12/5/14

I AM PROUD OF YOU Maalan

சற்று முன் face bookல்  இதை பார்த்தேன். சந்தோஷத்தை தாண்டிய ஒர் உணர்வு. எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் சுவடுகளில் பதிகிறேன். பொற்கோவில் கட்டுரையை விடுங்கள் மற்றவர்கல் சொல்லியிருப்பதை பாருங்கள்.
ரமணன்




மாலன் நாராயணன் commented on this.
1984ல் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நேரம். அந்தச் செய்தி பற்றிய பின்னணிகள் அந்த வாரமே வந்துவிட வேண்டும் என ஜீனியர் விகடன் விரும்பியது. நீங்கள் எழுத முடியுமா என போனில் தொடர்பு கொண்டு கேட்டார்கள். “எழுதுகிறேன், எப்போது வேண்டும்?” என்றார்கள். ”இப்போதே” என்றார்கள். ” என்ன விளையாடறீங்களா?” என்றேன். ”இல்ல சார் நிஜமாதான், நீங்க கொஞ்சம் உடனே ஆபீசிற்கு வரமுடியுமா என்றார் சுதாங்கன். மாலை இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஜூவி ஆ.வி அலுவலகத்திற்கு வெளியே தனியாய் சோவியத் கலாசார மையத்தின் அருகில் ஒரு வீட்டை அலுவலகமாக்கி இயங்கிக் கொண்டிருந்தது. போனேன். ”இங்க உட்காருங்க சார்’ என்று சுதாங்கன் அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து அவரது இடத்தையும் மேசையையும் கொடுத்தார். “சார் அர்ஜண்ட் சார். நிஜமாத்தான் சார். இன்றிரவே அச்சுக்குப் போகணும்சார்” என்றவரின் அடுத்த வரி என்னை திடுக்கிட வைத்தது. “கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்து எழுதிக் கொடுத்திடுங்க சார்” என்றார். அவர் என்னுடன் திசைகளில் செயலபட்டவர். மறுக்க முடியாத தர்மசங்கடத்தோடு ‘முயற்சிக்கிறேன்” என்று சொன்னேன், அவ்வளவுதான் நியூஸ்பிரிண்ட் காகிதங்கள் என் முன் வைக்கப்பட்டன.மூன்று மணி நேரம் எழுதியிருப்பேன். இடையிடையே சில தகவல்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் தாமதமின்றி சுதாங்கன் கொண்டு வந்து தந்தார்.
முப்பது வருடங்களுக்கு முன் அப்படி உருவானது இந்தப் ’பொற்கோவில் ரணகளமான கதை’ அன்று எழுத கணினி இல்லை. தேட கூகுள் இல்லை. மின்னஞசல் இல்லை. ஆனால் எங்கள் முன் சவால்கள் இருந்தன.
இதன் அச்சுப் பிரதி கூட இன்று என்னிடம் இல்லை. ஆனால் விகடன் லைப்ரரியிலிருந்து Srinivasa Raghavan அவர் பதிவில் வெளியிட்டிருந்தார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி. பழைய நினைவுகளைக் கிளறியதற்க்காக ஸ்ரீநிவாச ராகவனுக்குக் கூடுதலாக நன்றி
தமிழகம், இலங்கை, Read online tamil news, Vikatan, anandavikatan, junior vikatan, aval vikatan, chutti vikatan, sakthi vikatan, nanayam vikatan, motor vikatan, pasumai...
NEWS.VIKATAN.COM
Like ·  · 
  • 37 people like this.
  • மாலன் நாராயணன் Karthikayan Vaiyapuri //epaper, google போன்றவற்றை அப்போதுதான் தொட்டிருப்பீர்கள்// இல்லை. அப்போது e-paperகள் அறிமுகமாகியிருக்கவில்லை ஏனெனில் அப்போது IE explorer உருவாகியிருக்க/அறிமுகமாகியிருக்கவில்லை.என் புராஜெக்ட்டே மின் செய்தித்தாளுக்கு ஒரு முன்வடிவு ...See More
    32 mins · Unlike · 7
  • Pitchumani Sudhangan மாலன் அவர்களால் தான் உடனடியாக எழத முடியும் என்று புதிதாக அங்கு வேலைக்குச் சேர்ந்த நான் ஆசிரியர்களிடம் வலுவாக , மாலன் அவர்களை அழைக்கு முன் வாதிட முடிந்தது என்றால் அதற்கு முன் மாலன் அவர்கள் சாவி வார இதழில் அயல் நாட்டு விவகாரங்களை குழந்தைகளுக்கு கூட புரிய...See More
    18 mins · Like · 3
  • மாலன் நாராயணன் Pitchumani Sudhangan உனக்குள் இருந்த ஒரு பத்திரிகையாளனை உனக்குக் காண்பித்துக் கொடுத்ததைத் தவிர உனக்கு வேறு எதுவும் நான் செய்துவிடவில்லை. உனக்குள் இருக்கும் பத்திரிகையாளனையும் நீதான் எனக்குக் காண்பித்தாய் உன் கையெழுத்துப் பத்திரிகை மூலம்
    15 mins · Like · 2
  • Jayaraman Venkataraman Dindigul நீங்கள் இரண்டு பேரும் மற்றும் பாலகுமாரன் சார், சுஜாதா சாரும் என்னை(யும்) எழுத்தாளனாக்கினார்கள். மாலன் சார் என்னுடைய முதல்கதையை தினமணி கதிரில் வெளியிட்டார். சுஜாதா அவர்கள் குமுதத்தில் ஆசிரியராக இருந்த போது ஒவ்வொருவாரமும் என்னுடைய படைப்புக்கள் ஏதேனும் வந்தது. காந்தளுர் வசந்தகுமாரன் தொடரில் என்னுடைய ஒரு சந்தேகத்திற்கு(?) பதில் சொல்லிவிட்டு தொடரை தொடர்ந்திருப்பார்.... இனிமையான நாட்கள் அவை...
    8 mins · Like · 1

