22/11/09

தாயே வணக்கம்

தாயே   வணக்கம்
காலையில் பெய்த மழையினாலா அல்லது எப்போதுமே இப்படித் தானா என்று  தெரியவில்லை. கல்பாவிய அந்த சிறிய பாதையெல்லாம் நசநசவென்றிருக்கிறது.எதிரே வரும் மனிதர்கள், அருகில் வரும் சைக்கிள் அல்லது மாடு இல்லாவிட்டால் ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கும் கடையின் பலகைகள் இப்படி எதிலாவது இடித்துக்கொள்ளாமல் நம்மால்  நடக்க முடிய வில்லை. இடையிடையே  பயமுறுத்தும் மோட்டர்சைக்கிள்கள் வேறு. இப்படி இடித்துக்கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்ற ரீதீயில் நடக்கும் மக்கள். வாரணாசியின் சிறிய சந்துகளைப்பற்றி,,,,, நிறையப்படித்திருந்தாலும் பார்க்கும்போது ஆச்சரியத்தை தவிர்க்க முடியவில்லை. உலகப்புகழ் பெற்ற காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். “இந்த சந்தில்போனால் 5 நிமிடம்” என்று உள்ளுர்காரர் சொன்னதை நம்பி கடந்த 15நி¢மிடமாக நடந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சந்தின் முடிவில் கோணல்மாணலாக எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் அம்புக்குறிகளையும் கடந்து சற்றே பெரிதாக இருக்கும் அந்த  குறுகிய தெருவில் ஒரு நுழைவாயில்.  பிராம்மாண்டம் ஆடம்பரம் எதுவும் இல்லாத அந்த நுழைவாயின் அருகிலிருக்கும் போலீஸ் சோதனை சாவடிகள், கெடுபிடிகள் எல்லாம் அது தான் கோவில் என்பதைத்தெரிவிக்கிறது.  வெண்சலவைக்கல் விரிந்திருக்கும் ஓரு பறந்த முற்றத்தின் நடுவே  நான்கு புறமும் வாயில்கள் கொண்டஒரு மண்டபம்.அதுதான் சன்னதி. நடுவே தரையின் நடுவில் தரையிலேயே மூர்த்தீ. சுற்றி நான்குபுறமும் பூஜைசெய்யும் அர்ச்சர்கள்.அவர்கள்தங்கள் உடலாலும்,பூஜைப்பொருட்களாலும் நுழைவாயிலை மறைத்துக்கொண்டிருப்பதாலும் அதற்கு வெளியே மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதாலும் நமக்கு  சன்னதி ஸ்வாமி எதுவும் தெரியவில்லை. அனேகமாக இந்தியாவின் எல்லா மாநில முகங்களை பார்க்கமுடிந்த அந்த கூட்டத்தில் அதில் தெரிந்த எமாற்றத்தையும் உணரமுடிந்தது. நன்றாக பார்ப்பதற்கு எதாவது  எற்பாடு செய்யதிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டு அவரவர் மொழிகளில் முணு முணுப்பது ஆரத்தியின் உச்சகட்டத்தில் எழும் கோஷத்தில் கரைந்துபோகிறது அபிஷேகம் ஆர்த்திமுடிந்து கூட்டம் கலைந்த பின்அருகில் சென்று பார்க்கிறோம். வெள்ளியிலான நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பளீரென்று சிவப்பு மஞ்சள் மலர்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் விஸ்வநாதர். தரிசனத்திற்குபின்னர் வெளியே வந்த நாம்  இப்போது மற்றொரு சந்தின் துவக்கத்திருக்கிறோம் மென்பதை புரிந்து கொள்ள சில நிமிடங்களாகின்றன...
