சந்திப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10/7/18

திறமைகள் ஓய்வதில்லை.



சில தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் எப்படி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப்பெற்றிருக்கிறார்களோ அதேபோல் சில தமிழக போலீஸ் அதிகாரிகளும் மறக்க முடியாதவர்களாக, மதிக்கப்படுபவர்களாகயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு விஜயகுமார் ஐபிஎஸ்.
பள்ளியில் படிக்கும்போதே ஒரு போலீஸ் அதிகரியாக வேண்டும் என்ற தாகத்துடன் வளர்ந்தவர் விஜயகுமார். காரணம் அவரது தந்தை. மிடுக்கான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியான கிருஷ்ண நாயர்தான் அவரது ரோல் மாடல். அதனால் தான் 1975ல் ஆட்சிப்பணிக்கான தேர்வில் ஐஏஎஸ்ஸில் முதல் ரேங்க் பெற்றிருந்த போதும் காக்கியின் மீதிருந்த காதலால் இரண்டாவது இடம் பெற்றிருந்த ஐபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தார்.

ஒரு காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய விஜயகுமார், தேசிய காவல் அகாடமியின் இயக்குநர் பதவிவரை காவல் துறையின் பெரும் பதவிகள் அனைத்தையும் பார்த்தவர். தமிழகப் போலிஸின் 20 ஆண்டு சவலாகயிருந்த வீரப்பனை வீழ்த்தியது இவர் அடையாளம். 

சில பதவிகள் அதிலிருக்கும் அதிகாரிகளால் பேசப்படும். விஜயகுமார் எந்தப் பதவியிலிருந்தாலும் அதில் தன் அடையாளத்தைப்பதித்தவர். மாவட்டங்களிலிருந்தபோதும் சரி சென்னைக் கமிஷனர்களாகயிருந்த போதும் சரி நிறைய ரவுடிகளை ஒடுக்கியவர். ஒரே வாரத்தில் 1000 பேரை கைது செய்தவர். தமிழகப் போலீஸில் எஃபி அருள். வால்ட்டர் தேவாரத்துக்கு அடுத்தபடியாகத்தமிழக ரவுடிகள்தல்காட்டாமல் இருந்தது இவர்காலத்தில் தான். அதற்காக  7 என்கவுண்டர்களை நடத்தி சர்ச்சைகளுக்கும் உள்ளானவர்
அபோது அவர் சொன்னது

“நான் எனக்குக் கீழ் பணியாற்றுவோரிடம் அடிக்கடி சொல்வது துப்பாக்கி வெறும் பொம்மை அல்ல என்பதைத்தான். ஒரு அரசாங்கம் யாரிடமாவது சும்மா துப்பாக்கியைக் கொடுத்துச் சுடச் சொல்லுமா? காவல் துறையிடம் கொடுத்திருக்கிறது என்றால், ஏன்? மக்களைக் காப்பாற்றுவதற்காக. அப்படிக் காப்பாற்ற நேரும்போது, உன் உயிருக்கு ஆபத்து வந்தால் உன்னைக் காத்துக்கொள்வதற்காக. ஆனால், எதற்கெடுத்தாலும், துப்பாக்கியைத் தூக்குபவனோ, தூக்கச் சொல்பவனோ அல்ல நான். தவிர்க்க முடியாத தருணத்திலேயே அவை வெடிக்கின்றன”
துணிவான இந்த அதிகாரி ராஜிவ் பிரதமாராக இருந்தபோது அவர் பாதுகாப்புகாக உருவாக்கபட்ட ஒரு விசேஷப்படைக்கு தலமைதாங்க நியமிக்கபட்டவர் மீண்டும் தமிழத்டில் ப[ல பதவிகளை வகித்தவந்த  வந்த இவரை மத்திய அரசு அனைத்திந்திய போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்குக்கும்  தேசிய போலீஸ் அகடமியின் தலைவராக நியமித்தது. தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸின் தேசிய தலமைப்பொறுப்பை ஏற்று அதில் பல சிறப்பு பயிற்சி திட்டங்களை உருவாக்கியபின் ஒய்வு பெற்ற இவருக்கு அன்றைய உள் துறை அமைச்சர் திரு சிதம்பரம் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வழங்கினார். அந்தப்பதவியிலிருக்கும்போது விஜயகுமார், வெறும் ஆலோசகராக மட்டும் இல்லை; களத்தில் நின்றார். தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய மாவோயிஸ்ட்டுகள் பஸ்தாரில் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இறந்தபின்னர்  இவரின் திட்டப்படி கொடுக்கபட்ட பதிலடி இன்றும் பேசப்படும் ஒரு விஷயம்.
“ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.” என்று துணிந்து போலீஸ் துறையைப் பற்றி எழுதியிருப்பவர் இவர்.

