பயணம் குஜராத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் குஜராத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11/7/13

கஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே?

 4
குஜராத் பயணம் 4 

கஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே?

ஸோம்நாத் என்று உலகம் முழுவதும் அறியபட்டடிருக்கும் அந்த ஊரின் பெயர் வெராவெல். ஒரு கடற்கறை கிராமம். இந்த கோவிலை தவிர வேறு முக்கிய இடங்கள் எதுவும் கிடையாது. மிக சிறிய வயதிலிருந்தே இதை பார்க்க வேண்டும் என்ற  எண்ணம்  இப்போதுதான்  நிறைவேறியது, Thanks to Meera  துவராகை கிருஷ்னனை பார்க்க இந்த சிவனின் அருளும் வேண்டும். ஸோம்நாத கோவிலை பற்றி சொன்னாலே கஜினியின் 17 முறை படையெடுப்பு நினைவிற்கு வருமே? எங்களுக்கும் வந்தது. இங்குபார்த்த  குறிப்புகளில் எங்குமே 17 தடவைகள் என சொல்லபடவே இல்லை.  கி.பி.1300 –ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியாலும் தாக்கப் பட்ட இந்த  ஆலயம் ஜுனாகட் மன்னனால் கட்டப் பட்டது. மீண்டும், மீண்டும் முந்நூறு ஆண்டுகளில் நான்கு முறை ஆலயம் திரும்பத் திரும்ப இடிக்கப் பட்டது. முசபர்ஷா, மகமது பெக்டா, இரண்டாம் முசபர் ஷா, கடைசியில் 1701-ம் ஆண்டில் ஒளரங்கசீப் ஆகியோராலும் ஆலயம் இடிக்கப் பட்டிருக்கிறது. . பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தோர் ராணி அகல்யா பாய் என்பவள் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்போது, இந்தப் பழைய சோமநாதர் ஆலயத்துக்கு எதிரே ஒரு புது சோமநாதர் ஆலயம் கட்டினாள். ஆனால் பின்னர் ஜுனாகத்  ஆட்சி நிர்வாகம் முகலாயர்களின் கைக்கு வரவே அப்போது உள்ள நவாபோ, அல்லது ஆங்கிலேய அதிகாரிகளோ கி.பி. 1820-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரை எந்தவிதப் புனர் நிர்மாணத்துக்கு அனுமதிக்கவில்லை.  இந்திய சுதந்திரத்தின் போது இந்த பகுதி ஜுனாகத் நவாப் பாகிஸ்தானோடு இணையப் போவதாய் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். கத்தியவார் மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததோடு அல்லாமல், அர்சி ஹுக்குமத் அல்லது ஜுனாகத் தாற்காலிக அரசு என்ற அமைப்பைக் கொண்ட மக்கள் சபை அமைக்கப் பட்டது. நவாபுக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். பின்னர் படேல் அவர்களால் ஜுனாகத் இந்தியாவோடு இணைக்கப் பட்டது. நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் துணைப் பிரதமராய் அப்போது இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்து இந்திய அரசே ஆலயத்தை மீண்டும் கட்டும் என அறிவித்தார்.
சோமநாதருக்கென புதிய ஆலயம் உருவாக்கப் பட்டது. பழைய கோயிலின் மாதிரிகள் மிகவும் கஷ்டத்துடன் சேகரிக்கப் பட்டது. இதில் முனைந்து பணியாற்றியவர் திரு கே.எம். முன்ஷி அவர்களும், சர்தார் படேலுமே ஆவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எங்கே ஆலயம் நின்றதோ அதே இடத்தில் கட்டப் பட்டு அதே கருவறையில் அதே பீடத்தில் சோமநாத ஜ்யோதிர்லிங்கம்  அப்போதைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. சோமநாத ஆலயத்தின் புனருத்தாரண சிற்பிகளில் முதன்மையானவர் ஆன படேல் ஆலயத்தின் திறப்பு விழாவைக் காணாமலேயே 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி காலமானார்
எனினும் திறப்பு விழா கோலாகலமாய் நடந்தது. சுதந்திரம் கிடைத்து மூன்று மாதங்களிலேயே சர்தார் படேல் இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தருவதாய் அறிவித்தார். நாலே வருஷங்களில் சோமநாதர் அப்போதைய குடியரசுத் தலைவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அதன் பின்னர் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள் முயன்று இந்தக் கோயில் கட்டப் பட்டது. மஹாத்மா காந்தி அரசு செலவு செய்யக் கூடாது என்று சொன்னதை மதித்து இந்தக் கோயில் முழுக்க முழுக்க நன்கொடைகளாலேயே கட்டப் பட்டது. அரசிடமிருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற வில்லை. 1965-ம் வருஷம் மே மாதம் 13-ம் நாள் 21 துப்பாக்கிகள் வணக்கம் செய்ய சோமநாதர் கோயிலின் 155 அடி உயரக் கோபுரத்தில் துவஜஸ்தம்பமும், அதன் மேல் காவிக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவிலேயே கடந்த 800 ஆண்டுகளில் இத்தகையதொரு கோயில் இன்று வரையிலும் கட்டவில்லை என்று சொல்லபபட்டது. . 
அப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம்.  நுழையும் போதே பெரிய எல்சிடியில் சனனதியி அபிஷெகம் தெரிகிறது/ ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள்.  ஒரு காலத்தில் தங்க தூண்காலாக இருந்த இடத்தில் இன்று பளபள்க்கும் கோல்டு பெயிண்ட். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது அலங்காரம் ஜொலிக்கிறது. 
அபிஷகத்திற்கு பக்கதர்கl கொடுக்கும் பாலும் நீரும் சன்னதி முன்னால் ஒரு துவாரத்தில்  விட்டால் அது லிங்கத்தின் மீது 24 மனி நேரமும்  நீர் சொட்ட தொங்கும்   குடத்தில் டூயூப் வழியாக சேரும்படி   ஒரு  அமைப்பு. 
 பிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது.

 அதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூண் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்பக்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர். 
சர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. செக்யூரிட்டி தெய்வங்கள் படம் எடுக்க போட்டடிருக்கும் கோட்டிருக்குள் அவர் இருப்பதால் அங்கிருந்து அவரையும் கோவிலையும் படம் எடுக்க கூடாது என்கிறார்கள்.  தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும்இருக்கிறது.  புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது. 
இரவு ஒரு ஓலிஓளிகாட்சி. ஹிந்தியில் கதை. ஒம்பூரியின் வாய்ஸ் ஆனால் சகிக்காத மியூஸிக். கதை புரியாதால் கோபுர மாடத்தில் இருக்கும் அத்தனை புறாக்களும் எப்படிஅதன் மீது இந்த வெளிச்ச வெள்ளத்தில் பயப்படாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்றுஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன்.

தங்கியிருந்த ஹோட்டல் ஒரு கிராமத்தின் ஹைவேயில். பெரிய புல்வெளி. நல்ல ரூம். காட்டேஜ்கள் வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில்.
பயணபடங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

















<

3/7/13

கொடிகட்டி பறக்கும் பிரார்த்தனைகள்

குஜராத் பயணம் 3
3


கொடி என்பது ஒரு நாட்டின்,அரசின், அல்லது இயக்கத்தின் தனித்துவத்தை  கம்பீரமாக வெளிப்படுத்தும் சின்னம். தனிச்சிறப்புகளைச்சொல்லும் அதன் வண்ணங்களும், அதில் உள்ள சின்னங்களும் உன்னதமானவைகளாக போற்றப்படுபவை.நம் தேசம் முழுவதும் எல்லா மதத்தினரின் கோவில்களிலும்வழிபட்டுதலங்களிலும் கொடி என்பது விழாக்காலங்களின் அடையாளமாக அறியபட்டவை.

