27/6/14

உயர்ந்த மனிதன்



நாஸாவால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப பட்ட விண்கலம் “க்யூராஸிட்டி” 2012 தரையிறங்கியிருந்தாலும் செவ்வாயில் 687பூமி நாட்கள் தான் செவ்வாயில் ஒரு வருடம் என்பதால்  இப்போதுதான்   அது இறங்கிய  முதலாண்டு கொண்டாடபட்டது.  செல்போன்களில் தன்னைத்தானே படமெடுத்துக்கொண்டு பேஸ்புக்கில் போட்டுகொள்ளும்  செல்பிக்கள் போல க்யூராஸிட்டியும்   அந்த ஆண்டுவிழா  நாளில் தன்னை படமெடுத்து  நாசாவிற்கு அனுப்பியிருக்கும் செய்தியைப் படித்த போது 2012ல் அது செவ்வாயில் தரையிறங்கிய நாளில்  நிகழந்தது நினைவில் நிழலாடியது. அன்று எனது சுவடுகளில் பதிந்தது இது







உயர்ந்த மனிதன்
இன்று(11/08/12) மதியம் 1.மணிக்கு ஒரு போன் வந்தது. இஸ் மிஸ்டர் ரமணன் தேர்?
என்பதை தொடர்ந்து  ஐ ஆம் சிங் காலிங் ஃபிரம் யூ எஸ் என சொன்னதை கேட்ட என் மனைவி மீரா  போனை கொடுக்க    சிங்? ஃபரம் வேர் என ? கேட்டு குழம்பிய நான்  அவர் தன்பெயரைச்சொன்னவுடன் நேற்றிரவு (10/11/12) அனுப்பிய ஈ மெயில்  பளிச்சென்று நினைவுக்கு வர மகிழ்ச்சியில் பதறிப் போனேன் பல ஆண்டுகள் ஆராய்ச்சிகளுக்கு பின்னர் பல ஆயிரம் கோடி  செலவில் செவ்வாய் கிரகத்திற்கு   அனுப்பட்ட க்யூராரிஸிட்டி  விண்வெளிகலம் 8 மாத பயணத்திற்கு (57 கோடி கீமீ) பின்னர் பத்திரமா  செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க ஒரு டிசைனை வடிவமைத்து செய்லாக்கிய ஸ்பேஸ் ஸைண்டிஸ்ட் டாகடர் குருகிருபால் சிங் தான் அவர். 

செவ்வாய் கிரக விண்கல செய்திகளை கவனித்து வந்த போது ஒரேஒரு வரியில் இவரது பெயரை பார்த்தேன். இந்தியப் பெயராக இருக்கிறதே இவரைப்பற்றி எழுதலாமே (பத்திரிகையாளன் புத்தி) என விபரங்கள் தேட ஆரம்பித்தேன், கூகுள், யாகூ, ஃபேஸ்புக் எதிலும் சிக்கவில்லை.நாஸா வெப் ஸைட்டிலும் மேய்ந்து பார்த்தேன். ஒன்றும் தேறாததால் நாஸா பிரஸ் யூனிட்டுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்.. அவர்களும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அலசி நாஸாவின் தலமை விஞ்ஞானிகளிண் டைரக்டரியில் இருந்த் சிங் பெயர்களை வடிகட்டி ஒருவருக்கு  நேற்றிரவு  ஒரு மெயில் அனுப்பினேன். அதற்கு தான் இன்று அவருடைய போன். நான் அனுப்பிய ஈ மெயில் உண்மையானதுதான?- ஸ்பாம் இல்லையே?  ன்பதை உறுதி செய்துகொள்வதற்காக போன்செய்ததாக சொன்னவர் மிக அன்புடன் பேசி கொண்டிருந்தார். எப்படி என்னால் அந்த ஈ மெயில் ஐடி  தொடர்பு கொள் முடிந்தது (அது கிடைத்தது தனிக்கதை) என ஆச்சரியபட்டார். அவர் பெயர் வந்திருக்கும் செய்தியை இந்துவிலிருந்து  படித்து காட்டியபோது சந்தோஷப்பட்டார். 23 வருடங்கள் நாஸாவில் வேலை செய்வதையும், பெற்றோர்கள் டெல்லியில் இருப்பதையும் சொன்னார்.  நான் கேட்ட விபரங்களையும் அவர் படத்தையும்  உடனே மெயிலில் அனுப்பியும் வைத்தார். இதன் கிழே அந்த மெயிலையும் பதிவு செய்திருக்கிறேன்.
இவரது படத்தையும், விபரங்களையும் நேரடியாக  முதலில் பெறறிருக்கும்  ஒரே இந்திய் பத்திரிகையாளர் நான்தான். எனபதைவிட  மிக சந்தோஷமான விஷயம்  மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும்  இந்த மனிதரை ஒரு சக இந்தியனின், பத்திரிகையாளானை மதித்து மிக எளிமையாக அன்புடன் பேசி உதவிய ஒரு உயர்ந்த மனிதனை இன்று தெரிந்து  கொண்டது தான்.  
ரமணன்
 ------------------------------------------------------------------------------------------------------------
Inbox
gurkirpal singh  brensim@prodigy.net
14:14 (8 hours ago) to me
Dear Ramanan:
I had the pleasure of speaking with you a few minutes ago. Thank you for the very kind words. I am sending the material that you had requested - brief bio, a picture (attached JPEG), and a brief description of my contributions to the Curiosity mission. I am hoping that this will serve your purpose. Let me know if I missed anything. Please note that additional information regarding the mission may be obtained from the Landing Press Kit at http://mars.jpl.nasa.gov/msl/news/newsroom.  I would be grateful if you could acknowledge this e-mail.
Best regards,
Gurkirpal
 Bio
========================================================================

Singh, Gurkirpal (3443) 




Dear Ramanan:

Thank you for your acknowledgement, and diligence in putting the substance on paper. You can't imagine the satisfaction I received by noting the appeal the magazine has among the youth. I hope that the news of this achievement would inspire someone somewhere just as it inspired me several years go when I was a youth of impressionable age. This has been my aim all along when I first decided to respond to your request. I very sincerely appreciate your efforts in doing the necessary legwork to probe the connection further . As you might surmise, I know not a word of Tamil, but I would be sure to have my Tamil friends here help me digest the attachments you were kind enough to send. Thanks again.

