30/6/18

பாரதி : கவிஞனும் காப்புரிமையும் - புத்தக அறிமுகம்

-
 ந்த  இதழ் புதிய தலைமுறை இதழிலின் புத்தக அறிமுகத்தில் எழுதியது


உலக இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில்தான் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கான பதிப்புரிமை அரசுடைமை செய்யப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட எவருடைய எழுத்துகளுக்கும் கிடைத்திடாத இந்தத் தனிப்பெருமை மகாகவி பாரதியின் எழுத்துக்குத்தான் கிடைத்தது.

ஆனால் அந்தப்பெருமை அவ்வளவு  எளிதில் கிட்டிவிடவில்லை. இதற்காக நடந்த முயற்சிகள் அதன் மூலம் நிகழ்ந்த மாற்றங்கள், ஏமாற்றங்கள், வழக்குகள் அரசு எடுத்த நிலைப்பாடு அனைத்தையும் வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு தான் சார்ந்த வரலாற்றுத்துறைப் பார்வையுடன் இந்நூலை  முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி மிக அருமையாக எழுதியுள்ளார்
.
மகா கவியின் படைப்புகள் நாட்டுடமையானது குறித்து வழங்கி வரும் பலவித கதைகளைக் கேட்ட நமக்கு இவர் துல்லியமான தரவுகளுடன் உண்மை வரலாற்றை விவரிக்கிறார்.
மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது படைப்புகள் வெகுகுறைவு. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பு ஒன்றுதான் வெளியாகியிருக்கிறது.
 பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பைவிட அவரது காலத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில்தான் பல மடங்காக உயர்ந்தது அதனால் அச்சிட்ட புத்தகங்கள் அதிகம் வரத்துவங்கியது. அப்படி பதிபிக்கபட்ட பாரதியின் படைப்புகள் பொதூடமையாக்கப் படுவதற்கான் தேவை எப்படி எழுந்தது என்பதை நிகழ்வுகளின் காலபோக்கோடு விவரிக்கிறார் நூலாசிரியர். சில இடங்களில் தரவுகளாகச் சுட்டிகாட்டபடும் ஆவணங்களும், கடிதங்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன
.
மஹாகவியின் மனைவி அவரது மகளின் திருமணத்துக்காக அவரது படைப்புகளின் உரிமையை அடகு வைத்திருக்கிறார். அதுவும் யாரிடம் தெரியுமா?. கவிஞரின் தம்பி விஸ்வநாதய்யரிடம். . இதைவிட அதிர்ச்சியான செய்தி அந்தக் கடன் திருப்பிச் செலுத்தபடாததால் உரிமை அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.
 அவர் பாரதி பிசுரலாயம் என்ற பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில் 1928ல் அன்றை அரசு பாரதி நூல்களுக்குத் தடை விதிக்கிறது. விற்பனையைப் பாதிக்கிறது. காங்கிரஸ்காரர்களின் போரட்டங்களுக்குபின் தடைவிலக்கப்படுகிறது. புத்தகங்கள் பரபரப்புடன் விற்க துவங்கின. இந்தக் கட்டத்தில் ஒரு குழுவினர் பாரதியின் படைப்புக:ள் ஏன் ஒரு தனிநபரிடம் இருக்க வேண்டும் அதை அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை முன்னெடுக்கின்றனர். அந்தக் கருத்தாக்கம் மெல்ல பாரதிக்கு விடுதலை என்ற அமைப்பாக உருவாகிறது. எழுத்தாளர்கள் மாநாடு, பாரதி மணிமண்டப விழா போன்ற மேடைகளில். விவாதிக்கபடுகிறது மக்களிடம் அந்தக் குழுவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.

இதே காலகட்டத்தில் எழுந்த ஒரு வழக்கு பாரதியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை அதிகப்படுத்தியது. பாரதியின் பாடல்களை இசைதட்டாக்கும் உரிமையை 1934 ஆம் ஆண்டு விஸ்வநாத அய்யர் ஒரு நிறுவனத்துக்கு விற்றிருந்தார். அவரிடம் சினிமா தயாரிப்பாளார் ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கியிருந்தார்
.
டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று பரவலாக அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப் படமாக்க முனைந்தபோது, பாரதியின் கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப் போல் - வெளியே, சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!’ எனும் பாடலைத் திரைப்படத்தில் இணைத்திருந்தார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார். தன்னிடம் இருக்கும் பாடல் உரிமையைப் பயன் படுத்தினால் இழப்பீடாக ஐம்பதாயிரம் தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பல ஆண்டுகளாகப் பாரதியின் பாடல்களைத் தன் நாடகத்தில் பயன்படுத்திக்கொண்டிருந்த டிகே சண்முகம் வழக்கை எதிர்கொள்ளத் தயாரானார். இந்தப் புத்தகத்தில் விவரிக்கபட்டிருக்கும் அந்த வழக்கில் ஏற்பட்ட ஒரு திருப்பம் பலர் அறியாதது.
ஒரு புறம் மக்களின் கிளர்சி மறுபுறம் ஒரு வழக்கு என்பதால் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது எடுத்த முடிவுதான் பாரதியின் படைப்புகளை நாட்டுடமையாக்குவது. எந்த முன் மாதிரியும் இல்லாத, உலகில் எந்த அரசும் செய்யாத விஷயம் ஒரு படைப்பாளியின் உரிமையை அரசு வாங்குவது என்பது நிகழ்ந்தது. பாரதியின் எழுத்துகள் அரசுடைமை ஆக்கப் பட்டதாக கல்வி அமைச்சர்  அவினாசிலிங்கம் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்தார்.

இதுவரை நிகழ்ந்தையும், மகாகவி பாரதியின் படைப்புகளைப் பொது வுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய நீண்ட கதையை அரசின் அறிவிப்புக்குப் பின்னரும் அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் 8 ஆண்டுகளுக்குப் பின்னரே !  பாரதியின் எழுத்துகள் அவன் விரும்பியபடி  தீப்பெட்டி, மண்ணெண்யை விட மலிவாகக் கிடைத்தது என்பதைச் சொல்லும் அரிய ஆவணம் இந்தப் புத்தகம்.



19/6/18

நிஜ நாயகன் நிழல் வில்லன்





இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையைச் சீரழித்த பெருமழை வெள்ளத்துக்கு சில நாட்களுக்குப் பின் நண்பர் ஒருவருக்கு ஒரு போன் அழைப்பு. “உங்கள் பகுதியிலிருந்து உதவி கேட்டு ஒர் கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் சென்று பார்த்து உண்மையாக இருந்தால் நீங்கள் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனம்மூலம் உதவுங்கள். ஆகும் செலவை நான் நன்கொடையாகத்தருகிறேன்.” நண்பருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி. காரணம் போனில் பேசியவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நானாபடேகர். நண்பருக்குச் சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஒரு ஷேர் டாக்சி பயணத்தில் கிடைத்த அறிமுகம் தொடர்ந்து நட்பாக மலர்ந்திருந்திருந்தது.
உதவியைக்கோரிய அந்த வேண்டுகோள் உண்மையானது என்பதால் நண்பரின் குழு அந்தப் பணியைச் செய்கிறது. செலவிடபட்ட கணிசமான பணத்தை விடக் கூடுதலாகவே தன் நன்கொடையை இந்த விஷயம் மீடியாவுக்கு போக வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அனுப்புகிறார் நானா படேகர்.
இந்திய சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் பலர் அவ்வப்போது தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன் வருவாயில் பெரும் பகுதியை(70%) எந்த ஆர்பாட்டமும் இல்லமல் நன்கொடையாக வழங்கிக்கொண்டிருப்பவர் நானா படேகர் மட்டும் தான்

எந்த இந்திய மொழிப் படமானாலும் ஹீரோவைவிட வலிமையானவராகப் படைக்கப்பட்ட வில்லனுடன் போராடி ஹீரோ ஜெயிக்கும் படங்களில் அந்த வில்லன் தன் நடிப்பால் மக்களின் மனதில் தனியிடம் பிடித்துவிடுவார். அவரது நெகட்டிவ் கேரக்டர் கொண்டாடப்படும் அளவுக்குப் பேசப்படும். படம் ஹிட்டாவதற்கு அவரும் ஒரு காரணமாக அமைந்துவிடுவார். ரசிகர்களால் போற்றப்படுவார்.
இன்றைய சூப்பர் ஹிட்டான ரஜனியின் “காலா” வில் வில்லானக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் நானாபடேகர் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். ஏராளமான பாலிவுட் படங்களில் ஹிரோவாக, வில்லனாக, மட்டுமில்லாமல் முக்கியப்பாத்திரங்களிலும் நடித்துத் தனியிடத்தைப்பிடித்து தக்க வைத்துகொண்டிருப்பவர்

“உணர்வுகளை வெறும் வசன்ங்களில் கொண்டுவர முடியாது. முக அசைவு, உடல்மொழியில் தான் அவற்றை வெளிகாட்டும் கலைஞதான் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்” என்று சொல்லும் நானா மராத்தி, இந்தி, கன்னடம், தமிழ் எனத் தனது நடிப்பின் எல்லயை உலகிற்கு புரிய வைத்து., இதுவரை 3 தேசிய விருதுகளையும் பல பிலிம் ஃபேர் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர்.
சினிமாவிற்காக நானாவான விஷ்வநாத் படேகர் கடந்து வந்தது மிகக்கடுமையான பாதை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திறந்தாலும் பள்ளிப்பருவம் அவருக்கு இனிமையானதாக அமைய வில்லை. தந்தையின் துணிவியாபாரத்தில் அவரது பார்ட்னர் ஏமாற்றியதால் ஒரே இரவில் ஏழையாகிப் போனது அவரது குடும்பம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே குடும்பத்துகாகப் பகுதி நேர வேலை செய்து பள்ளிக்குப் போனவர்.அப்போது செய்த வேலை சினிமா போஸ்டர் ஒட்டுவது. அதிலிருந்து எழுந்தது தான் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் வெறி எல்லாம். ஆனால் பாலிவுட் இவரை உடனே ஏற்க வில்லை. உயரம், கருப்புநிறம். முகம் எடுப்பாகயில்லை.ஹிந்தி உச்சரிப்பில் அதிக மாராட்டிய வாசனை போன்ற பல காரணங்கள் சொல்லி நிராகரிக்கப் பட்டவர். பின்னாளில். இது அனைத்துமே இவரது தனித்துவமாகப் பாரட்டப்பட்டது வேறு விஷயம்
.
தனக்குப் பிடித்த ஒவியத்தில் பட்டம் பெற ஜே ஜே காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்தார். ஆனால் தொடர்ந்து படிக்கப் பணமில்லை.மாரத்தி நாடகங்களில் நடித்துக்கொண்டே
சினிமா வாய்ப்புடன் வேலையையும் தேடிக்கொண்டிருந்தார். உனக்கு என்ன தெரியும்? எனக் கேட்டவரிடம் தன் ஓவியத்திறமை நம்பி ““பெயின்ட்டர்” (டிராயிங் ஆர்டிஸ்ட் என்று சொல்லதெரியாதால்) என்ற சொன்னவருக்குக் கிடைத்த வேலை ரோடுகளில் மக்கள் கடக்கும் போடுகளை பெயிண்டால் போடும் வேலை.
70களின் பிற்பகுதியில் நானா படேகர் தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பில் தன் திறமையை நிருபித்ததால் கிடைத்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு பாலிவுட்டில் தன் இடத்தைப் பிடிக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். முதன் முதலாக வில்லன் மற்றும் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கலாம் என்ற ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் நானா படேகர்.
.
அதிக அளவில் பணமும் புகழும் சேர்ந்தாலும் மிக எளிமையான வாழ்க்கைமேற்கொண்டவர். கோடிகளில் சம்பாதித்தாலும் தன் அம்மாவுடன் ஒரு சிங்கள் பெட் ரூம் பிளாட்டில் வசிப்பவர். தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும் மறக்காமல் கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர். அவ்வப்போது பலருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த இந்த மனிதரின் இந்தக் கருணை முகம் பெரிய அளவில் வெளிப்பட்டது சில வருடங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பெரும் வறட்சியை சந்தித்தபோது தான். விவசாயம் பொய்க்கவே ஏரளமான விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டபோது தான். நானாப்டேகர் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்த அதிர்ந்து போனார். உடனடியாகத் தன் சொந்தப்பணத்திலிருந்து இறந்த 62 விவசாயிகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 15000 ரூபாய் அன்றே கொடுத்தார்.


"தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால் உடனே என்னை அழையுங்கள்.... உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்...... உயிரை மட்டும் விட்டு விடாதீர்கள்...... நீங்கள் தான் இந்த நாட்டின் சொத்து"
விவசாயிகளுக்கு மத்தியில் அன்று பேசிய நானா படேகர் கூறிய வார்த்தைகள் இவை. இதை வெறும் மேடைப்பேச்சாக இல்லாமல் இதற்கான பணிகளைத் தொடர்ந்து இதைச் சிறப்பாகசெய்ய “ நாம் என்ற அமைப்பை உருவாக்கி நன்கொடைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
துவக்க நாளிலே கிடைத்த பணம் 80 லட்சம். சில நாட்களில் சில கோடிகளைத்தொட்டது. இன்று அந்த அறக்கட்டளை கிராமங்களில் விவசாயிகளுக்கு வேலை, குளங்கள் தூர் வாருதல் போன்ற பல சமூகப்பணிகளை சிறப்பாகச் செய்கிறது. பல நேரங்களில் நானாவே நேரடியாகக் கிராம சபை கூட்டங்களில் குறைகள் கேட்டு உதவிகளைத் திட்டமிடுகிறார்
.
விவசாயிகளுக்கு உதவுவது மட்டுமில்லாமல் விதவைகளின் மறுவாழ்வில் கவனம் செலுத்துகிறார். இன்று மஹராஷ்டிர கிராமங்களில் அரசியல் வாதிகளைவிட பிரபலமான இவர் ஒரு கட்சி துவங்கி அரசியிலுக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி. ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை என்கிறார்.
தான் செய்யும் எந்தப்பணியையும் அரப்பணிப்புடன் செய்பவர். நானா படேகர். அவரே எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ப்ரஹார். இதில் நானா ஒரு ராணுவ வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடிப்பதற்கென்றே இரண்டு ஆண்டுகள்வரை உண்மையாகவே ராணுவப் பயிற்சி எடுத்தார். இந்திய ராணுவத்தை சிறப்பாகக் காட்ட இப்படி இவர் செய்த நல்ல பணிக்காக இந்திய ராணுவத்தின் கெளரவ கேப்டன் ரேங்க் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சினிமாத்துறையைச் சாரத நணபர்கள் பலர் இவருக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள்மூலம் பலருக்கு சத்தம் இல்லாமல் நிதியுதவிகளைச் செய்து வரும் நானா படேகர், இதுகுறித்து தனது பேட்டிகளில் கூடப் பதிலளிக்க மறுத்துவிடுவார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மனதில் பட்டதை பட்டென்று வெளிப்படையாகப் பேசும் இவர் அதனால் கோபக்காரர் என்ற பெயரையும் பெற்றவர். அரசியல் வாதிகளையும், சிவ சேனா போன்ற அமைப்புகளையும் கூடக் கடுமையாக விமர்சனம் செய்தவர். பாஜகா பிரமுகர்கள் இருந்த கூட்டத்திலேயே நம் நாட்டில் ஜனநாயகம் வளர்ந்திருப்பதிற்பதற்கு காங்கிரஸ் காரணம் என்று சொன்னவர்.
993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்செய் தத்திற்கு சர்ச்சைக்குரிய முறையில் பரோல் வழங்கப்பட்டபோது இம்மாதிரி செய்வது தவறு என்று துணிந்து சொன்ன ஒரே நடிகர் இவர்தான்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அனைவரும் வரவேற்றபோது, "ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது... அவரின் குணத்திற்கு அரசியல் அவர் புகழை இழக்க வைத்து விடும்" என்று சொன்னவர் நானா படேகர். காலாவில் வில்லன் ரோலை ஏற்க தயங்கிய அவரை ரஜினி சந்தித்து ஊக்குவித்து அதை ஏற்க செய்த நேரம் அது.

எழுத்தாளர், இயக்குனர், கவிஞர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என்று பன்முகம் கொண்ட கலைஞர் நானா படேகர். மொழி என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு தன் பயணத்தைத் தொடங்கிநடிகன் என்ற இடத்திலிருந்து நல்ல மனிதன் என்ற பெயருடன் மக்கள் மனங்களில் அமர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் எட்டியதில்லை
.
படத்தில் ஹீரோவாக வாழும் பலர் நிஜவாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் பல படங்களில்,வில்லனாகவே முன்னிறுத்தபட்டிருக்கும் நானா படேகர் நிஜத்தில் ஹீரோவாகவே பல குடும்பங்களைக் காப்பற்றி வருவது ஒர் ஆச்சரியமான உண்மை




12/6/18

சோழனைக் காப்பாற்றிய வேல்

10 நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழனின் திறன்மிகு கட்டிட கலைக்குச் சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில் அந்நியர் படையெடுப்பு, இயற்கை பேரிடர்கள், அண்மைகால அரசியல் வாதிகளின் “அரசியல்”, போன்ற பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் சாட்சியாகக் கம்பீரமாக நிற்கும் இந்தத் தஞ்சை பெரிய கோவில் அண்மையில் சந்திருக்கும் ஆச்சரியம் அங்கிருந்து மாயமாக மறைந்த மன்னர் ராஜராஜன், மற்றும் அரயின் ஐம்பொன் சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் நிறுவபட இருப்பது தான்.


பல தமிழக கோவில்களில் அது உருவாகக் காரணமான மன்னர் பரம்பரையினர், எழுப்பிய சிற்பிகள் போன்ற விபரங்களைப் பார்க்க முடியாது. மாறாகத் தஞ்சைப் பெரிய கோவிலில் அதைத் திட்டமிட்ட பொறியாளார். தலமைச் சிற்பி, பலதுறைகளில் உதவியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகக்  கோவிலிலேயே இருக்கிறது.

உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் எனப்படும் பெருவுடையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், அந்தக் கோயில் அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்த வேளாண் என்பவரால், ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவியார் ஆகியோருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டு இருந்தன.ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார்அதிகாரி. இந்தக் தகவல்களை அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயி லின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு சொல்லுகிறது.

எப்போது இந்தச் சிலைகள் காணமல் போனது தெரிந்தது.?

ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து கடத்தப்பட்டு புதிய சிலை ஒன்றை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள். கடத்தப்பட்டது ராஜ ராஜன் சிலை கூட என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள்.

.எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜராஜன் சிலைக்குக் காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காகப் பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையைக் கிளப்பினார் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன். அப்ப்போது தெரிந்த விஷயம் தான் ஒரிஜனல் ராஜராஜனும் ராணியும் காணாமல் போய்விட்டார்கள் என்ற விஷயம். இப்போது கிடைத்திருக்கும் ஆவணங்களின் படி இந்த ஐம்பொன் சிலைகள் தான் 50 ஆண்டுகளிக்கு முன்னரே காணமல் போயிருக்கிறது



அரசனும் அரசியும் எங்கே போனார்கள்?

அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்ட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகளில் இந்த ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் இருக்கிறது என்ற செய்தி கசிந்தது. அது உண்மையானதுதானா என்ற விவாதமும் எழுந்தது. அந்த நிலையில் டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், அவர் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள்குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தினார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள்பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் - லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் முனைவர் தொல்ப்ருள் அறிஞர் நாகஸ்வாமி

மீட்கும் முயற்சிகள்



இருக்குமிடம் தெரிந்து விட்டதால் ராஜராஜனை மீட்டுவர அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் பிரதமர் இந்திரா மூலம் முயற்சி எடுத்தார். ஆனாலும்  சொல்லதக்க முன்னேற்றம் எதுவுமில்லை

.

தொடர்ந்து இந்தச் சிலைகளை மீட்க திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் நாகசாமி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் முதல்வர் இருந்த நரேந்திர மோடியும் ராஜராஜன் சிலையைத் தமிழகத் துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டினர். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அருங்காட்சியம் அசைய வில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி தர மறுத்துவிட்டது.

ஆச்ரியப்படுத்திய ஒர் ஆவணம்

.

அவர்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது ஒரு முக்கியமான காரணம் இது ராஜராஜனின் சிலை என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது தான். அதற்கு அவர்களிடமிருக்கும் வலுவான சாட்சியம். அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் சிலைகளுக்கென்று அவற்றின் வரலாற்றைச் சொல்லும் கேட்லாக். அதில் அது ராஜாராஜின் சிலை இல்லை என்று பதிவு செய்யபட்டிருந்தது.தான். ஒரு தனியார் கேட்லாக்கில் சொல்லபட்டிருப்பதால் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இங்குதான் எழுந்தது ஒர் அதிர்சியான ஆச்சரியம். ஒரு சர்வ தேச் கூட்டத்தில் வாசித்தளித்த ஒரு பேப்பரில் அந்தச் சிலை ராஜராஜன் தான் என்று சொன்ன திரு நாகஸ்வாமி தான் அந்தக் கேட்லாக்கை தயாரித்தவர். ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? என்பது இன்றுவரை புரியா மர்மங்களில் ஒன்று. தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்றுநிருபிக்கபட்டால் மட்டுமே சிலையைத் தர முடியும் என்று சொல்லிவிட்டனர். ஏமாற்றத்துடன் திரும்பியது குழு

.

கால வெள்ளத்தில் மக்களும் அரசும் மறந்துபோன் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகக் கரைந்து போயிற்று. மன்னர் ராஜராஜன் தன் மனைவியுடன் அந்த ஆருங்காட்சியகதிடின் கண்ணாடிச் சிறைக்குள்ளேயே காலத்தைக் கழித்துகொண்டிருந்தார்.

கைகொடுக்காத தீர்ப்பு

இந்த நிலையில் தான்,தமிழக இந்து சமய அற நிலையத்துறை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில்ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அன்றைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன். மனுவை விசாரித்தனர். இறுதியில் நீதிபதிகள், ‘‘விலை மதிக்க முடியாத பழங்கால சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டு கொண்டு வருவது தமிழக அரசின் கடமை நீதிமன்றம் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு உத்திரவிட முடியாது.மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி இந்தக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். என்று  மனுவைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

.தமிழக அரசு நீதிமன்ற ஆணைப்படி காணமல்போனாதாக்ச்சொல்லப்படும் சிலைகளைக் கண்டுபிடிக்க தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு உத்திரவிட்ட்து., அவர் அப்பிரிவின் டிஎஸ்பி வெங்கட்ராமனை முதல் கட்ட விசாரணை நடத்த நியமித்தார். அதன்படி, டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், அண்மையில் பெரிய கோயிலில் நடத்திய ரகசிய விசாரணையில், இரண்டு சிலைகளும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனால், பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டதாகக் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 68 சிலைகள் பெரும்பாலானவை இங்கு இல்லாமல் போனதும், பல முறைகேடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இந்தச்சிலைகளை கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாகச் சென்னைக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கௌதம் சாராபாய் என்பவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்கப்பட்டது தெரியவந்தது.

அதிரடி  மீட்பு

உடனே செயலில் இறங்கினார் பொன்மாணிக்கவேல். கிராமங்களுக்குத் தானே நேரில் சென்று இந்தச்சிலைகளை நேரில் பார்த்தவர்களை தேடினார். இரண்டு 80 பிளஸ் பெரியவர்கள் கோவிலில் சிலைகளைப் பார்த்தவர். அவர்களில் ஒருவர் கோவில் பணியா

ற்றியவர். கல்வெட்டுகளில பழந்தமிழர் கணக்குமுறையில் சொல்லப்ட்ட உயர, பீடங்களின் அளவுகளை இன்றைய சென்டிமீட்டரில் கணக்கிட்டபோது அது சிலைகளின் அளவோடு பொருந்திப் போயிருந்தது.