27/4/14

பயணங்கள் முடிவதில்லை.

இது வரை எழுதிய பயணகட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக  இந்த தமிழ் புத்தாண்டில் வெளிவந்திருக்கிறது. கவிதாவின் வெளியீடு. வாங்கி படித்துவிட்டு கருத்துச் சொன்னால் சந்தோஷப்படுவேன்.





19/4/14

மெளனம் கலைந்தது….மனைவி இருப்பது தெரிந்தது !



நாடளுமன்றத்தின் 543 சீட்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளார்களில் 5 ல் ஒரு பங்கினர் பிரம்மச்சாரிகள் என்கிறது தேர்தல் கமிஷனின் புள்ளிவிபரம். மிக முக்கிய பிரம்மச்சாரிகள் நரேந்திர மோடியும், ராகுல்காந்தியும். இப்போது அதில் ஒன்றை குறைத்து கொள்ள வேண்டும்.  மோடி தனக்கு திருமணமாகியிருக்கிறது என்பதை தனது வேட்பு மனுவுடன் சமர்பித்திருக்கும் பிரமாணபத்திரத்தில் தெரிவித்திருக்கிறார், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்
று சொல்லபடுவதுண்டு. மோடிக்கு மனைவி இருக்கிறாரா? என்பதே சந்தேகமாகயிருந்த ஒரு விஷயம்..

