19/8/12


அந்த 7 நிமிடங்கள்..

23/08/12 புதிய தலைமுறை இதழில் எழுதியது


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஏஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவாய் கிரக ஆராய்ச்சி நிலையம். பூமியிலிருந்து பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிவதற்கான மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது இது. 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த கூடத்தில் பல இந்தியர்கள் பணியிலிருக்கின்றனர்.. கடந்த 7 ஆண்டுகள் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவந்தன, முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது “கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   மேற்கூறையில்லாத காரைப்போல் ஒருடன் எடையில் அமைக்கபட்டிருக்கும் இது அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு குட்டி  நடமாடும் லாபரட்டிரி. செய்வாயின் நில பரப்பில் கிடைக்கும் சாம்பிள்களை அதன் உள்ளேயே சோதனையிட்டு முடிவுகளை பூமியிலுள்ள மிஷின் கண்ட்ரோலுக்கு  உடனுக்கு உடன் அனுப்பும் வசதிகளை கொண்டது. 13 கேமிராக்களுடன் 6 சக்கரங்களுடன் இருக்கும் இது தரையிலிருக்கும் கட்டுபாட்டில் இயங்கும்.  8000 விஞ்ஞானிகள், பொறியாளார்களின் 7 ஆண்டு கடின உழைப்பில் உருவான இதற்கான செலவு 13000கோடி ரூபாய்கள். 2009ம் ஆண்டு இதில் ஒரு சின்ன சிப்பில் (சிம்கார்டுபோன்றது)  விரும்புகிறவர்கள் பெயர்களை அனுப்பினால் பதிவு செய்து அனுப்ப போகிறோம் என்ற இவர்களது அறிவிப்புக்கு வந்தகுவிந்த பெயர்கள் ஒரு கோடிக்கும் மேல்.   செவ்வாய்கிரகம்  சந்திரனைவிட மிக தொலைவிலிருப்பதால் அந்த நீண்ட பயணத்தை தாங்கதேவையான பல வசதிகளுடன் அமைக்கபட்டிருந்த இது கடந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தபட்டது. அதன் 8 மாத பயணத்தை மிக கவனமாக தினசரி கண்காணித்துவந்தனர் கண்ட்ரோல் ரூமிலிருந்த ஸ்பெஷலிஸ்ட்கள். மிக கடுமையாக உழைக்கும் இவர்கள் மீடியாவை கவனமாக தவிர்ப்பவர்கள். பயணம் திட்டமிட்டபடி போய்கொண்டிருப்பதில் சந்தோஷமாகயிருந்தாலும்  அதன்  கடைசி கிளைமாக்ஸான   ஆகஸ்ட் 5 தேதிக்காக காத்திருந்தார்கள். அன்று செவ்வாய் கிரகத்தில் இறங்கி விடும் என்பது கணிக்கபட்டிருந்தாலும், காலையிலிருந்தே அனைவருக்கும் பரபரப்பு.. ஆகஸ்ட் 5 என அச்சிடபட்டிருந்த நீலவண்ண டி ஷர்ட் அணிந்தவர்கள் நிரம்பியிருந்த அந்த அறை   டென்ஷனலில் உறைந்திருந்தது. கியூரியாஸிட்டி செவாய்கிரகத்தை மெல்ல நெருங்கியதை ஸ்கிரினில் பார்த்த்தும்  கைதட்டியவர்களை மிஷின் டைரக்டர் கையை உயர்த்தி அமைதிபடுத்தினார்.   அடுத்து சில நிமிடங்களில்  41 அடி விட்ட பெரிய பாரச்சூட் மெல்ல விரிய அதிலிருக்கும் கியூராஸிட்டி  மிதந்து செவ்வாயின் மண்ணை  தொட்டதும். அந்த அறை சந்தோஷத்தின் உச்சத்தில் அதிர்ந்தது. வாழ்த்துக்கள்  அணைப்புகள் முத்தங்கள் என ஒரே ஆரவாரம். இந்த  இறுதிதரையிரங்கல்தான் திட்டத்தின் முக்கிய கட்டம். ஈர்ப்பு சகதி இல்லாத நிலையில் அது கடினமான ஒரு பாறையில் மோதி நொறுங்கிவிட்டால் இத்தனைபேருடைய கடின உழைப்பும் வினாடியில் விணாகிவிடும் தரையில் உட்கார வைத்திருக்கிறார்கள்.   திட்டமிட்டபடி வெற்றிகரமாக  கலம் தரையிறங்கியதை திரையில் பார்த்ததும் நீர் நிறைந்த கண்களுடன்   “  ” “இப்போது நிம்மதியாகயிருக்கிறது. அந்த கடைசி 7 நிமிடங்கள் பயங்கரமானது’’”  வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது. “  என்று சொன்னவர் இந்த தரையிறங்கலை மிக கவனமாக  திட்டமிட்டு தந்த வல்லுனர் குர்கிர்பால்சிங்.(Dr.Gurkirpal Singh)   இவர் ஒரு இந்தியர், என்பதை அறிந்து  நாசாவின் உதவியுடன்  உடனடியாக புதிய தலைமுறைக்காக போனில்  தொடர்பு கொண்ட   பேசிய போது...


.  