Regards,
Gurkirpal 


 புதிய தலைமுறையில் வெளியான “அந்த 7 நிமிடங்கள்” கட்டுரையை இங்கே கிளிக் செய்தால் பார்க்கலாம்
http://ramananvsv.blogspot.in/2012/08/7.html


22/6/14

சுந்தருக்கு கிடைத்த சுதந்திரம்






காட்டு யானைகளை நாட்டிற்குள் கொண்டுவந்து  அந்த சுழலில் வாழ பழக்ககபடுத்துவது நமக்கு தெரியும். நாட்டிலேயே பலநாள் வாழந்த யானையை திரும்ப காட்டில் வாழவைக்க முடியுமா? முயற்சித்திருக்கிறார்கள்.
மஹராஷ்ட்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்ட எம் எல் ஏ விஜய் கோர். இவர் குடும்பத்தினர்  அவர்களது கிராம கோவிலுக்கு ஒரு யானையை நன்கொடையாக தந்திருந்தனர். அதன் பெயர் சுந்தர். கோவிலுக்கு போதுமான வருமானம் இல்லாதாதால் அவர்கள் யானையை எம்/ எல் ஏ விடம் தந்து பராமரிக்க வேண்டினர். விஜய் அதை தன் வீட்ட்ருகே இருக்கும் ஒரு ஷெட்டில் கட்டிப்போட்டு வைத்திருந்தார். முறையாக பராமரிக்க படாதால்  சுந்தர் நலிவடைந்து கொண்டிருந்தது. அந்த கிராமத்திற்கு வந்த ஒரு டூரிஸ்ட்  இரண்டு கால்களும் சங்கிலியால் கட்டபட்டிருக்கும் சுந்தரை படமெடுத்து தன் பேஸ்புக்கில்   7 ஆண்டுகளாக அது கட்டபட்டிருப்பதையும், அதனால் அதன் கால்களில் புண்ணாகியிருப்பதையும். அதன் காதுகளில் அங்குசம் குத்தி புண்ணாகியிருக்கும் அவல நிலையையும் எழுதியிருந்தார்.  சில நாளில் மற்றொருவர்  அது படும் அவஸ்த்தையை வீடியா  எடுத்து வெளியிட்டார். பலர் அந்த யானையை விடுவிக்க வேண்டும் என எழுதிக்கொண்டிருந்தனர்.
பம்பாயில் வசிக்கும்  முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான  செலினா ஜெய்ட்லி மிருகங்களை  கெளரவமாக நடத்தும் மக்கள் இயக்கத்தின்(PEOPLE FOR ETHICAL TREATMENT OF ANIMALS-PETA) தீவிர உறுப்பினர். அவர் மும்பாய் உயர் நீதிமன்றத்தில் சுந்தரை காப்பாற்ற வனத்துறையினருக்கு ஆணையிட ஒரு வழக்கை தொடர்ந்தார். ஒர்ரண்டு பின்னர் கோர்ட் ஆணையிட்டும் அதிகாரவர்க்கம் அசையவில்லை.  14 மாதம் ஆகிவிட்டது. இதற்கிடையில் இந்த சுந்தர் விவகாரம் பேஸ்புக்கிலும், டிட்டரிலும் பெரிய விஷயமாகிவிட்டது. சுந்தரை காப்பற்ற ஒரு பக்கமே  துவக்கபட்டு பலர் ஆதரவாக எழுதிகொண்டிருந்தனர். யானையின்  சொந்தக்காரர் எதிர் வழக்காடினார். இறுதியில் நீங்கள் உரிமையாளராக இருந்தாலும் துனப்புறுத்த உரிமையில்லை என்றும் வனத்துறையினர் சுந்தரை விடுவித்து பங்களூர் யானை பார்க்கில்  வைத்து  பராமரிக்க வேண்டும் என்றும் மும்பாய் உச்ச நீதி மன்றம் மீண்டும் கண்டிப்புடன் ஆணையிட்டது.
உரிமையாளார் விஜய் கோரே உச்சநீதிமன்றத்திற்கு அப்பீல் செய்திருக்கிறார்., சமூக வலைத்தளத்தில் இந்த விவாதத்தில் கொண்டிருந்தவர்கள் சீறினர். புதிய நண்பர்கள் இனைந்தனர். சர் பால் மெகார்த்தி, ”பேவாச்” புகழ் பமீலா ஆண்டர்சன், போன்ற
சர்தேசபிரபலங்களும், அமிதாபச்சன், மாதுரிதிக்‌ஷீத்  மாதவன் போன்ற நம்மூர் பிரபலங்களும் சுந்தரின் உடனடி விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து எழுதினர். ஒராண்டுக்கும் மேலாக தொடர்ந்து  இந்த யானை பற்றி எழுதிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர்  அமிதாப். மொத்தம் இதுவரை சுந்தரின் விடுதலைக்கு  ஆதரவு தெரிவித்தவர்கள் 2, 20,000பேர்.
வழக்கு அப்பீல்லில் இருந்தாலும்  உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை எதுவுமில்லாதால். சுந்தரை  விடுதலை செய்து பத்திரமாக பங்களுரு பன்னர் கட்டா யானை பார்க்கில் சேர்க்க வேண்டும் என கோர்ட் விளக்கமளித்திருந்தது.  யானையை விடுதலை செய்யவேண்டும் என்பது கட்டளையாக இருந்தால் சங்கலியை அவிழ்த்துவிட்டு போய்விடலாம்.” ”பத்திரமாக பெங்களுரு கொண்டு செல்லபடவேண்டும் என்பது கோர்ட் ஆணையாகையால் மஹராஷ்டிர வனத்துறைக்கு தலைவலி. ஆரம்பித்தது.  கோலாப்பூரிலிருந்து பங்களுர் 700 கீமி. 25 மணி நேர பயணம். அதற்கு சுந்தரை தயார் செய்ய வேண்டும். பல வருடங்கள் கட்டி போடபட்ட நிலையிலேயே இருந்ததால் அதன் மனநிலை எப்படி என்பதை சோதிக்க வேண்டும் இப்படி பல பிரச்சனைகள் எழுந்தன. கேரளத்திலிருந்து யானைகளை நன்கு அறிந்த ஸ்பெஷலிஸ்ட் மாவுத்தர்கள் வரவழைக்கபட்டனர். மாநில கால்நடைத்துறை யானை ஸ்பெஷ்லிஸ்ட்கள் வந்தனர். அவர்களின் ரிப்போர்ட் படி  அதன் கால் புண்கள் குணமாகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் எடையை தாங்கக்கூடிய வசதியான விசேஷ லாரி ஒன்று தயார் செய்யப்பட்டது.போகும் வழியில் அதன் உடல் நலம் பாதித்தால், சிகிச்சை அளிக்க கால்நடைடாக்டர்களுடன் ஒரு ஆம்புலன்ஸும் ரெடியானது.  பெரிய லாரி, கிரேன் இவைகளை முதன் முதலில் பார்த்த சுந்தர் மிரண்டு போய் நகர மறுத்துவிட்டது. 4 நாட்கள்  வாழை பலா பழங்களை கொடுத்து ஆசை காட்டியபோது அவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு லாரியில் ஏற மறுத்தது. கடைசியில் ஒரு வழியாக ஏற்றிய போது லாரியை  எடுக்க முடியவில்லை. அதன் சக்கரங்கள் பஞ்சர். உள்ளூர்கார்களின் உபயம்.. யானையை கீழே இறக்கி டயர்களை மாற்றியபின் மீண்டும் ஏற்றமுயற்சித்தபோது பயங்கரமாக முரண்டு செய்ய ஆரம்பித்துவிட்டது. 14 ஆண்டுகள் அதனுடன் இருந்த பாகன் அதன் காதுகளில் ஏதோ சொல்லிவிட்டு காணமல் போனதுதான் காரணம். கேரளா பாகன்கள் அதனிடம் பல முறை பேசி ஒருவழியாக லாரியில் ஏற்றினர்.  உள்ளூர் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட லாரியை மறித்தனர். பேஸ்புக்க் மூலம் செய்தி பரவிக்கொண்டிருந்ததால். PETA தொண்டர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு உதவி செய்ய மோட்டர்  சைக்கிள், கார்களில்  வந்து குவிந்தனர். அந்த சின்ன கிராமம் பரபரப்பாகிவிட்டது. போலீஸ் வண்டிகள் புடை சூழ ஒருவழியாக சுந்தரின் லாரியும் ஆம்புலன்ஸும் தங்கள் பங்களுர் பயணத்தை துவக்கின..