மோடி பிரம்மச்சாரி இல்லை அவருக்கு ஒரு மனைவி  கிராமத்தில் இருக்கிறார் என அவ்வப்போது  மிடியாக்களில் செய்தி அடிபட்டதுண்டு..  ஆனால் ஒரு முறை கூட மோடி அதை ஏற்றோ, மறுத்தோ பேசியதில்லை. கடந்த தேர்தல்களில் 2001,2002,2007, மற்றும் 2012 தேர்தல்களின்போது  இணைக்கப்படும் பிராமணப் பத்திரத்தில்  மனைவியின் பெயர் என்ற பகுதியில் வெற்றிடமாக விட்டுவந்தார்., இப்போது முதல் முறையாக தன்  மனைவியின் பெயர் ஐஷோட பென் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மனைவியின் சொத்து பற்றிய விபரங்கள் பகுதியில் “தகவல் இல்லை” no information என குறிபிட்டிருக்கிறார்.
திருமதி ஐஷோட பென், ஓய்வு பெற்ற குழந்தைகள் வகுப்புகான ஆசிரியை, மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் இருந்து 35 கீமீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்,  வயது 62,
நரந்திர மோடியின் மனைவி நான்தான் என சொல்லிகொண்டிருந்த இவரின் பள்ளி ஆவணங்களில் திருமதி ஐஷோட பென் நரேந்திர மோடிபாய் என்றுதான் இருக்கிறது.  அதனால் இவர்தான் மோடியின் மனைவி என்று சில மஹராஷ்டிர ஊடகங்கள் சில ஆண்டுகளுக்குமுன் எழுதிவந்தன. ஆனால் ஐஷோபென் பத்திரிகையாளர்களை சந்திக்க  தொடர்ந்து மறுத்துவந்தார். மோடி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கபட்டவுடன் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியன் எகஸ்பிரஸ் நிருபர் சந்தித்தபோது முதல் முறையாக பேட்டிக்கு ஒப்புகொண்டவர் போட்டோக்கள் எடுக்க அனுமதிக்கவில்லை.
இந்த பரபரப்பு  பேட்டி பற்றி மோடி – மெளனத்தையே தன் பதிலாக தந்தார்.
தனது 17 வது வயதில் நடந்த அந்த திருமணத்திற்கு பின் 3 மாதங்கள் மட்டுமே அவருடைய குடும்பத்தாருடன் இருந்தேன். அந்த மூன்று மாதத்திலும் பல நாட்கள் மோடி வீட்டில் இருக்கமாட்டார். நான் பள்ளிப்படிப்பை 10ம் வகுப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து கொண்டிருந்தேன். மோடி என்னை அப்பாவீட்டிற்கு போய் படிப்பை தொடர சொன்னார்..  அவரது குடுமப்த்தினர் என்னை  வெறுக்க வில்லை. ஆனால் மோடிபற்றி மட்டும் எதுவும் பேசமாட்டர்கள், அப்போது இங்க்கெ வந்ததுதான். அப்பா, அண்ணனின் உதவியுடன், பள்ளிப்படிப்பையும், தொடர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து உள்ளூர் பள்ளியில் வேலைக்கு சென்றேன், இப்போது ஒய்வும் பெற்றுவிட்டேன். என்று சொல்லும் ஐஷோட பென் தன் 14000ருபாய் பென்ஷனில் சிறிய வீட்டில் மிக சிம்பிளான வாழ்க்கையை  பலமணிநேரம் துர்க்கா பிராத்தனை மற்றும் மாணவர்களுக்கு டியூஷன் என கழிக்கிறார்..  திருமணமாணவுடனேயே கணவனை விட்டு பிரிந்து வாழவேண்டும் என்பது என் தலைவிதியானால் யார் என்ன செய்யமுடியும்? என்று சொல்லும் இவர் அதற்காக வருந்தவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மோடியை பற்றிய செய்திகளை மீடியாவில் பார்க்கிறார். அவர் ஒரு நாள் பிரதமர் ஆவார் என்று எனக்கு தெரியும் என்கிறார்.  பிரதமரானபின் டெல்லிக்கு  போய் அவருடன் வாழ்வாரா? அவர் விரும்பாத எதையும் நான் செய்யதயாராக இல்லை. எனப்து தான் இவர் பதில்
இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது மோடி ஏன் இந்த விஷயத்தை பகிரங்கபடுத்தியிருக்கிறார்? சமீபத்தில் இவரது வாழ்க்கை குறிப்பு புத்தகங்கள் எழுதியிருப்பவர்களிடம் கூட இந்த திருமணம்,தனியாக வாழும் மனைவி பற்றி பேசியதில்லை. எனக்கு குடும்பம், குழந்தைகள் இல்லாதால் ஊழல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்றுதான் சொல்லியிருக்கிறார்.
இப்போது இப்படி அறிவிக்க வேண்டியது அரசியலினால் அவசியமாகிவிட்டது. மக்கள் பிரநிதி சட்டம் 1951ன்படி வேட்பாளார்கள் தங்களது, தங்கள் குடும்பத்தினர் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று சொல்லுகிறது,  தவறாண் தகவல் தரப்பட்டால் வேட்பாளர் மனு நிராகரிக்கபடும் ஆபத்துடன் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கபடும் ஆபத்தும் இருக்கிறது. திருமணமானவரா என்ற கேள்வி இல்லை ஆனால் மனைவியின் பெயர், மற்றும் சொத்துவிபரம் கேட்கபட்டிருக்கும்.
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மோடியின் திருமண வாழ்க்கையை  ஒரு பிரச்னையாக்கி கொண்டிருக்கிறது. தன் திருமணத்தை மறைத்து, சொந்த மனைவியை ஒதுக்கிவைத்து அநீதி  இழைக்கும் இவர் எப்படி இந்திய தாய்குலத்தின் நலனில் அக்கரை காட்டுவார் என்றெல்லாம்  கேள்வி எழுப்பினார்கள். தேர்தல் மனுச்செய்த பின் இதை ஒரு ஆயுதமாக காங்கிரஸ் கையிலெடுக்கும். தேசிய அளவில் மகிளிர் அமைப்புகள் அதற்கு ஆதரவு கொடுக்கும் என்ற நிலையை தவிர்க்கவே இந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது பரவலான கருத்து.  முந்தைய வேட்பு மனுக்களில் மறைக்கபட்டிருப்பது குற்றமாகாதா? தேர்தல் சட்ட நிபுணர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இப்படி இளம்வயது திருமணம் சகஜம்.  எங்கள் ஏழைப்பெற்றோர்கள் படிக்காதவர்கள். அந்த சிறுவயதில் நாங்கள் பெற்றோர் சொன்னதைத்தான்  செய்வோம். இந்த திருமணமும் அப்படி நடந்த ஒன்று. சமூகதிற்காக செய்யபட்ட சடங்காக செய்யபட்ட நரேந்திரனுக்கு இஷ்டமில்லாத இந்த கல்யாணத்திலிருந்து உடனே ஒதுங்கிவிட்டான்.  என்கிறார் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய். இந்த அறிவிப்பு பிஜெபி அலுவலகதிலிருந்து மீடியாக்களுக்கு வந்தது.
பொதுவாக வேட்பாளார்களின் பிரமாணபத்திரங்களின் நகல்கள்  மனுத்தாக்கல் முடிந்தவுடன் நோட்டிஸ்போர்டில் போடப்படும் . ஆனால் வடோதரா தேர்தல் அதிகாரி  அவரின் மேல் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னரே இதை வெளியிட்டார்.
செய்தி வெளியானதிலிருந்து திருமதி மோடியை மீடியாக்கள்  துரத்துகின்றன. ஆனால் அவர்கிராமத்தில் இல்லை. கட்சியால மோடி பிரதமர் வேட்பளாராக அறிவிக்கபடவேண்டும் என 1 வாரம் செருப்பணியாமல் நடந்தது, அரிசி சாதம் சாப்பிடாமல் விரதம் இருந்தது போல இப்போது தேர்தல் வெற்றிகாக பத்ரி- கேதார்- முக்திநாத் புனித பயணம் போயிருக்கிறார் என்கிறார்கள் அந்த கிராமத்தினர். ”இல்லை அவர்  மீடியாவை சந்திக்க முடியாமல் முதல்வரால் பாதுகாக்கபடுகிறார்” என்கிறது அபியான் என்ற குஜராத் பத்திரிகை.
ஆதித்யா
கல்கி 26/04/14



