புதியதலைமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதியதலைமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30/6/18

பாரதி : கவிஞனும் காப்புரிமையும் - புத்தக அறிமுகம்

-
 ந்த  இதழ் புதிய தலைமுறை இதழிலின் புத்தக அறிமுகத்தில் எழுதியது


உலக இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில்தான் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கான பதிப்புரிமை அரசுடைமை செய்யப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட எவருடைய எழுத்துகளுக்கும் கிடைத்திடாத இந்தத் தனிப்பெருமை மகாகவி பாரதியின் எழுத்துக்குத்தான் கிடைத்தது.

ஆனால் அந்தப்பெருமை அவ்வளவு  எளிதில் கிட்டிவிடவில்லை. இதற்காக நடந்த முயற்சிகள் அதன் மூலம் நிகழ்ந்த மாற்றங்கள், ஏமாற்றங்கள், வழக்குகள் அரசு எடுத்த நிலைப்பாடு அனைத்தையும் வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு தான் சார்ந்த வரலாற்றுத்துறைப் பார்வையுடன் இந்நூலை  முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி மிக அருமையாக எழுதியுள்ளார்
.
மகா கவியின் படைப்புகள் நாட்டுடமையானது குறித்து வழங்கி வரும் பலவித கதைகளைக் கேட்ட நமக்கு இவர் துல்லியமான தரவுகளுடன் உண்மை வரலாற்றை விவரிக்கிறார்.
மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது படைப்புகள் வெகுகுறைவு. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பு ஒன்றுதான் வெளியாகியிருக்கிறது.
 பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பைவிட அவரது காலத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில்தான் பல மடங்காக உயர்ந்தது அதனால் அச்சிட்ட புத்தகங்கள் அதிகம் வரத்துவங்கியது. அப்படி பதிபிக்கபட்ட பாரதியின் படைப்புகள் பொதூடமையாக்கப் படுவதற்கான் தேவை எப்படி எழுந்தது என்பதை நிகழ்வுகளின் காலபோக்கோடு விவரிக்கிறார் நூலாசிரியர். சில இடங்களில் தரவுகளாகச் சுட்டிகாட்டபடும் ஆவணங்களும், கடிதங்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன
.
மஹாகவியின் மனைவி அவரது மகளின் திருமணத்துக்காக அவரது படைப்புகளின் உரிமையை அடகு வைத்திருக்கிறார். அதுவும் யாரிடம் தெரியுமா?. கவிஞரின் தம்பி விஸ்வநாதய்யரிடம். . இதைவிட அதிர்ச்சியான செய்தி அந்தக் கடன் திருப்பிச் செலுத்தபடாததால் உரிமை அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.
 அவர் பாரதி பிசுரலாயம் என்ற பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில் 1928ல் அன்றை அரசு பாரதி நூல்களுக்குத் தடை விதிக்கிறது. விற்பனையைப் பாதிக்கிறது. காங்கிரஸ்காரர்களின் போரட்டங்களுக்குபின் தடைவிலக்கப்படுகிறது. புத்தகங்கள் பரபரப்புடன் விற்க துவங்கின. இந்தக் கட்டத்தில் ஒரு குழுவினர் பாரதியின் படைப்புக:ள் ஏன் ஒரு தனிநபரிடம் இருக்க வேண்டும் அதை அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை முன்னெடுக்கின்றனர். அந்தக் கருத்தாக்கம் மெல்ல பாரதிக்கு விடுதலை என்ற அமைப்பாக உருவாகிறது. எழுத்தாளர்கள் மாநாடு, பாரதி மணிமண்டப விழா போன்ற மேடைகளில். விவாதிக்கபடுகிறது மக்களிடம் அந்தக் குழுவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.

இதே காலகட்டத்தில் எழுந்த ஒரு வழக்கு பாரதியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை அதிகப்படுத்தியது. பாரதியின் பாடல்களை இசைதட்டாக்கும் உரிமையை 1934 ஆம் ஆண்டு விஸ்வநாத அய்யர் ஒரு நிறுவனத்துக்கு விற்றிருந்தார். அவரிடம் சினிமா தயாரிப்பாளார் ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கியிருந்தார்
.
டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று பரவலாக அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப் படமாக்க முனைந்தபோது, பாரதியின் கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப் போல் - வெளியே, சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!’ எனும் பாடலைத் திரைப்படத்தில் இணைத்திருந்தார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார். தன்னிடம் இருக்கும் பாடல் உரிமையைப் பயன் படுத்தினால் இழப்பீடாக ஐம்பதாயிரம் தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பல ஆண்டுகளாகப் பாரதியின் பாடல்களைத் தன் நாடகத்தில் பயன்படுத்திக்கொண்டிருந்த டிகே சண்முகம் வழக்கை எதிர்கொள்ளத் தயாரானார். இந்தப் புத்தகத்தில் விவரிக்கபட்டிருக்கும் அந்த வழக்கில் ஏற்பட்ட ஒரு திருப்பம் பலர் அறியாதது.
ஒரு புறம் மக்களின் கிளர்சி மறுபுறம் ஒரு வழக்கு என்பதால் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது எடுத்த முடிவுதான் பாரதியின் படைப்புகளை நாட்டுடமையாக்குவது. எந்த முன் மாதிரியும் இல்லாத, உலகில் எந்த அரசும் செய்யாத விஷயம் ஒரு படைப்பாளியின் உரிமையை அரசு வாங்குவது என்பது நிகழ்ந்தது. பாரதியின் எழுத்துகள் அரசுடைமை ஆக்கப் பட்டதாக கல்வி அமைச்சர்  அவினாசிலிங்கம் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்தார்.

இதுவரை நிகழ்ந்தையும், மகாகவி பாரதியின் படைப்புகளைப் பொது வுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய நீண்ட கதையை அரசின் அறிவிப்புக்குப் பின்னரும் அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் 8 ஆண்டுகளுக்குப் பின்னரே !  பாரதியின் எழுத்துகள் அவன் விரும்பியபடி  தீப்பெட்டி, மண்ணெண்யை விட மலிவாகக் கிடைத்தது என்பதைச் சொல்லும் அரிய ஆவணம் இந்தப் புத்தகம்.



12/6/18

சோழனைக் காப்பாற்றிய வேல்

10 நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழனின் திறன்மிகு கட்டிட கலைக்குச் சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில் அந்நியர் படையெடுப்பு, இயற்கை பேரிடர்கள், அண்மைகால அரசியல் வாதிகளின் “அரசியல்”, போன்ற பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் சாட்சியாகக் கம்பீரமாக நிற்கும் இந்தத் தஞ்சை பெரிய கோவில் அண்மையில் சந்திருக்கும் ஆச்சரியம் அங்கிருந்து மாயமாக மறைந்த மன்னர் ராஜராஜன், மற்றும் அரயின் ஐம்பொன் சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் நிறுவபட இருப்பது தான்.


பல தமிழக கோவில்களில் அது உருவாகக் காரணமான மன்னர் பரம்பரையினர், எழுப்பிய சிற்பிகள் போன்ற விபரங்களைப் பார்க்க முடியாது. மாறாகத் தஞ்சைப் பெரிய கோவிலில் அதைத் திட்டமிட்ட பொறியாளார். தலமைச் சிற்பி, பலதுறைகளில் உதவியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகக்  கோவிலிலேயே இருக்கிறது.

உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் எனப்படும் பெருவுடையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், அந்தக் கோயில் அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்த வேளாண் என்பவரால், ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவியார் ஆகியோருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டு இருந்தன.ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார்அதிகாரி. இந்தக் தகவல்களை அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயி லின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு சொல்லுகிறது.

எப்போது இந்தச் சிலைகள் காணமல் போனது தெரிந்தது.?

ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து கடத்தப்பட்டு புதிய சிலை ஒன்றை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள். கடத்தப்பட்டது ராஜ ராஜன் சிலை கூட என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள்.

.எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜராஜன் சிலைக்குக் காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காகப் பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையைக் கிளப்பினார் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன். அப்ப்போது தெரிந்த விஷயம் தான் ஒரிஜனல் ராஜராஜனும் ராணியும் காணாமல் போய்விட்டார்கள் என்ற விஷயம். இப்போது கிடைத்திருக்கும் ஆவணங்களின் படி இந்த ஐம்பொன் சிலைகள் தான் 50 ஆண்டுகளிக்கு முன்னரே காணமல் போயிருக்கிறது



அரசனும் அரசியும் எங்கே போனார்கள்?

அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்ட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகளில் இந்த ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் இருக்கிறது என்ற செய்தி கசிந்தது. அது உண்மையானதுதானா என்ற விவாதமும் எழுந்தது. அந்த நிலையில் டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், அவர் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள்குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தினார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள்பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் - லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் முனைவர் தொல்ப்ருள் அறிஞர் நாகஸ்வாமி

மீட்கும் முயற்சிகள்



இருக்குமிடம் தெரிந்து விட்டதால் ராஜராஜனை மீட்டுவர அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் பிரதமர் இந்திரா மூலம் முயற்சி எடுத்தார். ஆனாலும்  சொல்லதக்க முன்னேற்றம் எதுவுமில்லை

.

தொடர்ந்து இந்தச் சிலைகளை மீட்க திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் நாகசாமி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் முதல்வர் இருந்த நரேந்திர மோடியும் ராஜராஜன் சிலையைத் தமிழகத் துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டினர். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அருங்காட்சியம் அசைய வில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி தர மறுத்துவிட்டது.

ஆச்ரியப்படுத்திய ஒர் ஆவணம்

.

அவர்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது ஒரு முக்கியமான காரணம் இது ராஜராஜனின் சிலை என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது தான். அதற்கு அவர்களிடமிருக்கும் வலுவான சாட்சியம். அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் சிலைகளுக்கென்று அவற்றின் வரலாற்றைச் சொல்லும் கேட்லாக். அதில் அது ராஜாராஜின் சிலை இல்லை என்று பதிவு செய்யபட்டிருந்தது.தான். ஒரு தனியார் கேட்லாக்கில் சொல்லபட்டிருப்பதால் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இங்குதான் எழுந்தது ஒர் அதிர்சியான ஆச்சரியம். ஒரு சர்வ தேச் கூட்டத்தில் வாசித்தளித்த ஒரு பேப்பரில் அந்தச் சிலை ராஜராஜன் தான் என்று சொன்ன திரு நாகஸ்வாமி தான் அந்தக் கேட்லாக்கை தயாரித்தவர். ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? என்பது இன்றுவரை புரியா மர்மங்களில் ஒன்று. தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்றுநிருபிக்கபட்டால் மட்டுமே சிலையைத் தர முடியும் என்று சொல்லிவிட்டனர். ஏமாற்றத்துடன் திரும்பியது குழு

.

கால வெள்ளத்தில் மக்களும் அரசும் மறந்துபோன் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகக் கரைந்து போயிற்று. மன்னர் ராஜராஜன் தன் மனைவியுடன் அந்த ஆருங்காட்சியகதிடின் கண்ணாடிச் சிறைக்குள்ளேயே காலத்தைக் கழித்துகொண்டிருந்தார்.

கைகொடுக்காத தீர்ப்பு

இந்த நிலையில் தான்,தமிழக இந்து சமய அற நிலையத்துறை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில்ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அன்றைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன். மனுவை விசாரித்தனர். இறுதியில் நீதிபதிகள், ‘‘விலை மதிக்க முடியாத பழங்கால சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டு கொண்டு வருவது தமிழக அரசின் கடமை நீதிமன்றம் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு உத்திரவிட முடியாது.மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி இந்தக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். என்று  மனுவைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

.தமிழக அரசு நீதிமன்ற ஆணைப்படி காணமல்போனாதாக்ச்சொல்லப்படும் சிலைகளைக் கண்டுபிடிக்க தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு உத்திரவிட்ட்து., அவர் அப்பிரிவின் டிஎஸ்பி வெங்கட்ராமனை முதல் கட்ட விசாரணை நடத்த நியமித்தார். அதன்படி, டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், அண்மையில் பெரிய கோயிலில் நடத்திய ரகசிய விசாரணையில், இரண்டு சிலைகளும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனால், பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டதாகக் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 68 சிலைகள் பெரும்பாலானவை இங்கு இல்லாமல் போனதும், பல முறைகேடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இந்தச்சிலைகளை கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாகச் சென்னைக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கௌதம் சாராபாய் என்பவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்கப்பட்டது தெரியவந்தது.

அதிரடி  மீட்பு

உடனே செயலில் இறங்கினார் பொன்மாணிக்கவேல். கிராமங்களுக்குத் தானே நேரில் சென்று இந்தச்சிலைகளை நேரில் பார்த்தவர்களை தேடினார். இரண்டு 80 பிளஸ் பெரியவர்கள் கோவிலில் சிலைகளைப் பார்த்தவர். அவர்களில் ஒருவர் கோவில் பணியா

ற்றியவர். கல்வெட்டுகளில பழந்தமிழர் கணக்குமுறையில் சொல்லப்ட்ட உயர, பீடங்களின் அளவுகளை இன்றைய சென்டிமீட்டரில் கணக்கிட்டபோது அது சிலைகளின் அளவோடு பொருந்திப் போயிருந்தது.

கோவிலில் இருந்தது, திருடபட்டது, விற்கபட்டது, கல்வெட்டு சொல்லும் விபரங்களுடனும் தன் டீமுடனும் அஹமதாபாத் பறந்த ஐஜி அருங்காட்சிய அதிகாரிகளிடம் இந்த விபரங்களுக்குபின்னர்சிலை திருப்பித் தரப்படவிட்டால் தமிழக அரசுக்குச் சொந்தமான அவற்றை பறிமுதல் செய்வேன் என்றார். அதிர்ந்துபோன அருங்காட்சியகத்தினர் சிலைகளை கொடுக்கச் சம்மதித்தினர். உடனே அவைகளை

தம்முடன் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு வந்தார். இவர் ரயில் பாதுகாப்பு ஐஜியாகவும் இருந்த்தால் வழக்கமான தாமதங்கள் அனைத்தும் தவிர்க்கப் பட்டன. தமிழகத்துக்கு கொண்டுவந்துவிட்டார். சென்னையில் மேள்தாளத்துடன் வரவேற்கபட்டசோழ மன்னரைச் சிதம்பரம் கோவிலில் பூஜித்தபின்னர் கும்பகோணம் கொண்டு வந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இந்த 2 சிலைகளையும் தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டிருக்கிறது, நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பெருவுடையார் இனி தஞ்சை மாவட்டத்திலே பஞ்சம் நீக்கி அருள்பாலிப்பார் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொல்வது “இனி காவிரியில் தண்ணீர் வந்துவிடும்”

இந்தச் சிலைகள் மீட்பை உலகின் பல பகுதிகளிலிருக்கு தமிழ் ஆர்வல்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

துணிவுடன் அதிரடி முடிவுகளை எடுத்து அதை செம்மையாகச் செயலபடுத்தும் பொன்மாணிக்கம் போன்ற அதிகாரிகளைத் தமிழகம் பெற்றிருப்பதற்காகப் பெருமயை அடைந்தாலும், தாங்கள் பதுகாக்கவேண்டிய அரிய  செல்வங்களை காசுக்காக  விற்ற அதிகாரிகளை நினைத்து வருத்தமும் வேதனையும் எழுவதைத் தவிர்க்க இயலவில்ல.