கோவிலில் இருந்தது, திருடபட்டது, விற்கபட்டது, கல்வெட்டு சொல்லும் விபரங்களுடனும் தன் டீமுடனும் அஹமதாபாத் பறந்த ஐஜி அருங்காட்சிய அதிகாரிகளிடம் இந்த விபரங்களுக்குபின்னர்சிலை திருப்பித் தரப்படவிட்டால் தமிழக அரசுக்குச் சொந்தமான அவற்றை பறிமுதல் செய்வேன் என்றார். அதிர்ந்துபோன அருங்காட்சியகத்தினர் சிலைகளை கொடுக்கச் சம்மதித்தினர். உடனே அவைகளை

தம்முடன் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு வந்தார். இவர் ரயில் பாதுகாப்பு ஐஜியாகவும் இருந்த்தால் வழக்கமான தாமதங்கள் அனைத்தும் தவிர்க்கப் பட்டன. தமிழகத்துக்கு கொண்டுவந்துவிட்டார். சென்னையில் மேள்தாளத்துடன் வரவேற்கபட்டசோழ மன்னரைச் சிதம்பரம் கோவிலில் பூஜித்தபின்னர் கும்பகோணம் கொண்டு வந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இந்த 2 சிலைகளையும் தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டிருக்கிறது, நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பெருவுடையார் இனி தஞ்சை மாவட்டத்திலே பஞ்சம் நீக்கி அருள்பாலிப்பார் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொல்வது “இனி காவிரியில் தண்ணீர் வந்துவிடும்”

இந்தச் சிலைகள் மீட்பை உலகின் பல பகுதிகளிலிருக்கு தமிழ் ஆர்வல்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

துணிவுடன் அதிரடி முடிவுகளை எடுத்து அதை செம்மையாகச் செயலபடுத்தும் பொன்மாணிக்கம் போன்ற அதிகாரிகளைத் தமிழகம் பெற்றிருப்பதற்காகப் பெருமயை அடைந்தாலும், தாங்கள் பதுகாக்கவேண்டிய அரிய  செல்வங்களை காசுக்காக  விற்ற அதிகாரிகளை நினைத்து வருத்தமும் வேதனையும் எழுவதைத் தவிர்க்க இயலவில்ல.



_______





தெய்வங்களைக் காக்க நீதி மன்றம் நியமித்த காவலர்

தூங்கிக்கொண்டிருக்கும் சில அரசுத்துறைகள் தலமை அதிகாரிகளின் மாற்றத்தால் சட்டென்று விழித்துக்கொண்டு பபரபுடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும். அப்படியான ஒன்றுதான் தமிழகப்போலீசின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் நடந்துகொண்டிருக்கிறது. வேறுபல மாநிலங்களில் இல்லாத இந்தப் பிரிவின் தலமைப் பதவி ஆளுவோரால் ஓரங்கட்டபட்ட அதிகாரிகளுக்காக ஒதுக்கபட்டது. திரு பொன்மாணிக்க வேல் தன் திறமையான, கண்டிப்பான அதிகாரியாகப் பெயர் எடுத்தவர், படிப்படியாக உயர்ந்து ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற இவருக்குத் தரப்பட்ட போஸ்டிங் சிலகடத்தல் தடுப்பு பிரிவின் தலமை
.
செய்யும் தொழிலைத் தெய்வமாக நேசித்துச் செய்யும் பொன் மாணிக்க வேல் பதவி ஏற்றுக்கொண்டவுடனேயே தூசி படிந்து தூங்கிக்கொண்டிருந்த பைல்களை தேடி ஆராய ஆரம்பித்தார். . இவர் தலைமையிலான டீம், தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது. சிலைக்கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இதுவரை இந்தத்துறை இவ்வளவு வேகமாக இயங்கியதில்லை
.
சென்னையில் தீனதயாளன் என்ற முதியவர் சர்வ தேச கடத்தல் மன்னன் கபூருக்கு உதவியர் என்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழக போலீஸ் பொன்.மாணிக்கவேலை ரயில்வே ஐ.ஜி-யாக மாற்றியது தமிழக அரசு. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘சிலைக்கடத்தல் தொடர்பான 19 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார். பிற வழக்குகளைச் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கும்’ என்று டிஜிபி உத்திரவிட்டிருப்பதாகச் சொன்னவுடன் நீதிபதி மிக் கோபமாக
நீதி மன்றம் 531 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எதன் அடிப்படையில் 19 வழக்குகளை மட்டும் அவர் விசாரிப்பதற்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்தார்? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கபட்டார்
.
இது இவர்மீது நீதி மன்றம் வைத்துள்ள நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காட்டுகிறது. அண்மையில் இவர் வெளிக்கொண்டுவந்த பழனி ஆண்டவர் கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் கைது செய்யபட்ட அரசியல் பின்புலம் கொண்ட ஒரு முன்னாள் அறநிலைத்துறை துணை ஆணயர் ஜாமின் மனு வழக்கில் தானே நேரில் ஆஜாராகி ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது? என்று நீதிபதியிடம் விளக்கினார்.
(புதிய தலைமுறையில் எழுதியது)

6/6/18

பழையகோவிலில் புதிய கடவுள்



அஹமதாபாத் நகரில் பிரமாண்டமான கோவிலைத் தலமையகமாக்கொண்டு இயங்கும் ஸ்வாமி நாரயாயணன் ஸன்ஸ்தான் என்ற அமைப்பு உலகின் பல நகரங்களில் ஸ்வாமி நாராயணன் கோவில்களை நிறுவி வருபவர்கள். இந்தக் கோவில்கள் அஹமதாபாத்திலும், டில்லியிலும் இருப்பதைப் போன்ற அக்ஷரதாம் ஒவ்வொரு நாட்டிலும்  மிக அழகாக வெளிர் ஆராஞ்ச் வண்ணத்தில் இந்திய சிற்ப, கட்டிட கலை மிளர அமைக்கபட்டிருக்கும்
.
ஓவ்வொரு இடத்திலும் செல்வச் செழுமையை பறை சாற்றும் இந்தக் கோவில்கள் முழுவதும் பிரமாண்ட சாண்டிலியர்கள், தானியங்கி கதவுகள், சன்னதியில் நீங்கள் நிற்கும் நேரம் மட்டும் தானே ஒலிக்கும் பிரார்த்தனை, லேசர் ஷோ, இசை நீருற்று என அமர்களபடுத்துவார்கள்.
இந்தியக்கோவில்களில் இரு புறமும் ஒலி ஒளி காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் முதல் குருவின் வாழ்க்கை கதையைப் பார்க்க அமைக்கபட்டிருக்கும் செயற்கை கால்வாயில் திரிலிங்கான படகுப் பயண வசதியும் இருக்கும். 3D  சினிமாக்கூட உண்டு 
.
இவர்கள் அமெரிக்காவில் ஏற்கனவே இதுபோல இருக்கும் கோவில்களைத் தொடர்ந்து இப்போது மேலும் சில புதிய கோவில்களை உருவாக்கிவருகிறார்கள் என்ற செய்தியில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இவர்கள் அங்குள்ள பழைய சர்ச்களை வாங்கி அதைப் புதுப்பித்து ஸ்வாமிநாரயாணன் கோவில்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம்.
கலிபோர்னியா, கென்டகி மாநிலங்களில் உள்ள இரண்டு நகரங்களில் சர்ச்களில் ஸ்வாமி நாரயணனைக்குடியமர்தியிருப்பதைப் போல அண்மையில் அமெரிக்காவின் டெலவேர் என்ற மாநிலத்தில் பேர் (bear) என்ற நகரில் ஒரு 50 ஆண்டு பழமையான சரச்சை வாங்கி வினாயகரை பிரதிஷ்டை செய்து கணபதி பூஜையுடன் கடந்த ஆண்டு புதுபிக்கும் பணியைத் துவக்கி இபோது முடித்திருக்கிறார்கள். இதற்கான கோபுர முகப்புகளும் விதானங்களும் இந்தியாவில் செய்து அனுப்பபட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பயணம் செய்த இந்த அமைப்பின் தலைவர் புருஷோத்மபிரியதாஸ் ஸ்வாமிகள் அமெரிக்காவில் பல நகரங்களிலும் ஸ்வாமி நாரயாண கோவில் அமைக்க ஆர்வம் கொள்ள வேண்டும் எனப் பக்கதர்களை கேட்டுகொண்டதின் விளைவாக முனைப்புடன் செயல்பட்ட பக்தர்கள் கண்டுபிடித்த விஷயம், பெரிய வழிபாட்டுக் கூடம் பலர் சாப்பிடும் வசதியுடன் இருக்கும் சமயலறையுடன் இருக்கும் இந்த சர்ச் விற்பனைக்கு வருகிறது என்பது தான்.

யேசு நாதர் வாழ்ந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை அதை ஸ்வாமி நாராயணன் கோவிலாக மாற்ற ஆட்சேபணை இல்லையென இந்திய தலமை சொல்லிவிட மளமளவென எழுந்துவிட்டது கோவில்
இதுவரை செலவழித்திருப்பது 14 லட்சம் டாலர்கள். டெலவேர் மாநிலம் அமெரிக்காவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்று.  அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட முதல் மாநிலம் என்பதால் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் மாநிலம். டெலவேரில் 800 இந்தியர்களே இருந்தாலும் நியூஜெர்ஸி, மெரிலான்ட், பென்ஸ்லிவேனியா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து இது ஒரு மணி நேரப்பயணம் என்பதால் அந்த பகுதிகளில் வாழும் அதிகமான இந்தியர்களிடையே பிரபலமாகிக்கொண்டிருக்கும் கோவில் இது.


மிகப்பெரிய நிலப்பரப்பை வாங்கி அதில் பிரமாண்டமாகக் கோவில்களை எழுப்பும் இவர்கள் இப்படி சர்ச்களை வாங்கி புதுபித்து இந்து கோவில்களாக மாற்றுவதற்கு காரணம் அமெரிக்க வழிபாட்டு தலங்களின் விதிகள் என்கிறார்கள். அமெரிக்காவில் எந்த மத்தினர் கோவில் போன்ற வழிபட்டுதலங்கள் அமைக்க அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டும். எந்தக்கோவிலாக இருந்தாலும் சர்ச் என்ற பெயரில் தான் அனுமதி வழங்கப்படும். சில மாநிலங்களில் இப்போது புதிய வழிபாட்டுதலங்களுக்கு அனுமதியில்லை. அதனால் சர்ச் அனுமதியிள்ள கட்டிட்டத்தை வாங்கி புதிப்பது என்ற அணுகு முறையை இவர்கள் கையாளுகிறார்கள்.

சரி ஏன் சர்ச்சுகளை அதுவும் 50 அல்லது 80 ஆண்டுகள் பழமையான சர்ச்களை விற்கிறார்கள்? சர்ச்களை விற்க முடியுமா?

அமெரிக்காவில் பல மாநிலங்களில் பல சர்ச்கள் எந்தவித கூட்டமைப்பின் கீழ் இல்லாமல் தனிச்சையாக இயங்கும் அதிகாரம் பெற்றவை. அந்த சர்ச்சும் அது சார்ந்த இடங்களுக்கும் அதன் தலைமைப் பாதிரியார் தலமையில் இயங்கும் குழுவினர்தான் உரிமையாளர்கள்.
அதிக அளவில் பிரார்த்தனை கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. வருபவர்களுக்கு இவ்வளவு பெரிய இடம் அவசியமில்லை என்றும் உயர்ந்துவரும் இன்றைய நில மதிப்பினால் கிடைக்கும் பெரும் தொகையை அவர்களது கல்வி சமூகப்பணிகளுக்கு செலவிட முடியும் என்றும் காரணங்கள் சொல்லபடுகிறது. சமூக பணிகளுக்குச்செலவிட்டால் வரிவிலக்குகளும் இருக்கின்றன. என்ற காரணமும் சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகச் சர்ச்களுக்கு தனியார் கொடுத்துவரும் நன்கொடைகள் குறைந்து கொண்டே வருகிறது முன்போல் சர்ச் திருமணங்கள் என்பது இப்போதில்லை. பெரிய அளவில் இருக்கும் சர்ச்களை பராமரிக்க அதிகம் செலவாகிறது என்பதும் ஒரு காரணம் 80 சதவீத  அமெரிக்கர்கள் கடவுளை நம்புபவர்களாக இருந்தாலும் வார இறுதி விடுமுறை நாளை சர்ச்சில் கழிக்க விரும்புவதில்லி. 
.

