18/12/15

நோபல் பரிசு பெறுவாரா இந்த தமிழ்ப்பெண்?

கற்பனையில் கூட எல்லைகளை நிர்ணயிக்க முடியாத  அளவில் பறந்து விரிந்து கிடக்கும்  பிரமாண்டமான  பிரபஞ்சவெளி எண்ணற்ற ஆச்சரியங்களும்   எளிதில் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களும்  நிறைந்ததுஇந்த மர்ம தேசத்தில் இன்னும்  முழுவதுமாக அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் ஒன்றுகருப்பு துளைகள்என அறியப்பட்டிருக்கும்  black holes.  பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். சூரியன் பிறந்தே சுமார் 460 கோடி ஆண்டுகள்தாம் ஆகின்றன   என்பதிலிருந்து தூரத்தை  யூகித்துக்கொள்ளுங்கள்.
 இந்த கருப்பு துளைகள் பற்றிய  விண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்  தொடர்ந்து கொண்டுவருகின்றனஇதில் ஒரு புதிய விஷயத்தைத் தனது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்து   உலகநாடுகளிலுள்ள  விண்ணியல் விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறார்  இந்த இந்திய பெண் விஞ்ஞானி. அமெரிக்காவிலிருக்கும் அவருடன் பேசியபோது அறிந்தவை இவை

பிரியம்வதா என்னும் பிரியா டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா போனவர். உலகப்புகழ் பெற்ற  அமெரிக்க MIT பல்கலை கழகத்தில் விண்ணியலில் முதுகலை, தொடர்ந்து முனைவர் பட்டங்கள் பெற்று தற்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில்  விண்ணியல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர். தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து  கொண்டிருப்பவர்டென்மார்க் நாட்டின் கியூபன் ஹோவன் விண்ணியல் பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசியராக  அழைக்கப்பட்டிருப்பவர். டெல்லி  பல்கலை கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகவும் கௌரவிக்க பட்டிருப்பவர்,
உலக விண்ணியல் விஞ்ஞானிகள் பிரமித்து போகுமளவிற்கு இவர் சமீபத்தில்  கண்டு பிடித்திருப்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள கருப்பு துளைகளை பற்றி நாம் சற்று புரிந்து கொள்ள வேண்டும்
விந்தைகள் நிறைந்த விண்பேரண்டவெளியில்  ஒரு பகுதி இந்த   கருங்குழிகள் (Black Hole) அல்லது கருந்துளைகள் என்பன, இவை  வலுவான ஈர்ப்புச் சதியைக் கொண்டுள்ளவை தானும் ஒளிராது, தன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது  இந்தக் கருந்துளைகள்.. எனவே, கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது. நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர்.அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்துவிடும். அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும்போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவதுபோலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.
இதன் சுற்றுப்பாதையில் இப்படிச் சுழன்றுகொண்டிருக்கும்   கோள்களின் வேகம், அவைகள் இருக்கும் நிலைகளின் மூலம் இந்தக் கருந்துளைகளின்  அமைப்பை கணக்கீடுகள் மூலம் எப்படியிருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள். வளரும் தொழில் நுட்பம் கைகொடுக்க பெருமளவில் கணினிகள் மூலமும் ராட்சத டெலிஸ்கோப்புகள் மூலமும் இந்தக் கணக்கீடுகளை உறுதிசெய்திருக்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் இருக்கும் அடர் கருப்பு பகுதி  வாழ்நாள் முடிந்த பின் எரிந்துபோன நட்சத்திரங்களின் கூட்டம் என்றும். அவற்றுடன்  புதியஎரிந்தநட்சத்திரங்கள்  சேர்வதால் அவை  வரமின்றி வளர்கின்றன என்றும் சொல்லப்பட்டது.
இந்தப் பின்னணியில் பிரியம்வதா கடந்த சில ஆண்டுகளில் தனது தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலம்  கருந்துளைகளை உருவாக்கும் அடிப்படையான  அடர் கருப்பு பொருள்களின் (dark matter)   இயல்புகளையும், கருந்துளைகள் உருவாகி வளர்வது குறித்தும் ஆராய்ந்து அறிக்கைகள் கட்டுரைகள் தந்திருக்கிறார். பலகாலமாக நம்பப் பட்டுவந்ததுபோல இந்த கருங்குழிகள் இறந்த நட்சத்திரங்களின் தொகுப்பு இல்லை. அவைகள்  ஒரு வாயுவாக தானாகவேஉருவாகி மிக வேகமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியைத் தானே நிறுத்திக் கொண்டுவிடுகிறது. கருந்துளைகளுக்கும் வரம்பு,விளிம்பு உண்டு என்பது தான் இவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கும் விஷயம்.  இந்த முடிவு இப்போது விண்ணியல் விஞ்ஞானிகளுக்கு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறதுஇது கரும் துளைகளை பற்றிய ஆராய்ச்சிகளை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்லப்போகிறது.
அவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்திருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு  உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “ராமன் விளைவு” “சந்திரசேகர் வரையறைஎன்பதைப் போல பிரியா வரம்பு என்பதும் பேசப்பட்டு வருகிறது.
பிரியம்வதாவின் இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவருக்கு  பல நாடுகளின்  நிறுவனங்களின் விருதுகளும் ஃபெலோஷிப்புகளும்  வழங்கப்பட்டிருக்கிறது  ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதை மிகவிரைவில் இவர் பெறுவார்  என விஞ்ஞான உலகம் கணித்திருக்கிறது.
ஆண்டு தோறும் தவறாமல்  பாரதிக்கு விழா எடுத்து அதில் அரிய சாதனைகள் செய்தவரைத் தேர்ந்தெடுத்து  ”பாரதி விருது” வழங்கும் வானவில் பண்பாட்டு கழகம் இந்த ஆண்டின் பாரதி விருதுக்குப் பெருமைக்குரிய இந்த தமிழ்ப்பெண்மணியைதேர்ந்தெடுத்திருக்கிறது.

