3/2/16

உயிர் காப்பான் தோழன்.


நீர் நிறைந்த அந்த ஏரியின் நடுவே மிதக்கிறதோ என்ற எண்ணத்தை எழுப்பும் அந்த அழகான பிரம்மாண்டமான  அரண்மனையைக் கரையிலிருந்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். நீரில் நனைந்த பின் இதமாக நம்மைத் தொட்டுச் செல்லும் மெல்லிய காற்று. மெல்லிய குரலில் பேசிக்கொள்ளும் வெளிநாட்டு டூரிஸ்ட்கள். இந்தியாவின் அழகிய நகரங்களில் ஒன்றான உதய்ப்பூரில் பிச்சலோ ஏரி அருகே இருக்கிறோம். நகரில் இது போலப் பல ஏரிகள் இருந்தாலும் அத்தனையும் செயற்கையாக உருவாக்கப் பட்ட ஏரிகள் என்ற தகவல் ஆச்சரித்தை தருகிறது. நகரில் பல அழகிய அரண்மனைகள், மலைச்சரிவுகளிலிருக்கும் கோட்டைகள் அனைத்தும் ஆடம்பர ஹோட்டல்களாகி மன்னர் பரம்பரையினருக்கு டாலர்களை குவித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக எழுந்துகொண்டிருக்கும்  கட்டிடங்கள் கூட மன்னர் கால பாணியில் இருப்பதிலிருந்து ராஜஸ்தானியர்களுக்கு தங்கள் பராம்பரியத்தின் மீதுள்ள ஆர்வம் புரிகிறது.டூரிஸ்ட்களுக்கு  உள்ளூர் கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகள் நிறைந்திருக்கும்  பகுதியில்  நம்மைக் கவருவது  சாலைகளின் சந்திப்பில் இருக்கும் அந்தக் கம்பீரமான வெள்ளைக் குதிரையின் சிலை. வீரன் எவரும் இல்லாமல் தனியாக ஒரு குதிரையின் சிலை நிற்பது சற்று வினோதமாக இருந்தது. நகர சதுக்கங்களில் நிற்கும் குதிரை சிலைகளை வடிவமைப்பதில் உலகெங்கும் சில மரபுகள் கடைப்பிடிக்கபடுகிறது. குதிரையின் இரண்டுகால்கள் தரையிலிருந்து தூக்கிய நிலையிலிருந்தால் அதன்மீது இருக்கும் வீரன் போரில் இறந்தவர். ஒரு கால் மட்டும் தூக்கியிருந்தால் அதன் மீது இருக்கும் மன்னர் போரில் படுகாயமுற்றவர். நான்கு கால்களும் தரையிலிருந்தால் அதன் மீது இருக்கும் மன்னர் போரில் மரணமடையாதவர்.  இந்தச் சிவப்பு சேணமிட்டிருக்கும்  வெள்ளைக்குதிரை ஒற்றை காலைத் தூக்கி நிற்கிறது. ஏன் அதன்மீது மன்னர் எவரும் இல்லை என்று .விசாரித்ததில் அந்தக் குதிரையின் பெயர் சேத்தக். அது ராணாவுடையது. ரஜபுத்திரர்களின் பெருமைக்குரிய சின்னம் என்பதையும் சொன்னவர்  உள்ளூர் மீயூசியத்தில் மாலயில் நடைபெறும் ஒலிஒளி காட்சிக்குப் போனால் அதனுடைய வீரக்கதையை தெரிந்துகொள்ளலாம் என்றார். நம் ஆர்வம் அதிகமாகிறது.அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் ஒவியங்கள் ஒவ்வொன்றும் நம்முடன் பேசுகிறது. அத்தனை தத்ரூபம். ராஜ கம்பீரத்துடன் ராணாக்கள், தான் மணக்கப்போகும் நாயகனின் படத்தைப் பார்த்து நாணும் இளவரசி, கொழுந்துவிட்டு எரியும் தீயில் குதிக்க தயாராக ராஜகுடும்பத்தினர் என எல்லா ஒவியங்களுமே நம்மை மேலே நகரவிடாமல் நிற்க வைக்கிறது.ஒலி ஒளிகாட்சிக்கு அறிவிப்பு செய்யபட்டவுடன் குன்றின் மேல் பகுதிக்குச் செல்லுகிறோம். அங்கு ஒரு சதுக்கத்தில் ராணா பிராதப் சிங்க்கு நினைவுசின்னம். உயரமான மேடையில் ஒரு காலைத் தூக்கிய நிலையில் இருக்கும் குதிரையின் மீது ராணா ஈட்டியுடன் அமர்திருக்கிறார்.