சில ஆண்டுகளுக்கு முன் நியார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் சாலை சீரமைப்பு பகுதிக்காகப் பல தனியார் கட்டிடங்களை நகர நிர்வாகவம் வாங்கியதில் அந்ததெருருவிலிருந்த ஒரு பழைய சர்ச்சையும் வாங்கினார்கள்.  அதற்கு நகர நிர்வாகம் தந்த விலை பல பழைய சர்ச் நிர்வாகங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
இப்போது அமெரிக்காவின் பல நகரங்களில் பழைய சர்ச்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோல்ட் வெல் என்ற பிரபல அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் பழைய சர்ச்கள் விற்பனைக்கென்றே ஒரு தனி இணைய தளத்தைத்துவங்கி சர்ச்சின் படங்களுடன் விளம்பரபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது பல மில்லியன் டாலர் பிஸினஸ் என்பதால் வேறுசில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.




அதனால் இந்துக் கோவில்கள் தவிர தனிப்பட்டமுறையில் ஆசிரமங்கள் நடத்தும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் அமைப்பினர்களும் இந்த சர்ச்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அமெரிக்க மக்களிடம் இந்த சர்ச் விற்பனைகளுக்கு மத ரீதியாகக் கூட எந்த எதிர்ப்பும் எழவில்லை. சொத்தின் உரிமையாளார்கள் அதை விற்கிறார்கள். என்ற ரீதியில் தான் பார்க்கிறார்கள். சர்ச்களை ச்ர்ச்சையில்லாமல் விற்றுகொண்டிருக்கிறார்கள்
 தீவிர மதபக்தியுள்ளவர்களில் சிலர் மட்டும் ஏற்கனவே சர்ச் வழிபாடுகள் குறைந்து வரும் இன்றைய நிலையில் இம்மாதிரி விற்பனைகள் இளைஞர்களுக்கு சர்ச்களை விட்டு விலகும் எண்ணத்தை அதிகரிக்கும் என சில நாளிதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
.
ஸ்வாமி நாரயணன் கோவில் நிர்வாகம் அமெரிக்காவில் மட்டுமில்லை இங்கிலாந்திலும் இரண்டு நகரங்களில் சர்ச்களை வாங்கி கோவில்களை நிறுவியிருக்கிறார்கள் என்ற செய்தி ஐரோப்பவிலும் மெல்ல இந்த பழைய சர்ச்களின் விற்பனை ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது
.
முன்பு இங்கு இருந்தது  யாராகயிருந்தால் என்ன? உலகெங்கும் நிறைந்திருக்கும் எங்கள் கடவுள் இப்போது இங்கு இருக்கிறார் என்பதைச்சொல்ல சர்ச்சாக இருந்த கட்டிடங்களையும்  ஏற்று  இந்து மதத்தின் பெருந்தன்மையை உலகிற்கு காட்டியிருக்கிறார்கள் ஸ்வாமி நாரயாயணன் ஸன்ஸ்தான்.

30/5/18

கடவுளின் வீடு



அது அழகான இடம் அவசியம் பார்க்கவேண்டிய ஒர் இடம். தவறவிடாதீர்கள். அந்தப் பயணத்தையும், இடத்தையும் வாழ்நாளில் மறக்கமாட்டீர்கள் என்றார் நண்பர். அங்குள்ள இயற்கையின் எழிலில் மயங்கி அவர் ஒவ்வொரு ஆண்டும் அங்குச் சென்று ஓய்வெடுப்பதையும் சொல்லி ஆவலை அதிகப்படுத்தினார். அவர் சொன்ன இடம் விசாகபட்டினத்திலிருந்து 120 கீமி தொலைவிலிருக்கும் அரக்கு பள்ளதாக்கு.

ஆந்திர-ஒடிஸா எல்லைப்பகுதியிலிருக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் இந்த அரக்கு வேலி என்றழைக்கப்படும் பள்ளதாக்கு. ஆந்திர மாநிலத்துக்கு இயற்கை அளித்திருக்கும் கொடையான இந்த அழகான பள்ளதாக்குக்கு ரயிலில் சென்று மறுநாள் பஸ்ஸில் திரும்ப ஆந்திர மாநில சுற்றுலாத்துறை. ஒர் இரவு தங்க, உணவு வசதிகளுடன் பேக்கேஜ் டிக்கெட் தருகிறார்கள்
.
பல காலமாக இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு பகல் நேர பாஸன்ஞ்சர் தொடர் வண்டியில் கடந்த ஆண்டு ஒரு ஏசி சேர் காரை இணைதிருக்கிறார்கள் இது அழகான இயற்கை சூழலை ரசித்துப் பார்த்துக்கொண்டேசெல்லவதற்கென்றே வசதியாக அமைக்கப் பட்ட பெட்டி. இருபுறமும் பளிச்சென்று தெரியும் வெளிப்புற காட்சிகளைப் பார்க்க பெரிய கண்ணாடி ஜன்னல்கள். வசதியாகத் திருப்பிக்கொள்ளும் சீட்டுகள். கண்ணாடி ஜன்னல்களுடன் கூடிய மேற்கூரை. பிரமாதமாக இருக்கிறது
.
நண்பர் சொன்னது மிகச்சரியான வார்த்தைகள் என்பதை தொடர் வண்டி புறப்பட்ட ஒன்றை மணியில் உணர்கிறோம். 13400 மீட்டர் உயர மலைப்பகுதிக்கு மெல்ல ஏறுகிறது. இரண்டு புறமும் பசுமை அடர்ந்த காடு, தொலைவில் கருநீலவண்ணத்தில் மலைச்சிகரங்கள். அதைத்தொட்டுச் செல்லும் மேக கூட்டங்கள் சட்டென்று காட்சி தரும் அருவிகள். சில இடங்களில் மெல்லிய தூறல் என அற்புதமான காட்சிகள். கண்ணாடி மேற்கூரையில் வானமும் நமது தொடர் வண்டியைப் பார்த்துக்கொண்டு செல்லும் பறவைகளும் கூட அவ்வப்போது தெரிகிறது.வண்டியினுளிருக்கும் டிவி திரையிலிருந்து எழும் மெல்லிய இசை சுழலுக்கு மேலும் இதம் சேர்க்கிறது.

மலைப்பகுதியில் பயணிக்கும்போது இடது புறம் பசமையான பள்ளதாக்கும் வலது புறம் சிறிதும் பெரிதுமாக அருவிகளும் நம்மை அசத்துகின்றன. 5 மணி நேரத்தில் 58 குகைகளையும் 84 பாலங்களையும் கடக்கிறது. தொடர் வண்டி. சில குகைகள் மிகப் பெரிது. இருள் சூழுவதால் குகைகளுக்குள் நுழைந்தவுடன் வண்டியின் உள்ளே விளக்குகள் எரிகிறது அந்தக் குகையின் நீளம் உயரம் பற்றிய விபரங்கள் ஒலிபெருக்கியில் கேட்கிறது. சில இடங்களில் தொடர் வண்டிகீழ் நோக்கிசென்று பின்னர் மேலேஏறுகிறது. இந்தக் குகைகள் பாலங்கள் தவிர பள்ளதாக்கின் கணவாய்களிலும் செல்லுகிறது எனப் புரிந்துகொள்கிறோம். சில இடங்களைக் கடக்கும் போது இந்த ரயில் பாதை குகைகளைச் சில திரைப்படங்களில் சண்டை கட்சிகளில் பார்த்த நினைவு வருகிறது
பல இன்னல்களுக்கடையே பல ஆயிரக்காணக்கான மனிதர்கள் கடும் உழைப்பில் பாலங்களும், குகைகளுமாக உருவாகியிருக்கும் இந்தத் தொடர் வண்டிப்பாதை உருவானதற்கு காரணம். சட்டிஸ்கர் மாநில நிலக்கரி சுரங்களிலிருந்து நிலக்கரி மற்றும் தாதுக்களை நேரடியாக விசாகபட்டணம் ஏற்றுமதிக்காகத் துறைமுகத்துக்கு கொண்டுவரவும் விசாகப் பட்டின உருக்காலையில் பயன்படுத்தபடுவதற்கும் தான்.
இன்றும் அந்தப்பணி தொடரும் நிலையில், ஆந்திர சுற்றுலாத்துறையில் யாரோ ஒரு புண்னியவானுக்கு, இந்தப்பாதையில் செல்லும் ஒரு பாஸஞ்சர் வண்டியில் இப்படியொரு கோச்சை அமைத்து டூரிஸ்ட்களை கவரும் யோசனை பிறந்து அது செயலாக்கவும் பட்டிருப்பது நமது அதிர்ஷ்டமே
.
சிடம்பள்ளி என்ற இடத்தில் நீண்ட குகையைக்கடக்கும்போது குகையின் முடிவில் வரும் அருவியைக் காணத்தவறாதீர்கள் என்ற அறிவிப்பு கேட்கிறது. காத்திருக்கிறோம். மெல்ல வளைவில் செல்லும் தொடர் வண்டி அந்த அருவியில் சற்று நனையுமளவுக்கு அருகில் அந்த அருவி. கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்ப்பதால் அருவியின் ஓசையக் கேட்க முடியவில்லையென்றாலும் உணர்கிறோம்
.
போரா குலாவு (BORRAGUHALU) என்ற நிலையத்தில் நிற்கும் வண்டியிலிருந்து இறங்கி போரா குகைகளைப் பார்க்கச் சுற்றுலா பேருந்தில் பயணிக்கிறோம். ஒடிசா மொழியில் போரா என்றால் பெரிய துளை என்றும் குலாவு என்றால் குகை என்றும் பொருள்.
ஒரு பெரிய மலையின் உச்சிப்பகுதிக்கு ஏறிப் பின் அங்கிருக்கும் ஒரு பெரிய வாசலின் வழியே கிழே இறங்கி அந்தக் குகைகளைப் பார்க்க வேண்டும்.
அந்தக் குகையின் உட்புறம் முழுவதும் மேலிருந்து உருகி வழிந்து உறைந்தது போல விழுதுகளாகவும் பல வடிவங்களில் பிம்பங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது
.
மிகப்பெரிய அளவில் பரந்திருக்கும் அந்தக் குகையின் உள்ளே வெவ்வறு உயரங்களிலிருக்கும் இயற்கையாகப் படந்திருக்கும் இவைகளின் மீது பல வண்ணங்களில் எல்இடி விளக்கு ஓளிகளைப்பாய்ச்சி காட்டுகிறார்கள். ஒரிடத்தில் கிட்டதட்ட லிங்க வடிவிலிருக்கும் பாறையில் அண்மையில் பூஜித்து வழிபட்ட அடையாளங்கள்

சுண்ணாம்புக்கற்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் இப்படி இயற்கை குகைகள் இருக்கும். அப்படிப்பட்ட குகைகளில் நீரில் இருக்கும் ஹூமிக்(HUMIC) அமிலத்தினால். சுண்ணாம்புக்கற்களுக்குள் இருக்கும் உப்புப்படிவங்கள் கரைந்து உள்நோக்கி செல்வதனால் இப்படிப்பட்ட குகைகள் உருவாகின்றன.  சில் இடங்களில் நீர் கசிந்து கொண்டிருக்கிறது.  இப்படி உருவான இந்தக் குகையை 1807 வில்லியம் கிஞ் ஜார்ஜ் என்ற ஆங்கிலேயே சர்வேயர் கண்டுபிடித்துபதிவுசெய்திருக்கிறார் என்கிறது பூவியல் சரித்திரம்.
 இந்தக்குகைகளின் வயது 15கோடி வருடங்கள். இங்கு 15000 ஆண்டுகளுக்கு மனிதன் வசித்தற்கான அடையாளங்களை ஆந்திர பலகலைகழக ஆராய்ச்சி கண்டுபிடித்திருப்பதைச்சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது சுற்றுலாத்துறையின் தகவல் பலகை.