வானை, கடல்மீன்களை அளப்போதோடு நின்றுவிடாமல் விண்ணியல் சாத்திரத்தில் தமிழ் மக்கள் தேர்ச்சி பெற்று அவர்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்என கனவுகண்டவன் பாரதி. அந்தக் கனவை மெய்ப்பித்திருக்கும் இந்தப் பெண்ணை அந்த விருதுக்குத் தேர்வு செய்திருப்பது, மிகப்பொருத்தமானது.
விண்ணியல் விஞ்ஞானி பிரியம்வதா நடராஜன் அவரது சாதனைக்காகவும்இந்திய ஊடகங்களின் வெளிச்சம் இன்னும் விழாத இந்தப் பெருமைக்குரிய தமிழரைத் தேடிக்கண்டுபித்தற்காக வானவில் பண்பாட்டு கழக  நிறுவனர் ரவி அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்   








30/11/15


நேரு மற்றும் அவருடைய ஆட்சிக்காலம் பற்றிய விமரிசனங்கள் பரவலாக எழுந்திருக்கும் நிலையில் Ramanan Vsv எழுதிய ’நேருவின் ஆட்சி : பதியம் போட்ட 18 ஆண்டுகள்’ என்ற புத்தகம் இன்று Sixthsense Publications வழியாக வெளியாகியுள்ளது.
நேருவைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் முன்னர் கட்டாயம் வாசிக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை வாங்க:
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
(தியாகராயநகர் பேருந்துநிலையம் அருகில்)
தியாகராயநகர், சென்னை - 17.
தொடர்புக்கு: 72 000 500 73
http://sixthsensepublications.com/
LikeLike ·  · 