மரணபூமி என்று அழைக்கபட்ட பாலைவனமும் பாறைகளும் நிறைந்த பூமிக்கு விரட்டபட்டு குழுக்களாக வாழ்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கை போராட்டதில் வென்று ரஜபுத்திர்கள் என்ற இனத்தை உருவாக்கிப் பின்னர் ராஜஸ்தான் தேசத்தையே உருவாக்கிய கதையைச் சொல்லும் ராஜஸ்தானி மொழி நாட்டு பாடலுடன் காட்சி துவங்குகிறது. எந்த வளமும் இல்லாத அந்தப் பகுதியிலிருக்கும் மார்வாரி என்ற குதிரைகளின் அபார திறன் கண்டு வியந்து அதை இனப்பெருக்கும் செய்து அண்டை நாட்டு மன்னர்களுக்கு விற்று செல்வம் சேர்த்து வளர்ந்தார்கள் என்று நீள்கிறது அந்தக் கதை. மொழி புரியாவிட்டாலும் இசையில் கிராமிய இசையின் மணமும் கனமும் புரிகிறது. ஆங்கிலத்தில் தொடரும் அந்த நிகழ்ச்சியில் ராணாவின் கதை சொல்லபடுகிறது. 1570 களில் ரஜபுத்தர்களின் தேசமான ராஜஸ்தானை ஆண்டுவந்தவர் ராண பிராதப் சிங். ராணா என்பது மன்னரின் பிரநிதி என்பதைக் குறிக்கும் சொல். அப்படியானால் மன்னர்யார்?. அங்குள்ள சிவபெருமான் தான் அரசர்  அவர் சார்பில் ராணாக்கள் தேசத்தை நிர்வாகம் செய்துவந்தார்கள்.சாம்ராஜ்ய எல்லைகளை விரிவாக்கத் துடித்த மொகாலய மன்னர்களின் இலக்கானது ராஜஸ்தான். அதனால் ரஜபுத்திரர்கள் தாங்கள் வாழ்ந்து வந்த ஆரவல்லி மலைக்குன்றுகள் மீது நீண்ட மதில் சுவர்களை அரணாக எழுப்பியிருந்தனர். எதிரிப் படைகள் மலைப்பகுதியில் ஏறி வந்தால் கூட மதில்களைப் படைகள் தாண்ட முடியாது என்பது அவர்கள் எண்ணம். அப்படியே வந்தாலும் போரிட பயிற்சி பெற்ற குதிரைகளையும் வைத்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் சேதக். ராணாவின் குதிரை.. ஆனால் இந்த பிரதேசத்தைத் தன் சாம்ராஜ்யத்துடன் இணைக்க முடிவு செய்த அக்பர் இவர்களைச் சமாளிக்க  யானைகள் கொண்ட ஒரு படை அணியை உருவாக்கிப் படையெடுத்து வருகிறார். நகருக்குள் நுழைவதற்காக ரஜபுத்திரர்கள் ஏற்படுத்தியிருக்கும் குறுகிய நுழைவாயிலை யானைப்படைகள் மூலம் தகர்த்துவிட்டு உள்ளே சென்று மலையிலிருக்கும் நகரைப்பிடிக்க திட்டம்அக்பரின் யானைப்படையை துணிவுடன் அவரது குதிரையான சேத்க்குடன் சந்திக்கிறார். ராணாபிராதப். .வெகுண்டு வரும் யானையைப் பாய்ந்து சென்று யானையின் கண்களைத் தன் குளம்புகளின் மூலம் பார்வையிழக்க செய்கிறது சேத்தக். கண் தெரியாமல் போனாலும் யானை தன் தந்தங்களினால் சேத்தக்கின் வயிற்றை கிழிக்கிறது. விழுந்த சேத்தக்கின் பின் கால்களில் ஒன்று முறிகிறது. உயரமான யானைமீது இருக்கும் தளபதியின் வேல் எளிதாக ராணாவை காயப்படுத்துகிறது.தன் மீது இருக்கும் ராணா காயமடைந்தவிட்டதால் உடனே சேத்தக் களத்தைவிட்டு ராணாவுடன் தப்பி ஓடுகிறது. மூன்று கால்களுடன் பலமைல்கள் ஒடி ஒரு சிற்றோடையை தாண்டி கடக்கும்போது அடிபட்டு இறந்துவிடுகிறது. நாட்டுடன் தன் அருமைத்தோழனை இழந்த துக்கத்தில் ராணா காட்டிலேயே நீண்ட நாள் வாழ்கிறார். அந்தக் குதிரை விழுந்த இடத்தில் சேத்தக்கின் விசுவாசத்தையும் புத்தி கூர்மையையும் பாராட்டி கல்வெட்டுடன் ஒரு சமாதியை நிறுவுகிறார். இன்றும் அது அங்கிருக்கிறது.குதிரைகளின் குளம்பொலிகளுடன் யானைகளின் பிளரியின் பின்னணியில்ராணா போரில் தோற்றிருக்கலாம் ஆனால் மார்வாரி சேத்தக் தன் ராஜவிசுவாச கடமையில் வென்றுவிட்டதுஎன்ற முதலில் கேட்ட நாட்டு பாடலுடன் நிகழ்ச்சி முடிகிறதுகாட்சி முடிந்து திரும்போது இரவில் மெல்லிய நீல வண்ண ஒளியில் மீண்டும் அதைப்பார்த்தபோது அதற்கு ஒரு சல்யூட் வைக்க வேண்டும் என்று தோன்றிற்று.                