_______





தெய்வங்களைக் காக்க நீதி மன்றம் நியமித்த காவலர்

தூங்கிக்கொண்டிருக்கும் சில அரசுத்துறைகள் தலமை அதிகாரிகளின் மாற்றத்தால் சட்டென்று விழித்துக்கொண்டு பபரபுடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும். அப்படியான ஒன்றுதான் தமிழகப்போலீசின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் நடந்துகொண்டிருக்கிறது. வேறுபல மாநிலங்களில் இல்லாத இந்தப் பிரிவின் தலமைப் பதவி ஆளுவோரால் ஓரங்கட்டபட்ட அதிகாரிகளுக்காக ஒதுக்கபட்டது. திரு பொன்மாணிக்க வேல் தன் திறமையான, கண்டிப்பான அதிகாரியாகப் பெயர் எடுத்தவர், படிப்படியாக உயர்ந்து ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற இவருக்குத் தரப்பட்ட போஸ்டிங் சிலகடத்தல் தடுப்பு பிரிவின் தலமை
.
செய்யும் தொழிலைத் தெய்வமாக நேசித்துச் செய்யும் பொன் மாணிக்க வேல் பதவி ஏற்றுக்கொண்டவுடனேயே தூசி படிந்து தூங்கிக்கொண்டிருந்த பைல்களை தேடி ஆராய ஆரம்பித்தார். . இவர் தலைமையிலான டீம், தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது. சிலைக்கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இதுவரை இந்தத்துறை இவ்வளவு வேகமாக இயங்கியதில்லை
.
சென்னையில் தீனதயாளன் என்ற முதியவர் சர்வ தேச கடத்தல் மன்னன் கபூருக்கு உதவியர் என்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழக போலீஸ் பொன்.மாணிக்கவேலை ரயில்வே ஐ.ஜி-யாக மாற்றியது தமிழக அரசு. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘சிலைக்கடத்தல் தொடர்பான 19 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார். பிற வழக்குகளைச் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கும்’ என்று டிஜிபி உத்திரவிட்டிருப்பதாகச் சொன்னவுடன் நீதிபதி மிக் கோபமாக
நீதி மன்றம் 531 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எதன் அடிப்படையில் 19 வழக்குகளை மட்டும் அவர் விசாரிப்பதற்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்தார்? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கபட்டார்
.
இது இவர்மீது நீதி மன்றம் வைத்துள்ள நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காட்டுகிறது. அண்மையில் இவர் வெளிக்கொண்டுவந்த பழனி ஆண்டவர் கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் கைது செய்யபட்ட அரசியல் பின்புலம் கொண்ட ஒரு முன்னாள் அறநிலைத்துறை துணை ஆணயர் ஜாமின் மனு வழக்கில் தானே நேரில் ஆஜாராகி ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது? என்று நீதிபதியிடம் விளக்கினார்.
(புதிய தலைமுறையில் எழுதியது)

12/7/17

கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவோம்







சர்வ தேச சிலைகடத்தல் மன்னன் கபூர் கைது. பல கோடிகள் மதிப்புள்ள  பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தங்கள் நாட்டுக்குக் கடத்தப்பட்டு வந்த 1000 ஆண்டு பழமையான நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் நமது பிரதமரிடம் கொடுத்தார் போன்ற  தலைப்புச்செய்திகளை அவ்வப்போது பார்க்கிறோம். 
அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட சிலைகடத்தல் மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய டார்க்கெட். தமிழக காவல் துறையில் இதற்காக உயர் அதிகாரியின் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. 
ஆனால்  தன்னாலார்வர்கள் குழு ஒன்று மிகத்தீவிரமாக இந்த விஷயத்தில் பணியாற்றி அரசுக்கு உதவுகிறார்கள் என்பது பலர் அறியாத  விஷயம்.


திரு விஜய்குமார் சென்னையைசேர்ந்தவர்.  தற்போது சிங்கப்பூரில் காஸ்ட் அக்கடெண்ட் ஆகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர். இவரது  இணைய தளம் இந்தியா பிரைட் பிராஜெக்ட்.(INDIA PRIDE PROJECT) 2013லிருந்து  இயங்கும் அந்தத் தளத்தில்  இந்தியாவில் காணாமல் போன கடவுள் உருவங்களின் படங்களை வெளியிட்டு விபரங்களைப் பதிவு செய்து வருகிறார். “நம் கடவுள்களை திருப்பிவீட்டிற்கு கொண்டுவருவோம்”  என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.  இதன்படி   ஏதாவது பெரிய மியூசியங்களில் அல்லது ஆர்ட் டீலர் என்று அழைக்கப்படும் விற்பனையாளர்களின் கேட்லாக்களில் தெய்வச்சிலைகள்  இருந்தால் இவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதை இவர்களின் குழு ஆராய்ந்து சம்பந்தபட்டவர்களைத்தொடர்பு கொண்டு மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதைத்தவிர நேரடியாகவும் இவர்கள் களத்தில் மிகச் சிறப்பான பணியைச் செய்கிறார்கள். பல மியூசியங்களிலிருக்கும் சிலைகளை ஆராய்ந்து அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்:. இதற்காக இவர்கள் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ரகசிய அதிரடி வேலைகளையும் செய்கிறார்கள். சம்மந்தப்பட்ட இடங்களில் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வது அவசியமான ஆவணங்களின் நகல்களைப்பெறுவது போன்ற பணிகள்.  இவருடைய குழுவில் சரித்தஆராய்ச்சியாளார். சிலையின் வயதைக்கணக்கிடுபவர். சந்தை விலை எவ்வளவு என மதிப்பிடுபவர்,   போன்ற எக்ஸ்பர்ட்களும்.  இருக்கின்றனர்.  அனைவரும் தன்னார்வலர்கள். 
 தமிழக போலிஸ் இதுவரை மீட்ட சிவபுரம் நடராஜர்  (11 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட 10ம் நூற்றாண்டு சிலை), தஞ்சை பிகதீஸ்வரர் கோவிலிருந்து காணாமல் போன  ஐம்பொன் கணேசா, போன்றவற்றை  மீட்க இவர்கள் தந்த முக்கிய ரகசிய தகவல்கள், ஆவணங்கள் தான் உதவியிருக்கின்றன. இதுவரை 60 சிலைகளை மீட்க உதவியிருக்கிறார்கள். பிரமிக்கத்தக்க இந்தப் பணியைச் செய்யும் இவர்கள் மீடியா வெளிச்சத்தைத் தவிர்க்கிறார்கள். விளம்பரத்தை விரும்பவதில்லை. அவர்களின் இணைய தளத்தில் கூட இந்த அணியினரின் படங்கள் இல்லை. அமெரிக்கர்- தென்கிழக்கு ஆசியாவில் நமக்காக பணிசெய்பவர்.  இந்தியர்- தொன்கலை நிபுணர் அமெரிக்காவில் நம் பணி செய்பவர் என்ற ரீதியில்தான் தளத்தில்  நிழல் முகங்களுடன் விபரங்கள் இருக்கின்றன.பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவர்கள் தமிழகக் கோவில் சிலைகளை மட்டுமில்லாமல் மத்தியபிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பழுப்பு  சலுவைக்கல்லில் உருவான யஷ்ணியின் சிலையை மீட்கவும் உதவியிருக்கிறார்கள்.

 இவர்களது வெற்றிப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பது  1000 ஆண்டு பழமையான நரசிம்ஹி என்ற காளியின் உருவம். இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மியூசியத்தில் இருந்தது. அதற்கு அவர்கள்  இட்டிருந்த பெயர் பெண் புலி.   இது பல ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் கோவிலிலிருந்து திருடப்பட்டிருக்கிறது.
 

எப்படி இவர்கள் இதைச்செய்கிறார்கள்.? ஒரு மியூசியத்தில் அல்லது விற்பனையாளர்களின் கேட்லாக்கில் இருக்கும் ஒரு சிலையை தங்களிடமுள்ள படங்களுடன் ஆராய்கிறார்கள். உருவம் ஒத்திருந்தால் மேலும் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். அந்தக் கோவிலில் இந்தச் சிலை திருடப்பட்டிருப்பது புகார் செய்யப்பட்டிருக்கிறதா?  போன்ற விபரங்களுடன் வல்லுநர் அறிக்கைகளுடன் சரித்திர சான்றுகளுடன் மியூசியம் அதிகாரிகளை அணுகி முதலில் அது திருடப்பட்டது என்பதை நிலை நிறுத்துகிறார்கள்.  பின்னர்  இந்திய அரசு, தமிழக அரசின் போலீசுக்கு விபரங்கள் தந்து விசாரணையைத்துவக்க வைக்கிறார்கள். வழக்கும் பதிவு செய்ய உதவுகிறார்கள். இதில் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

