புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27/1/19

காகிதப்புலி




லோக்ஆயுக்தா என்றால்மக்களால்நியமிக்கப்பட்டவர்கள்என்றுஅர்த்தம். சுதந்திரம்பெற்றபின்னர்அரசின்திட்டங்கள்

சட்டதிட்டங்கள்மக்களுக்குமுறையாகச்சென்றுசேர்கிறதாஎன்றஅடிப்படையில்ஆரம்பிக்கப்பட்டது. இந்தவிவாதம் 1960-களில்தொடங்கியது. பொதுவாழ்க்கையில்இருப்பவர்கள்ஊழலில்ஈடுபடுவதால், ஊழல்முக்கியப்பிரச்சினையாகஇருந்ததால்அதுவும்கூடுதலாகசேர்க்கப்பட்டது. இதுதான்லோக்ஆயுக்தாஎன்றவடிவத்தின்முக்கியஆரம்பம்
ஆளுங்கட்சியின்தலையீடுஏதுமின்றிதன்னாட்சியாக, முழுஅதிகாரத்தோடுசெயல்படக்கூடியலஞ்சஊழல்ஒழிப்புக்கானஆணையம்மற்றும்அரசுசேவைகளில்மக்களுக்குள்ளகுறைபாடுகளைதீர்க்கஉதவும்ஒருமையம். இதைதமிழில்அழகாககூறவேண்டுமானால், 
‘ஊழல்விசாரிப்புமற்றும்மக்கள்குறைதீர்ஆணையம்’என்றுஅழைக்கலாம்.

இது எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் வழி காட்டியிருந்தது. ஆனால் மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. சமூக  ஆர்வலர்களின் பல முறையீடுகளினால் சில மாநிலங்களில் அமைக்கப்பட்டது.சமீபத்தியநீதிமன்றகணக்கின்படி 12மாநிலங்கள்தவிரஅனைத்துமாநிலங்களிலும்உள்ளது. லோக்ஆயுக்தாநீதிமன்றங்களைஏன்அமைக்கவில்லைஎன்பதுதொடர்பாககடந்த ஆண்டு ஜுலை 31ம் தேதிக்குள் பிரமாணப்பத்திரம்தாக்கல்செய்யும்படிதமிழகம்உள்ளிட்ட 12
 மாநிலங்களுக்குஉச்சநீதிமன்றம்கடந்தமாதம்உத்தரவிட்டது.
அனைத்துக்கட்சிகளும், சட்டப்பஞ்சாயத்துபோன்றஅமைப்புகளும், மீடியாக்களும்நெருக்கியதாலும்.உச்சநீதிமன்றத்திற்குஅறிக்கைஅளிக்கவேண்டியகட்டாயம் நேர்ந்ததின் விளைவாக கடந்த ஆண்டு ஜுலை மாத கூட்டத்தொடரின்  நாளன்று தமிழக அரசு ஒரு மசோதாவை அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறது.


ஏன் இந்த லோக் ஆயுக்தா அவசியம்?


லஞ்சஒழிப்புத்துறைமாநிலஅரசின்வரம்பிற்குள்வரும், லஞ்சஒழிப்புத்துறையில்உள்ளஅதிகாரிகளைமாநிலஅரசுநினைத்தபடிதூக்கிஅடிக்கலாம், தங்களுக்கேற்றஆட்களைநியமிக்கலாம். ஆனால்லோக்ஆயுக்தாவில்அப்படிச்செய்யமுடியாது. அதன்நியமனம்மாநிலஅரசுசம்பந்தப்பட்டதாகஇருந்தாலும்நீக்கமுடியாது, மாற்றவும்முடியாது.

லோக்ஆயுக்தாதலைவர்லஞ்சப்புகாரின்நடவடிக்கை எடுக்கப்பரிந்துரைக்கலாம்,
தாமாகமுன்வந்துவழக்குப்பதிவுசெய்யலாம். அமைச்சர்கள், முதல்வர், அதிகாரிகள்வீட்டுக்குள்சென்றுகூடரெய்டுநடத்தஉரிமைஉண்டு. பொதுமக்கள்சேவைபுகாரின்பேரில்நோட்டீஸ்அனுப்பலாம். விளக்கம்கேட்கலாம்.