20/11/15




புத்தக பதிப்பில் புதிய அலைகள்- தமிழில் மின்நூல்கள்

புத்தக பதிப்பில் புதிய அலைகள்- தமிழில் மின்நூல்கள்
ஒரு  மொழியின் வளர்ச்சிக்கும்  வளமைக்கும்  பெரிதும் உதவும் விஷயங்களில் ஒன்று  அதன் படைப்பிலக்கியங்கள்  தொடர்ந்து பதிப்பிக்கப்படுவது. அச்சுக்கலை இந்தியாவில் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை தமிழில் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டு புத்தக கண்காட்சியிலும் உயரும் விற்பனையின் எண்ணிக்கை புத்தகங்களை நேசித்து வாசிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை சொல்லுகிறது.   தொடர்ந்து வளரும்  உயரிய தொழில்நுட்பம் கைகொடுக்கக் கடந்த சில ஆண்டுகளில் பதிப்பகத்துறை பல புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது.  இன்று பதிப்பக துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கணணியில் எழுதி மின் அஞ்சலில் அனுப்பப்பட்ட படைப்புக்கள் பதிப்பாசிரியரின் கணணியில்பெறபட்டு அது  திருத்தப்பட்டு புத்தக பக்கங்களாக்க லே அவுட் கலைஞருக்கு மின் அஞ்சலில் அவரால் அனுப்பப்படுகிறது.  அந்தக் கலைஞரின் கணணியிலிருந்தே நேராக  அச்சகத்தில் அச்சிடப்பட்டு பக்கங்களை ஒருங்கிணைத்துக் கட்டமைக்கும் இயந்திரம் மூலமாகப் புத்தகமாக வெளிவருகிறது. இந்தப்பணிகள் பிரமிக்கத்தக்க வேகத்தில் நடைபெறுவது மட்டுமில்லை. வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது.  மதுரையிலிருக்கும் படைப்பாளி அனுப்புவது சென்னையிலிருக்கும் பதிப்பாசிரியரால் திருத்தப்பட்டு தஞ்சையிலிருக்கு,ம்  அச்சு கலைஞரால் வடிவமைக்கப்பட்டு மும்பையில் அச்சிடப்பட்டு சென்னைக்கு விற்பனைக்கு வருகிறது.  இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிகள் பதிப்புத்துறையை பல  புதிய பரிமாணங்களுக்கு  எடுத்துச் சென்றிருக்கிறது. இப்போது  விற்பனைக்குத் தேவையான புத்தகங்கள் மட்டுமே பதிப்பிக்கப்படுகின்றன. ”ப்ரிண்ட் ஆன் டிமாண்ட்”  என்ற இந்த  முறையில் மிகக் குறைவான அளவில் கூட, ஏன் ஒரே ஒரு புத்தகம் கூட  அச்சிட்டுக் கொள்ள முடியும். இதனால் பதிப்பகங்களில்  புத்தகங்கள் விற்பனையாகமல் தேங்குவதில்லை. வாசகர்களுக்குக் கொடுக்கும் விலைக்கு எப்போதும் பளிச்சென்ற புதியவெள்ளை தாளில் நேர்த்தியான அச்சில் புத்தகங்கள் கிடைக்கின்றன.  இப்போது  இந்த தமிழ்பதிப்பு துறை  அடுத்தகட்டமான  “மின்நூல்கள்” நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. 
மின் நூல்கள் 
எலக்டிரானிக் புக் அல்லது இ புக் என உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் இந்த மின் நூல்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள், ஆசிரியர்கள் என எல்லாப் பகுதியினரிடமும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.  அச்சு வடிவில் இருக்கும் புத்தகங்கள் டிஜிட்டில் வடிவமாக்கப்பட்டு  கணணிகளில் படிக்க முடியும்  என்று  துவங்கிய இந்த மின் புத்தகம் இன்று பல புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.  