  2013ல் முதலில் எங்கள் குழு கண்டுபிடித்தது  ஆஸ்திரேலியா மியூசியத்திலிருக்கும் விருத்தாசலம் கோவிலின் அர்த்தநாரிஸ்வரர் சிலை. காணாமல் போய் 12 ஆண்டுகளாக அதற்காக எந்தப் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சிலை திருடப்பட்டிருக்கிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் அதைக் காணோம் என்று போலிஸில் செய்யபட்டிருக்கும் புகார். அதுவே இதற்கு இல்லை. 
 இதனால் தான் நாங்கள் கோவிலின் அரிய சிலைகள் பட்டியலிடப்பட்டு டிஜிட்டல் ஆவணமாக்கி ஆன் லையன்ல் தேடும் வசதியோடு இருக்க வேண்டும் எனச் சொல்லுகிறோம்.  நாங்கள் அதை முயற்சித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார்  விஜய் குமார்
இவர்களும் தமிழக போலீஸும் சந்திக்கும் மற்றொரு சவால்  தமிழகத்திலிருக்கும் 4500 கோவில்களில் இருக்கும் பல சிலைகளின், சிற்பங்களின் புகைப்படங்களோ விபரங்களோ கிடையாது. காணாமல் போனால் அடையாளம் சொல்லக்கூட முடியாது. இவர்கள் முயற்சியில் 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும், ஒரு 1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையியும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அவை தமிழ் நாட்டிலிருந்துகடத்தப்பட்ட தொன்ம சிலை  என்று நம்புகிறார்கள். ஆனால் அவை எந்தக் கோவிலுடையது என்பது தெரியாதால் அதை மீட்கும் முயற்சியைத்  துவக்க  முடியவில்லை.
 எப்படி? ஏன்? இந்த ஆர்வம் இவருக்கு.  “கல்லில் கவிதை” என்ற இவரது  வலைப்பூவில் தமிழக கோவில்களின் அழகான சிற்பங்களைப் பற்றி  தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வந்த இவர். அதற்கான தகவல்களை சேகரிக்கும்போது சிலைகளின் திருட்டு மற்றும் கடத்தல் பற்றி அறிந்திருக்கிறார். “ஆர்வம் அதிகரித்ததினாலும் , என் மாதிரி எண்ணங்கொண்ட நண்பர்களின் இணைந்ததாலும்  தான்   இந்த இணைய தளம்” என்கிறார்.  இந்தத் தளம் இயங்குவதற்கு முன்னால் சிலைதிருட்டு/கடத்தல் என்பது மிகப்பெரிய அளவில் அரசால் கண்காணிக்கப்படவில்லை. அவ்வப்போது சில சிலைகள் மீட்கப் பட்டாலும் அது தொடர்பாக வழக்குகள் போடப்பட்டதில்லை சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்க பட்டதுமில்லை.  இதனால் தான் நியூயார்க் மெட்ரோபோலிஸ் மியூசியத்துக்கு  கடத்தல் மன்னன் கபூர் தன் மகளின் பிறந்த நாள் பரிசாக ஒரு சந்தரதுர்கா சிலையை அன்பளிப்பாக வழங்க முடிந்திருக்கிறது என்கிறார். சுபாஷ் கபூர் இப்போது புழல் சிறையில் இருக்கிறார். அவர்மீது  3 சிலைகளைக் கடத்திய வழக்கு இருக்கிறது.  ஆனால் அவரது நியூயார்க் கோடவுனில் இருப்பது 26000 சிலைகள் 
ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் நமது 10,000 சிலைகள் திருடப்படுகின்றன. இதுவரை நாம் 70000 சிலைகளை இழுந்திருப்போம். அதில்  முனைந்தால் நிச்சியமாக 10000 சிலைகளை மீட்க முடியும். ஏனென்றால் அதில் 4000க்கும்மேல் மியூசியங்களில் இருக்கிறது. இப்போது 60 சிலைகள் வரை  எங்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொண்டுவரமுடியும் . திருட்டு என ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டால் மியூசியங்கள் தந்துவிடுவார்கள்  அதனால் தான் எங்களுடன் ஒத்துழைக்க ஆர்வலர்களை அழைக்கிறோம்.
என்ன செய்ய வேண்டும்?  எப்படிச் செய்ய வேண்டும்.? 
மீயூசியங்களில் அல்லது எங்காவது நீங்கள் பார்க்கும் இடங்களில் சிலைபற்றிய சந்தேகம் வந்தால் அதன்படத்தை பேஸ்புக்கில் போடுங்கள். எங்கள் தளத்துக்கு அனுப்புங்கள். . உள்ளூர் அரிய சிலைகளின் படங்களையும் விபரங்களையும் போடுங்கள்.  மற்றவற்றை நாங்கள் செய்வோம் என்கிறார்.

எளிதாகத்தானே இருக்கிறது செய்வோமே?  

1/6/16

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.


மெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவ்வாய் கிரக ஆராய்ச்சி நிலையம். 80களின் இறுதியிலிருந்தே தனது ஆய்வுகளை செய்து கொண்டிருக்குக்கும் இந்த நிறுவனம்   பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிந்தபின்னர்  அங்கு முதலில் மனிதனை அனுப்பும் மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது .  இப்போது 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த நிலையத்தில் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவருகிறது. , முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   அதுவெற்றிகரமாக தரையிறங்கி செய்திகளை அனுப்பிகொண்டிருக்கிறது.  இதன் அடுத்த கட்டமாக அடுத்த 15 ஆண்டுகளுக்குள் மனிதனை அனுப்பும் திட்டங்களை தயாரித்துகொண்டிருக்கிறது.
அலீஸா கார்சன் என்ற  13 வயது பெண், ஏழாம் வகுப்பு மாணவி இப்போதே அந்த பயணத்துக்கான  பல தகுதிகளையும் பெற்று தன்னை தயாரித்துகொண்டிருக்கிறார்..  நாசா இந்த பெண்ணுக்கு நிறைய முன்னுரிமைகளை அளித்து ஊக்குவிக்கிறது. அனேகமாக செவ்வாயில் காலடி வைக்கபோகும் முதல் மனித இனம் இந்த பெண்ணாக இருக்கலாம் என அமெரிக்க பத்திரிகைகள் எழுதுகின்றன.  மத்திய அமெரிக்காவின்  லூயிசினா(Louisiana) மாநிலத்தில் வசிக்கிறார். அவரை போனில் தொடர்பு கொண்டபோது அவரது தந்தையுடனும் பேசும் வாய்ப்பும்கிடைத்தது. அலீஸா  புதியதலைமுறைக்காக  போனில் அளித்த  எக்ஸ்கூளிஸிவ் பேட்டி


ஒரு பள்ளிகுழந்தையின் சந்தோஷத்தோடு ஆனால் மிக தெளிவான ஆங்கிலத்தில்   ”என் உச்சரிப்பை புரிந்துகொள்வதில் கஷ்டம் ஏதுமில்லையே?”  என கேட்டு  பேசுகிறார். இந்தியாவைப்பற்றி அறிந்திருக்கிறார்.