ஆனால் உள்ளூர் பழங்குடி கைடு சொன்ன கதை சுவாரஸ்யமானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மேய்ந்து கொண்டிருந்த தன் மாடு ஒன்றை காணோம் என்று தேடிக்கொண்டுவரும்போது இந்த இடத்தைப் பார்த்ததாகவும் அந்தப் பெரிய பொந்துக்குள் ஆழத்தில் விழுந்த அந்த மாட்டுக்கு எந்த ஆபத்தும் நேராத அதிசயத்தை வியந்து உள்ளே  இறங்கிச்சென்று பார்த்தபோது அங்கே சிவ லிங்கம் இருந்ததைப் பார்த்தாகவும் அது முதல் இது சிவன், பார்வதி வினயாகர் வாழும் கடவுளின் வீடு  என்று தங்கள் இனத்தவர் நம்புவதாகவும் சொன்னார். பொறுமையாக நீங்கள் உற்று கவனித்தால் அந்தப் படிமங்களில் கடவுளரின் உருவங்களைப் பார்க்கலாம் என்றும் சொன்னார்

இந்தக் குகைகளிலிருந்து 20 கீமி தொலைவில் அழகான அருவி அருகில் ஆந்திர சுற்றுலாத்துறையினரில். மிக ரசனையுள்ளவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து விடுதியை கட்டியிருக்கிறார்கள் 
.
திரும்பும் பயணத்தைச் சுற்றூலாத்துறையின் பேருந்தில். தொடர்கிறோம் தொடர் வண்டிப்பயணத்தில் பார்க்க முடியாத இந்தப்பள்ளதாக்கின் அழகிய மறுபக்கத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டே வருகிறோம் இருபுறமும் கனண்ணுக்கெட்டிய வரை கண்ட காடு. காபி தோட்டங்கள். பசும் புல்வெளிகள் காட்சிகள் எல்லாம் மெல்ல  பரபரப்பான சாலைகளாக மாறியது   நாம் விசாகபட்டிணத்தை நெருங்கிறோம் என்பதைச் சொன்னது.


21/5/18

ஒரு இணைய தள வியாபார நிறுவனத்துக்கு இத்தனை கோடிகளா?





இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களுரில் ஒரு இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் துவக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம்1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) விலையில் விற்கபட்டிருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
உலகளவில் வர்த்தகத்திலிடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் கூட இந்தச் செய்தியைக் கேட்டு ஆச்சரியத்தில் அதிர்ந்தன.
விற்கபட்ட நிறுவனம் இந்திய இணைய தளமார்க்கெட்டிங் கம்பெனி பிளிப் கார்ட். வாங்கியிருப்பது உலகில் விற்பனையின் அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் பெரிய அமெரிக்க வணிக நிறுவனமான வால்மார்ட்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைசெய்கிறது. இவர்கள் எந்தப்பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மிகக்குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கி அதைத் தங்கள் இணையதளத்தின் மூலம், வெளி மார்க்கெட்டில் விற்பதைவிட குறைந்தை விலைக்கு விற்பனை செய்யும் ஒரு நிறுவனம். இந்தியாவில் இவர்கள் காலடிவைத்ததும் துவக்கபட்ட பங்களுரு அலுவலகத்தில் பணிக்குச்சேர்ந்தவர்கள் சச்சின் பன்சால், பின்னி. என்ற இரண்டு 22 வயது இளைஞர்கள். இருவரும் டெல்லி ஐ ஐ டியில் படித்தவர்கள். நல்ல சம்பளம் என்பதால் அமேசானில் வேலைக்குச்சேர்ந்தார்கள்.
ஓராண்டு பணிக்குப் பின்னர் இவர்களுக்கு எழுந்த எண்ணம் இந்தக்கம்பெனி செய்வதை நாம் ஏன் தனியாக ஒரு கம்பெனியை உருவாக்கிச் செய்யக் கூடாது? என்பது தான். உடனே வேலையை ராஜினாமாச் செய்து விட்டுச் செயலில்இறங்கினார்கள். ஒரு சிறிய இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் 4 கம்யூட்டர்களுடன் துவங்கப்பட்டது பிளிப் கார்ட். .  புத்தக் விற்பனையில் துவங்கி அமேசான் செய்யும் அத்தனையும் செய்வது என்ற முடிவோடு களமிறங்கிய இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை உலகில் எந்த நிறுவனமும் இதுவரை கண்டதில்லை

.2007ல் துவக்கபட்ட இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 20.8 கோடி டாலர்கள் (இது டாடா ஸ்டில் நிறுவனத்தின் மதிப்பைவிட இருமடங்கு). என உலகின் முன்னணி மதிப்பிட்டு நிருவனம் மதிப்பிட்டிருக்கிறது. துவக்க நிலை (Startup) வெற்றிபெற்ற நிறுவனங்களில் உலகின் 15 வது இடத்திலிருக்கிறது பிளிப் கார்ட்
.
இந்தப் பிளிப் கார்ட்டின் 77% பங்குகளை 1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) கொடுத்து வாங்கியிருக்கிறது. இதன் மூலம் இதில் மூதலீடு செய்தவர்கள், நிறுவன ஷேர்களை பரிசாகப் பெற்ற ஊழியர்கள் பெரும் லாபம் அடைவார்கள். மொத்த 10ஆயிரம் ஊழியர்களில் 3000 பேர் ஒரே இரவில் டாலர்களில் லட்சாதிபதிகளாகிவிட்டார்கள் இந்தக் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் அவரது 6% பங்குகளுகாக 6700 கோடிகள் பெற்றுகொண்டு வெளியேறுகிறார். மற்றொரு நிறுவனர் புதிய நிறுவனத்தில் தொடர்கிறார்.

இந்த நிலையை எப்படி இந்த நிறுவனம் அடைந்தது?.

உலக இணைய சந்தை ஆய்வு நிறுவனமான ஃபாரஸ்டர் கடந்த ஆண்டு இந்தியாவில் இணையதள விற்பனையின் மதிப்பு சுமார் 2,100 கோடி அமெரிக்க டாலராக (சுமார் 1,41,250 கோடி இந்திய ரூபாய்) இருந்தது. என்கிறது. இது சராசரியாகக் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 முதல் 15 % வரை உயர்ந்து வந்ததின் விளைவு. இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதால் இதைல் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருப்பதை அமேசானில் வேலை செய்யும் போதே கணித்து களத்தில் இறங்கியவர்கள் இந்த இளைஞர்கள்.
இவர்கள் இந்த இணைய தள வியாபாரத்தில் இந்தியர்களின் உளவியலைப்புரிந்து கொண்டு தங்கள் பிளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தினார்கள். ஆன்லைன் வர்த்தகத்தின் முக்கிய தேவை கிரிடிட், அல்லது டெபிட்கார்ட். அது அதிகம் பிரபலமாகத காலகட்டத்தில் இவர்கள் உங்கள் வீட்டுக்குப் பொருள் கொண்டுவந்து தருபவரிடமே பணம் தரலாம் என்ற புதிய முறையை உருவாக்கினார்கள். அதைத்தொடர்ந்து ஆர்டர் செய்த பொருளைச் சரிபார்த்த பின்னர் டெலிவரி செய்பவரிடமே பணம்தரலாம் சரியில்லை என்றால் பொருளைத் திருப்பிக்கொடுக்கலாம். என்ற அதரடி அறிவிப்புகளினால் நிறுவனத்தின் நன்மதிப்பும் விற்பனையும் பெருகியது.
10 கோடி வாடிக்கையாளார்களுக்கு கடந்த ஆண்டுமட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை ஆன் லைலனில் விற்றிருக்கிறார்கள்

தொடர்ந்த விரிவாக்கத்துக்கு அதிக மூதலீடுகள் வேண்டுமே அதை எப்படி சமாளித்தார்கள்.?

புதிதாகத் துவக்கபட்டு கடின உழைப்பாலும் சமயோசிதமான திட்டமிடலாலும் வளர்ந்து கொண்டுவரும் ஸ்டார்ட்அப் கம்பெனிகளைக் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன சில பன்னாட்டு வென்ச்ச்ர் கேப்பிட்டலிஸ்ட்  என்றா முதலீட்டு நிறுவனங்கள். இவர்கள் இம்மாதிரி கம்பெனிகளைப் பற்றி அறிந்து தங்கள் செலவில் அதன் எதிர்காலத்தை ஆராய்ந்து கணித்து முதலீடு செய்வார்கள். வாய்ப்புகள் வரும்போது தங்கள் முதலீட்டைபோலப் பல மடங்கை லாபமாகப் பெறுவார்கள். இவர்கள் தொழிலே இப்படி முதலீடு செய்வது மட்டும் தான். நஷ்டம் வந்தாலும் அவர்களுக்குத்தான். இப்படி பட்ட சில கம்பெனிகள் இந்தப் பிளப் கார்ட்டை கவனித்து தொடர்ந்து தங்கள் முதலீட்டைச் செய்து வந்தார்கள். இன்று இப்படி முதலீடு செய்த நிறுவனங்களுக்கு இந்த நிறுவனத்தை வால்மார்ட் வாங்குவதால் நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதில் 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிருவனங்களில் ஒன்று ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க். இன்று அவர்களின் பங்குகளுக்கு 4 பில்லியன் டாலர் பெறுகிறார்கள் அதாவது ஒரே ஆண்டில்  75% லாபம்.

வால் மார்ட் ஏன் இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குகிறது?

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் போட்டியைத்தவிர்க்க அமேசான் நிறுவனமே பிளிப் கார்ட்டை வாங்கப்போவதாக மார்க்கெட்டில் பேசப்பட்டுவந்தது. ஆனால் உறுதியானதகவல்கள் இல்லை
.
வால் மார்ட். அமெரிக்காவில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனம். பல நாடுகளிலும் பரந்துள்ளது சில்லறை வணிகத்தில் புதிய சாதனைகளையும் சரித்தரங்களை படைத்தவர்கள்.
மோடி அரசின் புதிய வணிகக்கொள்கைகளின் படி இந்தியாவிலும் பெரிய திட்டங்களுடன் சில்லறை வணிகத்தில் காலடி வைத்தவர்கள், சங்கலித்தொடராக 21 கடைகளைத் திறந்தார்கள். ஆனால் சந்தித்த எதிர்ப்புகளினாலும் அரசியலினாலும் சற்று மெதுவான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். பிளிப்கார்ட்டை வாங்கி இந்திய சில்லறை வர்த்தகத்தில் குறுக்கு வழியில் புகுந்துவிடலாம் என்ற அவர்களின் திட்டத்தின் விளைவே இந்த இந்திய மூதலீடு
.
இன்று வெற்றிகரமான் டீலினால் உலகத்தையே தங்களைப்பார்க்க வைத்த சச்சின் பன்ஸாலும், பின்னியும், துணிவுடனும் புதிய சிந்தனைகளுடன் ஸ்டார்ட் அப்களுடன் களமிறங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்

8/5/18

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கட்டிய கோவில்


சீனாவின் தென் கிழக்கில் இருக்கும் ஒரு தொழில் நகரம் குவான்ஷூ(QUANZHOU) இதன் அருகிலில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஒன்று சேடியன்.(CHEDIAN) கல்பாவிய.சிறிய சந்துகளும் முன் முற்றங்களுடன் கூடிய வீடுகளும், அது பல ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்தது என்பதைச்சொல்லும் சாட்சிகள். அங்குள்ள கல்யூன் என்ற புத்தர் கோவில் மிகப்பழமையானது.சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் புத்தமத்தினர் தினசரி ஆயிரகணக்கில் வந்து வழிபடும் ஒரு கோவில்.
அந்தப் பழமையான புத்தர் கோவிலில் இருக்கும் ஒரு பெ


