27/1/19

எல்லாருக்கும் பெய்யும் மழை



சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  எழுதுவதின்  மூலம் பெரிய அளவில் என்ன  சமூக சேவை செய்துவிடமுடியும்? சமூகத்துக்கு  ஏதாவது ஒரு நல்ல பணியைச் செய்ய வேண்டுமென்றால்  அடைப்படையான தேவை பணம். அது  தொடந்து எழுதிக்கொண்டிருப்பதால் மட்டுமே எப்படிக்  கிடைக்கும்?  என்று எண்ணும் நம்மைப்போலப் பலரை திகைக்க வைக்கிறார் கொங்கு மண்டல இளைஞர் வா.மணிகண்டன். தன் வலைப்பூவில் எழுதுவது  மூலமே பெரிய அளவு நிதி திரட்டி உதவிக்கொண்டிருக்கிறார்.

கரட்டடிபாளையம்(ஈரோடுவட்டம்) என்ற கிராமத்துக்காரரான இவர் கணனியிலில் முதுகலைப்பட்டதாரி. தொடர் பணிமாற்றங்களுக்கும், முயற்சிகளுக்கும், பயிற்சிகளுக்கும்  பின்னர் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்  நல்ல பணியிலமர்ந்தவர்.  கவிஞரான இவரது வலைப்பூ “நிசப்தம்?.  பேர்தான் நிசப்தமே தவிர மனிதர்  மனித உணர்வுகள் வாழ்வின் யாதர்த்தங்கள், சமூக அவலங்கள் அரசியல் போன்ற பல விஷயங்களில் தன் கருத்தை உறக்கச் சொல்பவர்.  அதனாலேயே இவரது நிசப்தத்தின் வாசகர் வட்டம் குறுகிய காலத்தில்  மிகப் பெரிதாக வளர்ந்தது.


ஒரு முறை இவரது வாசகர் ஒருவர் கேட்டக்கொண்டதற்கு ஏற்ப. கல்விச்செலவுக்கு வந்த வேண்டுகோளை தன் வலைப் பூவில் வெளியிட அதற்கு வந்த ஆதரவைக்கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார் மணிகண்டன். தன்வாசகர்களில் இத்தனை பேர் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையும்,உதவிகள் செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பதை கண்டு ஊக்கமடைந்து தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத்துவங்கினார். உள்நாடு வெளிநாடு என்று பல இடங்களிலிருந்து முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத்துவங்கியது.  ஆரம்பகாலங்களில் தனது பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவி வந்த இவர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் நிசப்தம் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் அறப்பணிகளை நிர்வகித்து வருகிறார். 



கடந்த இரண்டாண்டில் மட்டும் இந்த அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள்  ஒரு கோடிக்கும் மேலிருக்கும். நல்ல இலாபத்தில் இயங்கும் ஒரு கார்பேர்ட்,  தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு தன்னார்வல நிறுவனம்  இதைப்போல செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஒரு தனி மனிதன்,அதுவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர் செய்திருப்பதை அறியும்போது  பிரமிப்பாகயிருக்கிறது 
அறக்கட்டளையின் வரவு செலவுகளை மாதந்தோறும் வங்கியின் அறிக்கையோடு தன் நிசப்தம் வலைப்பூவில் வெளியிடுகிறார். வங்கியின் ஸ்டேட்மென்ட்டில் வரிசை எண்ணிட்டு அவை பெறப்பட்ட நாள் நன்கொடை/ வேண்டுகோளின் விபரங்கள்(எந்த மாதிரி உதவி கோரப்பட்டிருக்கிறது)   அதன் தற்போதைய நிலவரம், போன்ற விபரங்களை ஒரு பட்டியலாக  இணைத்து வெளியிடுகிறார்.  



“உரியத் தளராத ஆர்வத்துடனும் மங்காத அறவுணர்ச்சியுடனும்  வா மணிகண்டன் பணியாற்றிவருகிறார். அவரது நிசப்தம் அறக்கட்டளை ஆதரவற்றவர்களுக்கான மருத்துவ உதவிக்கும், எளியோரின் கல்விக்கும் பெரும்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்முன் இதற்காக  தலைவணங்குகிறேன்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 
கல்வி மருத்துவ உதவிகளைத்தாண்டி சமூகப்பணிகளையும் செய்கிறது நிசப்தம். அறக்கட்டளை. 2015  பெரு வெள்ளத்தில்  அரசு நிவாரணப்பணிகள் அடையாத கிராமங்களைத் தேடிச் சென்று உதவியிருக்கிறார்கள்.  கடந்த ஆண்டு முதல் ஏரி குளங்களை தூர்வாரி மீட்டெடுத்தல், சமுதாய காடுகள் உருவாக்கம் போன்றவற்றைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள் . 




வேமாண்டம்பாளையம் ஒரு  சிறிய கிராமம்.   ஒரு வருடத்துக்கு முன்பாக அந்த ஊரில் இருந்த குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரத்தையெல்லாம் நிசப்தம் சார்பில் அழித்துக் கொடுத்திருக்கிறார்கள்.. குளம் மட்டுமில்லை- பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் குளம். சில ஊர்களில் இருக்கும் குளங்கள் அக்கம்பக்கத்து ஆறுகளில், ஓடைகளில் நீர் ஓடினால் நிரம்ப வாய்ப்பிருக்கிறது. இந்தக் குளத்துக்கு அந்த வாய்ப்பில்லை. மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை. வானம் பார்த்த பூமி. காய்ந்து கருவாடாக்கிக் கிடந்த அந்தக்குளம். மழையால்  இப்போது  நிரம்பியிருக்கிறது.. ஒரு வருடக் காத்திருப்புக்குப் பிறகான பெரு மகிழ்ச்சி இது.  என்கிறார் மணிகண்டன்.. பல ஆண்டுகளாகக் காய்ந்து கிடந்த பூமியில் நீர் நிரம்பிக் கிடப்பதை பார்க்க யாருக்குத்தான் மகிழ்வாக இருக்காது? அடுத்த இரண்டாண்டுகளுக்கு அந்தக் கிராமத்தில் தண்ணீருக்கு பிரச்சனையில்லை.  நிரம்பிய நீரைக்கண்டு மனம் நிறைந்திருக்கும் நிசப்தம்  இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்குச் செய்திருக்கிறார்கள்.


 இம்மாதிரி நீர் நிலைகளின் அருகில் அடர் வனம் என்ற முறையில் நிறைய மரங்களை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அடர்வனம் என்பது ஒரே இடத்தில் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களைத் தேர்ந்தெடுத்து மிக நெருக்கமாக நட்டு வளர்ப்பது,. மிக வேகமாக வளரும் அந்த மண்ணின் தன்மைக்கேற்ற மரக்கன்றுகளைக் கண்டுபிடித்து நடுகிறார்கள்  ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளில் அந்த இடத்தில்  ஒரு சின்ன  அடர் வனம் உருவாகிறது. கோட்டுப்புள்ளாம்பாளையம் என்ற கிராமத்தில்  இரண்டாயிரம் செடிகளுடன் ஒரு வனத்தை உருவாக்கி அது செழித்து என அந்தப்பகுதி இப்போது பக்கத்துகிராம்மக்களுக்கு டூரிஸ்ட்ஸ்பாட்டாகியிருக்கிறது



இத்தனை பெரியபணிகளை எப்படி இவரால் சாதிக்க முடிகிறது.? “தொடர்ந்த  முயற்சிகள் தான் சார்” என்கிறார்.  முதலில் கிராமங்களில் இளைஞர்களை அழைத்துபேசுகிறோம். நிறையவே பேசுகிறோம்.. அரசியல் வாதிகளிடம் பெற்ற அனுபவத்தால்  மிகத் தயங்குவார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையைப் பெற்றபின் திட்டங்களை விளக்கினால் முன்வருவார்கள்.  முன் வந்துவிட்டால் பின் வாங்குவதில்லை.வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது உள்ளுர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துபேசினால் 95% பேர்  உதவுகிறார்கள்  என்று சொல்லும் இவர் சில கிராமங்களில்  சவால்களையும் சந்தித்திருக்கிறார்.  ஆனால் மனம்தளாரமல் தொடர்கிறார்.


“நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கித் தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது  என்பது  ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களைவிடவும் உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான் நாம் படுகிற அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும். நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும் அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். என்று சொல்லும் மணிகண்டன் இப்போது பங்களுரிலிருந்து பணிமாறி  கொங்கு நாட்டில் கோவைக்கு வந்திருக்கிறார்
இவர்களைப் போன்றவர்கள் ஓய்வு நேரம் வார விடுமுறைகளை தியாகம் செய்து  சமூக சேவைசெய்வது அவர்களுக்கு அது உள்ளூர அளிக்கும் ஒரு நிறைவுக்காக, விடுதலைக்காக. 
நம்மைப்போன்ற பலரால் அதைச் செய்யமுடியாது. 
மணிகண்டன் போன்றவர்களை முன்வைத்தே 
‘எல்லாருக்கும் பெய்யும் மழை’

காகிதப்புலி




லோக்ஆயுக்தா என்றால்மக்களால்நியமிக்கப்பட்டவர்கள்என்றுஅர்த்தம். சுதந்திரம்பெற்றபின்னர்அரசின்திட்டங்கள்

சட்டதிட்டங்கள்மக்களுக்குமுறையாகச்சென்றுசேர்கிறதாஎன்றஅடிப்படையில்ஆரம்பிக்கப்பட்டது. இந்தவிவாதம் 1960-களில்தொடங்கியது. பொதுவாழ்க்கையில்இருப்பவர்கள்ஊழலில்ஈடுபடுவதால், ஊழல்முக்கியப்பிரச்சினையாகஇருந்ததால்அதுவும்கூடுதலாகசேர்க்கப்பட்டது. இதுதான்லோக்ஆயுக்தாஎன்றவடிவத்தின்முக்கியஆரம்பம்
ஆளுங்கட்சியின்தலையீடுஏதுமின்றிதன்னாட்சியாக, முழுஅதிகாரத்தோடுசெயல்படக்கூடியலஞ்சஊழல்ஒழிப்புக்கானஆணையம்மற்றும்அரசுசேவைகளில்மக்களுக்குள்ளகுறைபாடுகளைதீர்க்கஉதவும்ஒருமையம். இதைதமிழில்அழகாககூறவேண்டுமானால், 
‘ஊழல்விசாரிப்புமற்றும்மக்கள்குறைதீர்ஆணையம்’என்றுஅழைக்கலாம்.

இது எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் வழி காட்டியிருந்தது. ஆனால் மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. சமூக  ஆர்வலர்களின் பல முறையீடுகளினால் சில மாநிலங்களில் அமைக்கப்பட்டது.சமீபத்தியநீதிமன்றகணக்கின்படி 12மாநிலங்கள்தவிரஅனைத்துமாநிலங்களிலும்உள்ளது. லோக்ஆயுக்தாநீதிமன்றங்களைஏன்அமைக்கவில்லைஎன்பதுதொடர்பாககடந்த ஆண்டு ஜுலை 31ம் தேதிக்குள் பிரமாணப்பத்திரம்தாக்கல்செய்யும்படிதமிழகம்உள்ளிட்ட 12
 மாநிலங்களுக்குஉச்சநீதிமன்றம்கடந்தமாதம்உத்தரவிட்டது.
அனைத்துக்கட்சிகளும், சட்டப்பஞ்சாயத்துபோன்றஅமைப்புகளும், மீடியாக்களும்நெருக்கியதாலும்.உச்சநீதிமன்றத்திற்குஅறிக்கைஅளிக்கவேண்டியகட்டாயம் நேர்ந்ததின் விளைவாக கடந்த ஆண்டு ஜுலை மாத கூட்டத்தொடரின்  நாளன்று தமிழக அரசு ஒரு மசோதாவை அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறது.


ஏன் இந்த லோக் ஆயுக்தா அவசியம்?


லஞ்சஒழிப்புத்துறைமாநிலஅரசின்வரம்பிற்குள்வரும், லஞ்சஒழிப்புத்துறையில்உள்ளஅதிகாரிகளைமாநிலஅரசுநினைத்தபடிதூக்கிஅடிக்கலாம், தங்களுக்கேற்றஆட்களைநியமிக்கலாம். ஆனால்லோக்ஆயுக்தாவில்அப்படிச்செய்யமுடியாது. அதன்நியமனம்மாநிலஅரசுசம்பந்தப்பட்டதாகஇருந்தாலும்நீக்கமுடியாது, மாற்றவும்முடியாது.

லோக்ஆயுக்தாதலைவர்லஞ்சப்புகாரின்நடவடிக்கை எடுக்கப்பரிந்துரைக்கலாம்,
தாமாகமுன்வந்துவழக்குப்பதிவுசெய்யலாம். அமைச்சர்கள், முதல்வர், அதிகாரிகள்வீட்டுக்குள்சென்றுகூடரெய்டுநடத்தஉரிமைஉண்டு. பொதுமக்கள்சேவைபுகாரின்பேரில்நோட்டீஸ்அனுப்பலாம். விளக்கம்கேட்கலாம்.

லோக்ஆயுக்தாபோலீஸ்என்றுதனியாகஇருக்கும். இதற்கானபோலீஸார்மாநிலபோலீஸாராகஇருந்தாலும்லோக்ஆயுக்தாகட்டுப்பாட்டில்இருப்பார்கள்.

ஆனால் இந்த விதிமுறைகள்மாநிலஅரசுஇயற்றும்சட்டத்தின்பிரிவில்இருக்கவேண்டும். இதில்முதல்வர், அமைச்சர்கள்வீடுகளுக்குரெய்டுபோகக்கூடாதுபோன்ற விஷயங்களுக்கு விதிவிலக்குகொடுத்தால்அதுநடக்காது.

லோக்ஆயுக்தாவில்என்னென்னஅம்சங்கள்இருக்க வேண்டும்.,
லோக்ஆயுக்தாவில்யார்தலைவராகஇருப்பது, யார்தலைவரைநியமிப்பது. யார்தேர்ந்தெடுப்பதுஎன்றவரையறை எல்லாவற்றையும் மாநில அரசுகள்  தங்கள் சட்ட வடிவில் சொல்ல வேண்டும்  அதே போல் என்னென்னவிஷயங்கள்விசாரிக்கலாம், என்னஅதிகாரங்கள்உண்டுஎன்ற விஷயங்களும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்

அப்படியானால் மாநில அரசுகள் இந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடுமே?

.இந்த நிலையைத் தவிர்க்கத்தான்  மத்தியஅரசேஇந்தியாவுக்கானபொதுவானஒருலோக்ஆயுக்தாசட்டத்தைஉருவாக்க வேண்டும் அல்லது பொது வரையறைகளைஅளிக்கவேண்டும்என்றும். மத்தியஅரசுலோக்பால், மாநிலஅரசுலோக்ஆயுக்தாஎன்றுஇருக்கவேண்டும்.அதேநேரத்தில்நியமனம்போன்றவிஷயங்களில்வரையறைவேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் போராடுகிறார்கள்.

மாநில அரசுகள்  இந்த சட்டம் இயற்றுவதும் மாற்றுவதும்  தங்கள் உரிமை என்ற பெயரில் கர்நாடகநாடக அரசு ஒரு  மோசமான முன்னூதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.லோக்ஆயுக்தாவில்கடுமையானசட்டப்பிரிவுகள்உள்ளமாநிலம்என்றால்அதுசந்தோஷ்ஹெக்டேஇருந்தபோதுகர்நாடகாவில்தான். என்ற நிலையிருந்தது.
 .கர்நாடகாவில்அறிமுகப்படுத்தபட்ட லோக்ஆயுக்தாசட்டப்பிரிவு 13 படிமுதல்வர்மீதோ, அமைச்சர்மீதோ, ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள்மீதுஒருபுகார்வருகிறதுஎன்றுவைத்துக்கொள்வோம். அப்போதுதான்சட்டப்பிரிவு 13-ன்கீழ்லோக்ஆயுக்தாவின்பணிதொடங்கும். இந்தப்பிரிவின்கீழ்உங்கள்மீதுபுகார்வந்துள்ளது, நீங்கள்பதவியில்இருந்தால்விசாரிப்பதில்குறுக்கீடுஇருக்கும். ஆகவே, நீங்கள்பதவிவிலகவேண்டும்என்றுகோரலாம்.
இதன் கிழ் எடுத்த நடவடிக்கையின் படி தான் அன்றைய் முதல்வர் எடியூரப் கைதாகவும் பதவி விலகவும் நேர்ந்தது.

