18/3/13

ராஜம்மாவின் குதிரை


கனவுகள் காணும் மனிதர்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடங்களில் குதிரைபந்தய மைதானமும் ஒன்று. தான் தேர்ந்தெடுத்த குதிரை ஜெயிக்க, பணம்கட்டியவர்கள், தங்கள் கணிப்புகள் சரியாக இருக்கவேண்டுமென்று புக்கிகள், தன் திறமையை பதிவுசெய்ய துடிக்கும் ஜாக்கிகள், தங்கள் குதிரை முதலில் வரும் கெளரவத்தை பெற குதிரைகளின் உரிமையாளர்கள் என பலரும் தங்கள் ஆசைகளை கனவாக கண்டுகொண்டிருக்கும் இடம் குதிரை பந்தைய மைதானம்.  இவைகளிலிருந்து மாறுபட்டு அங்கே ஒரு பெண  மாறுதலான ஒரு கனவை கண்டுகொண்டிருந்தார். ஒரு ரேஸ் குதிரைக்கு உரிமையளாரக வேண்டும் என்பதே அது.
 10 ஆண்டுகளுக்கு முன்னால் பங்களூரு ரேஸ்கிளப்பில் குதிரை பந்தைய  ”பெட்” டிக்கெட்கள் விற்கும் கவுண்ட்டரில் டிக்கெட் விற்கும் பணியில் சேர்ந்தவர் ராஜம்மா. நிரந்திரமில்லாத அந்த பணியில் வேலை செய்த நாட்களில் நாளனொன்ருக்கு 50 ரூபாய் சம்பளம்.. அதே ரேஸ்கிளப்பில் கால்நடை மருத்துவ பிரிவில் பணியாற்றிய வெங்கடேஷுடன் திருமணம் இரண்டு குழந்தைகள் என வாழ்க்கையுடன் தொடர்ந்து கொண்டிருந்தது இவரது கனவு. குதிரை ரேஸ்களில் சிலர் பெரும்பணம் சம்பாதிப்பதும் பலர் பணம் இழப்பதையும் தினசரி கண்டுவந்த ராஜம்மா கவனித்தஒரு விஷயம். எல்லா ரேஸ்களிலும் எதாவது ஒரு அளவில் பணம் சம்பாதிப்பது குதிரைகளின் சொந்த காரர்கள்மட்டுமே என்பது. இது அவருக்கு ஒரு குதிரையை சொந்தமாக வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டியது ரேஸ்குதிரைகள் என்பது மிக விலையுயர்ந்தது, வாங்குவது அவ்வளவு எளிதல்லை என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் துணிவுடன் அதைப்பற்றி கனவுகள்  காண ஆரம்பித்தார். ஆசையை கேட்ட பலர்  -குடும்பத்தினர் உள்பட  சொன்னது “பைத்தியகாரி” லட்சாதிபதிகள் கூட யோசிக்க தயங்கும் விஷயம் இது. உனக்கு கனவில் மட்டுமே சாத்தியம் என சொன்னவர்கள் தான் அதிகம். ராஜம்மா மனம் தளரவில்லை தன் லட்சிய கனவை நனவாக்கும் திட்டங்களில் இறங்கினார். குதிரை வாங்க தேவையான பணத்தை சேர்க்க இந்த டிக்கெட் கவுண்ட்டர் வேலை உதவாது எனபதால் ஒரு சொந்த தொழில் செய்ய திட்டமிட்டு தன்னை தயாரித்து கொண்டார்.கிராமபெண்ணான நானும் உழைப்பினால் ஒரு பேஷனான நகர பெண்ணாகி சாதிக்க முடியம் என நம்பினேன். என்று சொல்லும் இவர்  இருந்த சொற்ப சேமிப்பில் ஒராண்டு பியூட்டிஷியன் கோர்ஸ் படித்து பட்டயம் வாங்கிய பின்னர் கடன் வாங்கி ஒரு பார்லரை துவக்கி சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். கைகள் கஸ்டமரை அழகுபடுத்திகொண்டிருந்தாலும் கண்களில் தன் சொந்த குதிரை ரேஸில் ஒடும் கனவுகாட்சிகள் தான் ஒடிக்கொண்டிருந்தது. ஆறு ஆண்டில் இவர் சேமித்த பணம் 3 லட்சம். ”மிக கட்டுமையான சாவலாக இருந்த விஷயம் இது. பார்லரில் ஒரே மாதரியான நிரந்த வருமானமில்லை சிலமாதங்களில் கடன் தவனையை கட்ட கூட தவறியிருக்கிறேன் ஆனால் லாபமாக கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும் குதிரை வாங்க சேமித்தேன்” என்று சொல்லும் இவர் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் சதீஷ் என்ற  குதிரை பயிற்சியாளார் தன் குதிரையின் மதிப்பில் கால் பங்கை விற்க போகும் தகவல்  கிடைத்தது. ரேஸ்குதிரைகள் மிக விலையுள்ளதாக இருப்பதால் அவற்றின் உரிமையை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் பங்கை மட்டும் மற்றவர்களுக்கு விற்கலாம். தனி உரிமையாளர்களும் ஒரு பகுதி பங்கை விற்று  பணமாக்கி கொள்ளாலாம். இது ரேஸ்கிளப்பின் விதி முறைகளுக்கு உட்பட்டது அந்த பயிற்சியாளாரை அறிமுகமில்லாதால் தனக்கு தெரிந்த ஒரு குதிரையின் சொந்த காரரின் உதவியுடன் சதீஷிடம் தனக்கு அந்த பங்கை தனக்கு தரும்படி கேட்டார் ராஜம்மா. யாராவது மற்றொரு ரேஸ்கிளப் மெம்பர் பங்கை விலைக்கு கேட்பதை எதிர்பாத்துகொண்டிருந்த சதிஷ் இந்த சதாரண பெண்ணின் வேண்டுகோளினால் திகைத்துபோனார். முடியாது என மறுத்தும் விட்டார். காரணம் சமூக அந்தஸ்த்து இல்லை. கஷட்டபட்டு சேமித்த தன் முழுசேமிப்பையும்  இந்த பெண் இதில் மூதலீடு செய்து விட்ட பின் குதிரை அதை சம்பாதித்து கொடுக்க முடியாவிட்டால் தன் அத்தனை சேமிப்பை இழக்கும் ஆபத்தான நிலைக்கு தள்ளபட்டுவிடுவார் என்பதால். ஆனால் சொந்த குதிரை கனவால் துரத்தபட்டு கொண்டிருந்த ராஜம்மா நம்பிக்கையுடன் தினசரி சதீஷின் குதிரை லாயத்திற்கு வந்து காத்திருந்து அவரை சந்தித்து கேட்டுகொண்டே இருந்தார். தளராத தன்னமிக்கை மிக்க இந்த பெண்ணின் வேண்டுகோள் அவர் மனதை மாற்றியது. குதிரையின் மதிப்பில் கால்பங்கை செலுத்தி  பணக்காரர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் பங்களூர் ரேஸ் கிளப்பின் குதிரைகள் சொந்தகார்கள் பட்டியைலில் இடம் பெற்றறார் ராஜம்மா.  