ஆனால் குஜராத் மாநிலத்தில் மேற்கு கோடியில் கடலோரமாக இருக்கும் புகழ் பெற்ற துவாரகா நகரிலிருக்கும் கண்ணன் கோவிலில் தினசரி கொடிகள் தனிநபர்களின் பிரார்த்தனையின்வெளிப்பாடாக ஏற்றப்படுகிறது. மதுராவிலிருந்து இங்கு வந்த கண்ணன் கடல் அரசனிடம் கேட்டு அவன் ஒதுங்கி வழி விட்ட இடத்தில் துவாரகா நகரை நிர்மாணித்து ஆட்சி செய்த தேசம் இது, இந்த கோவில் அவரது அரண்மனை என்கிறது இதிகாசம், 16ம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டபட்ட கோவில் என்று யூனஸ்கோ இதை பாதுகாக்கபடவேண்டிய உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. போல பளபளக்கும் பல வண்ணங்களில் உடலைபிடிக்கும் மன்னர்களின் உடைகளைபோல் பட்டு சட்டை அணிந்த பண்டிட்களும் கண்ணனும் எப்ப்போதும் பிசியாக இருக்கும் இந்த கோவிலுக்கு சதாரண நாட்களில் 5000 பேர் வருகிறார்கள். சன்னதியில்  பளபளக்கும் கறுப்பு பளிங்கில் கோவர்த்தனாக கண்ணன் காட்சி தரும் இந்த கோவிலின் கோபுரத்தில் கொடி  தினசரி 4 முறைகளும் வியாழன் அன்று 5 முறைகளும் வெவ்வேறு வண்ணங்களில் ஏற்றபடுகிறது. 170 அடிகள் உயரமான கோபுரத்தின் உச்சியில் பறக்கும் இந்த கொடி மிக பிரமாண்டமானது. நகரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிறது. 52கஜ நீளத்தில் நீண்ட முக்கோண வடிவத்தில் பட்டு துணியில் விசேஷமாக தயாரிக்கபடும் இந்த கொடிகள் பக்தர்கள் பிராத்தனை செய்து விரும்பவதை வேண்டிக்கொண்டு ஏற்றபடுவது. 52 சிறிய கொடிகளாக தயாரிக்க பட்டு நீண்ட கொடியாக இணைக்க படுகிறது. அதென்ன 52 கஜம் என்ற கணக்கு? .. 27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரஹங்கள், 4 திக்குகள் என்ற வற்றைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையின்படி 52 கஜம் நீளமுள்ள கொடி இது என்கிறார் திரு வேளுக்குடி கிருஷ்ணன். கொடிகள் கோவிலால் அனுமதிக்க பட்டவர்களால் மட்டுமே தயாரிக்கபடுகிறது.
சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை காவி, வானவில்லின் அத்தனை வண்ணங்களும் இணைந்தவை போன்ற பலவண்ணங்களில் கொடிகள்.எந்த வண்ணமாக இருந்தாலும் அதில் சூரியன் சந்திரன் சின்னங்கள். திருமணம், தொழில்வெற்றி, நீண்டஆயுள், செல்வம் மேன்மை போன்றவைகளை அடைய அவைகளை குறிப்பவைகளாக அறியபட்ட வண்ணகொடியை பிரார்த்தனையாக ஏற்ற பக்தர்கள் முன்பதிவு செய்தது காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு முழுவதற்கும் இப்போதே முன்பதிவு செய்யபட்டுவிட்டது. 25000ரூபாய் பணம் கட்டி புக் செய்திருப்பவர்களின் குடும்பத்தினர் அவர்களுக்காக ஒதுக்கபட்ட நாளில் ஒரு பெரிய பந்தாக சுருட்டபட்டிருக்கும் அந்த கொடியை மலர்களுடன்