70களிலேயே அன்றைய காலகட்டத்திலிருந்த கணணிகளில் இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டிருந்தாலும்,  இ புத்தகங்களின் முழு விச்சும் உணரப்பட்டது. 2005க்குபின்னர்தான்.  அந்த ஆண்டு சோனி, அமேசான் நிறுவனங்கள்  மின் புத்தகங்களை படிப்பதற்கென்றே  ஈ ரீடர் என்ற கருவிகளை அறிமுகப்படுத்தி அதில் படிப்பதற்கான புத்தகங்களின் பட்டியலையும்வெளியிட்டது.  இதில்  உலகின் மிகப் பெரிய இணைய புத்தக்கடையாக அறியப்பட்டிருந்த அமேசான் அறிமுகப்படுத்திய கின்டில் என்ற மின்நூல்படிக்கும் கருவி  இ ரீடர்  2007 ல் அமெரிக்காவில்  அறிமுகப்படுத்திய ஆறு மணிநேரத்திற்குள்  விற்றுத் தீர்ந்துவிட்டது.  வாசகர்கள் ஒரே சமயத்தில் பல புத்தகங்களை  எடுத்துச் செல்லும் வசதியுள்ள  கையடக்கமான இந்தக் கருவியை விரும்ப ஆரம்பித்தார்கள்.  அச்சில் வரும் புத்தகம் அனைத்தும் இதில் அதைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கும் என்பதாலும் எங்கு எளிதாக எடுத்துச் செல்லாம் என்பதாலும்   பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிற்று. 2010ஆம் ஆண்டு அமேசான் ”நாங்கள் விற்கும் 100 அச்சிட்ட புத்தகத்திற்கும் 140 இ புக் குகளை விற்றுக்கொண்டிருக்கிறோம்” என அறிவித்ததும்  இதைப் பயன்படுத்துவோர்  எண்ணிக்கை 28% அதிகரித்தது.  புத்தக பதிப்பில் எழுந்த இந்தப்  புரட்சி உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நேரத்தில்  சுனாமியாக  வந்து தாக்கியது  ஆண்டராய்ட் என்ற  அதிதொழில்நுட்பம்.    இணைய இணைப்பு உள்பட   கணணியின் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு நோட்டு புத்தக  வடிவில் ஐ பேட்   வெளியிட்ட  ஆப்பிள் நிறுவனம் அந்த கைகண்ணியிலேயே  இ புத்தகங்களையும் படிக்கும் வாய்ப்பை  சில இலவச புத்தகங்களின் இணைப்புடன்  அளித்தது. கைக்கணணியிலேயே புத்தகங்களைப் படிக்கமுடியும் போது இதற்கு எதற்கு ஒரு தனிக்கருவி என்ற எழுந்த எண்ணம் கின்டில் போன்ற இ ரீடர்களின் விற்பனையை வெகுவாக தாக்கியது.  ஆனால் புத்திசாலி நிறுவனமான அமேசான் கின்டில் நிறுவனத்தை தனிப்பதிப்பகமாக்கி அதன் புத்தகங்களைஆப்பிளின் ஐபாட் உள்பட எல்லா ஆண்டிரய்ட் கருவிகளிலும் தரவிறக்கிப் படிக்க முடியும் என அறிவித்து தங்கள்  இ புக் விற்பனையை தக்கவைத்துக்கொண்டார்கள்  இது காலத்தின் கட்டயாகமாகிவிட்டதால் கூகுகிள் பிளே போன்ற நிறுவனங்களும்  உடனே மின் புத்தக விற்பனை களத்தில் இறங்கி இப்போது எல்லோரும் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் புரட்சியினால் இன்று உலகெங்கும் மின் புத்தகங்களை ஐ பேடிலோ, டேப்லெட்டிலோ, போனிலோ ஒவ்வொரு வினாடியும்  குறைந்த பட்டசம் 10ஆயிரம் வாசகர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள் 
தமிழில் மின்  நூல்கள்
இன்று உலகளவில்  இணையத்தில் அதிக அளவில் பயன்படுத்தம் மொழிகளில் ஒன்று தமிழ்.  தமிழ் புத்தகங்களை மின்புத்தகங்களாக்கி சேமிக்க வேண்டும் என்ற முயற்சி 1995லேயே துவங்கிவிட்டது.   வெளிநாடுகளில் வசிக்கும் முனைவர் கே கல்யாணசுந்திரம், முனைவர் குமார் மல்லிகார்ஜுனன்  என்ற இருவரின் முயற்சியால் துவங்கப்பட்ட”மதுரை திட்டம்” இன்றளவும் எண்ணற்ற தமிழ் புத்தகங்களை மின்நூல் வடிவாக்கி தங்கள் தளத்தில் சேமித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கும், நூல் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பயன்படும் இந்த தளம் எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. . உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இதில் தொல்காப்பியத்திலிருந்து பொன்னியின் செல்வன் வரை  500க்கும் மேற்பட்ட புத்தகங்களை    மின்நூலாக இலவசமாகப் பெறமுடியும் 