பங்களூர் மிருக காட்சி சாலையில் இயற்கை சூழலில் மிருகங்கள் வாழும் சபாரி பார்க் இருக்கிரது அதில் யானைகளுக்கு என பெரிய வனப்பகுதியும் இருக்கிறது.
இரண்டு நாள் பயணத்திற்கு பின் பங்களூரு வந்த சுந்தர் லாரியிலிருந்து இறங்க  இரண்டு மணி நேரம் முரண்டு செய்து பின்னர் இறங்கியது. நகரத்திலிலேயே வளர்ந்த அந்த யானையை   நேரடியாக காட்டுக்குள் விட முடியாது என்பதால் அங்கு வாழும் சில யானைகளுடன் முதலில் சில நாட்கள் சுந்தர் பழக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆனால் நம்மாளுக்கு அவர்களையெல்லாம்  பிடிக்க வில்லை. முதல்நாள் முழுவதும் தனியேதான் நின்றுகொண்டிருந்தது. . இரண்டாம் நாள் அந்த சபாரிபார்க்கில் இருக்கும் ஒரு சின்ன யானை குட்டி 4 வயது சிவா. வரவழைக்கபட்டது.  சுந்தர் அந்த சைஸ்ஸில் யானையையே பார்த்த்தில்லையாகையால் முதலில் மிரண்டு,  வியந்து  பின்னால ரொம்ப பிரண்டாகி அந்த குழந்தையுடன் விளையாட ஆரம்பித்து விட்டது இரண்டு நாட்களுக்கு பின்னர்  அந்த யானைகளின் சீனியர் வன்ராஜ் வந்து தும்பிக்கை குலுக்கி சுந்தரை அழைத்து சென்றிருக்கிறது. விரைவில்  அங்குள்ள 13  யானைகளுடன் பழகிவிடும் என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள். கண்காணித்து கொண்டும் இருக்கிறார்கள்.
சுந்தர் பன்னர்கட்டாவிற்குள் போனதும் “ சுந்தருக்கு சுதந்திரம் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம்.   PETAவின் இந்தவெற்றி   முக்கிய சாதனை என அமிதாப் டிவிட் செய்திருக்கிறார்.

நம்மூர் கோவில்களில் கஷ்டபடும் யானைகளை யார் காப்பற்ற போகிறார்கள்?

ரமணன்.

