4/9/14

”அப்பா மிகவும் பொறுமை சாலி “



 முன்னாள் அமைச்சர் நட்வார்சிங்கும், முன்னாள் செயலாளர் சஞ்யைபாருவாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கும் புத்தகங்கள் வெளியாயிருக்கும் இந்த நேரத்தில், மன்மோகன் சிங்கின்  வாழ்க்கையின் ஒரு பகுதியை சொல்லும் புத்தகம்  மன்மோகன் குருஷரன்  பற்றிய மிக தனிப்பட்ட விஷய்ங்கள்” (Strictly Personal: Manmohan and Gursharan). வெளியாகியிருக்கிறது. எழுதியிருப்பவர்  முன்னாள் பிரதமரின்  இரண்டாவது மகள் தாமன் சிங். மன்மோகன் தம்பதியினருக்கு 3 மகள்கள். மூவரும் தங்கள் படிப்பால் திறனால் தத்தம் துறைகளில் உயரங்களை தொட்டவர்கள்மீடியாக்களின் வெளிச்சங்கங்களை தவிர்த்தவர்கள். முதல் மகள் உப்பிந்தர் சிங் பல்கலைகழக பேராசிரியை. மூன்றாவது மகள் அமிர்த் சிங் சர்வ தேச மனித உரிமை சட்டங்களில் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணி செய்துகொண்டிருப்பவர்.
இரண்டாவது மகள் தாமன் டெல்லிகல்லூரியில் கணிதமும், குஜராத் ஆனந்த் மேலாண்மைகல்லூரியில் நிர்வாகமும் படித்தவர்ஆசிரியையாக இருந்தவர். இதுவரை  6 புத்தகங்கள் எழுதியிருக்கும் நூலாசிரியர். கணவர் போலீஸ் அதிகாரிஇரண்டு குழந்தைகள். தன் குடும்பத்துடன் தனியாக டெல்லியில் வசிக்கும் இவர் தன் சகோதரிகளைப் போல மிக எளிமையானவர். செல்போன் வைத்துகொள்லவில்லை. கார் ஓட்ட டிரைவர் கிடையாது.

தனது தந்தை மற்றும் தாயாருடன் பேசியபோது கிடைத்த தகவல்களை, தான் நேரடியாக பார்த்த தகவல்களை தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார் தாமன் சிங். நூலில் மன்மோகன் சிங்கின் இளமை காலம் முதல் கூறப்பட்டுள்ள சுவாரசியமான பல தகவல்கள்: 1948ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமிர்தசரசில் உள்ள கால்சா கல்லூரியில் எப்.எஸ்.சி. படிப்பில் மன்மோகன் சிங்கை சேர்த்தார் அவருடைய தந்தை.
தனது தந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அது பிடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர தாகத்தால், பொருளாதாரம் குறித்த படிப்பை மேற்கொண்டார். பிறகு தந்தையின் வியாபாரத்தில் சேர நினைத்தார். ஆனால் அங்கு டீ வாங்கி தருவது, குடிக்க தண்ணீர் தருவது போன்ற வேலையே அவருக்கு தரப்பட்டது. அது பிடிக்காததால், படிப்புதான் முக்கியம் என்று உணர்ந்தார். அதைத் தொடர்ந்து 1948 செப்டம்பர் மாதம் இந்துக் கல்லூரியில் சேர்ந்தார். வறுமை குறித்து தனக்கிருந்த கவலை, சில நாடுகள் பணக்கார நாடாகவும், பல நாடுகள் ஏழை நாடாகவும் இருப்பது ஏன் என்ற கேள்வி, அவரை பொருளாதார படிப்பை தேர்ந்தெடுக்க வைத்தது.பொருளாதாரத்தை சிற்ப்பாக படித்து ஒரு சிறந்த அரசு அதிகாரியாகவேண்டும் என்பது  அவரின் கனவாகயிருந்தது.

 பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, செலவுக்கு போதிய பணம் இல்லாமல் தவித்தார். ஆண்டுக்கு ஆன படிப்பு செலவு 600 பவுன் பஞ்சாப் பல்கலைகழகம் 160 பவுன் ஸ்காலர்ஷிப் கொடுத்திருந்தது. மீதி பணம் அவர் தந்தை அனுப்பவது. அது உரிய நேரத்தில் வராது. அதனால்  வெளியில் சாப்பிடவே மாட்டார்.
 அந்த பல்கலை கழகத்திதல் படிக்கும்போது பல்கலை வளாகத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் உணவையே சாப்பிடுவார். அதற்கும் பணம் இல்லாத நேரத்தில்  ஒரு நாளைக்கு ஒரே ஒரு சாக்லெட் மட்டும் சாப்பிடுவார். மாதம் 25 பவுண்ட் கடன் தருவதாக சொன்ன நண்பர் தந்த பணம் 3 பவுன் மட்டுமே. வறுமையை தனது வாழ்க்கையில் உணர்ந்தவர் மன்மோகன் சிங். மிக நெருங்கிய நண்பர்களுடன் பேசும்போது, மிகவும் ஜாலியான நபர் அவர். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் வைத்தே அழைப்பார். நகைச்சுவை உணர்வு அவருக்கு அதிகம்என்று எழுதியிருக்கும் தாமல்சிங் இந்த விபரங்களை சேகரிக்கபட்ட கஷ்ட்டத்தையும் சொல்லுகிறார்நணபர்களிடம் ஜோக் அடித்துகொண்டிருக்கும் அப்பாவார்த்தைகளை மிக சிக்கனமாகத்தான்  குடுமப்த்தினரிடம்  உபயோகிப்பவர்ஒரு மகளாக அறிந்ததைவிட இந்த நூலாசிரியராக  அவரைப்பற்றி அறிந்ததுதான் அதிகம்

 நாட்டுக்காக சேவையாற்றிய அவர், அரசியல், அரசு வாழ்க்கைக்கே தன்னை பெரிதும் அர்ப்பணித்து கொண்டார். குடும்ப வேலைகளில் அவர் ஈடுபட்டதில்லை. முட்டை வேகவைப்பது, டி.வி.யை ஆன் செய்வது போன்ற சின்ன சின்ன வேலைகள் கூட அவர் செய்தது இல்லை. வீட்டுக்கு வரும்போதே ஒரு பெரிய பையில் கோப்புகள் வரும். தனது படுக்கையில் உட்கார்ந்து அந்த கோப்புகளை பார்ப்பார். அவ்வாறு கோப்புகள் இல்லாவிட்டால், புத்தகத்தை எடுத்துக் கொள்வார்  அதுவும் ஒரு பொருளாதார புத்தகமாகத்தான் இருக்கும். என்று நூலில் தாமன் சிங்  எழுதுகிறார்.