இதைப்போலவே  2001 ஆம் ஆண்டு ஜெர்மனியில் வசிக்கும் முனைவர் சுபாஷணி, மலேசியாவிலிருக்கும் பேராசிரியர் கண்ணன். முத்த பத்திரிகையாளர் மாலன் போன்றவர்களின் முயற்சியான தமிழ் மரபு அறக்கட்டளையின் தளத்தில்  400க்கும் மேற்பட்ட பல பழமையான தமிழ் நூல்களை மின்நூலாக   சேமித்திருக்கிறார்கள். அவற்றை இலவசமாகப் பெறலாம். சமகால மின்னூடகத்தின் வழியே தமிழ் மரபை அறிந்துகொள்ள உதவும் இந்தத் தளம், ஒரு தகவல் சுரங்கம்
ஆனால் இந்தத் தளங்களில் இருப்பவை எல்லாம் பாரம்பரியம் மிக்க பழந்தமிழ்நூல்கள். அவற்றை மின்பதிப்பாக மாற்றி ஒரு நூல்நிலையம் போல் செயல் படுகிறார்களே தவிர  சமகால புத்தகங்களை  மின் புத்தகமாக பதிப்பிக்கவில்லை. அந்த முயற்சி 2003ல்தான் துவங்கியிருக்கிறது. முதல்வன் என்ற பெயரில் ஒரு மின்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் ஆசிரியர் முனைவர்சிதம்பரம்.  இந்த ”முதல்வன்” தான் தமிழின் முதல்  மின்நூலாக கருதப்படுகிறது. 
சமீப காலம் வரை தமிழ் மின்புத்தகங்கள் பெரிய அளவில் வெளிவராதற்கு காரணம் அதற்கான சரியான இயங்குதளம் ஒன்று இல்லாதுதான். உலகின் மிகப்பெரிய மின் நூல்களின் பதிப்பகமாக இருக்கும் கின்டில்  ஆங்கிலம் தவிர 50 மொழிகளில் புத்தகங்களை  வெளியிட்டாலும் இந்திய மொழிகளில் வெளியிடுவதில்லை  இந்திய மொழி புத்தகங்களை வெளியிடத் தளங்களும் புத்தகங்களுக்கான விலையை இந்திய பணத்தில் செலுத்தும் வசதியும் இருந்தால் தான் இந்திய மொழி  இ புத்தகங்களின் வெளியீடு வெற்றியாக முடியும் என்ற நிலை சில ஆண்டுகளாக  நீடித்துக்கொண்டிருந்தது.  இந்த நிலையை மாற்றி பல தொழில்நுட்ப சிக்கல்களுக்கிடையேயும் தமிழ்  இ புத்தகங்களுக்காகவே  ஒரு தளத்தை நிறுவ முனைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர்   கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் முனைவர் பத்ரி சேஷாத்திரி. ஐஐடியிலும் வெளிநாட்டிலும் பொறியியல்  படித்த பொறியியலாளரான இவர்  ஆர்வத்தினால் புத்தக  பதிப்பளாரகி புதிய சாதனைகளைச்செய்திருப்பவர்.  இவரது முயற்சிகள் இறுதிகட்டத்தில் இருந்தபோது தான்   தினசரிகள் வெளியாகும் செய்திகளை தொகுத்து  இணையத்தில்   வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்த  நீயுஸ் ஹண்ட் என்ற தளம் இந்திய மொழியில் இ புத்தகங்களை  அவர்கள் தளத்தின் மூலமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியது.  வாசகர்கள்  வரவேற்பினால்  அந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது.. இப்போது இதில் கிழக்கு உள்பட சில தமிழ் பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன.  பதிப்பகங்களைத்தவிர, ராஜேஷ் குமார், ரமணி சந்திரன் போன்ற எழுத்தாளர்கள்  நேரடியாக வெளியிடும் புத்தகங்களும் கிடைக்கின்றன.    நீயூஸ்ஹண்ட்டின்  வெற்றியைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் இப்போது  தங்கள் இணைய கடையான ”கூகிள் பிளே ஸ்டோரில்” இந்தியமொழிபுத்தகங்களை இந்திய பணத்திலேயே வாங்கும் வசதியை அறிவித்திருக்கிறது. 
இ புத்தக உலகில்  சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் இத்தகைய காட்சி மாற்றங்கள்  தமிழில் வெளியாகும் இ புத்தகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் என்கிறார் பத்ரி சேஷத்திரி.  விரைவில்  இவரது கிழக்கு பதிப்பகத்தின் பல புத்தகங்கள் கூகுள் பிளே, நியூஸ்ஹண்ட் போன்ற எல்லாத் தளங்களிலும் ஒரே விலையில் கிடைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார்.  இவரைப் பல  தமிழ்ப் புத்தக பதிப்பாளர்கள் பின்பற்றுவார்கள் என்பது உறுதி. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்கள்  இ புத்தகமாக வெளிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இ புத்தகங்களின் விலை அச்சடிக்கப் பட்ட புத்தகங்களின் விலையில் பாதிக்கும் குறைவாக இருக்கிறது  ஒரு முறை தரவிறக்கம் செய்து கொண்டால் நம்  நேர வசதிக்கேற்ப படிக்கலாம். 