             
அதிவேக புயல் (super storm) என்ற அந்த அழகான செம்பழுப்பு வண்ண குதிரை ராஜம்மாவின் ராசியினாலோ என்னவோ பங்கொண்ட முதல் பந்தையத்திலேயே பட்டையை கிளப்பிற்று. மிக ஸ்டைலாக முதலில் வந்து நின்றது. தொடர்ந்து குதிரைரேஸ்களின்மிககெளரமாக கருதப்படும் கவர்னர் கப் ரேஸில் முதலில் வந்துஜெயித்தது. தொடர்ந்து பங்களூர், மைசூர் டெர்பிகளிலும் இரண்டாவது இடத்தில் வென்றது. கடந்த மாதம் மும்பாயில் இந்தியாவில் மிகச்சிறந்த குதிரைகள் மட்டுமே பங்கேற்ற இந்தியா டெர்பி பந்தயத்தில் முதலிடம் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது. அந்த ரேசினால் கிடைத்த பரிசுப்பணம் 1.8 கோடிரூபாய்கள். பல குதிரைகள் வைத்திருக்கும் விஜய் மல்லையா இந்தியா டெர்பியில் பரிசு பெற 5 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.  பலகுதிரை உரிமையாளாருக்கு இது இன்னும் கைகெட்டாத கனவு. ராஜம்மாவின் முதல் குதிரை இதை சாதித்திருக்கிறது.
ஒவ்வோரு ரேசுக்குபின்னரும் தன் குதிரைக்கு திருஷ்டி கழித்து பூஜை செய்யும் ராஜம்மா ”வெற்றி என் தலைக்குள் போய்விடகூடாது என்பதில் கவனமாகயிருக்கிறேன் ரேஸ்வெறியினால் அழிந்த குடுபங்களையும் எனக்கு தெரியும் சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் முடிந்தால் இன்னும் ஒரு குதிரையில் முதலீடு செய்வேன். என் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு தேவையான தை சம்மாதித்த பின் விலகிவிடுவேன்” என்கிறார்.
கனவு காண்பவர்களின் ஆசைகள் குதிரைகளானால் எந்த உயரத்திலும் பறக்கலாம் எனபது ஆங்கிலத்தில் பகற்கனவு காண்பவர்களை பற்றி கிண்டலாக சொல்லபடும் வாசகம். ஆனால் இதை உண்மையாகவும் செய்ய முடியம் என்று காட்டியிருப்பவர் ராஜம்மா.







                                                          