4/6/14

எம்ஜிஆரை நிராகரித்த ஹாலிவுட் டைரக்டர்

இந்திய சினிமாவுக்கு 100 வயதானதை  நம்மவர்கள் ஆராவாரங்களுடன் பிரமாண்ட மேடைகளில் மெகா சைஸ் கலக்குழுக்களுடன் ஆடிப்படி, கொண்டாடி மறந்து போய்விட்ட நிலையில், அமைதியாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு அமெரிக்க டைரக்டர் பற்றி  ஒரு அருமையான ஆவணபடத்தை  எடுத்திருக்கிறார். திரு.கரண்பாலி இவர் புனா பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தவர் விளம்பர, ஆவணபடங்கள் எடுப்பவர். என்பதை தாண்டி இந்திய சினிமாவை  காதலிப்பவர். . ராஜீவ் மேன்னின் திரைப்பட கல்லூரியிலும்,எல்.வி பிராசாத்  இன்ஸ்டியூட்டிலும் அழைப்பின் பேரில் வகுப்புகள் நடத்துபவர்.
தமிழ் சினிமாவுடன் நேரடி தொடர்பு இல்லாத இவருக்கு எப்படி தமிழ் படங்கள் இயக்கிய இந்த டைரக்டரை பற்றி ஒரு ஆவணபடம் எடுக்கும் எண்ணம் வந்தது ?.
நான் சென்னையில் படித்தவன் என்பதால் தமிழ் சினிமா பற்றி ஒரளவு தெரியும். தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரையை என் தளத்தில் வெளியிட செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது பால்வில்லியம் என்பவரின் “என்சைகோளாபிடியா ஆப் இந்திய சினிமாவில் முதலில் டங்கன் பற்றி அறிந்தேன். தொடர்ந்து செய்திகள் சேகரிக்க  துவங்கியபோது பிரமித்துப் போய் தமிழ் சினிமாவிற்கு இத்தனை செய்திருக்கும் இந்த அமெரிக்கரைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்டிரி எடுத்தால் என்ன என  தோன்றியது.   எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்திருக்கும் இந்த டைரக்டர் டெக்னிக்லாகவும் பல விஷயங்களை, இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.  டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான். என்பதையெல்லாம் அறிந்த போது ஆர்வம் அதிகமாயிற்று.   
  ஐரிஷ் வம்சாவளி அமெரிக்கரான டங்கன், சினிமாகலையை  பிரான்ஸில் படித்தவர். அப்போது இந்தியாவிலிருந்து வந்து அங்கு அவருடன்  படித்து கொண்டிருந்த ஒரு மாணவர் எம். ஆர் டாண்டன்.  தன் தந்தை பம்பாயில் ஒரு புதிய ஸ்டூயோ   துவங்கப்போவதால் உடன் வந்து 6 மாதம் உதவி செய்யும்படி அவர் கேட்டதின் பேரில் 1935ல் இந்தியா வந்தார்..  ஆனால் அந்த ஸ்டுடியோ துவங்க படாதால், கல்கத்தாவில் ஷூட்டிங் நடந்து  கொண்டிருந்த ஒரு தமிழ் படத்தில் டாண்டனின் உதவியுடன் உதவி இயக்குனரானார்.. அந்த படம் நந்தனார். அதன் மூலம் தமிழ் சினிமாவால்  ஈர்க்கபட்டு அடுத்த 15 ஆண்டுகள் 1950 வரை தமிழ் நாட்டில் தங்கி  சினிமாவில் பெரும் புரட்சிகளை செய்திருக்கிறார்.  15 ஆண்டுகளில் இவர் இயக்கியது 17 தமிழ் படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்.  எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான்.
இந்த ஆவணபடத்தின் மூலம் அறிந்து கொள்ளும் சில விஷயங்கள் ஆச்சரியமாகயிருக்கிறது. எம்ஜி ஆர் ரின்  முகத்தில்,கீழ் தாடைப்பகுதியில் ஒரு சின்ன குழி இருந்ததால் அவர் முகம் சினிமாவிற்கு ஏற்ற முகவெட்டுடன் இல்லை என டங்கனால் நிராகரிக்கபட்டிருக்கிறார்.  ஆனால் படத்தயாரிப்பாளார் மருதாசலம் செட்டியார். ”படத்தின் வசனகர்த்தாவின் வசனங்களை நம்பிதான்  இந்த படமெடுக்கிறேன்.  இந்த நடிகர் அவரால் சிபார்சு செயபட்டவர்.. அவர் சிபார்சை தட்ட முடியாது.” என்றவுடன். ஒரு சின்ன ஒட்டு தாடியின் மூலம் அந்த குழியை மறைத்து எம்ஜியாரை அறிமுகபடுத்தியிருக்கிறார் டங்கன். அந்த வன கர்த்தா - கலைஞர் !. படம் சதி லீலாவதி. அந்த படம் ஹிட்டானதில் எம்ஜிஆருக்கு பல வாய்ப்புகள்  கிடைத்தன.
ஆங்கில மட்டுமே அறிந்த இவர் எப்படி தமிழ்படங்களை டைரக்ட் செய்தார்?  தமிழில் தெரிந்த மிக சில வார்த்தைகள்  கொண்டு பணியாளர்களை சமாளித்தாலும்,படங்களின் கதையை ஆங்கிலத்தில் தயாரித்து கொண்டு, பேசும் வசனங்கள் புரியாவிட்டாலும் கதையை நன்கு புரிந்துகொண்டு வசனங்களை சரிபார்க்க அந்த கதாசிரியர்களை எப்போதும் உடன் இருக்கும்படிசெய்திருக்கிறார். கல்கி, சதாசிவம், இளங்கோ போன்றவர்கள் பெரிதும் உதவியிருக்கின்றனர்.  டெக்கினிக்லாக பல விஷங்களை செய்து டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய கோணங்கள். ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான்.  , இவர் படங்களில் காதல் காட்சிகள் நெருக்கமாக இருந்தற்காக கடுமையாக விமர்சிக்கபட்டிருக்கிறார்.


எம் எஸ் சுப்புலட்சுமி நடித்து டங்கள் இயக்கிய மீரா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவுடன் அதை இந்தியிலும் டைரக்ட் செய்தவர் இவர். மீரா படத்தில் எந்த கோணத்தில் நாயகியின் முகத்தை அழகாக காட்டமுடியும் என்பதை  முகத்தை மட்டும் பிளாஸ்டாபாரிஸில் சிலையாக செய்து பல கோணங்களில் காமிராவழியாக பார்த்து தீர்மானித்திருக்கிறார். இன்று செய்யபட்டு கொண்டிருக்கும் பல டெக்னிக்கல் விஷயங்களை இந்த மனிதர்  அன்றே முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டிருக்கிறது. எடிட்டிங்கில் அது இரவாக்கபட்டிருக்கிறது. இவர் படங்களின் போஸ்டர்களில் கதாநாயகர்களின் பெயரைக்கூட போடமல் டைரக்க்ஷன் எல்லிஸ். ஆர் டங்கன் ஹாலிவுட்  என விளம்பர படுத்தியிருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு பிரபலமான இயக்குனாராக இருந்திருக்கிறார்.
 இன்று ஒரு படம் ”உருவான கதை”  ஒரு தனிப்படமாக்க பட்டு விளம்பரங்களில் பயன் படுத்தபடுகிறது. 1940களிலேயே டங்கன் தான் படமெடுப்பதையே படமாக்கியிருக்கிறார். குடும்ப சுழ்நிலை காரணமாக,1950ல் அமெரிக்கா திரும்பிய டங்கள் அங்கு ஹாலிவுட் படங்களுக்கு இந்தியா பற்றிய ஆலோசனைகள் வழங்கும் வல்லுனாராக  தன் இறுதிக்காலம் வரை பணியாற்றியிருக்கிறார்
இந்த டாகுமெண்ட்ரிக்காக , தகவல்களை சேகரிப்பது எளிதாக இல்லை. என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாக்களை பொருத்துவரையில் ஒரு நல்ல ஆவணகாப்பகம், இல்லை. தகவல்கள் தருபவர்களை பற்றிய பட்டியலும் இல்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதியிருக்கும் திரு தியோடர் பாஸ்கரன் அவர்களை எனக்கு தெரியும். அவர் 2001ல்  டங்கன் இறந்த ஆண்டு அவர் சுய சரிதை வெளியாகியிருப்பதாக சொன்னார். ஆனால் அவரிடம் அந்த புத்தகம் இல்லை. ஒரு பிரதி சிவேந்திரா சிங் என்பவரிடம் இருப்பது தெரிந்தது. இவர்  புனே இன்ஸ்டியூட்  ஆவணகாப்பக பாதுகாவலர் நாயர் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்தவர். அவரைத்தொடர்பு கொண்டு அந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். அந்த நூலின் இணை ஆசிரியர் பார்பாரா ஸ்மிக் என்ற பெண்மணி. கூகுளில் அலசி அவரது இ மெயிலை கண்டுபிடித்து தொடர்பு கொண்டேன்.  டங்கன் அவரது குறிப்புகளையும், படங்களையும் வெஸ்ட் வெர்ஜியா பல்கலைகழகத்திற்கு கொடுத்துவிட்ட விபரங்களை அவர் சொன்னார்.  என்நோக்கம் தமிழ் சினிமாவிற்கு டங்கனின் பங்களிப்பு பற்றி  அதிகம் சொல்லவேண்டும் என்பதால் அவரது சுயசரிதையை விட அவருடைய படைப்புகளை பற்றி அதிகம் ஆராய்ந்து  கொண்டிருந்தேன். பல்கலைகழகத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் நிறைய உதவினார்கள். படத்தின் அவுட் லைன் ரெடியாகி தயாரிப்பை துவங்கும் நேரத்தில் தியோடர்பாஸ்கர் பங்களுரில் வசிக்கும் எம். எஸ் சுப்புலக்‌ஷ்மியின் மகள் ராதாவிஸ்வநாதனை அறிமுகபடுத்தினார். இவர் சகுந்தலை, மீரா படங்களில் சிறு குழந்தையாக நடித்தவர். டங்கனின் இயக்கத்தை பார்த்தவர். அவர் சொன்ன தகவல்கள் படத்தை சிறப்பாக்கியது. மந்திரி குமாரி படம் தயாரிக்கபட்டபோது டங்கனுடன் பணிசெய்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டது. என்ற தகவலையும், எடிட்டிங்கில் அது இரவு காட்சியாக மாற்றபட்டது என்பதையும் சொன்னார்.
படம்  தயாராவது தெரிந்ததும் பலர் தகவல் அனுப்பினார்கள். ஆனால்  நான் சரியான, ஆதாரபூர்வமான விஷயங்களை மட்டுமே பதிவு செய்வதில் கவனமாக இருந்தேன். சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகை அலுவலகங்களை/ நிருபர்களை/சினிமாபற்றி எழுதுபவர்களையெல்லாம்  நானே நேரடியாக தொடர்பு கொண்டேன். சிலர் உதவினார்கள். ஒரு  மூத்த சினிமா பத்திரிகையாளார் தன்னிடம் தகவல்கள் இருப்பதாகாவும் ஆனால் உதவ முடியாது என்றும் சொன்னது ஒரு ஆச்சரியம்.
டங்கன் படங்கள் இயக்கிய காலத்தில் ஸ்டூடியோக்கள் இருந்த இடங்களை காட்டி,, அவர் அறிமுகபடுத்திய டிராலிகள் போன்ற பல தகவல்கள் கொடுத்தவர் நண்பர் நடிகர் மோகன் ராம். இவர் தமிழ்சினிமாவின் தகவல் சுரங்கம்.  தமிழ் சினிமாவை ஆராய்ந்து டாகடர் பட்டம் வாங்கியிருக்கும் திருமதி உமா வாங்கலும் நிறைய தகவல்கள் தந்து உதவினார். இந்த நண்பர்களின் உதவியினால்தான்  பேட்டிகள், காட்சிகள் இணைப்பு உரைகள்  என அழகான தொகுப்பாக  படம் உருவாகியிருக்கிறது.” என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாவை  நேசிப்பவர்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.இது.
அமெரிக்காவில் டங்கனின் ஊரில் முதலில் திரையிடபட்டு இப்போது பல  இந்திய, அமெரிக்க நகரங்களின் பிலிம்சொஸைட்டிகளில் திரையிடபட்டிருக்கிறது.  .
தமிழ் சினிமாவின்  வளர்ச்சிக்கு  முக்கிய பங்களித்த அமெரிக்கர் டங்கன் பற்றிய ஆவணப்படம் தயாரிக்க பட்டிருப்பது  சந்தோஷமாக இருந்தாலும் அந்த படத்தையும் அதைத் தயாரித்தவரை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
கல்கி 1/06/14)