ண் தெய்வத்தை உள்ளுர் மக்கள் தினமும் தவறாமல் அதன் முன்னேயிருக்கும் வாயகன்ற வெண்கலப் பாத்திரத்தில் நிரம்பியிருக்கும் மணலில் ஏற்றிய ஊதுவத்திகளைச் சொருகி பிராத்தனைகளைச்சொல்லி வழிபடுகிறார்கள்
.
அந்தப் பெண் தெய்வம் சீனாவின் பல இடங்களிலிருக்கும் “கியூனியன் தேவி”(GUANYIN)- போதிசத்துவரின் பெண் வடிவம் என்று உள்ளுர் மக்கள் கருதுகிறார்கள். நான்கு கைகளுடனும் அவற்றில் உடுக்கு, ஆயுதம் ஏந்தி கால்கள் சப்பணமிட்ட நிலையில் இருக்கும் அந்தத் தேவியின் காலடியில் வேலால் தாக்கபட்ட நிலையில் ஒரு அரக்கனின் உருவமும் அருகில் இரு காவலர்களூம் நிற்கிறார்கள். அந்த தேவியின் வடிவம் சீனாவின் மற்ற இடங்களில் வழிபடப்படும் கியூனியன் தேவியின் உருவத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும் உள்ளுர் மக்கள் இது தேவியின் மற்றொரு வடிவாக இருக்கும் என நம்பி புத்தபிரானை வழிபடும் முன் இந்தச் சன்னதியையும் வணங்கிச் செல்கிறார்கள்.
இது சீனர்கள் வழிபடும் தெய்வமில்லை. இந்த இடத்திலிருந்த ஒரு பழமையான இந்துக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழர்க:ள் நிறுவி வழிபட்டு வந்த கோவில். அது கால போக்கில் புத்தர் கோவிலாகிவிட்டது. இது தெரியாமல் கிராம மக்கள் தொடர்ந்து ஒரு இந்து கடவுளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் லீ சான் லாங் என்ற ஆய்வாளார். புத்தர் கோவிலின் நுழை வாயிலில் இருக்கும் மேடையின் பக்க வாட்டில் வரிசையாகப் பல நிலைகளைலிருக்கும் நரசிம்மரின் உருவங்களையும் இந்தக் கோவிலின் சன்னதிக்கு முன்னிருக்கும் தூண்களில் இந்துபுராணக்கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் இருப்பதையும் சொல்லுகிறார்.
சேடியன் கிராமம் பல நூறாண்டுகளுக்கு முன்னர் சீனாவின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. சீனாவின் கடல் வாணிகத்தில் முக்கிய இடம்பெற்றிருந்த இந்த துறைமுகத்திற்கும் தமிழக கடல் நகரங்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கப்பலில் வந்த வணிகர்கள் இந்த நகரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நகரத்தில் இந்தக் கோவில் மட்டுமில்லை சுற்றுவட்டாரத்தில் பல கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது  இதுகுறித்து ஆய்வுகள் செய்யும் சீனப்பேராசியர்கள் குழு.
சாங் என்ற மன்னர் (கி.பி 960-)பரம்பரையும் தொடர்ந்து வந்த யூவான் (கிபி1279) மன்னர் பரம்பரையினர் சீனாவை ஆண்டுவந்த காலத்தில் இந்தத் துறைமுகத்திற்கு தமிழகத்திலிருந்து கப்பல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. அந்த வணிகத்தைக் கவனிக்க தமிழர்கள் பெருமளவில் குழுக்களாக இங்கு வந்து வசித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தச் சுற்று வட்டாரத்தில் இரண்டு பெரிய கோவில்களையும் பல சிறிய கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது வியூ வின்லாங் என்ற ஆராய்ச்சியாளரின் குறிப்பு. உள்ளூர்காரான இவர்தான் முதன் முதலில் இங்கு கண்டுபிடிக்கபட்ட ஒரு நரசிம்மரின் சிலையின் மூலம் அது தமிழ் நாட்டு கடவுள். என்றும் தமிழ்நாட்டுக்கும் இந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பைக் கணடுபிடித்து 1930களிலேயே சொன்னவர். தொடர்ந்த ஆராய அவர் கேட்ட நிதி கொடுக்கபடாததாலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களாலும் ஆய்வு தொடரப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரம்பரியப் பெருமை மிக்க சீன நகரங்களில் பெரிய அளவில் பல நகரங்களில் கருவூலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. அதில் ஒன்று கடல் வாணிகத்தில் முன்னோடியாக இருந்த சேடியன் நகரம். பண்டைய சீனர்களில் கப்பல்கட்டும் முறை கடல் வாணிகத்தில் அவர்கள் சென்ற கலங்களின்  மாதிரிகளுடன் விளக்க பெரும் பொருட்செலவில் ஒரு நவீன அருங்காட்சியகம் எழுந்தது. அதன் இரண்டாம் மாடியில் நகரத்தின் அருகில் கிடைத்த சிலைகள் சிற்பங்களை வைக்கவும் முடிவானது.
 அந்த சிலைகளும் சிற்பங்களும் அப்படியே அச்சு அசலாகத் தமிழக, ஆந்திர கோவில்களில் காணப்படும் சிற்பங்களாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சிலைகளின் பின்னணி தொடர்பான ஆய்வுகள் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து எழுந்திருக்கிறது.
எத்தனை கோவில்கள் இருந்து பின்னாளில் அழிந்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை ஆனால் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களிலிருந்து சிலைகள் எடுக்கப்பட்டிருப்பதால் பல கோவில்கள் இருந்திருப்பதாக நம்பப்படுகிறது என்கிறது அருங்காட்சியகத்தின் குறிப்பு அதலிருக்கும் வரைபடம். சிலைகள கண்டுபிடிக்கபட்ட இடங்களாக இந்த நகரைமட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களையும் காட்டுகிறது.
அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நரசிம்மர். யாளி சிவலிங்கம் காளி போன்ற பல சிலைகள். இருக்கின்றன. ஒரு யானை சிவலிங்கத்திற்கு நீர் சொறிந்து அபிஷேகம் செய்கிற காட்சி. கிருஷ்ணன், பின்னணியில் பாம்பு போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்ட தூண்கள் எல்லாமே கடல் கடந்து வந்த தமிழனின் சிற்பகலைக்கு சாட்சியாகயிருக்கிறது. சிலைகளின் கற்கள் உள்நாட்டு வகையாக இருப்பதால் தமிழக சிற்பிகள் வந்திருக்க வேண்டும் அல்லது வரையப்பட்ட படங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளூர்கலைஞர்களின் உதவியுடன் சிலைகள் வடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்களின், பல்கலைகழகங்களின் தொடர்ந்த ஆர்வத்தால் அருங்காட்சியகத்தில் “சீனாவிற்கும் தென் இந்தியாவிற்குமான 1000 ஆண்டுத் தொடர்பு” என்று ஒரு தனிப் பகுதியே நிறுவப்பட்டிருக்கிறது. சிலைகளுக்கும் கல்செட்டுக்களுக்கும் ஆங்கிலத்தில்  விளக்கமும் இருக்கிறது சிவலிங்கமும் யானையும் இருக்கும் சிற்பத்தின் மூலையில் ஒரு சிலந்தியின் உருவமும் இருக்கிறது. சிவனை பாதுகாக்க தினசரி அந்த சிலந்தி கட்டிய வலையை யானை அபிஷனக்தினால் கலைத்து விட்டுக்கொண்டேயிருந்ததால் அந்த சிலந்தி கோபமுற்று யானையின் துதிக்கைக்குள் நுழைந்து அதைக்கொன்று விட்டது என்ற கதையை அருகிலிருக்கிறது
.
அருங்காட்சியகத்திலிருக்கும் கல்வெட்டுக்களில் அன்றைய தமிழ் எழுத்துக்களில் இருப்பதின் ஆங்கிலவடிவம் அருகில் வைக்கபட்டிருக்கிறது. அதில் ஒன்று இது.
ஹரனுக்கு நமஸ்காரம். எங்கும் வளம் நிரம்பியிருக்கட்டும். சித்திரை மாதத்தில் சித்தரை நாளான்று 1203ஆம் வருடம் தவசக்கரவர்த்தி சம்மந்த பெருமாள் ஆசிபெற்று மன்னர் செக்காச்சி கான் எழுத்தில் தந்த அனுமதியுடன் உடைய நாயினாரின் உருவம் மன்னரின் நலத்துக்காகப் பிரதிஷ்டை செய்யபட்டது
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் 2000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஒரு தேசத்துக்குத் தமிழையும் தன் கடவுளையும் கொண்டுசென்றுஅங்குஅதை நிறுவியிருக்கிறான் அது இன்ரும் வழிபடப்படுகிறது  என்பதையறியும்போது   வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது




70 வது மணநாளைக்கொண்டாடிய அரசி








உலகின் மிகச்சிறந்த பாராளுமனற நடைமுறைகளை உருவாக்கிப் பாராளுமன்ற ஜனநாயகத்தை கடைப்பிடித்தாலும் இங்கிலாந்து நாட்டின் தலைவர் அதன் அரச பரம்பரையில் வந்திருக்கும் அரசி இரண்டாம் எலிசபெத் தான்.

இம்மாதத்தில் (பிறப்பு ஏப்பரல் 21 1926) இவரது 92 வது பிறந்த நாளைக்கொண்டாட லண்டன் தயாராகிக்கொண்டிருக்கிறது நகரின் பெரிய கட்டிடங்களில் வண்ண விளக்குகளில் வாழ்த்துச்செய்திகள் மின்னுகின்றன.  .அரசி அன்று என்ன வண்னத்தில் உடையணிவார். அவரது கணவர் என்ன பரிசு கொடுக்கபோகிறார்? போன்ற கட்டுரைகளைப் பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மறைவுக்குப் பிறகு 1952ம் ஆண்டு, இரண்டாம் எலிசபெத் மகாராணி ஆனார். இவர். அன்று தொடங்கிய மகாராணி வாழ்க்கை, இன்றும் தொடந்து இங்கிலாந்து வரலாற்றில் நீண்ட காலமாகத் தொடரும் மகாராணி என்னும் பட்டத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் நீண்ட நாள் அரசியாக இருந்தவர் அரசி விக்டோரியா. இந்தியாவை இங்கிலாந்து ஆண்டுகொண்டிருந்த காலங்களில் இந்திய அரசியலில் நிகழ்ந்த பல திருப்பு முனைகளுக்குக்காரணமாகயிருந்தவர் விக்டோரியாஅரசி.  தொடர்ந்து 63 ஆண்டுகள் அரசியாக இருந்தவர். அந்தச் சாதனையை சில ஆண்டுகளுக்கு முன் முறியடித்தவர் இங்கிலாந்தின் இன்றைய அரசி இரண்டாம் எலிசபெத்.   இந்த ஆண்டுடன் அவர் அரசியாகி 65 ஆண்டுகளாகிறது
.
அரசரின் குடும்பத்தில் பிறந்த முதல் பெண்குழந்தையான இவர் இங்கிலாந்தின் அடுத்த வாரிசு என்று அறிவிக்கப் பட்டபோது இவருக்கு வயது. 14.    பிறந்தபோது அவரது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோர்களின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலக்ஸான்ட்ரா மேரி என்ற நீண்ட பெயர் சூட்டப்பட்டது. குடும்பத்தினரால் சூட்டப்பட்ட செல்லப்பெயர் லில்லிபெத். ஆனால் அரசியாகப் பட்டம் சூட்டப்பட்டபோது அறிவிக்கப்பட்ட பெயர். எலிசபெத். ஏற்கனவே அந்தப்பெயரில் ஒர் அரசி இருந்ததால் இரண்டாம் எலிசபெத் என்றழைக்கப்படுகிறார்.
லண்டனில் 1947ம் ஆண்டு, நவம்பர் 2௦ம் தேதி, இங்கிலாந்து இளவரசி எலிசபெத் கடற்படை அதிகாரி பிலிப்பை திருமணம் செய்துக்கொண்டார். இது காதல் திருமணம். இந்தத் தம்பதியினர் கடந்த ஆண்டு தங்களது 70 வது திருமண ஆண்டுவிழாவை மிக எளிய முறையில் கொண்டாடினர். 70 ஆண்டுகள் கடந்த பிறகும், தற்போது 91 வயது அரசி எலிசபெத்தும் 96 வயது பிலிப்பும் இன்றுவரை சிறந்த தம்பதியினராகவே வாழ்ந்து வருகின்றனர்