இந்த வரலாற்று சாதனை வெற்றியில் உஙகள் பணியும் முக்கியமானது என்று அறிகிறோம். மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.  உங்களது பூர்வீகம்,  இளமைக்கால  இந்திய வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.
 லூதியானவில் பிறந்தவன் நான். 1976லில் நான் பள்ளி இறுதியாண்டிலிருந்தபோது முதன் முதலில் நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சி  பணிகளை துவக்கியிருந்தது.வைகிங் என்ற குட்டி விண்கலம் ஏவப்பட்டிருந்தது. அந்த செய்திகளால் பிரமித்துபோயிருந்தேன். தொடர்ந்து படித்த, சேகரித்த தவல்களால் ஆர்வம் அதிகரித்து ஏரோநாட்டிகல் என்ஞ்னியராகி எதிர்காலத்தில் நாசாவில் வேலைக்கு சேர்ந்து செவ்வாய்க்கு போக ஒரு விண்வெளிகலம் டிஸைன் செய்ய வேண்டும் என கனவு காண ஆரம்பித்துவிட்டேன். விரும்பியபடி  சண்டிகர் என்ஞ்னியரிங்கல்லூர்யில் ஏரோநாட்டிக்கில் சீட் கிடைத்தது என் அதிர்ஷ்டம். தொடர்ந்து அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைகழகத்தில் 1984லில் எம்.எஸும், 1988ல் பிஹெச்டியும் முடித்தேன். என் வாழ்க்கைகனவான நாசாவில் 1989ல் பணிசெய்யும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கே பணியிலிருக்கிறேன்.
எந்த மாதிரியானது உங்கள் பணி.?
கலிபோர்னிய மாநிலத்தில் பஸாடினா எனற இடத்தில் செவ்வாய் கிரக் ஆராய்ச்சிகளுக்கென்றே  நாசாவால் துவக்கபட்டது மார்ஸ் சைன்ஸ் லேபரட்டரி (NASA’s Mars Science Laboratory MSL)  அதன் ஒரு அங்கம் நான் பணி செய்யும் ஜெட் ப்ரொப்புல்ஷன் லேபரட்டரி   (Jet Propulsion Laboratory ) ஒரு விண்கலத்தை செலுத்தி அதை அதன் பாதையில் போக செய்ய  கம்ப்யூட்டர்களுகு கட்டளைகளைத் தயாரித்து டிசைன் செய்வது தான் எங்கள் அணியின்முக்கியபணிகலீலியோ,மார்ஸ் பாத்பைண்டர்  காஸினி போன்ற பல பிராஜகெட்களில்  தொடர்ந்து பணியாற்றி இப்போது நாசா நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவராக இருக்கிறேன். என் மாணவ பருவ கனவை நனவாக்கும் வாய்ப்பு  இந்த கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்  கிடைத்திருப்பதால்  இதில் பணியாற்றிகொண்டிருப்பதை எனக்கு கிடைத்தை மிகப்பெரிய  அதிர்ஷ்ட்மாகவே கருதுகிறேன்.
கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்   உங்கள் பஙக்ளிப்பு என்ன எனபதை சுருக்கமாக சொல்ல முடியமா?
ஆகஸ்ட் 5 அது செவாய்யில் தரையிறங்கியதை உலகமே பார்த்தது. மிக சவாலான அந்த விஷ்யத்தை மட்டும்  6 ஆண்டு உழைப்பில் டிசைன் செய்தோம்.  E D L (ENTRY – DESENT- LANDING )  என்று அழைக்கபட்ட இந்த முறையில் தான் கலம் செவ்வாயில் இறங்கியது. இதுவரை முயற்சிக்காத புதிய முறையில் ஒரு பாராசூட்டை பயன்படுத்தி  மிக வேகமாக இறங்கும் கியூரியாஸிட்டி கலத்தின் வேகத்தை கட்டுபடுத்தி அதன் கடைசிகட்டதில் பாராசூட்டிலிருக்கும் ஒரு கிரேன் மூலம்  கலத்தை இறக்கும் முயற்சி அது. இதில் முக முக்கிய சவால்  செவ்வாய் கிரகத்தின் மேல்  ஒரு மைல் உயரத்தில் மணிக்கு 180 மையில் வேகத்தில் இறங்கிகொண்டிருக்கும் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 1.7 கீமி வேகத்திற்கு குறைக்க வேண்டும். அதற்கு பாரசூட்டிலிருக்கும் ஒரு குட்டி ராக்கெட்டின் வேகத்தை எதிர்ப்பு விசையில் கட்டுபடுத்தபட வேண்டும். இவை அனைத்தும்  7 நிமிடங்களுக்குள் நடைபெறவேண்டும்.(இதுதான் அந்த 7 நிமிடம்)   எங்களது ஜெ‌பி‌எல் லேப்  தயாரித்து  பல முறை பரிசோதித்துபார்த்த  டிசைனைதான் நாசாவின் மார்ஸ் ஸைன்ஸ் லேபரட்டரி பயன்  இறுதிகட்டத்தில் பயன் படுத்தியிருக்கிறது.
இந்திய விண்வெளிபயண திட்டங்களில் செவாய்க்கு கலம் அனுப்பும் திட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள்.  அதில் நீங்கள்  பணியாற்றும் வாய்ப்பு உண்டா?
இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் வேர்கள் இந்தியாவிலிருப்பதை மறக்க முடியாது. என் நெருங்கிய சொந்த்தங்கள் டெல்லியிலும் சண்டிகரிலும் வாழ்கிறார்கள். வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் இந்தியா வருகிறேன். இந்திய விண்வெளி திட்டம் நாசாவுடன் இணைந்த திட்டமாகயிருந்தால் ஒரு வாய்ப்பு கிட்டலாம். கிடைத்தால் மிகுந்த மகிழச்சியுடன் செய்வேன்.
ரமணன்

15/8/12


அழுகையில் அசாம்

(புதிய தலைமுறை19/8/12 கவர் ஸ்டோரிக்காக எழுதியது)

 

 

ஒரே இரவில் 400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள். இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன. என்ன நடக்கிறது அசாமில்?
ஒரே இரவில்-400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள்.
இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன.
கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தார்கள்.
இதையடுத்து அசாம் மாநிலத்தின் எல்லாப் பகுதியிலும் ரயில்களும் பஸ்களும்  ஓடாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஊர் திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டவர்கள் 25 ஆயிரம் பேருக்குமேல்.
ஊரடங்கு சட்டத்தின்கீழ் பல நகரங்கள்
போர்க்களத்திற்குப் போவதுபோல ராணுவம்  நகரங்களில் வந்திறங்கியது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை இத்தனை பெரிய அளவில் ஓர் இனக்கலவரம் நிகழ்ந்ததில்லை. வடகிழக்கு இந்திய மலைப்பகுதிகளில் ஏதோ ஒரு நாள் சிறு நடை நடந்தவர்கள் கூட அவற்றின் சலசலக்கும் நதிகள், மேலே வந்து விழும் சிறு தூறல், மெல்லக் கவியும் மஞ்சு, கம்பீரமான அந்த மலைகள் இவற்றில் தன்னை இழக்காமல் இருக்க முடியாது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள் கூட அந்தப் பகுதியின் வரலாற்றை வாசிக்க நேர்ந்தால் மனதில் ஓர் எழுச்சி பிறக்கும். அந்தப் பகுதியின் முக்கிய மாநிலமான அசாமில் இன்று இனப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
என்ன பிரச்சினை?
ஜூலை 20ம் தேதி கோக்ரஜாஹர் என்ற ஊரிலுள்ள பி.கே. சாலை என்ற நெடுஞ்சாலையில் போரோலாந்து விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேரை, இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். போரோலாந்து விடுதலைப்புலிகளுடன் பழிக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

யார் இந்த விடுதலைப்புலிகள்?

அதைப் புரிந்துகொள்ள அசாமை சற்று ஆழ்ந்து ஊடுருவிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 350 இனக்குழுக்களைச் சேர்ந்த மூன்றரைக் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தப் பகுதியோ, மியான்மர், சீனா, பூடான், வங்கதேசம் என்ற நான்கு நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியின் எல்லைகளில் 98 சதவிகிதம் இந்த அண்டை நாடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது. 2 சதவிகிதம்தான் இந்தியப் பகுதிகளோடு இருக்கிறது. இந்த எல்லா நாடுகளும் நிலத்தால் பிணைக்கப்பட்டவை. அசாம் மக்கள் அவ்வப்போது சொல்வதுபோல அவர்களுக்கு, ‘இந்தியாவிற்குப் போவதைவிட வங்கதேசத்திற்குப் போவது எளிது’.
350 இனக்குழுக்கள் என்கிற விஷயம் மானுடவியல் ஆராச்சியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால், நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு அது பெரும் தலைவலி. ஏதேனும் ஒரு குழுவை திருப்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்ற ஐந்து குழுக்களின் கோபத்தை சம்பாதித்துவிடும்.