ஆனால்கர்நாடகமாநிலஅரசு தேர்தலுக்குப் பின்  2014-ல்எடுத்த ஒருமுடிவினால் . மக்களுக்கானசேவைகளைவிசாரிப்பதுலோக்ஆயுக்தாவில்இருக்காது. இனிதனியாகஒருஅமைப்புபார்த்துக்கொள்ளும்என்றுமுடிவெடுத்தார்கள். 2016-ம்ஆண்டில் ‘ஆன்டிகரெப்ஷன்பீரோ’என்றஅமைப்பைஉருவாக்கிஇனிஇந்தஅமைப்புலஞ்சஊழல்பிரச்சினைகளைபார்த்துக்கொள்ளும்என்றுசட்டம்இயற்றிவிட்டார்கள்.
இதற்குஎதிர்ப்புதெரிவித்து முன்னாள் நீதிபதிசந்தோஷ்ஹெக்டே “கர்நாடகாவில்லோக்ஆயுக்தாமரணப்படுக்கையில்உள்ளது”என்றார். கர்நாடகமாநிலலோக்ஆயுக்தாதலைவர் ''நாங்கள்இனிலஞ்ச, ஊழல்புகார்வந்தால்அதை ‘ஆன்டிகரெப்ஷம்பீரோவுக்கு’அனுப்பிவிடுவோம்ஏனென்றால்எங்கள்அதிகாரம்குறைக்கப்பட்டுவிட்டது'' என்றுகூறியுள்ளார்.எனவே ஒரு மாநில அரசு இந்த லோக் ஆயூக்தாவை ஏற்படுத்தினாலும் அதை செயலிழக்கச் செய்யும் வலிமை பெற்றதாக யிருக்கிறது.

தமிழகம் கொண்டுவந்திருக்கும் சட்டம் எப்படியிருக்கிறது?
சட்டத்தின் முன் வடிவை பொதுவெளியில் விவாதிக்காமல் அவசரகதியில் மசோதாவை நிறைவேற்றியபின்னர்  அதற்கான விதி முறைகளை அறிவித்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது

ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணை மட்டுமேநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாது

லோக்ஆயுக்தாவிற்குதலைவர்மற்றும்உறுப்பினர்களைதேர்வுசெய்யும் “தேடுதல்குழு”உறுப்பினர்களைஎந்தநேரத்திலும்மாற்றலாம்.

இந்த விதிகள் அறிவிப்புவுடன் பல சமூக ஆர்வ அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்திருக்கின்றன.
இந்த  விதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணைநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாதுஎன்றெல்லாம்வகுத்துள்ளவிதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.


ஊழல்ஒழிப்பின்அடித்தளத்தையேதகர்த்துஎறியும்
இந்த விதிகளைஉடனடியாகரத்துசெய்யவேண்டும். இந்த அரசு, லோக்ஆயுக்தாஅமைப்பைஒரு “காகிதப்புலி”போல்ஆக்கிகாலில்போட்டுமிதிக்கநினைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
.மாநிலஅரசின்உரிமைஎன்ற பெயரால் தன்இஷ்டத்துக்கு சட்டங்களை மாற்ற அனுமதிக்காமல்  . லோக்ஆயுக்தாவைக்காப்பாற்றஉச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டுவராதவரையில் லோக்ஆயுக்தாஎன்பது உண்மையில் மக்களால்நியமிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்

25/12/18

நீலக்கடலுக்கடியிலும்... வெண்மேகங்களுக்கு மேலும் .


நீலக்கடலுக்கடியில்...
 
சோலார் பேனல் தொப்பிகள் அணிந்திருக்கும் உயர்ந்த தெருவிளக்குகள் அணிவகுத்து நிற்கும்  விசாகபட்டின கடற்கரைச் சாலையில்  செல்லும் நம்மை நிறுத்துவது கடற்கரையிலிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான கறுப்பு சப் மெரின். ஆம். ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கரையில் நிற்கிறது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குர்சுரா என்ற நீர்முழ்கிகப்பலை தரையில் நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.



  சதாரணமாக ஒரு நீர் மூழ்கிக் கப்பலை  உள்ளே சென்று பார்க்க முடியாது என்பதால்,1969லிருந்து 2001 வரை  இந்திய கடற்படையில் ஒரு லட்சம் கிமீக்கும் அதிகம் பயணித்து  ஓய்வு பெற்ற இந்த ரஷ்ய நீர்முழ்கிகப்பலை  ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.
படிகள் ஏறி 300 அடி நீளமுள்ள அந்த நீர் மூழ்கிகப்பலுக்குள் நுழையும் நம்மை வரவேற்று  அந்தக் கப்பலின் கதையை விவரிக்கிறார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். 1971 பாக்கிஸ்தான் போரில்  அரபிக்கடலில் ரோந்து பணியிலிருந்தபோது அங்கு நுழைய முயன்ற பாக்கிஸ்தான் கப்பல்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.
இரண்டு பேர் மட்டுமே நடக்கக்கூடிய  சிறிய பாதை. இரண்டு பக்கமும் பலவகை குட்டி இயந்திரங்கள், கருவிகள். குழாய்கள், வயர்கள் எல்லாம். சற்று வேகமாகத் திரும்பினால் எதாவது ஒரு கருவியில் முட்டிக்கொண்டுவிடுவோம்.  இந்தக்கப்பலில் 67 கடற்படை வீரர்களும் 8 அதிகாரிகளும் மாதக்கணக்கில் வசித்திருக்கிறார்கள். எந்தக் கருவிகளை இயக்கினால் கப்பல்  எந்த வேகத்தில் எவ்வளவு ஆழம் கடலில்  மூழ்கும், எந்த வேகத்தில் வெளியே வரும் என்பதை விளக்குகிறார்கள். பிரமிப்பாகியிருக்கிறது.  நீண்ட நாட்கள் கடலில் மூழ்கியே யிருக்கும் இந்தக் கப்பலில் குறுகலான இடத்தில் அடுக்குப் படுக்கைகள்.  உணவு வேளையில் அதில் ஒன்று  டைனிங்டேபிளாக மாற்றப்படும். இரண்டே டாய்லெட், இரண்டு வாஷ் பேசின்கள் மட்டுமே.  டெலிபோன்பூத் சைஸில்  ஒரு  சின்ன கிச்சன். இவற்றில் நம் வீரர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரியவைக்க அந்தந்த இடங்களில்  வீரர்களின் பைபர்  உருவங்களை  அமைத்திருக்கிறார்கள்.  நமது பாதுகாப்புக்காக இந்தக் கடற்படை வீரர்கள் எத்தனைக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எளிதாக உணரவைக்கும் காட்சிகள்


ஒரே நேரத்தில் கடலுக்கடியிலிருந்து  ஆறு டார்பிடோக்களை  செலுத்தித்  தாக்கும்  வசதி கொண்ட இந்தக் கப்பலில் அது எப்படி இயங்கும் என்பதை விளக்குகிறார்கள். அந்த டார்பிடோக்களில் ஒன்றும் கப்பலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கிறது. 
ஆசியாவிலேயே இப்படி ஒரு  கப்பலையே அருங்காட்சியகமாக்கியிருப்பது  இங்குத்தானாம், எழுந்த எண்ணத்தைச் செயலாக்கியவர் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதை இப்படி கரையில் இழுத்து  நிறுத்தப் பல பெரிய இயந்திரங்களை  நிறுவி 18 மாதங்கள் உழைத்திருக்கிறார்கள்.  செலவு    14 கோடி ரூபாய்கள். 
மறு முனையிலிருந்து படிகளிலிறங்கி கீழே வரும்போது அந்தக்  கம்பீரமான கப்பலை ப்போலவே  நமது கடற்படையின் கம்பீரமும் நம் மனதில் அழியா காட்சிகளாகத் தங்குகிறது.     
  