இங்கிலாந்தின் ராணி என்று அறியப்பட்டாலும் மேலும் 16 சிறு நாடுகளுக்கு அரசியாகயிருப்பவர் இவர்.  அந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையீடுவதில்லை என்றாலும் இவர் தான் அந்த நாடுகளின் சட்டபூர்வமான அரசி. இதைத்தவிர இந்தியா உள்பட 54 நாடுகள் உருப்பினர் நாடுகளாக இருக்கும் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவியும் இவர்தான்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகநாடுகளில் நிகழந்த பல அரசியல் மாற்றங்களுக்குச் சாட்சியாக இருக்கும் இந்த அரசி காலத்திற்கேற்ப பக்கிங்ஹாம் அரண்மனையின் நிலைப்பாடுகளைத் துணிந்து மாற்றிஅமைத்தவர். பல வரலாற்று சிறப்பு மிக்கபயணங்களையும் சந்திப்புகளையும் நிகழ்த்தியவர். அதில் முக்கியமானது அயர்லாந்து பயணம். நீண்ட நாட்களாக எந்த இங்கிலாந்து அரசரோ அல்லது அரசியோ செய்யாத அந்தப்பயணத்துக்கு பின்னர் இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு மலர்ந்தது. அதேபோல் தனது ஆளுகைக்குட்பட்ட சிறு நாடுகளில் குடியரசுமுறை வளரக் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்த மாற்றங்களை, அதிகார பகிர்வுக்கான மாற்றங்களை வரவவேற்று ஆதரித்தவர், கனடா நாட்டின் அரசியலில் நிகழ்ந்த மிகப் பெரிய அரசியல் மாற்றமான கனடிய அரசியல் சட்டத்தின் திரும்பப்பெறுதல் போன்றவைக்களுக்கு ஆதரவு தந்தவர்
.
வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்களை மிகத்திறமையுடன் இங்கிலாந்து சந்திக்க நேர்ந்ததும் இவரது ஆட்சிகாலத்தில் தான்.
சுருக்கமாகச் சொல்லுவதானால், பரவலான அதிகாரங்கள் கொண்ட மன்னராட்சி முறை உலகில் மெல்ல மறைந்து போகும் என்பதை உணர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் அரசி இவர்.

பிள்ளைகளின் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் போன்ற சந்தோஷமான விஷயங்களை சந்தித்திருக்கும் இந்த அரசி ஒரு குடும்பத்தலைவியாகச் சோகங்களையும் சந்தித்திருக்கிறார்.

எலிசபெத் பிலிப் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். மூன்று மகன்கள் ஒரு பெண். இதில் சிறப்பாக நடைபெற்ற இளவரசர் சார்லஸ் டயானா திருமணம் முறிவில் முடிந்தது. அதேபோல் இளவரசி ஆனின் திருமணமும் முறிவில் முடிந்தது. தொடர்ந்த சில ஆண்டுகளில் மூன்றாவது மகன் ஆண்ட்ரூவின் திருமணமும் மணமுறிவில் முடிந்தது.  பொதுவாக இங்கிலாந்து அரச குடும்பங்களில் மண முறிவுகள் நடப்பதில்லை. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த மரபுகள் தன்காலத்தில் மீறப்பட்டிருப்பதில் அரசியாருக்கு ஆழந்த வருத்தம்
.
இந்த வயதிலும் திட்டமிட்டபடி உடற்பயிற்சி, அரசுப்பணிகள் பாராளுமன்ற கூட்ட துவக்க நாள் நிகழ்ச்சி எனச் சுறுசுறுப்பாக  இயங்கி ஆச்சரியப்படுத்துகிறார்.
விக்டோரியா அரசியின் நீண்டநாள் அரசி என்ற சாதனையை இவரது ஆட்சி முறியடித்தபோது இங்கிலந்து பாரளுமன்றம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக ஒரு விசேஷ கூட்டத்தைக் கூட்டியது அதில் அன்றைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் தெரிவித்த வாழ்த்து



“ நிலை மாறும் உலகில் நிலையான ஆட்சி செய்யும் மகாராணி”




11/4/18

மாட்டுவண்டியில் வந்த ரயில் என்ஞின்


 மன்னர்மூலம் திருநாள் ராமவர்மா திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு கொண்டிருந்த காலத்தில்(1885-1924) அந்தச் சமஸ்தானம் நிர்வாகத்திலும் அடிப்படை வசதிகளிலும் பல புதிய திருப்பு முனைகளைச் சந்தித்தது. அதில் ஒன்றுதான் கொல்லத்திலிரு;ந்து சென்னைக்கு ரயில் பாதை. அன்று சென்னையிலிருந்து திருனெல்வேலி வரை ரயில் பாதையிருந்தது. ஆனால் அன்றை ரெயில்வே நிர்வாகம் அதைக் கொல்லம் வரை நீடிப்பதில் ஆர்வம் காட்டாதிருந்ததற்கு காரணம் தமிழகத்தையும் திருவாங்கூர் சமஸ்தானத்த பகுதிகளை இணைக்கும் பகுதியிலிருந்த அடர்ந்த ஆரியங்காவு காடு. செலவு அதிகமாக்குமிந்தததிட்டத்தினால் ரயில் கட்டணம் அதிகமாகும் அதனால் ரயிலை மக்கள் பயன்படுத்தமாட்டார்கள். என்பது அவர்கள் கணிப்பு.

ஆனால் மன்னர் அந்தப்பாதை அமைக்கப்டவேண்டுமென்பதில் தீவரமாகயிருந்தார். திட்டச் செலவில் பாதியை சமஸ்தானமேற்கும் எனத் தென்னிந்திய ரயிவே கம்பெனியுடன்1900 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டார். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை(அப்போது இது திருவாங்கூர் சமஸ்தானைச்தேர்ந்திருந்த பகுதி) வரையிருந்த பாதையை 45 மைல்களுக்கு கொல்லம் வரை நீட்டிப்பது என்று முடிவாயிற்று.


நாட்டின் முதல் தனியார் – அரசு கூட்மைப்பு இதுதான். பாதை அமைப்பதில் எழுந்த பிரச்சனைகள் பல. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பணிசெய்தவர்கள் மிருகங்களால் தாக்கபட்டனர். திட்டமிட்டபடி சிறிய ம்லைகளை குடைந்து குகைகள் அமைப்பது எளிதாக இல்லை. அந்த மலைக்குகைகளின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து பாதையை மூடிவிடும் அபாயமிருந்தது. 4 மலைக்குகைகள்,5 பெரிய பாலங்கள் 120 சின்ன சின்னப்பாலங்கள் என்று பயணிக்கும் இந்த ரயில் பாதையின் இரு பக்கமும் பரவிக்கிடக்கும் பசுமைக்காடு. பகவதிபுரம்- ஆரியங்காவு என்ற இரண்டு ஸ்டேஷ்ன்களுக்கிடையே ஒரு கீலோமிட்டருக்கு நீண்ட குகைப்பாதை.



ஒரிடத்தில் இரண்டு மலைச்சரிவுகளுக்கு இடையிலிருக்கும் பள்ளத்தாக்கை கடக்க பாலம் அமைக்கவேண்டியிருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கருங்கற்களால் பதிமூன்று தூண்களுடன். 3000 அடி நீளத்தில் ஒரு பாலம் எழுப்பப்பட்டது. இந்தப் பாலத்தின் தூண்களை வெறும் தூண்களாக அமைக்காமல் அழகான ஆர்ச்களுடன் வடிவமைத்தார்கள் அன்றைய கேரள கட்டிடக் கலைஞர்கள். இதை 13 கண் பாலம் என அழைத்தார்கள். இரும்பு கர்டர்களை உபயோகிக்காமல் கட்டபட்ட இந்தப் பாலம் அன்றைக்கிருந்த தொழில்நுட்பங்களில் மிகப்பெரிய சவால்.
பாலம் முடிந்தகையுடன் தண்ட வாளங்களை பதிக்க ஆரம்பித்துவிட்டனர். இரண்டே ஆண்டுகளில் செங்கோட்டை வரை ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது.
1900 ஆம் ஆண்டு 30 லட்சம் என மதிப்பீட்டில் துவங்கபட்ட இந்த இந்தத் திட்டம் 1902ல் முடியும்போது 1.12 கோடியில் போய் நின்றது


பஞ்சாங்கள் பார்த்துப் பண்டிதர்களை ஆலோசித்தபின்னர் மன்னர் 1904 ஆம் ஆண்டு ஜீன் 1ம் தேதி(அன்று மன்னரின் பிறந்த நாள்) கொல்லத்திலிருந்து பூஜைக்களுக்குப் பின்னர் மன்னர் கொடியசைத்து ரயிலைத்துவக்குவாரென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.


அப்போது எதிர்பாரமல் எழுந்தது ஒரு சிக்கல். துவக்க விழா ரயிலைக் கொல்லத்திலிருந்து இழுத்தச்செல்ல வேண்டிய எஞ்ஞின் மறுமுனையிலிருந்த செங்கோட்டையிலிருந்தது. விழா நாளுக்கு முன் அதைக் கொண்டுவரலாம்   எனத் திட்டமிட்டிருந்த நிர்வாகத்திற்கு வந்த செய்தி “ஆரியங்காவு கணவாயில் இடையில் புனலூருக்கு முன்னால் உள்ள ஒரு குகையில் மண் சரிந்து ரயில் பாதையை மூடிவிட்டது” எஞ்சினை கொல்லத்துக்குக்கொண்டுவர முடியாது.


செய்தியைச் சொல்லி மன்னரை வருத்தமடையச் செய்ய விரும்பாத தலமை எஞ்ஞினியர் உடனடியாக அந்த எஞ்சின் பாகங்களைக் கழட்டி செங்கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து படகில் கொல்லத்திற்கு கொண்டுவந்து சேர்த்தனர் படகில் வந்த எஞ்சினின் பகுதிகள் மாட்டுவண்டியில் ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டு பகல் இரண்டு இரவு தொடர்ந்து வேலைசெய்து அந்த எஞ்சினை அமைத்துத் தயாரக இருந்த பெட்டிகளுடன் இணைத்துத் துவக்க விழாவிற்கு அலங்காரங்களுடன் நிறுத்தினர்.

ஒரு சிக்கலான சவாலைச் சமாளிக்கும் சமயோசிதமிக்க அதிகாரிகளும் அவர்களின்  கட்டளைக்கேற்ப ஆர்வத்துடன் செயல் பட்ட தொழிலளார்களுடனும்  இருந்திருக்கிது அன்றைய ரயிவே நிர்வாகம் . 
மாலைகள் அணிந்த அந்த ரயில் எஞ்சின் 6 பெட்டிகளுடன், மேளதாளங்கள், வேதங்கள் முழங்க, 21 பிரங்கி சல்யூட்டுடன் புறப்பட்டுப் புனலூர் வரை சென்று திரும்பியது.

அன்றைய விழாவில் கெளரவிக்கபட்டவர் கொல்லம் ரயில் நிலையத்தின் முதல் ஸ்டேஷன் மாஸ்டர் ராமய்யா. ரயில்களுக்குப் பெயர் வைக்கும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது. இந்த ரயிலின் பெயர் “தூம சகட சூரன்”
சில வாரங்களில் பாதை சீராக்கப்பட்டு 1904 நவம்பர் முதல் தினசரி செங்கோட்டை கொல்லம் வரை ரயில் ஒட ஆரம்பித்தது.