14/3/13

”மாத்தி யோசித்த” ஒரு மருத்துவர்


தெளிவான தொலைநோக்கும், அந்த இலக்கை அடைய செம்மையான திட்டமிடலும் வெற்றிவாயிலுக்கு அழைத்துசெல்லும் பாதைகள் என்பது பெரிய நிறுவனங்களின் சாதனையாளார்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும்பாடம். ஆனால் இந்திய மருத்துவதுறையில் புதிய பாதைகளை அறிமுகபடுத்தி அந்த துறையின் முகத்தையையே மாற்றி அமைத்திருப்பவர்  டாக்டர் பிரதாப் ரெட்டி.  ஒரு மருத்துவ மனை எல்லா பிரிவுகளுடனும் வசதிகளுடன் இயங்குவது என்பது அரசுத்துறை மருத்துவ மனைகள்  அல்லது மதசார்புதொண்டு நிருவனங்கள் மட்டுமே  என்று நீண்ட நாட்கள் நிலவி வந்த  வந்த நிலையை மாற்றி தனியார் கார்பெர்ட் மருத்துவமனைகள் என்ற புதிய பாதையை இந்த தேசத்திற்கு அறிமுகபடுத்தியவர்  தமிழ்நாட்டை சேர்ந்த இந்த டாக்டர்.
30 ஆண்டுகளுக்கு  முன் சென்னையில்  பலவிசேஷ சிகிச்சை பிரிவுகளுடன் துவங்கிய ஒரு அப்பலோ மருத்துவமனை இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 22 நகரங்களில் 54 மருத்துவமனைகள்,1600 பார்மசிகள்,60 கிளினிக்கள் 11 நர்சிங் கல்லூரிகள், 1000கோடி பிஸினஸ், 65000 பணியாளார்கள் என மிகபிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.  “இன்றைக்கு  கார்பரேட் மருத்துவமனைகள்  என்பது ஆச்சரியபடக்கூடிய  ஒரு விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தமாதிரி ஒரு யோசனையை நான் சொன்னபோது எச்சரித்தவர்களும், ஏளனம் செய்தவர்களும் தான் அதிகம்.” என்று சொல்லுகிறார் தான் கடந்துவந்த பாதையில் பல சவால்களையும்,திருப்புமுனைகளையும் சந்திருக்கும்  டாக்டர் பிராதாப் ரெட்டி..
அனைத்து மக்களுக்கும் நல்ல மருத்துவவசதிகள் என்பது அரசின் கடமை. அதை தனியார் வசம் தந்தது தவறு என வாதிடுவர்களும் கூட தயங்காமல் ஒப்புகொள்ளும் ஒருவிஷயம் அப்போலோ பிராதப் ரெட்டி அடிகோலிய பாதையில் தான் இன்று நாட்டில் பல கார்பரேட் மருத்துவமனைகள் தோன்றி  நடுத்தர மக்களின்  மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்திருப்பதையும்  வெளி நாடுகளிலிருந்து கூட சிகிச்சை பெற இந்தியா வரும் அளவிற்கு தனியார் மருத்துவ மனைகளில் சிகைச்சைகளின் தரம் உயர்ந்திருக்கிறது என்பது. 
அரசாங்க மருத்துவமனைபோல எல்லா வசதிகளுடன்  ஒரு தனியார் மருத்துவமனை என்பதை நினைத்துகூட பார்க்கமுடியாத சுழலில், 30 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையும்,பிரச்ச்னைகளும் பெருகிவரும்  கட்டத்தில் ,அரசாங்காத்தினால் மட்டுமே மக்களின் மருத்துவ தேவைகளை  முழுமையாக பூர்த்தி செய்துவிட முடியாது என்பதால் கொள்கை மாற்றத்தின் அவசியத்தை புரிய வைக்க அரசுடன், இதற்கு வழங்கும் கடன்கள் பாதுகாப்பானாது என்று கடன்உதவி செய்யவைக்க  வங்கிகளுடன்,  வெளிநாட்டில் கிடைக்கும் அளவிற்கு நல்ல சிகிச்சை கிடைக்குமா என்று சந்தேகபட்ட  நோயாளிகளுடன் என பல முனைகளில் பல விதமாக போராட வேண்டியிருந்தது  என சொல்லும்  டாக்டர் பிரதாப் ரெட்டி, தங்கள் மருத்துவ குழும வளர்ச்சியினால்  வெளிநாட்டில் பணிசெய்துகொண்டிருந்த பல திறமையான டாக்டர்கள் இந்தியா திரும்பியிருக்கின்றனர். என்பதை சுட்டிகாடுகிறார். சாதனைகளை செய்ய துவங்க வயது தடையில்லை என்பதையும் நிருபித்தவர் இவர். 70களின் துவக்கத்திலேயே  அமெரிக்கா சென்று பெரிய மருத்துவமனைகளில் பணி புரிந்து ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையின் தலமை பொறுப்பில் இருந்து பல ஆயிரம் டாலர்கள் சமபளம் பெற்றுகொண்டிருந்த இதய நோய்சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் பிராதாப்ரெட்டி  1982ல் தமிழ் நாட்டுக்கு திரும்பி  சென்னையில் அப்பலோவை துவக்கியபோது வயது 50. வசதியான ஒய்வுகால வாழ்க்கையை திட்டமிட்டிருக்க வேண்டிய இவர்  இந்திய மருத்துவதுறையில் புரட்சிகரமான மாறுதல்கள் பற்றி சிந்தித்திருக்கிறார். சீரிய முறையில் திட்டமிட்டு கடுமையாக உழைத்திருக்கிறார். 1983ல் சென்னையில் முதல் மருத்துமனையை திறந்து வைக்க அன்றைய குடியரசு தலைவர் ஒதுக்கியிருந்த நேரம் 20 நிமிடங்கள். ஆனால் நிறுவபட்டிருந்த வசதிகளை  நான் விளக்கி மருத்துவமனைமுழுவதையும் சுற்றிகாட்டிய போது இரண்டுமணிநேரம் இருந்து பலகேள்விகள் கேட்தை இப்போதும் நினைகூறும் இந்த 80 வயது இளைஞரின் சுறுசுறுப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. 1000கோடிகளுக்குமேல் பிசினஸ் செய்யும் குழுமத்தின் தலவராக இருந்தாலும்  சென்னையில் இருக்கும் நாட்களில் காலை 9 மணிக்கு மருத்தமனையிலிருக்கிறார். அவசியமான போது ஆப்ரேஷன்களிலும் பங்கேற்கிறார்.
இந்திய மருத்துவ துறையில் தனியார்பங்களிப்பு  பெருமளவில் வளரவும் அதற்கான நடைமுறைகள் சீராக அமையவும் இவர் ஆற்றிய பணிகளுக்காக 2010ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றவர்.  இவரது 4 மகள் களும் அப்போலா  மருத்துவ குழுமத்தின் சிலபிரிவுகளை நிர்வகிக்கிறார்கள். 20 ஆண்டுகளாக பணிசெய்துகொண்டிருக்கிறேன் ஆனாலும் சில சமயங்களில் தந்தையுடைய வேகத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடு கொடுக்க முடிவதில்லை என்கிறார் திருமதி பீரித்தி ரெட்டி. இவர் அப்போலா குழுமத்தின் நிர்வாக இயக்குனர்.  குடும்பத்தின் 3வது தலைமுறையும் இப்போது குழுமத்தின் பணிகளில் பங்கேற்கத்வங்கியிருக்கிறது.. . ஒருநாள் 5 நிமிடம் லேட்டானல் கூட  தாத்தாவின் நேரந்தவறாமை நினைவில் வந்து  குற்ற உணர்வு மேலிடுகிறது என்கிறார் பிராதப்ரெட்டியின் பேத்தி உபஸானா. 
குழுமத்தின் ஹைதிராபாத் பிரிவில் பணியாற்றும் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜாவை (நடிகர் சீரஞ்ஜிவி யின் மகன்)  திருமணம் செய்துகொண்டிருப்பவர். கார்ப்ரேட் மருத்துவமனைகளின் கட்டணங்கள் நடுத்தரமக்கள் சமாளிக்க முடியாத  அளவில் அதிகமாகவே யிருக்கிறதே ஏன்? என்ற நம் கேள்விக்கு அடைப்படை கட்டுமான செலவீனங்கள, சர்வதேச தரம்,தொடர்ந்து உயரும் மருந்துகளின், உபகரணங்களின் விலைகள் போன்றவைகள் தான் காரணம். ஆனல் இன்னும் சில ஆண்டுகளில் இம்மாதிரி கார்பேரேட் மருத்துவமனைகள் அதிக அளவில் பெருகும்போதும் இன்ஷ்யூரன்ஸ் வசதிகள் அதிகரிக்கும்போதும் மருத்துவ செலவுகள் குறையும் வாய்ப்புகள் அதிகம் எனகிறார். இந்திய மருத்துவ துறையை புதிய பாதையில் பயணிக்க வைத்திருக்கும்  இந்த டாக்டர்.