மன்மோகனும் அவரது மனைவியும்  எப்படி வாழக்கையின் எல்லா கால கட்டங்களிலும் சந்தோஷமாக இருந்தார்கள் என்பதை எளிய ஆங்கிலத்தில் மெல்லிய நகைச்சுவையுடன் விவரிக்கும் தாமல் இந்த புத்தகத்தில்  அவர் பிரதமாராக இருந்த 10 ஆண்டு காலத்தைப்பற்றி எதுவும் நேரிடையாக எழுதவில்லை. ஆனால் சில இடங்களில் கோடுகாட்டபடுகிறதுஇந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்த போது அடைந்த அதிர்ச்சி, ஒரே நாள் இரவில் நிதிமந்திரியானதுராகுலின் ஆவேச பேச்சு (காபினட் முடிவை கிழித்தது) வெளியானபோது அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிகொண்டிருந்தார்ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்புங்கள் என  ஒரு நண்பர் சொன்னபோது எனக்கு நிறைய பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்று சொன்னது. தன் அமைச்சர்களுக்காக பொறுப்பேற்றது பற்றியெல்லாம் மிகவும் மெல்லிய இழையாகச் சொல்லபட்டிருக்கிறது.


 புத்தக அறிமுக விழாவில் மன்மோகன்  பிரதமராக இருந்த காலத்தை பற்றி எழுதவீர்களா? எனக்கேட்டதற்கு தாமல்  சொன்ன பதில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான அந்த கட்டங்கள் பற்றி அப்பா எழுதினால்தான் சரியாக இருக்கும். ஒரு நாள் அவரே எழுதுவார்  என நம்புகிறேன் என்றார்

(கல்கி 7/9/14 இதழில்)