அசாமில் உள்ள இந்த இனக்குழுக்களில் முக்கியமானது போரோ (ஆங்கிலத்தில் Bodo என எழுதப்படும் இந்தக் குழுவின் சரியான உச்சரிப்பு இதுதான்). இனக்குழுவினர் என்றால் ஏதோ தோலாடையும், இறகுத் தொப்பியும் அணிந்த காட்டுவாசிகள் என நினைத்து விடக் கூடாது. இவர்கள் சமவெளியில் வாழ்கிற பழங்குடி மக்கள். தங்களுக்கென தனி மொழி, கலாசாரம்,வழிபாட்டு முறைகள் கொண்ட இனக் குழுவினர் இவர்கள். வங்க மொழி, பர்மீய மொழி இவற்றின் வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதி வந்த இவர்கள், அண்மைக்காலமாக தேவநாகரி வரிவடிவங்களைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். நெல், தேயிலை இவற்றைப் பயிரிடும் முறைகள், பன்றி, கோழி வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு இவற்றை அசாமில் அறிமுகப்படுத்தியவர்களும் இவர்கள்தான்.
அசாம் மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் அளவிற்கு உள்ள இந்தக் குழுவினர் பிரம்மபுத்ராவின் வடகரையில், பூட்டான் மலைச்சாரலில் அமைந்துள்ள பகுதிகளில் கணிசமாக வசிக்கிறார்கள். தாங்கள் வசிக்கும் பகுதியை போரோலாந்து என்று அழைக்கிறார்கள். கோக்ரஜாஹர் என்ற நகரம்தான் இந்த போரோலாந்தின் தலைநகர்.
இந்தப் பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தது. உயர்கல்வி நிலையங்கள், வெகு தொலைவிலுள்ள குவாஹாத்தி, ஷில்லாங், திப்ரூகர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன. அவ்வளவு தொலைவு சென்று படித்தாலும் அவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. எஸ்.டி. பிரிவின்கீழ் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது என்றாலும் பல பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் அந்த இட ஒதுக்கீட்டினால் அவர்களுக்குப் பலன் கிடைக்கவில்லை. அசாம் மொழி பேசும் மக்களே வேலைகளை ஆக்ரமித்துக் கொள்வதாக இவர்கள் நினைத்தார்கள். அதனால், மாணவர்கள் கொதிப்போடு இருந்தார்கள்.
அவர்களுக்கு முந்திய தலைமுறையினர், 1960களில் தங்களது மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களை, ‘உதயச்சல்என்ற யூனியன் பிரதேசமாகப் பிரிக்கக் கோரி அரசியல் கட்சி அமைத்துப் போராடினர். ஆனால், மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம், இதேபோன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய வேறு ஒரு பழங்குடி மக்களுக்காக அசாமிலிருந்து பிரித்து மேகாலயா என்ற மாநிலத்தை உருவாக்கியது.
ஆத்திரமடைந்த போரோ மக்கள், 1987ம் ஆண்டு, ‘அசாமை இரு சமபாதிகளாகப் பிரிஎன்ற முழக்கத்துடன் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர். உபேந்திரநாத் பிரம்மா என்பவரின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள். போரோ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் நெடிய போராட்டத்திற்குப் பிறகு 1993ம் ஆண்டு போரோ மக்கள் வாழும் பகுதிகளின் நிர்வாகத்தை, அசாம் மாநிலத்திற்குள்ளேயே தன்னாட்சி உரிமைகள் கொண்ட போரோ டெரிட்டோரியல் கவுன்சில் (BTC) வசம் ஒப்படைத்தது மத்திய அரசு.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது பட்டியலின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கவுன்சில் சட்டமன்ற, நிர்வாக, நீதித்துறை அதிகாரங்கள் கொண்டது. மாநில அரசின் சட்டங்களோ, மத்திய அரசின் சட்டங்களோ, இந்த கவுன்சிலின் அனுமதி இல்லாமல் இந்தப் பகுதியில் செல்லாது. மலைவாழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவின்கீழ் முதன் முதலில் இடம் பெற்ற சமவெளிப் பழங்குடியினர் போரோக்கள்தான்.

முரண்பாடுகளால் மோதல்

முரண்-1

நாளடைவில் அகதிகளாக இங்கு வந்து குடியேறிய இஸ்லாமியர்களின் ஜனத்தொகை மெல்ல மெல்லக் கூட ஆரம்பித்து இன்று மாநில ஜனத்தொகையில் அவர்கள் 50 சதவிகிதத்துக்கும் மேல். இவர்களில் பலர் சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள். போரோ மக்கள் அதிகம் வாழும் பகுதியிலும் இவர்களது எண்ணிக்கை போரோ மக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது.
இப்போது அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் மூன்றிலொரு பகுதியினர்தான் போரோ மக்கள். மற்றவர்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல். ஆனால் ஆட்சி அதிகாரம், போரோ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிடிசியிடம் இருக்கிறது. இதனால் போரோ இனத்தைச் சேராத மக்களிடம் ஒருவித அச்சமும் சங்கடமும் நிலவுகிறது. அதனால், அவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களை பிடிசியின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். அதே சமயம் போரோக்கள் தங்களது அதிகாரம் பறி போய்விடுமோ எனப் பதட்டமடைகிறார்கள் .

முரண்-2

இந்தப் பகுதியிலுள்ள நிலங்கள் போரோ இனத்தவருக்கு என  ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் மற்றவர்கள் நிலம் வாங்கத் தடையில்லை. சிறுபான்மை சமூகத்தினர் மெல்ல மெல்ல போரோக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை வாங்க ஆரம்பித்து சில கிராமங்களை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். எந்தக் காரணத்திற்காக பிடிசி உருவாக்கப்பட்டதோ அந்த மூல நோக்கத்தையே இது அர்த்தமற்றதாக்கிவிட்டது என போரோக்கள் குமுறுகிறார்கள்.
நிலம் வாங்குவது தடை செய்யப்படாததால், அண்டை மாவட்டத்திலிருந்து இந்த மாவட்டத்திற்குக் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இதைத் தடுக்க அண்டை மாவட்டத்தின் எல்லை மூடி, சீல் வைக்கப்பட வேண்டும் என போரோக்கள் கோருகிறார்கள்.
இந்த மாவட்டங்களில்தான் இப்போது வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

அந்தியர் தூண்டுதலா?

இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பங்களாதேசத்திலிருந்து ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் உதவுகிறார்கள் என்று போரோக்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், அரசு அதை மறுத்து வருகிறது.
இந்தப் பகுதியில் இத்தனை கடுமையான இனக் கலவரம் மூண்டிருப்பது எங்கோ வெகு தொலைவில் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் வேண்டுமானால் பேரதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது பதற்றம் நிறைந்த ஒரு சென்சிட்டிவான பகுதி, அதுவும் அண்டைநாடுகளால் சூழப்பட்டுள்ள பகுதி என்பது அரசுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியும் அது அலட்சியமாக இருந்து விட்டது. காரணம்? வாக்கு வங்கி அரசியல். யார் மீதாவது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அந்த வகுப்பினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக இழந்து விடுவோமோ என்ற அச்சம் சார்ந்த அரசியல் நோக்கு. இப்படியே போனால்-
அரசியல்வாதிகள் வாக்குகளைக் காப்பாற்றிக்கொள்ள நாம் தேசத்தையே இழந்து விடும் நாள் அதிக தொலைவில் இல்லை.
 ரமணன்


13/8/12

ஹாத்தி மேரா ஸாத்தி

கல்கி 19/8/12

 