நாடு முழுவதும் அகல ரயில் பாதைமாற்றம் என்ற திட்டத்தில் இந்தப்பாதையும் இணைக்கபட்டது. அதற்காக இந்தப் பாதையில் செல்லும் ரயில்கள் 2010 முதல் நிறுத்தப்பட்டன.
120 ஆண்டுகளுக்குமுன்னால் மன்னராட்சியில் 2 ஆண்டுகளில் முடிக்கபட்ட இந்த 48 கீமி பாதையை அகலப் பாதையாக மாற்ற எடுத்துக்கொண்ட காலம் 8 ஆண்டுகள் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதைத்தாண்டி வேறுபல அரசியல்களும் இருந்தன.
ஒரு வழியாக இந்தப்பாதை அகலப்பாதையாக மாற்றபட்டுவிட்டது. கடந்த மாதம் 31ம் தேதி முதல் ரயில்கள் ஓடத்துவங்கியிருக்கின்றன. இந்தப்பாதை இணைப்பின் மூலம் தமிழகத்தின் மிகப்பழமையான ரயில் பாதையான திருநெல்வேலி, தென்காசி செங்கோட்டை கொல்லம் ரயில் பாதை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. பயணங்களில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பயனம் செய்ய வேண்டிய பாதை இது. அடர்ந்த காடுகளும் இருண்ட குகைகளும், 13 கண் பாலத்தில் ரயில் மெல்ல அழகாகத் திரும்புவதும் மனதில் என்றென்றும் நிற்கும் பசுமை காட்சியாகப் பதியும்.
ஒரு மன்னரின் தொலைநோக்கையும் இந்திய ரயிவேயின் சாதனைச் சரித்திரத்தையும் சொல்லும் இந்த ரயில்பாதை புத்துயிர் பெற்றதை கேரளத்தின் கொல்லம் ரயில் நிலையத்தில் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் விழா எடுத்து வரவேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் வழக்கம்போல் ஒடும் ஒரு ரயிலாகத்தான் இது  புறப்பட்டிருக்கிறது. சொன்ன காரணம். அடுத்த மாதம் நடைபெறப்போகும் அதிகாரபூர்வமான விழாவில் மத்திய அமைச்சர்களுடன் கலந்துகொள்வோம்





19/3/18

சூரியனைச் சுற்றி வரப்போகிறது இந்தக் கார்.



காரில் ஏறிச் சூரியனைச் சுற்றி வர முடியாது, ஆனால் ஒரு காரை ஏவுகணையின் முன்னால் வைத்து விண்வெளிக்கு அனுப்பினால் அது சூரியமண்டலத்தை சுற்றி வருமா?வரும் என்பதை நிரூபித்திருக்கிறார் எலான் மஸ்க் என்ற அமெரிக்கர். இவர் வான்வெளி விஞ்ஞானி இல்லை. ஆனால் விண்வெளி ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்ட கோடிஸ்ரவர். தன் சொந்த செலவில் கடந்த பல ஆண்டுகளாகப் பல ஏவுகணைச் சதனைகளைச் செய்துகொண்டிருப்பவர்.
எலான் மஸ்க். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் படித்தஅவருக்கு விண்வெளியில் சாதனை புரிய வேண்டும் என்று இளம் வயதிலிருந்தே மிகுந்த ஆர்வம்.. அதற்கான பணத்தை திரட்டப் பல நிறுவனங்களைத் துவக்கினார். இன்று இண்டர்நெட்டில் பணம் செலுத்தும் முறைகளுக்கு முன்னோடியாக இருக்கும் “பேபால் (PayPaul) இவருடையதுதான்
பணம் சம்பாதித்ததும் 2002 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவனத்தைத்தொடங்கினார். அமெரிக்காவில் பல்கலை கழகங்கள் போலத் தனியாரும் ஆய்வுகளுக்காகச் சொந்த ராக்கெட் தளங்களை அனுமதியுடன் அமைத்துகொள்ளலாம் அப்படி இவர் அமைத்த ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனம்மூலம் ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் உருவாக்கி உயரே செலுத்துவது அவரது நோக்கம்.  பல எஞ்சினியர்க்ளையும் மற்றும் விண்வெளி நிபுணர்களையும் அவர் பணியில் அமர்த்திக் கொண்டு. தங்கள் நிறுவனத்துக்கென ஒரு ராக்கெட் தளத்தையும் அமைத்துக் கொண்டார்.
ஆரம்பத்தில்அவர் சிறிய ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். அவைகளுக்கு பால்கன் 1, 2 எனப்பெயரிட்டிருந்தார். ஆனால் ராகெட் தயாரிப்பில் நாசா செய்யும் முறைகளிலிருந்து ”மாற்றி யோசிக்க” ஆரம்பித்தார்
.
பொதுவாக செயற்கைக்கோள்களைச் செலுத்துகின்ற ராக்கெட்டுகள் அனைத்துமே ஒன்றன் மீது ஒன்றாகப்பொருத்தப்பட்ட பல அடுக்கு ராக்கெட்டுகளாகயிருக்கும்’.உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு அடுக்கு ராக்கெட்டும் அதன் பணிமுடிந்த பின்னர் தனியே கழன்று நடுவானிலேயே தீப்பிடித்து அழிந்து விடும். இந்த முறைதான் ராக்கெட்கள் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை பின்பற்றப்படும் முறை. இதை மாற்றதான் எலான் மஸ்க் முயற்சித்தார்.
2013ல் இவர் உருவாக்கிய பால்கன் ராகெட்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது. காரணம் இவரது பால்கன் ராக்கெட் எரிந்து விழாமல் பணி முடிந்ததும் மெல்ல கிழே இறங்கி குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தது.
இந்த முறையில் செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டில் எரிபொருளுக்கு ஆகும் செலவுஅதிகமில்லை உருளை வடிவ ராக்கெட்டை உருவாக்குவதற்கு ஆகும் அதே செலவுதான். எனவே குறைந்த செலவில் ராக்கெட்களை செலுத்தும் முறையை எலான் மஸ்க் செய்து காட்டியதும் அதுவரை பணத்தை விணாக்கிக் கொண்டிருந்த ஒரு கோடிஸ்வரர் என அவரை அலட்சியபடுத்திக்கொண்டிருந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உலகம் அவரைக் கவனிக்கத்துவங்கியது
.
“தொடர்ந்து புதிய சாதனைகள்” என்ற வெறியிலிருந்த எலான் மஸ்க் அண்மையில் ஒரு புதிய சாதனையைச் செய்தார். 3 பால்கன் 9 வகை ராகெட்களை பக்கவாட்டில் ஒன்றாக இணைத்து ஒரு வலிமையான ராக்கெட்டை உருவாக்கினார். உலகில் இந்த அளவிற்கு சக்தி மிக்க ராக்கெட் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை
.இந்த ராக்கெட் 64 டன்னுக்கும் மேல் எடையைச் சுமந்து செல்லக்கூடிய அளவிற்கு வடிமைக்கப்பட்டது.  இதற்குப் பால்கன் ஹெவி என்று பெயரிடப்பட்டது.
இந்த ராக்கெட் செல்ல வேண்டிய இடம் என இலக்கு எதுவும் நிர்ணயக்கபடவில்லை. ராக்கெட்டின் முகப்பில் விண்வெளிக்கலம் அல்லது செயற்கைகோள் எதுவும் வைக்கபடவில்லை. காரணம் இந்த ஏவுகணையின் பலத்தை சோதிப்பதுதான் இதை விண்வெளியில் செலுத்தும் நோக்கம். மேலும் ராகெட் அழிந்தால் அந்தக் கலமும் அழிந்துவிடும் அது தேவையற்ற செலவு எனக்கருதினார் எலான் மஸ்க்.  பொதுவாக இம்மாதிரி சோதனைகளில் ராக்கெட் முனையில் பெரிய கான்கீர்ட் அல்லது இரும்பு பாளங்களை சோதனைக்காக இணைப்பார்கள்.
இங்கு எலான் மஸ்க் ஒரு புதுமையைச் செய்ய விரும்பினார். இரும்பு பாளாத்துக்குப்பதிலாகத் தனது விலையுர்ந்த டோயோட்டா டெஸ்லா  காரையே பொருத்தினார் . எலான் ராகெட் மட்டும் தயாரிப்பதில்லை. அவரது கம்பெனிகளில் ஒன்று பேட்டரிகளில் இயங்கும் கார்களையும் தயாரிக்கிறது.  அவரது டெஸ்லா ரோட்ஸ்டர் எலக்டிரிக் காரை ட்டோயொட்டோ நிறுவனம் தயாரிக்க 50 மில்ல்யன் டாலர் மூதலீடு செய்திருக்கிறது.
மஸ்க் தனது ராக்கெட்டின் முகப்பில் தனது தயாரிப்பான டெஸ்லா காரை வைத்தது மட்டுமில்லாமல். அந்தக் காரில் டிரைவர் சீட்டில் ஸ்டியரிங்கைப் பிடித்த மாதிரி விண்வெளிவீர்ருக்கு உரிய உடை அணிந்த முழு உருவ மனிதப் பொம்மையையும் வைத்து அனுப்பத்திட்டமிட்டார். பின்னணியில் ஒரு பாடலும் இசைத்துக்கொண்டிருக்கும்படி அமைத்தார் இந்த இசைரசனையுமுள்ள விண்வெளி ஆர்வலர்.
.
ராக்கெட்டின் முன்னால் காரா? என்று பலர் ஏளனப் புன்கையுடனும் இவ்வளவு கனமான,ராக்கெட் சரியாகச்செல்லுமா? என்று விண்வெளி விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.மிகுந்தஎதிர்பார்ப்புக்குஇடையே பால்கன் ஹெவி ராக்கெட் கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து கடந்த பிப்ரவரி 6 ந் தேதி உயரே செலுத்தப்பட்டது, இப்படி தனியார் ராக்கெட்களை நாசாவின் தளத்திலிருந்து செலுத்த மிகப்பரிய அளவில் கட்டணமும் இன்ஷ்யூரன்ஸ்கட்டணமும் செலுத்த வேண்டும்


உயரேச் சீறிப்பாய்ந்தபால்கன் ஹெவி ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதை வரை (5 கோடி கிலோ மீட்டர் தூரம்) செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் அது அதற்கு மேலேயே  சிறப்பாகச் செயல்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதையையும் தாண்டிச் சுமார் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று ரோட்ஸ்டர் காரை விண்ணில் செலுத்தியது. எலான் மஸ்கின் கனவு பலித்துவிட்டது அவரது கார் இபோது சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது அப்படிச் சுற்றும்போது 2091ஆம் ஆண்டு  பூமிக்கு அருகில் வந்து பூமியைக் கடந்து செல்லும்.பிறகு மறுபடியும் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச்செல்லும்,
இப்படி எவ்வளவு நாள்.அது சுற்றும்? பல ஆயிரம் ஆண்டுகள் இவ்விதம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்?. இப்படிச் சுற்றி வர அதில் எஞ்சினோ எரிபொருளோ கிடையாது. இயற்கை விதிகளுக்குஉட்பட்டு பூமி எவ்விதம் சூரியனை சுற்றுகிறதோ அதே மாதிரியில் அந்தக் காரும் சுற்றிக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் வெடித்து சிதறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படி நடந்தால் அதன் துகள்கள் கூடப் பூமிக்கு வராது. என்கிறார்கள் விண்வெளி விஞ்ஞானிகள்.
இது விண்வெளி விஞ்ஞானத்தில் மிகப்பெரிய சாதனை. விண்னில் செலுத்தப்பட்டவுடன் உலகின் அத்தனை சானல்களிலும் பிரேக்கிங் நீயூஸாகவும், அடுத்தநாள் அத்தனை செய்தித்தாட்களில் தலைப்புச்செய்தியாகவும் ஆன இதைச் சாதித்த எலான் மஸ்க்கு வயது 46.தான்“உங்கள் கார் எங்கே? என்ற கேள்விக்கு “சூரிய மண்டலம்வரை போயிருக்கிறது” என்று எலான் பதில் சொல்வது போல ஒரு கார்ட்டுனை வெளியிட்டிருக்கிறது ஒர் அமெரிக்கப்பத்திரிகை.
செவ்வாயில் மனிதர்கள் வசிக்கும் காலனியை ஏற்படுத்துவது அவரது நீண்டகால கனவுத் திட்டமாகும். ஆனால் அதற்கு முன் எலான்மஸ்கின் உடனடி அடுத்த திட்டம் சந்திரனுக்கு பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இரு விண்வெளி வீர்ர்களை அனுப்புவதாகும். இரு விண்வெளி வீர்ர்கள் அமர்ந்து செல்ல இவரது ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனம் ஏற்கெனவே “குரூ டிராகன்” என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது ஆனால் இதற்கு அந்த வீர்ர்களிடம் கட்டணம் வசூலிக்கப் போகிறாராம்
மனிதருக்கு இருக்கும் ஆர்வத்துக்கும் பண வசதிக்கும் சாதித்துகாட்டு வார் என்றே தோன்றுகிறது.