அச்சு கூலி பேப்பர் விலை  போன்றவை இல்லாதாலும். மின்நூலாக்கும் செலவு ஒரு முறைதான் செய்யப்படுவதாலும்  மின் நூல்களை இப்படிக் குறைந்த விலைக்குக் கொடுக்க முடிகிறது என்கிறார் பத்ரி.  அச்சில் வந்தபின் மின் புத்தகமாக வரும் இன்றைய நிலையைத் தாண்டி மின் புத்தகமாக வெளியிடுவதற்காகவே ஆசிரியர்கள் எழுதப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறார் இவர். மின்புத்தக பதிப்பில் மிக முக்கியமானது மின்னூலாக்கம். கணணிகளின் செயலாக்கத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது போல  இதிலும் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு புத்தகத்தில் பக்கங்களைத் திருப்பி  படிப்பதைப் போல பக்கங்களைப் புரட்டும் வசதி தெளிவான  வண்ணப்படங்களுடன்  அழகான லேஅவுட் போன்றவற்றைச் செய்யப் பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 
இலவச மின் புத்தகங்கள் 
மின் புத்தகங்களை வணிக சந்தை படுத்த இம்மாதிரி முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இலவச மின்நூலாகவே கிடைக்கிறது. பங்களுருவிலிருந்து இயங்கும் ப்ரதிலிபி  என்ற நிறுவனம் தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில்  8000த்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இலவசமாக வழங்குகிறார்கள். தமிழில் மட்டும் 1500 புத்தகங்கள். கிடைக்கின்றன.  பிட்ஸ் பிலானி, அண்ணாபல்கலகழகம், டெல்லி பல்கலகழகம் போன்ற சிறந்த  கல்விக்கூடங்களில் பயின்றபின்னர்  அமேசான், சிட்டிபாங்க், போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய  5 பேர் கொண்ட ஒரு  இளைஞர் குழு முழுநேரப்பணியாக இதைச் செய்து கொண்டிருக்கிறது. 
ஏன் இலவசமாகக் கொடுக்கிறார்கள்?  
பதிப்பிக்கப்பட்ட நூலை  மின்நூலக்குவது டெக்கினிக்கல் பிரச்னைகள் நிறைந்த பணி. அதற்காகச் செலவிடும் நேரம், உழைப்பவர்களுக்கான ஊதியம் போன்றவை அதிகம் இருந்தும் எப்படி, ஏன் இதை இலவசமாகக் கொடுக்கிறார்கள்?. 
”எழுதப்படிக்க தெரிந்த இந்தியர்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியாது.. ஆங்கிலம் தெரியாத ஆனால் ஆண்டிராய் கருவிகளைத் தங்கள் மொழிகளில் பயன்படுத்த தெரிந்தவர்கள் 7 கோடிக்கும்மேல். இது வரும் ஆண்டுகளில் பல மடங்காக உயரப் போகிறது.  ஒரு இந்திய மொழியில் மட்டும் 9000 அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது வாசகர்களை அடையவில்லை மார்க்கெட்டிங்கும் செய்யப்படவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ஒருங்கிணைத்து பாருங்கள் இந்த சந்தையின் வீச்சு புரியும் என்கிறார். சங்கரநாராயணன். இவர் ப்ரதிலிபியின் நிறுவன குழவின் தலைவர். இணையம் பயன்படுத்துபவர்கள் அனைவரும் புத்தகங்களை இணையத்தில் படிக்க வேண்டும் அந்த பழக்கத்தை ஏற்படுத்த, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த நாங்கள் எடுத்திருக்கும் முயற்சி இது என்று சொல்லும் இவரின் குழு இந்தச் சாதனையை  துவக்கிய முதாலாம் ஆண்டிலியே சாதித்திருக்கிறார்கள்.  நமது மொழியின் படைப்புகளை மின்னூலாக்கிப் படிக்கும் வசதியை யாராவது தருவார்கள் எனக்காத்திருந்து எவரும் முன்வராததால் நாங்களே இந்த முயற்சியில் இறங்கிட்டோம் எனச் சொல்லும் சங்கர நாராயணண். எங்களுக்கு புகழ்பெற்ற ஆசிரியர்கள் அவர்களின்  படைப்புகளை வெளியிடக்கொடுத்து  எங்கள் முயற்சிகளைப் பாராட்டி உதவ முன்வந்தது  ஒரு மகிழ்ச்சியான விஷயம்.  