லாரன்ஸ்அந்தோனி ஆப்பரிக்க வனவிலங்குகளின் வாழ்க்கை முறைகளை ஆராயும் ஒரு வனவியல் ஆராயச்சியாளார். வன்விலங்குகளைப்பற்ரி புத்த்கங்கள் எழுதியிருப்பவர்.  20 வருடங்களுக்குமேல் ஆராய்ச்சிபணிகளிலிருப்பதால் ஆப்ரிக்க காடுகளின் பகுதிகளைப்பற்றிய, அதில் வாழும் மிருகங்களைப்பற்றிய அத்தனை தகவல்களும் அத்துபடி.   தனியார் வசமுள்ள தென் ஆப்பிரிக்க  காட்டுபகுதிகளில் ஒன்றான துலா-துலா என்ற இடத்திலிருக்கும் காட்டுபூங்காவின் தலமை வார்டனாக பணி புரிந்து கொண்டு தன் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன் காட்டு யானைகளின் நலனைப் பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து   வந்த ஒரு போனினால் பதறிப்போனார். 500 மைல் தொலைவில் ஒரு தனியார் காட்டுப் பகுதியில் ரவுடித்தனம் செய்யும் ஒரு யானை கூட்டத்தை சுட்டு கொல்ல போகிறார்கள் எனபது தான் அந்த செய்தி.  அவற்றை இடம் மாற்றுங்கள் நான் திருத்த முயற்சிக்கிறேன். சுடவேண்டாம் என இவர் கேட்டு கொண்டததால் 20 ரவுடி யானைகளை இவர் தலையில் கட்டினார்கள். அந்த யானைக்கூட்டதின் தலவி சரியான ரவுடி ராணி. பாதுகாப்பிலிருந்து தப்பிப்பதில் எகஸ்பர்ட்.  தப்பித்து வெளியே வந்தால் மற்ற யானைகளை கெடுத்துவிடும் என்பதால் அந்த யானைகூட்டம் வாழும் பகுதிக்கு மின்வேலியிட்டிருந்தார்கள்.  மின்சார மெயினும் ஜெனரேட்டரும்  இருந்த ரூமை தகர்த்தெரிந்து மின்சாரத்தைத் துண்டித்து  விட்டு தப்பிக்க முயற்சி செய்த முரட்டு புத்திசாலி தலவி. அந்த யானைகூட்டத்துடனே 18 மாதம் வாழ்ந்து அவைகளுடன் பேசி, பேசி

 ஆயுதங்களை கையாளாமல் ஒழுங்காக இல்லாவிட்டால் நாம் சாக வேண்டியதுதான் எனபதை அவைகளுக்கு புரிய வைத்து திருத்தி அவைகளின் ஒரிஜன்ல் இருப்பிடத்தில் கொண்டு விட்டார் லாரன்ஸ்.  இந்த முயற்சியில் தனது  போராட்டங்களைக்கு பின்  அந்த  பெண்யானை தன்னை புரிந்து கொண்டு கட்டுபட்டது பற்றியும் பின் படிப்படியாக சாதுவாகிபோனதைப்பற்றியும்  லாரன்ஸ்  எழுதிய 

 “யானை சொல்லும் ரகசியங்கள்”“ என்ற புத்தகம்  கடந்த இரண்டு ஆண்டுகளின் பெஸ்ட் செல்லர். 6 மொழிகளில் மொழி பெயர்க்கபட்டு உலகமெங்கும் இப்போது  விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.  காட்டுவாழ்க்கையைப்பற்றியும் நீர்யானைகள் பற்றியும் இவர்  எழுதிய முந்தைய இரண்டு புத்தகங்களும் பிரபலமானவை. இவர் கடந்தமாதம் எதிர்பாராதவிதமாக இறந்து போனார். உலகமறிந்த வனவியல் ஆராயச்சியாளாரான லாரன்ஸ் மறைவுச்செய்தியை கேட்டு அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின ஒரு யானை கூட்டம   600 மைல் தொலைவில
 தாங்கள் வாழும் காட்டுபகுதியிலிருந்து பனிரெண்டு மணி நேரம் தொடர்ந்து ஒரே வரிசையில் அணிவகுத்து நடந்து  (கூட்டமாக வந்தால் தாக்க வரும் யானை கூட்டம் எனகருதி தாங்கள் விரட்டபட்டுவிடுவோம்  என்பதால் கட்டளையின் கீழ் இயங்கும் யானை வரிசையைப்போல வந்திருக்கின்றன) லாரன்ஸின் வீட்டிற்கு வந்தன அவரால் திருத்தபட்ட  முன்னாள் ரவுடியானைகளின்  கூட்டம். வெகு தொலைவிலிருக்கும் (600மைல்) அவைகளுக்கு இவரது மரணம் எப்படி தெரிந்தது என்பதும் எபபடி அவ்வளவு தூரம் நடுவில் வழி தவறாமல், ஓய்வெடுக்காமல்  சரியாக இவரது வீட்டிற்கு வந்தது எனபதும் மிகப் பெரிய ஆச்சரியம்.. ஆச்சரியத்திற்கு மேலும் ஒரு காரணம் லாரன்ஸ் தற்போது வசிக்கும் இடத்தை இந்த யானைகள் பார்த்தில்லை.  வந்த இடத்தில் லாரன்ஸின் வீட்டில் இரண்டு  நாட்கள் இருந்த பின் தாமாகவே தங்கள்  இருப்பிடத்திற்கு அணிவகுத்து திரும்பிய இந்த யானை கூட்டத்தை டிவி செய்தியாளார்கள் துரத்தி சென்ற போது லாரன்ஸின் மகன் “ நாட்டின் பெரிய தினசரிகள் அஞ்சலி செய்திகளை வெளியிட்டதைவிட பெரிய கெளரமாக இந்த யானை கூட்டம் வந்ததை கருதுகி
றோம். தயவு செய்து எங்கள் விருந்தினர்  கோபபடும்படி எதுவும் செய்யாதீர்கள்  என வேண்டுகோள் விடுத்து  நிறுத்தியிருக்கிறார்.
விலங்குகளில் யானை மிக புத்திசாலி எனபது ஆராய்ச்சிகளால் நிரூபிக்க பட்ட விஷயம். அவைகளுக்கு டெலிபதியும் உண்டோ என்பது இப்போது ஆராயப்படவேண்டிய ஒரு விஷயம்  
-ரமணன்      




11/8/12

உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன்

இன்று(11/08/12) மதியம் 1.மணிக்கு ஒரு போன் வந்தது. இஸ் மிஸ்டர் ரமணன் தேர்?
என்பதை தொடர்ந்து  “ஐ ஆம் சிங் காலிங் ஃபிரம் யூ எஸ் என சொன்னதை கேட்ட என் மனைவி மீரா  போனை கொடுக்க    “சிங்? ஃபரம் வேர் என ? கேட்டு குழம்பிய நான்  அவர் தன்பெயரைச்சொன்னவுடன் நேற்றிரவு (10/11/12) அனுப்பிய ஈ மெயில்  பளிச்சென்று நினைவுக்கு வர மகிழ்ச்சியில் பதறிப் போனேன்,  பல ஆண்டுகள் ஆராய்ச்சிகளுக்கு பின்னர் பல ஆயிரம் கோடி  செலவில் செவ்வாய் கிரகத்திற்கு   அனுப்பட்ட க்யூராரிஸிட்டி  விண்வெளிகலம் 8 மாத பயணத்திற்கு (57 கோடி கீமீ) பின்னர் பத்திரமா  செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க ஒரு டிசைனை வடிவமைத்து செய்லாக்கிய ஸ்பேஸ் ஸைண்டிஸ்ட் டாகடர் குருகிருபால் சிங் தான் அவர். 