31/5/14

மயக்கும் மஹாபாரதம்

மாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ஆபரணங்களின் பிரமாண்டம் கட்டிபோட, திரைக்கதையோ படு சுவாரசியம். சகுனியும், திரெளபதியும் ரசிகர்களை கட்டிப் போடுகிறார்கள் முன்பு வந்த ராமனந்த சாகரின் ராமாயணத்துக்கு பின்னர் தமிழ் ஆடியன்ஸ்களிடம் சூப்பர் ஹிட் இந்த மஹாபாரதம்தான்.   

பிரமிக்கவைக்கும் பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள், 
ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான வட இந்திய சாயலில்  எல்லா  முகங்கள், பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று  காட்டபடும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும் அதை எல்லோரையும் பார்க்க வைப்பது,  அதன் அழகான தமிழ் வசனங்களும், இனிய பாடல்களும் தான். ஸ்டார் விஜய்க்காக  இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள் 7த்  சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம் நாராயணனை தொடர்பு கொண்ட  போது
. ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான டப்பிங் டீமின் கடின உழைப்பின் வெற்றி இது.  அவர்கள் பணிகளில் நான் தலையிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”. என்றார். 
டப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ்  ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள் மேற்பார்வை.  டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார்.  இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே மொழிபெயர்த்தால்  தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம்.  மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்று சொல்லுவது சரியாக இருக்கும்.  பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் தரும் கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம் டீமில் 60 பேராம்!. அவர்களும் மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறார்கள் என்கிறார்.
தலைப்பைச் சேருங்கள்
ஹிந்தியில் காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி  வசனங்கள் அமைந்த  இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும் வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன் ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள் எழுதபட்டபின்  ஒவ்வொரு எபிசோடிலும்  முதலில்  எல்லா பாத்திரங்களுக்காகவும் அவரே  அதைப் பேசி   தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு  வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து  வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள். இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார்
இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு  வசனம் எழுதிக்கொண்டிருப்பவர்.  இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல் செய்கிறது.ஒரு டப்பிங் படத்தின் வெற்றிக்கு வசனம்,இசைக்கு அடுத்தபடியான முக்கியமான விஷயம். மிக்ஸிங் என்கிற டெக்னிகல் சமாசாரம். ஒரிஜினலில் இருப்பதை போலவே இருக்க வேண்டும், அதை இந்த தொடருக்கு பிரமாதமாக செய்து கொண்டிருப்பவர் மணிகண்டன்.  மொதத்தில்  ஒரு கவுரவர்கள் படையே இதன் உருவாக்கத்திற்கு உழைக்கிறது. 
ஹிந்தி தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு  மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள்.  பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார்.  வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள்  ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்.,  எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின்  ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது . சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின் குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும் இவர்தலமையிலான டீம்தான்
இதிகாசங்களின் மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து  கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும் ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.