தன் அரசு ஆலோசகர் பதவிக்காலம் முடிந்த அன்று (கடந்த ஜுன்13ம் தேதி) அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் நாலு வரியில் தன் முக நூல் பக்கத்தில் நன்றியைத்தெரிவித்தபோது விஜயகுமாருக்கு அடுத்த ஒரு வாரத்தில் ஒர் ஆச்சரியம் காத்திருப்பது தெரியாது.

காஷ்மீர மாநில  அரசியல் சதுரங்கத்தில் தவறாகக் காய்கள் நகர்ந்தப்பட்டதின் விளைவாக ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அறிவிக்கபட்டவுடனேயே கவர்னருக்கு ஆலோசகர்களாக நியமிக்கபட்ட அதிகாரிகளில் ஒருவர் விஜயகுமார். திறமையான அதிகாரி என்பது மட்டுமில்லாமல் காஷ்மீரில் எல்லைக்காவல் படை ஐஜியாக இருந்த காலத்தில் இவர் பூட்ஸ் படாத காஷ்மீர் எல்லைப்பகுதி எதுவுமில்லை என்பதும் ஒரு காரணம்
காஷ்மீரத்தில் என்று தணியும் இந்த வன்முறை தாகம் என்று பல இந்தியர்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில் தொலைநோக்குப் பார்வையோடு கூடிய, ஆழமான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க ஒரு முன்னாள் தமிழகப் போலீஸ் அதிகாரி நியமிக்கபட்டிருப்பது நமக்குப் பெருமை தரும் விஷயம்.


19/6/18

நிஜ நாயகன் நிழல் வில்லன்





இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையைச் சீரழித்த பெருமழை வெள்ளத்துக்கு சில நாட்களுக்குப் பின் நண்பர் ஒருவருக்கு ஒரு போன் அழைப்பு. “உங்கள் பகுதியிலிருந்து உதவி கேட்டு ஒர் கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் சென்று பார்த்து உண்மையாக இருந்தால் நீங்கள் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனம்மூலம் உதவுங்கள். ஆகும் செலவை நான் நன்கொடையாகத்தருகிறேன்.” நண்பருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி. காரணம் போனில் பேசியவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நானாபடேகர். நண்பருக்குச் சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஒரு ஷேர் டாக்சி பயணத்தில் கிடைத்த அறிமுகம் தொடர்ந்து நட்பாக மலர்ந்திருந்திருந்தது.
உதவியைக்கோரிய அந்த வேண்டுகோள் உண்மையானது என்பதால் நண்பரின் குழு அந்தப் பணியைச் செய்கிறது. செலவிடபட்ட கணிசமான பணத்தை விடக் கூடுதலாகவே தன் நன்கொடையை இந்த விஷயம் மீடியாவுக்கு போக வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அனுப்புகிறார் நானா படேகர்.
இந்திய சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் பலர் அவ்வப்போது தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன் வருவாயில் பெரும் பகுதியை(70%) எந்த ஆர்பாட்டமும் இல்லமல் நன்கொடையாக வழங்கிக்கொண்டிருப்பவர் நானா படேகர் மட்டும் தான்

எந்த இந்திய மொழிப் படமானாலும் ஹீரோவைவிட வலிமையானவராகப் படைக்கப்பட்ட வில்லனுடன் போராடி ஹீரோ ஜெயிக்கும் படங்களில் அந்த வில்லன் தன் நடிப்பால் மக்களின் மனதில் தனியிடம் பிடித்துவிடுவார். அவரது நெகட்டிவ் கேரக்டர் கொண்டாடப்படும் அளவுக்குப் பேசப்படும். படம் ஹிட்டாவதற்கு அவரும் ஒரு காரணமாக அமைந்துவிடுவார். ரசிகர்களால் போற்றப்படுவார்.
இன்றைய சூப்பர் ஹிட்டான ரஜனியின் “காலா” வில் வில்லானக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் நானாபடேகர் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். ஏராளமான பாலிவுட் படங்களில் ஹிரோவாக, வில்லனாக, மட்டுமில்லாமல் முக்கியப்பாத்திரங்களிலும் நடித்துத் தனியிடத்தைப்பிடித்து தக்க வைத்துகொண்டிருப்பவர்

