21/1/16

கடந்து போன 2015 எப்படியிருந்தது ?



திரும்பிப்பார்த்து சில முக்கிய நிகழ்ச்சிகளை அசை போட்டபோது சற்று பிசியான ஆண்டாகவும் கற்றதில் சில கடினமானதாகவும், பெற்றதில் சில புதியதாகவும் இருப்பதாக தோன்றியது. 



                                                                ஜனவரி



எனது “வெற்றி வெளியே இல்லை”யின் ஆங்கிலபதிப்பானஆறே DARE TO DREAM  தமிழ் புத்தகம் சென்னையிலும் பெரிய விழாக்களில்தொழிலதிர்பகளால் வெளியிடப்பட்டது. எழுதுபவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று அவனது புத்தகம் சிறப்பாக வெளியிடப்படுவது, அவனது எழுத்துக்காக கெளரவிக்கபடுவது,  எனக்கு அத்தகைய தருணம் 12/1/15 அன்று வாய்த்தது. அதிலும் மாலனுடன் சேர்ந்து அந்த கெளரவத்தை பெற்றது மிக சந்தோஷமாக இருந்தது. இருவரும் சேர்ந்து எழுத ஆரம்பித்தது 1975ல் மணியனின் இதயம் பேசுகிறது இதழில். பின் மாலன் எழுத்தையே வாழ்க்கையாக்கி கொண்டார். நான் வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது சற்று அதிகமாக எழுதுகிறேன். ஆனால் இருவரும் ஒரே மேடையில் கெளரவிக்க பட்டது இதுதான் முதல் முறை.. தங்கள் பிளைகள் எழுதுவதில் பெருமை கொண்ட எங்கள் பெற்றோர்கள் சொர்க்கத்திலிருந்து பார்த்து சந்தோஷபட்டிருக்கும் இந்த காட்சிகளை காண அருமை மனைவியும் அன்பு மகனும் நேரில் பங்கேற்றது மகிழ்ச்சியின் கனத்தை கூட்டிற்று.
எனது வெற்றி வெளியே இல்லையின் ஆங்கில பதிப்பு மும்பய் தாஜ் ஹோட்டலில் மிகப் பெரிய விழாவில் வெளியிடபட்டது



 பிப்ரவரி


திருப்பூர் தமிழ் சங்கம் எனது கடைசிக்கோடு புத்தகத்தை பரிசுக்கு தேர்ந்தெடுத்து ஒரு விழாவில் விருது பரிசும் கொடுத்தார்கள். பொருட்காட்சி திடலில் விழா. மக்கள் நின்று கொண்டு கேட்கும் அளவிற்கு கூட்டம்.மகிழ்ச்சியாகவும் மீராவராதைல் சற்று வருத்தமாகவும் இருந்தது. விருது பெற்ற கையோடு ராம்கோ பள்ளி மாணவர்களுக்கான quizz ராஜபாளயத்தில் நடத்த பயணித்தேன். மீண்டும் மாணவர்களை சந்தித்தது சந்தோஷமாகயிருந்தது. திட்டகமிஷனை மோடி அரசு ஒழித்து புதிய நிதிஅயோக் கொண்டுவந்தது குறித்து ஜெயாடிவியில் ஒரு விவாதத்துக்கு சுதாங்கன் அழைத்தார். அறிமுகமில்லாத  வெளியூர்காரகளிடமிருந்தெல்லாம் கூட பாராட்டுகள்.

.


மார்ச்

பட்ஜெட் பற்றி ஆழம் இதழில் எழுதிய கட்டுரைக்கு பெரிய வரவேற்பு. மீண்டும் ஜெயாவில் விவாதத்திற்கு அழைத்தார்கள். நான் பல டேட்டாக்களை வைத்து பேசியது பிஜேபி காரரை ஆச்சரியப்படுத்தியது.  தொடர்ந்து கட்சி பணிகளில் பங்கு கொள்ள அழைப்பு வந்தது ஆச்சரியம். வீடியோவைப்பார்க்கலாம் 





எப்ரல்

கல்கியில் எழுதவதற்காக் விஜய் டிவியில் ஒளிபரப்பான  தமிழ் மஹாபாரத்தின் தயாரிப்பு குழுவை கடந்த ஆண்டு சந்தித்தேன். நிப்போது அது மீண்டும் ஓளிபரப்பாவாதால் சந்தித்து பாராட்டினேன்.  பால கிருஷ்ணன் குழுவின்  உழைப்பை கண்டு பிரமித்துப் போனேன். தொடரவேண்டிய நட்பு இது 