31/8/14

கங்கை கரை ரகசியங்கள் ....7



இன்று காசியாக அறியபட்டிருக்கும் இந்த பழமையான நகரின் பெயர் வாரணாஸீ. இப்படித்தான் இதிகாசங்களிலும் முகம்மதியர் படையெடுப்புகளின் போதும் இந்த பெயரால் தான்  அழைக்கபட்டிருக்கிறது. இங்கு பேசப்பட்ட மொழிகளில் ஒன்று பாலி மொழி. அதில்  ”பருணாசி” என்று சொல்லபட்டு வந்த இது ஆங்கிலேயர் ஆட்சியில் பனாரஸ் ஆகியிருக்கிறது.  ஆன்மிகத்தை தாண்டி  ஆங்கிலேயர்கள் இதை கைவினைக்கலைஞர்களின் நகரமாக பார்த்து அதை ஊக்குவித்திருக்கிறார்கள். அவர்களினால் தான் இங்கிருந்த  மிக நுண்ணிய வேலைப்படுகளிடுன் கூடிய பட்டுநெசவு தொழில் இங்கிலாந்து வழியாக உலகை எட்டியிருக்கிறது. 
குறைந்த விலையில் நல்ல பனாரஸ் சாரி வாங்கவேண்டும்  என்று குழுவிலிருந்த பலர் புறபட்டபோது, நாம்  இந்த சேலைகள் தயாரகுமிடத்தை பார்க்க வேண்டும் என்று  விரும்பி விசாரித்து கொண்டிருந்தோம்.  நம்முடன் இணைந்தவர்கள் குழுவிலிருந்த இரண்டு வெளிநாட்டினர்.  ”அதற்கு நீங்கள் பாலத்தை தாண்டி கங்கையின் மறு கரையிலிருக்கும் ராம்நகருக்கு  போகவேண்டும்” என்றார்கள். 14 கீமி தூரத்தில் 6 கீமி நீள பாலம். அந்த பாலத்திலிருந்து கங்கையையும் அத்தனை படித்துதுறைகளையும் பார்த்தது   இப்போதும் கண்ணில் நிற்கும் காட்சி. ஒரு நல்ல ஓவியத்தை பார்த்தது போலிருந்தது
.  மறு கரையிலிருக்கும் பனாரஸ்  நாம் பார்த்த காசிக்கு எந்தவித சம்பந்தமும்மில்லாத ஒரு தொழில்நகரம். பட்டுநெசவு, சரிகைஉற்பத்தி, பித்தளை பாத்திரங்கள், பூஜைபொருட்கள் உற்பத்தி என பல தொழில்கள். எல்லா தொழில்நகரங்களுக்கும் உள்ள பிரச்சனைகளுடன் இருக்கிறது. இந்நகர் வாசிகள் காசி நகருக்கு வருவதில்லை. பிஸினசில்தான் கவனமாகயிருக்கிறார்கள். இந்நகருக்கு முன்னே இருப்பது ராம்நகர். அங்கும்  எல்லா வீடுகளிலும் பட்டுநெசவுதுத்தொழில். தொழிலாளிகளில் பலர்  சந்தோஷமாகயில்லை. ஒரு புடவையை முடிக்க 15 நாள் ஆகும் டிசைனைப்பொறுத்து 1000 ரூபாய்வரை கூலி  கிடைக்கும். அதை புடவையின் தயாரிப்பு நிலையை பொறுத்து  அவ்வப்போது கொடுப்பர்கள் என்கிறார். 40 ஆண்டு இந்த தொழிலை செய்யும் நெசவாளி ஒருவர்
தான் நெய்து கொண்டிருக்கும் புடவையின் விலை தனக்கு தெரியாது என்றும் சொல்லுகிறார்.
ராம்நகரில் தான் பனாராஸ் மன்னரின் அரண்மனை. கங்கையின் கரையில் ஒரு கம்பீரமான கோட்டை. அதன் மதில் களை தாண்டி அரண்மனை. பாராட்டும்படியான பாராமரிப்பு  இல்லையென்றாலும் பளிச்சென்று அரண்மைக்கான களையுடன் இருக்கிறது.  அரச வம்சத்தின் இன்றைய தலைமுறை குடும்பத்தினர் இங்குதான் வசிக்கிறார்கள்.
கடைசி மன்னர் 2000ல் மறைந்த பின்னர்  வாரிசுகள் அரசர்கள் அழைக்கபடவேண்டியது இல்லை என்பது சட்டமானலும் இங்குள்ளவர்களுக்கு இவர் மாட்சிமைதாங்கிய மன்னர்தான். காசி விஸ்வநாதர் கோவிலின் தலமை அறங்காவலர். பனாரஸ் இந்து பலகலை கழகத்தின் வேந்தர்  எல்லாம் இவர் தான்.  கோவில் விழாக்கள், சிறப்பு பூஜைகள் எல்லாவற்றிக்கும் இவர் உத்தரவு தர வேண்டும்.  அரண்மனைமுகப்பில் கொடி ஏற்ற பட்டிருந்தால் மன்னர் அரண்மனையில் இருக்கிறார் என்று அர்த்தமாம். 
அரண்மனையின் ஒரு பகுதி  சரஸ்வதி மஹால். அது அருங்காட்சியமாக மாற்றப்பட்டிருக்கிறது.  மன்னர் வம்சங்களின்  கலைப்பொருட்களின் சேமிப்புகள்.   ஆடை அணிகலன்களுடன் அவர்கள் பயன்படுத்திய பல்லக்குகள் - தந்தம், மூங்கில், வெள்ளி என பல பல்லக்குகள். விதவிதமான வாட்கள், கடிகாரங்கள், எல்லாம். துளிசிதாஸ் எழுதிய ராமசரித்திரத்திரத்தின்  மூலப்பிரதி கண்ணாடிப்பேழைக்குள் பட்டு மெத்தையில் இருக்கிறது.  கடைசி அரசர் துப்பாக்கிகளின் காதலராம். 1000 வகை துப்பாக்கிகள். குறிபார்த்து சுடுவதில் வல்லுரான அவரால்  தூக்கி எறியபட்டபோது சுடப்பட்ட  நாணையங்கள் உருக்குலைந்தநிலையில் அந்த துப்பாக்கிகளுக்கு அருகில் வைக்கபட்டிருக்கிறது.  வெளியே வந்த நாம் பார்ப்பது பெரிய திறந்த வெளியின் முன்னே  ஷெட்களில் அணிவகுத்து நிற்கும்  சாரட்டுகள், பழைய கார்கள்.
இந்தியாவிற்கு வந்த முதல் ரோல்ஸ் ராய்ஸ், ஸுடூடிபேக்கர்  போன்ற கார்கள்.  எல்லவாற்றிலும் ராஜ இலச்சினை. எல்லாவற்றிலும் நம்பர் பேளேட்டில் எண் 1.  இந்த காட்சியகத்தின் பணியாளார்கள் மன்னரின் அரண்மனை பணியாளார்கள். இன்றைய மன்னர் என்ன கார் பயன்படுத்துகிறார்? என்ற நாம் கேட்டதற்கு பதில் ”மன்னரின் சொந்த விஷயங்களை நாங்கள் பேசுவதில்லை.”  வெளியில் வரும் போது எவரும் பார்க்ககூடிய ஒரு விஷயத்தை கூட சொல்ல மறுக்கும் அந்த ஊழியரின் ராஜ விசுவாசம்  நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது..  நதிக்கரையிலிருக்கும்  அந்த கோட்டையின் அருகிலிருந்து எதிர்கரைக்கு  படகிலும் போகலாம் என்பதை அறிந்தவுடன் மீண்டும் ஒரு முறை கங்கையில் படகில் போகும் வாய்ப்பு என்று மனம் துள்ளியது. படகு  கிளம்பியதும் பக்கத்து படித்துறையில் பார்த்தது வாரியிறைத்த வானவில்லாக பரந்து கிடந்த பட்டுசேலைகள். விசாரித்ததில் அது பனாராஸ் சேலையில் ஒரு வகைஎன்றும். கெமிக்கல் இல்லாத இயற்கைமுறையில் தயாரிக்கபட்ட சாயத்தில் தோய்க்கபட்ட நூல்களினால் நெய்தது என்றும் அதை கடைசியில் மீண்டும் இப்படி  ஒரு முறை இப்படி உலர்த்துவார்கள் என்றும் சொன்னார்கள்
முதல் முறை கரையின் அருகிலேயே படகில் பயணித்த நாம் இன்று கங்கையையின் குறுக்காக பயணித்து மறுகரைக்குப் போகிறோம். எதிரே தெரியும் படித்துறைகள் நம்மை நெருங்குகிறது. படகில் நம்முடனேயே  வரும் போட்டோகிராபர்  விரும்புவர்களை கங்கையின் பின்னணியில் படமெடுத்து, உடனே அதை படகிலேயே இருக்கும் பேட்ரியில் இயங்கும்  ஒரு பிரிண்ட்டரில் படமாக்கி தந்துகொண்டிருக்கிறார்.  20 ருபாய்களுக்கு நடு கங்கையில் படமெடுத்து பிரிண்ட்ட தருகிறார்கள் டிஜிட்டல் டெக்னாலாஜி உபயம்.
ஓவ்வொரு ”காட்”லும் ஒரு கோவில் மூன்று வேளைபூஜை. அதனால் எந்த படித்துறையில்  நீங்கள் குளித்தாலும் முதலில் அங்குள்ள தெய்வத்தை வழிபட்டபின்னரே நகருக்குள் செல்ல வேண்டும்.  , குழந்தை பிறப்பு, கல்வியின் துவக்கம், திருமணம், உடல்நலம், குடும்பத்தினர் நலம் மணவாழ்வுநலம், இறுதியாக மரணம் என்று மனித வாழ்வு சம்பந்தபட்ட ஓவ்வொருவிஷயத்திற்கும் இந்த  கங்கைக்கரையில் ஒரு தெய்வ சன்னதியிருப்பது பார்க்கும்போது எப்படி இந்த கங்கைக்கரை வாழ்வோடு  இணைந்த ஒரு விஷயமாகியிருக்கிறது என்று புரிகிறது. 
படகு மணீகர்ணா தீர்த்த கட்டத்தை நெருங்குகிறது.   தொலைவிலிருந்து பார்த்த புகையும் நெருப்பும் இப்போது பளீரென தெரிகிறது. மிதக்கும் படகிலிருந்து கரையில் நிகழும் மனித மரணத்தின் கடைசிகாட்சிகளை பார்க்கும்போது மனம் கனமாகி  இனம்தெரியாத உணர்வுகள் நம்மை தாக்குகிறது. எரிவது எவரோ என்றாலும் ஐயோ என்ற எண்னம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்துகொண்டு இருக்கும்போதே  பத்து நிமிடத்தில் வந்த இரண்டு உயிரற்ற உடல்கள்,  அவைகளுக்கு இடமில்லாதால் எரிந்துகொண்டிருப்பவைகள் தகனமேடையிலிருந்து கிழே தள்ளப்பட்டது, உடல்களை எரியூட்ட படகுகளில் வந்துகொண்டிருந்த விறகுகள்,
எல்லாம்  அவர்களுக்கு இது  தினசரி வாடிக்கை என்பதை புரியவைத்தது. ஆனால் நமக்கு மறக்கவிரும்பும் மனதை பிசைந்த காட்சிகள் அவை. சராசரி ஒரு நாளைக்கு 50 உடல்கள் வரும்,  இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை என்று என படகோட்டி சொன்னபோது இந்த உலகில் நிரந்தரமாக நடக்கும் விஷயங்களில் மரணமும் ஒன்று, நமக்கும் ஒரு நாள்  நிகழும் அது வரை அது பார்க்கும்போது  வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும் என்று உரைத்தது. .  உயிரற்ற உடல்கள் உருக்குலைந்ததை அத்துணை அருகில் பார்த்ததினால் நம் மனம் கனமாக இருப்பதைப்போல நம்படகும் கனமாகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு படகும் மெல்ல செல்கிறது. நீரின் வேக  ஓட்டம் போதுமானதாக இருப்பதால் துடுப்பு போடவில்லை என்ற படகோட்டி சொல்லுகிறார். 
படகு கரையை அடைந்தாலும் காட்சியின் தாக்கம் கரையவில்லை. சாலையில் நடக்கும்போது காசிநகரின் எல்லாப்பகுதிகளிலும் கேட்கும் டிரிங், டிரிங் சைக்கிள் ரிக்‌ஷாகளின் மணியோசையும்,பலமொழிகளின் ஓசையும் மெல்ல நம்மை இந்த உலகிற்கு இழுத்துவருகிறது.
நாளைகாலை  புத்த கயாவிற்கு போக இருக்கும் விவரங்களை அறிவிக்கிறார்கள்.  இறப்பின் துயரத்தை பார்த்து  துவண்டு துறவறம் பூண்ட புத்தரை தரிசிக்க நாமும் இன்று அத்தகைய  சோகங்களை பார்த்தபின் போகப்போகும் வினோத ஒற்றுமையை எண்ணிக்கொண்டே தூங்கச்செல்லுகிறோம்
^^^^^^^^^^^^^^
சத்குருவின் பதில்கள்