வெண் மேகங்களுக்கு மேலே ...
 ஒரு நீர்மூழ்கி கப்பலைப்பார்த்த பிரமிப்புடன் வெளியே வரும் நம்மை ஆச்சரியப்படுத்துவது  சாலையின் ,மறுபக்கத்தில்  நிற்கும் ஒரு போர் விமானம்.  அது  TU142 என்று அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் விமானம். அதன் பணி கடலுக்கடியில் நகரும் சப்மெரின்களை  ஒலியின் மூலம் கண்காணித்து அறிந்து அதிரடி வேகத்தில் தாக்குவது. ரஷ்யத்தயாரிப்பான  இது இந்திய வான் படையில்  30000 மைல்கள் பறந்து 29 ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றிருக்கிறது.
இதை இங்கு நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கவேண்டும் என்ற யோசனையும் அன்றைய முதல்வர்  திரு சந்திரபாபுவுடையது தான். கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். திறந்துவைத்திருக்கிறார்.
  ஒரு விமானத்தின் உள் பகுதியைப் போலவே ஒரு காட்சிகூடத்தை அமைத்திருக்கிறார்கள். ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும் அந்தக்கூடத்தில் விளக்கப் படங்கள், காணொளி காட்சிகள் போர் விமானத்திலிருந்து வீசும் குண்டுகள் பாரசூட், உடைகள்  எல்லாம்  காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். விமானியின் காக்பிட் சீட்டில்  அறையில் நாமே உட்கார்ந்து பார்க்கலாம்.
.  பாரசூட்டுகளை  திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது இங்கு தொட்டுப் பார்க்கும் அளவில் பெரிய கூடாரம்  விரித்துவைக்கப்பட்டிருக்கிறது..விமானம் நீரில் மூழ்கிவிட்டால் அல்லது எங்காவது மோதி தரையிறங்கிவிட்டால் காப்பற்றிக்கொள்ள கருவிகள் அடங்கிய அலமாரி,மருந்துபெட்டகம் இப்படி பல.

விமான விபத்து ஏற்படும் போதெல்லாம் செய்திகளில் அடிபடும் “பிளாக் பாக்ஸ்”  இருக்கிறது. பெயர்தான் கருப்பு பெட்டியே தவிர அது ஒளிரும் ஆரஞ்சு வண்ணத்திலிருக்கிறது. எளிதில் எங்கிருந்தும் அடையாளம் காணமுடியும் என்பதற்கான வண்ணமாம் அது 
பார்ப்பவற்றை எளிதில் புரிந்துகொள்ள நுழைந்தவுடன் ஒரு ஸ்மார்ட் போன் தருகிறார்கள்  அதன் ஹெட்போன்களை  காதில் பொருத்திக்கொண்டு பார்க்கும் படங்களிலிருக்கும் எண்ணைப் போனில் அழுத்தினால்  தெளிவான ஆங்கிலத்தில் அழகான குரலில் விபரம் கேட்கிறது..  சுந்தரத் தெலுங்கும் பேசுகிறது
ஆல்பட்ராஸ்(ALBATROSS) என்பது ஒரு கடல் வாழ்பறவை. மிக அதிக உயரத்தில் மிக வேகமாகப் பறக்கக்கூடிய பறவை. ஒரு நாளைக்கு 1000 கிமீக்கள் கூட பறக்கும் சக்திகொண்டது. அந்த பறவையின் வடிவில்  இந்த விமானம் அமைக்கபட்டிருப்பது என்பதை விளக்க  அதன் வடிவத்தின் நிழல் இந்த விமானம்போல் விழுவதைக்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.
அந்த விமானம் தன் பணிக்காலத்தில் செய்த சாதனைகளையும் அதைச்செய்த வீரர்களின் படங்களையும் விமான வால் பகுதியைப்போலவே வடிவமைத்து  வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட் செய்துவிட்டு  வெளியே வந்தால் நாம் இத்தனை நேரம் பார்த்து விவரங்கள்  அறிந்த விமானமே நிற்கிறது. அதன் உள்ளே சென்று பார்க்கிறோம். இத்தனை சின்ன  இடத்திலா இவ்வளவு விஷயங்களையும் அடக்கியிருக்கிறார்கள் என்று எழும் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

விமானத்தைச்  சுற்றி  நடந்து வரும்போது  திறந்திருக்கும் அதன் அடிவயிற்றுப் பகுதியிலிருந்து தான்  எதிரியின் இலக்கைத் தாக்கும் குண்டுகள் பாயும் என்பது புரிகிறது.  வயதானாலும் விமானத்தைப் புத்தம் புதிது போல சீராக்கி பாரமரிக்கிறார்கள். விமானத்தைப்  பல பகுதிகளாகப் பிரித்து இங்குக் கொண்டுவந்து  இணைத்து உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சி அமைக்கச் செலவு 14 கோடி என்கிறது தகவல் பலகை. 
நம் வான்படையின் வலிமையை  நாமும் நமது மாணவர்களும் தெளிவாகப் புரிந்துகொண்டு  பெருமிதம் அடைய இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது இது ஒரு  நல்ல முதலீடுதானே  என்று தோன்றிற்று.
ஒரே நாளில் நமது கடற்படை, வான் படையின் வலிமையை,  பெருமைகளை அறிய  ஒரு  வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் திரும்புகிறோம்.

28/11/18

நதியென்னும் கடலிலே ....


கடலென விரிந்திருக்கிறது பிரம்மபுத்திரா.. கண்ணுக்கெட்டியவரை  நீர்பரப்பு.  ஒரு  நதியில் பயணிக்கிறோம் என்ற உணர்வே இல்லை.நாம் போக வேண்டிய  தீவுக்கு ஒரு மணிநேரப்பயணம். என்றும் திரும்பும் போது  நதியை எதிர்த்துப் பயணிப்பதால்   இரண்டு மணிநேரமாகுமாம். என்பதைக்கேட்டபின்னர் தான் நதியின் வேகம் நமக்குத் தெரிகிறது. 


அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. நதியின் நடுவிலிருக்கும் அந்தத் தீவின்  பெயர் மஜோலி.

கெளஹாத்தியிலிருந்து 300 கீமி தொலைவிலிருக்கும் இந்தத்தீவு அஸ்ஸாமின் கலாச்சாரம் பிறந்த தொட்டில் என வர்ணிக்கப்படுகிறது.. 144  சிறிய கிராமங்களைக் கொண்டது  இந்தத் தீவு

நதிக்கரைகள் நாகரிகம் பிறந்த தொட்டில்கள்  எனச்சொல்லப்படுகிறது. அப்படிப் பட்ட தொட்டில்களில் பல காலப்போக்கில்  தொழில் நகரங்களாகி நதிகளையே மாசுபடுத்தி அழித்துக்கொண்டிருக்கின்றன.    விதிவிலக்காக  ஒரு சில இடங்களில் அப்படிப் பிறந்த கலாச்சார நாகரிகங்கள் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. அதில் ஒன்று இந்த மஜோலித் தீவு. அதைக்காணத்தான் இந்தப்பயணம்.  

 குளிர் காற்று முகத்தில்  தாக்கும் அந்தப் படகு பயணத்தில் கடக்கும் நதியின் பிரம்மாண்டம்  அதைப்பற்றி எண்ண வைக்கிறது.  ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றான இந்த பிரம்மபுத்திரா இமயத்தில் 8000 அடிஉயரத்திலிருக்கும் கன்ஜன்சிங்கா  சிகரத்தில் மனோசாவர் ஏரிக்குச்  சற்று மேலே உருகும் பனிப்பாறைகளிலிருந்து பிறந்து திபேத்,   பங்களாதேஷ்  இந்தியா  என்று மூன்று நாடுகளின் வழியே பாய்ந்து பெருகி இறுதியில் வங்காளத்தில் கடலில் சேருகிறது.  இமயத்தில் துவங்கும் இதன் பயணம் பல நதிகளைப் போல ஒரே திசையில் வளைந்து நெளிந்து ஓடாமல்  அருணாசலபிரதேசத்தில் ஒரு யூ  வளவு எடுத்து எதிர்த் திசையில் பாய்வது இயற்கை விடுக்கும் புரியாத புதிர்களில் ஒன்று. இந்த ஒரு நதிக்கு ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயர். திபேத்தில் ஸாங் போ( TASNG PO))   என்றும் பங்களா தேஷில் ஜமுனா (யமுனா இல்லை) அருணாச்சலபிரதேசத்தில் திஹாங் என்றும் அழைக்கப்படுகிறது. பெயர் எதுவாக யிருந்தால்  என்ன?  புனிதமான கைலாசத்திலிருந்து வரும் ஒரு மகா நதியில் பயணத்துக்கொண்டிருகிறோம் என்ற எண்ணம் சிலிர்க்கவைக்கிறது. உண்மையிலேயே இது மகா நதி. மொத்தம் 2900 கீமி ஓடுகிறது. இதில் திபேத் பகுதி உயர்ந்த மலைகளிலிருந்து கணவாய்களில் விழும் பிரம்மாண்டமான அருவியாகவும், காடுகளை உடைத்தெறிந்து கோபமாய்  ஒடி அருணாச்சல பிரதேச  சமவெளியில்  சாந்தமாகி  அங்குள்ள திபாங், லோகித் நதிகளை இணைத்துக்கொண்டு  பிரம்புத்திராவாக அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது. பல இடங்களில் இந்த நதி அகலமாக மட்டுமில்லை மிக ஆழமாகவும் இருக்கிறது.  சராசரி ஆழம் 124 அடி என்ற தகவலை மெல்ல நம் படகைக்  கடந்து போகும்  அஸ்ஸாம் சுற்றுலாத்துறையின் எம்.வி மஹாபானு.  என்ற பெரிய சொகுசுக் கப்பல். உறுதி செய்கிறது  டாலரில் கட்டணம் வசூலிக்கும் இந்தக் கப்பல் மஜோலியைப் பார்க்கவரும் வெளிநாட்டினருக்காக. கெளகுவாத்தியிலிருந்து வருகிறது.