லோக்ஆயுக்தாபோலீஸ்என்றுதனியாகஇருக்கும். இதற்கானபோலீஸார்மாநிலபோலீஸாராகஇருந்தாலும்லோக்ஆயுக்தாகட்டுப்பாட்டில்இருப்பார்கள்.

ஆனால் இந்த விதிமுறைகள்மாநிலஅரசுஇயற்றும்சட்டத்தின்பிரிவில்இருக்கவேண்டும். இதில்முதல்வர், அமைச்சர்கள்வீடுகளுக்குரெய்டுபோகக்கூடாதுபோன்ற விஷயங்களுக்கு விதிவிலக்குகொடுத்தால்அதுநடக்காது.

லோக்ஆயுக்தாவில்என்னென்னஅம்சங்கள்இருக்க வேண்டும்.,
லோக்ஆயுக்தாவில்யார்தலைவராகஇருப்பது, யார்தலைவரைநியமிப்பது. யார்தேர்ந்தெடுப்பதுஎன்றவரையறை எல்லாவற்றையும் மாநில அரசுகள்  தங்கள் சட்ட வடிவில் சொல்ல வேண்டும்  அதே போல் என்னென்னவிஷயங்கள்விசாரிக்கலாம், என்னஅதிகாரங்கள்உண்டுஎன்ற விஷயங்களும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்

அப்படியானால் மாநில அரசுகள் இந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடுமே?

.இந்த நிலையைத் தவிர்க்கத்தான்  மத்தியஅரசேஇந்தியாவுக்கானபொதுவானஒருலோக்ஆயுக்தாசட்டத்தைஉருவாக்க வேண்டும் அல்லது பொது வரையறைகளைஅளிக்கவேண்டும்என்றும். மத்தியஅரசுலோக்பால், மாநிலஅரசுலோக்ஆயுக்தாஎன்றுஇருக்கவேண்டும்.அதேநேரத்தில்நியமனம்போன்றவிஷயங்களில்வரையறைவேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் போராடுகிறார்கள்.

மாநில அரசுகள்  இந்த சட்டம் இயற்றுவதும் மாற்றுவதும்  தங்கள் உரிமை என்ற பெயரில் கர்நாடகநாடக அரசு ஒரு  மோசமான முன்னூதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.லோக்ஆயுக்தாவில்கடுமையானசட்டப்பிரிவுகள்உள்ளமாநிலம்என்றால்அதுசந்தோஷ்ஹெக்டேஇருந்தபோதுகர்நாடகாவில்தான். என்ற நிலையிருந்தது.
 .கர்நாடகாவில்அறிமுகப்படுத்தபட்ட லோக்ஆயுக்தாசட்டப்பிரிவு 13 படிமுதல்வர்மீதோ, அமைச்சர்மீதோ, ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள்மீதுஒருபுகார்வருகிறதுஎன்றுவைத்துக்கொள்வோம். அப்போதுதான்சட்டப்பிரிவு 13-ன்கீழ்லோக்ஆயுக்தாவின்பணிதொடங்கும். இந்தப்பிரிவின்கீழ்உங்கள்மீதுபுகார்வந்துள்ளது, நீங்கள்பதவியில்இருந்தால்விசாரிப்பதில்குறுக்கீடுஇருக்கும். ஆகவே, நீங்கள்பதவிவிலகவேண்டும்என்றுகோரலாம்.
இதன் கிழ் எடுத்த நடவடிக்கையின் படி தான் அன்றைய் முதல்வர் எடியூரப் கைதாகவும் பதவி விலகவும் நேர்ந்தது.