 நம் வேதங்கள்  இந்த காசிநகரில்தான்  எழுதபட்டதாக சொல்லப்படுகிறதே?


 பலர் நினைப்பது போல நமது நான்கு வேதங்களும் ஒருவராலோ அல்லது ஒருசிலராலோ  எழுதப்படவில்லை.  நீண்ட காலத்திற்கு வாய்வழியாக சரியான ஒலி வடிவில் மற்றவர்களுக்கு சொல்லபட்டிருக்கிறது. அது இங்கு நிறைய நடந்திருக்கிறது. வேதங்கள் இந்த பூமியின் மிகத் தொன்மையான நூல்களாக இருப்பினும், மற்ற எந்த நூலையும் விட விரிவான, விஸ்தாரமான உள்ளடக்கம் கொண்டவை. வேதங்கள் யாரோ  ஒருவர் எழுதி வைத்த ஒழுக்க விதிகள் அல்ல. அவை வெளிநிலை மற்றும் உள்நிலை சம்பந்தமான பல ஆழமான கண்டுபிடிப்புகளின் தொகுப்பு. பலர் செய்திருக்கிறார்கள். 
வடிவத்தை யந்திரம் என்றும், ஒலியை மந்திரம் என்றும், இவை இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை தாந்திரீகம் என்றும் சொல்கிறோம்.
வடிவங்களை ஒலியாக மாற்றுவதைப் பற்றி வேதங்களின் பல்வேறு பகுதிகள் பேசுகின்றன. ஒரு ஒலியை, ஒலி அளக்கும் கருவியான ஆசிலாஸ்கோப்பிற்குள் செலுத்தினால், அது அந்த ஒலிக்கு ஏற்ப ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் இருக்கிறதென்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு ஒலி இருக்கிறது. ஒலிக்கும், வடிவத்திற்குமான இந்த உறவை வேதங்களில் மிக விரிவாக விளக்கியிருக்கிறார்கள். ரிக், சாம, மற்றும் அதர்வண வேதங்கள் பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சத்தை ஒலி வடிவமாக மாற்றி, அந்த ஒலியை உச்சரிப்பதன் மூலம் இந்த பிரபஞ்சத்தை நமக்குள் எதிரொலிக்கச் செய்வது பற்றித் தான் பேசுகின்றன. ஒலியின் மீது ஆளுமை பெறுவதன் மூலம், வடிவத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். இதுதான் மந்திரங்களின் விஞ்ஞானம்.

துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில் மந்திரங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. வேதங்கள், மனம் மற்றும் உள்நிலை சார்ந்த அறிவியல் என்பதால் அவற்றைக் கற்க ஆழமான ஈடுபாடும், அர்ப்பணிப்பும் தேவை. அதற்காக நீங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் அவை உங்களுக்குப் பலன் தராது. உங்களுக்கு கல்வித்தகுதியாகவோ, வேலைவாய்ப்பாகவோ இதை நினைத்தால், இதனால் உங்களுக்கு எவ்விதமான பயனும் கிடைக்காது. உங்களையே அதற்கு அர்ப்பணித்தால்தான், உங்களுக்குப் அதன் பயன் கிட்டும். இதற்குத் தேவையான உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் போனதால், எல்லா வகையான தவறான புரிதல்களுக்கும், பயன்பாடுகளுக்கும் ஆளாகி இந்த விஞ்ஞானம் சீரழிந்துவிட்டது.
வேத முறைகள் எப்போதுமே மனிதனின் புரிதலை ஆழமாக்குவதை நோக்கித்தான் இருந்ததே தவிர அவன் அறிவை விஸ்தாரமாக்கவதற்காக ஏற்பட்டதில்லை.  உங்கள் புரிதல் பொருட்தன்மையைத் தாண்டி உயரும்போதுதான், உண்மையான ஆன்மீகப் பயணம் துவங்குகிறது  இதைத்தான் நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்து கொண்டிருந்தார்கள்; 

25/8/14

கண்ணனின் கனவு



 முன்னாள் நடிகை வைஜைந்திமாலா. 54 வருடங்களுக்கு முன் தான் கதாநாயகியாக நடித்த  கல்கியின் அமரகாவியாமான பார்த்திபன் கனவு  ஒரு ஒலிபுத்தகமாக வரும் என்றோ அதை தானே வெளியிடுவோம்  என்றோகனவிலும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார். சமீபத்தில்  பொன்னியன் செல்வன் நண்பர்குழுவினர் மூலம் திரு பாம்பே கண்ணன்  இந்த காவியத்தை  ஒலி புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார்.  இவர்  சிவகாமியின் சபதம், பொன்னியன் செல்வன் காவியங்களையும் ஒலி புத்தகமாக்கியிருப்பவர். தமிழ் படிப்பதை மெல்ல மறந்துவரும்  இன்றைய இனிய இளையதலைமுறையினர் படிப்பதைவிட கேட்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து இவர் இதுபோன்ற  ஒலிபுத்தகங்களை தயாரிக்கிறார். மேடை நாடகங்களில் நீண்ட அனுபவம்  கொண்ட இவர்  இதைவெறும் வியாபார முயற்சியாக இல்லாமல் ஒரு தவமாகச் செய்து கொண்டிருக்கிறார்.
மிகுந்தசிரமங்களுக்கிடையே தகுந்த குரல்களை தேடிபிடித்து பயிற்சி அளித்து ஒலிப்பதிவை மேற்பார்வையிட்டு தயாரிக்கிறார்.
நல்லி குப்புசாமி,  வைஜந்திமாலா, சிவசங்கரி, ஏ ஆர் எஸ்,இந்திரா செளந்தர்ராஜன்  கலந்துகொண்ட விழாவில் பேசியவர்கள் அனைவரும்  அமரர் ஆசிரியர் கல்கியின் பல்வேறு முகங்களைப் பற்றி பாராட்டி பேசினார்கள்
.தான் பிறப்பதற்கு மூன்பே தங்கள் குடுமபத்துக்கு அறிமுகமானவர் கல்கி  என்று ஆரம்பித்து  ”கல்கி மாமா” என்று உரிமையோடு பேசிய சிவசங்கரி தொழில்நுட்ப வசதிகளற்ற காலத்திலேயே அமரர் கல்கியின் கடின உழைப்பு ஆச்சரியத்தை தருகிறது என்றார்.  பார்த்திபன் கனவு எழுதிய பின் அதன் முந்தியகாலகட்ட கதையாக சிவகாமியின் சபதத்தை தொடர்ந்த (backword integration) டெக்னிக் பிரமிப்பூட்டும் விஷயம் என்றார்.  . முடிவு தெரியாமல் போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்கிற ஆதங்கத்தில் “நான் சாகறத்துக்குள்ள பொன்னியின் செல்வன் முடிஞ்சுடுமோன்னோ...” என்று அவரின் பாட்டி கேட்டு கொண்டே இருந்ததை சொன்னபோது அரங்கம் சிரிப்பில் அதிர்ந்த்து. 
 விழாவின் ஆரம்பத்தில், பார்த்திபன் கனவிலிருந்து சில காட்சிகளை நாடகமாக நடித்தது நிறைவாக இருந்தது உடை, மேக் அப், நடித்தவர்கள், தமிழ் உச்சரிப்பு, ஒலி/ஒளி அமைப்பு எல்லாமே அருமை,    நாயகன் விக்கரமனாக நடித்த சூரஜ், நாயகி குந்தவியாக நடித்த  அர்ச்னா நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் எனபதை நிருபித்தார்கள். இந்த டீமையை வைத்து முழு நாடகமாகவே போடலாம்.
வளரும் தொழில் நுட்பத்தில் இப்படி ஒலிபுத்தகங்கள் உருவாவது பரிமாணவளர்ச்சி, வருங்காலங்களில் இதுதான் புத்தகங்களின் வடிவமாக இருக்கபோகிறது.. தனது புத்தகங்களும் இப்படி ஒரு நாள் வெளிவரும் என்றார் இந்திரா செந்திர்ராஜன்.
ஒலிபுப்த்தகம் வெளிவர நண்பர் பாம்பே கண்ணன் அவர்களின் அயராத உழைப்பையும் தயாரிப்பாளர் சிகே வெங்கட்ராமன் அவர்களின் பெருந்தன்மையையும் மகிழ்ச்சியுடன் பாராட்டிய ஏஆர்ஸ்...  நாடக நடிகர்களின் சிறப்பான நடிப்பை பாராட்ட விட்டுபோனதற்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் மைக்குவந்து அவர்களை பாரட்டி நன்றியும் சொன்னார். 30 ஆண்டுகாலமாக நாடகமேடையை நேசிப்பவர் இலையா?
1960ல் கறுப்பு-வெள்ளை பார்த்திபன் கனவில் நடித்த வைஜயந்திமாலா பாலி  இப்பொழுதும் டிரிம்மாக இருக்கிறார். தன் மெல்லிய குரலில்  மெல்ல நாலுவரிகளில்பேசி  தன் பேச்சைமுடித்துகொண்டார். 
அரங்கம் நிறைந்திருந்தததைவிட ஆச்சரியம் நடுவே குத்துபாட்டு ரிங்டோன்கள் ஒலி  தொல்லையிலாததுதான்.
 ஒலிப்புத்தகத்தில் நடிக்கும் போது நடிகர்கள் வசனங்களைப் வெறுமனே படிக்காமல்.  நடிக்கிறார்கள்  அந்த பாத்திரமாகவேமாகி பேசுகிறார்கள்.  இதை நன்கு தெரிந்தவர் இயக்குனர் பாம்பே கண்ணன். ஆனாலும் ஒலிபுத்தகத்திற்கு குரலால் உயிர் கொடுத்தவர்களை அன்று  ஏன் மேடையில் கெளரவிக்கவில்லை என்று தெரியவில்லை. 
 மூன்று தலைமுறைகளை கடந்த கலாபூர்வமான கல்கியின் காவியங்கள்  அடுத்த தலமுறையையும் அடைந்து அதையும் தாண்டி நிற்க உதவும்  பாம்பே கண்ணனின் இந்த  ஒலிபுத்தக முயற்சி பெரிதும் பாராட்டபட வேண்டிய ஒன்று
(31/8/14 கல்கி)