“உணர்வுகளை வெறும் வசன்ங்களில் கொண்டுவர முடியாது. முக அசைவு, உடல்மொழியில் தான் அவற்றை வெளிகாட்டும் கலைஞதான் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்” என்று சொல்லும் நானா மராத்தி, இந்தி, கன்னடம், தமிழ் எனத் தனது நடிப்பின் எல்லயை உலகிற்கு புரிய வைத்து., இதுவரை 3 தேசிய விருதுகளையும் பல பிலிம் ஃபேர் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர்.
சினிமாவிற்காக நானாவான விஷ்வநாத் படேகர் கடந்து வந்தது மிகக்கடுமையான பாதை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திறந்தாலும் பள்ளிப்பருவம் அவருக்கு இனிமையானதாக அமைய வில்லை. தந்தையின் துணிவியாபாரத்தில் அவரது பார்ட்னர் ஏமாற்றியதால் ஒரே இரவில் ஏழையாகிப் போனது அவரது குடும்பம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே குடும்பத்துகாகப் பகுதி நேர வேலை செய்து பள்ளிக்குப் போனவர்.அப்போது செய்த வேலை சினிமா போஸ்டர் ஒட்டுவது. அதிலிருந்து எழுந்தது தான் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் வெறி எல்லாம். ஆனால் பாலிவுட் இவரை உடனே ஏற்க வில்லை. உயரம், கருப்புநிறம். முகம் எடுப்பாகயில்லை.ஹிந்தி உச்சரிப்பில் அதிக மாராட்டிய வாசனை போன்ற பல காரணங்கள் சொல்லி நிராகரிக்கப் பட்டவர். பின்னாளில். இது அனைத்துமே இவரது தனித்துவமாகப் பாரட்டப்பட்டது வேறு விஷயம்
.
தனக்குப் பிடித்த ஒவியத்தில் பட்டம் பெற ஜே ஜே காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்தார். ஆனால் தொடர்ந்து படிக்கப் பணமில்லை.மாரத்தி நாடகங்களில் நடித்துக்கொண்டே
சினிமா வாய்ப்புடன் வேலையையும் தேடிக்கொண்டிருந்தார். உனக்கு என்ன தெரியும்? எனக் கேட்டவரிடம் தன் ஓவியத்திறமை நம்பி ““பெயின்ட்டர்” (டிராயிங் ஆர்டிஸ்ட் என்று சொல்லதெரியாதால்) என்ற சொன்னவருக்குக் கிடைத்த வேலை ரோடுகளில் மக்கள் கடக்கும் போடுகளை பெயிண்டால் போடும் வேலை.
70களின் பிற்பகுதியில் நானா படேகர் தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பில் தன் திறமையை நிருபித்ததால் கிடைத்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு பாலிவுட்டில் தன் இடத்தைப் பிடிக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். முதன் முதலாக வில்லன் மற்றும் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கலாம் என்ற ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் நானா படேகர்.
.
அதிக அளவில் பணமும் புகழும் சேர்ந்தாலும் மிக எளிமையான வாழ்க்கைமேற்கொண்டவர். கோடிகளில் சம்பாதித்தாலும் தன் அம்மாவுடன் ஒரு சிங்கள் பெட் ரூம் பிளாட்டில் வசிப்பவர். தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும் மறக்காமல் கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர். அவ்வப்போது பலருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த இந்த மனிதரின் இந்தக் கருணை முகம் பெரிய அளவில் வெளிப்பட்டது சில வருடங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பெரும் வறட்சியை சந்தித்தபோது தான். விவசாயம் பொய்க்கவே ஏரளமான விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டபோது தான். நானாப்டேகர் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்த அதிர்ந்து போனார். உடனடியாகத் தன் சொந்தப்பணத்திலிருந்து இறந்த 62 விவசாயிகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 15000 ரூபாய் அன்றே கொடுத்தார்.


"தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால் உடனே என்னை அழையுங்கள்.... உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்...... உயிரை மட்டும் விட்டு விடாதீர்கள்...... நீங்கள் தான் இந்த நாட்டின் சொத்து"
விவசாயிகளுக்கு மத்தியில் அன்று பேசிய நானா படேகர் கூறிய வார்த்தைகள் இவை. இதை வெறும் மேடைப்பேச்சாக இல்லாமல் இதற்கான பணிகளைத் தொடர்ந்து இதைச் சிறப்பாகசெய்ய “ நாம் என்ற அமைப்பை உருவாக்கி நன்கொடைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
துவக்க நாளிலே கிடைத்த பணம் 80 லட்சம். சில நாட்களில் சில கோடிகளைத்தொட்டது. இன்று அந்த அறக்கட்டளை கிராமங்களில் விவசாயிகளுக்கு வேலை, குளங்கள் தூர் வாருதல் போன்ற பல சமூகப்பணிகளை சிறப்பாகச் செய்கிறது. பல நேரங்களில் நானாவே நேரடியாகக் கிராம சபை கூட்டங்களில் குறைகள் கேட்டு உதவிகளைத் திட்டமிடுகிறார்
.
விவசாயிகளுக்கு உதவுவது மட்டுமில்லாமல் விதவைகளின் மறுவாழ்வில் கவனம் செலுத்துகிறார். இன்று மஹராஷ்டிர கிராமங்களில் அரசியல் வாதிகளைவிட பிரபலமான இவர் ஒரு கட்சி துவங்கி அரசியிலுக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி. ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை என்கிறார்.
தான் செய்யும் எந்தப்பணியையும் அரப்பணிப்புடன் செய்பவர். நானா படேகர். அவரே எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ப்ரஹார். இதில் நானா ஒரு ராணுவ வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடிப்பதற்கென்றே இரண்டு ஆண்டுகள்வரை உண்மையாகவே ராணுவப் பயிற்சி எடுத்தார். இந்திய ராணுவத்தை சிறப்பாகக் காட்ட இப்படி இவர் செய்த நல்ல பணிக்காக இந்திய ராணுவத்தின் கெளரவ கேப்டன் ரேங்க் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சினிமாத்துறையைச் சாரத நணபர்கள் பலர் இவருக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள்மூலம் பலருக்கு சத்தம் இல்லாமல் நிதியுதவிகளைச் செய்து வரும் நானா படேகர், இதுகுறித்து தனது பேட்டிகளில் கூடப் பதிலளிக்க மறுத்துவிடுவார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மனதில் பட்டதை பட்டென்று வெளிப்படையாகப் பேசும் இவர் அதனால் கோபக்காரர் என்ற பெயரையும் பெற்றவர். அரசியல் வாதிகளையும், சிவ சேனா போன்ற அமைப்புகளையும் கூடக் கடுமையாக விமர்சனம் செய்தவர். பாஜகா பிரமுகர்கள் இருந்த கூட்டத்திலேயே நம் நாட்டில் ஜனநாயகம் வளர்ந்திருப்பதிற்பதற்கு காங்கிரஸ் காரணம் என்று சொன்னவர்.
993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்செய் தத்திற்கு சர்ச்சைக்குரிய முறையில் பரோல் வழங்கப்பட்டபோது இம்மாதிரி செய்வது தவறு என்று துணிந்து சொன்ன ஒரே நடிகர் இவர்தான்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அனைவரும் வரவேற்றபோது, "ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது... அவரின் குணத்திற்கு அரசியல் அவர் புகழை இழக்க வைத்து விடும்" என்று சொன்னவர் நானா படேகர். காலாவில் வில்லன் ரோலை ஏற்க தயங்கிய அவரை ரஜினி சந்தித்து ஊக்குவித்து அதை ஏற்க செய்த நேரம் அது.