ஆனால்கர்நாடகமாநிலஅரசு தேர்தலுக்குப் பின்  2014-ல்எடுத்த ஒருமுடிவினால் . மக்களுக்கானசேவைகளைவிசாரிப்பதுலோக்ஆயுக்தாவில்இருக்காது. இனிதனியாகஒருஅமைப்புபார்த்துக்கொள்ளும்என்றுமுடிவெடுத்தார்கள். 2016-ம்ஆண்டில் ‘ஆன்டிகரெப்ஷன்பீரோ’என்றஅமைப்பைஉருவாக்கிஇனிஇந்தஅமைப்புலஞ்சஊழல்பிரச்சினைகளைபார்த்துக்கொள்ளும்என்றுசட்டம்இயற்றிவிட்டார்கள்.
இதற்குஎதிர்ப்புதெரிவித்து முன்னாள் நீதிபதிசந்தோஷ்ஹெக்டே “கர்நாடகாவில்லோக்ஆயுக்தாமரணப்படுக்கையில்உள்ளது”என்றார். கர்நாடகமாநிலலோக்ஆயுக்தாதலைவர் ''நாங்கள்இனிலஞ்ச, ஊழல்புகார்வந்தால்அதை ‘ஆன்டிகரெப்ஷம்பீரோவுக்கு’அனுப்பிவிடுவோம்ஏனென்றால்எங்கள்அதிகாரம்குறைக்கப்பட்டுவிட்டது'' என்றுகூறியுள்ளார்.எனவே ஒரு மாநில அரசு இந்த லோக் ஆயூக்தாவை ஏற்படுத்தினாலும் அதை செயலிழக்கச் செய்யும் வலிமை பெற்றதாக யிருக்கிறது.

தமிழகம் கொண்டுவந்திருக்கும் சட்டம் எப்படியிருக்கிறது?
சட்டத்தின் முன் வடிவை பொதுவெளியில் விவாதிக்காமல் அவசரகதியில் மசோதாவை நிறைவேற்றியபின்னர்  அதற்கான விதி முறைகளை அறிவித்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது

ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணை மட்டுமேநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாது

லோக்ஆயுக்தாவிற்குதலைவர்மற்றும்உறுப்பினர்களைதேர்வுசெய்யும் “தேடுதல்குழு”உறுப்பினர்களைஎந்தநேரத்திலும்மாற்றலாம்.

இந்த விதிகள் அறிவிப்புவுடன் பல சமூக ஆர்வ அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்திருக்கின்றன.
இந்த  விதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணைநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாதுஎன்றெல்லாம்வகுத்துள்ளவிதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.


ஊழல்ஒழிப்பின்அடித்தளத்தையேதகர்த்துஎறியும்
இந்த விதிகளைஉடனடியாகரத்துசெய்யவேண்டும். இந்த அரசு, லோக்ஆயுக்தாஅமைப்பைஒரு “காகிதப்புலி”போல்ஆக்கிகாலில்போட்டுமிதிக்கநினைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
.மாநிலஅரசின்உரிமைஎன்ற பெயரால் தன்இஷ்டத்துக்கு சட்டங்களை மாற்ற அனுமதிக்காமல்  . லோக்ஆயுக்தாவைக்காப்பாற்றஉச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டுவராதவரையில் லோக்ஆயுக்தாஎன்பது உண்மையில் மக்களால்நியமிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்

30/6/18

பாரதி : கவிஞனும் காப்புரிமையும் - புத்தக அறிமுகம்

-
 ந்த  இதழ் புதிய தலைமுறை இதழிலின் புத்தக அறிமுகத்தில் எழுதியது


உலக இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில்தான் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கான பதிப்புரிமை அரசுடைமை செய்யப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட எவருடைய எழுத்துகளுக்கும் கிடைத்திடாத இந்தத் தனிப்பெருமை மகாகவி பாரதியின் எழுத்துக்குத்தான் கிடைத்தது.