23/8/14

உயிர் துறக்கும் உரிமை



ஒரு மனிதனுக்கு தான் உயிரை விரும்பிய போது துறக்கும் உரிமை உண்டா? தன்னுயிரை தானே மாய்துகொள்வது என்பது  தற்கொலை அதுவும் அதற்காக முயற்சிப்பதும்  உலகின் பல நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் ஸ்விஸ் நாட்டில் இது  குற்றமில்லை. சட்ட விதிகளுக்குட்பட்டு ஒருவர் தன் மரணத்தை தீர்மானித்துகொள்ள முடியும்.
ஸூரிச் நகரில் இதை செய்து கொடுப்பதற்காகவே ஒரு அமைப்பு செயல் படுகிறது. அதன் பெயர் டிகினாட்ஸ் (DIGNITAS) இவர்கள் தன் உயிரைப்போக்கிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு, உடல் ரீதியாக எந்த பிரச்ச்னைகள் இல்லாவிட்டாலும் கூட, மரணத்தை அவர் விருப்பம்போல செய்ய திட்டமிட்டுகொடுத்து அனுமதிகள் பெற்று செய்துகொடுக்கிறது.
இதைப்போல  உலகின் 23 நாடுகளில, உயிரை விரும்பி போக்கிகொள்ளு விரும்புபவர்களின் 38 சொஸைட்டிகளின் கூட்டமைப்பு ஒன்றும் 1980லிருந்து இயங்கி வருகிறது.  1998ல்  துவக்கபட்ட டிகினாட்ஸ் அமைப்பில்  உலகின் பல பகுதிகளிலிருந்தும் பதிவு செய்துகொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7000 த்த தாண்டுகிறது.  உயிர் போக்கி கொள்ள விரும்புகிவர்களைத்தவிர இந்த அமைப்புக்கு உதபவர்களும் இதில்  அடக்கம். இதுவரை  உலகின் வெவேறு நாடுகளைச்சேர்ந்த 1800 பேருக்கு  அவர்கள் விரும்பியபடி உயிரை போக்கிகொள்ள உதவியிருக்கிறது.  அதிகமாக பயன் படுத்தியவர்கள் ஜெர்மானியர்கள் இதுவரை 840 பேர். குறைவாக  செய்துகொண்டிருப்பவர்கள் இஸ்ரேலியர் 19 பேர். மிக குறைவாக பயன்படுத்திய நாடுகளில் இந்தியா ஒன்று. இதுவரை இதைப்பயன்படுத்திய இந்தியர் ஒருவர் மட்டுமே. இந்த சேவைக்கு இவர்கள் வசூலிக்கும் கட்டணம்10,500 ஸ்விஸ்பிராங்க்கள் இந்திய மதிப்பில் ரூபாய் 7 லட்சம்
ஏன் இவ்வளவு கட்டணம்?  இதில் பதிவுகட்டணம். ஆலோசனை கட்டணம், உயிரைபோக்கிக்கொள்ள உதவும் சேவைக்கான கட்டணம் உதவும் டாக்டரின் பீஸ்,அரசாங்கத்துக்கு அனுப்பும் ரிப்போர்ட்,  எரிப்பது புதைப்பது மற்றும் இறுதிச்சடங்குகளுக்கான செலவு, அவசியமானால் குடும்பத்தினருக்கு பதில் கோர்ட் கேஸ்களை சந்திக்க நேரும் செலவு  எல்லாம் அடங்கும் என்கிறார்  இந்த அமைப்[பின் தலைவர்  லூட்விக் மின்லி.
 81 வயது ஆகும் இவர் ஒரு வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்.. விரும்பும் நேரத்தில் விரும்பும்படி இறப்பது தனிமனித உரிமைகளில் ஒன்று என்பது இவர் வாதம்.  சரி இதில் டாக்டர் எங்கிருந்து வருகிறார்.? உயிரை போக்கிகொள்ள வேதனை தராத விஷ ஊசி போட்டுகொள்ள ஒரு டாக்டரின் மருந்து சீட்டு வேண்டும். அதற்காக தான் அவருக்கு பீஸ். நல்ல உடல் நிலையில் இருப்பவருக்கு அத்தகைய விஷமருந்துக்கு  டாக்டர் அனுமதி தரலாமா?. இது இன்னும் ஸ்விஸ்  சட்டம் மறுக்காத விஷயம். என்கிறார் லூட்விக்.