தீவை அடைந்தவுடன்  நமக்குச் சற்று அதிர்சியாகயிருக்கிறது. ஒருகாலத்தில் கலைகளையும், கலைஞர்களையும் போற்ற மட்டுமே உருவாக்கப் பட்ட இந்தத் தீவு இன்று அதன் அடையாளங்களை இழந்து ஒரு சராசரி இந்திய நகரமாகிவிட்டதைப்பார்த்ததும் .  நாம் போகப்போவது பாரம்பரிய மிக்க இடத்துக்குத்தானா? என்ற சந்தேகம் கூடத் தலைதூக்கியது.  நாம் போக வேண்டிய கிராமம் சற்று தொலைவிலிருக்கிறது என்று அழைத்துப்போனார்கள்   மணல் மேடுகளான பாதையில் கிராமத்தை நோக்கிச்செல்லும் நம்மை நிறுத்துகிறது ஒரு அசத்தலான சின்ன ஏரி. பிக்சர் போஸ்ட் கார்ட் போல அழகான தோற்றம் ஒருமணி நேரப்யணத்துக்கு பின் சட்டென்று ஒரு அசலான கிராமத்துக்குள் நுழைகிறோம்

15ஆம் நூற்றாண்டில் அன்றைய மன்னர்களின் ஆசியுடன்  ஶ்ரீமத் சங்கரதேவும் அவரது சீடர் மஹாதேவ்வும் புதிய வைஷ்ணவ சம்பிரதாயங்களை பரப்ப இங்கு ஸத்ரா என்ற அமைப்புகளை நிறுவினர். கலைகளை முறையாகக் கற்று அதில் ஒரு முகமாக மனத்தைச் செலுத்துவது உயர்ந்த பக்தி என்பதைக் கற்பிக்க  இந்த ஸத்ராக்கள் இயங்கின. இதில்   இசை, நடனம் , நாடகம், உபன்யாசம்,ஓவியம், கைவினைக்கலைகள்  கற்பிக்க தனித்தனி ஸத்தராக்கள் நிறுவப்பட்டு .   அவற்றில் குரு பரம்ரையில் கலைகள் கற்பிக்கப்பட்டன அவற்றில்  சில இன்றும் இயங்குகின்றன.

இந்தக் கிராமத்தில் தான் அஸ்ஸாமின் மரபுக் கலைகளில் ஒன்றான முகமூடிகள் தயாரிக்கும் கலை 5000 ஆண்டுகளாகக்  கற்பிக்கப்பட்டு, போற்றப்படும் சாமகுரி ஸத்ரா (Samaguri Satra)  இருக்கிறது. இதன் பரம்பரையில் வந்த  இன்றைய ஸத்திரதிகார் (தலைவர்). குஷ்கந்தா தேவ் கோஸ்வாமியை சந்திக்கிறோம்

“முகமூடி என்பது சரியான சொல் இல்லை. ஆங்கில மாஸ்க் என்ற பதம் முகம் அடையாளம் தெரியாமல் மூடிக்கொள்வதைக் குறிப்பது,.  நாங்கள் செய்வது முகங்கள்.. இதில் முக்கியமான விஷயம்  அந்தக் கலைஞர்களே அதைத்தயாரிக்கிறார்கள். ஆங்கிலத்தில் தெளிவாக பேசும்  இவர் இந்தக்கலைஞர்களின் பரம்பரையில் வந்தவர். நாடகலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சங்கீத நாடக அகதமியின் விருது பெற்ற கலைஞர்.. . முதலில் மூங்கில் இழைகளால் உருவாக்கப்பட்ட முக அவுட்லைன். அந்த இழைகள் ஈரமாகியிருக்கும்போது செய்யப்படுவதால் அது நல்ல வெயிலில் உலர்ந்த பின் அதன்மீது மிக மெல்லியதாக நெய்யப்பட்ட கைத்தறி துணி போர்த்தப்பட்டு அதன்மீது  ஒரு கலவை பூசப்படுகிறது. இந்தக்கலவை பிரம்மபுத்திராவின் வண்டலிருந்து சலித்தெடுத்த மென்மையான மண், பசுவின் சாணி, வாழைமட்டைச்சாறு, மரப்பட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட பசை இவை கலந்து உருவாக்கப்பட்ட  ஒரு கலவை. இதை அந்தத் துணியின் மீது பூசி விரல்களால் அழுத்தி அந்த கதா பாத்திரத்தின் முகத்தை உருவாக்க வேண்டும். இதை  நிழலில் 3அல்லது 4 நாள் உலர வைக்கவேண்டும். பின்னர்  அவற்றில் கண் உதடு போன்ற இடங்களை மெல்லிய கத்தியால் செதுக்கி சீராக்க வேண்டும். பின்னர் அதற்குப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் வண்ணங்கள் பூச வேண்டும். இந்த வண்ணங்களும் இயற்கைப்பொருட்களான, பச்சை இலை, மஞ்சள், எலுமிச்சை சாறு, வாழைப்பூ கடுக்காய் போன்றவற்றால்  தயாரிக்கப்படுகிறது. இத்தனையும் கலைஞர்களாலும், அவரது குடும்பத்தாராலும் மட்டுமே செய்யப்படுகிறது

அணிந்து கொள்ளும் முகம் அதிக எடையில்லாமல் ஆடையைப்போல எளிதாக அணியக்கூடியதாக இருக்கவேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தும் நிலையிலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மெனக்கிடல். ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாடக கலைஞர்கள் இங்கு வந்து தங்கி இதைக்கற்கிறார்கள். அவர்களின் காதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்

 இந்தக்கலையைப்போல் அருகிலிருக்கும் கிராமங்களில் இசை, நடனம் மட்பாண்டங்கள், ஓவியம்  கற்பிக்கும் ஸத்ராக்கள்  இருக்கின்றன. இந்த ஸத்ராக்களின் முகப்பு ஒரு கோவில் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  அதன்   பெரிய கூடத்தில் நடன,இசைப்பயிற்சிகள் வகுப்புகள் நடக்கின்றன எல்லாம் குருகுல முறையில்தான். . மாணவர்களில் அதிகமானவர்கள் 7,அல்லது 8  வயது மதிக்கக்கூடிய வருங்கால நடன கலைஞர்கள்.  சின்ன பஞ்சகச்சம் மாதிரியான உடை,அழுத்தமான ஆரஞ்ச் கலர் ஜிப்பாவில் பயிற்சி பெற்றுகொண்டிருக்கிறார்கள். 

ஆனால்  வைஷண கலாச்சாரம் பிறந்த இடம் என்று சொல்லுப்படும் இந்த தீவில்  ஒரு கோவில் கூட இல்லாதது ஆச்சரியமாகியிருக்கிறது.

மஜோலியைப்போல மணல் திட்டாக பிரம்மபுதிரா நதியின் நடுவே எழுந்த மேலும் சில தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் ஒரு தனி மனிதர் உருவாக்கிய காடு கூட இருக்கிறது. மேலும் சிலவற்றில் பழங்குடிகள் வாழ்வதால் அனுமதியில்லை. அவற்றை தொலைவிலிருந்து பார்த்துவிட்டுக் கரை திரும்புகிறோம்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா  பாயுமிடங்களில் கரைகளின் இரு புறமும் எல்லாக்  கிராமங்களிலும் கோவில்கள். பல கோவில்களில் நதி கோவிலினுள்ள குளத்தில் நீரை நிரப்பும் முறை.   சிலகோவில்களின் வயது  2000 ஆண்டு என்ற செய்தி நம்மை நதியின் வயதை யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கும் இந்த நதி ஏன் வெள்ளம் வரும்போது  நதிக்கரைக்கிராமங்களையும் தீவுகளையும் கடுமையாக தாக்குகிறது.?