செவ்வாய் கிரகத்தின் மீது உங்களுக்கு என் ஆர்வம் ஏற்பட்டது?
நான் 3 அல்லது 4 வயது குழந்தையாக இருந்தபோது, செவ்வாய் கிரகத்திற்கு போகும்மனிதர்கள் பற்றி ஒரு படம் பார்த்தேன். அப்பாவிடம் இதுவரை யாராவது இப்படி போயிருக்கிறார்களா? என்று கேட்டேன். அவர்  இதுவரை யாரும் போகவில்லை என்றும் அந்த கிரகத்தைபற்றியும் நிறைய சொல்லிகொடுத்தார். ஒரு மேப் கூட கொடுத்தார்.  தொடர்ந்து அதை பார்ர்துகொண்டே இருப்பேன்.  நிறைய படித்துதெரிந்து கொண்டேன். பள்ளியில் சேரும்போதே நான் விண்வெளி பயணியாகி செவ்வாய் கிரகத்திற்கு போக முடிவு செய்துவிட்டேன்.  தொடர்ந்து எல்லோரிடமும் செவ்வாய் கிரகத்தைப்பற்றி கேட்டுகொண்டே இருப்பேன் பள்ளியில் என் எல்லா பிராஜக்கெட்டும் செவ்வாய் கிரகம் பற்றிதான்.
உங்களுக்கு நாசாவில் பயிற்சி கொடுத்திருக்கிறார்களாமே?
நாஸாவில் ”பாஸ்போர்ட்” என்று ஒரு திட்டமிருக்கிறது. இது பள்ளி மாணவர்களுக்கானது. அமெரிக்காவில் நாஸா 14 இடங்களில் தகவல் மையங்களை அமைத்திருக்கிறது.  ஒவ்வொன்றும்  அவர்களின் ஒரு திட்டம் பற்றியது. அதில் படங்கள் சார்ட்கள் புத்தகங்கள் ஸ்லைடு காட்சிகள் எல்லாம் இருக்கும். அதை நன்கு பார்த்த பின் விரும்பினால் ஒரு பரீட்சை எழுதலாம். அப்படி எழுதி தேர்ந்தால்  பாஸ்போர்ட் மாதிரி  ஒரு புத்தகத்தில்  சீல் இட்டு கொடுப்பார்கள். நான் அந்த 14 நிலையங்களுக்கும் சென்று பரீட்சைகள் எழுதி என் பாஸ்போர்ட்டில் அந்த ஸீல்களை பெற்றேன்.  எல்லாபரிட்சைகளிலும் முதல் மார்க் வாங்கியிருகிறேன். இதை முதலில் செய்திருக்கும் ஒரே அமெரிக்க மாணவி நான் தான்
 இதனால் நாஸாவில் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே அனுமதியுள்ள இடத்திலிருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதை பார்க்க என்னை அனுமதிப்பார்கள்  ஏரோநாட்டிக்ஸ் முடித்தவர்களுக்கு நடத்தும் ஒரு பயிற்சி முகாமுக்கு என்னையும் அழைத்தார்கள். அதில் அவர்களோடு நானும்பயிற்சியை முடித்திருக்கிறேன் அந்த பரீட்சையையும் எழுதினேன்.,. அந்த பயிற்சியின்  ஒரு பகுதியாக சிறுவிமானம் ஓட்ட கற்று கொடுப்பார்கள். எனக்கு கார் டிரைவிங் லைசென்ஸே இல்லாதால், முதலில்  அதை வாங்கிகொண்டு மீண்டும் பயிற்சிக்கு வா என்று சொல்லியிருக்கிறார்கள்.  ஸ்டூடண்ட் கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்க நான் அடுத்த பெர்த்டே வரை காத்திருக்கவேண்டும்.
பள்ளி படிப்பையும் இவைகளையும் எப்படி செய்யமுடிகிறது?
 பள்ளியில் பாடங்கள் எனக்கு கஷ்டமாக இருப்பதில்லை. நல்ல கிரேடுகளை வாங்குகிறேன்.  நேரத்தை சமாளிப்பது தான் சவால்.சிலசமயம் மிக கஷ்டமாக இருக்கும். ஆனால் அப்பா நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என சொல்லிகொடுத்திருக்கிறார். எதை முதலில் எதை பின்னால் செய்யவேண்டும் என்று எனக்கு 5ஆம் வகுப்பில் படிக்கும்போதே சொல்லி கொடுத்துவிட்டார்.   பள்ளிகூடத்தில் என் ஆசிரியர்களுக்கும் பிரண்ட்ஸ்களுக்கு என்னைப்பற்றி ரொம்ப பெருமை அதுவும் ஒரு வசதியாக இருக்கிறது.
வானியல்,ராக்கெட்சயின்ஸ் தவிர வேறு எதில் ஆர்வம்.?
பள்ளியில் புட்பால் ஆடுவேன், இபோது கூட  உங்கள் போனுக்கு முன்னால் ஒரு மாட்ச் ஆடிவிட்டுதான் வந்தேன். பியோனோ வாசிக்க கற்றிருக்கிறேன்.  டான்ஸும் தெரியும். எங்கள் பள்ளி ரோபோடிக்ஸ் பிரிவு ஒரு ரோபோவை உருவாக்குகிறது.  அந்த டீமில் நான் இருக்கிறேன் நான் ஒரு கேர்ல் ஸ்கெளட். நிறைய பேட்ஜ் வாங்கியிருக்கிறேன் பெர்ஸி ஜாக்ஸன் புத்தகங்கள் படிப்பேன்.
நீங்கள் மற்ற பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்காக பேசுகிறீர்களாமே? அது எதைப்பற்றி?
பள்ளிகளுக்கு போய் பேசுவதில்லை. ஸ்கைப்பில் அவர்களிடம் பேசுவேன். இதுவரை  நடந்த நாஸாவின் விண்வெளிபயணங்களைப்பற்றி சொல்வேன். கேள்விகள் கேட்பார்கள் பதில் சொல்லுவேன். தெரியாததை அப்பாவிடம் கேட்டு பின்னாளில் சொல்லுவேன். முக்கியமாக உங்களுக்கு பிடித்த பாடத்தை கண்டுபிடித்து படிக்கவும் என்ன நீங்கள் என்ன ஆகவேண்டும் என்பதை நீங்களேதான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் இல்லை என்று சொல்லுவேன். இரண்டு பள்ளிகளில் நான் பேசியது பிடித்திருந்ததால்.  மற்ற பள்ளிகள் இப்போது அழைக்கிறார்கள். எனக்கு பரிட்சைகள் இருக்கும்நாட்களில் நான் இதைச்செய்வதில்லை.
 செவ்வாய் கிரகம் போகவேண்டும் என்ற உங்கள் லட்சியம் நிறைவேறினால் அதன் பின் என்ன செய்வீர்கள்? ஒருவேலை போக முடியாமல் போனால் என்ன செய்யபோகிறீர்கள்?
அந்த லட்சியத்தை அடைய நான் இன்னும் நிறைய செய்யவேண்டும். முதலில் 17 வயது ஆனபின் பைலட் லைசன்ஸ், ஸ்கை டைவிங் லைசன்ஸ் எல்லாம் நல்ல கிரேடில் வாங்கவேண்டும் இங்கிலாந்திலிருக்கும்  கேம்பிர்ட்ஜ்ஜின் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் பல்கலைகழகத்தில் போஸ்ட்கிராஜ்வேட் படிப்பேன் பின்னர் அமெரிக்காவின் MIT யில் (மாசாசூஸ்ட் இன்ஸ்டீயூட் ஆப் டெக்னாலாஜி) டாக்ட்ரேட் வாங்க வேண்டும். இடையில் நாசா நடத்தும்  முகாம்களிலும், பரிட்சைகளிலும்  பங்கு கொண்டு தேர்வாவேன்.
ஒருவேளை நீங்கள் கேட்பதுபோல செவ்வாய் போகும் வாய்ப்பு நழுவினால்…  நாஸாவின் செவ்வாய் திட்டத்தில் மிஷின் கண்ட்ரோலில் ஒரு எஞ்னியாராக இருப்பேன். செவ்வாய் கிரகம் என் வாழ்க்கையோடு இணைந்து போன விஷயமாக செய்துகொள்வேன்.
 உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்.

நான் குடும்பத்தின் ஒரே பெண்.  அன்பான தந்தையால் வளர்க்கபடுகிறேன். என் விருப்பங்களை கனவுகளை பெரிதும் மதித்து அதை அடைய உதவி செய்யும் அன்பான மனிதர் அவர்.  என் கனவுகளுக்கு உதவுவதை தன் லட்சியமாக கொண்டிருப்பவர்.சொந்தமாக டிவி சானல் வைத்திருக்கிறார் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. . நண்பர்கள் பற்றி கேட்கிறீர்கள்…ம்ம் பள்ளீயில் நிறைய, முகாம்களுக்கு போனதால் நாசாவில் சிலர், ஆனால் பெஸ்ட் பிரண்ட் என் வகுப்பு தோழி மேகி தான்.  இப்போது உங்களுடன் பேசுவதை ரிகார்ட் செய்துகொண்டிருகிறேன். இரவில் அவளுக்கு போட்டுகாட்டுவேன்.
இந்தியாவின் மங்கள்யாண் திட்டம் பற்றி தெரியுமா?
ஓ தெரியுமே!. அதுபற்றி பள்ளியில் ஒரு பேப்பர் தயாரித்து படித்திருக்கிறேன், உங்களுக்கு அனுப்புகிறேன்.
பேட்டி அளித்ததற்கு நன்றி அலீஸா. உங்கள் கனவுகள் வெற்றியாக  எங்களுடைய வாழ்த்துக்கள்
நன்றி சார். பேட்டி வெளியான உங்கள் பத்திரிகையை அனுப்புவீர்கள்தானே?
நிச்சியமாக.
நன்றி சார்.