எழுத்தாளர், இயக்குனர், கவிஞர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என்று பன்முகம் கொண்ட கலைஞர் நானா படேகர். மொழி என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு தன் பயணத்தைத் தொடங்கிநடிகன் என்ற இடத்திலிருந்து நல்ல மனிதன் என்ற பெயருடன் மக்கள் மனங்களில் அமர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் எட்டியதில்லை
.
படத்தில் ஹீரோவாக வாழும் பலர் நிஜவாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் பல படங்களில்,வில்லனாகவே முன்னிறுத்தபட்டிருக்கும் நானா படேகர் நிஜத்தில் ஹீரோவாகவே பல குடும்பங்களைக் காப்பற்றி வருவது ஒர் ஆச்சரியமான உண்மை




5/12/16

ஆச்சரியப்படுத்தும் ஆளுநர்




 “மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா. இந்திய மாநிலங்களிலேயே எல்லாப் பகுதிகளும் எழில்கொஞ்சும் இயற்கையின் பேரழகு மிளிரும் மாநிலம். அதன் தலைநகரான ஷில்லாங் நகரின் நடுவிலிருக்கும் அழகான ஏரியின் அருகில் பரபரப்பாக இயங்கும் குறுகிய சாலைகளின் இடையே, அமைதியாக, கம்பீரமாக நிற்கிறது ராஜ்பவன்.





பரந்த பசும்புல்வெளியின் பின்னே வண்ண மலர்கூட்டங்களுக்கிடையே இளஞ்சிவப்பு வண்ண கூரையுடன் நீண்ட வாராண்டாக்களுடன் இருக்கும் இந்த அரசுகட்டிடத்தின் வயது 113. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியில் கட்டப்பட்ட முதல் அரசு கட்டிடம் இது. நில நடுக்கங்களின் தாக்குதலுக்குள்ளாகாத வகையில் முழுவதும் தேக்கு, ஓக் போன்ற மரப்பலகைகளினாலும், மழைநீர் சேராதிருக்க கூம்பு வடிவ கூரைகளினாலும் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டிடம் இந்தியாவின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

நுழைவாயிலில் நிற்கும் தென்னக கோவில்களில் மட்டுமே காணப்படும் அடுக்கு விளக்கைக் கடந்து போகும் நம்மை இரண்டு யானைத்தந்தங்களுக்கிடையே தியானிக்கும் புத்தர் வரவேற்கிறார். வலது புறம் இருக்கும் நீண்ட அழகான வரவேற்பு கூடத்தில் நுழைகிறோம்

.
வாங்க வணக்கம்”. என முகமலர வரவேற்கிறார். மாநில ஆளுநர் சண்முகநாதன்.
தஞ்சை மாவட்டத்துக்காரர். தமிழகத்தின் தென்கோடியிலிருந்து அத்தனை கிராமங்களையும் அறிந்தவர். பல கிராமங்களிலும் நகரங்களிலும் இளைஞர்களைப் பன்முகதிறனாளிகளாக்க பயிற்சிகள் அளித்தவர். இளைஞர்களின் நலன், மேம்பாடுகுறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பல கட்டுரைகள் எழுதியிருப்பவர்.

நான் ஒரு சாதாரண, சாமானியங்க.”. எனது அரசியல் வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் இன்று இந்த மாநிலத்தின் ஆளுநர் என்ற கட்டத்தில் நிற்கிறேன்” என்று எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார். உடல் நலம் சற்று குன்றியிருந்தாலும் மிகத்தொலைவிலிருந்து தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நம்மைச் சந்திக்க அன்புடன் சம்மதித்திருந்தார்.
அவரே ஒரு எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் இருப்பதால் ,தமிழக இலக்கிய சுழல், பத்திரிகைகள்பற்றி நன்கு அறிந்திருக்கிறார். இவருடைய ஆங்கிலபுத்தகமான ‘The Remarkable Political Movement பல சமூக, கலாச்சார மேம்பாட்டு இயக்கங்களில் பிரபலமானது
.
பேசும்போது மிக இயல்பாகத் திருவாசகம், தேவார வரிகளைச் சொல்லுகிறார். மிக உயர்ந்த கருத்துகளைச் சொல்லும் இவற்றை இன்றைய இளைஞர்களுக்குச் சரியான முறையில் எடுத்துச் சொல்ல நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்.
சிறு வயதில் பள்ளிநாட்களில் சமூக ஏற்றதாழ்வினால் சந்தித்த சில நிகழ்வுகள் ஏற்படுத்திய காயத்தினால், அதுபற்றி என் அம்மாவிடம் கேட்டேன்.” அது நமது சமூக அமைப்பு அப்படித்தான் இருக்கும்என்றார். என் மனம் ஏற்கவில்லை. பிறப்பினால் அனைவரும் சமம்- செய்யும் தொழிலில் காட்டும் திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னேரே தெய்வப்புலவன் திருக்குறளில் சொல்லியிருப்பதை உணர்ந்து என் திறமைகளை வளர்த்துக்கொண்டு இந்தநிலையை மாற்ற வேண்டும், நம்மால் ஆனதை இதற்காகச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் வார்த்தைகள், விவேகானந்தர் கருத்துகள் எல்லாம் படித்தபொழுது இந்த எண்ணம் வலுப்பெற்றது.
.