ஆனால் அந்தப்பெருமை அவ்வளவு  எளிதில் கிட்டிவிடவில்லை. இதற்காக நடந்த முயற்சிகள் அதன் மூலம் நிகழ்ந்த மாற்றங்கள், ஏமாற்றங்கள், வழக்குகள் அரசு எடுத்த நிலைப்பாடு அனைத்தையும் வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு தான் சார்ந்த வரலாற்றுத்துறைப் பார்வையுடன் இந்நூலை  முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி மிக அருமையாக எழுதியுள்ளார்
.
மகா கவியின் படைப்புகள் நாட்டுடமையானது குறித்து வழங்கி வரும் பலவித கதைகளைக் கேட்ட நமக்கு இவர் துல்லியமான தரவுகளுடன் உண்மை வரலாற்றை விவரிக்கிறார்.
மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது படைப்புகள் வெகுகுறைவு. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பு ஒன்றுதான் வெளியாகியிருக்கிறது.
 பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பைவிட அவரது காலத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில்தான் பல மடங்காக உயர்ந்தது அதனால் அச்சிட்ட புத்தகங்கள் அதிகம் வரத்துவங்கியது. அப்படி பதிபிக்கபட்ட பாரதியின் படைப்புகள் பொதூடமையாக்கப் படுவதற்கான் தேவை எப்படி எழுந்தது என்பதை நிகழ்வுகளின் காலபோக்கோடு விவரிக்கிறார் நூலாசிரியர். சில இடங்களில் தரவுகளாகச் சுட்டிகாட்டபடும் ஆவணங்களும், கடிதங்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன
.
மஹாகவியின் மனைவி அவரது மகளின் திருமணத்துக்காக அவரது படைப்புகளின் உரிமையை அடகு வைத்திருக்கிறார். அதுவும் யாரிடம் தெரியுமா?. கவிஞரின் தம்பி விஸ்வநாதய்யரிடம். . இதைவிட அதிர்ச்சியான செய்தி அந்தக் கடன் திருப்பிச் செலுத்தபடாததால் உரிமை அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.
 அவர் பாரதி பிசுரலாயம் என்ற பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில் 1928ல் அன்றை அரசு பாரதி நூல்களுக்குத் தடை விதிக்கிறது. விற்பனையைப் பாதிக்கிறது. காங்கிரஸ்காரர்களின் போரட்டங்களுக்குபின் தடைவிலக்கப்படுகிறது. புத்தகங்கள் பரபரப்புடன் விற்க துவங்கின. இந்தக் கட்டத்தில் ஒரு குழுவினர் பாரதியின் படைப்புக:ள் ஏன் ஒரு தனிநபரிடம் இருக்க வேண்டும் அதை அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை முன்னெடுக்கின்றனர். அந்தக் கருத்தாக்கம் மெல்ல பாரதிக்கு விடுதலை என்ற அமைப்பாக உருவாகிறது. எழுத்தாளர்கள் மாநாடு, பாரதி மணிமண்டப விழா போன்ற மேடைகளில். விவாதிக்கபடுகிறது மக்களிடம் அந்தக் குழுவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.

இதே காலகட்டத்தில் எழுந்த ஒரு வழக்கு பாரதியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை அதிகப்படுத்தியது. பாரதியின் பாடல்களை இசைதட்டாக்கும் உரிமையை 1934 ஆம் ஆண்டு விஸ்வநாத அய்யர் ஒரு நிறுவனத்துக்கு விற்றிருந்தார். அவரிடம் சினிமா தயாரிப்பாளார் ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கியிருந்தார்
.
டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று பரவலாக அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப் படமாக்க முனைந்தபோது, பாரதியின் கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப் போல் - வெளியே, சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!’ எனும் பாடலைத் திரைப்படத்தில் இணைத்திருந்தார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார். தன்னிடம் இருக்கும் பாடல் உரிமையைப் பயன் படுத்தினால் இழப்பீடாக ஐம்பதாயிரம் தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பல ஆண்டுகளாகப் பாரதியின் பாடல்களைத் தன் நாடகத்தில் பயன்படுத்திக்கொண்டிருந்த டிகே சண்முகம் வழக்கை எதிர்கொள்ளத் தயாரானார். இந்தப் புத்தகத்தில் விவரிக்கபட்டிருக்கும் அந்த வழக்கில் ஏற்பட்ட ஒரு திருப்பம் பலர் அறியாதது.
ஒரு புறம் மக்களின் கிளர்சி மறுபுறம் ஒரு வழக்கு என்பதால் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது எடுத்த முடிவுதான் பாரதியின் படைப்புகளை நாட்டுடமையாக்குவது. எந்த முன் மாதிரியும் இல்லாத, உலகில் எந்த அரசும் செய்யாத விஷயம் ஒரு படைப்பாளியின் உரிமையை அரசு வாங்குவது என்பது நிகழ்ந்தது. பாரதியின் எழுத்துகள் அரசுடைமை ஆக்கப் பட்டதாக கல்வி அமைச்சர்  அவினாசிலிங்கம் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்தார்.

இதுவரை நிகழ்ந்தையும், மகாகவி பாரதியின் படைப்புகளைப் பொது வுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய நீண்ட கதையை அரசின் அறிவிப்புக்குப் பின்னரும் அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் 8 ஆண்டுகளுக்குப் பின்னரே !  பாரதியின் எழுத்துகள் அவன் விரும்பியபடி  தீப்பெட்டி, மண்ணெண்யை விட மலிவாகக் கிடைத்தது என்பதைச் சொல்லும் அரிய ஆவணம் இந்தப் புத்தகம்.