                       மே

என் கடைசிக்கோடு புத்தகத்தை காந்தி ஸ்டெடி செண்டரில்  விமர்சிப்பதற்கான கூட்டம் என அழைத்தார்கள். கூட்டம் அதிகமில்லை ஆனால்  வந்தவர்கள் எல்லாம்  அறிவிஜிவிகள். நண்பர் மோகனின் அருமையான் விமர்சனம். வந்தவர்களில் பலர் புத்தகத்தைப் படித்திருந்தது  சந்தோஷமான ஆச்சரியம் 



ஜூன்




தமிழ் வளர்த்த சான்றோர் கூட்டத்தில் வ வே, சு வுடன் குமரிமலர் ஏ. கே செட்டியார் பற்றிய கலந்துரையாடல் செய்தி இந்துவில் படத்துடன் வந்திருந்தை பார்த்தபலர் என்னுடன் பேசினார்கள். அந்த கூட்டங்கள் பற்றி சொல்ல நல்ல வாய்ப்பாயிற்று.





ஜுலை


 (15/07/16) திரு ரத்தன் டாட்டா கிரேட் லேக்ஸின் பட்டமளிப்பு விழாவிற்காக சென்னை வந்திருந்தார். திரு பாலா பாலசந்திரன் என்னை விழாவிற்கு அழைத்து அவரிடம் நூலின் ஆசிரியர் என அறிமுகப்படுத்தினார்
மும்பையில் நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டிய புத்தகத்தின் ஆசிரியர் என அறிமுகப் படுத்தினார் பாலா.
கைகுலுக்கியபின் திரு ரத்தன் டாட்டாவிற்கு புத்தகத்தின் பிரதியை கொடுத்தேன். திறந்த பார்த்த அவர்
 ”கையெழுத்திட்டுகொடுங்கள்”: என்றார்
ஆச்சரியம்,சந்தோஷம், பெருமிதம் எல்லாம் ஒருசேரத் தாக்க சிலகணங்கள் உறைந்து போனேன். இந்தியா தொழில் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எனது புத்தகத்தை கையெழுத்துடன் கேட்கிறார். (சொக்கா இது நிஜம்டா
கையெழுத்திட்டு புத்தகத்தை கொடுத்த பின் மற்றொரு பிரதியில் அவரது ஆட்டோகிராப் தந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றேன்

உடனே உட்கார்ந்து என் பெயரை நிதானமாக எழுதி(இடது கை பழக்கமுள்ளவர்) வாழ்த்துகளுடன் என்று கையெழுத்திட்டுகொடுத்தார் கட்டுரையை பார்க்க rmananvsv.blogspot.in/2015/07/blog-post_18.html


அனுதாப அலைகள் சூனாமியாக தாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் புதிய தலைமுறை மக்கள் மேடையில் பங்கு கொள்ள திரு வெங்கட் அழைத்தார்.(29/07/15) சற்று யோசித்தேன். நிகழ்ச்சியில் மாவட்டங்களிலிருந்து மாணவர்களும் பங்கேற்பதாக சொன்னதால் நிகழ்ச்சி வெறும் அஞ்சலியாக இல்லாமல் மாறுதலாக இருக்கும் என எண்ணி பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் தெளிவான பார்வையில் துணிவாக கருத்துகளை சொன்ன இந்த மாணவர்கள் கலாம் கண்ட கனவுகளின் நம்பிக்கை விதைகளாகத் தெரிகிறார்கள். விரைவில் வளர்ந்து விருட்சமாகப்போகும் அட...


தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கத்தினர் ஒரு நில அளவையாளரின் கதையான இந்தப் புத்தகத்தின் ஒரு சிறப்பு பதிப்பை அவர்கள் தலைவர் பணிநிறைவு விழாவில் விழாவில் வெளியிட விரும்பி என்னை அணுகினார்கள். இம்மாதிரி விழாக்களில் புகழார மலரும் தலைவரின் வாழ்க்கை கதை போன்றவற்றை வெளியிடும் பலரிடையே ஒரு புத்தகத்தை சிறப்பு பதிப்பாக கொண்டுவருவது ஒரு மாறுதலான ஆச்சரியம்.
மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். புத்தகத்தின் பதிப்பாளர் (கவிதாபதிப்பகம்) சொக்கலிங்கம் மிக குறைந்த அவகாசத்தில் (4 நாட்கள்) சங்கத்தினர் விரும்பியபடியே ஒரு சிறப்பு பதிப்பை 




                                                  ஆகஸ்ட்

நண்பர் வவேசு தந்த செய்தியினால் மக்கள்டிவிக்காக என்னை பேட்டி கண்டார்கள் கீரின் ஏக்கர் தோட்டத்தில் ஒரு நல்ல பேட்டியாக அமைந்தது. செல்வி புரிந்துகொண்டு கேள்விகள் கேட்டார். என் எல்லா புத்தகம் பற்றி பேசு ஒரு வாய்ப்பாக்கிகொண்டேன். பலர் பார்த்து பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது.