kalaki 17/03/13

10/3/13

ரிவ்யூ ராஜா







இணயதளங்களிலும், வலைப்பூக்களிலும்  தமிழ் சினிமாகளுக்கு விமர்சனம் நிறைய வருகிறது. சில ஜெட் வேகத்தில் வருகிறது. காலை10 மணிக்கு வெளியான படத்திற்கு 1 மணிக்கே விமர்சனம் வெளியாகிறது. (தியட்டரிலேயே எழுதிவிடுவார்களோ?) இப்போது அடுத்தகட்டமாக  விமர்சனங்கள் யூ ட்டுயூபில் படங்களாக வருகிறது, விமர்சகர் படத்தை விமர்சிப்பது விடியோபடமாக்க பட்டு யூ ட்யூபில் வெளியிடபடுகிறது. இதில் இப்போது மிக பாப்புலாராக இருப்பது “ரிவ்யூ ராஜா”. டைட்டில் கார்ட் போடும்போது படத்தின் தீம் மியூசிக்கின்,பின்னணியில் படத்தின் ஹைலைட் காட்சிகளைபோலவே நைண்டியாக ரிவ்யூ ரஜா நடிக்கும் காட்சிகள் என விமர்சனபடம் தொடங்குகிறது

. –(விஸ்வரூபத்தின் விமர்சனம் துவங்கும்முன் கமலைப்போல கதக் நடனம்-துப்பாகி சண்டை) இந்த பாணியில் வாரம் தோறும் ஒரு தமிழ்பட விமர்சனம். விமர்சனம் ஆங்கிலத்தில் . செய்பவர் ஒரு கனடா நாட்டு இளைஞர். ஆம் தமிழ் படங்களுக்கு விமர்சனம் ஒரு வெளிநாட்டுகாரர் ஆங்கிலத்தில் வாரந்தோறும் செய்கிறார். பலர் பார்க்கிறார்கள். இதுவரை இவர் விமர்சன்ங்களை பார்த்தவர்கள் பதினெட்டு லட்சட்சத்திற்கும் மேல். கனடாவின் புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் நிர்வாகயியல் படித்து ஒரு மென்பொருள் நிருவனத்தில் பணிசெய்பவர்.
விமர்சனத்தில் கதை, கேமிரா, நடிப்பு, மியூசிக் என துறைவாரியாக மார்க் கொடுத்து இறுதியில்முழு படத்துக்கும எவ்வளவு என மார்க் கொடுக்கிறார். விஸ்வரூபத்திற்கு இவர் தந்திருப்பது  7.3 மார்க்குகள். சகுனிக்கு 3.05.
கனடாவிலிருக்கும் தமிழ் தெரியாத இந்த வெள்ளைகாரருக்கு எப்படி தமிழ் சினிமாவின் மீது விமர்சனம் செய்யும் அளவிற்கு காதல்? இவருடைய நல்ல  நண்பர் குஹன். குஹனின் பள்ளித்தோழர் அர்ஜுன் மனோ. கனடா பலகலைகழகத்தின் சினிமா ஸ்கூலில் படிப்பவர்.. ஹாலிவுட்டில் சாதிக்க துடிக்கும் இலங்கை தமிழர்.வார இறுதியில் குஹன் அவர் வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு முறை ராஜாவையும்  அழைத்து சென்று தங்கியபோது டிவிடி யில் பார்த்த  ஒரு தமிழ் சினிமாதான் இவரை விமர்சகராகயிருக்கிறது. அது அஜித் நடித்த பில்லா 2. அதன் கம்பீரம், மியூசிக் போட்டோகிராபி எல்லாம் பார்த்து அசந்து போன இவர் “ஹீரோவின் ஒரே அடியில் வில்லன் அறையின் மூலைக்கு பறந்து போய் விழுவது போன்ற காட்சிகள் அமெரிக்க சமூக சினிமாக்களில் இல்லாத படங்களில் புதுமை எனறு வியந்து நிறைய படங்கள் ஆரம்பித்தார்.
அதுவரை அவருக்கு தமிழ் சினிமாவின் வீச்சு, ரசிகர்கள் பற்றி எதுவும் தெரியாது.  விளையாட்டாக ஒரு பட விமர்சனத்தை பதிவு செய்து யூட்யூபில் பதிவேற்ற அதற்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸ் இவரை தொடர்ந்து அதைச்செய்ய  வைக்கிறது. இன்று நண்பர்களுடன் ஒரு சின்ன ஸ்டூடியோ, ஓளி/ஒலிப்பதிவு வசதிகளுடன் அமைத்து விமர்சனங்களை வழங்கி கொண்டிருக்கிறார். நன்பர் அர்ஜூன் ஒளிபாதிவளார்.  படங்களுக்கு மியூசிக் சென்னையிலிருக்கும் உதய பாரதி. நண்பர் குஹன் எடிட்டர் மற்றும் தமிழ் சொற்களை சரியாக சொல்லிகொடுப்பவர்.  வட அமெரிக்காவிலும்,கனடாவிலும் உள்ளூர் ஆட்களுக்கு அதிகம் தெரியாத இவர் அங்கிருக்கும் தமிழர்களிடையே ஆட்டோகிராப் கேட்கும், சேர்ந்து படமெடுத்து கொள்ளுமளவிற்கு மிக பாப்புலர். தன்பெயர் அச்சடிடிருக்கும் மஞ்சள்  டி ஷர்ட்டையே எப்போதும் அணிகிறார்.
சிவாஜி 3 டி பட ரிலீஸின் போது ரஜினி ஸ்டையில் மாண்டிரியல் நகர வீதிகளில் இவர்  ஒரு கொரிய மொழி பாட்டிற்கு நடனமாடிக்கொண்டுபோன படம் யூட்யூபில் சூப்பர்ஹிட். 4 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  நிறைய தமிழ் படங்கள் பார்த்தும், தமிழ் நண்பர்களுடன் பேசிபேசியும் மெல்ல தமிழ் கற்று கொள்ளும் இவர் சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். விஸ்வரூபம் படத்தின் முதல் காட்சி பார்த்து ரசிகர்களை தன் யூ ட்யூப் சானலுக்காக பேட்டியும் கண்டார். சந்தித்தவர்களில் இளைய தளபதியும் ஒருவர்.
ஆதிபகவன் படத்திற்காக கனடா வந்திருந்த அமீர் ஜெயம் ரவி டீமை வரவேற்று அவர்களை கனடா டிவியில் அறிமுகபடுத்தியிருக்கிறார் இன்னும் சில மாதங்களில் சென்னை வந்து இன்னும் நன்றாக தமிழ் கற்று கொண்டு தமிழ் சினிமாவில் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திகொண்டு தமிழ் சினிமாவில் பிசினஸ் செய்யபோவது  என் லட்சியம் . அமெரிக்காவிலும், கனடாவிலிருக்கும் தமிழ் ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமாக்களை உலக மார்க்கெட்டில் அறிமுகபடுத்துவேன் என்கிறார். தன்னை ராஜா என சொல்லிகொள்ளூம் இவர் உண்மைப்பெயர் என்ன?“என்னை ராஜா என்றே அழையுங்கள்” என்கிறார். உடன் வந்திருக்குக்கும் தந்தை ரிச்சர்ட்டும் இவரை ராஜா என்றே அழைக்கிறார். படித்த, படிக்கும், வேலையிலிருக்கும் நமது  இளைஞர்களை கோலிவுட் எனற காந்தம் ஈர்ப்பது நமக்கு தெரியும். அந்த காந்தத்தின் சக்கி இப்போது வலிமையாகி கனடா வரை நீண்டு அங்குள்ள ஒரு இளைஞரையும் ஈர்த்திருப்பது ஒரு ஆச்சரியமான சந்தோஷம்.