10/1/18

சென்னைப் புத்தக கண்காட்சி 2018






இன்றைய புத்தக்கண்காட்சியில் வெளியாகும்

 எனது புத்தகம் 1




........ஜன்னலோரஇருக்கையிலிருக்கும் நம்மைத்தொட்டுச்செல்லும்  மெல்லிய காற்றலைபோல விரைவாக  கடந்துபோகும் காட்சியாக இல்லாமல், சில பயணநினைவுகள்  நம் வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கிறது.

 ஆனால் நம்மில் பலரால் அதை அழகாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.  ஆழமான பார்வையில்   இந்த தேசத்தின் வடகிழக்குபகுதிகளை தன் வார்த்தைகளின் வழியாக காட்சியாகவே காட்டுகிறார்  நூலாசிரியர். 

11/11/17

நேதாஜி





.......நேதாஜி புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு  இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. செப் 22ல் வெளியான புத்தகம்  இதுவரை  சென்னயின் இரு பெரிய புத்தக நண்பர்கள் குழுவில்  ஆய்வுடன் அறிமுகப்படுத்தபடிருக்கிறது. 3  பத்திரிகைகள் விமர்சனம் எழுதியிருக்கின்றன. 
ஒரு எழுத்தாளினின் சந்தோஷமான கணங்களில் ஒன்று அவன் எழுத்தும் உழைப்பும் ஒரு வாசகனால் உணரப் பட்டு அவனால் மனப்பூர்வமாக பாரட்டப்படும் போது,  பேஸ் புக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது இது.
. மிக்க நன்றி Mr Murali Seetharaman..


........  எனக்கு வசதி இருந்தால் Ramanan Vsv யின் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வைர மோதிரம் இழைத்துப் போடுவேன்: அப்படி உழைத்திருக்கிறார் மனிதர்! தகவல், தகவல், தகவல்... அப்படி ஒரு உழைப்பு அவருடைய "நேதாஜி - மர்ம மரணம்" புத்தகத்தில்!
ஒரு சாம்பிள்: "இந்தோ ஜெர்மனி சொஸைட்டி என்ற பெயரில் ஜெர்மனியில் வாழும் இந்தியர்களும், இந்திய சுதந்திரத்துக்கு ஆதரவு தரும் ஜெர்மானியர்களும் இணைந்திருந்தனர். 1942 செப்டம்பர் 11- இந்த அமைப்பின் ஆண்டு விழா ஹாம்பர்க் நகரில் நடைபெற்றது. ஜெர்மன் தேசிய கீதம் வாசித்து முடிந்ததும் மற்றொரு கீதம் வாசிக்கப்பட்டது. புன்னகையுடன் இது சுதந்திர இந்தியாவின் தேசியகீதம் என்று சுபாஷ் அறிமுகப்படுத்தினார். நமது தேசிய கீதமாக இன்று ஒலிக்கும் "ஜன கண மன" முதலில் பியானோ இசையில் ஒலித்தது ஜெர்மனியில்தான்!
1911 Dec 27 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தாகூரின் பாடல் சுபாஷை மிகவும் கவர்ந்தது. அதை இந்திய தேசிய கீதமாக அறிவிக்கத் தீர்மானித்தார் சுபாஷ். ஆனால் அதன் இசை வடிவம் எவரிடமும் இல்லை. சுபாஷ் தன் கல்கத்தா நண்பர்களைளத் தொடர்பு கொள்ள அதன் இசை நொட்டேஷனை அம்பிக் மஜூம்தார் என்பவர் எழுதி அனுப்பினார். அதுதான் முதன் முதலில் பியானோவில் வாசிக்கப்பட்டது.
இந்த ஒலிநாடா சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ் INA வீரர்களால் பாதுகாக்கப் பட்டது. 1950 ல் ஐ நா சபையில் ஒலித்த இந்த ஒலிநாடா, இப்போது அகில இந்திய வானொலிக் காப்பகத்தில் உள்ளது!"
தகவல் களஞ்சியம்! ரமணனின் அயரா உழைப்பு! நேதாஜி பற்றி அவ்வளவு தகவல்கள்! வாய்ப்பு இருப்போர் வாங்கிப் படியுங்கள்! (கிழக்கு பதிப்பகம் -விலை ரூ150/-)