21/1/16

கடந்து போன 2015 எப்படியிருந்தது ?



திரும்பிப்பார்த்து சில முக்கிய நிகழ்ச்சிகளை அசை போட்டபோது சற்று பிசியான ஆண்டாகவும் கற்றதில் சில கடினமானதாகவும், பெற்றதில் சில புதியதாகவும் இருப்பதாக தோன்றியது. 



                                                                ஜனவரி



எனது “வெற்றி வெளியே இல்லை”யின் ஆங்கிலபதிப்பானஆறே DARE TO DREAM  தமிழ் புத்தகம் சென்னையிலும் பெரிய விழாக்களில்தொழிலதிர்பகளால் வெளியிடப்பட்டது. எழுதுபவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று அவனது புத்தகம் சிறப்பாக வெளியிடப்படுவது, அவனது எழுத்துக்காக கெளரவிக்கபடுவது,  எனக்கு அத்தகைய தருணம் 12/1/15 அன்று வாய்த்தது. அதிலும் மாலனுடன் சேர்ந்து அந்த கெளரவத்தை பெற்றது மிக சந்தோஷமாக இருந்தது. இருவரும் சேர்ந்து எழுத ஆரம்பித்தது 1975ல் மணியனின் இதயம் பேசுகிறது இதழில். பின் மாலன் எழுத்தையே வாழ்க்கையாக்கி கொண்டார். நான் வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது சற்று அதிகமாக எழுதுகிறேன். ஆனால் இருவரும் ஒரே மேடையில் கெளரவிக்க பட்டது இதுதான் முதல் முறை.. தங்கள் பிளைகள் எழுதுவதில் பெருமை கொண்ட எங்கள் பெற்றோர்கள் சொர்க்கத்திலிருந்து பார்த்து சந்தோஷபட்டிருக்கும் இந்த காட்சிகளை காண அருமை மனைவியும் அன்பு மகனும் நேரில் பங்கேற்றது மகிழ்ச்சியின் கனத்தை கூட்டிற்று.
எனது வெற்றி வெளியே இல்லையின் ஆங்கில பதிப்பு மும்பய் தாஜ் ஹோட்டலில் மிகப் பெரிய விழாவில் வெளியிடபட்டது



 பிப்ரவரி


திருப்பூர் தமிழ் சங்கம் எனது கடைசிக்கோடு புத்தகத்தை பரிசுக்கு தேர்ந்தெடுத்து ஒரு விழாவில் விருது பரிசும் கொடுத்தார்கள். பொருட்காட்சி திடலில் விழா. மக்கள் நின்று கொண்டு கேட்கும் அளவிற்கு கூட்டம்.மகிழ்ச்சியாகவும் மீராவராதைல் சற்று வருத்தமாகவும் இருந்தது. விருது பெற்ற கையோடு ராம்கோ பள்ளி மாணவர்களுக்கான quizz ராஜபாளயத்தில் நடத்த பயணித்தேன். மீண்டும் மாணவர்களை சந்தித்தது சந்தோஷமாகயிருந்தது. திட்டகமிஷனை மோடி அரசு ஒழித்து புதிய நிதிஅயோக் கொண்டுவந்தது குறித்து ஜெயாடிவியில் ஒரு விவாதத்துக்கு சுதாங்கன் அழைத்தார். அறிமுகமில்லாத  வெளியூர்காரகளிடமிருந்தெல்லாம் கூட பாராட்டுகள்.