16/4/14

திடுக்கிடும் விபத்தா? திட்டமிட்ட சதியா?


  



டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்குவிசாரனைகளும் இன்னுமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியாகிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு  வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட சதி என்பது.
கோப்ரா போஸ்ட்
என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்‌ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.


வர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  டின் டிவிடியை டில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கியிருக்கிறார்.. இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:
            பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.

மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபாதலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில்  5 பேர்கள் ராம பக்தர்களானான் நாங்கள் கோவிலை காப்போம் என ராமர்  மேல் சத்தியம் செய்து கொண்டு பணியை துவக்கினர்கள்.
சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கபட்டு தயார் நிலையில் வைக்க திட்டமிட்டவர் உமா பாரதி. என்றும்  பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கட்டிடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டடிருக்கிறது.

 ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க இரண்டுதற்கொலை படையினர்  உடலில் கட்டிய குண்டுகளுடன் பிளான் பி யாக தயாராக. என்றும் பேட்டிகளில் பதிவாகயிருக்கிறது.

மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் ந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்  என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.
 இந்த நாசவேலை குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்க்கும், பிரதமர் நரசிம ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருபமில்லாத கல்யாண்சிங் டிச 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர் எஸ் எஸ் வீரர்களால் “சிறை” பிடிக்க பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.

                                                                                                    
இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா போஸ்ட்' திட்டமிட்டு காங்கிரஸின் உதவியுடன் சதி செய்வதாகவும், இதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..
                     
செய்தியை தடை செய்யவேண்டும் என்று சொல்லும் பிஜபி அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்க வில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.
இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விடுகிறது கோப்ராபோஸ்ட்.
 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை சட்டவிதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்ல்யிருக்கிறது பிஜெபி.


-ஆதித்யா
கல்கி 20/04/14







         

12/4/14

தங்க ஒலையில் தாரை வார்க்கபட்ட தரங்கம்பாடி.



ஆர்பரிக்கும் கடல் அலைகள்  தொட்டுச்செல்லும் தொலைவில் கம்பீரமான அழகுடன் நிற்கும் அந்த கோட்டை.. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் முதல் சுவடு தமிழ் நாட்டில் பதிக்கபட்ட கடற்கரை கிராமான தரங்கபாடியில் 16 ஆம் நூற்றாண்டில் எழுப்பட்டது .. டேனிஷ்கார்களுக்கு முன்னரே போர்த்துகீசியர்களும், டச்சு காரர்களும்  கிறுத்தவத்தை பரப்ப இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் வலிமையான இந்த கோட்டை எழுந்த பின்னர் தான் ”தரங்கம்பாடி மிஷின் என்ற சபை ”  உருவாகி தமிழ்நாட்டில் கிறித்துவத்தின் நுழைவாயிலாகியிருக்கிறது.
இந்த கோட்டை.   ஒரு தமிழக குறுநில மன்னராலோ புரட்சிகாரர்களாலோ கட்டபடவில்லை.   இங்கு வந்து  ஒரு கோட்டையைக் கட்டிக்கொள்ளுங்கள், உங்கள் மக்களை குடியமர்த்துங்கள் என  டென்மார்க் மன்னரான 4ஆம் கிறிஸ்டியனக்கு ரெகுநாத நாயக்கர் என்பவர் வரவேற்று எழுதிய ஒரு கடித்தால் எழுந்த கோட்டை. கடிதம் சதாரணமாக எழுதப்படவில்லை. பனைஒலை வடிவில் தயாரிக்கபட்ட ஒரு தங்க ஒலையில் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.