24/8/17

“நீங்களும் ஜெயிக்கலாம்”-- மின் புத்தகம்

எனது “நீங்களும் ஜெயிக்கலாம்” புத்தகத்தை Free tamilbooks com மின்னூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
 நண்பர் திரு. அன்வருக்கும் திரு, ஶ்ரீநினிவாசனுக்கும் நன்றி. இரண்டு நாட்களில் தரவிறப்பட்டிருக்கும் எண்ணிக்கை 1000 நெருங்குகிறது என்ற விஷயம் மகிழ்ச்சியாகயிருக்கிறது. நீங்களும் இந்த சுட்டியின் மூலம் தரவிறக்கி படித்துப் பாருங்களேன். உங்கள் கணணி, போன்களுக்கு ஏற்ப தரவிறக்கம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

http://freetamilebooks.com/ebooks/neengalum-jeyikkalam/



புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து...
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா?
ஆனால் கூடவே என்னால் இது முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறதா?
வெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா?
அப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பயன் தருமா?
போன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா?
உங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. 
பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணரமுடியும் !

4/8/17

ஜெயமோகனின் வலைப்பூவில் கடைசிக்கோடு



......ஒரு வாசகனாக கையில் கிடைக்கும் எதையும் வாசித்து தள்ளும் பலபட்டறை நான். ஆனால் ரசிகனாக ஆகசிறந்தவற்றை மட்டுமே நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன். இந்த கடைசி கோடு தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் அடிப்படையில் [இந்திய வரைபடம் உருவான வரலாறு] தனித்துவமான ஒன்று. இந்த எல்லையில் இதுதான் தமிழில் முதல் நூல். தீவிர தளத்தில் வேறு நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் வரும் வரையில் இந்த எல்லையில் இதுவே ஒரே நூல்.................

கடலூர் சீனு 

திரு ஜெயமோகன் அவர்களின் வலைப்பூவில் அவர் எழுதும் கட்டுரைகள்,வெண்முரசு ( மஹா பாரதம்) தவிர அவருக்கு எழுதும் முக்கிய நண்பர்களின் கடிதங்களையும் வெளியிகிறார். சில கடிதங்கள் கட்டுரையாகவே அமைந்து எதிர்வினைகளையும் எழுப்பும். கடந்த வாரம் திரு கடலூர் சீனு என்னுடைய புத்தகமான கடைசிக்கோடு பற்றி ஒரு நிண்ட விமர்சனத்தையே  ஜெயமோகனுக்கே கடிதமாக எழதியிருக்கிறார். அதற்கு வந்த எதிர்வினகளுக்கும் பதில் தந்திருக்கிறார். திரு கடலூர் சீனுவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றி
  அதை இந்த சுட்டியில்  பார்க்கலாம்.
 படித்து பாருங்களேன்


25/3/17

இந்த வார குங்குமம் இதழில் காற்றினிலே வரும் கீதம் அறிமுகம். ஆசிரியருக்கும் காஃபிடேபிள் டீமுக்கும் அன்பான நன்றிகள் 


24/12/16

விமர்சனம்

ஸரிகம சிறப்பிதழாக வந்திருக்கும் இந்த வார கல்கியில் என்னுடைய “காற்றினிலே வரும் கீதம் புத்தகத்தை மூத்த எழுத்தாளர் திருமதி வேதா கோபாலன் விமர்சித்திருக்கிறார்அவருக்கும், கல்கி ஆசிரியர்  திரு வெங்கடேஷ்க்கும் நன்றி