செவ்வாய் கிரக விண்கல செய்திகளை கவனித்து வந்த போது ஒரேஒரு வரியில் இவரது பெயரை பார்த்தேன். இந்தியப் பெயராக இருக்கிறதே இவரைப்பற்றி எழுதலாமே (பத்திரிகையாளன் புத்தி) என விபரங்கள் தேட ஆரம்பித்தேன், கூகுள், யாகூ, ஃபேஸ்புக் எதிலும் சிக்கவில்லை.நாஸா வெப் ஸைட்டிலும் மேய்ந்து பார்த்தேன். ஒன்றும் தேறாததால் நாஸா பிரஸ் யூனிட்டுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்.. அவர்களும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அலசி நாஸாவின் தலமை விஞ்ஞானிகளிண் டைரக்டரியில் இருந்த் சிங் பெயர்களை வடிகட்டி ஒருவருக்கு  நேற்றிரவு  ஒரு மெயில் அனுப்பினேன். அதற்கு தான் இன்று அவருடைய போன். நான் அனுப்பிய ஈ மெயில் உண்மையானதுதான?- ஸ்பாம் இல்லையே?  எனபதை உறுதி செய்துகொள்வதற்காக போன்செய்ததாக சொன்னவர் மிக அன்புடன் பேசி கொண்டிருந்தார். எப்படி என்னால் அந்த மெயிலில் தொடர்பு கொள்ல முடிந்த்து என ஆச்சரியபட்டார். அவர் பெயர் வந்திருக்கும் பகுதியை இந்துவிலிருந்து  படித்து காட்டியபோது சந்தோஷப்பட்டார். 23 வருடங்கள் நாஸாவில் வேலை செய்வதையும், பெறோர்கள் டெல்லியில் இருப்பதையும் சொன்னார்.  நான் கேட்ட விபரங்களையும் அவர் படத்தையும்  உடனே மெயிலில் அனுப்பியும் வைத்தார். இதன் கிழே அந்த மெயிலையும் பதிவு செய்திருக்கிறேன்.
இவரது படத்தையும், விபரங்களையும் நேரடியாக  முதலில் பெறறிருக்கும்  ஒரே இந்திய் பத்திரிகையாளர் நான்தான். எனபதைவிட  மிக சந்தோஷமான விஷயம்  மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும்  இந்த மனிதரை,  ஒரு சக இந்தியனின், பத்திரிகையாளானை மதித்து மிக எளிமையாக அன்புடன் பேசி உதவிய ஒரு உயர்ந்த மனிதனை இன்று தெரிந்து  கொண்டது தான்.  
ரம்ணன்
கட்டுரை விரைவில்  
Inboxx
gurkirpal singh brensim@prodigy.net
14:14 (8 hours ago) to me
Dear Ramanan:
I had the pleasure of speaking with you a few minutes ago. Thank you for the very kind words. I am sending the material that you had requested - brief bio, a picture (attached JPEG), and a brief description of my contributions to the Curiosity mission. I am hoping that this will serve your purpose. Let me know if I missed anything. Please note that additional information regarding the mission may be obtained from the Landing Press Kit at http://mars.jpl.nasa.gov/msl/news/newsroom.  I would be grateful if you could acknowledge this e-mail.
Best regards,
Gurkirpal
 Bio
Dr. Gurkirpal Singh is a Principal Scientist at NASA’s Jet Propulsion Laboratory  in Pasadena, California. An Aeronautical Engineering graduate (1982) of Punjab Engineering College, Chandigarh, he received M.S. (1984) and Ph.D. (1988) degrees in Aerospace Engineering from The University of Michigan, Ann Arbor, Michigan, U.S.A. Dr. Singh has been with the Jet Propulsion Laboratory since 1989, where he has designed and developed spacecraft guidance and control algorithms for several highly successful NASA space missions including Galileo, Cassini, Mars Pathfinder, Deep-Space 1, Mars Exploration Rovers, and Mars Science Laboratory/Curiosity missions. Born in Ludhiana, Punjab, he received his primary and secondary education in what is now Uttarakhand. News of successful Mars landings of NASA’s Viking missions in 1976 inspired him from a very early age to pursue a career in aerospace engineering and, in particular, space exploration. It was this motivation that in 1982 brought him to the U.S. to pursue higher education in these disciplines. After having been deeply engaged in the front lines of space exploration at JPL for the last 23 years, he considers himself fortunate to be living his childhood dream. Dr. Singh still has immediate family in India who currently reside in Chandigarh and New Delhi.
 Contribution
On the night of August 5, 2012, NASA’s Mars Science Laboratory (MSL) mission successfully landed the rover Curiosity on the surface of Mars inside Gale Crater. Dr. Gurkirpal Singh designed and developed several key components of the spacecraft’s Entry, Descent, and Landing system. The guidance and control algorithms designed by Dr. Singh were used by MSL during the terminal descent and landing phase of the mission which began after parachute jettison approximately 1 mile above the Martian Surface, and ended approximately 1 minute later with rover touchdown. During this critical, heart-stopping minute Dr. Singh’s guidance system commanded the rocket engines located on the MSL’s Descent Stage to precisely control the spacecraft descent and slow it down from an initial speed of approximately 180 miles per hour to approximately 1.7 miles per hour at touchdown, thus guiding Curiosity to a controlled, soft landing. The images taken by Curiosity after touchdown confirmed that the rover had indeed landed safely, ready to begin the next phase of its mission.
 --- On Sat, 8/11/12, Singh, Gurkirpal (3443) <gurkirpal.singh@jpl.nasa.gov> wrote:
From: Singh, Gurkirpal (3443) <gurkirpal.singh@jpl.nasa.gov>
Subject: FW: Request from Media
To: "Home" <brensim@prodigy.net>
Date: Saturday, August 11, 2012, 1:03 AM






.

7/8/12

பஹஃரைன் போவோமா?


சுவடுகளில்  டாலர் தேசம் விடியோகளுக்கு தனிபக்கம் இருக்கிறது. இது  
ஒரு விடியோபடத்தையே ஒரு பதிவாக போட முடியுமா? என்பதின் சோதனை முயற்சி .
படத்தை  எளிதாக பார்க்க முடிகிறதா எனபதை சொல்லுங்களேன்



 

6/8/12

கடலுக்கு அடியில் கொட்டி கிடக்கும் வெள்ளி கட்டிகள்


(கல்கி12/8/12)

ஆழ் கடலின் அடி மட்டத்தில் என்ன கிடைக்கும்? அரிய கடற் தாவரங்கள், மீன் வகைகள்,  சிப்பி சங்கு, முத்து போன்றவைகள் தானே. ஆனால் சமீபத்தில் கிடைத்திருப்பது  வெள்ளி கட்டிகள் அதுவும் அரசு முத்திரையிடப்பட்ட சுத்த வெள்ளி கட்டிகள். கடலின் கீழே மிக ஆழத்தில் கண்டெடுக்கபட்ட இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய  மிக கனமான புதையாலாக வர்ணிக்கபடுகிறது இந்த கண்டுபிடிப்பு.
1941ல் கல்கத்தாதுறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு இந்த  240  டன் வெள்ளிகட்டிகள் எஸ். எஸ் கரிஸோப்பா என்ற கப்பலில் அனுப்ப பட்டது.

24/7/12

2012 ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் ஒரு சினிமா

 

இங்கிலாநில் 150 திரையரங்குகளில்   திரையிடபட்டிருக்கும்  ஒரு படத்திற்கான இரண்டு மாதத்திற்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம்  எந்த புதிய ஹாலிவுட் படமுமில்லை. ஒரு 31 வருட பழைய படம்  நம் கர்ணனைப் போல  டிஜிட்டல் டெக்னாலஜியில் புதுபிக்கபட்டிருக்கும். ஒரு படம். தொழில் நுணுக்கத்துடன் தயாரிக்கபட்டிருக்கும் படத்தின் பூளுரே டிவிடியும் விற்று தள்ளி கொண்டிருக்கிறது.