என்கிறார்.   இனி சொந்தபணத்தை செலவழித்து தங்கள் முதல் படைப்பை அச்சில் வெளியிட வேண்டாம் எங்கள் ப்ரதிலிபி  புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வரவேற்கிறது" ( www.pratilipi.com) என்கிறது இவர்கள் குழு. இப்போது துவக்க கட்ட திலிருக்கும் இந்த நிருவனம். பெரிய அளவில் பயனாளிகள் படைப்பாளிகள் கட்டமைப்பை உருவாக்கிய பின்னர்தான் வணிக ரீதியான மின்பதிப்புகளை வெளியிடப்போகிறார்கள் 
இவர்களின் முயற்சிகளை அறிந்தவர்களில் 70%க்கும் மேற்பட்டவர்கள் அதை பேஸ்புக் மூலமாகத்தான் அறிந்திருக்கிறார்கள். முகநூலில் இவர்கள் பக்கத்தை 5000க்கு மேற்பட்டவர்கள் பின்பற்றுகிறார்கள்.  உலகின் மிகப்பெரிய இந்திய மொழிகளின்  இ பதிப்பகமாக வேண்டும் என்ற கனவில் இயங்கும் இந்தக் குழுவினர் சொல்வது ”ஒருவேளை நாங்கள் இந்த முயற்சியில் வெற்றியடையாமல் போகலாம் ஆனால்  நாங்கள் வெற்றிகரமாக ஏற்றிய இந்த தீபத்தை வேறு எவரேனும் எடுத்துச் செல்வார்கள் என்றே நம்புகிறோம்” 
ப்ரதிலிபி யைப் போலவே சென்னையிலும் ஒரு குழு இத்தகைய பணிகளைச் செய்கிறது. ”ப்ரீ தமிழ் இ புக்ஸ்” (http://FreeTamilEbooks.com) என்ற  குழு.  இதன் உறுப்பினர்கள் தமிழகத்தின் பல நகரங்களிலும் வெளிநாடுகளிலும்  இருப்பவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்  துவக்க பட்ட  15 பேர் கொண்ட குழு. இது. இதில் மூவர் பெண்கள். எல்லோருமே   கணணி தொழில்நுட்பம் அறிந்தவர்கள். புத்தக முகப்பு தயாரிப்பு,மின்னூலாக்கம். ஆசிரியர் தொடர்புகள் எனப் பணிகளை பிரித்துக்கொண்டு இயங்குகிறார்கள்.  இவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள்.  இவர்கள் இலவசமாக மின்பதிப்புகளைக்கொடுப்பதின் நோக்கம்  -அதிகமானோர் தமிழ் புத்தகங்களை இணையவழியில் படிக்கச்செய்யவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே என்கிறார். இந்தக் குழுவின் உறுப்பினரான திரு அன்வர்.  இதுவரை 200 புத்தகங்களை மின்னூலாக்கியிருக்கும் இவர்கள் புதிய மின்னூல்கள் மட்டுமில்லை தொடர்ந்து வலைப்பூக்களை எழுதிவருபவர்களின் படைப்புகளையும் தொகுத்து ஒரு மின்னூலாக்கப்படுவதையும் வரவேற்கிறார்கள் 
நாம்  வேகமாக மாற்றங்கள் நிகழும்  காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அரசியலில், கலாச்சாரத்தில், பண்பாட்டில், இலக்கியத்தில், வேளாண்மையில், மருத்துவத்தில்… என சகல தளங்களிலும் மாற்றங்கள் நிகழந்துகொண்டிருக்கிறது. புத்தகபதிப்பு துறையும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதை  புலிபாய்ச்சலில் வரும்  மின்நூல்கள் புரியவைக்கின்றன. கிண்டில் போன்ற e-readerகளையோ, அல்லது டேப்லெட்களையோ, கைபேசியையோ பயன்படுத்தினால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று படிக்கலாம். டேப்;லெட்களில் ஒரே நேரத்தில் பல திரைகளைத் திறந்து கொண்டு மின் புத்தகங்களை இறக்கிக் கொண்டு Cross reference செய்து கொள்ளலாம். எழுத்துக்களைப் பெரிதாக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி இல்லாமல் படிக்கலாம். டேப்லெட்டிலோ, கிண்டிலிலோ தரவிறக்கம் செய்து கொண்டால் அதுவும் பொக்கிஷமாக ஆகிவிடும். இணையத்தில் தமிழ் மொழி பெரிய அளவில் உலவ முனைந்து வெற்றிகண்டவர்களைப்போல மின் புத்தக அலையை தமிழ் பதிப்புலகிற்கு  கொண்டு வரும் முன்னோடிகளான  இளைஞர் பட்டாளத்தை,  ஊக்குவித்து  அவர்களின் முயற்சிகள்  வெற்றி பெற வாழ்த்துவோம்