 மற்ற நதிகளைப்போலப்  பெண்ணாக இல்லாமல் ஒரு ஆண் பெயரில்  நதியாக இருப்பதால் அவ்வப்போது தன் ஆண்மையின் லட்சணங்களில் ஒன்றான ருத்திரத்தை காட்டிவிடுகிறதோ என்ற எண்ணத்துடன்  மாநிலப்  பயணத்தைத் தொடர்கிறோம்.  

9/11/18

நம்மை அழைக்கும் நாச்சியார் மாளிகை


  

" மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
  வில்லிப்புத் தூருறை...
என்று தன் பிறந்த ஊரான ஶ்ரீவில்லிபுத்துரை பெருமையுடன் நாச்சியார் திருமொழியிலும்
விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
என்று பெரியாழ்வாரும் அ/றிமுகப்படுத்தும் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு நாச்சியார் திரு மாளிகை என அழைக்கப்படும் ஆண்டாள் கோவிலைக்காண பயணித்துக் கொண்டிருக்கிறோம் ந்தக் கோவில் தமிழகப் பழமையான கோவில்களில் ஒன்று. பரவலாக அது ஆண்டாள் கோவில் என்று அறியப்பட்டாலும் உண்மையில் அந்தக்கோவில் வடபத்ரசயனர் கோயில். இந்தப் பெருமாளுக்குத் தான் ஆண்டாள் தன் மாலையைச் சூடிக்கொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இந்த வடபத்ரசயனர் கோவிலின் ராஜகோபுரம் மிகப்பெரியது. நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம். . தமிழகக் கோவில்களின் கோபுரங்களிலியே மிக உயரமானது .
இந்த ராஜகோபுரம் பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாகவும்,. இந்தக் கோபுரத்தின் விமானம் முற்காலப் பாண்டியர் முதல் பிற்காலத்தில் வந்த மதுரை நாயக்கர் வரை தொடர்ந்து திருப்பணி செய்துள்ளதற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் பேசுகின்றன..
.கவிச்சக்கரவர்த்திக் கம்பன் இந்தக் கோபுரத்தை மேரு மலைக்கு இணையானது என்று பாடியிருக்கிறார். அந்தப் பாடலின் கல்வெட்டும் இங்கு இருக்கிறது.
கோபுரம் அண்மையில் நடந்த கும்பாபிஷகத்தினால் பலவண்ண எனாமல் பெயிண்ட்டில் மின்னுவதால் அதன் தொன்மையைச் சற்று இழந்து நிற்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றைத் துரத்தி செல்கிறான். அவனைப் புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். பின்னர்த் தாம் இங்குக் 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கப்போவதாகவும் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். சிறிய கோவிலாக ஒரு குளத்தின் நடுவில் எழுந்த அதற்கு, பின்னாளில் ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையான பெரியாழ்வார் தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்றுசொல்லுகிறது ஸ்தல புராணம்.
. அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிக் கொண்டு, தாம் பெற்ற பொன் முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம். இதன் அடிப்படையில் அவர், இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாகச் சொல்கிறார்கள். .
இந்த வடபத்ரசயனர் கோவிலுக்கும் அதன் ஒரு பகுதியாக இப்போது ஆண்டாள் சன்னதி இருக்கும் கோவிலுக்கும் இடையிலிருந்த நந்தவனத்தில் தான் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு. பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள் கோதை. பெருமாளுக்குச் சாற்றப்படும் மலர் மாலையை, அவள் ஒவ்வொரு முறையும் அணிந்து அழகு பார்த்ததற்குப் பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு அந்த மாலையைச் சாற்றுகிறார். ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதைத் தவிர்த்து வேறு மாலையைச் சூட்டினார்.
உடனே இறைவன், “ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்குச் சூட்டுஎன்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்குச் சாத்தப்படுகிறது.

ராஜ கோபுரத்தின் வழியே நுழைந்தவுடன் வலது புறம் இருப்பது வடபத்ரசயனர் போவில் நேர் எதிரே இருப்பது ஆண்டாளின் சன்னதி. அது நேர் எதிரில் கண்ணில் பட்டதால் எல்லோரும் செய்வது போல நாமும் அங்கு தான் முதலில் செல்கிறோம்.
நுழையும் பந்தல் மண்டபத்தின் மேற்கூரை மூங்கில்களினால் எழுப்பி அதன் மீது ஓலைக்கூரை வேய்ந்ததைப் போலவே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது நம்மைப் பிரமிக்கச்செய்கிறது. மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடு. எத்தனைபேர் எவ்வளவு காலம் உழைத்தார்களோ?
அந்த மண்டபத்தின் முழுவதும் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள். எல்லாவற்றையும் ரசித்துப் பார்க்க முடியாமல் கடைகளின் ஆக்கிரமிப்பு...
பந்தல் மண்டபத்தைக் கடந்து கல்யாணமண்டபத்திற்குள் நுழைகிறோம். கம்பீரமாகப் பிரம்மாண்ட உயரமாக நாயக்கர்கால இராமாயண ஓவியங்களுடன் பெரிய யாழித்துண்களுடனும் இருக்கிறது. இங்குதான் பங்குனி மாதத்தில் ஆண்டாளுக்குக் கல்யாணவைபவம் கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து நுழையும் துவஜஸ்தம்ப மண்டபம் என்ற கொடிமர மண்டபத்தில் கொடிமரம் தங்க முலாமுடன் மின்னுகிறது. அதில் பதிக்கப்பட்டிருக்கும் ராஜ கோபுரத்தின் சிறிய வடிவம் நம்மை நிறுத்துகிறது. .கொடிமர மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் தூண்களிலிருக்கும்  கலை நயம்மிக்க பெரிய ராம லஷ்மண, சரஸ்வதி. வேணு கோபாலன், மோகினி சிற்பங்கள் ஒவ்வொன்றும் நம்மை  மாளிகைக்குள் அழைக்கின்றன.  

இந்த மண்டங்களைகடந்து சன்னதிக்குள் நுழையும் நம்மை வரவேற்பது தங்க வண்ணத்தில் பளிச்சென்று மின்னும் வெள்ளிக்குறடு என்ற ஊஞ்சல் மண்டபம். வெள்ளி தோறும் ஆண்டாள், தரிசனம் கொடுக்குமிடம். அதன் பின்னே அர்த்த மண்டபத்தில் குறுகிய வாயிலுடன் கர்பகிரஹம். உற்சவ மூர்த்திகள் பெரிய அளவில் பிரமாதமான அலங்காரத்தில் முன்னால் இருப்பதால் மூலவரைச் சட்டென்று முழுவதுமாகக் காண்பது சற்றுச் சிரமாகயிருக்கிறது ஆனால் அதற்குத் தீபாரதனை காட்டும் போது செங்கோல் ஏந்திய ரங்கமன்னாரின் வலது புறம், தன்இடது தோளில் கிளியுடனும் சாய்ந்த கொண்டையுடனும் ஆண்டாளும் அருகில் கருடாழ்வாரும் மின்னும் தங்ககவசங்களில் ஜொலிக்கிறார்கள். கண்டது சில நிமிடங்கள் என்றாலும் அந்தக் கம்பீரமான காட்சி கண்ணை விட்டு அகல வெகுநேரமாகிறது. இந்தக் கோயிலில் மட்டும் தான் பெருமாளுடன் கருடாழ்வார் ஆண்டாளுக்குப் பக்கத்தின் நின்றுகொண்டு காட்சியளிக்கிறார்..