.


மார்ச்

பட்ஜெட் பற்றி ஆழம் இதழில் எழுதிய கட்டுரைக்கு பெரிய வரவேற்பு. மீண்டும் ஜெயாவில் விவாதத்திற்கு அழைத்தார்கள். நான் பல டேட்டாக்களை வைத்து பேசியது பிஜேபி காரரை ஆச்சரியப்படுத்தியது.  தொடர்ந்து கட்சி பணிகளில் பங்கு கொள்ள அழைப்பு வந்தது ஆச்சரியம். வீடியோவைப்பார்க்கலாம் 





எப்ரல்

கல்கியில் எழுதவதற்காக் விஜய் டிவியில் ஒளிபரப்பான  தமிழ் மஹாபாரத்தின் தயாரிப்பு குழுவை கடந்த ஆண்டு சந்தித்தேன். நிப்போது அது மீண்டும் ஓளிபரப்பாவாதால் சந்தித்து பாராட்டினேன்.  பால கிருஷ்ணன் குழுவின்  உழைப்பை கண்டு பிரமித்துப் போனேன். தொடரவேண்டிய நட்பு இது 





                       மே

என் கடைசிக்கோடு புத்தகத்தை காந்தி ஸ்டெடி செண்டரில்  விமர்சிப்பதற்கான கூட்டம் என அழைத்தார்கள். கூட்டம் அதிகமில்லை ஆனால்  வந்தவர்கள் எல்லாம்  அறிவிஜிவிகள். நண்பர் மோகனின் அருமையான் விமர்சனம். வந்தவர்களில் பலர் புத்தகத்தைப் படித்திருந்தது  சந்தோஷமான ஆச்சரியம் 



ஜூன்




தமிழ் வளர்த்த சான்றோர் கூட்டத்தில் வ வே, சு வுடன் குமரிமலர் ஏ. கே செட்டியார் பற்றிய கலந்துரையாடல் செய்தி இந்துவில் படத்துடன் வந்திருந்தை பார்த்தபலர் என்னுடன் பேசினார்கள். அந்த கூட்டங்கள் பற்றி சொல்ல நல்ல வாய்ப்பாயிற்று.





ஜுலை


 (15/07/16) திரு ரத்தன் டாட்டா கிரேட் லேக்ஸின் பட்டமளிப்பு விழாவிற்காக சென்னை வந்திருந்தார். திரு பாலா பாலசந்திரன் என்னை விழாவிற்கு அழைத்து அவரிடம் நூலின் ஆசிரியர் என அறிமுகப்படுத்தினார்
மும்பையில் நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டிய புத்தகத்தின் ஆசிரியர் என அறிமுகப் படுத்தினார் பாலா.
கைகுலுக்கியபின் திரு ரத்தன் டாட்டாவிற்கு புத்தகத்தின் பிரதியை கொடுத்தேன். திறந்த பார்த்த அவர்
 ”கையெழுத்திட்டுகொடுங்கள்”: என்றார்
ஆச்சரியம்,சந்தோஷம், பெருமிதம் எல்லாம் ஒருசேரத் தாக்க சிலகணங்கள் உறைந்து போனேன். இந்தியா தொழில் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எனது புத்தகத்தை கையெழுத்துடன் கேட்கிறார். (சொக்கா இது நிஜம்டா
கையெழுத்திட்டு புத்தகத்தை கொடுத்த பின் மற்றொரு பிரதியில் அவரது ஆட்டோகிராப் தந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றேன்

உடனே உட்கார்ந்து என் பெயரை நிதானமாக எழுதி(இடது கை பழக்கமுள்ளவர்) வாழ்த்துகளுடன் என்று கையெழுத்திட்டுகொடுத்தார் கட்டுரையை பார்க்க rmananvsv.blogspot.in/2015/07/blog-post_18.html


அனுதாப அலைகள் சூனாமியாக தாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் புதிய தலைமுறை மக்கள் மேடையில் பங்கு கொள்ள திரு வெங்கட் அழைத்தார்.(29/07/15) சற்று யோசித்தேன். நிகழ்ச்சியில் மாவட்டங்களிலிருந்து மாணவர்களும் பங்கேற்பதாக சொன்னதால் நிகழ்ச்சி வெறும் அஞ்சலியாக இல்லாமல் மாறுதலாக இருக்கும் என எண்ணி பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் தெளிவான பார்வையில் துணிவாக கருத்துகளை சொன்ன இந்த மாணவர்கள் கலாம் கண்ட கனவுகளின் நம்பிக்கை விதைகளாகத் தெரிகிறார்கள். விரைவில் வளர்ந்து விருட்சமாகப்போகும் அட...


தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கத்தினர் ஒரு நில அளவையாளரின் கதையான இந்தப் புத்தகத்தின் ஒரு சிறப்பு பதிப்பை அவர்கள் தலைவர் பணிநிறைவு விழாவில் விழாவில் வெளியிட விரும்பி என்னை அணுகினார்கள். இம்மாதிரி விழாக்களில் புகழார மலரும் தலைவரின் வாழ்க்கை கதை போன்றவற்றை வெளியிடும் பலரிடையே ஒரு புத்தகத்தை சிறப்பு பதிப்பாக கொண்டுவருவது ஒரு மாறுதலான ஆச்சரியம்.
மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். புத்தகத்தின் பதிப்பாளர் (கவிதாபதிப்பகம்) சொக்கலிங்கம் மிக குறைந்த அவகாசத்தில் (4 நாட்கள்) சங்கத்தினர் விரும்பியபடியே ஒரு சிறப்பு பதிப்பை 




                                                  ஆகஸ்ட்

நண்பர் வவேசு தந்த செய்தியினால் மக்கள்டிவிக்காக என்னை பேட்டி கண்டார்கள் கீரின் ஏக்கர் தோட்டத்தில் ஒரு நல்ல பேட்டியாக அமைந்தது. செல்வி புரிந்துகொண்டு கேள்விகள் கேட்டார். என் எல்லா புத்தகம் பற்றி பேசு ஒரு வாய்ப்பாக்கிகொண்டேன். பலர் பார்த்து பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது.











செப்டம்பர்




கறுப்பு பணம் பற்றி  தகவல் சொல்லுபவர்களுக்கு பரிசு என்ற அறிவிப்பு பிரச்சனிக்கு மீண்டும் உயிர் கொடுத்திருந்தால், புதிய தலைமுறை டிவியில்  விவாதத்தில் பேச அழைக்கபட்டேன். செய்தியாளர் மணி அறிமுகனார். பாஸ்கர் என்ற மனிதரையும் சகித்துகொள்ளவேண்டியிருந்தது
.

அக்டோபர்

எம்.எஸ்ஸின் வாழக்கை கதை முயற்சி  மீண்டும் தொடர ஆரம்பித்தது. பல ஆலோசனைகள்- தேவையில்லாததும் கூட வழங்கிக்கொண்டிருந்தார்கள். புத்தா விஷயமாக சீதா ரவியின் உதவியால் கெளரிராம்நாரயணன் அவர்களை சந்தித்தேன். பிரமிக்கவைக்கும் பெண்மணி. எவ்வளவு தெரிந்தவராக இருக்கிறார். நீண்ட உரையாடல் பதிவு செய்து கொண்டேன். அடுத்த பதிவுக்கு நேரம் கேட்டேன்.




நவம்பர்

கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் சாஸ்தா யூனிவர்சிட்டியில் டிஜிட்டல் ஜர்னலிசம் கோர்சின் பாடதிட்டத்தை உருவாக்க அமைக்கபட்டிருக்கும் குழுவிலி இருக்கிறார். அதற்காக நடந்த கூட்டங்களுக்கு அழைக்கபட்டேன். அமெரிக்க பல்கலை கழக பேராசியர்களை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டிஜிட்டல் ஜர்னலிசம் பற்றி படித்து புரிந்துகொண்டேன்

டிசம்பர்

விண்வெளியில் இருக்கும் கருப்பு  துளைகள பற்றி ஆராய்ச்சி செய்யும் பிரியம்வதா என்ற பெண்மணியை பற்றி ரவி சொன்னார். அவருக்கு பாரதிவிருது வழங்கப்படுவது பற்றியும் சொன்னார். கல்கியில் எழுத நான்  அமெரிக்காவிலிருக்கும் அவரை தொடர்பு கொண்டேன். ஆச்சரியப்படும் விபரங்கள். மிக அழகாக எளிமையான் தமிழ் பேசினார். கேட்ட விபரங்கள் உடனே மெயிலில் அனுப்பினார்.  சென்னை வந்தவுடன் சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது. இந்த ஆண்டு அவருக்கு நோபல் கிடைக்கும் என அமெரிக்க பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. 

.http://ramananvsv.blogspot.in/2015/12/blog-post.html