M.S என்று இரண்டே எழுத்தில் அறியப்பட்ட இவரை மாஸ்டர் ஆஃப் சங்கீதம் எனலாமோ? கடலை சிமிழ்க்குள் அடைக்க முயன்று வெற்றிபெற்றிருக்கிறார் ரமணன். எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை என்னமாய் எழுதியிருக்கிறார். நமக்குத் தெரியாத எவ்வளவு விவரங்கள்? அட என்று வியக்கவும் அடடா என்று பிரமிக்கவும் ஐயோ என்று வருந்தவும் அம்மாடீ என்று நிம்மதியடையவும் வைக்கும் நிகழ்ச்சிகள் ஒன்றா இரண்டா? 
* நிழலாகவும் இரும்புக்கோட்டையாகவும் இருந்தார் திரு சதாசிவம். (நிழலே பறவையைச் செலுத்தியது என்கிறார் ரமணன்). முதல் முதலில் எம்.எஸ். அம்மாவைப் பேட்டி எடுக்க வந்த ஒரு பத்திரிகையாளராகத்தான் அறிமுகம். அழகாகக் காதலிக்க ஆரம்பித்தனர். தம்மைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்ன எம். எஸ்.ஸை திடுதிப்பென்று தம் வீட்டுக்குக் கூட்டிப் போய்விட்டார் ஏற்கெனவே திருமண மான திரு சதாசிவம். அவரின் மனைவிக்கும் தாய்க்கும் இவரைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஆனால் சிறிது சிறிதாகக் குழந்தைகள் இவரிடம் ஒட்டிக்கொண்டனர். பிரசவத்துக்குப் போன மனைவி இறந்துவிட மூத்த தாரத்துக் குழந்தைகளைத் தம் குழந்தை யாகவே வளர்த்தார் சுப்புலட்சுமி அம்ம
.
*1940 ஆம் வருடம் ஜூலை 10 அன்று திருநீர்மலையில் 250 ரூபாய் பட்ஜெட்டில் இவர்கள் திருமணம் நடந்தேறியது இரு வருக்கும் 14 வயது வித்தியாசம். 
* வாழ்நாள் முழுவதும் வீட்டில் கட்ட ஒரு சமயத்தில் ஏழு புடைவைகள்தான். அதற்கு மேல் இருந்தால் யாருக்காவது கொடுத்துவிடுவார். மேக் அப் கிட் என்பது வெங்கடாசலபதி படம் போட்ட தகர LL’ÜLIT தான் ஸ்டிக்கர் பொட்டு இல்லை. குங்குமம்தான்.

*சுத்தமான உச்சரிப்பு வேண்டும் என்பதற்காகவே சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளை 50 வயதுக்குப் பிறகு கற்றுக்கொண்டார்.

* நன்கொடை கொடுப்பதற்காகவே சம்பாதிப்பது அவரின் லட்சியமாக இருந்தது. நெருங்கிய உறவினர்களின் திருமணங்கள் இவரிடம் தேதி கேட்டே நிச்சயிக்கப்படும், உறவினர் திருமணங் களில் அம்மா ஆரத்தி பாடுவார். அதற்குக் கூடப்பயிற்சி செய் வாராம் . ராகங்களில் பல சோதனைகள் செய்து வெற்றி கண்டார்.

* ஒரு முறைகூடக் கச்சேரிகளில் பிசிறு. தவறு நேர்ந்ததில்லை. ஒரு முறை அப்படி அபூர்வமாக நேர்ந்தபோது 'அப்படித் தப்பு வரும்படி நாம பாடினா எதுக்கு உசிரை வெச்சுக்கறது’ என்று வீடு திரும்பும்போது சொன்னாராம் சதாசிவம். எம்.எஸ். பதிலே பேசவில்லை! 

இந்நூல் வாசிப்பவரை வேதனைப்படுத்தும் செய்திகளுள் ஒன்று. எம்.எஸ். உடல் நலம் குன்றிப் படுத்திருந்தபோது ரேடியோவில் கர்நாடக சங்கீதம் கேட்டு 'அதை நிறுத்து' என்று உதவியாளர் ஆத்மாவிடம் சொன்னாராம்.-
காரணம் மனநோய். (2500 பாடல்கள் மனப் பாடம் செய்தவருக்கு இந்நிலை வரவேண்டுமா?) 
இப்படி ஆச்சர்யமளிக்கும்படி எவ்வளவு விவரங்கள் எத்தனை நிகழ்ச்சிகள்! நூலாசிரியர் ரமணன் மிகவும் மெனக்கெட்டிருக் கிறார். பத்து நூல்கள், இணையதளம், கேள்விப்பட்ட செய்திகள், அவர் குடும் பத்தினர் மற்றும் நெருங்கிப் பழகியவர்களின் பேட்டிகள் என்று என்ன ஒரு சேகரம். ஹாட்ஸ் ஆஃப்.