7/3/13

Hungary for More


Travel Secrets  ஒரு சுற்றுலா பயண இதழ். எல்லா விமானங்களிலும், ஹோட்டல்களிலும் இருக்கும். பெரிய புத்தக கடைகளிலும் கிடைக்கும்.
JG எழுதிய ஒரு கட்டுரை இதில் வெளியாகியிருக்கிறது. தொழில் வாழ்க்கையில் நேரத்தோடு போரடிக்கொண்டிருக்கும் JG  எழுத முயற்சித்து முதல் கட்டுரையே அச்சாகியிருப்பதும் சந்தோஷமாகயிருக்கிறது. (எழுதுபவர்களுக்கு புரியும்) நீங்களும்  அதை படித்து ஒரு வரி எழுதுங்களேன்

பத்திரிகையை இந்த தளத்தில் படிக்கலாம்

http://www.travsecrets.com/Nov-Dec%202012/footloose.pdf

அல்லது இங்கேயேயும் படிக்கலாம்

========================================================================

Guhan Ramanan got kissed, got quizzed about the Kama Sutra, and watched people bathe together...in the wondrous city of Budapest.


The terse email read, “Please reach Budapest. ASAP”.Hungary—Budapest.The connection in my mind was automatic, from my childhood game of Countries and Capitals. My first triangular stamp was Magyar Posta. And I was actually going to go there. Iwondered if they still had post offices. Prepping for the trip, I learnt that though widely debated, Hungary has not yet adopted the Euro. Most forex dealers outside Europe do not stock Forint (Hungarian currency) either. So,if Budpaest beckons, wait till you landto exchange your money. On converting$ for Ft, I saw 10,000 on a single note(about $50, then) and fleeting desi notions of feeling rich evaporated as I wondered what inflation in the country
felt like. Budapest is actually two cities: Buda(old city Obuda) and Pest (new city) held together by the beautiful Danube river.
Invaded by the Romans, the Huns, the Turks, and more recently the Soviets,this beautiful city is called the Paris of the East and is strikingly different from usual Europe tour suspects. I landed into an office bustling with twenty-somethings. Their advice was unanimous: pálinka (Hungarian version of tequila made from fruits) should be consumed in large quantities. And I should join them Saturday night at a bar,when they would teach me Hungarian.I liked Budapest already. Rather than build a touristy checklist of items to tick off, I decided to soak in the atmosphere and see where the city took me. Saturday morning found me riding of Europe) to Heroes Square (Hosok Tere), the center of many local festivals and celebrations. Seven magnificent statues of tribal horseback chieftains stand here. The leader among them is Arpad, who created Hungary in 9th century. A local guide explained that the man with the snake as a whip represents War, while the female figure in a chariot holding a palm frond represents Peace. Taking pictures, I found myself pondering the poignant symbolisation. If you’re going there, do wander into the beautiful City Park behind Hosok Tere, to see the VajdahunyadCastle complex. Walking into the castle over the moat, and admiring the intricate columns on its exterior, you will see an interesting hooded statue conversation with the seller, I headed toward the Szechenyi Medicinal BathHouse. Built in 1913, it is a communal(yup, they bathe together!) thermal bath with pools of heated water and has several medicinal treatments available.I saw old and young soaking in thesteaming waters, deep in conversation.Some even playing chess, making it look more like a park than a bath. A dip will run you about 4200 Ft and you can rent swimsuits there too!Deciding to come back later for a‘bath,’ I took the metro back into the city to see the St. tephens Basilica. A Budapest trip is considered incomplete unless you’ve admired the elaborate entrance and intricate sculptures and gone inside to be awed by the beautiful stained glass and the sheer majesty of this structure. Don’t miss.It was coffee time, so I ambled into a local cafe and ordered ‘rétes,’a delicious thinly layered Hungarian specialty pastry filled with cream and apple pie (strudel), and a HungarianKava (dark, strong espresso-like coffee). Now I was all perked up to go and seethe great Danube. To do this, I had to walk down Budapest’s most famous street, Vaci Utca (pronounced utsa,for street). The beautiful facades and columns on either side of the narrow streets, jostling for space with block style housing from the Soviet era make this an enchanting promenade.
As I walked through what seemedto be the 100th park in udapest, Isuddenly saw her, the Danube. Dottedwith boats that are actually restaurants that double up as museums, she flows majestically below the bridges and unites the cities. Crossing over to Buda from Pest, on the Lanchid bridge, I took in the concrete jungles in Pest that I had left behind and the castles that named Anonymous, which people were taking pictures with. Wikipedia tells me that the interestingly named chap was apparently notary and chronicler to a Hungarian king in the 12th century,and signed himself ‘P. Dictus magister’.In any case, he is now anything but anonymous, posing happily outside a castle in a green and beautiful park in the center of the city!Hunger struck after all my musings and wanderings. After eating a sourbreadpretzel (stuffed with cheese, delicious!)and enjoying a broken English 