மாககவி பாரதியார் இங்கு சிலகாலம் வாழ்ந்திருக்கிறார்.அந்த இடத்தில் அவருக்கு சிலையிருப்பது அறிந்து பார்க்க தேடிச்செல்லுகிறோம். அதிகம்பேர் அறியாத அந்த சி¨லைருக்குமிடத்தை அருகிலிருக்கும் பால்கடைக்காரர் ஆக்கரமித்திருக்கிறார்.நெஞ்சு பொறுக்குதில்லையே ..இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து..  என்று புலம்பதைத்தவிர் வேறு வழியில்லை. அருகில்
நண்பர்கள் சொல்லியிருந்த மணிகர்ணீகா கட்டம் அருகிலிருப்பதை அறிந்து கட்டத்திற்குபோக சைக்கிள்ரிக்ஷாவை அணுகிறோம். அந்த வயதான மனிதர் கேட்ட குறைவான கட்டணத்தில் ஆச்சரியமடைந்து பயணம் செய்தகொண்டிருக்கும் நம்மை கடந்துபோகும்  அந்த காட்சி மனதை உலுக்குகிறது.  பக்கங்களில் இருவர் பிடித்துக்கொண்டிருக்கும் ஹாண்டில்பாரில் தலை, சீட்டில் உடல், கேரியரில் கால்கள் என இரு மூங்கில்களில் பிணைக்கபட்டு (பாடை என்ற சொலிற்குகூட அருகதையற்றது அந்த கட்டமைப்பு)கிடத்தப்பட்ட என ஒரு மனிதனின் இறுதிப்பயணம் சைக்கிளிலில் ! தன் இறுதிபயணம் இப்படி நடக்ககுமென இந்த மனிதன் வாழ்நாளில் நினைத்தாவது பார்த்திருப்பனா? காசியின் சடலங்களயும் அவைகளுக்கு நேரும் அவலங்களையும் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் கண் முன்னே பார்த்த  மனதைப்பிசைந்த அந்த காட்சியின் தாக்கத்திலுருந்து மீள நீண்ட நெடுநேரமாகிறது. “இந்த மணிகார்ணீகா கட்டதில் குளிப்பது மிகப்புண்ணியம் சிவபிரான்  ஸ்னானம் செய்தகட்டம் இதன் அருமை பலருக்கு தெரியாது நீங்கள் கட்டாயம் குளியுங்கள் புண்ணியம் ” என்று சொன்ன அந்த ரிக்ஷா காரரை அனுப்பிவிட்டு குறுகியபாதையின் முடிவிலிறங்கும் படிகட்டுகளை கடந்து கங்கயை பார்க்கும் நமக்கு எமாற்றம். கலங்கிய கருப்புவண்ணத்தில் மிக மோசமாகமாக குப்பைகளுடன் வரும் கங்கை, அருகில் நிற்கும் நகரின் கழிவுநீரை நதியுடன் இணைக்கும் ராட்சத சைஸ் குழாய்களைப் பார்த்து சற்று அருவெறுப்படன்  தயங்கி நிற்கும் நமக்கு அங்கு குளிப்பவர்களைப் பார்க்கும் போது. நிர்வாகம் எப்படி இந்த படித்துறையை பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் என்பதைவிட,புண்ணியம் தேடும்வெறியில் புத்திசாலிதனத்தையே இந்த மனிதர்கள்இழந்து விட்டிருக்கிறார்களே என்பதுதான் ஆச்சரியமாக  இருக்கிறது
அருகிலேயே காசிநகரின் இடுகாடு.தினசரி 50-100 உடல்கல் தகனம்செய்யப்படும் இந்த் இடத்தில் வசூலிக்கபடும் ‘கட்டணம்' உலகப்புகழ் பெற்றது. விலையுர்ந்த சபாரிசூட், கையில் தங்கபட்டையில் கடிகாரம் சட்டைப்பையில் தங்கபேனா கையில் தொடர்ந்து ஒலிக்கும் செல்போன் என ஒரு பிஸினஸ்மேன் போல காட்சியளிக்கும் அந்த மனிதர் தான் இந்த இடத்தின் ராஜா. ஆமாம் அவர்தான் தலைமை வெட்டியான். சத்திய நாரயண செளத்திரி. பரபரப்புடன் இயங்கும் அவரின் கீழ் 6 உதவியாளார்கள் எரியும் சிதைகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முறை வருவதற்காக  சடலங்களுடன் காத்திருக்கும் உறவினர்கூட்டத்தினருடன் பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல ஆயிரங்கள், சில சமயங்களில் லட்சங்கள் கூட வசூலிப்பார்களாம்.  செளத்ரியிடம் கேட்டபோது “அதெல்லாம் கிடையாது. இறந்தவரின் தகுதிக்கேற்ப கட்டணம். மன்னரிடமும் சாதாரண மனிதரிடமும் ஒரே கட்டணம் வாங்குவது தர்மமில்லை. இலவசமாக இந்த பணியை யாருக்கும் செய்யகூடாது என்று வேதத்தில் சொல்லியிருக்கிறது (எந்த வேதமோ நமக்கு தெரியவில்லை) முன் காலங்களில் மன்னர் குடும்பங்களுக்கு நாங்கள் செய்த பணிக்காக எங்களுக்கு வீடுகள், அரண்மணைகள் கொடுத்திருக்கிறார்கள். சொந்தமகனுக்கு கூட இந்த பணிக்கு பணம் கேட்ட அரிச்சந்த மஹாரஜவிற்கு ராணி தனது சேலையைகிழித்து கொடுக்கவில்லையா? அப்படிபட்ட அரிசந்தமஹாராஜவிற்கே சம்பளம் கொடுத்த மன்னர் பரம்பரயினர் நாங்கள்.” என நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே செல்போனில்  சற்று முன் நகரில் இறந்த ஒருவரின் வருமான விபரங்கள் சொத்து விபரங்கள் காரியம் செய்யப்போகும் மகன் பற்றிய விபரம் வருகிறது. இந்த ‘ராஜாவின்” விரிந்த சாம்ராஜ்ய எல்லைகளும் அவரின் நெட் ஒர்க்கின் வலிமையும் புரிகிறது.