27/5/14

மிஸ்டர் எடிட்டர்

பெ. கருணாகரன் FB லிருந்து

காகிதப் படகில் சாகசப் பயணம்
மிஸ்டர் எடிட்டர்
புதிய தலைமுறை முதல் இதழ் வெளிவந்த சமயம். அப்போது நிறைய வாசகர் கடிதங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தன. அவற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் ஒரு கடிதம். உங்கள் இதழின் பெயர் புதிய தலைமுறை’. இளைஞர்களுக்கான இதழ் என்று வேறு சொல்கிறீர்கள். ஆனால், அதன் ஆசிரியர் மாலன். அவர் என்ன புதிய தலைமுறையா? இளைஞரா?’ என்று அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தார் ஒரு வாசகர். மொட்டைக் கடிதமாக இருந்திருந்தால் தூக்கி எறிந்திருப்போம். எழுதியவர் ஊர் திருவண்ணாமலை என்று நினைவு. முகவரியுடன் தொலைபேசி எண்ணும் கொடுத்திருந்தார்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினேன். புதிய தலைமுறைஎன்பது வயது சார்ந்ததல்ல. புதிய சிந்தனை சார்ந்தது. வயதுக்கும் புதிய சிந்தனைக்கும் சம்பந்தமில்லை. அனுபவப் பின்புலத்துடன் வெளிப்படும் புதிய சிந்தனைகள் வீரியமுள்ளவை. சமூக அக்கறையுடன் சிந்திக்கும், புதிய மாற்றங்களைக் கொண்டு வர உழைக்கும், துடிக்கும் யாரும் புதிய தலைமுறைதான். அந்த வகையில் அப்துல் கலாம் புதிய தலைமுறைதான். மாலனும் புதிய தலைமுறைதான்.
அடுத்து, இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. வயது என்பது உடலின் முதிர்ச்சி. இளமை என்பது மனதின் எழுச்சி. மனயெழுச்சி உள்ள யாரும் இளைஞர்தான். எந்தச் சமூக அக்கறையும் இல்லாமல் மன எழுச்சியில்லாமல் இன்று டாஸ்மாக்கில் சரிந்து கிடக்கும் 20 வயதுக்காரன் கூட முதியவர்தான்...என்றேன். நான் கூறியவற்றை அந்த வாசகரால் மறுக்க முடியவில்லை. ஏற்றுக் கொண்டார். மாலன் சாரைப் பற்றி எழுதத் தொடங்கும்போது, அந்த திருவண்ணாமலை வாசகரிடம் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு புதிய தலைமுறைஇளைஞர்.
எல்லோருக்கும் வடக்குப் பக்க வாசல் என்றால் அவரது வாசல் தெற்குப் பக்கமாகவே இருக்கும். அமைந்த பாதையில் செல்வதை விட, நமக்கான பாதையை நாமே புதிதாய் அமைத்து அதில் பயணப்பட வேண்டும் என்பதே அவரது சிந்தனைப் போக்காக இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறேன். ஒரு ஐடியாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், அதை எப்படி பிரசென்ட் செய்ய வேண்டும் என்பதை முதலில் விவரிப்பார். அவர் சொல்லும்போதே இந்த இதழ் இதனை இப்படி அணுகும். அநத இதழ் அப்படி எழுதும் என்று கூறுபவர், ‘புதிய தலைமுறையில் அது எப்படி எழுதப்பட வேண்டும் என்றும் மற்றவர்களிடமிருந்து எப்படி வித்தியாசப்படுத்த வேண்டும் என்று விரியும் அவரது வழிகாட்டல்கள்.
புதிய தலைமுறையில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் கொஞ்சம் திணறித்தான் போனேன். காரணம், நான் வணிகப் பத்திரிகைச் சூழலில் வளர்ந்து வந்தவன். ஆனால், ‘புதிய தலைமுறையின் உள்ளடக்கமோ வேறு. இங்கு சினிமா இல்லை. ஆன்மீகம் இல்லை. அரசியல் இல்லை. வம்புகள் இல்லை.
இந்நிலையில் என் பார்வை வேறு. அவரது பார்வை வேறு. செய்திகளின் தேர்வு முறையிலும் இருவரும் இரு துருவங்களே. நான் புதிய தலைமுறையில் சேர்ந்தபோது, பெங்குவினைத் தூக்கிச் சகாராவில் போட்டது போலவோ, அல்லது, ஒட்டகத்தைக் கட்டி இழுத்து வந்து அண்டார்டிக்காவில் விட்டது போலவோ, தட்ப வெப்பநிலை மாறி தவித்தது உண்மை. இந்தப் புரிந்து கொள்ளலில் இருந்த இடைவெளியில் அவரை விட்டு மனதளவில் நான் வெகுதூரம் விலகி நின்றேன். முதல் இதழ் வெளிவந்த பிறகுதான் நான் புதிய தலைமுறையின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டேன். அவரும் என்னைப் புரிந்து கொண்டார்.
புதிய தலைமுறையில் நான் எழுதிய முதல் கட்டுரை, ‘CAT’ நுழைவுத் தேர்வு பற்றியது. எடிட்டோரியல் மீட்டிங்கில் கர்ணா... நீங்க கேட் எக்ஸாம் பற்றி எழுதிடுங்க...என்று அவர் கூலாகச் சொன்னவும் திகைத்து விட்டேன். கேட் நுழைவுத் தேர்வா? நான் கேள்விப்பட்டதே இல்லையே... எனக்குப் பூனையைப் பற்றித் தானே தெரியும். ஙேஎன்று விழித்தேன். என்றாலும் என்னை நான் தைரியப்படுத்திக் கொண்டு அது குறித்த தகவல்களைத் திரட்டினேன். அந்தக் கட்டுரை அச்சாகி இதழில் வந்தபோது, ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்தன. ஒரு பள்ளி நிர்வாகி அந்தக் கட்டுரையை வெட்டி தங்கள் பள்ளி நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் எவ்வளவோ கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி அதற்கு வாசகரிடமிருந்து நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்தாலும் அந்தக் கடிதம் மறக்க முடியாதது. அதன் பிறகு ஸ்ரெஸ் இன்டர்வியூ, ஸ்காலர்ஷிப், எமப்ளாய்மெண்ட் என்று புதிது புதிதாக எழுதினேன். என் எழுத்தின் நிறமும் தேர்வுகளும் கொஞ்ச கொஞ்சமாய் மாறத் தொடங்கின. அதற்குக் காரணம் மாலன் என்றால் மிகையல்ல.