 Photo tip: Pictures from bridge look better early in the day and
late at night, when the city lights come on. Take a tripod - Midday shots are the touristy ones!A funicular train up to the Buda Castle, I was awestruck by the beautiful views that it accorded at 530m above the Danube. Walking on old cobbled pathways, I went back a few hundred years to kings and horses that must have visited.‘You must see the Citadela –the views there are majestic – take a
bus, it’s a long walk otherwise,’ a fellow tourist said, as he watched me gaze. Hewas right – the sweeping views of the cities and the Danube, more magnificent statues and old artillery, and pretty
Hungarian dolls (not what you think) made it well worth the ride.
As the shadows lengthened, I headed back to Pest to catch a cruise
Heady with the champagne servedon the boat, I began to wonder if Iwould ever cruise down an Indian river like this. A voice from a tinny speaker alerted me to the breathtaking Hungarian parliament, in which every window seemed to overlook the Danube - oliticians sure have strategic viewshere, I thought. A pretty couple from Canada read out this interesting snippet from a guidebook: ‘The Hungarian Parliament’s spire and the St. Stephens Basiclica’s spire are exactly the same height, symbolising that church and rulers were equal.’Circling back from the Margaret Island, in the middle of the Danube between Buda and Pest, we were told that it has an automated year long running track that tracks lap timings if you wear a chip.As I walked back on the promenade,I saw shoes of all sizes laid haphazardly,all pointing to the Danube- almost as if its owners jumped into the river – only there were no people. It was from this point that members of the fascist Arrow Cross Party in 1944 shot dead and threw into the Danube several Jews. Quietly reflecting, I looked up to see the Chainbridge, and in an aha moment, realized this was where Salman Khan professed
his undying love for Aishwarya, in HumDil De Chuke Sanam. Extreme love and extreme hate, juxtaposed on a single spot. Magical Budapest. At the crowded Szimpla Kert bar, which is the fellows quietly pointed out that they do not clink beer glasses in Hungary –This is an important Hungarian tradition left over from the 1848 Revolution against the Austrians. Because the Austrians celebrated the defeat of the  Hungarians by toasting and clinking mugs of beer, the Hungarians avoid this particular behavior and actually banned it. Clinking with any other drink is acceptable, I learnt as the night progressed, downing plum pálinka (donot miss)


No clinky stuff with beer! As we spilled from one bar to another, and I had been kissed on both cheeks, more often than when I was
a baby, causing me to wonder if I was getting better looking, I learnt that it is local custom, to cheek-kiss. Watch out,men do it too. As the night progressed, a bearded gentleman asked me ‘Where are you from?’ My tepid ‘India’ made him look at me for a full second longer - ‘Saying you are from India is like me saying I’m from Europe. Where in India are youfrom?” ‘Chennai,’ I blurted, surprised.“Ah, South India - the land of beautiful temples and coastlines. You know India is actually many countries and cultures in one. It’s what Europe would be, if it was a single country”. Dumbfounded I listened to him describe India as a country with majestic Himalayas in north, That on the west, beautiful hills and rivers on the East and the fertile peninsular triangle leading to Kanyakumari on the South. Thousands of miles from home, a Hungarian knew India as a country of countries. And all  I knew was that his country’s stamp was triangular Humbling. But the night was still young. Used to the usual questions about India--crowds, cuisines, culture, I was  stunned when a pretty girl asked me, ‘Do they teach the Kamasutra, for everyone in India?’ Maybe the shock on my face didn’t register - she said she’d read the whole book when she was 12 (without parental approval, thankfully), and she  opined it went much deeper than the obvious. Deeper? Obvious? I gulped. “ Isn't it brilliant how ancient Indians thought about finding God through loving?” Hemming and hawing, I groped for an answer and learnt what “open culture” meant. As we walked through the narrow city streets, with yellow lights and I explained what vegetarian meant, I was directed to a small Turkish shop, with the most amazing falafel sandwich, at 2 am, followed by a delightful baklava (think slightly sticky son papdi). There are many of them all over Budapest and open all night, for the hungry and palincated(!) traveler. As I walked back into my hotel, almost 24 hours after I left it, I wondered; poignant symbols, magical views, green parks, excellent local transport, amazing food and most of all, warm-hearted, friendly and knowledgeable people. What more can one ask of a city? 