மெலிந்த உயர்ந்த உருவம், தீர்க்கமான முகம் பளிசென்றகண்களுடனிருக்கும் அந்த சிறுவன் “படகில் சென்று சுத்தமான கங்கையில் நிம்மதியாக குளிக்க விரும்புகிறீர்களா?” என்று பணிவான ஆங்கிலத்தில் கேட்ட விதம் எவரையும் “எஸ்” சொல்ல வைக்கும்.  படகில் எறிய பின்னர் தான் தெரிகிறது ஒட்டப்போவது அந்த பையன் இல்லை  அவரது குடும்ப படகிற்கு அவர் மார்க்கெட்டிங் அதிகாரி என்பது. பரந்து விரிந்திருக்குமந்த கங்கை கடலில் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நின்ற இடம் ஒரு மணல்திட்டு. ஓரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறு கரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே இதுபோல பல திட்டுக்கள். சொன்னதுபோலவே நதி சுத்தமாக ஒடுகிறது.இறங்கிக்குளிக்க வசதியாக படகிலிருந்து கயிறு கட்டி தருகிறார்கள்.எப்படி பாதுகாப்பாக குளிக்கவேண்டும் என சொல்லித்தருமிந்த படகோட்டிகள் கங்கையிலேயே பிறந்து வளர்ந்து மடிபவர்கள்.வாழ்நாள் முழுவதும் இங்கு வருபவர்களுக்கு பணி செய்து புண்ணியம் சேர்ப்பதால் இவர்களுக்கு மறு பிறவி கிடையாதாம். கங்கையில்  படகு பயணம் செய்த பின் மாலையில் கங்கா ஆர்த்தியை நதியிலிருந்தே பார்க்கலாம் என அழைத்துப்போகிறார்கள். அன்றைய ஸ்மஸ்தானமன்னர்கள் தங்களது நாட்டின் காலாச்சார பிரதிபலிப்பகாக அழகான சிற்பவேலைபாடுகளுடன் கட்டியிருக்கும் ஸ்நானகட்டங்கள் பல கேட்பாரற்று  பழாகி ஆக்கரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது.  பனாரஸ் மன்னரின் ஸ்நான அரண்மனை போன்ற  சில அருமையாக பாரமரிக்கப்படுகிறது. மற்ற பலவற்றில் ஹோட்டல்கள், பட்டு புடவைக்கடைகள். சில்லென்ற காற்றின் சுகத்தில் படகுப்பயணத்தை அனுபவித்து கொண்டே ஆர்த்தி கட்டத்தை நெருங்குகிறோம். துவங்க இன்னும் அரைமணி நேரமிருந்தாலும் படித்துறையில்  மக்கள் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள்.ஓலிபெருக்கியில் பக்தியிசை, அறிவிப்புகள். நிறைய வெளிநாட்டினர் நம்மைப் போல படகில் காத்திருக்கிறார்கள்.வேறு சிலர் படகில் பயணம் செய்யாவிட்டாலும் பார்ப்தற்காக,  படமெடுப்பதற்காக காசு கொடுத்து காலிபடகுகளில் உட்காருகிறார்கள் . மெல்ல இருள் பரவுகிறது.அதிகமாகிக்கொண்டிருக்கும் கூட்டம், ஆர்வத்தைத்துண்டும் அறிவிப்புகள் ஆர்த்திப் பாடல்பாடும் குழு வந்தமர்கிறது. இந்திய மொழிகள் அனைத்தும் காதில்விழுகிறது. படிகளினிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையில் தங்கம்மாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம். உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா. அருகில் பூஜை சாதனங்கள்.பக்கவாட்டில் பக்கத்திற்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள் அதிலும் பூஜை பொருட்கள். மணி 7ஐ நெருங்குகிறது.