(புதிய தலைமுறை இதழ் )

4/8/15

நீங்கள் நீங்களாக இருந்தால் வெற்றி நிச்சியம்

` சென்னை நந்தம்பாக்கம்  வணிக வளாகம். கறுப்பு கவுன், தொப்பிகளுடன் சந்தோஷப் பூக்களாக மலர்ந்திருக்கும் மாணவ மாணவிகளின் சிரிப்புஅலைகளினாலும்  மகிழ்ச்சி குரல்களினாலும் நிறைந்திருக்கிறது செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் குழுக்கள். பரவசத்தில் பெற்றோர்கள் .. படிப்பை முடிக்கு முன்னரே வேலை கிடைத்த அதிர்ஷட்ட சாலிகளான கிரேட் லேக  மானேஜ்மெண்ட் இன்ஸ்டியூட்டின்  மாணவர்களின் பட்டமளிப்பு விழா.
டாட்டா  குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு ரத்தன் டாட்டாவும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஊர்வலமாக நுழைந்தவுடன் கனத்த அமைதி. சம்பிரதாயமான பட்டமளிப்புவிழா உரையாக இல்லாமல்.  மாணவர்களின் தேர்ந்தெடுத்த கேள்விகளை பல்கலைகழக டீன் பாலா பாலசந்தரன் கேட்க  பதில் தந்தார் ரத்தன் டாட்டா.  அவற்றிலிருந்து  சில

ஓரு மனேஜ்மெண்ட் பட்டதாரி அடுத்த 30 ஆண்டுகள் தன் தொழில் வாழ்க்கையில்ஜெயிக்கமுதல்5 ஆண்டுகள்எந்தமாதிரியானகொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?
இம்மாதிரி இன்ஸ்டியூட்டிலிருந்து  வரும் மாணவர்கள் அதிக அளவில் சம்பளம், பெரிய நிறுவனங்களில் பதவி என்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பினால் மாறுதல் களைச்  செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் மாறு பட்டு சிந்தித்து துணிவுடன் செயல்படுபவர்களாக உங்களை அடையாளம் காட்ட வேண்டும்.  பாப்புலாராக இருப்பது மட்டும் வெற்றியில்லை. பல் ஆண்டுகளுக்கு முன் நான் பொறுப்பேற்ற போது ஒரு  ஆற்றல் மிகுந்த ஒரு மிகப்பெரிய  மனிதரின் காலணிகளுக்குள் நுழைந்து செயலாற்ற வேண்டியிருந்தது. அது எனக்கு பொருத்தமாகவும் இயலாமலும் இல்லாதிருந்தது. அப்போது நான் நானாகஇருந்து பணியாற்றினேன். மாறுதல்களைச் செய்ய முடியும் என நம்பி செயலாற்றினேன். இன்று பல் லட்சம் பேர்களில்  வாய்ப்பும் அதைச்செயல்படுத்த கருவிகளும், நல்லசூழுலும்  பெற்ற அதிர்ஷட சாலிகள் நீங்கள் .  நீங்கள்: நீங்களாகவே இருந்து  உங்கள் துறையில் மாறுதல் களை செய்ய முடியும் என நம்புங்கள். நியாமன நேர்மையான வழியில் குறிக்கோள்களை அடைய முயற்சியுங்கள். நீங்கள் சரி என்று நினைப்பதை நிலைநிறுத்த அவசியமானால்  போராடாவும் தயங்காதீர்கள். நிச்சியம் வெற்றி அடைவீர்கள்

நான் சரியான முடிவுகள் எடுப்பதில்லை. முடிவுகளை எடுத்த பின்னர் அவற்றை சரியாக்குகிறேன்என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி நீங்கள் செய்த ஏதாவது ஒரு முடிவைப் பற்றி சொல்ல முடியுமா?

சமூக வலைத்தளங்களில் நான் சொன்னதாக உலவிக்கொண்டிருக்கும் ஒரு கருத்து இது. நான் அப்படிச் சொன்னதில்லை.  இம்மாதிரி வாக்கியங்கள் ஆணவத்தைக் காட்டுகிறது அது சரியில்லை.  எல்லாராலும் எல்லா நேரத்திலும் சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியாது.  சில முடிவுகள் தவறாகலாம். நமது முடிவுகள் தவறானால் அதன் விளைவுகளுக்குப்  பொறுப்பேற்கும் துணிவும், அதைச் சரிசெய்யும் ஆற்றலையும் நிர்வாகிகள் பெறவேண்டும்.  வருங்காலத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள்  நிறைய முடிவுகளை எடுக்கவேண்டிவரும். அப்போது  இதை நினைவில் கொள்ளுங்கள் . நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்  கடினமான முடிவுகளை எடுக்கும்போது தனிமைப்படுத்தப்படுவார்கள். பலர் அந்த முடிவை ஏற்காமல் இருக்கலாம்.. ஆனாலும் பாப்புலாரிட்டிக்காக இல்லாமல்  துணிவுடன் செயல்பட்டு  நியாமானநீங்கள் சரியென நம்பும் முடிவுகளை துணிவுடன்  எடுக்க வேண்டும்.  இந்தச் சந்தர்ப்பத்தில் எனது முடிவுகள் பற்றி சொல்லுப்பட்டுகொண்டிருக்கும்  தவறான கருத்துகளுக்கு  ஒரு விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

 100 கம்பெனிகளை உள்ளடக்கிய  50 லட்சம் ஊழியர்களைக் கொண்ட டாடா சாம்ராஜ்யத்தை நிர்வகித்தவர் நீங்கள். இன்று பல புதிய சிறு கம்பெனிகள் வேகமாகத் தோன்றி வளருகின்றன. சில ஆண்டுகளில் இவை டாடா போன்ற பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த நிலையில் எப்படி இந்த சிறு நிறுவனங்கள் அந்தப் பெரிய நிறுவனங்களின் கலாச்சாரங்களுடன் எளிதாக ஒருங்கிணைகிறதுநிறுவனத்தின் வெற்றிக்கு எது முக்கிய காரணம் என நினைக்கிறீர்கள்

அதிர்ஷடவசமாக டாடா நிறுவனத்திற்கு 150 ஆண்டு கால பாரம்பரியம் இருக்கிறது. ஒரு நிறுவனம் பாரம்பரிய கெளரவத்தைப் பெற அதன் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் மிகச் சரியாக நாணயமாக இயங்க வேண்டும். ஒரு கண்ணாடி  மீன் தொட்டியிலிருக்கும் மீனைப்போல மிக சுத்தமாக எல்லோருக்கும் தெரியும் ஒளிவு மறைவு இல்லாதாக  இருக்க வேண்டும். தலைவர் இப்படி இயங்கினால் நிறுவனத்தில் மற்றவர்கள் அதைத் தொடர்வார்கள். அது மிக முக்கியம் டாடாவில் என் முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விஷயத்தை நான் தொடந்தேன். என்னைத் தொடர்ந்து வருபவர்களும் செய்கிறார்கள். தலைவரின் பண்பு நிறுவனத்தின் பண்பாகிறது. இதை டாட்டா நிறுவனத்டின் வெற்றியாக கருதுகிறேன்.


 உங்கள் பணிநிறைவுக்கு பின்னர்  நீங்கள்  இப்போது புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் ஸ்டார்டப் கம்பெனிகளில் மட்டுமே  அதிக அளவில் முதலீடு செய்வதாக அறிகிறோம். இது ஏன்? மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான டாடா நிறுவனம் இதை ஏன் செய்யவில்லை?

நான் டாடாவின் தலமைப்பொறுப்பில் இருந்த போது என் சொந்த விருப்பங்களைச் செய்ய முடியாது. அது சரியானதும் இல்லை. டாடா போன்ற எல்லாவற்றிலும் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் தலைவர் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தால் அது டாடாநிறுவனதிற்கு  சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதும் ஒரு காரணம். ஒய்வு பெற்றபின் நான் மிகப்பெரிய பணக்காரன் இல்லை என்னிடமிருக்கும் சேமிப்பை நான் இ காமர்ஸ் ஆன் லைன் வணிகம் போன்றவற்றில் முதலீடு செய்திருக்கிறேன். 80களில் அமெரிக்காவில் எழுந்ததைப்போல  இங்கு ஒரு அலை எழுந்திருப்பதை உணர்கிறேன். இளைஞர்கள் இடுபட்டிருக்கும் இந்த் துறைகள் தான்  நாட்டின் மிகச்சிறந்த எதிர்காலத்திற்கு காரணமாக இருக்க போகிறது என்று கணிக்கப்பட்டிருப்பதால் நான்  அவைகளில் முதலீடு செய்துகொண்டிருக்கிறேன். . இந்த முதலீடுகளை முடிவு செய்ய தனி டீம் எதுவுமில்லை. நானே புதிய நிறுவனங்களின் வளர்ச்சியை ஆராய்கிறேன்.   முதலீடு செய்கிறேன் அதில் பலர் எனக்கு முன் அறிமுகம் இல்லாதவர்கள். .