4/3/13

சத்திய சோதனையை சந்தித்தவர்.


“என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால்: என் நேர்மைக்கும் நான் நேசிக்கும் என் தொழிலுக்கும் களங்கம் விளைவித்த ஆபத்தான சவாலான அதை “சத்தியம் ஒரு நாள் நிச்சியம் ஜெயிக்கும் என்ற என நம்பிகையினாலும் தெய்வத்தின் அருளாலும் ஜெயித்தேன் “ என்கிறார் நம்பி நாராயணன்.
 எதிர்பாராத நேரத்தில் சவால்கள் எழுவதும் அதை எதிர்கொண்டு வெற்றிகொள்வது என்பதும் பெரிய நிருவனங்களில், அல்லது துணிவுடன் எதிர்நீச்சல் போட்டவர்களின் வாழ்க்கையில் மட்டுமில்லை. ஒரு தனிமனிதன் வாழ்க்கையிலும் நிகழக்கூடியது என்ற நிதர்சனமான உண்மையை புரிய வைக்கிறது இந்த விஞ்ஞானியின் வாழ்க்கை.
நம்பி நாராயணன் ஒரு விண்வெளியியல்விஞ்ஞானி. ஏரோநாட்டிகல் எஞ்ஞினியரிங்கும், ராக்கெட் சையின்ஸும்படித்த பின் இந்திய விண்வெளித்துறையில் (ISRO)அப்துல் கலாம் சதிஷ் தாவன் போன்றவர்களுடன் 1970களில் பணியாற்றியவர். திரவ எரிபொருளின் சக்தியில் இயங்கும் ராக்கெட்மோட்டர்களை. எந்த வெளிநாட்டின் உதவியுமில்லாமல் 1970லேயே உருவாக்கியவர். மிக பெரிய வல்லரசுநாடுகள் மட்டுமே அறிந்தந்திருந்த அதிவேக ராகெட்களை செலுத்த தேவையான கிரையோஜினிக் என்ற திரவ எரிபொருளை உள் நாட்டிலியே தயாரிக்க ரஷ்ய பிரெஞ்ச் அரசு நிறுவனங்களுடன் 20 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்து அதை கற்றவர்.செய்யும் தொழிலையே தெய்வமாக நினைக்கும் இந்த மனிதருக்கு தன் தொழிலைத்தவிர வேறுஎதுவும் தெரியாது.
1994லில் ஒரு நாள் திருவனந்தபுரத்தில் இவர் வீட்டுக்கு வந்த போலீஸ் படைஇவரை கைது செய்கிறது. மறுநாள் தலைப்பு செய்திகள் சொன்ன தகவல் இவர் ராக்கெட் ரகசியங்களையும் ராணுவ ரகசியங்களையும்  பாக்கிஸ்தானுக்கு விற்கிறார். என்பது.இன்று போல் செய்திகளை துரத்தும் டிவி சேனல்கள் அன்று இல்லை. ஆனால் மாநில மற்றும் தேசிய நாளிதழ்களில்  தொடர்ந்து ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல செய்திகள் விஸ்வரூபம் எடுத்து நம்பி நாராயணணையும், அவரது சகா சிகுமாரையும் தேசதுரோகிகளாக வர்ணித்தன. மலையாளத்திலும் தமிழிலும் பல வாரபத்திரிகைகள் தொடர்களில் உண்மை”கதைகளை” வெளியிட்டன. ஒவ்வொருமுறையும் கோர்ட்டுக்கு அழைத்துசெல்லும்போது துரோகி என முகத்தில் குத்தி காரி உமிழ்ந்தனர் சிலர்... சிறையில் ”உன்னை சரியாக நடத்தாத மேலதிகாரியை மாட்டிவிடு” என்று கொடுத்த அட்வைஸை ஏற்காததால் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யபட்டார்.. இரண்டாண்டு நீண்ட பலவிசாரணைக்கு பின் சிபிஐ 1996ல்அறிவித்த முடிவு  ”இது பொய்யாக புனையபட்ட ஒரு வழக்கு. வழக்கை தொடர்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், அவர்களுக்கு கோர்ட்மூலம்தகுந்த  தண்டனையும் தரபடவேண்டும்”
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் 1998ல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கபட்டார். ஆனாலும் மாநிலபோலீஸ் கேரள உயர்நீதிமன்றத்திற்கு போனது. அங்கும் வழக்குதள்ளுபடி செய்யபட்ட நிலையில் நம்பி நாராயணன் சந்தித்த அடுத்த சோதனை மாநில அரசு முழுவழக்கையும் மீண்டும் மாநிலபோலீஸ் மறுவிசாரண செய்ய இட்ட உத்தரவு.
ஏன் இவருக்கு இது நேர்ந்தது.? போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செல்வாக்குள்ள பணக்கார்களும் வில்லனின் கூட்டாளியாக கூட்டு சேர்ந்து அப்பாவி கதாநாயகனை பலிகடாவாக்கி தங்கள் பிரச்னைகளை தீர்த்துகொள்ள முயலும் தமிழ் கிரைம் திரில்லர் சினிமா திரைக்கதையின் உண்மைவடிவம்தான் இவரது கதை. தனது உயர் அதிகாரியை பழிவாங்க ராணுவ ரகசியம் கடத்தல் என ஒர் கற்பனை செய்தியை கசிய விட்ட போலீஸ் அதிகாரி, ஒரு பெரிய பத்திரிகை குடுமபத்தில் எழுந்த வாரிசு போரட்டத்தில் தனக்கு உதவாத அதே உயர் போலீஸ் அதிகாரியை வஞ்சம் தீர்க்க காத்திருந்த செல்வாக்குள்ள ஒருதினபத்திரிகையின் அதிபர், பொறியாக இருந்த இந்த பிரச்சனையை பெருந்தீயாக வளர்த்து, ”தேசத்ரோகிகளை காப்பற்ற முயல்கிறார் இந்த முதல்வர்” என சொல்லி அரசியல் பிரச்னையாக்கி. முதல் அமைச்சரையே பதவியிழக்க செய்த  அரசியல்வாதிகள் என சேர்ந்த ஒரு கூட்டணியின் வெற்றி இந்த மனிதரின் வாழக்கையை பகடைகாயாக்கி ஆடியதில் பெற்றது..