செப்டம்பர்




கறுப்பு பணம் பற்றி  தகவல் சொல்லுபவர்களுக்கு பரிசு என்ற அறிவிப்பு பிரச்சனிக்கு மீண்டும் உயிர் கொடுத்திருந்தால், புதிய தலைமுறை டிவியில்  விவாதத்தில் பேச அழைக்கபட்டேன். செய்தியாளர் மணி அறிமுகனார். பாஸ்கர் என்ற மனிதரையும் சகித்துகொள்ளவேண்டியிருந்தது
.

அக்டோபர்

எம்.எஸ்ஸின் வாழக்கை கதை முயற்சி  மீண்டும் தொடர ஆரம்பித்தது. பல ஆலோசனைகள்- தேவையில்லாததும் கூட வழங்கிக்கொண்டிருந்தார்கள். புத்தா விஷயமாக சீதா ரவியின் உதவியால் கெளரிராம்நாரயணன் அவர்களை சந்தித்தேன். பிரமிக்கவைக்கும் பெண்மணி. எவ்வளவு தெரிந்தவராக இருக்கிறார். நீண்ட உரையாடல் பதிவு செய்து கொண்டேன். அடுத்த பதிவுக்கு நேரம் கேட்டேன்.




நவம்பர்

கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் சாஸ்தா யூனிவர்சிட்டியில் டிஜிட்டல் ஜர்னலிசம் கோர்சின் பாடதிட்டத்தை உருவாக்க அமைக்கபட்டிருக்கும் குழுவிலி இருக்கிறார். அதற்காக நடந்த கூட்டங்களுக்கு அழைக்கபட்டேன். அமெரிக்க பல்கலை கழக பேராசியர்களை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டிஜிட்டல் ஜர்னலிசம் பற்றி படித்து புரிந்துகொண்டேன்

டிசம்பர்

விண்வெளியில் இருக்கும் கருப்பு  துளைகள பற்றி ஆராய்ச்சி செய்யும் பிரியம்வதா என்ற பெண்மணியை பற்றி ரவி சொன்னார். அவருக்கு பாரதிவிருது வழங்கப்படுவது பற்றியும் சொன்னார். கல்கியில் எழுத நான்  அமெரிக்காவிலிருக்கும் அவரை தொடர்பு கொண்டேன். ஆச்சரியப்படும் விபரங்கள். மிக அழகாக எளிமையான் தமிழ் பேசினார். கேட்ட விபரங்கள் உடனே மெயிலில் அனுப்பினார்.  சென்னை வந்தவுடன் சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது. இந்த ஆண்டு அவருக்கு நோபல் கிடைக்கும் என அமெரிக்க பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. 

.http://ramananvsv.blogspot.in/2015/12/blog-post.html







18/12/15

நோபல் பரிசு பெறுவாரா இந்த தமிழ்ப்பெண்?

கற்பனையில் கூட எல்லைகளை நிர்ணயிக்க முடியாத  அளவில் பறந்து விரிந்து கிடக்கும்  பிரமாண்டமான  பிரபஞ்சவெளி எண்ணற்ற ஆச்சரியங்களும்   எளிதில் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களும்  நிறைந்ததுஇந்த மர்ம தேசத்தில் இன்னும்  முழுவதுமாக அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் ஒன்றுகருப்பு துளைகள்என அறியப்பட்டிருக்கும்  black holes.  பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். சூரியன் பிறந்தே சுமார் 460 கோடி ஆண்டுகள்தாம் ஆகின்றன   என்பதிலிருந்து தூரத்தை  யூகித்துக்கொள்ளுங்கள்.
 இந்த கருப்பு துளைகள் பற்றிய  விண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்  தொடர்ந்து கொண்டுவருகின்றனஇதில் ஒரு புதிய விஷயத்தைத் தனது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்து   உலகநாடுகளிலுள்ள  விண்ணியல் விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறார்  இந்த இந்திய பெண் விஞ்ஞானி. அமெரிக்காவிலிருக்கும் அவருடன் பேசியபோது அறிந்தவை இவை