17/7/12

(இன்-ஸைட்    புத்தக அறிமுகம்


வலிமையான பாரதத்தைப் படைக்க ஓளி படைத்த கண்ணினாய் வா வா என்றான் பாரதி. வெளிநாடுகளில் கண்மருத்துவத்தில் பட்டங்களும் பயிற்சிகளும் பெற்ற ஒரு இளைஞன் படிப்பை முடித்தவுடனேயே, பொதுமக்களின் நன்கொடையில் ஒரு மிகப்பெரிய கண்மருத்துவ மனையை துவக்கி எழைகளுக்கு தன் படிப்பால் சேவை செய்ய வேண்டும் எனற உறுதியான நெஞ்சத்தோடு தமிழ் நாட்டுக்கு திரும்பி, போராடி வென்ற ஒரு இளைஞனின் கதையைச்சொல்லுகிறது இந்த புத்தகம்.

11/7/12

 கடவுளை கண்டார்களா?

இந்த உலகம் பிறந்தது எனக்காக  என மகிழும்  நம்மில் சிலருக்கு தொடந்து எழுந்துகொண்டிருக்கும்  ஒரு கேள்வி- இந்த உலகம் எப்படி பிறந்தது? யார் படைத்தது?  
 வர் தான்  கடவுள் என உலகின் பல மதங்கள் சொல்லுகின்றன . ஆனால்

கருந்தேள் கண்ணாயிரம்

ஏதோ காமிக் புத்தக தலைப்பு மாதிரி இருக்கும் இது ஒரு  வலைப்பூ காமிக்குகளுக்கும் இதற்கும் ஒரு  சம்பந்தமும் கிடையாது. லார்ட் ஆப் ரிங்ஸ் படம் நினைவிருக்கிறதா? பன்னிரெண்டு ஆண்டுகள் உழைப்பில் ஒரு புதிய உலகையும் ஏராளமான  கிராஃபிக்ஸில் பல அசாத்தியங்களை காட்டிய முதல் படம்..

நெல்லையிலிருந்து வீனஸுக்கு..

கடந்த ஜுன் 6ம்தேதி விண்வெளிமண்டலத்தில்  105 ஆண்டுகளுக்கு பின்  நடந்த  ஒரு அரிய நிகழ்வு  ” “டிரான்ஸ்சிட் ஆப் வீனஸ்” “. அன்று காலை 5.30 மணிக்கு வெள்ளி கிரகம் (வீனஸ்) சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரே நேர் கோட்டில் சஞ்சரித்தது. தகிக்கும் சூரிய கிரகத்தின் முன்னே மெல்ல மறு புறம் நோக்கி நகர்ந்த வெள்ளி கிரகத்தை ஒரு சின்ன கருப்பு புள்ளியாக நகர்வதை


கனவை மறந்த குடியரசு தலைவர்.


இந்திய அரசியலில் சிலர் நிரந்தரமாக இரண்டாம் இடம் இடத்திலிருக்கும் பெருமையை பெற்றவர்கள்.  என்றாவது ஒரு நாள் பிரதமராவோம் எனற  கனவில்  தொடர்ந்து எல்லா பிரமதர்களுக்கும் அடுத்த இடத்திலிருந்து வந்த பிராணப்

20/5/12

அரண்மனையில்வாழும் புத்தகங்கள்




ஒரு கிரேக்க கோட்டையை போல் கம்பீரமாக நிற்கும்  அந்த கட்டடித்தின் முகப்பில் திமிறிப்பாயும் குதிரையை அடக்கும் வீரன்நெப்ட்யூன் தேவதை   சிலைகளில் மீது பீறீட்டு பாயும் நீர் ஊற்றுக்கள். கட்டிடத்தின் இருபுறமும் முதல் மாடிக்கு இட்டுச்செல்லும் வளைந்த படிகள். ஏறி சென்ற நம்மை பிரம்ப்பில் ஆழத்துவது  பளிங்கு தூண்கள் பரவி நிற்கும் பிரமாண்டமான கூடம்.  உலகின் மிகப் பெரிய நூலகம் என்று சொன்னார்களே தவறுதலாக எதாவது அரண்மனைக்குள் வந்துவிட்டோமோ என எண்ணிக்கொண்டிருந்த்போது  “வெல்கம் டூ அமெரிககன் லைபரரி ஆப் காங்கிரஸ் “ என சொல்லி தன்னை அறிமுகபடுத்திக்கொளகிறார் நமக்கு நூலகத்தை காட்டபோகும் கைட்.
உலகின் மிகப்பெரியமிக அதிகமான புத்தகங்களை கொண்ட இந்த லைப்பரி ஆப் காங்கிரஸ் வாஷிங்டன் நகரில் அமெரிக்க நாடளுமன்றத்திற்கு அருகிலிருக்கிறது. 210 ஆண்டுகளுக்கு முன் துவக்கபட்ட இதில்  இன்று வரை புதிய புத்தங்கள் சேர்க்கபட்டு பிரமாதமாக நிர்வகிக்கபடுகிறது.   புத்தகங்கள் நிறைய  கண்னாடி அலமாரிகள் மேசைகளில் பரவிகிடக்கும் புத்தங்கங்கள்,பத்திரிகைகள்  என்றே நூலகங்களைப்பார்த்து பழகிய நமக்கு இந்த ஆடம்பரமான அரண்மணை சூழ்நிலை ஆச்சரியமாகயிருக்கிறது. 75 அடி உயரத்தில் வண்ண சித்திரங்கள் நிறைந்த  வட்டவடிவ கண்ணாடி விதானம்,  அதே போல் படங்களுடன் கண்ணாடி சாரளங்கள் அமைக்கபட்டிருக்கும் அந்த கூடம் தான் ரீடிங் ரூம்.  வட்ட வடிவில் தனித்தனி சிறு டெஸ்க்கள் அதில் மேசை விளக்கு.  புத்தங்கள் எல்லாம்  அருகிலிருக்கும் தனித்தனி அறைகளில்துறைக்கு ஒரு அறை சிலதுறைகளுக்கு பல அறைகள்.  அறைகளிலிருக்கும் புத்தகங்கள்  வெளியிலிருந்து பார்த்தால்  தெரியாதவண்ணம் அமைக்கபட்ட அலமாரிகளில். விரும்பித்தேர்ந்தெடுத்த புத்த்கத்தை நாம் இருக்கும் இடதில் கொண்டுவந்து தந்து விட்டு படித்துபின் உடனே கொண்டுபோய் அல்மாரியில் வைத்துவிடுகிறார்கள் இங்குள்ள பணியாளார்கள். அதனால் காலியாகயிருக்கும் மேசையில் புத்தகங்கள் இருக்காது.
நூலகத்தின் சுவர்களிலும்,மாடிப்படி வளைவுகளிலும் அழகான ஒவியங்கள் கலைபொருட்கள் நிரம்பியிருக்கிறது. நடைபாதைகளின் மேற்கூரை முழுவதும் கண்னைபரிக்கும் வண்ணத்தில் சித்திரங்கள்  அமெரிக்க சுதந்திர போரின் காட்சிகள்நாட்டின்  அரசியல் சாஸனத்தின் கையெழுத்துபிரதிசட்டவடிவின் முதல் அச்சுபிரதிகொடிகள் சின்னங்கள்  சிலைகள் என ஒரு அருங்காட்சியகமாகவே அமைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) உறுப்பினர்களின் தேவைக்காக நிறுவபட்ட இதை மிகப்பெரிய நூலகமாக்க கனவுகண்டவர்அன்றைய அதிபர் ஜெபர்ஸன்தன்னுடைய சொந்த நூலகத்தை தந்து உதவியிருக்கிறார். இன்று  அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான தேசிய நூலகமாகவும் ஆராய்ச்சி நிலையமாகவும்  அங்கிகரிக்கப்ட்டிருக்கும் இந்த நூலகத்தின் தலமை நூலகர் அமெரிக்க அதிபரால் நியமிக்க படுகிறார். நூலகரின் பதவிக்காலம் வாழ்நாள் முழுவதும். அமெரிக்க அதிபர்துணை அதிபர்சென்னட்டர்கள்சுப்ப்ரீம்கோர்ட் நீதிபதிகள் மட்டும்தான் இந்கிருந்து புத்தகத்தை இரவல் பெற்று எடுத்துசெல்ல முடியும் ம்ற்றவர்களுக்கு இஙுகு படிக்க மட்டுமே கொடுக்கபடும். காங்கிரஸின் கூட்ட தொடரின் போது எதேனும் தகவல் கேட்கபட்டு அந்த சமயத்தில் தேவையான புத்தகம் நூலகத்தில் இல்லாது போகும் வாய்ப்பை தவிர்க்கவே இந்தமுறை.
3 கோடி புத்தங்கள் கேட்லாக் செய்யபட்டிருக்கும் இந்த நூலகத்தில் 400க்கு மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில்  தொல்காப்பிய பதிப்பையும்1822ல் எதிர்புறத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் லண்டனில அச்சிடபட்ட பார்மார்த்த குருகதையும் இருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் உள்பட அனைத்து புத்தகங்களையும் பார்க்க முடிந்தது சந்தோஷமான ஆச்சரியம்.  கைகொடுக்கும் தொழில்நுட்பத்தின் உதவியோடு இன்று பலவற்றை டிஜிட்டல் செய்துவைத்திருக்கிறார்க்ள். பல புத்தங்களை கப்யூட்டர் திரையிலே படிக்கலாம்.அதற்கான டச் ஸ்கிரீன்களைகூட கலைநயத்துடன் சூழ்நிலைக்கேற்ப வடிவமைதிருக்கிறார்கள். இவைகளைத்தவிர 60 லட்சம் கையெழுத்து பிரதிகள், 3000ஆண்டுகளின் செய்திதாட்கள், பத்திரிகைகள் லட்சகணக்கில். உலகின் முதல்  அச்சிட்ட பைபிளிலிருந்து இந்த மாதம் வந்த ஹாரிபாட்டர் வரை எல்லாம் இருக்கிறது. இதைத்தவிர போட்டோக்கள்மேப்கள்இசை தட்டுக்கள் வேறு. நூலகம் 5 மைல் நீளத்திற்கு 4 கட்டிடங்களில் பரவிகிடக்கிறது. அவைகள் சுரங்க பாதையால் இணைக்கபட்டிருகிறது.  நீங்கள் டீவிட்டரில் தனிப்பட்ட முறையில் இல்லாமல் பப்ளிக் என்ற வகையில் டிவிட் செய்பவராஅமெரிக்க அரசு அல்லது வேறு செய்திகள் பற்றி நீங்கள் டீவிட் செய்தால் அதன் பிரதியும் இஙகு சேமிப்ப்படுகிறது. இதற்காக டீவிட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருகிறர்கள்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் இதை பயன்ப்டுத்துகிறார்களா?  “நிறையபல செனட்டர்கள் இங்கு வருவார்கள் ஹிலாரி கிளிண்ட்டன் போன்றவர்கள் அடிக்கடி வருவதோடு எதாவது தகவல்களை கேட்டுகொண்டேயிருபார்கள்  சிலருக்கு எந்த புத்தகம் எங்கே எனப்து கூட அத்துபடி”“. என்கிறார் ஒரு உதவியாளார்.
உல்கின் மிக பெரிய நூலகத்தை பார்த்ததே  ஒரு நல்ல புத்தகத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அதோடு வெளியே வருகிறோம். நாலு கட்டடங்களையும் நீண்ட சுரங்கபாதைகள் வழியே கடந்துவிட்டதால்   வெளியே வரும்போது வேறு ஒரு தெருவில் இருக்கிறோம்
---------------------------------------------------