படிகளில் கூட்டம் வழிகிறது.. மின் விளக்கு வெளிச்சத்தில்  தகதகவென பளபளக்கும் ஆரஞ்சுக் கலர்பட்டாடையில் பூஜைமேடைஅருகே கம்பீரமாக நிற்கும்  இளைஞர்கள். டாண்ணெண்று 7 மணிக்கு அறிவிப்பபைத் தொடர்ந்து பூஜையை நடுமேடையில் வந்தமரும் தலமைப்பூசாரி துவக்குகிறார். பள்ளிக் காலை வணக்க கூட்டத்தில் சலசலத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் விசிலடித்ததும்  அமைதியாகிவிடுவதுபோல  சட்டென்று கூட்டம் அமைதியாகி கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. மேடையிலிருக்கும் தேவிக்கு முதல் பூஜை முடிந்து  ஒரு சிறிய தீபாரதனை. அந்த தீபத்திலிருந்த எடுத்த அக்கினியில் அருகில் தயாராகயிருக்கும் பெரிய தீபங்கள் ஏற்றபடுகிறது. இசைகுழுவின் ஆர்த்திபாடல் ஒலிக்கிறது. ஓவ்வொன்றாக 7 விதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைகளுக்கும் காண்பிக்கபடுகிறது. ஒவ்வொருமுறையும் 5 பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிரில்லாமல் தேர்ந்த  நடன கலைஞர்களைப் போல நேர்த்தியாக  செய்யும் அந்த காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. கனமான அந்த  கொதித்துக்கொண்டிருக்கும் தீபங்களை ஒருகையில் தூக்கிச்சுழற்றிக்கொண்டே மறு கையில் கனமான மணியை அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு  4 பேரும் ஒரே நேரத்தில் வினாடிபிசாகமல் திரும்புகிறார்கள். தொடர்ந்த பயிற்சி,இசைஞானம்,பக்தி இவை யெல்லாம் இல்லாமல் இதைச்செய்யமுடியாது நூற்றுகணக்கான விடியோக்கள் இயங்குகின்றன.ஆயிரகணக்கான காமிராக்கள் பதிவுசெய்கின்றன.2000 வருடங்களாக ஒருநாள்கூட விடாமல் தொடர்ந்து நடைபெறுவதாக சொல்லும் இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை.பார்ப்பவர்கள் தரும் காணிக்கைகளதான்.இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் ஆர்த்தி.உச்சஸ்தாயில்  இசைகுழுவின் குரல். பக்திபரவசத்தில் மக்களின் “கங்காமாதாகீ ஜே” என்று ஓங்கி ஒலிக்கும் குரலின் பின்ணியில் மூன்று முறை சுழற்றப்பட்ட அந்த பெரிய தீபம் மக்களை நோக்கிகாட்டபட்டபின் அணைக்படுகிறது. காத்திருந்த மக்கள் தங்கள் கைகளில் புஷ்பங்களுடன் இலைகளில் வைத்திருக்கும் சிறு தீபங்களை மிதக்க விடுகிறார்கள். சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கில் நம் படகை கடந்து மிதக்கும் அந்த மின்னும்  நட்சத்திரங்களை ரசித்த வண்ணம் கவனமாக அருகில் நிற்கும் படகுகளில் மாறி மாறி  நடந்து  கரையிலிருக்கும் அந்த ஆர்த்தி இசை கலைஞர்களை நெருங்குகிறோம். ஆர்மோனியம் வாசித்து கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாரட்ட கை நீட்டிய   நாம் அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.  தினசரி பல ஆயிரம் கண்கள் பார்க்கும் அந்த அற்புதமான ஒளி வழி பாட்டுக்கு உயிர்தரும் இசையை வழங்கும்  அந்த சகோதரர்களால் அதைப்பார்க்க முடியாது. ஆம் அவர்கள் விழியில் ஒளியில்லை.
மனித வாழ்க்கைதான் எவ்வளவு ஆச்சரியங்களை கொண்டதாயிருக்கிறது.!

பார்த்ததை படங்களுடன் பகிர்ந்து கொள்பவர்