அத்தியாயத் தலைப்புகளில் ரமணனின் திறமை பளிச், முதல் அத்தியாயத்தின் தலைப்பே அசத்தல். மல்லிகை தேசத்தில் மலர்ந்த தாமரை எம்.எஸ்.ஸின் மறைவை விவரித்த அத்தியாயத்துக்கு 'வாடிய தாமரை எனத் தலைப்பிட்டு மனம் நெகிழும் படி நிறைவு செய்திருக்கிறார். இந்த நூலில் ஓர் அழகிய புதுமை செய்திருக்கிறார் ஆசிரியர் முழுக்க முழுக்கத் தானே ஆக்கிரமிக்க வேண் டும் என்ற பேராசை இல்லாமல் எம்.எஸ்.ஸுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் அது பற்றிக் கட்டுரை வாங்கி இணைத்திருக்கிறார். போட்டோக்களின்கீழ் பெயர்கள் போட்டிருக்க லாம். தேதி முரண்பாடு உள்ளது. மற்றபடி குறையொன்றுமில்லை! 
கண்ணைப் பறிக்கும் அச்சு நேர்த்தி. பொருத்தமான பொலிவான வண்ணப் படங்கள், அனைத்துப் பக்கங்களும் ஆர்ட் பேப்பர். ரமணன் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல். கவிதா பதிப்பகத்தார் தொப்பியிலும்தான்.
காற்றினிலே வரும் கீதம் - இசையரசியின் வாழ்க்கைப் பயணம் -ரமணன், பக்.264, வெளியீடு:கவிதா பப்ளிகேஷன், சென்னை-17, 
தொலைபேசி: 044-24364243, விலை 800/- ()

முக நூல் நண்பர்களிடமிருந்து

பன்னீர் செல்வம் வாழ்த்துக்கள்
Vadakovy Varatha Rajan M S patti putheya thakavalkal. Kalki sadasivam Erandaam thaaramaka ms i kalyanam, 7saari ellaamay puthiya thakaval .VAALTHUKAL
Ganesh Balasubramaniyam விமர்சனத்தின் ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து ரசித்துப் படித்தேன்.
Vedha Gopalan அமோகம்
Senthilkumar Krishnamurthy ஆமாம்... உண்மைதான் அம்மா
Ramanan Vsv
Write a reply...
MP Udayasooriyan உங்களின் விமர்சனமே இவ்வளவு சுகம் என்றால், மொத்த நூலும் எப்படி இருக்கும்? // நிழலே பறவையைச் செலுத்தியது என்கிறார் ரமணன் // என்ன அடர்த்தியான, கவித்துவமான வரி. வாழ்த்துகள் ரமணன் சார், வாசிக்கிறேன்...
Sumitha Ramesh வாவ்..பிரமாதம்..சார் !! வாழ்த்துகள்..இதைப்படித்த அன்றே வேதாம்மா.. பிரமித்துப்போய்..பல பக்கங்களை..சுமி..நீ அவசியம் படிக்கவேண்டும் என பகிர்ந்துக்கொண்டார்கள்..சில மணி நேரம் பேசினோம் ஸ்கைப்ல்..புக் பற்றி..அத்தனை ரசித்திருந்தார். எனக்கும் கடன் வாங்கியாவது படிக்கவேண்டும் என்ற ஆவல்..! நானும் தஙக்ளது கங்கைக்கரை ரகசியங்களில் மூழ்கிப்போயிருக்கிறேன்..விரைவில்..தெளிந்து எழுதவேண்டும்..! 

அருமையான கட்டுரை ! மகிழ்ச்சி சார் பகிர்ந்தமைக்கு 

Senthilkumar Krishnamurthy வாங்கி படிக்கிறேன் Ramanan Vsv ஐயா
Krishnamurthi Balaji மனமார்ந்த வாழ்த்துக்கள்! என்று படிக்கப் போகிறேனோ!
Suresh Kumar S வாழ்த்துக்கள், சார்.
Uma Maheswari அம்மாவின் விமர்சனத்துக்கு கேட்பானேன். பாரட்டுக்கள் சார். அம்மா அட்டகாசமான மதிப்புரை.
Ramanan L R Venkata Congraulations
Ravichandran Gopalan · 2 mutual friends
அவசியம் படித்து விட வேண்டும் என்ற ஆவல்.