13/5/12

ஜெயிக்க போவது யாரு?


ஜெயிக்க போவது யாரு?

ஒரு வழியாக  வேட்பாளார் யார் எனபது நிச்சியமாகிவிட்டது. வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் 2 வது முறையாக அதிபர் பராக் ஒபாமா போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து போட்டியிடும்  குடியரசு கட்சி  வேட்பாளார் ரோம்னி எனபது இப்போது நிச்சியமாகிவிட்டது. அமெரிக்க அரசியலில் உட்கட்சி ஜனநாயகம் மிக வலுவானது.  வேட்பாளாரை உயர் மட்ட குழு தேர்ந்தெடுப்பது, கட்சிதலமைக்கு வழங்கபடும் அதிகாரத்தால் நியமிக்கபடுவது போன்ற சமாசாரங்கள எல்லாம் கிடையாது.  வேட்பாளாராக தகுதி பெற்ற  போட்டியிட விரும்பவர்கள்  ஒவ்வொரு மாநிலங்களில்  நடைபெறும் கட்சி மாநாடுகளில் மற்றவர்களை விட  அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருக்க  வேண்டும். அவர்தான் கட்சியின் வேட்பாளாராக முடியும். கடந்த முறை ஒபாமாவுக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் இறுதி வரை கடுமையான போட்டி இருந்தது நினைவிருக்கிறதாஇம்முறை குடியரசு கட்சியின் உள்கட்சி தேர்தல்களில் துவக்கத்திலிருந்தே ரோம்னி பல மாநிலங்களில் முன்னிலையிலிருந்தார். போட்டியிட்டவ்ர்கள் தங்கள் பலம் அறிந்து ஒவ்வொருவராக போட்டியிலிருந்து விலகிவிட கட்சி வாக்கெடுப்பில் இப்போது அவர் மட்டுமே இருப்பதால் அவர் தான் ஒபாமாவை எதிர்க்கபோகும் வேட்பாளார் எனபது உறுதியாகிவிட்டதுவிரைவில் கட்சி அதிகாரபூர்வமாக  இதை அறிவிக்கும்.
65 வயது ரோம்னி நீண்ட அரசியல் பாரமபரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவர். மாஸாசுஸட்ஸ் மாநில கவர்னராகயிருந்தவர். அவரது தந்தையும் மாநில கவர்னாராகயிருந்தவர். 2008 அதிபர் தேர்தல் வேட்பாளாரவதற்கு உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஒதுங்கியவர். ஹார்வர்ட் பல்கல்லைகழகத்தின் எம்பிஏ. படிப்பிற்கு பின் நிதிநிறுவன பிஸினஸ் துவங்கி மிக பெரிய வெற்றிகளை அடைந்தவர். 5 குழந்தைகளும், 15 பேரகுழந்தைகளும் உள்ள  இவர் இன்று அமெரிகாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். சொத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்கள். ஆண்டு வருமானம் 45 மில்லியன் டாலர்கள்
உள்கட்சி தேர்தலில் இவரின் செல்வாக்கு ஒங்குவதை கவனித்தவந்த  ஒபாமா மற்றவர்களை கண்டுகொள்ளாமல் இவரது வாதங்களுக்கு மட்டுமே பதிலளித்து கொண்டிருந்தார். கட்சி தேர்தல்கள் முடிந்து வேட்பாளார் நிலையை அடைந்ததும் அனல் பறக்கும் பிராசரத்தை  தொடங்கிவிட்டார்  ரோம்னி.  “ஒபாமா எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டார் அவரது அரசு செயலிழந்து கிடக்கிறது என ஆரம்பித்து. வரிவிதிக்கும்முறைகளில் மாற்றம் என்ற பெயரில் சாதரண அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிகளை கூட்ட முயற்சிக்கிறார், பொருளாதார சுதந்திரத்தை முடக்கும் வகையில் தனியார் துறைகளில் அரசின் தலையீடு, கட்டுபாடு இல்லாத பெட்ரோல் விலையேற்றம்.“  என ஒபாமா மீது அடுக்கடுக்கான  குற்றசாட்டுகளை வைக்கிறார். முக்கியமான விஷயம் ஒபாமா அறிவித்து செயல் படுத்த முடியாமல் தவிக்கும் புதிய மருத்தவ பாதுகாப்பு திட்டம். இது கிட்டதட்ட கலஞர் காப்பீட்டுதிட்டம் மாதிரி. அமெரிக்காவில் அரசாங்க மருத்துவமனை என எதுவும் தனியாக கிடையாது.  தனிநபர் மருத்தவ சேவைக்கு  மிக அதிக கட்டணம்.  இதை நோயாளிகளின் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மருத்துவமனை பெற்றுகொள்ளும். இதை மாற்றி வயதானவர்களுக்கும், வறியோர்களுக்கும் ஆகும் மருத்தவ செலவை அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணத்தில் மருத்துவமனைகள் பெற ஒபாமா ஒரு திட்டத்தை அறிவித்தார். இது இப்போது அரசியலாகியிருக்கிறது. இருக்கும் நல்லசிஸ்டைத்தைவிட்டு விட்டு மக்கள வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டம் இது எனபது ரோம்னியின் வாதம்.  அடுத்தது கடந்த தேர்தலின் போது  ஆப்கானிஸ்தனிலிருந்து படைகளை வாபஸ் பெறுவேன் என சொல்லி அதை இன்னும் முடிக்காமல் இப்போது ஈரானுக்கு  அதிக அமெரிக்க படைகள் அனுப்பபடுகிறது.  அவர் சொன்னது எல்லாம்  “தேர்தல் நேர சத்தியங்கள்” “  மட்டுமே என பாய்கிறார்.