பள்ளிக்காலத்தைத் தொடர்ந்து கல்லூரியில் காலடி எடுத்துவைத்தபோது இந்த எண்ணங்கள் வளர்ந்திருந்தது. அந்தக் கட்டத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவரது மாமாவிற்கு எழுதிய கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. அதில்தனிமனிதன் வாழ்க்கையில் வளர முடியும். ஆனால் அதேவளர்ச்சி நாட்டின் வளர்ச்சியில் இல்லாவிட்டால் என்ன பயன்? யாரோ உரமிட்டு வளர்த்த மண்ணில் நாம் இப்போது விளைச்சலின் அறுவடையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அந்த மண்ணை, மக்கள் நலனுக்காகச் சீராக்க பாதுகாக்க நமது அபிலாஷைகளைத் தியாகம் செய்யக்கூடாதா? என்ற எண்ணத்தில் நாட்டிற்காக சமூக பணிகளைச் செய்யப் போகிறேன்” -என்ற அந்தக் கடிதம் என்னை மிகவும் ஈர்த்தது. அதைப் படித்த எனக்கும் மனதிலும் அந்த எண்ணம் எழுந்தது. ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் தொண்டராக இணைந்தேன். இதற்காக வீட்டை விட்டு வெளியேறினேன்.. உடன் பிறந்தவர்கள் எல்லோரும் படித்து முடித்துத் தனி வாழ்க்கை அமைத்துகொண்டநிலையில் . சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில்லில் முதல் மாணவனாக வந்து வேந்தர் கையால் தங்க மெடல் பெற்ற நான் மட்டும் நல்ல பணிக்குப் போகாமல் திருமண வாழ்க்கையைத் தவிர்த்து இப்படி சமூக சேவையில் இறங்கிவிட்டதில் என் தாயாருக்கு மிகுந்த வருத்தம் தான்.
ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கட்டளைகளுக்கு ஏற்பப் பல நிலைகளில்., வெவ்வேறு காலகட்டங்களில் சமூகப்பணி. இளைஞர் நலம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒரு நல்ல மனிதன் என்பவன் எல்லோருக்கும் நண்பராக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். பின்னர் பிஜேபியில்  கட்சி பணிகள் பல மட்டங்களில் தொடர்ந்தன.
2003
லிருந்து டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் பணி. நமது நாடாளுமன்ற முறைகளை, பாதுகாப்புத்துறை, வெளிவிவகாரத்துறை குறித்து நிறையப் படித்து ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. வெளிநாட்டுப் பணிகளின் அனுபவமும் கிடைத்தது.
என்று தனது அரசியல் வாழக்கைப்பாதையை விவரிக்கும் இந்த ஆளுநர் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 90 களில் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பை முன்நின்று நடத்தியவர். இன்று சென்னையில் தமிழ் வளர்த்த சான்றோர், உறவுச்சுரங்கம் போன்ற அமைப்புகள் தமிழின் வளர்ச்சிக்காகச் செய்யும் பணிகள்பற்றி பேசும்போது. இந்தமாதிரி அமைப்புகள் செய்யும் முயற்சிகள் வரவேற்க தகுந்தவைகள் தான். ஆனால் இம்மாதிரி கூட்டங்களுக்கு இளைஞர்களை ஈர்க்க நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும். அது தான் தமிழின் வளர்ச்சிக்குச் செய்யும் உண்மையான பணி என்ற கருத்தை முன் வைக்கும் இவர் திவ்விய பிரபந்தத்தை ஒப்புவிக்கும் மாணவர்களுக்குப் பணப் பரிசுகளை அறிவித்திருக்கிறார்.
நாட்டின் பல்வேறு இளைஞர்கள் பங்கு கொள்ளும் ஒரு கூட்டத்தில் உன்னுடைய பிரார்த்தனை எதையாவது சொல்லு என்றால், கிருத்தவ இளைஞன் ,பைபிள் வாசகத்தையும் இஸ்லாமியர் குரான் வாசகங்களைச்சொல்லுகிறார்கள்இந்து மாணவன் தயங்கி எதையும் சொல்லுவதில்லை. இதை மாற்ற, நம் இளைஞர்களுக்குத் தமிழின் பெருமையை உணரச்செய்ய வேண்டும் என்கிறார்
.
ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புபற்றி, தமிழக உதல்வரின் உடல் நலம் பற்றிக் கேட்கிறார். “அவர் அரசியல் மட்டுமில்லை ஏழைகளின் மனத்தையும் அறிந்தவர். விரைவில் நலம் பெற வேண்டும்” என்கிறார்.
சந்திப்பு மதிய உணவு வேளையாக இருந்ததினால், உடன் உணவருந்த அழைக்கிறார். அந்த மாநிலவிசேஷமான இனிப்புடன் பளிரென்ற இட்லிகளுடன் வடை சட்னி எல்லாம் வருகிறது. மேகாலயா ராஜ்பவனில் இட்லி.! மிக மிருதுவான அதைத் தொட்டவுடன் தமிழரின் தயாரிப்பு என்பதைச்சொன்னது. சமையல் பணிக்குத் தமிழ் நாட்டிலிருந்து அழைத்துவந்திருக்கிறீர்களா என்ற நமது கேள்விக்குஇல்லை இங்கு 30 ஆண்டுகளாக பணியிலிருக்கும் முத்து தமிழ் நாட்டுக்காரர். உங்களுக்காக அவர் இதைச்செய்திருக்கிறார் என்கிறார்
ஆளூநருக்காக எடுத்துச் சென்ற தமிழ் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு விடைபெறுகிறோம்
.
இதைப்பார்த்தீர்களா? என அந்த அறையிலருக்கும் ஒரு படத்தைக் காட்டுகிறார். அது திருச்சி உச்சிபிள்ளையார் கோவிலிருக்கும் மலைக்கோட்டையின் முன் இரண்டு ஆங்கிலேயே அதிகாரிகள் நிற்கும் ஆயில் பெயின்ட்டிங். இந்த ராஜ் பவனில் பல ஆண்டுகளாக இருக்கும் படம் என்கிறார். புகழ்பெற்ற ஒரு தமிழ் நாட்டுக் கோவிலின் படத்தை அங்கு பார்த்ததில் ஆச்சரியம்