சன்னதியை விட்டு வெளியே வரும் போது ஆண்டாள் நீரில் தன்னை அழகு பார்த்துக்கொண்ட கிணறு. இப்போது தங்களை அதில் பார்க்க விரும்புகிறவர்கள் எட்டிப்பார்த்து காசுகளை வீசி எறிந்து பாழ் பண்ணுவதால். கிணற்றைகண்ணால் மூடி அதைச்சுற்றி அருகில் போட்ட காசு தெரிய ஒரு கண்ணாடி உண்டியலை அமைதிருக்கிருக்கும் நிர்வாகத்தின் சாதுரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த ஆண்டாள் கோவிலை நாச்சியார் திருமாளிகை என்று
அழைக்கிறார்கள். அண்மையில் நடந்த ஆண்டாள் கோவில் திருப்பணிகள் ஒன்று தங்கவிமானம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவிமானத்தைவிடப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளது. நின்று இதை நன்றாகப் பார்த்து தரிசிக்கப் பிரஹாரத்தில் தரையில் ஒர் இடம் குறித்திருக்கிறார்கள்.. பளிச்சென்ற சூரிய ஒளியில் தகதகக்கும் தங்க கோபுர தரிசனம்.
இந்தக்கோவில் தனியாகபிரசித்திப் பெற்றிருப்பதுடன் மற்ற பல முக்கிய வைணவத்தலத்தின் வழிபாடுகளிலும் இணைந்திருக்கிறது. திருப்பதி பெருமாளுக்குப் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்குச் சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்குத் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார். அவர் வைகையாற்றில் இறங்கும் போது அணியும் வண்ண வஸ்திரம் இங்கிருந்து தான் போகிறது.

ஆண்டாள் கோவிலில் இருந்து வெளியே வந்து ராஜ கோபுரத்துகருகிலிருக்கும் வடபத்திரசயனர் சன்னதிக்குச் செல்லுகிறோம். மற்ற வைஷ்ண கோவில்களிலிருந்து இது சற்று மாறுபட்டிருக்கிறது. கோவிலின் தரைதளத்தில் நம்மாழ்வாரும் இராமானுஜரும் இடது புறமும், பெரியாழ்வார் வலதுபுறமும் இருக்கச் சன்னதியில் நரசிம்மர். அருகில் அதன் வழவழப்பில் பதிந்த பலகோடி பாதங்களின் அடையாளத்தையும், காலத்தையும் சொல்லும் படிகளேறி முதல் தளத்தை அடைந்துதான் மூலவரைத் தரிசிக்க வேண்டும். பெருமாள் சயனக்கோலத்தில் ஶ்ரீ தேவி பூதேவியுடன் தரிசனம் தருகிறார். சுற்றிலும் நிறையச் சுதையிலான உருவங்கள்

சன்னதியின் வெளியே வந்து நாம் நிற்குமிடம் வசந்த மண்டபம். இந்த இடத்தில் தான் ஆண்டுத் தோறும் அரையர் சேவை என்ற வழிபாடு நடைபெறுகிறது. ஒரு பழைய தேரிலிருந்து எடுக்கப்பட்ட அற்புதமான மரச்சிற்பங்களை அழகாகப் பொருத்திச்செய்யப்பட்ட மேற்கூரையுடைய பெரிய கூடம் அது.

அங்கு . அரையர் பரம்பரையின் இன்றைய அரையரான பாலமுஹூந்தாச்சாரியார் ஸ்வாமிகளைச் சந்திக்கிறோம். பிரபந்தங்களையே எப்போதும் சுவாசிக்கும் அவரிடம் அரையர் சேவை பற்றிக் கேட்கிறோம்.சிவந்த மேனி நல்ல உயரம். மெல்லிய குரல்

நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ராகத் தாளத்தோடு ஆடிப் பாடி வழிபடுவது தான் அரையர் சேவை. பலநூற்றாண்டுகளாக 108 திவ்ய தேசங்களிலும் நடைபெற்று வந்த இந்த விசேஷ வழிபாடு இப்போது ஶ்ரீவிலிபுத்தூர்,ஆழ்வார் திருநகரி, ஶ்ரீரங்கம் ஆகிய மூன்று கோவில்களில் மட்டுமே நடைபெறுகிறது. இது ஆடல் பாடல் வழி பாடுதான் என்றாலும் எல்லோரும் இதைச் செய்ய முடியாது. இதனைப் பரம்பரையாகச் செய்துவரும் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே செய்யமுடியும். இதன் தாளங்களும், நடன முத்திரைகளும் பாவங்களும் சாஸ்திரிய நடனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. விரும்பினாலும் நாங்கள் மற்றவர்களுக்குக் கற்று கொடுக்கும் வழக்கமில்லை.
 திருமதி அனிதா ரத்தினம் கூட இங்கு வந்து இதை ஆராய்ந்தார். . ஆனால் அவர் விரும்பியபடி அதை முறையாகக் கற்றுக்கொடுக்க இயலவில்லை. கமலஹாசன் தன்னுடைய தசாவதாரம் படத்தில் அரையர் காட்சிகளைப் புகுத்த விரும்பி என்னை நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நல்ல சன்மானம் தரமுடியும் என்றும் அணுகினார். நான் ஏற்கவில்லை. இது பணத்துக்காகச் செய்யும் கலையில்லை. பகவானுக்குச் செய்யும் வழிபாடு.. கோவிலில் கூட நாங்கள் ஊழியர்களோ அர்ச்சகர்களோ இல்லை. எங்களுக்குக் கோவிலிலிருந்து சம்பளமோ சன்மானமோ கிடையாது. பரம்பரையாக நாங்கள் செய்யும் இறைப்பணி இது. நான் எங்கள் பரம்பரையில் 49வது தலைமுறை இதை எனக்குப் பின் என் பிள்ளை தொடர்வார்

இதே மண்டபத்தில் பல நூற்றாண்டுகளாகப் பகல் பத்து என்ற உற்சவத்தின் போது பக்தர்கள் இருபுறமும் உட்கார்ந்திருக்க நடுவில் எங்கள் முன்னோர்கள் பாசுரத்தை அபிநயங்களுடன் பாடியிருப்பதைப் போலவே இன்றும் நாங்கள் செய்கிறோம். மைக், விசேஷலைட் எதுவும் கிடையாது. ஊசிவிழுந்தால் ஓசை கேட்கும் அளவுக்கு அமைதிகாத்துக் கேட்பார்கள்.  என்கிறார் அரையர் ஸ்வாமிகள்
வருமானத்துக்காகக் கோவில்கள் வணிகமயமாகிவரும் இந்த நாளில் வருமானம் எதுவும் பெறாமல் தெய்வப்பணியாகத்தான் இதைச்செய்கிறோம் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இவர்.. இந்தச் சேவையின் போது இவர்கள் துணியாலான ஒரு விசேஷ கீரிடம் அணிகிறார்கள். மற்ற நேரங்களில் அது அவர் வீட்டில் பூஜையில் வைத்து வழி படப்படுகிறது என்பதிலிருந்தே அதன் புனிதம் புரிகிறது.
.
இந்தக் கோவிலின் தேரோட்டம் மிகப்பழமையானது. அதைப்பற்றி இந்த நகரில் பலஆண்டுகளாக வாழும் பக்தர் திரு ரத்தின வேல் அவர்களிடம் பேசிய போது
ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. முன்னால் ஓடிக்கொண்டிருந்த பழைய தேரில் சாலிவாஹன் சகாப்தம் 1025 என்று பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பழமையானது. கலைநயமிக்கப் பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்குச் சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்பக் கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடங்களும் இருக்கும். தேரோட்டத்தின் போது சுற்றுவட்டாரத்தில் 5 மைல் வரை தேர் எந்த ரதவீதியில் நிற்கிறது என்று தெரியும்.
தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர முடியாதபோது தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர்.(நெம்பு தடி) எண்ணைத் தடவிய கனமான மர சற்றுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வார்கள்.. முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி இழுத்து நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும்.
காலப்போக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிகச் செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்றாகச் சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரைச் சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்குச் சாரம், கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்ப்பலி நேர்ந்தது. அதனால் பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிச்சட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்துத் தேர் நவீனப்படுத்தப்பட்டது.
இப்போது தேரை உந்தித் தள்ள ஜேசிபிக்கள் பயன்படுத்துகிறது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே) என்று சொல்லும் திரு. ரத்தின வேல் இப்போது தேர் நாளில் பெருமளவில் இளைஞர்கள் வருவது மகிழ்ச்சியாகியிருக்கிறது என்கிறார்.

செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும். இங்கு ஸ்ரீஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கிறது. ஏன் கிளி? ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் சொல்லுகிறது.
இந்தக் கிளி ஆண்டாளுக்கு அணிகலகனில்லை. மாலைகளைப் போலத் தினமும் புதிதாகச் செய்யது அணிவிக்கப்படுகிறது . . கிளியின் மூக்கு மாதுளம் பூ, மரவள்ளிக்கிழங்குச்செடியின் இலையில் கிளியின்உடல்;, – நந்தியாவட்டை இலை,பனைஓலையில் இறக்கைகள் கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் பயன் படுத்தியும்,  கிளியின் கண்களுக்குப் பளபளக்கும் மைக்கா துண்டுகளைப் பயன்படுத்தியும். கிளியைத் தினசரி மாலை நேர பூஜைக்காக ஒரு குடும்பத்தினர் உருவாக்குகின்றனர்.. இந்தக் கிளியை மறுநாள் காலை பூஜைகள் முடிந்தவுடன் அகற்றிப் பிரசாதமாக வழங்குவார்கள்என்கிறார் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வரும் பக்தரும் , கோவிலிலும், நகரிலும் பலரை அறிந்திருப்பவருமான திரு. அழகர் ராஜா


திரும்பும் பயணத்தில் நீண்ட நேரம் கண்ணில் தெரிந்துகொண்டிருந்த அந்தக் கம்பீரமான கோவில் மெல்ல மறைகிறது. ஆனால் நாடு முழுவதும் மார்கழி காலைகளில் ஒலிக்கும் இனிய திருப்பாவையை அருளிய ஆண்டாளை அவரது மாளிகையிலேயெ கண்குளிர தரிசித்தது மனதில் மறையாமல் நிற்கிறது.






26/10/18

எங்க ஊர்ல திருவிழா.. வாங்க

 கலாச்சாரவிழாக்கள், கவியரங்கம், ஆன்மீக சொற்பொழிவுகள் இசை, நடன நிகழ்ச்சிகள் இலக்கியக் கூட்டங்கள் என நெல்லை நகரமே  விழாக்கோலத்துடன்  குலுங்கிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்களும், கலைஞைர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.  தினசரி வெளியூர்களிலிருந்து வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருப்பது அல்வாகடைகள் விற்பனையில்  தெரிகிறது.பொதிகை மலையில் புறப்பட்டுப் பாய்ந்தோடிவரும் தாமிரபரணி தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரு வற்றாத ஜீவ நதி. இதில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் “தாமிரபரணி மகா புஷ்கர விழா” அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அண்மையில் மலைத்தொடர்களில் தொடர்ந்து பெய்த மழையால் பாய்ந்துகொண்டிருக்கிறக்கும் புதுப்புனலைப் பார்க்கும்போது தாமிரபரணியே மகிழ்ச்சியில் பொங்குவது போலிருக்கிறது.தமிழகத்திலிருந்து மட்டுமில்லை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவில் பக்கதர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் பொதிகையின் அடிவாரமான பாபநாசத்தில் தாமிரபரணியின் பிரவாகம் தொடங்குகிறது. பாபநாசத்தில் தொடங்கி அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர் எனப் பயணம் செய்யும், தாமிரபரணி நதியின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித்துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீரமைக்கப்பட்டு, பக்தர்களின் தீர்த்தமாடுதலுக்காகத் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதி பாய்ந்துசெல்லும் 127 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பக்தர்கள் தீர்த்தமாடலாம். தாமிரபரணி என்பது பல சிறிய நதிகளின் சங்கமம். மாஞ்சோலையில் மணிமுத்தாறு, கடனாநதி, ஜம்புநதி, ராமா நதி பச்சையாறு குற்றாலம் சிற்றாறு எனப் பலநிறு நதிகளை இணைத்துக்கொண்டு மாவட்டம் முழுவதும் பயணிக்கிறது இந்த நதி.
புஷ்கரம் என்ற சொல்லுக்கு தீர்த்தமாடுதல் என்று பொருள். புஷ்கரணி என்றால் தீர்த்த கட்டம். அதாவது குளியலுக்கான சாதாரண படித்துறை அல்ல. அதைவிடப் புனிதமான ஆன்மிக தீர்த்தமாடும் தலம்.. நதிகளை வணங்கும் விழாக்கள் 'புஷ்கரம்' என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நதி என்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 புண்ணிய நதிக்கரைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்தப் புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.அதாவது, ஒவ்வொரு நதிக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் நடைபெறும். அதுவே, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறதுபுஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு சுவையான புராணமிருக்கிறது. .புஷ்கரம் என்பது பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம். உலக மக்கள் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான். அதற்காகப் பிரம்மதேவரை வேண்டித் தவம் இருந்தார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு முன்பு தோன்றி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். குருபகவானும் 'பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும்' என்றார்.புஷ்கர தீர்த்தத்தை குருபகவானுக்குத் தருவதில் பிரம்மதேவருக்குச் சம்மதம்தான். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய சம்மதிக்கவில்லை. அதேநேரம் குருபகவானுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத பிரம்மதேவர், புஷ்கரத்துக்கும் குருபகவானுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துவைத்தார். அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் குறிப்பிட்ட காலம் புஷ்கரம் சேர்ந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடினால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்றும் முடிவானது.ஒவ்வொரு ஆண்டும் குரு எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதிகளில் இவர் வசிப்பாராம். அப்படி வசிக்கும்போது அந்த நதிகளில் நீராடுவது புண்ணியமாகக் கருதப்படுகிறது. அதன் படி குரு மேஷத்தில் இருக்கும்போது கங்கா புஷ்கரம், ரிஷபத்திற்கு நர்மதா, மிதுனத்திற்கு சரஸ்வதி, கடகத்திற்கு யமுனா, சிம்மத்திற்கு கோதாவரி, கன்னிக்கு கிருஷ்ணா, துலாம் ராசிக்கு காவேரி, விருச்சிகத்திற்கு பீமா மற்றும் தாமிரபரணி, தனுசு ராசிக்கு தப்தி மற்றும் பிரம்மபுத்ரா, மகரத்திற்கு துங்கபத்ரா, கும்பத்திற்கு சிந்து நதி, மீன ராசிக்கு பிரன்ஹிதா என வரையறுக்கப்பட்டுள்ளது.தாமிரபரணியில் இதற்கு முன் புஷ்கர கொண்டாடியதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. இது இந்துவதாக் காரர்கள் கண்டுபிடித்துக் கொண்டாட வேண்டும் என்று சொல்லி மத உணர்வுகளை எழுப்புகிறார்கள் என்ற குரலும் எழுந்திருக்கிறது.முந்தைய நிகழ்வுகளுக்கு ஆதாரமாகப் பதிவுகள் இல்லாமலிருக்கலாம் ஆனால் இது பின்பற்றவேண்டிய ஒரு மரபு. கடந்த ஆண்டு துலாம் ராசியில் குரு இருந்தபோது, தமிழகத்தில் காவேரி புஷ்கரம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டபோதே இதுபற்றி விவாதிக்கப் பட்டுக் காஞ்சி, ஶ்ரீருங்கேரி மடாதிபதிகள், ஆன்மீக வாதிகளுடன் கூட்டங்கள் நடத்தித் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.இந்த ஆண்டு குரு விருச்சிகத்திற்கு வருவதால், தமிழ்நாட்டில் தாமிரபரணியிலும் மஹாராஷ்டிராவில் பீமா நதிக்கரையிலும் புஷ்கரம் நடத்த அந்தக் கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டது. . அதுமட்டுமில்லை. .2026 வரை நாட்டில் எந்தெந்த நதிகளில் இப்படி புஷ்கரம் கொண்டாடப்பட வேண்டும் என்ற பட்டியலையும் தயார் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் ஆன்மீகக் காவலர்கள்
தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி அன்னை தாமிரபரணிக்கு தாமிரத்தால் ஆன இரண்டரை அடி உயரச் சிலை மற்றும் 1 அடி உயரத் தாமிர அகத்தியர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.மாநில அரசு இந்தப் புஷ்கரத்திற்கான ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை எனப் பாஜக தலைவர் பேசியவுடன், இருக்கும் தலைவலிகளுடன் இதுவும் சேர வேண்டாமென்று எண்ணிய மாநில அரசு அவசர கதியில் பல படித்துறைகளை சீமைத்து பாதுகாப்பு, மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்பிக்கைகள் ஆயிரம் இருந்தாலும், புஷ்கரம் நடத்துவதன் மூலம், தாமிரபரணி போற்றப்படுவதும், சுத்தமாக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது ஒரு மகிழ்ச்சியான விஷயம்