அதிகார பூர்வமாக தேர்தல் பிரச்சாரங்கள் துவக்கப்படாவிட்டாலும்அதிபர் ஒபாமாவின் சமீப பேச்சுகளில் அரசியல் தொனிக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய சம்பாதிக்கும் அமெரிக்க கோடிஸ்வரர்கள்- ரோம்னி போன்றவர்கள் குறைவாக  15 % வரி மட்டுமே செலுத்துகிறார்கள் இது நியாமில்லை. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் 30% வ்ரி செலுத்த வேண்டும் இது அரசங்கத்தின் பல நல திட்டங்களுக்கு உதவும் என அறிவித்திருக்கிறார். ரோம்னி அளவு பணக்காரர் இல்லையென்றாலும் ஒபாமாவும் ஒன்றும் சாமனியன் இல்லை  சாதாரண அமெரிக்கர்களை விட பணக்காரர். அவர் எழுதிய புத்தகங்களிலிருந்து மட்டும்  ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர்கள்  சம்பாதித்து கொண்டிருக்கிறார்.
உலக  முதல் பணக்காரகள் பட்டியலில் ஆண்டு தோறும் தவறாமல் இடம்பெறும் திரு வாரன் பஃபெட் ஒமாவின் வரிஉயர்வு திட்டத்தை வரவேற்று இது சமூக கடமை என அறிவித்திருக்கிறார்.  வரியை உயர்த்தபோகிறோம் என்று சொல்லி ஓட்டு கேட்கபோகும் முதல் அரசியல் வாதி ஒபாமாவாகத்தனிருப்பார்..
.  “நியமான வரிவீதம் எனபதைவிட அடிப்படையாக சரி செய்ய வேண்டிய  பொருளாதார நடவைடிக்கை என்ன என்று இரண்டு பேரும்  சொல்லபோவது தான் வெற்றியை தீர்மானிக்க போகும் விஷயம்”“ என்கிறார்..  திரு. மாட் பெனட். இவர் பில்கிளிண்டன் அதிபராக இருந்தபோது அவரது உதவியாளாரக வெள்ளை மாளிகையில் பணியாற்றியவர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை கணிக்கும் எக்ஸ்பர்ட்.
 “மாறுதல்கள் வரும் என சொல்லி கடந்த  தேர்தலில்  வென்ற  ஒபாமா அவருக்கு முன்பிருந்த குடியரசு கட்சி அதிபர் புஷ் செய்த அத்தனை மோசமான காரியங்களையும்  எந்த மாறுதலுமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்.  எகிப்து, லிபியாவில் புரட்சிகளை உருவாக்கியது, ஈரானுக்கு படைகளை அனுப்பியது, ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவதளம், ராணுவ ஜெயில்களில் மனித உரிமை மீறல்அக்கிரங்கள், வீக்கி லீக் போன்ற பிரச்சனைகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திகொள்ள பார்க்கிறார். அமெரிக்கா வலிமையாக இருந்தால் தான் உலகம் பத்திரமாகயிருக்கும் என நம்புவர்தான் அமெரிக்க ஜனாதிபதி. இதை விரும்பும் அமெரிக்க மக்கள்  தேர்தல் நேரத்தில்  இதை யார் செய்வார்கள் என நம்புகிறார்களோ அவர் தான் ஜெயிப்பார். என்கிறார் இந்திரஜித் பார்மர். இவர் மான்செஸ்டர் பல்கலைகழக் பேராசிரியர். அமெரிக்க அரசியல், அதிபர்கள் பற்றி பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
மக்கள என்ன நினைக்கிறார்கள்கடந்த மாதமே கருத்துகணிப்புகள் துவங்கிவிட்டன முதல் கருத்து கணிப்பில் சிறிய வித்தியாசத்தில் ரோம்னி முந்தினார். இப்போது கால்ப் டெய்லி என்ற மீடியா சார்பில் பலவேறு மாநிலங்களில் நடத்த பட்ட கணிப்பில் ஒபாமாவிற்கு 50% வீத ஆதரவும் ரோம்னிக்கு 44%வீதமும் பதிவாகயிருக்கிறது. இடைவெளி 6% எனபது அதிகம் மட்டுமின்றி ஆட்சியில் உள்ள அதிபர் 50% மக்கள் ஆதரவை பெற்றிருப்பது. ஆச்சரியமான ஒரு திருப்பம்.. நீண்ட நாள் தேடலுக்குபின் அதிரடி ஆப்ரேஷனில் பின்லெடனை கொன்றது, பலநூற்றுகணக்கான பாங்குகள் திவாலானதால் ஏற்பட்ட சிக்கலை சரி செய்ததுசிட்டிபாங்க போர்ட் போன்ற நிறுவனங்களை அரசு பணத்தில் காப்பற்றி வேலைவாய்ப்பை பெறுக்கியதினால்  அமெரிக்க மக்கள் கிளிண்டன், புஷ்,க்கு தந்தது போல ஒபாமாவிற்கு இரண்டாவது வாய்ப்பை தருவார்களா அல்லது  அவர் தந்த ஒரே மாற்றம் ஏமாற்றம் தான் என்று ரோம்னி சொல்வதை ஏற்று அவருக்கு வாய்ப்பு கொடுக்கபோகிறார்களா? தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. இன்னும் பல கருத்துகணிப்புகள் நடக்க இருக்கும் நிலையில், உலகின் எல்லா ஜனநாயக  நாட்டின் தேர்தல்களைப்போல  இதிலும் எது வேண்டுமானலும் நடக்கலாம்,  
 ரமணன்.
CLAYMONT . USA  25/4/12