 .  இந்த தங்க ஓலையும்  இதைபோல வேறு சில தங்க ஓலைகளும் இன்னும் பத்திரமாக இருப்பது டென்மார்க தலைநகரான கோபன்ஹேஹனில் உள்ள  ”ராயல் ஆர்க்கேவ்ஸ்” என்ற ஆவணகாப்பகத்தில்.. இதைத்தவிர பல ஆயிரகணக்கான சுவடிகளும், கையெழுத்துபிரதிஆவணங்களும் நவீன வசதிகளுடன் இங்கே பாதுகாக்கப்டுகிறது.
 இந்த குவியல்களுக்குளே இருக்கும் தங்க ஒலைகளைப் பார்த்து ஆராய்ந்து  அதிலிருக்கும் விபரங்களை சொல்லியிருப்பவர் ஒரு தமிழர். பேராசியர் பி.எஸ் ராமாஜம்.
இவர் தொல்லியலில் பேராசியர் இல்லை. டென்மார்க்கின் மிகப்பெரிய, பாரம்பரியமிக்க பல்கலைகழகமான டென்மார்க் டெக்கினிக்கல் யூனிவர்சிட்டியில்  இயற்பியல் பேராசியர். தன் துறையில் 8 புத்தகங்களும், 82 கட்டுரைகளும் எழுதியிருப்பவர். இந்த பழைய சுவடுகள், ஆவணங்கள் ஆராய்ச்சிசெய்வது பொழுதுபோக்கு.  இவர் டேனீஷ், ஜெர்மன் மொழிகளை நன்கு அறிந்தவர். பண்டைய தமிழ் எழுத்துகளையும் எளிதாக படிப்பவர்.  இந்த ஆவணங்களை நாம்படிக்க கூடிய தமிழில் எழுதி,  ஆங்கிலம், டேனிஷ் ஜெர்மன் மொழிகளில்  மொழிபெயர்த்து  ஆவணகாப்பகத்திற்கு உதவுகிறார்.