அடுத்த தலைமுறையைப் பற்றியே எப்போதும் அவரது சிந்தனைகள் இருக்கும். எந்த ஒரு சமூக, அரசியல் நிகழ்விலும் இளைய தலைமுறையின் பார்வை என்ன என்று தெரிந்து கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருக்கும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கண்டுபிடிப்பு, வேலை வாய்ப்பு, கல்வி மேம்பாடு என்று அனைத்திலும் புதிதாய் அறிமுகமாகும் விஷயங்களையே முன்னிறுத்தி புதிய தலைமுறைஇருக்க வேண்டும் என்பதே அவரது கனவு.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, போதிய பின்புலம் இல்லாதவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் துடிப்புள்ளவர். புதிய தலைமுறையில் பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புகிறவர்களுக்காகப் பயிற்சிப் பத்திரிகையாளர் திட்டம் உண்டு. இளைஞர்களைத் தேர்வு செய்து, நிருபர்களாக ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கிறோம். இந்த நிருபர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் கையாளும் அணுகுமுறை வித்தியாசமானது. முதல் சுற்றில் விண்ணப்பித்தவரின் அறிவாற்றல், மொழியாற்றல் சோதிக்கப்படும். அதில் தேறியவர்களை நேர்காணல் செய்வோம். இந்த நேர்காணலில் அவரது சுற்றுச்சூழல் பரிசீலிக்கப்படும். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை. அடுத்து அவரது குடும்பப் பின்னணி ஆராயப்படும். தந்தையை இழந்தவர், வறுமையில் உழல்பவர், டீக்கடைக்காரரின் மகன் என்று சமூகத்தின் அடித்தட்டிலிருந்தவர்களே பயிற்சிப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வானவர்கள். இங்கு ஜாதி கேட்கப்படாமலே, ஒரு சமூக நீதியை நடைமுறைப்படுத்தினார் மாலன். அந்தப் பயிற்சிப் பத்திரிகையாளர்களில் பலர் இன்று எங்கள் புதிய தலைமுறையின் விழுதுகளாய் வளர்ந்து நிற்கிறார்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை மேம்படுத்தும் இன்னொரு திட்டம்தான் இலவச உயர் கல்வித் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வெளியேறி பலர் நல்ல பணியிலும் இருக்கிறார்கள் என்பதில் எனக்கும் பெருமைதான்.
தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியவர்களே எழுதாமல் புதிது புதிதாய் பலருக்கும் வாய்ப்பளிக்கபப்பட வேண்டும் என்பதும் அவரது விருப்பம். திசைகள் இதழில் அப்படி வாய்ப்பளிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் பத்திரிகைத் துறையில் பிரபலமானது கடந்த காலம். வைத்த கன்றுகள் விருட்சங்கள் ஆனதைக் கண்டு தோட்டக்காரர்கள் ஓய்ந்து விடுவதில்லை. அவர்கள் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான புதிய கன்றுகளை வளர்க்கும் முயற்சியில் இறங்கி விடுவார்கள். மாலனும் அப்படிப்பட்ட தோட்டக்காரர்தான். இப்போது கூட சென்னைப் புறநகர்ப் பகுதியின் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்காக ‘SLUM KIDS JOURNALIST‘ பயிற்சித் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை விட்டே அவர்கள் பகுதியைப் பற்றியும் அவர்களது பிரச்சினைகள், எதிர்காலக் கனவுகள் பற்றியும் எழுதச் சொல்லி புதிய தலைமுறையில் வெளியிட்டு வருகிறோம். பள்ளி மாணவனுக்கும் பத்திரிகையாள மனோபாவம் வரவேண்டும் என்பதே அதன் நோக்கம். இது அந்தக் குழந்தைகளின் எழுத்துத் திறமை, சமூக அக்கறையை மேம்படுத்துவதோடு, குழந்தைகளின் மனோவியலை புரிந்து கொள்ளவும் நமக்கு வாய்ப்பாகிறது.
வறுமை என்பது சாபமல்ல. அது ஒரு நிலை. அதை வெல்ல வேண்டும் என்கிற முயற்சியும் துடிப்பும் இருந்தால் அவர்களுக்குக் கரம் கொடுத்துத் தூக்கி விட அவர் என்றும் தயங்கியதே இல்லை. பத்திரிகை சாராமல் ஆதரவற்றோர் இல்லங்களில் பல குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கான கல்விச் செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத தகவல்.
அவர் எப்போதாவது ஆசிரியர் குழுவினர் ரிலாக்ஸ் செய்து கொள்ள மாமல்லபுரம் போன்ற இடங்களுக்குச் சென்று வரலாம் என்று கூறினால் நான் டென்ஷன் ஆகி விடுவேன். ஏனென்றால் அங்கேயும்போய் எடிட்டோரியல் மீட்டிங்தான் நடக்கும். தங்கள் பணி அனுபவம், பத்திரிகையில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்? லே அவுட் எப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்கிற ஆலோசனைக் கூட்டமாகவே அது அமையும். பலர் ரிலாக்ஸ் செய்து கொள்வதென்பது ரூம் போடுவது, சினிமா பார்ப்பது, தூங்குவது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை ஓய்வு என்பது ஒரு வேலை அலுப்பேற்படுத்தினால், இன்னொரு வேலையைச் செய்வதுதான்...என்பார். அது உண்மைதான். அவரை ஓய்வில் பார்ப்பது அரிது. இதழியல், இலக்கியம், அரசியல், பெண்ணியம், சுற்றுச் சூழல் என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டே இருப்பார். அலுவலகத்தில் மட்டுமின்றி வீட்டிலிருந்தும் கட்டுரைகளை அனுப்புவார். ஞாயிற்றுக்கிழமைகளிலும் இது தொடரும். இவர் என்ன இயந்திரமா என்று கூட சில நேரங்களில் தோன்றுவதுண்டு. இப்போது யோசித்துப் பார்க்கும்போது, அவர் பத்திரிகைத் தொழிலை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பெண்களின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். வீட்டில் குடும்பத் தலைவியாகவும் அலுவலகத்தில ஓர் ஊழியையாகவும் இரு வேறு பாத்திரங்களை வகிக்கும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்று நினைப்பார். அலுவலகத்தில் தங்களுக்கு நேரும் பணிச்சூழல் பிரச்சினைகளை அவரிடம் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். மகப்பேறு அடைந்த பெண்கள் அலுவலகம் வருவதில் டைம் அட்ஜஸ்ட் மெண்ட், மகப்பேறு விடுமுறைக் கால நீட்டிப்பு என்று சலுகைகள் உண்டு. ஒரு பெண் ஊழியருக்குத் தன் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை. அலுவலகத்துக்குக் குழந்தையைக் கூட்டி வந்து இரண்டு தினங்கள் வைத்துக் கொள்ளவா என்று கேட்டபோது, அதை அனுமதித்த அவர், யார் வேண்டுமானாலும் குழந்தையை அழைத்து வந்து அலுவலகத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பொது உத்தரவே போட்டார். அலுவலகத்திலேயே பெண் ஊழியர்களின் குழந்தைகளைப் பராமரிக்க ஒரு பராமரிப்பு இல்லம் அமைக்க வேண்டும் என்பது அவரது கனவு. பெண்களின் மீதான பிற்போக்குத்தனமான திணிப்புகளை அவர் கடுமையாக விமர்சிப்பார். பெண்களை ஒரு மலர் என்றோ, மான் என்றோ வர்ணித்தால் கடும் கோபப்படுவார். பெண் என்பவள் ஒரு மனுஷி. அவளை ஒரு சக மனுஷியாகவே பாருங்கள் என்பார். எதையும் அவருக்கு ரொமன்டைஸ் செய்யக் கூடாது.