 ஸ்விஸ் நாட்டு சட்டங்களின் படி  தன் சொந்த நலனுக்காக ஒரு தற்கொலையை மறைத்தால் குற்றம். ஆனால் கெளரமாக இறக்க விரும்பும் ஒருவருக்கு விஷ மருந்து கொடுத்து இறக்க உதவிசெய்தால் அது குற்றமாக கருத படமாட்டாது.
 ” நாங்கள் செய்வதில் சொந்த நலனோ அல்லது நிகழந்ததை மறைப்பதோ இல்லை.  உருப்பினர் விரும்புவதைச் செய்கிறோம்  அதனால் சட்டபடி  இதில் எந்த தவறும் இல்லை” என்கிறார்.

ஆனால் இவரின் இந்த அமைப்பை கண்டனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மனிதனினால் ஸ்விஸ் நாட்டின் பெருமை குறைகிறது. தற்கொலை செய்யதுகொள்ளவிரும்புவர்களின் சொர்க்கமாக ஸ்விஸ் மாறுவதை  நாங்கள் விரும்பவில்லை என்கிறார்கள் இவர்கள்

 தற்கொலை செய்துகொள்வது  தடைசெய்யபட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலிருப்போருக்கு இது நல்ல வாய்ப்பாகிடாதா? மேலும் இம்மாதிரி வசதிகள்  அதிகமான தற்கொலை முயற்சியை ஊக்குவித்துவிடாதா?
இல்லை என்கிறார் லூட்விக்.” இந்திய சட்டங்கள் பிரிட்டிஷாரால்  இந்திய வாழ்க்கைமுறைகளை  நெறிகளை பின்பற்றாமல் இயற்றபட்டவை. இந்திய வேதங்களில் ஒரு மனிதன் தன் குடும்ப பொறுப்புகளை முடித்தவுடன் உணவு நீர் இவற்றை துறந்து  நீண்ட பயணம் செய்து உயிர் துறக்கும் உரிமை தரபட்டிருக்கிறது  இந்திய ஜெயின் சமூகம் இதை அனுமதிப்பதோடு  கெளரவமாகவும் கருதுகிறதே என்கிறார்.  மேலும் இந்த அமைப்பினால் தற்கொலைகள் பெறுகாது  ஒவ்வொரு வெற்றிகரமான தற்கொலைக்கும் பின்னால் 49 தோற்ற முயற்சிகள் இருக்கிறது. மேலும் எங்களிடம் விரும்பி வருவர்களை மறுநாள் காலையில் நாங்கள் கொன்று விடிவதில்லை. 3 கட்ட ஆலோனைகள் வழங்க படுகிறது, மனம் மாற, வாழும் வழிக்கான வெளியேரும் கதவுகள் திறந்தே இருக்கும். அந்த பச்சை விளக்கு காட்டப்படும் கட்டத்தில் பலர் மனம் மாறியவர்கள் பலர். இருக்கிறார்கள்.””
 இந்தியாவில் சட்டம் என்ன சொல்லுகிறது.?
தற்கொலை மரணங்களில் பல வகைகள். உணர்ச்சி வசப்பட்டு உயிர் போக்கிக்  கொள்வது,  உடல் உபாதைகள் பொறுக்காமல் உயிரைபோக்கிகொள்வது, டாக்டரின் உதவியோடு கருணைக்கொலை செய்ய வேண்டுவது எல்லாம் இந்தியாவில் குற்றம்.  உடலில் உயிர் மட்டும் தங்கி மற்றவை செயலிழந்த கட்டத்தில் கூட கருணைக் கொலையை கூட கோர்ட் அனுமதியில்லாமல் டாக்டர்கள் செய்ய முடியாது.  1994ல்  தற்கொலை முயற்சி  என்ற குற்றவியல் சட்டமே சட்டவிரோதமானது என  உச்ச நீதி மன்றம் ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் 1996ல் மற்றொரு  தீர்ப்பில் “வாழும் உரிமைகள் என்பதில் சுய மரணத்தை வரவழைத்துகொள்வது அடங்காது” என்றும் 1994 தீர்ப்பு தவறு என்றும் சொல்லபட்டது. கருணைக்கொலைகளுக்கு அனுமதிக்க அரசின் சட்டம் தேவை என்று சொன்னது இந்த தீர்ப்பு. இதுவரை  மரணம் அடையமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் உடல்நிலையை காரணம் காட்டி உறவினர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிகோரி 15  வழக்குகள் தொடரபட்டிருக்கின்றன. எதற்கும் அனுமதி தரப்படவில்லை.  இது நாடுதழுவிய அளவில் விவாதிக்க பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்பதால் சமீபத்தில் உச்சநீதி மன்றம்  மாநில அரசுகளின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறது
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 





______________________________________________________
கருணைக்கொலை தவறில்லை: சிவசங்கரி
கருணைக்கொலை என்ற வார்த்தையே புதிதாக இருந்த 1980-களில் கருணைக்கொலைஎன்ற நாவலை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி. நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகியும் கருணைக்கொலை குறித்த விவாதங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன . “கருணைக்கொலை என்பது சட்டத்தால் மட்டும் முடிவு செய்யப்படக்கூடியது அல்ல. அது உணர்வுப்பூர்வமானது. அது தற்கொலையின் இன்னொரு வடிவம் என்று மத்திய அரசு சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. அதே சமயம், நோயின் இறுதி நிலையில் இருக்கிற ஒருவர், அதன் வலியை தாங்க முடியாமல் கருணைக்கொலை முடிவை எடுப்பதில் தவறில்லை.
நான் வாழ்ந்தது போதும், என்னால் இந்த வேதனைப் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று கதறுகிறவரை, ‘நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும்என்று நிர்பந்திப்பது நியாயமில்லை. எனவே இதுபோன்ற வழக்குகளில் நான் கருணைக்கொலையை ஆமோதிக்கிறேன்என்கிறார் சிவசங்கரி.
 _______________________________________________________________________________