 இந்த தங்க ஓலை அன்றைய தஞ்சாவூர் மன்னனருக்கும் டென்மார்க் மன்னருக்கும் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கை என ஆவண காப்பகத்தில் கேட்லாக் செய்யபட்டிருக்கிறது. ஆனால் இது ரெங்கநாத நாயக்கன் என்பவர் டென்மார்க் மன்னருக்கு எழுதிய ஒரு கடிதம். இதில் மன்னரை நலம்விசாரித்து டென்மார்க்கிலிருந்து வந்தகடற்படை கேப்டன் ரோலண்ட், ஹாலந்திலிருந்து வந்திருக்கும் ஜெனரலையும் சிறப்பாக பல்லக்கில் வரவேற்கப்பட்டது குறித்தும் தரங்கம்பாடி துறைமுகம் நிறுபட்டிருப்பதால் டேனிஷ் மக்களை வந்து குடியமரச்சொல்லும்படியும் எழுதபட்டிருக்கிறது.
‘நாயக்கன்” என்ற சொல்லால் மன்னர் என தவறாக மொழிபெயர்க்க பட்டு பதிவு செய்யபட்டிருக்கிறது. மன்னருக்கு அனுப்பபட்டிருக்கும் பரிசுகளும் கடிதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.  தரங்கபாடி பகுதி ரெங்கநாதரின் கட்டுபாட்டிலிருக்கும் பகுதியியாக இருந்தாதலும் டேனிஷ் கிழகிந்திய கம்பெனியின் வியாபாரங்களால் அவர் பயன்பெற்றதாலும்  ஒரு பண்டக சாலை அமைக்க இடம் கொடுத்திருக்கிறார். பின்னாளில் அது கோட்டையாகியிருக்கிறது.
40 செமீ நீளமும் 2.5 செமீ அகலமும் உள்ள இந்த தங்க ஓலை1620 ஏப்ரலில்  ஆணியும் சுத்தியும் கொண்டு தமிழில்  வடிக்கபட்டிருக்கிறது. ரெங்கநாத நாயக்கன் தெலுங்கில் கையெழுத்திட்டிருக்கிறார்.  அவரது நீண்ட கையெழுத்துக்கு மேல் சில கடித எழுத்துக்கள். இருப்பதால் முதலில் கடிதத்தில் கையெழுத்து போடப்பட்டபின் செய்தி வடிக்க பட்டிருக்க வேண்டும், தமிழில் கையெழுத்திட தெரியாத  ஒருவர் தங்க ஓலையில் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தை தமிழ் தெரியாத டென்மார்க் மன்னருக்கு தாரைவார்த்திருக்கிறார். இந்த கடித்தின் டேனிஷ் மொழிபெயர்ப்பு காகிதத்தில் எழுதபட்டு இதனுடன் அனுப்பப் பட்டிருக்கிறது, அதுவும் இந்த காப்பகத்தில் இருக்கிறது.  அப்போது இந்தியாவிலும், டென் மார்க்கிலும் அங்கீகரிகபட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.  இந்த தங்க ஒலையை தவிர இன்னும் இரண்டு தங்க  ஓலைகளும் இருக்கிறது. ஒன்று மன்னருக்கு நன்றி சொல்லும்கடிதம், மற்றொன்று ”கம்பெனியின் சார்பாக” என 4 தமிழர்கள் கையெழுத்திட்ட ஒரு புகார் கடிதம்.
ஏன் தங்க ஒலைகள்? எழுதியவர் மற்றும் பெறுபவரின் கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுவதற்கும் என்றும் நிலைத்து நிற்கும் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்கிறார். ராமனுஜம்.  இந்த காப்பகத்தில் 100க்குமேற்பட்ட அலமாரிகளில் ஆயிரகணக்கான தமிழ் ஆவணங்கள் தவிர உருது,தெலுங்கு, கன்னட மோடி (பழமையான மாரத்திய மொழி) மொழிகளிலும் ஆவணங்கள் பாதுகாக்க படுகின்றன. இவற்றில் தமிழ் ஆவணகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்யும் ராமனுஜம்.  அவர் ஆராய்ந்தவற்றின் ஆங்கிலம், டேனிஷ்  மொழிபெயர்ப்புகளை குறிப்புகளுடனும்,ஆவண)ங்களின் போட்டோகளுடனும் அவருடைய இணையதளத்தில்(http://www.tharangampadi.dk/)  வெளியிட்டிருக்கிறார். ஆராய்ச்சிமாணவர்களுக்கு உதவது நோக்கம். ஆர்வமுள்ளவர்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறார். இவர் இந்த தங்க ஒலையில் கண்டுபிடித்து  சொன்ன ஒரு விஷயம் அதிலிடப்பட்டிருக்கும் தேதியில் தவறு. அந்த தவறை சரித்திர ஆசிரியர்கள் எவரும் கவனிக்கவில்லை. என்கிறார்.  தமிழில் எழுதபட்டிருக்கும் அந்த தங்க ஓலையில் ஆண்டும் மாதமும் தமிழில் ”ரூத்ர வருடம் சித்திரைமாதம் 20ம் ” என்று குறிப்பிடபட்டிருக்கிறது. தமிழ் வருடங்களுக்கு இணையான ஆங்கில வருடங்களை காட்டும் அட்டவணையின் படிஅது 1620 ஏப்பரல் 25. . ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் டேனிஷ் கேப்டன் ஓவ் க்ஜெட்டேயின் கப்பல்  ஆப்பரிக்க கடலை  கடந்து கொண்டிருந்தது இந்தியாவை அடையவில்லை. அப்படியானால் எங்கே தவறு? ஆராய்ச்சிக்குரிய விஷயம் இது தான்!