தனது சகாக்களுக்கு வெளியிலிருந்து விருதுகள் கிடைத்தால் மிகவும் மகிழ்வார். நான் தமிழ்ப் பேராய விருது வென்ற தகவலை அவரிடம் சொன்னபோது, அவர் அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்தார். ‘‘அதைப் பற்றிய தகவலை இந்த இதழிலேயே வைத்து விடுங்கள்...என்றபோது, அந்த விருதை அவரே வாங்கி விட்டதான மகிழ்ச்சி அவர் குரலில். பொன். தனசேகரன் லால்டி மீடியா விருது, வாங்கியபோதும், யுவகிருஷ்ணா, அதிஷா இருவரும் சுஜாதா விருது வாங்கியபோதும், கீதா SCARF விருது வாங்கியபோதும் அது குறித்த தகவல்களை பத்திரிகையில் இடம் பெறச் செய்தார்.
ஒரு பத்திரிகையில் வேலை செய்பவர் இன்னொரு பத்திரிகையில் எழுதக் கூடாது என்பது ஒரு பொதுவிதி. ஆனால், ‘புதிய தலைமுறைஆசிரியர்க் குழுவினருக்கு அந்த விதி இல்லை. எங்கு வேண்டுமானாலும் எழுதலாம். முன் கூட்டி ஒரு வார்த்தை அவரிடம் கூறிவிட்டால் போதும். சமுக வலைத்தளங்களில் எழுத பல இதழ்களில் தடையுண்டு. ஆனால், நாங்கள் சமூக வலைத்தலங்களில் உலாவத் தடையில்லை. சமூக வலைத்தளங்களையும் தகவல் தெரிந்து கொள்ளும் ஒரு களமாகவே அவர் பார்க்கிறார்.
ஒரு பத்திரிகையாளன் எந்தக் கட்சியைம் சார்ந்திருக்கக் கூடாது. ஆனால், இங்கும் அதற்கு விதிவிலக்கு. எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். அது உங்கள் சுதந்திரம். ஆனால், பத்திரிகையில் எழுதும்போது அது வெளிப்படக் கூடாது. எதையும் சகித்துக் கொள்வேன். பத்திரிகையின் பெயரை யாராவது கெடுக்க முயன்றால் அதனைச் சகித்துக் கொள்ள மாட்டேன்என்பார்.
அவரது ஒரே மைனஸாய் நான் பார்க்கும் விஷயம் அவரது கோபம். பணியில் சேர்ந்திலிருந்தே மூன்று மாதங்கள் அவரது கோபத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளானேன். வேலையை விட்டு விடலாமா என்று கூட தீவிரமாய் ஒரு கட்டத்தில் யோசித்துண்டு. என்றாலும் அப்படி விட்டுவிட மனமில்லை. காரணம், எனக்கிந்த வேலை பிடித்திருந்தது. பணிச்சூழல் பிடித்திருந்தது.
ஒரு நாள் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதில், அவரது கோபத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘நீங்கள் ஒரு சாதாரண மனிதராய் இருந்தால், நீங்கள் கோபப்படுவது குறித்து நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால், குரு ஸ்தானத்தில் இருப்பவர். நாங்கள் உங்களிடம் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய. ஆனால், எங்களுக்கு உங்களை நெருங்க கொஞ்சம் அச்சமாக இருக்கிறதே. உங்கள் கோபம் தடுக்கிறதே...என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு அவர் அன்றிரவே பதிலளித்தார். அந்தப் பதில் மின்னஞ்சலில், ‘நான் கோபப்படுகிறேன் எனப் பலர் சொல்லியிருக்கிறார்கள். அதை வெல்ல தொடர்ந்து முயன்று வருகிறேன். கோபத்திற்குப் பயந்து யாரும் என்னோடு பேசாதிருக்க வேண்டாம். தாராளமாக அணுகிப் பேசலாம். விவாதிக்கலாம். தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லலாம். நான் அவற்றை என்றுமே அனுமதிக்க மறுத்ததில்லை
என் கோபம் தனிமனிதர்கள் மீதானதல்ல. நான் எந்த சகாவையும் தனிப்பட திட்டியதில்லை. அவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பை அவர்கள் சரிவரச் செய்யாது போனால், அதை உரித்த நேரத்தில் செய்யாது போனால், அல்லது அது குறித்து அக்கறையற்று இருந்தால் கோபப்படுவதுண்டு. அதற்கு வேலை கெட்டுப் போகிறதே என்பதுதான் காரணம். திறமைக் குறைவை நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் பொறுப்புணர்வற்ற தன்மையை நான் சகிக்க மாட்டேன். காரணம் திறமையை வளர்த்துக் கொள்ள இயலும். ஆனால் பொறுப்பின்மை அக்கறையின்மையால் விளைவது. அது மனோபாவம்.
கடந்த 3 மாதங்களில் நான் எதற்காகவெல்லாம் நம் குழுவினரை கோபித்துக் கொண்டிருக்கிறேன் என எண்ணிப் பாருங்கள். தனிப்பட்ட விதத்தில் எவரையேனும் விமர்சித்திருந்தால் வருந்துகிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் பத்திரிகையாளன் என்பது ஒரு வேலை அல்ல. ஒரு தொழில். Profession அதைக் குறித்த பெருமிதங்கள் எனக்கு உண்டு. நான் பத்திரிகையாளனானதே அந்தப் பெருமிதத்தால்தான். இது ஒருவன் காசுக்குப் பார்க்கிற வேலை அல்ல என்பது என் எண்ணம். இது வெறும் உடல் உழைப்பு அல்ல. மூளையால் செய்கிற வேலை அல்ல. உடல் மூளை இவற்றுடன் மனமும் இணைந்து வேலை செய்ய வேண்டும். கதை எழுதுவது போல படைப்பு அல்ல. ஆனால், படைப்பாற்றலும் வேண்டும். வேறு எந்தத் தொழிலிலும் இத்தனை அம்சமும் இணைந்தது கிடையாது.
எனவே என் சகாக்கள் இதை ஒரு வேலையாகப் பார்க்காமல் தொழிலாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. என் கோபத்தைப் பொருட்படுத்த வேண்டாம். எவரும் எப்போதும் என்னிடம் எதையும் பேசலாம்.என்று அந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.