ஒரு மூங்கில் கூடையில் தலையில் சுமந்து வீதிகளிலும் கோவிலின் பிராகாரத்திலும்  வாத்தியங்களும் பாடல்களும் ஒலிக்க நடனமாடி(சூப்பர் குதாட்டம்!) வலம் வந்து கிருஷ்ணரின் சன்னதியில் பாதத்தில் வைத்து பூஜை செய்து 52 படிகள் ஏறி கோபுரத்தின் முதல் தளத்திற்கு எடுத்துசெல்லுகிறார்கள். அதற்கு மேல் இந்த கொடியை கோபுரஉச்சிக்கு எடுத்து சென்று ஏற்றும் உரிமை பெற்றவர்கள் ஒரு சில யாதவ குடும்பத்தினர் மட்டுமே. பின்குடுமி வைத்திருக்கும் இவர்கள் ஜீன்சும் சட்டையும் அணிந்திருக்கிறார்கள், கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு அருகில் ஒரு சிறியமர மேடை. அது புடவை போன்ற  நீண்ட இரண்டு துணிகளினால் கலசத்துடன் இணைக்கபட்டிருக்கிறது. மேலே ஏற எந்த வசதிகளும் இல்லாத அந்த கோபுரத்தின் உச்சியில்  அந்த துணியைபிடித்து மேடையில் ஏறுகிறார்கள் இந்த ஜோடியினர். ஒருவர்  மேடையின்மீது நிற்கும் 25 அடி உயர கொடிகம்பத்தை அதன் இடத்திலிருந்து எடுத்து  கொடியைமட்டும் உருவி  எடுத்துகொண்டபின் கம்பத்தை மட்டும் மற்றொருவரிடம் கொடுகிகிறார். அவர் அதில் புதிய கொடியை நுழைத்து திருப்பிக் கொடுக்க புதுக்கொடி மேடையில் நிறுத்தபடுகிறது. பாதங்களின் விரல்கள் வினாடி தவறினால் விபரீதம்
என்ற நிலையில் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத அந்த உயரத்தில் இரண்டுபேர் மிக அனாசியமாக 10-15 நிமிடங்களில் அவ்வளவு பிரமாண்டமான கொடியை மாற்றிவிட்டு பணம் கட்டியவர்களுக்காக தலையால் மரத்தை தொட்டு பிராத்தனை செய்துவிட்டு இறங்கி விடுகிறார்கள் கொடி ஏற்றும்போது இவர்கள் பத்திரத்திற்காவும் நாம் பிரார்த்திக்கிறோம்.(கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்).
அடுத்து என்ன வண்ணத்தில், எதைகுறித்தபிராத்தனைக்காக கொடி ஏற்றபடும் என்பதுமுன்பே தெரியாதால், மாறும் இந்த கொடிகளின் வண்ணங்கள் ஒரு சகுனமாக மற்றபக்கதர்களால் பார்க்கபடுகிறது. தரிசனத்திற்கு வரும் பத்தர்கள் தங்கள் வேண்டுதல் இந்த கொடியின் வண்ணத்தில் பிரதிபலித்தால் அதை ஒரு நல்ல சகுனமாகவும் கிருஷ்ணனின் அனுமதியாகவும் எடுத்துகொள்கின்றனர்.
ஐஸ்வர்யா, அபிஷேக் திருமணத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தின் சார்பில் இங்கு பிராத்தனை செய்து கொடிஏற்றபட்டிருக்கிறது.

16/6/13

இன்னும் ஒரு காந்தியாக..

குஜராத் பயணம் 1

     
அஹமதாபாத்திலிருந்து காரில்போய் பஞ்ச துவாரக்களையும் அதில் ஒன்று ராஜ்ஸ்த்தான் எல்லயில் இருப்பதால் அதனருகிலிருக்கும் புஷ்கர் பார்க்க  7 நாள் பயண திட்டம். துவாரகா அருகில் இருக்கும் சோமநாத் கோவிலை பார்க்க போகும் 7 மணிநேர பயனத்திற்கு முன் அஹமதாபாத்தில் சில மணிகளை செலவிட்டு போகலாம் என்று முதலில் போன இடம் அண்ணல் காந்தி அடிகள் வாழ்ந்த சபர்மதி சேவாஸ்ரம். அந்த இடத்தை மீயூசியமாக மாற்றியிருக்கிறார்கள்.