தரங்கம்பாடி அரசியல் ஆவணங்களை தவிரவும் பலசுவடிகள் இங்கிருக்கின்றன.  கிறிஸ்டியன் கிறிஸ்டோபர் என்பவர் தரங்கம்பாடி டேனிஷ் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் இவர் 1831ல் ”கபில வாசகம்”, ”ஆத்திசூடி கதைகள்” என்ற இரண்டு பெரிய சுவடி தொகுப்புகளை வாங்கி டென்மார்க்கிற்கு அனுப்பியிருக்கிறார். பல ஆண்டுகளாக கேட்பாற்று காப்பகத்தின் நிலவரையிலிருந்த இது ஒரு நூலகரால் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கபட்டு இப்போது இங்கே பாதுகாக்க படுகிறது.  அதை ராமானுஜம்  நாம் படிக்ககூடிய தமிழில் எழுதி அதை ஆங்கிலத்திலும் டேனிஷிலும் மொழிபெயர்திருக்கிறார். சுவடிகளின் படங்களுடன் பக்க எண் இட்டுபொழிபெயர்ப்புகளை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
14ஆம் நூற்றாண்டு தமிழை எளிதாக படிக்கும் இவர் இலக்கியங்கள் தவிர பல சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கிறது என்கிறார். 1795ல் சின்னையா என்ற பார்வையற்றவர் தரங்கபாடியிலிருந்து டென்மார்க்க்கு கப்பலில் சென்று மன்னரை சந்தித்திருக்கிறார்.. தரங்கம்பாடியிலிருக்கும் கவர்னர் தன்சாதிக்காரர்களை கெளரவமாக நடத்தவில்லை என புகார் அளித்திருக்கிறார். விசாரித்து முடிக்கும் வரை அவர் டென்மார்க்கில் தங்க அனுமதிக்க பட்டிருக்கிறார். விசாரணை முடிய 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. தான் தரங்கபாடியில் செல்வந்தன் என்றும் தன் குடும்பம் அடுத்த கப்பலில் வைரங்களை அனுப்பும் என சொல்லி நிறைய கடன் வாங்கியிருக்கிறார். ஒரு டேனிஷ் பெண்னையும் திருமணம் செய்துகொள்கிறார்.விசாரணை இறுதியில் சின்னையா மோசடிக்காரர் என தெளிவாகிறது. அவர் இந்தியாவில் தண்டனையை அனுபவிக்க கப்பலில் திருப்பிஅனுப்ப படுகிறார். அப்போது இந்தியாவிற்கு ஆப்பிரிக்காவில் கப்பல் மாறி வரவேண்டும். அப்படி மாறும்போது காணமல் போய்விடுகிறார் சின்னையா.! இதுபோல ஒரு நாவலுக்கு உரிய விஷயங்களெல்லாம்  இங்கே கொட்டிக் கிடக்கிறது.
அப்போது தரங்கம்பாடியிலிருந்த கோர்ட் வழங்கிய தீர்ப்புகள்,   சாக்கிலிட்டு கடலில் ஏறியுங்கள்  என்று ஒரு கவர்னர் வழங்கிய  கொடிய தண்டனை பற்றிய விபரங்கள்., தன் கடல் பயணத்தில் ஆபத்தான கட்டத்தில் போராடி தன் உயிரை காப்பற்றிய படகோட்டியின் குடும்பத்தினருக்கு ஆயுட்கால பென்ஷன் வழங்கியிருக்கும் கேப்டனின் கணக்குகள்,  மதக்குருமார்களிடையே நடந்த பிரச்சனைகள் என பலவகை ஆவணங்கள் இருக்கின்றன.  ஆனால் ஒரு சில- வையபுரியின் திருமணம் என்பது போன்ற- ஒரு திருமணத்தின் பிரச்னையைச் சொல்லும் ஆவணங்கள், தெளிவாக  எழுதப்படாதால் தமிழில் இருந்தாலும்  விஷயத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை என்கிறார் முனைவர்..
                400 ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைப்பயணங்கள் தமிழில் பதிவு செய்யபட்டிருப்பதும் அது ஐரோப்பாவின் ஒரு பகுதியில் சிறப்பாக பாதுகாக்கபடுவதும் பெருமைக்குரிய விஷயம், அதைவிட பெருமைக்குரியது முனைவர் ராமனுஜம்  செய்துகொண்டிருப்பது. .
கல்கி 20/04/14