நானோ காரின் டிசைன், தயாரிப்பு  விற்பனை போன்றவற்றினால் டாட்டா நிறுவனம் கற்ற பாடம் என்ன? 


நிறையக் கற்றோம். அந்த காரின் வடிவமைப்பில் ஈடுபட்டவர்களின் சராசரி வயது 26. இந்திய இளைஞர்களால் இந்தியர்களுக்காகத் தயாரிக்க பட்ட கார அது. ஆனால் திட்டமிட்ட படி அதை வெளியிட முடியவில்லை.  உற்பத்திக்கான  தொழிற்சாலையை அமைக்க அழைக்கப் பட்ட  மாநிலத்தில் இருந்து வெளியேறவேண்டியிருந்தது.  பெங்கால் டைகர் தாக்கியதாக மீடியாக்கள் சொன்னது. டைகரோ டைகரஸோ(பெண்புலி)  விளைவுகள் வீபரீதமாக இருந்தது. ஆலையை புதிய இடத்தில் மீண்டும்துவக்கியதில் தயாரிப்பு ஓராண்டு தாமதாமாகிவிட்டது.  விற்பனையிலும் எஜெண்ட்கள் இல்லாமல் நாங்கள் அறிமுகப்படுத்திய முறை வரவேற்பைப் பெறவில்லை. விளமபர்ஙளில் இது இந்தியவின்  மலிவான கார் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இந்தியாவில் கார் என்பது ஒரு அந்தஸ்தின் சின்னம். அதில் மலிவானது எனச் சொல்லப்பட்டதை வாங்க மக்கள் தயங்கினர்.  நாங்கள் ”இதுஎல்லோரும் வாங்க்கூடிய கார்” என விளம்பர படுத்தியிருக்க வேண்டும். காரின் தரம்,வசதிகளை விட இந்த மலிவு  எனற வார்த்தை பெரிய விஷயமாக போட்டியாளர்களால் பேசப்பட்டதினால் விற்பனை பாதித்தது. இப்போதுபுதிய மாடலை அறிமுகப்படுத்தி  மெல்லச் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் இது சீராகும்.  என்று நம்புகிறேன்
(நனறி புதிய தலைமுறை060815)

13/4/15

உறங்கிக்கொண்டிருக்கும் புயல் மீண்டும் வருகிறதா?

 புதிய தலைமுற 16/4/15 இதழில் எழுதியது 

(பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள்  கைவிடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்கும்படி எல்.கே. அத்வானி, ஜோஷி உள்பட 20 பேருக்கு நோட்டீஸ்  அனுப்ப சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  இந்தவழக்கு, இந்த  அதிரடி உத்தரவின் பின்னணியைப் பற்றிய ஒரு அலசல் ).
டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியாக வர்ணிக்கபடும்  அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் கால் நூற்றாண்டை கடந்த பின்னரும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த ”விபத்து” குறித்து, நீண்ட காலம் தொடர்ந்து , வழக்குகளும் கமிஷனின் விசாரணைகளும் நடந்து ஒய்ந்திருக்கும் நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட   ஒரு மனுவின் அடிப்படையில்  இந்த நோட்டீஸ்கள் அனுப்ப பட்டிருக்கிறது. . பதில்களை ஏற்று உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்குமானால் மீண்டும் உயிர் பெறப்போவது வழக்கு மட்டுமில்ல. சில அரசியல் பிரச்னைகளும்தான்.
என்ன வழக்கு? ஏன் தலைவர்கள் மீது வழக்கு?
அயோத்தி நகரம் கடவுள்-அரசர் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் ருதப்படுகிறது.  1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின்பெயரால் அயோத்தியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர். ராமர் சிலைகள் பின்னாளில் கொண்டுவந்து வைத்து வழிபட்டனர் இந்துக்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்லுகின்றனர். ஆனால்  பல ஆண்டுகளாக இந்த இடம்  இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலேயேர் ஆட்சிகாலத்திலியே இடத்திற்கு உரிமை கோரி வழக்குக்குள் இருந்த போதிலும் அது மத மோதலாகவோ கலவரமாகவோ இல்லை.  இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி புதிய வழக்குகளைத் தொடர்ந்தன.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1989 தேர்தலின்  இந்த அயோத்தி பிரச்சனையை தேர்தல் களத்தில் வைத்தது. . செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்தி பிரச்னையை நாடெங்கும் எடுத்துச் செல்லும் வழியாக ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் மதவாத உணர்ச்சி அலைகள் வீசத்துவங்கின.  இன்னும் அந்த அலைகள்  ஒயவில்லை.
அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே நாங்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டப் போகிறோம்என்ற பழிக்குப் பழிபாலிடிக்ஸ்தான் இதன் அடிப்படை. ‘1996&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி  பகல் 12.15 மணிக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும்என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டுதான் அயோத்தியை நோக்கி கிளம்பினார்கள் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தொண்டர்கள். சுமார் 2 லட்சம் பேர். பெருங்கூட்டமாக குவிந்துவர அயோத்தி குலுங்கியது. உணர்ச்சிபூர்வமான பேச்சு  ஒருங்கிணைக்கப்ட்ட கூட்டு நடவடிக்கையின் விளைவுவாக  475 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
தேசமே அதிர்ந்துது போனது. கலவரங்கள் வெடித்தன,  சட்டம் மெதுவாக அதன் கடமையை செய்ய ஆரம்பித்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்தது. மசூதியை இடித்ததாக `பெயர்  தெரியாத லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர்  எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்பட 20 பேர் மீது மற்றொரு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தவிர மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டது, உள்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் அத்வானி உள்ளிட்டோர் மீது மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 சதி திட்டம் தீட்டியதாக அத்வானி, ஜோஷி உள்ளிட்ட பலர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவற்றை கைவிடுவதாக 2001,
  மே 4ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
. அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 மே 21ம் தேதி அளித்த தீர்ப்பில், சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை  என்று அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால், அத்வானி உள்பட பிறர் மீது  கூறப்பட்டுள்ள மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து ரேபரேலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்தது.
அலகாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு முடிவெடுத்தது.  ஆனால் 6 மாதங்களுக்குள்ளாக செய்திருக்கவேண்டிய மேல் முறையீட்டை 8 மாதத்திற்கு பின்தான் செய்தது வழக்கை குறிபிட்ட கால கெடுவுக்குள் செய்யாமல் தாமதபடுத்தி செய்திருந்தது. இம்மாதிரியான நடைமுறை வீதிமீறல்கள் செய்வது  எதிர்வாதம் செய்யபவர்களுக்கு அனுகூலமாக முடியும்.ஆனால் உச்ச நீதிமன்றம் தாமதத்தை கண்டித்து காரணம் கேட்டு சிபிஐயை விளாசியது. தாமதத்திற்காக சொல்லபட்ட காரணம் ”வழக்கில் சம்பந்தபட்டவர்கள்  அனைவரும் மிக முக்கிய அரசியல் வாதிகள் என்பதால் மிக ஜாக்கிரதையாக கையாளுகிறோம்” என்பது. அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி. அவர்கள் இந்த வழக்கைஏன் தமாதப்படுத்தினார்கள்? என்பது இந்திய அரசியலில் புரிந்து கொள்ள முடியாத புதிர்களில்  ஒன்று.
இப்போது மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
 இந்த கட்டத்தில் தான்  தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கில் மேல்முறையீடு செய்வதில் சிபிஐ  காலதாமதம் செய்து வருகிறது.  வழக்கை நீர்த்துபோகும் வகையில் சிபிஐ செயல்படுகிறதுபிஜே பி கட்சியின் செல்வாக்கு மிகுந்தவர்கள் ஆட்சியிலும் மூக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள். மேலும் இந்த வழக்கில் தலைவர்கள் விடிவிக்கபட்ட்து நீதிமன்ற வரலாற்றில்  வழங்கப்பட்ட முக்கியமா அநீதி.  செயலைதூண்டியது, அதைச்செய்யவசதிகள் செய்துகொடுத்தது மசூதியை உடைத்தது எல்லாமே ஒரு சதிச்செயலின் அடிப்படையில் எழுந்த விஷயம். அப்படியிருக்க சதித்திட்டத்தைமட்டும் தனியாக பிரித்து குற்றத்திற்கான ஆதாதரம் இல்லை என சொல்லியிருப்பது நீதிமன்ற த்தின் தவறு என்பதால்  . அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கை  மீண்டும் முழுமையாக விசாரிக்க உத்தரவிட  வேண்டும் என்ற ஹாஜி மக்மூத் அகமதுவின் மனுவை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து  தலைமையில் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் ஏற்றுகொண்டு நோட்டீஸ்கள் அனுப்பிருக்கிறது.

