் ஏற்படும் என்று சொல்லப்படுவதுஉண்டு. சுனாமியால் ஜப்பானில் நிகழந்த பேரழிவினால் ஜெர்மனியில ஒரு பசுமைசக்திப் புரட்சி க்கு வித்திட்டிருக்கிறார் இந்த புரட்சிதலைவி.