ஓடுவேயந்த தாழ்வாரம் வடிவில்  கான்கீட்டில் வடிவமைக்கபட்ட 6 பட்டை வடிவ கூடம். இயற்கையான வெளிச்சம் வரும்படியான சுழலில் நிறைய படங்கள் காந்தியின் இந்த தேசத்தின் கதையை சொல்லுகிறது. நிறைய நேரமும், பொறுமையும் சரித்திர நேசிக்கும் தன்மையும் வேண்டும். சில படங்கள் இதுவரை நாம் எங்குமே பார்க்காதது. காந்தியின், அவர்பற்றிய புத்தகங்கள் நிறைந்த நூலகம் இருக்கிறது. ஆராய்சியளர்களுக்கு மட்டும்தான் அனுமதியாம்.
வெளியே பெரிய தோட்டம். காந்திகாலத்தில் பெரிய திடலாக இருந்திருக்கும் போல. ஆஸ்ரமத்தை ஒட்டிய படி சமர்மதி நதி போகிறது. இப்போது அதை லண்டன் தேம்ஸ் அளவிற்கு அழகுபடுத்த  முதல்வர் மோடி திட்டமிட்டிருக்கும் வேலைகள் நடப்பதால் நதி எங்கியோ திருப்ப பட்டு காய்ந்து கிடக்கிறது. அதை நோக்கியிருக்கும் பிராத்தனை திடல். இது காந்தியின் வாழக்கையில் முக்கிய இடம். பல விஷயங்கள் அறிவிக்கபட்ட இடம் என்ற குறிப்பை நிறுத்தியிருக்கிறர்கள். அவர் வாழ்ந்த ஹிருத்ய குஞ் வீட்டை பார்த்தவுடன் அதை முதன்முதலில் பார்த்த ஆட்டன்ப்ரோவின் காந்தி படம் நினைவிற்கு வந்தது.உள்ளே பார்த்தபோது இந்த சின்ன இடத்திலிருந்தா இந்த மனிதன் உலகத்தையே கவனிக்க செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. நுழையுமிட்த்தில் ஒருவர் ராட்டையில் நூல் நூற்றுகொண்டிருந்தார். ஸ்ரீவில்லிப்தூர் வீட்டில் என் தாத்தா டாக்டர் நாராயண அய்யர் தினமும் நூற்று அந்த நூலை கதர் கடையில் கொடுத்து கதர் துணி வாங்கி அதை தானே சட்டையாக தைத்துபோட்டுகொள்வது நினைவலைகளாக தொட்டுபோனது. வெளியே
சற்று தள்ளி வினோபாவே வாழந்த இடத்தை  பார்த்த்தும் ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது. எவ்வளவு எளிமையான வாழ்க்கையை நமது தலைவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்?.
ஓவ்வொரு இந்தியனும் இதை பார்க்கவேண்டும் தன் குழந்தைகளுக்கு காட்டவேண்டும் என தோன்றுகிறது. பணம்கொட்டும் குஜராத் மாநிலம் இதை இன்னும் வெளிநாடுகளில் இருக்கும் நினைவுதலங்கள் போல சிறப்பாக அமைக்கலாம். ஒலி ஓளிகாட்சி,காதில் மாட்டிக்கொள்ளும் வசதியுடன் விளக்க உரை தரும் சிடிபேளையர்கள், கதைகள் சொல்லும் கைடுகள் என நிறைய செய்யலாம். காந்தி சம்பந்த பட்ட சினிமாபடங்களை காட்டும் காட்சிகூடம் அமைக்கலாம். காந்தியை பிடிக்காத பிஜேபிகாரகள் செய்யாவிட்டால் கூட   ஒரு காந்தியாக வரப்போகும் ராகுல் காந்தியாவது செய்யவாரா?செய்ய வேண்டுமம்
அஹமதபாத்தை ரொம்பவும்  மாற்றிகொண்டிருக்கிறார்கள்.பஸ்க்கு தனிபாதை-டிராக்,

நகரின் நடுவே ஒடும் நதியை அழகாக்குவது, பரோடாவை இணக்க எக்ஸ்பிரஸ்வே எல்லாம். இதில் கார்களுக்கும் பஸ்களுக்கும் மட்டுமே அனுமதி. மீனிமம் ஸ்பீடு 100கிமீ.ரோடில் நடந்தால் 1000 ருபாய் பைன் அல்லது ஜெயில். அஹமதாபாத்திலும் சோம்நாத் போகும் வழியில் பார்த்தவைகளில் சில படங்களை இந்த பக்கத்தின் மேலுள்ள பயாஸ்கோப்பை கிளிக் செய்து open in new window வை கிளிக் செய்தால்  ஸ்லைட் ஷோவில் பார்க்கலாம்