அயோத்தி நிகழ்வும் அரசியலும்.
பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு இந்திய அரசியலில்  சில புதிய அத்தியாங்களை உருவாக்கின. மதவாதத்துக்கும் வாக்குபெட்டிக்கும்  உறவு வலிமையானது..
‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் இஸ்லாமியர்கள் நாங்கள் இந்தியர்என்று ஒருங்கிணைந்து நின்றார்கள். பாபர் மசூதியை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும்,  ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரே நாளில் செய்து முடித்தன’’  என்று இந்திய உளவு நிறுவனம் ராவின் முன்னால் உளவு அதிகாரி ராமன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.நெருக்கடி நிலையை முழுமுச்சாய் எதிர்த்து அரசியலில் ஜனநாயகவாதிகளாக நிலை நாட்டிக் கொண்டவர்கள் மதவாத அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்பட்டார்கள்.
பார் மசூதி இடிப்பை தொடர்ந்து கிரிமினல் வழக்குகளைத் தவிர மத்திய அரசு ஒரு கமிஷன் அமைத்தது.விசாரணைக் கமிஷன் தலைவர் லிப்ரான்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கும் 1992 ல் டிசம்பர் பதினாறாம் தேதி அதாவது பாபர் மசூதி இடிக்கபட்ட பத்து நாட்களுக்குப் பின நீதிபதி லிப்ரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கபட்டது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்ததில் மாநில அரசு - முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் மதவாத அமைப்புகளின் பங்கு என்ன? உத்திரப்பிரதேச அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் என்ன? இவை பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கமிஷனை மத்திய அரசுகேட்டுக்கொண்டது.விசாரணைக் கமிஷனின் கெடு காலம் மூன்று மாதம் என்றும் அறிவித்தது.
48 முறை நீடிக்கபட்ட கமிஷன் விசாரணை செய்ய நீதிபதி லிப்ரன் பதினேழு ஆண்டு காலம் எடுத்து கொண்டார். பதினேழு ஆண்டு விசாரணைக்கு மத்திய அரசு செலவு செய்த தொகை எட்டு கோடி ரூபாய். கமிஷனின் ரகசிய அறிக்கை அதிகாரபூர்மாக வெளியிடப்படாமலேயே கசிந்து வெளியாகிவிட்டது. அத்வானியின் ரத யாத்திரை, மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றிச் சென்ற வாஜ்பாய், இடிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி பால்தாக்கரே, கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் (ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?’ &ஜெயலலிதா) என்று பல ஆதாரங்கள் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தாலும்  கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எந்த வழக்கையும்  தொடரவில்லை.
தினசரிகளில் அவ்வபோது 4 பக்கத்தில் தலைகாட்டிக்கொண்டிருந்த இந்த விஷயம் மெல்ல மறக்கப்பட்டுகொண்டிருந்தபோது  கடந்த ஆண்டு  துவக்கத்தில்
பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.  என ஒரு அதிரடி செய்தியை வெளியிட்ட்து கோப்ரா போஸ்ட். கோப்ரா போஸ்ட் என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார்இவர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விட்ட்து. ஆனாலும் ஐமு அணி அரசு  அசையவில்லை யார் மீதும் வழக்கு எதுவும் போடவில்லை.

இனிமேல்  என்ன நடக்கலாம்? 
அரசியலின் போக்கை நீதிமன்ற வழக்குகளின் முடிவுகளும், அரசின் முடிவுகள் வழக்குகளின் போக்கையும் மாற்றும் என்பதை சமீப அரசியல் சரித்திரங்கள் நமக்கு சொல்லுகின்றன.  இந்த வழக்கை உச்சநீதி மன்றம்  தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தால், சமீபகாலமாக அது கடைப்பிடிக்கும் வழிமுறையான ஒரு சிறப்பு புலனாய்வை அமைத்து நேரடியாக தங்களிடம்  அறிக்கைகள் தந்து  குறிப்பிட்ட கால கெடுவுக்குள்  வழக்கை முடிக்க செய்யும். அல்லதுசிபிஐயை கண்டித்து உடனடியாக வழக்கை நடத்தி முடிக்க முடுக்கிவிடும்.
கிளமாக்ஸாக மனுவே தள்ளுபடியும் செய்யபடலாம். (வாய்ப்பு மிக குறைவு. விபரங்கள் கேட்டபின் பொதுவாக தள்ளுபடி செய்யப்படுவதில்லை)
எப்படி நடந்தாலும் அது அரசியலில் நேரிடையான தாக்கத்தை விளைவிக்கும். காரணம் எவ்வளவு விரைவாக நடைபெற்றாலும் வழ்க்கு முடிய ஒராண்டு ஆகும்
 இந்த வழக்கின்  முடிவுகள் வரும்போது 2016ல்  சில மாநிலங்கள் தேர்தலை சந்திக்கிறது. அதில் ஒன்று இந்த காட்சிகளின் களனான உத்திரபிரதேசம்,
இப்போது உபி சட்டமன்றத்தில் 403 சீட்டுகளில் வெறும் 47 மட்டுமே வைத்திருக்கும் பிஜெபி. கடந்த நாடாளுமன்றத்தில் கூட்டணியோடு 83 சீட்டுகளில் 70ஐ பெற்றிருப்பதால் 2017 ல் அங்கு மாநில ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறது.  இந்த வழக்கில் தலைவர்கள் வீடுவிக்க பட்டால் தங்கள் மீது பூசப்பட்டிருக்கும் மதவாத கரை மறைந்து விட்டதாக அறிவித்துவிடுவார்கள். மாறாக தண்டிக்கபட்டால் ராமருக்காக நாங்கள் செய்த தியாகம் என அந்த அனுதாபத்தை ஓட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்.
வழக்கு தீவிர கட்டத்தை அடைவதற்குள் காங்கிரஸின் தலைவராகியிருக்கும் ராகுல்  இந்த வழக்கினையே ஆயூதமாக கையிலெடுத்து பிஜேபியின் மதவாத அரசியலை  கண்டனம் செய்து களமிறங்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆட்சியிலிருந்த போது கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டவர்கள் இதையாவது கோட்டைவிடாமல் செய்யவார்களா என்ற  கேள்வியும் எழுகிறது. .
எந்த பிரச்னையிலும் ஒரு வாய்ப்பை கண்டுபிடிப்பவர்கள் அரசியல் வாதிகள். பிஜெபி தங்கள் உட்கட்சி அரசியல் பிரச்னைகளை சரி செய்ய  இந்த வழக்கை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.. மோடி பிரதமரான நேரத்தில்  கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரங்கட்டபட்டார்கள்:. இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்களும் அவர்கள்தான். காங்கிரஸ் ஒரு கட்டத்தில்  முன்னாள் பிரதமர்  நரசிம்ம ராவை ஒதுக்கி அவர் மீதுள்ள வழக்குகளை அவரே சமாளித்துகொள்ள வேண்டும் என சொன்னது போல  இவர்களையும் பிஜேபி ஒதுக்கி விடும் ஒரு நிலையும் ஏற்படலாம். அதன் மூலம் இன்றைய தலைவர்கள் தாங்கள் மதவாத தீவிரவாதிகள் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கலாம்.
எப்படியாக இருந்தாலும் இந்த வழக்கு 2016 மாநில தேர்தலுக்குமுன் மக்களின் மிக கவனம் பெரும் வழக்காக இருக்கும்.

”இந்திய அரசியலின் முக்கிய முடிவுகள் இப்போது கோர்ட்களில் எடுக்கபடுகிறது. மக்கள் தேர்தல் முடிவுகளைப் போல சில  வழக்குகளில் நீதிமன்றத்தின் முடிவுகளை காண  ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என ஒரு ஆங்கில நாளிதழின் மூத்த செய்திஆசிரியர் எழுதுகிறார்.

அது இந்த வழக்குக்கும் பொருந்தும்.