ஒரு மாநில ஆளுரை பார்த்ததைவிட அன்போடு பழகிய நல்ல நண்பரைப் பார்த்த உணர்வு மேலிட்டது. வாயிலைக் கடக்கும்பொழுது முகப்பில் பொறிக்கபட்டிருந்த The good man is friend of all living being என்ற வாசகங்கள் கண்ணில் பட்டது. இது இந்த மனிதருக்கும் மிகவும் பொருந்தும். எனத் தோன்ரியது.
ஆளுநரின் உதவியாளரான ராணுவ அதிகாரிக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்புபோது, நம்மை அழைத்துவந்த டாக்சியின் ஓட்டுநர், உங்கள் நாட்டிலிருந்து வந்திருக்கும் கவர்னர் மிக நல்லவர் என்கிறார்,
எப்படிச் சொல்லுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்நான் இங்கு பெரிய அளவில்  நடந்த கணேச பூஜையில் கலந்து கொண்டேன். இந்த ராஜ்பவனில் இது போன்றவைகள் இதுவரை நடந்ததில்லை”.
தமிழகத்திலிருந்து பல வெகுதொலைவில்  நாட்டின் வடகிழக்கு மூலையில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகனாக இருக்கும் இந்தத் தமிழன் அங்குள்ள சதாரண மனிதர்களின் மனதிலும் இடம் பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்தபோது பெருமையாக இருந்தது.

6.12.1கல்கி இதழலில் எழுதியது.