வழக்கு நடைபெற்ற காலங்களில் நாரயணன் அடைந்த துயரங்களின் உச்சம் மன அழுத்தினால் அவர் மனைவி தன் செயல் திறன்களை இழந்து நின்றது. ”என்னால் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை. நான் தேசதுரோகி என என் காதுபடவே பேசுவார்கள்” என்கிறார் நாராயணன். நிரபராதி என அறிவிக்கபட்ட பின்னரும் அரசின் மறு விசாரணை அறிவிப்பினால் வெகுண்ட நம்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார். அங்கும் கேரள அரசின் அணுகுமுறையை மிக கடுமையான வார்த்தைகளினால் விமர்சித்து கடிந்துகொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது. உச்சநீதிமன்றம். அரசு பதவி திரும்ப கிடைத்தாலும் கெளரவங்களை இழந்தார். மூத்த விஞ்ஞானியான இவருக்குஅதிகாரமில்லாத நிர்வாக பணிகளே தரபட்டது. மனிதனை சந்திரனுக்கு அனுப்ப இன்று திட்டமிடுகிறது இந்திய விண்வெளிதுறை. அதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்க ,உழைத்த , விருதுகள் வழங்கபட்டிருக்கவேண்டிய இந்த விஞ்ஞானி, எந்த கெளரவவும் இல்லாமல் 2001ல் பதவி ஓய்வு பெற்றார்.பொய் வழக்கு போட்டதற்காக குற்றம் சாட்டபட்டபட்டிருந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும், அந்த போலீஸ் அதிகாரிகள் பதவிஉயர்வு பெற்றார்கள். அதில் ஒரு மூத்த அதிகாரி ஓய்வுக்கு பின்னரும் பெரிய அரசு பதவி அளிக்கபட்டு கெளரவிக்கபட்டிருக்கிறார், கிளைமாக்ஸாக சிபிஐயின் பரிந்துறையின் பேரில் இந்த பொய்வழக்கை போட்ட போலிஸ் அதிகாரிகளின் மீது தொடர்ந்த வழக்கை அரசு கைவிட்டது. சொன்ன காரணம்  “பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். நீண்ட காலமாகிவிட்டது.”
தவறாக குற்றம்சாட்டபட்டு பொய்வழக்குகள் போடபட்டு தாமதமாக கிடைத்த நீதியினால் தன் வாழ்க்கையின் வசந்தத்தை இழந்து போன நம்பி மனித உரிமை ஆணையத்தில்  தொடர்ந்த வழக்கில் அது கேரள அரசுக்கு இட்ட ஆணை நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய். கொடுக்க வேண்டும் என்பது. ஆணை இடபட்டது 2001ல். 2012 வரை கேரள அரசு அசையவில்லை.. வேறு எந்த மனிதனும் வீபரிதமான முடிவுகளை கூட எடுத்திருக்க கூடும் என்ற நிலையில் நம்பி நம்பிக்கையுடன் உயர் நீதிமன்றத்தை அணுகியதில் ”உடனடியாக 10 லட்சம் கொடுங்கள். பிரச்னைகளை பிறகு பேசுங்கள் என மாநில அரசை. எச்சரித்திருக்கிறது. ஆனால் இன்னமும் (இந்த கட்டுரைஎழுதும்வரை) அந்த பணமும் தரப்படவில்லை.
”எனது பிரச்னை பணமில்லை. என் நேர்மையும் அநீதியை எதிர்த்ததில் நான் சந்தித்த சத்திய சோதனைகளும் பதிவு செய்யபடவே போராடுகிறேன்” என்கிறார் நாராயணன்.
”பத்திரிகைகளும், காவல்துறையும் அரசியல்வாதிகள் செய்த பொய்பிரசாரத்திற்கு அப்பாவி கேரளமக்கள் பலியாகிவிட்டனர். உங்களிடம் கேரள மக்கள் சார்பில்மன்னிப்பு கேட்கிறேன், கேரள எழுத்தாளர்கள், அறிவிஜிவிகள் சார்பாக மன்னிப்புகேட்கிறேன் பத்திரிகைகள் சார்பில் மன்னிப்புகேட்கிறேன் “எங்களை மன்னித்துவிடுங்கள் நம்பி சார்” என்று மிகசிறந்த கேரள இலக்கிய வாதிகளில் ஒருவரான பால்சக்காரியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருவனந்தபுரத்தில் ஓரு பத்திரிகையாளார் கூட்டதில் பேசியபோது அங்கிருந்தவர்களும், அதை மறுநாள் செய்திதாட்களில் படித்தவர்களும் அதை தாங்கள் கேட்ட மன்னிப்பாகவே உணர்ந்து நெஞ்சம் நெகிழந்தது நிஜம்.
’9கல்கி 3/3/13)