(கல்கி தீபாவளி மலர் 21015 )
 இலவசமாக மின் நூல்களை பெற உதவும்  சில இணைய தளங்கள்
.http://freetamilebooks.com/
www.pratilipi.com . 
http://noolagam.org/
http://www.projectmadurai.org/pmworks.html
 http://thamizham.net
http://www.chennailibrary.com





 

19/8/15

life

18th jul 2015


Some surprising, pleasant moments become memorable one –for one's whole life. Recently I had one such a moment.I have written biography of Dr. Bala Balachandar Dean Great lake Institute of management in this Jan. The book was released in a colorful function at Mumbai  in Jan15. Mr.Rathan  Tata was scheduled to  release the same. But due his sudden illness on that day he could not make it and Mr. Adi godrej chairman of Godrj group  released the book  in that function.

Recently Mr.Rathan Tata was in Chennai to deliver convocation address of GLIM. Prof Bala invited me for that function and introduced me to Rathan Tata. During introduction Mr. Tata told me “I read your book.  It is a nice presentation “.When   I handed over a copy of the book to him  he said  "sign your name and give"

.
For a second I lost myself -due to this unexpected, unlivable surprising shock. Mr. Rathan Tata is asking my book with my signature!   While handing over the book with my signature I requested him to oblige me with his autograph in another copy of the same book.Immediately he sat on the sofa nearby, took  his pen and  signed gently in  the book with “ best wishes to Ramanan”

I thank the Almighty for this blessed moment of my life and prof Bala  for providing  it