பிரியம்வதா என்னும் பிரியா டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா போனவர். உலகப்புகழ் பெற்ற  அமெரிக்க MIT பல்கலை கழகத்தில் விண்ணியலில் முதுகலை, தொடர்ந்து முனைவர் பட்டங்கள் பெற்று தற்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில்  விண்ணியல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர். தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து  கொண்டிருப்பவர்டென்மார்க் நாட்டின் கியூபன் ஹோவன் விண்ணியல் பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசியராக  அழைக்கப்பட்டிருப்பவர். டெல்லி  பல்கலை கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகவும் கௌரவிக்க பட்டிருப்பவர்,
உலக விண்ணியல் விஞ்ஞானிகள் பிரமித்து போகுமளவிற்கு இவர் சமீபத்தில்  கண்டு பிடித்திருப்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள கருப்பு துளைகளை பற்றி நாம் சற்று புரிந்து கொள்ள வேண்டும்
விந்தைகள் நிறைந்த விண்பேரண்டவெளியில்  ஒரு பகுதி இந்த   கருங்குழிகள் (Black Hole) அல்லது கருந்துளைகள் என்பன, இவை  வலுவான ஈர்ப்புச் சதியைக் கொண்டுள்ளவை தானும் ஒளிராது, தன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது  இந்தக் கருந்துளைகள்.. எனவே, கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது. நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர்.அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்துவிடும். அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும்போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவதுபோலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.
இதன் சுற்றுப்பாதையில் இப்படிச் சுழன்றுகொண்டிருக்கும்   கோள்களின் வேகம், அவைகள் இருக்கும் நிலைகளின் மூலம் இந்தக் கருந்துளைகளின்  அமைப்பை கணக்கீடுகள் மூலம் எப்படியிருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள். வளரும் தொழில் நுட்பம் கைகொடுக்க பெருமளவில் கணினிகள் மூலமும் ராட்சத டெலிஸ்கோப்புகள் மூலமும் இந்தக் கணக்கீடுகளை உறுதிசெய்திருக்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் இருக்கும் அடர் கருப்பு பகுதி  வாழ்நாள் முடிந்த பின் எரிந்துபோன நட்சத்திரங்களின் கூட்டம் என்றும். அவற்றுடன்  புதியஎரிந்தநட்சத்திரங்கள்  சேர்வதால் அவை  வரமின்றி வளர்கின்றன என்றும் சொல்லப்பட்டது.
இந்தப் பின்னணியில் பிரியம்வதா கடந்த சில ஆண்டுகளில் தனது தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலம்  கருந்துளைகளை உருவாக்கும் அடிப்படையான  அடர் கருப்பு பொருள்களின் (dark matter)   இயல்புகளையும், கருந்துளைகள் உருவாகி வளர்வது குறித்தும் ஆராய்ந்து அறிக்கைகள் கட்டுரைகள் தந்திருக்கிறார். பலகாலமாக நம்பப் பட்டுவந்ததுபோல இந்த கருங்குழிகள் இறந்த நட்சத்திரங்களின் தொகுப்பு இல்லை. அவைகள்  ஒரு வாயுவாக தானாகவேஉருவாகி மிக வேகமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியைத் தானே நிறுத்திக் கொண்டுவிடுகிறது. கருந்துளைகளுக்கும் வரம்பு,விளிம்பு உண்டு என்பது தான் இவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கும் விஷயம்.  இந்த முடிவு இப்போது விண்ணியல் விஞ்ஞானிகளுக்கு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறதுஇது கரும் துளைகளை பற்றிய ஆராய்ச்சிகளை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்லப்போகிறது.
அவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்திருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு  உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “ராமன் விளைவு” “சந்திரசேகர் வரையறைஎன்பதைப் போல பிரியா வரம்பு என்பதும் பேசப்பட்டு வருகிறது.
பிரியம்வதாவின் இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவருக்கு  பல நாடுகளின்  நிறுவனங்களின் விருதுகளும் ஃபெலோஷிப்புகளும்  வழங்கப்பட்டிருக்கிறது  ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதை மிகவிரைவில் இவர் பெறுவார்  என விஞ்ஞான உலகம் கணித்திருக்கிறது.
ஆண்டு தோறும் தவறாமல்  பாரதிக்கு விழா எடுத்து அதில் அரிய சாதனைகள் செய்தவரைத் தேர்ந்தெடுத்து  ”பாரதி விருது” வழங்கும் வானவில் பண்பாட்டு கழகம் இந்த ஆண்டின் பாரதி விருதுக்குப் பெருமைக்குரிய இந்த தமிழ்ப்பெண்மணியைதேர்ந்தெடுத்திருக்கிறது.

வானை, கடல்மீன்களை அளப்போதோடு நின்றுவிடாமல் விண்ணியல் சாத்திரத்தில் தமிழ் மக்கள் தேர்ச்சி பெற்று அவர்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்என கனவுகண்டவன் பாரதி. அந்தக் கனவை மெய்ப்பித்திருக்கும் இந்தப் பெண்ணை அந்த விருதுக்குத் தேர்வு செய்திருப்பது, மிகப்பொருத்தமானது.
விண்ணியல் விஞ்ஞானி பிரியம்வதா நடராஜன் அவரது சாதனைக்காகவும்இந்திய ஊடகங்களின் வெளிச்சம் இன்னும் விழாத இந்தப் பெருமைக்குரிய தமிழரைத் தேடிக்கண்டுபித்தற்காக வானவில் பண்பாட்டு கழக  நிறுவனர் ரவி அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்