7 கருணைக் கொலையை அரங்கேற்றிய மருத்துவர்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 7 நபர்களை கருணைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணைக் கொலை என்பது பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும், இதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சிஸ்கோ ஹோலண்டேவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மிகவும் தீவிரமான கட்டத்தில் நடைபிணமாய் வாழும் ஒரு சிலரை, மருத்துவர்கள் சேர்ந்து ஆலோசித்து கருணைக்கொலை செய்யலாம்.
இந்நிலையில், மருத்துவர் நிக்கோலஸ் என்பவர், தன்னுடைய நோயாளிகளில் 7 பேரை கருணைக்கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், கருணைக்கொலை செய்யப்பட்ட குடும்ப நபர்கள், இந்த மருத்துவர் செய்தது எங்களுக்கு பெரிய உதவி என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க கூடாது எனவும் சாட்சி கூறியுள்ளனர்.
இதனால் டாக்டரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது







21/8/14

சீனாவின் குரு காணிக்கை






யோகா குரு அய்யங்கார் தன் பிராணாயமத்தை கடைசி மூச்சை நேற்று நிறுத்திவிட்டார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கியில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

சீனாவில் இந்திய அரசின்  உதவியுடன் முதல் முறையாக ஒரு யோகா உச்சி மாநாடு  தென் சீனாவில்  குன்ஸாஹு(GUNGZHOU)  என்ற ஒரு பெரிய தொழில் நகரில்  சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. தலைமை விருந்தினாராக் அழைக்கபட்டிருந்தவர் யோகா குரு பி கே எஸ் அயங்கார். அவர் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலும் சீனாவிற்கு இதுதான் முதல் முறை.  புனாவில் யோகா பள்ளியை   நடத்திவரும்  இந்த குருவிற்கு  அங்கே எதிர்பாராத ஆச்சரியங்கள் பல  காத்திருந்தன. 200டாலர் கட்டணம் கட்டி மாநாட்டிற்கு வந்திருந்த 1300 பேர் களில்  சில மாணவர்கள் ஒருங்கிணைந்து அவருடைய அய்யங்கார் பாணி யோகசனங்களை  தவறில்லாமல் செய்துகாட்டினார்கள். . அதைவிட ஆச்சரியபடுத்திய விஷயம் அவரது அய்யங்கார் ஆசனங்கள் சீனாவில் மிகவும் பாப்புலர் என்பதும், அந்த நாட்டில்  17 மாநிலங்களில், 57  நகரங்களில்  அவரது பாணி யோகவை கற்பிக்க பல பள்ளிகள் இருப்பதும் 30, 000க்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் எனபதும் தான். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஷிகேஸ் வந்து  இவரது சீடர்களிடம் பயிற்சி பெற்றவர்கள்.  சீனர்கள் தங்களது குருவிற்கு மிகுந்த மரியாதை அளிப்பவர்கள். தாங்கள் பயிலும் யோக கலையின் பாணியை உலகிற்கு அறிமுகபடுத்திய குருவை சந்திப்பதை வாழ்வின் பெரிய வாய்ப்பாக கருதிய சீன இளைஞ்ர்கள் அவரை  பல நகரங்களில் வரவேற்றனர்.  “சீனர்களுக்கு யோகா பற்றி ஓரளவு தெரியும் என்பதை மட்டுமே அறிந்திருந்த எனக்கு  யோகா அங்கு இவ்வளவு பிரபலமாக் இருப்பதை பார்க்கும்போது  மிகவு சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா யோகாவில் இந்தியாவை முந்தி விட்டால் கூட நான் ஆச்சரியபட்மாட்டேன் “  என்று சொல்லும் அய்யங்கார் கர்நாடக மாநிலத்தில்  பெல்லூர் என்ற சிறிய கிராமத்தில் மிக ஏழைக்குடும்த்தில் பிறந்தவர். சிறுவயதிலியே பெற்றோர்களை இழந்து மைசூரிலிருக்கும் புகழ்பெற்ற யோகாசன ஆசிரியாரான தன் மாமா கிருஷ்ணமாச்சாரியாரின்  வீட்டில் தங்கி அவருடைய உதவியாளாரக பணிசெய்து யோக கலையை கற்றவர். 15 ஆண்டு ப்யிற்சிக்குபின்னர்   மராஷ்ட்டிர மாநிலத்தில் புனா நகருக்கு வந்து யோகா பயிற்சி பள்ளியை  துவக்கி  அதை வளர்த்தவர். தானே கற்று உணர்ந்த சில பழைய யோகயாசன முறைகளை செம்மைப்படுத்தி கற்பித்துவந்தார். எளிதான  இந்த யோகா பாணி அய்ங்கார் ஆசனங்கள் என்று பிரபலமாகி இன்று இந்தியாவில் பல இடங்களிலும், உலகின் பல நகரங்களிலும் பரவியிருக்கிறது.  ’ ‘யோகா லைட் ஆப் லைஃப்’ ‘ என்ற இவரது புத்தகம் உலகம் முழுவதும் அதிக அளவில் விற்கும்  யோகா புத்தங்களில் ஒன்று
இந்த பயணத்தில்  பல  சீன நகரங்களில் யோகானசஙகள்  செய்து காட்டியும் அது குறித்து விளக்க உரையையும் நிகழ்த்தியிருக்கும் இந்த குருவின் படத்துடன் சீனா நாட்டின் அஞ்சல்துறை  ஒரு விசேஷ  தபால் தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இத்தகைய கெளரவம் பெறும்  முதல் இந்தியர் இவர்தான். சீன அரசுக்கு  தெரிவித்த நன்றி உரையில்” என் வாழ் நாள் முழுவதும் சந்தோஷப்படும்  வகையில் என்னை சீனாவின் ஒரு அடையாளமாக  கருதி  இந்த மகத்தான கெளரவத்தை அளித்தற்கு  மிக்க நன்றி  என குறிப்பிட்டிருக்கிறார். இனி ஆண்டுக்கு ஒருமுறை சிலமாதங்களாவது சீனாவில் யோகா வகுப்புகள் நடத்தபோவதாக அறிவித்திருக்கும் இவருக்கு வயது- ஒன்றும் அதிகமில்லை 93 தான்.